கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!
ராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.
இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].
கருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.
மோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].
प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। | விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும். |
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। | தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது. |
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। | தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது. |
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। | இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும். |
மாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.
© வேதபிரகாஷ்
16-10-2016
[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.
[2] http://www.pathivu.com/?p=90264
[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am
[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482
[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.
[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms
[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)
[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607
[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST
[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece
[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST
[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow