Archive for the ‘இததுசாரி’ Category

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [1]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [1]

PondyLitFest-dates

பாண்டி லிட்பெஸ்ட்என்ற பாண்டி இலக்கிய விழா: “பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பெயரில் பல தனிப்பட்ட நிறுவனங்களின் ஆதரவில், இலக்கிய கொண்டாட்ட விழா ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 தேதிகளில் புதுச்சேரியில் நடைப்பெற்றது[1]. நிகழ்ச்சி நிரலை இங்கு பார்க்கலாம்[2]. இதை ஆதரிக்கும் நிறுவனங்களை இங்கு பார்க்கலாம்[3]. புதுச்சேரி இலக்கிய விழா பற்றி கேட்டபோது, பங்கு கொண்ட இந்துத்துவவாதிகள் வழக்கம்போல, திமிருடன் அகம்பாவத்துடன் பதில் கொடுத்தனர். பிறகு, அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சித்தாந்த ரீதியில் போராடும் போது, எதிர்-சித்தாந்தவாதிகளையும் வரவேற்று கலந்துரையாட வேண்டும், எங்கு இயைந்து போகிறோம் என்றுப் பரீசித்துப் பார்க்கலாம். ஆனால், இங்கோ முழுக்க-முழுக்க வலதுசாரி-இந்துத்துவவாதிகள் கலந்து கொண்டு ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். அந்தந்த விசயத்தில் திறமை, அனுபவம், ஞானம் உள்ளவர்களை அழைக்காமல், தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற ரீதியில், விழாவில் சேர்த்துள்ளனர். அவர்களில் பாதிக்கு மேல், எந்த இலக்கிய மாநாட்டிலும் காணப்படாதவர்கள். பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய அரசியல்வாதிகள் பரிந்துரையில் அவர்கள் சேர்க்கப் பட்டனர். பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்று புதியதாகத் தோன்றி மறைந்து விடுவது வலுவான சித்தாந்தம் இல்லை, அவர்களும், அத்தகைய போராளிகளாகத் தான் இருக்கின்றனர்.

All against RIGHT - The Hindu

தி பாண்டி லிட் பெஸ்ட்நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு[4]: மாநாட்டில் வலது சாரி சிந்தனையாளர்களைப் பங்கேற்க செய்வதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்தன. இந்நிலையில் எழுத்தாளர்களும் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், ரவிக்குமார், மாலதி மைத்ரி உட்பட பலரும் இவ்விழாவை புறக்கணிக்க வலியுறுத்தினர். இந்நிகழ்வுகள் புதுச்சேரி மண் சார்ந்த கலை இலக்கியத்தையோ, தமிழ் கலை இலக்கியத்தையோ பிரதிபலிக்கவில்லை. “இந்நிகழ்வு முழுக்க ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, சங்கப்பரிவாரங்களின் கருத்தியல் பிரச்சாரத்துக்கு தளம் அமைப்பதாகவே உள்ளது. நிகழ்வில் பங்கேற்போர் இந்துத்துவ அமைப்புகளிலும், வலதுசாரி அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்படுவோராக இருக்கின்றனர். புதுச்சேரியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் இந்நிகழ்வு சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகிறோம். இந்நிகழ்வை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்[5]. ஆனால், மாநாட்டை ஆதரித்தவர்[6], “மாநாட்டில் 50 சதவீத புதுவை எழுத்தாளர்கள் மற்றும் அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும் 35 புத்தகங்கள் வெளியாகின்றன. நாளொன்றுக்கு 12 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது,” என்றனர்[7].

PondyLitFest-Alliance Francaise clarification

பிரெஞ்சு தூதரகம் விலகிக் கொண்டது: “பாண்டி லிட்பெஸ்ட்” பொறுத்தவரை, பிரெஞ்சு தூதரகம் [Alliance Française Foundation, the parent body of its venue partner] அதனை தனது வளாகத்தில் நடத்துவாக இருந்தது. ஆனால், இத்தகைய ஒருதலைப்பட்ச கூடுதலாக மாறிவிட்டதால், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. நடந்தப்படும் நாடுகளின் அரசியல் மற்றும் மதசம்பந்த விசயங்களில் தலையிட விரும்பவில்லை என்ற பொறுப்புள்ளது என்றும் அறிவித்தது[8]. அதாவது, இந்த அமர்வுகளில் அரசியல், சமயம் முதலியவற்றைச் சார்ந்த விசயங்கள் அலசப் படுவதால், பிரெஞ்சு அரசு சார்புடைய அந்த நிறுவனம் அவ்வாறு அறிவித்தது. பிறகு நிகழ்ச்சி நடக்கும் இடம் மாற்றப்பட்டது. அரவிந்தர் பக்தர்களை வைத்துக் கொண்டு, ஒப்பேற்றிது போல தெரிகிறது. மைக்கேல் டேனினோ போன்றவர், அரவிந்த பக்தராக உள்ளார், எழுதுகிறார். இப்பொழுது [என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு], “விசிடிங் புரொபசர்” நிலையைப் பெற்றுள்ளார். அதாவது, நாளைக்கு ஆட்சி-அதிகாரம் இல்லை என்றால், பதவி இல்லை என்ற நிலையில் சித்தாந்திகள் வேலை செய்யக் கூடாது.

PondyLitFest-participants-1

உண்மையான சித்தாந்த போராளி திடீரென்று தோன்றி மறைய மாட்டான்: சரித்திர ரீதியில் விவதங்கள் நடந்தன. சரித்திரம் எப்படி மாற்றி எழுதப் படவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இங்கு வந்துள்ளதாக குறிப்பிட்டவர்களை IHC, SIHC, TNHC, etc போன்ற எந்த சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளதாகவோ, ஆய்வுக் கட்டுரை வாசித்ததாகவோ தெரியவில்லை [பொரபசர் வெங்கட ரகோத்தமன் தவிர]. சித்தாந்த போராளி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் / இல்லாவிட்டாலும், கலந்து கொள்வான், தனது கருத்தை / கவிதையை தைரியமாகச் சொல்வான். தொடர்ந்து அவன் சென்று கொண்டிருப்பான், தனியாகக் கூட போராடி வருவான், ஏனெனில் அத்தகையோர் பணம், விருது, அதிகாரம் பார்த்து போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்பொழுது திடீரென்று இவர்கள் எப்படி தோன்றியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

PondyLitFest-continued despite Vajpayee demise

வாஜ்பேயி இறந்தாலும், நாங்கள் இலக்கிய விழா நடத்துவோம் என்று நடத்தப்பட்ட விழா: 16-08-2018 அன்று வாஜ்பாயி இறந்தாலும், பிடிவாதமாக கொண்டாடினர். “பிரமாண்டமான துவக்க விழா” மட்டும் நடப்பதை தவிர்ப்பதாக அறிவித்தனர். இலக்கியவாதிகள் இவ்வாறா இலக்கிய அஞ்சலி செல்லுத்துவார்கள் என்று மற்றவர் திகைத்தனர். அதிகமாக வலதுசாரிகள் இருப்பதை, அடுத்த வருட விழாவில் சரி செய்வோம் பலதர கருத்துகளை ஏற்போம் என்பதே, விவகாரத்தைக் காட்டி விட்டது. எத்தனை ஆசைகாட்டினாலும், செம்மொழி மாநாட்டில் நொபுரா கராஷிமா கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. சித்தாந்தம் பேசுபவர்கள் தத்துவம் பேச மாட்டார்கள், “திங்-டாங்க்” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மற்ற செமினார்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆரியர் பற்றிய விவாதம் எல்லாம் அரைத்த மாவை அரைக்கும் தோரணையில் இருந்தது. உதாரணத்திற்கு, “ஹர்பன் நக்சல்” பற்றிய உரையாடல், தெரிந்த விவரங்களாகவே இருந்தன[9]. டீ, காபி, புகையிலை, திருட்டுத் தனமாக கஞ்சா போன்ற விவகாரங்களில் பலரின் பங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் ஆரமொஇத்து வைக்கப் பட்ட “கூட்டுக் கொள்ளை” இன்றும் தொடர்கிறது. அரசு அதிகாரிகள், அரசுசாரா நிறுவனங்கள், கிருத்துவ மிஷினரிகள், வேலையாட்களைக் கட்டுப் படுத்தும் தாதாக்கள், என்று பலவுள்ளன. இவற்றை நீக்காமல், ஒன்றும் செய்யமுடியாது.

© வேதபிரகாஷ்

09-09-2018

All against RIGHT - but could not do against LEFT

[1] http://pondylitfest.com/index.php

[2] http://pondylitfest.com/events.php

[3] http://pondylitfest.com/index.php – eventpartners

[4] தி.இந்து, ‘தி பாண்டி லிட் பெஸ்ட்நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு: முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தல், செ.ஞானபிரகாஷ், புதுச்சேரி, Published : 16 Aug 2018 19:17 IST; Updated : 16 Aug 2018 19:17 IST

[5] https://tamil.thehindu.com/tamilnadu/article24707228.ece

[6] மாலைமலர், புதுவையில் எழுத்தாளர்கள் மாநாடுமத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கிறார், பதிவு: ஆகஸ்ட் 11, 2018 15:39.

[7] https://www.maalaimalar.com/News/District/2018/08/11153931/1183208/Writers-Conference-in-Pondicherry-central-minister.vpf

[8] The Alliance Française Foundation said in a press release on Wednesday that it regretted that the event had been announced “as organised in partnership” with its branch in Puducherry. It said that it was not judging the appropriateness or quality of the event. But it emphasised that the organisation had “an obligation of non-interference in political and religious discources of the host countries” in which it operated, and upheld the “values of tolerence and neutrality”. It said that the main objective of Alliance Françaises network has always been to teach French language and to promote Indo-French cultural exchanges.

Scroll.in, Left demand to cancel ‘right-wing’ Pondy Lit Fest sparks fresh debate on free expression, by  Harsimran Gill, Published Aug 17, 2018 · 07:30 am

https://scroll.in/article/890722/controversy-around-pondy-lit-fest-sparks-fresh-debate-on-free-expression

[9] PondyLitFest, Urban Naxals- Nationals, Anti-Nationals and the rest of us, Published on Aug 22, 2018; https://www.youtube.com/watch?v=7JlCQlwnhUQ

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)?

நவம்பர் 14, 2015

ஹசன் சுரூர் – சிறுமி பாலியல் விவகாரத்தில் கைதானவர் – நாத்திகரா, இடதுசாரியா, மோடி-விரோதியா, ஜிஹாதி-ஆதரவாளரா, யாரிவர் (2)?

COMMUNIST BEEF

COMMUNIST BEEF, bluff, brief – of history and historiography

இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்: “படேலைப் பற்றி நரேந்திர மோடி படேல் குறித்த விவாதத்தை மோடி உருவாக்கியிருப்பது தேர்தல் நேர உத்தியாக இருக்கலாம். ஆனால், மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாரையும் விடுபடல் இல்லாமலும் அடிக்கடியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை மோடியின் பேச்சு உருவாக்குமானால், அது உண்மையிலேயே உருப்படியானதாக இருக்கும்[1]; வெறுமனே, தலைவர்களுக்குச் சிலைகள் நிறுவுவதையும் திட்டங்களுக்கு அவர்கள் பெயர்களை வைப்பதையும் விடுத்து, அவர்களின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவற்றின் அடிப்படையில் செயல்படுவதிலுமே இருக்கிறது உண்மையான நினைவுகூரல். ஆங்கிலேயர்கள் வரலாற்றுப் பித்துப் பிடித்தவர்கள்; அதற்கு நேர்மாறாக வரலாற்று உணர்வற்றிருப்பதில் இந்தியர்கள் தனித்துவம் மிக்கவர்கள். அதனால்தான், இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள்[2]. நவீன இந்தியாவின் வரலாறு பல்வேறு குரல்களின் வழியே சொல்லப்பட வேண்டிய காலம் இது. நேருவும் படேலும் சந்தேகமின்றி ‘பெரும்புலி’கள்தான், ஆனால், இந்தக் கதையில் வெறுமனே வந்துபோகாமல் பெரும் பங்கு வகித்த மற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பெருமைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்!”, இப்படி இக்கட்டுரையில் இந்திய வலதுசாரிகள் மிக எளிதாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களது திரிபு வரலாற்றை ஆதரிப்பதில் அச்சந்தேகம், இன்னும் வளர்கிறது.

Kishtwa riot - perpetrators and actorsஇஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை: ஹசன் சுரூர் எழுத்துகள் இவ்விதமாகத்தான் இஸ்லாம் சார்புடையதாக, இடதுசாரி ஆதரவாக ஆனால் மோடி-எதிர்ர்ப்பாக பீரிட்டு எழுந்துள்ளது. இவ்வாறு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, வலதுசாரிகளை விமர்சனம் செய்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை, எல்லாமே கருத்துரிமை, எழுத்துரிமை என்று ஆர்பாட்டமாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், மோடி-எதிர்ப்பு விமர்சனம் மட்டும், அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இவருக்குத்தான் எல்லாமே தெரியும் என்ற தோரணையில் வசைப்பாடியிருப்பதுடன், தூஷணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தைக் காப்பதற்காக, சில குழந்தைகளைக் கொல்வதிலும் தவறில்லை என்ற ரீதியில் ஐ.எஸ். ஜிஹாதிகளை ஆதரித்துள்ளார்[3]. பெண்கள் குழந்தைகளை விடுத்து,, குடும்ப்பத்தை விடுத்து, “இஸ்லாமிக் ஸ்டேட்” என்ற ஐ.எஸ்.ஜிஹாதி கூட்டத்திற்காக சேவை செய்வதை கடமையாகக் கொண்டதைக் குறிப்பிட்டுப் புரிக்கிறார்[4].  ஆக, இப்படி, கூட்டுக் கலவையாகத் தான் சுரூர் இருக்கிறார்.

Wandhma massacre2ஹசன் சுரூர் யார், அவரது சித்தாந்தம் என்ன?: இஸ்லாம் பற்றிய பெரிய கட்டுரையில், இஸ்லாம், ஜிஹாத்…….போன்றவை என்ன என்று நீளத்தில் எழுதினால், அது அப்படியே “தி ஹிந்துவில்” பதிப்பிடப்படுகிறது[5]. இவையெல்லாம் ஒன்றும் புதியதல்ல, இவரது விளக்கங்களும் புதியதல்ல. பிறகு, எதற்காக “தி ஹிந்து”, இவரது எழுத்துகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்து பதிபிக்க வேண்டும்? குழந்தைகள் பெற்றெடுத்த முஸ்லிம் பெண்கள், அதிலும் இங்கிலாந்தில் பிறந்து, பாகிஸ்தானிய ஆண்களை மணந்து கொண்டதால், அந்த “சகோதரிகள்” ஏன், கணவன்களை விட்டு “ஜிஹாதி சகோதரர்கள்”களுடன் சேர்ந்து கொண்டதை நியாயப்படுத்த வேண்டும்? தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்கிறார், இடதுசாரி என்கிறார், முஸ்லிம் என்கிறார், ஜிஹாதிகளை, குறிப்பாக ஐ.எஸ்.சகோதரர்களை ஆதரிக்கிறார், ஆனால், மோடியை, பிஜேபியை, இந்துத்துவத்தை, இந்துக்களை வசைபாடுகிறார். இத்தகைய கலப்பு சித்தாந்தம் என்ன்னவோ? என். ராமுடனான நெருக்கம் பலவித கோணங்களில் வெளிப்படுகிறது. ஏப்ரல்.8, 2011ல் ஜூலியன் அஸாஞ்சை சந்திக்கும் போது, ஹசன் சுரூருடன் சென்றிருந்தார்[6]. அதில் தான், ஹசன் சுரூர், “தி ஹிந்து”வின் இங்கிலாந்தின் “கரஸ்பான்டென்ட்” என்று குறிப்பிடப்படுகிறார்.

Hasan Suroor - Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.1

Hasan Suroor – Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.1

ஹசன் சுரூரின் டுவிட்டுகள் சில: இன்று டுவிட்டரில் வருகின்றவை தான் செய்திகளாக வெளியிடப்படுகின்றன. டிவிசெனல்களில் விவாதிக்கபடுகின்றன. உடனே, அல்லது அடுத்த நாளில், அப்பதிவை எடுத்து விட்டால் கூட, அல்லது மறுத்தால் கூட விடாப்பிடியாக விவாதங்கள் தொடர்கின்றன. இனி, இவரது டுவிட்டுகளப் பார்ப்போம்:

  • தில்லி, பிஹார் முதலியவற்றிற்கு பிறகு, மோடி, அவருடைய “இந்தியா” பற்றிய எண்ணத்தை மறுபடியும் பரிசீலினை செய்ய வேண்டும்.
  • ஷர்ம் அல் ஷைக் விமான வீழ்ச்சி பற்றி சார்லி ஹெப்டோ கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளது. இனியும், அதில் பீதியளிக்கும் வகையில் எதுவுமே இல்லையா?
  • பௌத்தர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த மக்களாக நம்பப்படுகின்றனர். ஆனால், அவர்கள் பர்மாவில் ஹோஹிங்ய முஸ்லிம்களை அழிக்கும் வகையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளனர்.
  • பிஜேபி-விரோத வெறியைத் தூண்டிவிடுவதாக ஜைட்லி இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸைக் குற்றஞ்சாட்டுகிறார். தல்வீன் சிங் இடதுசாரியைச் சேர்ந்தவா? நாராயண மூர்த்தியும் அவ்வாறா? ஷோரியும் கம்யூனிஸ்டா? ரகுராம் ராஜனும் இடதுசாரியா?
  • லண்டன் விஜயம் போது, மோடி ராணியுடன் மதிய உணவு உண்ணவேண்டியுள்ளது. அவரது பாதுகாப்பு வீரர்கள், பக்கிங்ஹாம் அரண்மனையின் சமையலறை பிரிட்ஜில் பசுமாமிசம் எதுவும் இல்லை என்பதனை சோதித்து விட்டனரா?
  • சுதந்திரமான பேச்சா? என்ன அது? “தி ஹிந்து”வில், எனது கட்டுரையைப் பாருங்கள்.

இப்படி சமீபத்தில் வந்துள்ள சில டுவிட்டுகளிலிருந்தே, இவரது போக்கு நன்றாகவே வெளிப்படுகிறது.

Hasan Suroor - Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.2

Hasan Suroor – Leftist, Is supporter, Hindutwa opponent-twitters.2

© வேதபிரகாஷ்

14-11-2015

[1] தமிழ்.இந்து, ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்!, Published: November 10, 2013 15:38 ISTUpdated: November 11, 2013 16:44 IST.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5335293.ece

[3] He has subtly supported Islamic State (IS). He doesn’t see any harm in IS ruthlessly killing children just for the sake of saving such a great religion. Then, how can you expect a moron like Hasan Suroor to not become a sex predator.

http://indicivil.blogspot.in/2015/11/hasan-suroor-family-profile-and.html

[4] As I write this, Britain is rocked by the strange case of three housewives (sisters born and brought up in Britain and married to men of Pakistani origin) who have fled to Syria (along with their nine children aged between 3 and 15) to team up with IS militants…………………. the power of propaganda and persuasion that can make people believe in the righteousness of a ‘cause’ and that urges them to perform certain acts as part of their “Islamic duty”.

http://www.thehindu.com/opinion/op-ed/the-siren-call-of-pure-islam/article7347254.ece

[5] http://www.thehindu.com/opinion/lead/islam-and-its-interpretations/article6455101.ece

[6]  On April 8, Julian Assange, the brilliant and articulate Editor-in-Chief of WikiLeaks, gave a one-hour interview at Ellingham Hall in the county of Norfolk to N. Ram, The Hindu’s Editor-in-Chief, who was accompanied by Hasan Suroor, the newspaper’s U.K. Correspondent.

http://www.thehindu.com/opinion/interview/video-excerpts-of-n-rams-april-8-2011-interview-with-julian-assange/article1699186.ece