Archive for the ‘அமங்களம்’ Category

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ஒக்ரோபர் 16, 2016

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ravana-balaya-sri-lanka-fundamentalist-groupராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.

psdhivu-sri-lanka-16-10-2016இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]:  “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதுஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].

ravana-balaya-sri-lanka-fundamentalist-group-jatayuகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

dusshera-modi-sonia-pranab-etcமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].

प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश ‌दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है ‌तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.

satan-mara-evil-etcமாரா, சாத்தான், எதிர்கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

16-10-2016

stoning-satan-hajj-ritual

[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.

[2] http://www.pathivu.com/?p=90264

[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016  10:41 am

[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482

[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.

[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms

[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)

[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607

[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST

[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece

[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST

[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow

செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்!

ஏப்ரல் 3, 2014

செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக  சோனியா கூறிக்கொள்கிறார்!

 

sonia-gandhi-rahul-gandhi-hawan-2014

sonia-gandhi-rahul-gandhi-hawan-2014

சோனியா  மிகவும்  சர்ச்சைக்குள்ள  மதவாதியான,   தில்லி  இமாம்  புகாரியை,   முஸ்லிம்  தலைவர்கள்  முதலியோர்  அடங்கிய  குழுவோடு  01-04-2014  அன்று  சந்தித்து   40  நிமிடங்கள்  அரசியல்  ரீதியாக  பேசி,   பிறகு  அத்தகைய  சந்திப்பு  ஒன்றும்  மக்களை  மதரீதியில்  பிரிக்காது  என்றும்,   அதற்கு  மேல்  தான்  ஒன்றும்  சொல்ல  முடியாது  என்று  செய்தியாளர்களிடம்  அவசர-அவசரமாக  சொல்லி  வண்டியேறிச்  சென்று  விட்டார்.   ஜஹித்  ரேஜா  இஸ்வி [Zahid Reza Khan Rizvi, an Islamic scholar from Uttarakhand], ரஹ்மத்  மெஹ்மூத்  சௌத்ரி [activist Rahat Mehmood Choudhury from Delhi], பிலால்  நூரானி [ UP’s  activist], அனீஸ்  ஜமாய் [journalist Anees Jamai] மற்றும்  பலர்  அக்குழுவில்  அடங்கியிருந்தனர்.  ஆகவே  இந்த  சந்திப்பு  திட்டமிட்டதாகும்  என்று  தெரிகிறது.   மேலும்  முதலில்  தாயும்,   மகனும்,  நெற்றியில்  குங்குமம்  வைத்துக்  கொண்டு,   கட்சி  அலுவகலகத்தில்  ஹோமத்தை  வளர்த்து  பூஜை  செய்தார்கள்.   ஆனால்,   இமாமைப்  பார்க்கச்  சென்றபோது,   நெற்றியில்  குங்கும்  இல்லை, அதாவது  அழித்து  விட்டார்கள். ஆகவே  அவர்கள்  இட த்திற்கேற்றவாறு  வேடம்  போடுகிறார்கள்  என்றாகிறாது.

 

onia cheating Indian woman erasing kumkum

onia cheating Indian woman erasing kumkum

சச்சார்   மற்றும்  ரங்கநாத்  மிஸ்ரா  அறிக்கைக்களின்  பரிந்துரைகளை  அமூல்  படுத்த  வேண்டும்:   புகாரியின்    செய்தி  தொடர்பாளர்  ரஹ்மத்  மெஹ்மூத்  சௌத்ரி  கூறியதாவது, “தீவிரவாதம்  பெயரால்  முஸ்லிம்  இளைஞர்கள்  அனுபவிக்கும்  துயரங்கள்,  அநீதிகள்  முதலியவற்றை  சோனியா  ஒப்புக்  கொண்டார்.   செக்யூலரிஸ  ஓட்டுகள்  பிரியாமல்  பார்த்துக்  கொள்ளவேண்டும்.   மதவாதசக்திகளுக்கு  எதிராக  ஒன்றாக  திரள  வேண்டும்  என்று  கூறினார்”.   சச்சார்  மற்றும்  ரங்கநாத்மிஸ்ரா  அறிக்கைக்களின்  பரிந்துரைகளை  அமூல்படுத்த  வேண்டும்  என்று  முஸ்லிம்கள்  தரப்பில்  கேட்டுக்  கொண்டதாகவும்  விளக்கினார்[1].   இவையெல்லாம்  ஏற்கென வேர   ஹ்மான்  கான்  சொல்லிவருபவை  தான்.   ஷிண்டே  கூட  இதைப்  பற்றி  பேசியிருக்கிறார்.   ஆகவே,   அதற்கும்  மேலாக  முஸ்லிம்கள்  என்ன  எதிர்பார்க்கிறார்கள்  அல்லது  சோனியா  செய்து  விடப்போகிறார்  என்று  தெரியவில்லை.

 

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

முஸ்லிம்  ஓட்டுகள்   பிரியாமல்  பார்த்துக்  கொள்ளுங்கள்….சோனியா  வேண்டுகோளால்  சர்ச்சை[2]:  முஸ்லிம்  மதத்தலைவர்களை  சந்தித்த  காங்கிரஸ்  தலைவர்  சோனியாகாந்தி,   செக்யூலரிஸத்தை  வளர்க்க  வாக்குகளை  பிரியாமல்  பார்த்துக்  கொள்ளுமாறு  கூறியதாக[3]  வெளியான  செய்திகளால்  சர்ச்சை  எழுந்துள்ளது.   காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தி  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  இமாம்  சையத்  அகமது  புகாரி  உள்ளிட்ட  முஸ்லிம்  மதத்தலைவர்களை  சந்தித்துப்   பேசினார்.   அப்போது  லோக்சபா  தேர்தலில்  முஸ்லிம்  வாக்குகள்    பிரிந்துவிடாமல்  பார்த்துக்  கொள்ளுமாறு  சோனியா  கேட்டுக்கொண்டதாக  செய்திகள்  வெளியாகின[4].   காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தியை  சையது  அகமது  புகாரி  தலைமையில்,   முஸ்லிம்  தலைவர்கள்  நேற்று  சந்தித்து  பேசினர்.  பின்னர்   செய்தியாளர்களிடம்  பேசிய  சையது  அகமது  புகாரி,   முஸ்லிம்களின்  வாக்குகளை  சிதறவிடக்  கூடாது  என  சோனியா  கேட்டுக்  கொண்டதாக  கூறினார்[5].   இவர்கள்  எப்படி  அவ்வாறு  செய்யப்  போகிறார்  என்று  தெரியவில்லை.   வழக்கம்  போல  விவாதங்களை  வைத்து  சில  ஊடகங்கள்  மழுப்பப்  பார்த்துள்ளன[6].

 

Sonia playing secularism with kumkum

Sonia playing secularism with kumkum

முஸ்லிம் களிடம்  சோனியா  வேண்டுகோள்  விடுத்தது  விதிமீறல்: பா.ஜ.க. கண்டனம்[7]: ஆனால்  சோனியா  விடுத்த  இந்த  வேண்டுகோள்  தேர்தல்  நடத்தை  விதிகளை  மீறிய  செயல்  என  பா.ஜ.க.   கண்டனம்  தெரிவித்துள்ளது.   இதுகுறித்து  பா.ஜ.க.  செய்தித்தொடர்பாளர்  பிரகாஷ்   ஜவடேகர்  கூறுகையில்,   மதத்தின்   அடிப்படையில்  அல்லாமல்  அவரவர்  விருப்பப்படி   சுதந்திரமாக  வாக்களிக்க  ஒவ்வொருவருக்கும்  உரிமை உண்டு.  சோனியா  காந்தி  சிறுபான்மையினரை  இவ்வாறு  கேட்டுக்கொள்வது  அவர்களை  அவமானப்படுத்துவது  போன்றதாகும்.  இது  காங்கிரசின்  மதவாத  அரசியலை  தெளிவாக  காட்டுகிறது.   இதை  ஒரு  போதும்  ஏற்றுக்  கொள்ளமுடியாது  என்றார்.    வாக்காளர்களை  சந்தித்து  குறிப்பிட்டமதம்  மற்றும்  ஜாதியின்  அடிப்படையில்  வாக்களிக்க  சொல்வது  தேர்தல்  நடத்தைவிதிகளுக்கு  எதிரானது.   இது  குறித்து  தேர்தல்  ஆணையம்  தானாகவே  முன்வந்து  விசாரித்து  நடவடிக்கை   எடுக்க  வேண்டும்.   காங்கிரஸ்  மதச்சார்பின்மைக்கு  தவறான  புதிய  வரையறையை  கூறுகிறது.   நாங்கள்  முன்னேற்றத்தையும்,   நல்லாட்சியையும்   வலியுறுத்தி  நாட்டின்  பெயரில்  வாக்குகளை  கேட்கிறோம்.   எங்களை  மதவாதகட்சி  என்கிறார்கள்.   ஆனால்  மதம்  மற்றும்  ஜாதியின்  அடிப்படையில்  வாக்களிக்குமாறு  கேட்பவர்களை  மதச்சார்பற்ற கட்சி  என்கிறார்கள்.  இது  முற்றிலும்  முறையற்ற  வரையறையாகும்.   அவர்கள்  மதச்சார்பற்றவர்கள்  அல்ல.   மதச்சார்பற்றவர்கள்  என்று  போலியாக  காட்டிக்  கொள்பவர்கள்.  இவ்வாறுஅவர்குற்றம்சாட்டினார்[8].

 

kumkum sported Sonia to deceive Indians 2014

kumkum sported Sonia to deceive Indians 2014

சோனியாவி  ன்மறுப்பும்,   பிஜேபியின்  புகாரும்: முஸ்லிம்கள்  ஓட்டு  பிரியக்கூடாது  என்பதை  எப்படி  தில்லி  இமாம்  பார்த்துக்  கொள்வார்  என்று  தெரியவில்லை.   ஆனால்,   புகாரி  முகமது  நபி  வழிவந்தவர்கள்  என்றும்  அவர்  சொன்னால்,   முஸ்லிம்கள்  கேட்பார்கள்  என்றும்  கருத்துச்  சொல்லப்  படுகிறது.   ஆனால்,   சாதாரணமாக  இதனை  கவனிக்கும்  போது,   மதத்தின்  பெயரால்  ஓட்டுக்கேட்கும்  முறை  எப்படி  ஜனநாயகம்  ஆகும்,  அதிலும்  செக்யூலரிஸமுறை  ஆகும்  என்று  வியக்கின்றனர்.   மற்றவர்கள்  செய்தால்  செக்யூலரிஸம்  என்று  சொல்லிக்  கொண்டு,   அதே  நேரத்தில்  பிஜேபியை  மட்டும்  மதவாதிகட்சி  என்று  சொல்வதையும்  மக்கள்  கவனித்து  வருகின்றனர்.   இதனால்  தான்  பிஜேபி  புகார்  கொடுத்துள்ளது.   ஆனால்  இதை  சோனியா  காந்தி  நிராகரித்துள்ளார்.   பாரதிய  ஜனதாவின்  இந்த  புகார்  ஒரு  நல்ல  ஜோக்  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.

 

காங்கிரஸுக்கு  ஆதரவு – புகரி  அறிவித்துள்ளாராம்!: இதனிடையே  லோக்சபா  தேர்தலில்  காங்கிரஸையே  ஆதரிப்போம்  என்று  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  இமாம்  சையத்  அகமது  புகாரி  அறிவித்துள்ளார்.   இது  குறித்து  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  செய்தித்  தொடர்பாளர்  ரஹத்   மெக்மூத்  செளத்ரி,   சோனியாவுடனான  சந்திப்பின்   போது  இஸ்லாமிய  இளைஞர்கள்  கைது,   கல்வியில்  இடஒதுகீட்டு,   சச்சார்  கமிட்டி   பரிந்துரைகள்  நிறைவேற்றம்,  ரங்கநாத்   கமிஷன்  பரிந்துரைகள்  அமலாக்கள் ப ற்றி  விவாதித்தோம்  என்றார்.   புகாரியின்  ஆதரவு  அறிவிப்பு  காங்கிரஸுக்கு  பெரும்பலமாக  அமையும்  என்று  கூறப்படுகிறது.  

 

புகாரியின்  சகோதரரின்  எதிப்பு:   புகாரின்   இளையச  கோதரர்  சையது  யாஹ்யாபுகாரி [Syed Yahya Bukhari] காங்கிரஸை  நம்ப  முடியாது  என்று  சொல்லியிருக்கிறார்[9].   காங்கிரஸுக்கு  ஆதரவு  கொடுப்போம்  என்று  சொல்வது  தவறானதாகும்,   இதை  மற்ற  அமைப்புகளிடமும்  நாங்கள்  தெரிவிப்போம்”,   என்றார்[10].   “எங்கள்  குடும்பத்தவர்   என்று  மேயாருடைய வீட்டின்  கதவுகளுக்கு  அருகில்  கூட  சென்றதில்லை.  இந்திராகாந்தி,  சரண்சிங்,  வி. பி. சிங்,    போன்றோர்  எல்லோரும்  ஆதரவு  கேட்க  வந்துள்ளார்கள்.   ஆனால்  என்னுடைய  சகோதரர்  இவ்வாறு  சோனியாவைச்  சென்று  சந்தித்துள்ளார்.   எது  அவரை  அவ்வாறு  தூண்டியது  என்று  எனக்குத்  தெரியது,   ஆனால்,   இது   ஜமா மஸ்ஜித்தின்  பெருமைக்கே  இழுக்காகும்”,   என்றெல்லாம்   கூடபேசினார்[11].

 

சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா?: தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா மற்றும் ராகுல் திடீர்-திடீரென்று விதவிதமாக காட்சியளிப்பது தமாஷாக இருக்கிறது எனலாம். சோனியா எப்பொழுதுமே நெற்றியில் ஒன்றுமே இல்லாமல் காணப்படுவார். இந்தியமுறையில் சொல்வதானால், ஒரு மங்களகரமான முகம் போலவே, அவரது முகம் இருக்காது. ஆனால், திடீரென்று முக்காடு போட்டுக் கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டு காட்சியளிப்பது வியப்பாக உள்ளது. இந்திரா காந்தி மாதிரி நடிக்கிறார் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மேலும் 01-04-2014 அன்று முதலில்தாயும், மகனும், நெற்றியில்குங்குமம்வைத்துக்கொண்டு, கட்சிஅலுவகலகத்தில்ஹோமத்தைவளர்த்துபூஜைசெய்தார்கள். அதாவது, ஒடு புரோகிதர் செய்ய இவர்கள் உட்கார்ந்து கொண்டு அதில் பங்குக் கொண்டனர். கூட உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். இது நேரு குடும்பத்தினரின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது[12]. அப்புகைப் படத்தை கட்சியினரே டுவிட்டரில் வெளியிட்டனர். சாதாரணமாக சோனியாவைப் பற்றிய எந்த விவரங்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியே வராது. ரகசியமாகவே வைக்கப் படும், ஆனால் இம்முறை இவ்வாறு வெளியிட்டது விளம்பரத்திற்காகத்தான் என்று தெரிகிறது. ஆனால், இமாமைப்  பார்க்கச்  சென்றபோது, நெற்றியில்  குங்கும்  இல்லை, அதாவது  அழித்து  விட்டார்கள்.   ஆகவே  அவர்கள்இடத்திற்கேற்றவாறுவேடம்போடுகிறார்கள்என்றாகிறது. இதனை சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா என்னென்பது என்று தெரியவில்லை.

 

 

வேதபிரகாஷ்

03-04-2014

 

[1] http://indiatoday.intoday.in/story/jama-masjids-shahi-imam-bukhari-announces-support-for-congress/1/352544.html

[2] http://tamil.oneindia.in/news/india/sonia-gandhi-meets-shahi-imam-bukhari-says-secular-votes-should-not-197134.html

[3]In a strong appeal to minorities on Tuesday, Congress chief Sonia Gandhi told a Muslim delegation that she had decided to embrace politics after initial hesitation to help nurture secularism.

http://www.hindustantimes.com/india-news/joined-politics-to-safeguard-secularism-sonia-tells-bukhari/article1-1203087.aspx

[4] http://www.hindustantimes.com/india-news/joined-politics-to-safeguard-secularism-sonia-tells-bukhari/article1-1203087.aspx.

[5] http://www.dailythanthi.com/2014-04-02-bjp-accuses-congress

[6] http://www.ndtv.com/video/player/left-right-centre/sonia-imam-bukhari-meeting-stirs-row-politics-of-polarisation/315619

[7] http://www.maalaimalar.com/2014/04/02203407/Sonias-appeal-to-Muslim-leader.html

[8] http://www.maalaimalar.com/2014/04/02203407/Sonias-appeal-to-Muslim-leader.html

[9] http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[10] “Mai iss faisle ki sakht mukhalfat karta hun. Bhai ka faisla hai, bhai hun, pur mai iss faisle ko galat tahrata hun. Yeh sarasar galat hai aur mai iski har tarah se mukhalfat karta hun (The decision to support Congress is highly objectionable. Though it is a decision taken by my brother, my elder brother, but even then I strongly oppose it and will continue to oppose it at all forums)”, Yahya Bukhari said.

http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[11] “No body ever walked into doorsteps of a leader, howsoever, mighty that leader might have been. Indira Gandhi, Charan Singh, VP Singh and a host of other leaders they all had come to Jama Masjid to seek support. But my brother suddenly decides to meet Sonia Gandhi on his own, go to her place and pledge his support. I can’t imagine what prompted him but by doing so he has certainly not glorified the prestige of Jama Masjid. He has in fact damaged the honour of Jama Masjid”, Yahya Bukhari said.

http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[12] Mrs Gandhi also participated in a havan (religious ceremony) at the Congress office, which has been a Gandhi family tradition for years.

http://www.ndtv.com/elections/article/election-2014/rahul-gandhi-chauffeurs-mother-sonia-gandhi-in-raebareli-503327?curl=1396511252