Archive for the ‘ஜிஷா’ Category

காமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்!

ஜூன் 18, 2016

காமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்!

jisha-murder-actor-lands-trouble

ஏற்கெனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட அமிர் உல் இஸ்லாம்: அமீர் அல் இஸ்லாம் பங்களாதேசத்திலிருந்து, அசாமில் நுழைந்தவன். பிறகு டீ தோட்டங்களில் வேலைசெய்து வந்தான்[1]. அங்கிருந்து கேரளாவுக்கு வந்தான். அவன் செல்போன் தான் அவனைப் பிடிக்க வழிசெய்தது. பலமுறை எண்களை மாற்றினாலும், அதில் இருந்த போர்ன் படங்களை மட்டும் அப்படியே வைத்திருந்தான்[2]. அவனுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. அதில் ஒருத்திக்கு 38 வயது, அவள் மூலம், வயது வந்த ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்கெனவே 18 வயதில் ஒரு பையன் இருக்கும் போது, டோல்டா கிராமத்தில், 2000த்தில் அவளை திருமணம் செய்து கொண்டான். 2013ல் மறுபடியும், பெரும்பவூரில் இருக்கும்போதே, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அசாமில் அவன் இருக்கும் பகுதிகளில் இப்படி பலதார திருமணம் செய்து கொள்வது சாதாரமாக இருந்தது என்று ஊடகங்கள் இதற்கு விளக்கம் கொடுத்திருப்பதே வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆனால், அவன் ஒரு முஸ்லிம் என்று எங்குமே குறிப்பிடாமல், இந்த விவரங்களை எல்லாம் கொடுப்பது, அதை விட வேடிக்கையான விசயம் எனலாம். இஸ்லாம் அசாமில் கூர குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் என்பது, அங்கு சென்ற போலீசார் விசாரித்தபோது தெரிய வந்துள்ளது[4].

jisha-murder-02-06ஜிஷாவைத் தாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவள் வீட்டுக்குச் சென்றது: அதனல்தான், இரு பெண்களுக்கு கணவாக இருந்து, இரு வயது பெண்ணிற்கு தந்தையாக இருக்கும் இவன் ஒரு இளம்பெண்ணைக் கற்பழித்து, கொலை செய்ய தீர்மானித்தான் போலும். ஏழு மாதங்களுக்கு முன்னர் தான் அவன், பெரும்பவூருக்கு வந்துள்ளான். அவன் எல்லாவித வேலைகளையும் செய்து வந்தான். பிறகு, ஜிஷாவுடன் நட்பு வைத்துக் கொண்டுள்ளான். ஜிஷா வீடு கட்டும் விசயத்தில் இந்த வெளிமாநில கட்டிட வேலையாட்களின் தொடர்பு இருந்துள்ளது. இதனால், அவளது, செல்போனில், அவர்களது எண்களும் இருந்துள்ளன. அவற்றில் அமிர் உல் இஸ்லாமின் எண்ணும் இருந்துள்ளது. ஏப்ரல் 28, 2016க்கு முந்திய நாளுக்கு அங்கு வந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளான். ஆனால், அடுத்த நாள் வரும்போது, குடித்து விட்டு, அந்த போர்ன் படத்தையும் பார்த்து வந்தானாம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜிஷாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், இவன் வம்புக்கு சென்றபோது, அவள் இவனது கன்னத்தில் அறைந்துள்ளாள். இதைப் பார்த்த ஜிஷா இவனை கிண்டல் செய்து தமாஷ் செய்திருக்கிறாள்[5]. 28ம் தேதி மாலை 4 மணி அளவில் அங்கு சென்றிருக்கிறான். அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால், செருப்பால் அடிப்பேன் என்று சொல்லியதான், அவன், ஆபாசமாக பேசியிருக்கிறான்[6]. பிறகு, மறுபடியும் வந்தபோது தான், தகராறு ஏற்பட்டு, கற்பழிப்பு, கொலை எல்லாம் நடந்திருக்கிறது.

jisha-house-footwear- left by Amir ul Islamபோர்ன் படம் பார்த்து, செக்ஸில் ஈடுபட நினைக்கும் காமக்கொடூரன்: மேலும், அமீருல் இஸ்லாம், ஒரு காமக்கொடூரன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது[7]. எப்போதும் செக்ஸ் நினைவுடனேயே, அது சார்ந்த நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளான் அமீருல் இஸ்லாம். பெரும்பாவூரில் தங்கி இருந்தபோது அங்கு குளிக்கும் பெண்களை மறைந்திருந்து பார்த்து ரசிப்பது இவனது வாடிக்கையாக இருந்துள்ளது. அப்படி ஒருமுறை பார்த்துக்கொண்டிருந்தபோது, சில பெண்கள் இதை பார்த்துவிட்டனர். அமீருலை திட்டி அனுப்பியுள்ளனர். அப்போது ஜிஷாவும் இதை பார்த்து சிரித்துள்ளார். அமீருல் இஸ்லாம் தங்கியிருந்த பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெண் ஆடு உடன் அவன் உடலுறவு வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆட்டின் மர்ம உறுப்பில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததாலும், ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து, மர்ம உறுப்பை சிதைத்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் போலீசாருக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாம். ஆட்டுக்கு ஏற்பட்ட காயங்கள் அமீருல் கொண்ட உடலுறவால்தான் ஏற்பட்டதா என்பதை கண்டறிய திருச்சூரிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த ஆடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாய் திறக்க டாக்டர்கள் மறுத்து வருகிறார்கள்[8].

ஜிஷா கொலை - காட்டிக் கொடுத்த செருப்புபங்களாதேசத்திலிருந்து ஊடுரும் முஸ்லிம்களினால் பிரச்சினை:  பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி வரும் முஸ்லிம்களால் இந்தியாவில் எத்தனை பிரச்சினைகள் ஏற்படுகின்றன, மதவாத கலவரங்கள், தீவிரவாத செயல்கள், பயங்கரவாத குண்டுவெடிப்புகள், கலவரங்கள், ஹவாலா, கள்ளநோட்டு விநியோகம் போன்ற பொருளாதாரக் குற்றங்கள், இது போன்ற பாலியல் வன்புணர்ச்சிகள், கொலைகள் என்று பெருகி வருவதும் நோக்கத்தக்கது. அதே நேரத்தில், பங்களாதேசத்தில், அல்-குவைதா, ஐசில் போன்ற தீவிரவாதிகளின் நடமாட்டம், தீவிரவாத செயல்கள், சிறுபான்மையினர் கொலைசெய்யப்படுவது என்பது நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் இந்துக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, பங்களாதேச முஸ்லிம்களின் ஊடுருவல்களை எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டியுள்ளது. வேலை செய்து கொண்டு அமைதியாக இல்லாமல், பற்பல குற்றங்களில் ஈடுபடுவது, வேறு திட்டங்களையும் காட்டுகின்றன. கேரளாவில் வரும் முஸ்லிம்களுக்கு எப்படி ஆதரவு கிடைக்கிறது என்று நோக்கத்தக்கது. இங்கு வந்தவுடன், இஸ்லாம் திருமணம் செய்து கொண்டுள்ளான் என்றால், எப்படி அவனுக்கு பெண்ணைக் கொடுக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. மேலும், எத்தகைய ஆவணங்களை வைத்துக் கொண்டு, அவன் அங்கு வேலைசெய்தான். செல்ப்பொன் வாங்கினான், கல்யாணம் செய்து கொண்டான் என்பதனையெல்லாம் நினைத்துப் பார்த்தால், அவையெல்லாம் போலி என்று தான் தெரிய வரும். அப்படியென்றால், அவை பெறுவதற்கு உள்ளூரில் யார் உதவுவது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது. பங்களாதேசம், அசாம், என்று கேரளாவுக்கு வந்து தங்குகிறான் என்றால், எந்த துணையும், ஆதரவும் இல்லாமல் வந்துவிரட முடியாது. அப்படி வருகிறார்கள் என்றால், அதற்கான ஏற்பாடுகளை செய்பவர்கள் கேரளாவில் இருக்கிறார்கள் என்றாகிறது.

© வேதபிரகாஷ்

18-06-2016

suspect

[1] Mathrubhumi, Jisha murder accused has 2 wives, one of them is 38 years old, June 17, 2016, 09:25 AM IST

[2] http://english.manoramaonline.com/in-depth/kerala-rapes/jisha-murder-phone-loaded-with-porn.html

[3] In Assam, it is not unusual for a man to marry a woman older than him. Polygamy is also prevalent in the region.

[4] The probe officials spread their net to Assam, Bengal, Bihar, Jharkhand among other states. When police team reached Amiyoor’s place in Assam they came to know that Amiyoor had reached there after the crime. When Amiyoor came to know about police hunting for him, he immediately left for Kerala. It is learnt that the assailant was involved in crimes in Assam too.

http://english.mathrubhumi.com/news/kerala/acquaintance-turns-murderer-people-still-under-shock-english-news-1.1135467

[5] The Asian age, Jisha murder case: Migrant labourer, 23, arrested, Jun 17, 2016, Age Correspondent, Kochi.

[6] http://www.asianage.com/india/jisha-murder-case-migrant-labourer-23-arrested-469

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பெண்கள் குளிப்பதை ரசிப்பது, ஆடுடன் உறவு.. கேரள கல்லூரி மாணவி பலாத்கார குற்றவாளி பற்றி திடுக் தகவல், By: Veera Kumar, Updated: Friday, June 17, 2016, 17:46 [IST].

[8] http://tamil.oneindia.com/news/india/kerala-rape-accused-had-sex-with-goat-256250.html