பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்–இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [1]
“பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பாண்டி இலக்கிய விழா: “பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பெயரில் பல தனிப்பட்ட நிறுவனங்களின் ஆதரவில், இலக்கிய கொண்டாட்ட விழா ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 தேதிகளில் புதுச்சேரியில் நடைப்பெற்றது[1]. நிகழ்ச்சி நிரலை இங்கு பார்க்கலாம்[2]. இதை ஆதரிக்கும் நிறுவனங்களை இங்கு பார்க்கலாம்[3]. புதுச்சேரி இலக்கிய விழா பற்றி கேட்டபோது, பங்கு கொண்ட இந்துத்துவவாதிகள் வழக்கம்போல, திமிருடன் அகம்பாவத்துடன் பதில் கொடுத்தனர். பிறகு, அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சித்தாந்த ரீதியில் போராடும் போது, எதிர்-சித்தாந்தவாதிகளையும் வரவேற்று கலந்துரையாட வேண்டும், எங்கு இயைந்து போகிறோம் என்றுப் பரீசித்துப் பார்க்கலாம். ஆனால், இங்கோ முழுக்க-முழுக்க வலதுசாரி-இந்துத்துவவாதிகள் கலந்து கொண்டு ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். அந்தந்த விசயத்தில் திறமை, அனுபவம், ஞானம் உள்ளவர்களை அழைக்காமல், தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற ரீதியில், விழாவில் சேர்த்துள்ளனர். அவர்களில் பாதிக்கு மேல், எந்த இலக்கிய மாநாட்டிலும் காணப்படாதவர்கள். பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய அரசியல்வாதிகள் பரிந்துரையில் அவர்கள் சேர்க்கப் பட்டனர். பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்று புதியதாகத் தோன்றி மறைந்து விடுவது வலுவான சித்தாந்தம் இல்லை, அவர்களும், அத்தகைய போராளிகளாகத் தான் இருக்கின்றனர்.
‘தி பாண்டி லிட் பெஸ்ட்‘ நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு[4]: மாநாட்டில் வலது சாரி சிந்தனையாளர்களைப் பங்கேற்க செய்வதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்தன. இந்நிலையில் எழுத்தாளர்களும் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், ரவிக்குமார், மாலதி மைத்ரி உட்பட பலரும் இவ்விழாவை புறக்கணிக்க வலியுறுத்தினர். இந்நிகழ்வுகள் புதுச்சேரி மண் சார்ந்த கலை இலக்கியத்தையோ, தமிழ் கலை இலக்கியத்தையோ பிரதிபலிக்கவில்லை. “இந்நிகழ்வு முழுக்க ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, சங்கப்பரிவாரங்களின் கருத்தியல் பிரச்சாரத்துக்கு தளம் அமைப்பதாகவே உள்ளது. நிகழ்வில் பங்கேற்போர் இந்துத்துவ அமைப்புகளிலும், வலதுசாரி அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்படுவோராக இருக்கின்றனர். புதுச்சேரியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் இந்நிகழ்வு சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகிறோம். இந்நிகழ்வை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்[5]. ஆனால், மாநாட்டை ஆதரித்தவர்[6], “மாநாட்டில் 50 சதவீத புதுவை எழுத்தாளர்கள் மற்றும் அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும் 35 புத்தகங்கள் வெளியாகின்றன. நாளொன்றுக்கு 12 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது,” என்றனர்[7].
பிரெஞ்சு தூதரகம் விலகிக் கொண்டது: “பாண்டி லிட்பெஸ்ட்” பொறுத்தவரை, பிரெஞ்சு தூதரகம் [Alliance Française Foundation, the parent body of its venue partner] அதனை தனது வளாகத்தில் நடத்துவாக இருந்தது. ஆனால், இத்தகைய ஒருதலைப்பட்ச கூடுதலாக மாறிவிட்டதால், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. நடந்தப்படும் நாடுகளின் அரசியல் மற்றும் மதசம்பந்த விசயங்களில் தலையிட விரும்பவில்லை என்ற பொறுப்புள்ளது என்றும் அறிவித்தது[8]. அதாவது, இந்த அமர்வுகளில் அரசியல், சமயம் முதலியவற்றைச் சார்ந்த விசயங்கள் அலசப் படுவதால், பிரெஞ்சு அரசு சார்புடைய அந்த நிறுவனம் அவ்வாறு அறிவித்தது. பிறகு நிகழ்ச்சி நடக்கும் இடம் மாற்றப்பட்டது. அரவிந்தர் பக்தர்களை வைத்துக் கொண்டு, ஒப்பேற்றிது போல தெரிகிறது. மைக்கேல் டேனினோ போன்றவர், அரவிந்த பக்தராக உள்ளார், எழுதுகிறார். இப்பொழுது [என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு], “விசிடிங் புரொபசர்” நிலையைப் பெற்றுள்ளார். அதாவது, நாளைக்கு ஆட்சி-அதிகாரம் இல்லை என்றால், பதவி இல்லை என்ற நிலையில் சித்தாந்திகள் வேலை செய்யக் கூடாது.
உண்மையான சித்தாந்த போராளி திடீரென்று தோன்றி மறைய மாட்டான்: சரித்திர ரீதியில் விவதங்கள் நடந்தன. சரித்திரம் எப்படி மாற்றி எழுதப் படவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இங்கு வந்துள்ளதாக குறிப்பிட்டவர்களை IHC, SIHC, TNHC, etc போன்ற எந்த சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளதாகவோ, ஆய்வுக் கட்டுரை வாசித்ததாகவோ தெரியவில்லை [பொரபசர் வெங்கட ரகோத்தமன் தவிர]. சித்தாந்த போராளி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் / இல்லாவிட்டாலும், கலந்து கொள்வான், தனது கருத்தை / கவிதையை தைரியமாகச் சொல்வான். தொடர்ந்து அவன் சென்று கொண்டிருப்பான், தனியாகக் கூட போராடி வருவான், ஏனெனில் அத்தகையோர் பணம், விருது, அதிகாரம் பார்த்து போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்பொழுது திடீரென்று இவர்கள் எப்படி தோன்றியுள்ளார்கள் என்று தெரியவில்லை.
வாஜ்பேயி இறந்தாலும், நாங்கள் இலக்கிய விழா நடத்துவோம் என்று நடத்தப்பட்ட விழா: 16-08-2018 அன்று வாஜ்பாயி இறந்தாலும், பிடிவாதமாக கொண்டாடினர். “பிரமாண்டமான துவக்க விழா” மட்டும் நடப்பதை தவிர்ப்பதாக அறிவித்தனர். இலக்கியவாதிகள் இவ்வாறா இலக்கிய அஞ்சலி செல்லுத்துவார்கள் என்று மற்றவர் திகைத்தனர். அதிகமாக வலதுசாரிகள் இருப்பதை, அடுத்த வருட விழாவில் சரி செய்வோம் பலதர கருத்துகளை ஏற்போம் என்பதே, விவகாரத்தைக் காட்டி விட்டது. எத்தனை ஆசைகாட்டினாலும், செம்மொழி மாநாட்டில் நொபுரா கராஷிமா கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. சித்தாந்தம் பேசுபவர்கள் தத்துவம் பேச மாட்டார்கள், “திங்-டாங்க்” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மற்ற செமினார்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆரியர் பற்றிய விவாதம் எல்லாம் அரைத்த மாவை அரைக்கும் தோரணையில் இருந்தது. உதாரணத்திற்கு, “ஹர்பன் நக்சல்” பற்றிய உரையாடல், தெரிந்த விவரங்களாகவே இருந்தன[9]. டீ, காபி, புகையிலை, திருட்டுத் தனமாக கஞ்சா போன்ற விவகாரங்களில் பலரின் பங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் ஆரமொஇத்து வைக்கப் பட்ட “கூட்டுக் கொள்ளை” இன்றும் தொடர்கிறது. அரசு அதிகாரிகள், அரசுசாரா நிறுவனங்கள், கிருத்துவ மிஷினரிகள், வேலையாட்களைக் கட்டுப் படுத்தும் தாதாக்கள், என்று பலவுள்ளன. இவற்றை நீக்காமல், ஒன்றும் செய்யமுடியாது.
© வேதபிரகாஷ்
09-09-2018
[1] http://pondylitfest.com/index.php
[2] http://pondylitfest.com/events.php
[3] http://pondylitfest.com/index.php – eventpartners
[4] தி.இந்து, ‘தி பாண்டி லிட் பெஸ்ட்‘ நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு: முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தல், செ.ஞானபிரகாஷ், புதுச்சேரி, Published : 16 Aug 2018 19:17 IST; Updated : 16 Aug 2018 19:17 IST
[5] https://tamil.thehindu.com/tamilnadu/article24707228.ece
[6] மாலைமலர், புதுவையில் எழுத்தாளர்கள் மாநாடு – மத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கிறார், பதிவு: ஆகஸ்ட் 11, 2018 15:39.
[7] https://www.maalaimalar.com/News/District/2018/08/11153931/1183208/Writers-Conference-in-Pondicherry-central-minister.vpf
[8] The Alliance Française Foundation said in a press release on Wednesday that it regretted that the event had been announced “as organised in partnership” with its branch in Puducherry. It said that it was not judging the appropriateness or quality of the event. But it emphasised that the organisation had “an obligation of non-interference in political and religious discources of the host countries” in which it operated, and upheld the “values of tolerence and neutrality”. It said that the main objective of Alliance Françaises network has always been to teach French language and to promote Indo-French cultural exchanges.
Scroll.in, Left demand to cancel ‘right-wing’ Pondy Lit Fest sparks fresh debate on free expression, by Harsimran Gill, Published Aug 17, 2018 · 07:30 am
[9] PondyLitFest, Urban Naxals- Nationals, Anti-Nationals and the rest of us, Published on Aug 22, 2018; https://www.youtube.com/watch?v=7JlCQlwnhUQ