Archive for the ‘அரபி’ Category

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?  இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்னஇது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்:  திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே  நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்[1].  இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது[2]. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது: இங்கு முக்கியமாக நடந்து வரும் மோசடியை, “மத மொசடியை” கவனிக்க வேண்டும். குறிப்பாக எஸ்.சிக்கள், அதாவது பட்டியல்-சலுகை பெறும் இந்துக்கள், இந்துக்களாக இருந்தால் தான் இன்வொதிக்கீடு போன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதம் மாறும் நபர்களுக்கு அந்த சலுகை தொடராது, கிடைக்காது. அதனால், மதம் மாறியப் பிறகும், தாங்கள் எஸ்.சிக்கள், இந்துக்கள் என்று மெய்ப்பிக்க சான்றிதழை வைத்திருக்கிறர்கள். நியாமாக, சட்டப் படி, மதம் மாறியப் பிறகு, அவர்களுக்கு அந்த சலுகை இல்லாமல் போகிறது. அதனால், சான்றிதழின் படி இந்துவாக இருந்து, அரசு சலுகைகள் பெற்று வாழும் அவர்கள், கிருத்துவர் அல்லது முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, இத்திட்டங்களின் கீழ் அளிக்கப் படும் சலைகைககள், மானியங்கள், நிதியுதவிகள் போன்றவற்றைப் பெற முடியாது. இதைத் தான் அமைச்சர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார்.

17-12-2022 – பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்[3]. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 17-12-2022 சனிக்கிழமை நடைபெற்றது[4]. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.கார்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு அளிக்கப் படும் உதவிகள்: இதைத்தொடா்ந்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: “தமிழகத்தில் மாவட்டம் தோறும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சிறுபான்மையினருக்கு கூடுதலாக மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இதேபோல தனி அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். கிறிஸ்தவ மக்களுக்கும் தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பட்டியல் பெறப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உலமாக்கள் உறுப்பினா்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. இதனால், தமிழக முதல்வா் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார்,” என்றார் அவா்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்: சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் “முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்” என்ற அமைப்பு 01.10.1982 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது[5]. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] இ.டிவி.பாரத், சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்அமைச்சர் தகவல், Published on: August 24, 2022 9.29 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvallur/welfare-benefits-can-be-availed-only-if-you-have-proof-of-minority-status-minister-masthan/tamil-nadu20220824092932136136811

[3] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு தனி நல வாரியம், By DIN  |   Published On : 18th December 2022 01:19 AM  |   Last Updated : 18th December 2022 01:19 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/dec/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2–%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3968816.html

[5] https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-b95bc1bb1bbfbaabcdbaabbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

Saudi colour code for Companies4

சவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.

Saudi colour code for Companies

நிதாகத் என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Saudi colour code for Companies3
முஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:

  1. நீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
  2. மஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  3. சிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  4. பச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

Saudi colour code for Companies2

புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.

Saudi colour code for Companies5

படிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.

  • எண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].
  • 2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].
  • 2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு! இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.
  • 2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].
  • பிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
  • இப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

Saudi scavenging

 

சவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்

ஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].

Two Arabs scavenging for food

 

இரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்!

5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

How workers live in Saudi Arabia

 

வெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்

இந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].

Saudi scavenging2

 

சவுதியில் குப்பை அள்ளும் பணி

மலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்?: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.

Saudi scavenging3

 

சவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்

செக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.

Saudi Arabia and its flag

 

சவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்

முஸ்லீம்களின் விஷமத்தனம் –  சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்! பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.

 

வேதபிரகாஷ்

14-04-2013


[2] Nitaqat classifies all private Saudi firms into four categories-Blue, Yellow, Green and Red-based on their size and the number of Saudi nationals they have recruited.

[3] The fear psychosis is bogus. What has happened in Saudi Arabia is not an overnight development.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

[4] From the early Eighties, all Gulf Cooperation Council (GCC) countries have been talking about localisation, in terms of employment opportunities.

[5] In 2003, government had said it would reduce the numbers of expat workers to 20 per cent of its total population in 10 years.

[6] As long ago as 2004, Saudi’s Shura Council stipulated that by 2007, 70 per cent of the country’s workforce would have to be locals to reduce dependence on foreign workers, recapture remittances that would otherwise flow out of the country, and reinvest.

[7] Saudi Arabia’s Shura Council passed a bill on July 8, 2009, to improve legal protections for the estimated 1.5 million domestic workers in the country, but the measure still falls short of international standards, Human Rights Watch said today. The bill goes from the Shura Council, an appointed consultative body, to the cabinet, which can make further changes before it is enacted into law. http://www.hrw.org/news/2009/07/10/saudi-arabia-shura-council-passes-domestic-worker-protections

[12] Minister of State for External Affairs E. Ahamad, who is in Dushanbe to attend the Asian Development Dialogue, met Saudi Arabia’s Deputy Minister of Foreign Affairs Prince Abdulaziz bin on Friday and expressed the hope that Riyadh would not take any step that would adversely impact expatriates in the Kingdom.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[13] Overseas Indian Affairs Minister Vayalar Ravi had on Thursday said Indian Ambassador to Saudi Arabia had been asked to take up the issue with Riyadh and its Labour Ministry and ensure that there would be no job loss for Indians on a mass scale. In 2011, 2.28 million Keralites were working abroad. Of them, some 570,000 were in Saudi Arabia, a report said.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[14] The press is full of figures of how Saudi Arabia over the last four months has deported more than 200,000 foreigners staying illegally, how they are stamping exit visas post haste in a manner that will deny those being turned away a chance to work in any other Gulf country, how foreigners are locking themselves up in rooms without water and food fearing arrest or worse.

http://newindianexpress.com/opinion/article1533803.ece