Archive for the ‘நோன்பு கஞ்சி’ Category

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது!

ஜூன் 16, 2016

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசிசெக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது!

Ramzan ka tohfa - Naidu way of appeasementரம்ஜான் நோன்பும், இப்தர் பார்டிகளும், செக்யூலரிஸ அரசுகளும்: ரம்ஜான் கா தோஹ்பா [Ramzan ka tohfa], ரம்ஜானுக்குக் கொடுக்கப்படும் பரிசு, இனாம் என்று செக்யூலரிஸ அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். செக்யூலரிஸம் ஜெயிக்கிறாதோ இல்லையோ, கம்யூனலிஸம் நிச்சயமாக இதனால் ஊற்றி வளர்க்கப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட நாத்திக அரசியல்வாதிகள் கொண்டாடும் இப்தர் பார்ட்டிகளே அலாதிதான். கருணாநிதி போன்றோர் அவற்றில் குல்லா போட்டுக் கொண்டு, கஞ்சி குடித்துக் கொண்டே, இந்துமதத்தை தூஷிப்பது வழக்கமாக இருக்கிறது. காபிர்-மோமின் உறவுகளும் செக்யூலரிஸத்தில் நாறி வருகிறது. ஜெயலலிதா தனக்கேயுரிய பாணியில் அரிசி கொடுத்தது இந்தி ஊடகங்களில் கூட செய்திகளாகப் போட்டுள்ளார்கள்[1]. “இப்தர் பார்டி” என்று அரசு சார்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடபுடலாக பார்ட்டிகள் நடத்துகிறார்கள், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ரம்ஜானே “அல்லாவின் பரிசு” எனும் முஸ்லிம்கள், இப்படி காபிர்களிடமிருந்து அரிசி முதல் நெய் வரைப் பெற்றுக் கொள்கிறார்களே, அது சரியா, அதாவது ஹலாலா-ஹரமா என்று ஆசார முஸ்லிம்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால், இதுவரை யாரும் எதிர்க்கவில்லை. அப்படியென்றால், அல்லா ஒப்புக் கொண்டு விட்டார் என்றாகிறாது.

jeyalalita-at-quade-millat-tombமசூதிகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் அம்மா அரிசி டன்டன்னாக இலவசம்: ஜெயலலிதா 4600 டன் அரிசியை மசூதிகளுக்குக் கொடுத்து தனது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “சிறுபான்மையின மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக் கப்படுகிறது. இதற்காக பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதி வழங்க கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டேன். அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்க, அரிசிக்கான மொத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை மொத்த அனுமதி மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப் படுகிறது. இதன்படி, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும், இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் [2,14,00,000/-] செலவாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,000 பள்ளிவாசல்கள் பயனடையும்”, இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்[3].

Ramzan ka tohfa - Naidu way of muslim appeasement.ரம்ஜான் கஞ்சிஅரிசி விசயமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு[4]: ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும் அரிசியை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: “ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்துவிண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து உத்தரவிடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்காக கஞ்சி தயாரிக்க இலவசமாக பச்சரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை அவரவரே தணிக்கை செய்து, தகுதியுள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியின் அளவு ஆகியவை குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது செக்யூலரிஸ அரசு, இவ்வாறு வேலை செய்கிறது, கலெக்டர் முதல் மற்ற அதிகாரிகள், இனி வருடாவருடம் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.

Ramzan ka tohfa - Naidu way of mohammedan appeasementசெக்யூலரிஸத்தில் திளைக்கும் பண்டிகைகள்: தமிழகத்தில், அப்பொழுது சில இந்து இயக்கங்கள், இதே மாதிரி மாரியம்மன் கூழ் ஊற்ற அரிசி கொடுக்கப்படுமா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன. ஆனால், எதுவும் வேகவில்லை. சிறுபான்மையினரை தாஜா செய்வது, கொஞ்சுவது, கெஞ்சுவது எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அரசியல்வாதிகள், ஒருவரை மற்றவர் மிஞ்சுவதில் அதிவல்லவர்கள் என்றே கூறலாம். மசூதிகள், பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதைப் போல ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு அரிசி வழங்க வேண்டும் என்று ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்[6]. இந்து கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறை படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 17ம் தேதி ஆர்பார்ட்டம் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்[7]. ஆர்பாட்டம் நடக்குமா, தொடருமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கவனிக்கும் போது, தெலிங்கானாவில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆந்திராவில் பொங்கல், தீபாவளி இனாம் கொடுப்பதால், பிரச்சினை இல்லை.

Ramzan ka tohfa - Naidu - chandranna-way of appeasementசந்திரண்ணாவின் காணுகஅதாவது சந்திரபாபுவின் காணிக்கைகள்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சும்மா இருப்பாரா, இந்த “ரம்ஜான் கா தோஹ்பா” என்று, ஒரு பையில்

  1. ஐந்து கிலோ கோதுமை மாவு.
  2. இரண்டு கிலோ சக்கரை.
  3. ஒரு கிலோ சேமியா
  4. 100 கிராம் நெய்.

என்று போட்டு விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்[8].  இதற்காக பிரத்யேகமான பேக்கிங் எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு ஆகிவிட்டது. இவை பத்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு ஜுலை 1 முதல் 7 வரை விநியோகிக்கப்படும்[9]. நாயுடு தன்னுடைய செக்யூலரிஸ பரிசு-இனாம் திட்டத்தில் சந்திரண்ணா சங்கராந்தி காணுக [Sankranthi Kanuka (Pongal gift) –  ‘Chandranna Sankranthi Kanuka’], சந்திரண்ணா ரம்ஜா கா தோஹ்பா [Chandranna Ramzan ka tohfa] மற்றும் சந்திரண்ணா கிறிஸ்துமஸ் காணுக  [Chandranna Christmas Kanuka] என்று காணிக்கைகள கோடிக் கணக்கில் அள்ளி வீசுகிறார்[10]. “சந்திரண்ணா” என்றால் அண்ணா சந்திரபாபு நாயுடு தான், இங்கே “அம்மா” மாதிரி! ஆக, காணிக்கைக்ககளுடன் தன்னுடைய பெயரையும் விளம்பகரப்படுத்திக் கொள்கிறார்[11]. அந்த அளவுக்கு அவர்களது முன்னோக்கு-பின்னோக்கு பார்வைகள், திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன.  இந்து-முஸ்லிம்-கிருத்துவர் என்று மூன்று சமுதாயத்தினரையும் “அண்ணா” செக்யூலரிஸத்தில் மகிழ்விப்பதால், அங்கு அரிசி நன்றாகவே வெந்து கொண்டிருக்கிறது!

© வேதபிரகாஷ்

16-06-2016

Ramzan ka tohfa - Naidu and KCR

[1] http://navbharattimes.indiatimes.com/state/other-states/bangalore/chennai/jaya-orders-free-rice-to-mosques-for-ramzan/articleshow/52567364.cms

[2] தமிழ்.இந்து, ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,600 டன் பச்சரிசி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு, Published: June 3, 2016 08:07 ISTUpdated: June 3, 2016 08:08 IST.

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4600-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8685053.ece

[4] தினத்தந்தி, இஸ்லாமியர்களுக்காக ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 12:22 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 3:00 AM IST

[5] http://www.dailythanthi.com/News/State/2015/06/18002244/The-government-instructed-the-district-collectors.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 17ல் இந்து முன்னணி ஆர்பார்ட்டம்ராமகோபாலன் அறிவிப்பு: வீடியோ, By: Mayura Akilan, Published: Monday, June 6, 2016, 15:12 [IST]

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-munnani-protest-on-july-17-says-ramagopalan-255356.html

[8] The gift hamper consisting of 5 kg wheat flour, 2 kg sugar, 1kg vermicelli and 100 gram ghee will be handed over to the beneficiaries from July 1 to 7 through ration shops across the state.

Zeenews, AP govt to give ‘Ramzan Tohfa’ to 10L families, Last Updated: Wednesday, June 15, 2016 – 15:05.

[9] http://zeenews.india.com/news/andhra-pradesh/ap-govt-to-give-ramzan-tohfa-to-10l-families_1896044.html

[10] The Times of India, 10L families in AP to receive Ramzan gift, TNN | Jun 15, 2016, 11.36 AM IST

[11] http://timesofindia.indiatimes.com/city/hyderabad/10L-families-in-AP-to-receive-Ramzan-gift/articleshow/52758594.cms