Archive for the ‘பாகிஸ்தானில் இந்துக்கள்’ Category

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

ஏப்ரல் 1, 2011

காஷ்மீரில் கிரிக்கெட் ஆடுவார்களா அல்லது ஆட விடுவார்களா?

 

காஷ்மீர் பற்றி, சமீபத்தில் கருத்தரங்கம் என்று சொல்லிக் கொண்டு, நன்றாகவே, பிரிவினைவாதிகளுக்கு, விளம்பரத்தை செய்து கொடுத்தது இந்திய அரசாங்கம். 2-ஜி ச்பெக்ட்ரம் விவகாரத்தை, அப்படியே அமுக்கிவிட்டது கிரிக்கெட் ஆட்டம். சோனியாவிற்கோ, மகிழ்ச்சி தாளவில்லை, கைகளை உயர்த்திக் கொண்டு ஆடாத குறைதான்! பாவம், அந்த ரேணுகா சௌத்ரி இல்லை. இருந்திருந்தால், முன்போல கைக்கோர்த்துக் கொண்டு ஆடியிருப்பார். அம்மையாருக்கு அந்த அளவிற்கு சந்தோஷம். இப்படி, இரண்டு-மூன்ரு கிரிக்கெட் ஆட்டங்கள் ஆடினால், ஊழலைப் பற்றிய விவகாரங்கள் மக்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது. சரி, இந்திய-பாகிஸ்தான் பிரதம மந்திரிகள், மற்ற வகைறாக்களை வைத்துக் கொண்டு, காழ்மீரத்தில், ஏன் கிரிக்கெட் ஆடக்கூடாது? அவர்களுடைய கிரிக்கெட் தூது சமாசாரம், அங்கு செல்லுபடியாகாதா?

 

இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது:மொகாலி: “இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்குள் உள்ள பழமையான விரோத போக்கை ஒதுக்கி விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மொகாலியில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக வந்திருந்த பாக்., பிரதமர் கிலானிக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இரவு விருந்து அளித்து கவுரவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நம் இரு நாடுகளுக்கும் இடையே, பழமையான விரோத போக்கு உள்ளது. அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்தியா – பாக்., இடையே, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். இரு நாடுகளையும் இணைக்கும் பாலமாக கிரிக்கெட் விளங்குகிறது. இது ஒரு சிறப்பான துவக்கம். எந்த வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதை சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். கிலானியும், நானும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என, இரு நாட்டு பிரதமர்களும் உறுதி எடுத்துள்ளோம். இரு நாட்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். மொகாலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியதாவது: எங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். மொகாலியில் நடந்த அரை இறுதிப் போட்டி, இரு நாட்டு மக்களை மட்டுமல்லாமல், இரு நாடுகளின் பிரதமர்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இரு நாடுகளுக்கும் உள்ளது. விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ முக்கியம் இல்லை. அணிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு தான் அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடியது; பாகிஸ்தானும் நன்றாகவே ஆடியது. இவ்வாறு கிலானி கூறினார்.

 

சுமார் ரூ. 1,000 கோடி லாபமாம், கூட ரூ.45 கோடி வரிவிலக்கும் கொடுக்கப்படுகிறதாம்! உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிடைத்துள்ள வருவாய்க்கு ரூ.45 கோடி வரிவிலக்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இதுவரை ரூ1,476 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த போட்டியை நடத்துவதற்கு ரூ 571 கோடி செலவாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் துணை அமைப்புகளுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ 45 கோடி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனை தாக்கல் செய்யப்பட்டது. அந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்திய அணிக்கு வாழ்த்து: இக்கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதற்காக, பிரதமருக்கு சில மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர், அப்போது அங்கிருந்த மத்திய வேளாண் அமைச்சரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான சரத் பவாரிடம் வாழ்த்துகளை தெரிவிக்குமாறு சக அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். இத்தகவல்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

 

வேதபிரகாஷ்,

01-04-2011

 

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.

ஜூலை 5, 2010

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல்[1]:  “கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்,” என தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசினார். தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது[2]:

ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: “நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்[3]. ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்[4]. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர்[5]. தாங்கள் வகித்துவந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர்., ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர். கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது[6]. கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்[7]. இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.இம்மாநாட்டில், தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்சாதி, பொதுச் செயலர் அப்துல் அமீது, நிர்வாகிகள், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? முஸ்லீம்கள் தங்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடு, 15% இட ஒதுக்கீடு கொடு, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்[8], இந்தியாவில் பல மாநிலங்களில் ஏற்கெனவே ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்ற நிலை, அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. ஆக, எழும் கேள்வி, “முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா?”. மதரீதியில் என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, ஏனெனில் அத்தகைய முறை இந்திய அரசியல் நிர்ணய சாசனத்தில் இல்லை. ஜாதிரீதியில் என்றால், ஏற்கெனெவே அத்தகைய வசதி அமூலில் உள்ளது.

அரசியல் ஆக்கப் படும் விவகாரம்: காங்கிரஸைப் பற்றி தெரிந்த விஷயம், அது முஸ்லீம்களுக்கு எப்பொழுதும் தாஜா செய்து கொண்டு “ஓட்டு வங்கி அரசியல்” நடத்தி வருகிறது என்பதாகும். அதேப் போலத்தான் கம்யூனிஸவாதிகளும், மற்ற அரசியல் கட்சிக்களும். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இதனை எதிர்து வருகின்றது.  பிற்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ள ரங்கநாத் மிஸ்ரா பறிந்துரையை அமூலாக்க விடமாட்டோம் என்று பிரதான எதிர்கட்சியான பாஜப கூறுகிறது. “ஸ்வபிமான் சமவேசா” என்ற பிற்பட்டவர்காளுடைய மாநாட்டில் பேசிய பாஜக தலைவர், நிதின் கட்காரி, இது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான சதியாகும் என்றார்[9].

மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது அவர்களுடைய ஒதுக்கீட்டை பாதீபது என்றால் அது நியாயமாகுமா? பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிராக தீங்கிழைக்கும் வகயில் உள்ள இத்தகைய முறைகளை, ஓட்டுவங்கி அரசியல் என்ற வகையில் செயல்படுவதால் எதிர்ப்பதாக விளக்கினார். காங்கிரஸ் மறுபடி-மறுபடி முஸ்லீம்களை தாஜா செய்வது என்ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு [(other backward classes (OBCs)] மாபெரும் துரோகத்தை செய்ய தீர்மானித்துள்ளது[10]. அவர்களுடைய ஒதுக்கீட்டிலிருந்து, மத ரீதியாக முஸ்லீம்களுக்கு எனத் தனியாக, வட்டிக் கொடுப்பது என்பது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது. இருக்கின்ற மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு என்றுள்ள 27% லிருந்து முஸ்லீம்களுக்கு 8.4% கொடுக்கவேண்டும் என்று ஒரு பரிந்துரை உள்ளது. பிறகு அவர்களுடைய கதி என்னாவது? சமூகநீதி என்று பேசுவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தமிழகத்தில் கூட கருணாநிதி, இதே மாதிரி 3.3% சதவீத இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுத்து எஸ்.சிக்களை ஏமாற்றியுள்ளார்[11]. “அண்ணாதுரையின் 99வது பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக் கீட்டிலிருந்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியது” – இதைப் பற்றிய முன்னுக்கு முரணான செய்திகள் பல வந்துள்ளன. அவர்கள், மற்றும் கிருத்ததவர்கள் எதிர்த்தும் தெரிகின்றது. மற்றவர்கள் தொடுத்த வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்த்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செய்ல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[12].

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும்[13]:  முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை.  இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை: அதாவது முஸ்லீம்களே, இவ்வகையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை அலசுகின்றன்ரா அல்லது பேரம் பேசுகின்றனரா என்பதை இந்தியர்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், முஸ்லீம்கள், ஜிஹாதி முஸ்லீம்கள் போலத்தான் பலநிலைகளிலும், நேரங்களில் தங்களை அடையாளங்காட்டிக் கொள்கிறார்கள். சிலர் தான் இந்திய தேசிய முஸ்லிம்களாக உள்ளனர்.

இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது:  இப்படி முஸ்லீம்கள் உண்மையைச் சொல்வது பாராட்டவேண்டும். அதாவது, இந்தியாவைத் துண்டாடியப் பிறகும் எப்படி, இந்த காங்கிரஸும் முஸ்லீம்களும் அதே எண்ணங்களில் உள்ளர்கள் என்பதற்கு இதைவிட ஒன்றும் சான்று தேவையில்லை. இந்தியர்கள் எதிர்ப்பது, இத்தகைய இந்திய விரோத முஸ்லீம்களைத்தான் என்று மற்ற முஸ்லீம்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். காங்கிரஸோ அல்லது எந்த அரசியல் கட்சியோ, இத்தகைய வாக்குறுதி அளிக்கிறது என்றால், தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? அப்படியென்றால், ஆர்களது மாநாடே தேச விரோதமானது தானே?

கிருத்துவர்களும் இதே பாட்டைப் பாடுவது நோக்கத்தக்கது[14]: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் வரும் ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது[15].  இதுகுறித்து இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத் தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான கூட்டமைப்புடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் குவளைகண்ணியில் நாளை நடக்கிறது. இதில் 7 தென்மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம். தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்[16]. இக்கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்: ஆக முஸ்லீம்கள், கிருத்துவர்கள் நெல்லையிலிருந்து ஒரே மாதிரியான அச்சுருத்தலை மிரட்டலை விடுக்கின்றனர். அது காங்கிரஸுக்குத்தான் என்பதும் நோக்கத்தக்கது. எப்படி இப்படி இரு மதத்தினரும் மதரீதியில் மிரட்டுவர், கோரிக்கைகள் இடுவர்…….மற்றவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் அமைதியாக இருப்பர் என்று தெரியவில்லை. ஆக, இதில் சம்பந்தப்பட்டவர்கள், கூடிபேசி, தீர்மானித்து, இத்தகய அரசியல் சூதாட்டங்களை நடத்தி, இந்தியர்களை ஏமாற்றத் தீர்மானித்துள்ளது நன்றாகவேத் தெரிகின்றது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்அளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

05-07-2010


[1] தினமலர், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32406

[2] ஜெய்னூல் ஆபிதீன் டிவியில் தமிழில் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் போதகர். இப்பொழுது அரசியலிலும் ஈடுபடுவது ஆச்சரியமாக உள்ளது.

[3] அம்பேத்கார் சொன்னதை ஏன் குறிப்பிடவில்லை என்று நோக்கத்தக்கது. குறிப்பாக, “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற நூலில் முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மதவாதம், நாட்டைத் துண்டாட செய்யும் செயல்கள் அனைவற்றையும் விளக்கியுள்ளார். ஆகையால், முஸ்லிம்கள், செக்யூலரிஸவாதிகள் இதனை அப்படியே அமுக்கிவிடுவர்.

[4] இதெல்லாம் சப்பைக் கட்டும், சரித்திரத்திற்குப் புரம்பான பேச்சுகள். இந்திய சுதந்திர வரலாறு என்பது 60-80 ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் முஸ்லீம்கள் மதரீதியில் இந்தியாவைத் துண்டாடினர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்பொழுதும், மதரீதியில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான், இந்தியர்கள் கவலைக் கொள்கின்றனர்.

[5] இதைவிட பெரிய போய்யை எந்த முஸ்லீமும் சொல்லமுடியாது. கிலாஃபத்தின் கதையை அறியாதவர்போல பேசுவது, பச்சைத்துரோகமான செயல். அதிலும் இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி புளிகு மூட்டைகளை அவிழ்து விடுவது, ஹிட்லரின் பிரச்சாரத்தையும் மிஞ்சிவிடும் வகையில் உள்ளது.

[6] ஒரு அரசியல் கட்சியிம் வாக்குறுதி சட்டமாகாது, மேலும் தேர்தலில் இத்தகைய வாக்குறுதி கொடுத்தார்கள் என்றால், தேர்தல் கமிஷனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

[7] இத்தகைய அச்சுருத்தல், மறைமுக உடன்படிக்கைகள், தேர்தல் நேரக்கூட்டு பேரங்கள் முதலியவற்றை தேர்த கமிஷன் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் தான், பெரும்பான்மை இந்தியர்களை இப்படி, ஓட்டுவங்கி மூலம் ஏமாற்றிவருவர் என்பது தெரியவில்லை.

[8] http://tntjsw.blogspot.com/2010/05/tntj_18.html

[9] http://timesofindia.indiatimes.com/City/Bangalore/Misra-panel-suggestions-go-against-culture-Gadkari/articleshow/6129206.cms

[10] http://www.deccanherald.com/content/79277/centre-keen-appeasing-minorities-gadkari.html

[11] http://dravidianatheism.wordpress.com/2009/10/28/திராவிடம்-இஸ்லாம்-தமிழக/

[12] சின்னக்கருப்பன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்,

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20410147&format=html

[13] 10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 20, 2010, 14:12[IST], http://thatstamil.oneindia.in/news/2010/06/20/tamilnadu-tawheed-jamath-reservation-assembly.html

[14] பட்டியல் இனத்தில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்,

வெள்ளிக்கிழமை, ஜூன் 25, 2010, 15:02[IST], http://thatstamil.oneindia.in/news/2010/06/25/dalit-christians-sc-agitation-delhi.html

[15] இது மாபெரும் மோசடியாகும், ஏனெனில், உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனெவே ஒரு தீர்ப்பு உள்ளது. அதை மறைத்து இவர்கள் இப்படி வேடம் போட்டுக் கொண்டு ஏசுவை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றனர்.

[16] இதற்கும் கருணாநிதி வருகிறார் என்றால் அந்த சதிதிட்டம் என்னவென்பது இந்தியர்கள் அறிந்தே ஆகவேண்டும்.

காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே?

ஜூன் 7, 2010

காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே?

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகள் என்றால் இந்துக்களைப் பற்றியும் சொல்லியாஜ வேண்டும். இந்துக்கள் அங்கிருந்து முஸ்லீம்களால் கொடுமைப்படுத்தி விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மாறாக, முஸ்லிம்கள் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை, ஜிஹாதி கொடுமைவாதத்தை வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் பட்டு வருகிறார்கள்.

இந்துக்கள் யாரும் இந்திய அதிகாரத்தை, அதிகாரிகளை, போலீஸ் மற்ற பாதுகாப்பு வீரர்களை, ஜவான்களை எதிர்க்கவில்லை, கொல்லவில்லை, குண்டுகள் வீசி தீவிரவாதம் செய்யவில்லை.

மாறாக முஸ்லீம்கள்தான் அவ்வாறு செய்து வருகிறார்கள்

Roots in Kashmir Tug Hindus Home By LYDIA POLGREEN Published: June 5, 2010

New York Times

http://www.nytimes.com/2010/06/06/world/asia/06kashmir.html

http://www.nytimes.com/2010/06/06/world/asia/06kashmir.html?pagewanted=2

காஷ்மீர-இந்துக்கள்-2010

காஷ்மீர-இந்துக்கள்-2010

SRINAGAR, Kashmir — The ceremony is simple and common. A Hindu priest lights a fire, places some herbs, clarified butter and other offerings atop it and through its peculiar alchemy the smoke purifies everything it touches. But nothing about this Maha Yaghya ritual performed in the once-abandoned Vichar Nag shrine here on a recent Saturday night was simple. A week of downpours left the shrine’s grounds waterlogged and putrid. The wood was wet and the fire would not start. But most peculiar was the ceremony’s location, astride one of the world’s most fractious religious fault lines, between two nuclear-armed neighbors who have fought three wars, two of them over the land on which the shrine sits.

KASHMIR2

KASHMIR2

4,00,000 இந்துக்கள் 3000 ஆகிவிட்டனர், மற்றவர்கள் எங்கே? Twenty years ago, nearly 400,000 Hindus fled the Kashmir Valley, fearful of a separatist insurgency by the area’s Muslim majority. Now they are trickling back, a sign to many here that the Kashmir Valley, after years of violence and turmoil, is settling in to an uneasy but hopeful peace. The valley’s upper-caste Hindus, Pandits as they are known, are reconnecting with their ancestral home, a few to stay and even larger numbers to visit. More than a dozen shrines have reopened in recent years, said Sanjay Tickoo, a Kashmiri Pandit who never left the valley and is now trying to entice those who left to return. Their presence was once part of what made the Kashmir Valley a unique and idyllic patch of India, filled with apple orchards and shimmering fields of saffron framed by spiky, snow-capped peaks. A well-to-do but not overly powerful minority, the Pandits lived for centuries in relative harmony with their Muslim neighbors.

1947 முதல் 1989, அதற்குப் பிறகு: Kashmir’s mosaic of relatively peaceful coexistence first began to crack during the partition of British India, in 1947. But it was more than a decade of insurgency beginning in 1989 that turned the region into the battleground of the fierce rivalry between Hindu-majority India and Muslim-dominated Pakistan, who each control a portion of Kashmir. Though not all fears or tensions from the past have dissipated, almost everyone here professes to want the Pandits to come back to the valley. Because they had lived here for generations, there is no sense that their return is intended to dilute the region’s Muslim majority.

“The overwhelming majority of Kashmiris believe the place is really incomplete without its diversity,” said Omar Abdullah, the chief minister of Jammu and Kashmir. “It is an important milestone in our return to normalcy if they begin to come back.”

M. L. Dhar, a 75-year-old Kashmiri Pandit who lives in a suburb of New Delhi, returned recently to Kashmir for the first time. He was astounded at the warm welcome he received from the valley’s Muslims.

“I have never been as peaceful as I have been here in the last seven days,” he said.

Mr. Dhar lived around the corner from the Vichar Nag shrine and was stunned to find it a wreck. For years troops from the Border Security Force camped out on the grounds of the shrine. They left several years ago, abandoning it to the elements. Today it is withered, all shattered windows and peeling paint garlanded with razor wire.

A group of activists, led by Mr. Tickoo and others, hoped the purification ritual would draw Kashmiri Pandits from outside the valley.

Mr. Tickoo never left the valley. As most of his neighbors packed up to leave in 1990, Mr. Tickoo, then 22, asked his mother if they should go, too.

“She said, ‘Lets wait another week,’ ” Mr. Tickoo said. “That carried from weeks to months to years.”

Last year Mr. Tickoo completed a survey of the remaining Pandits in the valley, counting fewer than 3,000.

“From birth to death Kashmiri Pandits have our own culture, our own rituals,” Mr. Tickoo said. “Outside of Kashmir you cannot be a Kashmiri Pandit.”

இந்துக்கள் ஏன் விரட்டியடிக்கப்பட்டனர்? Why the Pandits fled, and whether their departure was a hasty overreaction or a rational response to a mortal threat, is debated to this day. Dozens of Pandits were killed in 1989 and 1990, according to government records, and anti-Hindu rhetoric from separatist militants was on the rise.

Now, two decades later, both sides of the religious divide wonder whether they erred. Gulam Rasoul, a retired police officer who lives near the newly reopened temple, said both sides shared blame.

“They ran away, and we drove them out,” he said. “Now they regret it, and we also regret the loss.”

He quoted an old Kashmiri saying. “Kashmir is like a Mughal garden,” he said, referring to the immaculately tended gardens, full of roses, lilies and violets that dot the landscape here. “If you have only one tree in the garden it will have no fragrance. When the Pandits left, the fragrance was gone.”

But platitudes belie deep divisions. Many Muslims see Pandits as more loyal to India than to Kashmir, while many Pandits view Muslims as not-so-secret agents of Pakistan.

Some Pandits, especially those who fled farthest from the valley, have never been back and continue to think it is unsafe to return. And they had little financial incentive to come back. Many worked for the government and kept receiving their salaries in exile.

L. N. Dhar, a doctor who lives in New Delhi, left Kashmir with his extended family in 1990. He opened a clinic and settled into an upscale neighborhood in the city’s southern suburbs.

“These people had guns, they were free to shoot anyone, kill anybody,” Dr. Dhar said. “It was an atmosphere of terror. We had no option but to leave that place.”

Leaving Kashmir, he said, has turned out to be cultural suicide, he said. Scattered Pandits find it hard to keep their traditions and rituals alive. Their children barely speak Kashmiri, if at all.

“Once these links are gone out, identity is completely lost,” he said.

Despite the feeling that militancy is unlikely to return anytime soon, few Pandits have permanently returned. It was always an affluent and well-educated community, so many Pandits are well established elsewhere in India and beyond.

At the Vichar Nag shrine, as the harmonium wailed and the rising chorus of old Kashmiri songs filled the air, Muslim onlookers marveled at the return of their long-lost neighbors.

“I have not seen these people before, so I am curious,” said Nazim Amin Butt, a 22-year-old business school student. He watched with rapt attention as the chanting priest daubed saffron, red, pink and blue powder on the earthen fire pit, and placed heaps of flower petals at the head of the lingam, the phallic icon of Lord Shiva.

“It is not a problem that they come here,” Mr. Butt said. “They come from this place just like us. They belong here.”

இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!

மே 18, 2010
இந்தியாவின் தாவூத் இப்ராகிம் உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில் முதலில் இருக்கிறானாம்!
முதலிடம் பின்லாடன், மூன்றாமிடம் தாவூத் இப்ராகிம்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7568

Front page news and headlines today

நியூயார்க் :  உலகின் தேடப்படும்  குற்றவாளிகள் பட்டியலில், முதல் 10 பேர்களில் முதலிடத்தில் பின்லாடனும், மூன்றாமிடத்தில் இந்தியாவின் தாவூத் இப்ராகிமும் இருப்பதாக  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

‘போர்ப்ஸ்’ பத்திரிகை கடந்த 2008ல் வெளியிட்ட அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில், ‘டாப்-10’ல் முதலிடத்தில் ஒசாமா பின்லாடனும், இரண்டாமிடத்தில் மெக்சிகோவின் போதை கடத்தல் மன்னன் ஜோவாகின் குஜ்மேன் என்பவரும் இருப்பதாக கூறியிருந்தது. இப்போது அப்பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இவர்கள் இருவரும் அதே இடத்தில் உள்ளனர். ஆனால் முன்பு நான்காமிடத்தில் இருந்த, 1993ல் மும்பையில் நடந்த தாக்குதலோடு தொடர்புடைய தாதா தாவூத் இப்ராகிம், இப்போது மூன்றாமிடம் பிடித்துள்ளார் .தாவூத், தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.

‘கராச்சியில் ஐந்தாயிரம் பேர் கொண்ட டி-கம்பெனி என்ற நிறுவனத்தை தாவூத் நடத்தி வருகிறார். கொலை, கடத்தல் போன்ற கொடூர செயல்களை இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும், ஒப்பந்த முறையில் இந்நிறுவனம் செய்கிறது. லஷ்கர்-இ-தொய்பா, அல்-குவைதா போன்ற பயங்கரவாத இயக்கங்களோடும், உளவு நிறுவனங்களோடும் டி-கம்பெனிக்கு தொடர்பு இருக்கிறது’ என்று தாவூத்தின் பின்புலம் குறித்து ‘போர்ப்ஸ்’  பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., அதிகாரியான ஹெக்டர் கான்சலேஸ் இதுகுறித்து கூறுகையில்,’இந்த குற்றவாளிகள் அனைவரும் அரசாங்கங்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளனர். இந்த உலகம் சுருங்கி விட்டது. ஒவ்வொரு விஷயத்திலும் உலகமயமாக்கல் வந்து விட்டது போல, குற்றச்செயல்களிலும் உலகமயமாக்கல் வந்து விட்டது’ என்று தெரிவித்தார்.கடந்த 2008ல் அதிகளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல் வெளிவந்ததிலிருந்து, அதிலிருந்த ஒருவர் கூட இன்னும் பிடிக்கப்படவில்லை என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

ஏப்ரல் 5, 2010

அதிசயம், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்களாம்!

லாஹூர் நீதிமன்றத்தின் நீதிபதி – குவாஜா ஸெரிஃப் (Justice Khwaja Sharif), இந்துக்கள் அந்த நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள் என்றாராம்.

உடனே அந்நாட்டில் உள்ள ஒன்பது ஹிந்து எம்.பிக்களுக்கு கோபம் வந்துவிட்டதாம்!

பாகிச்தானில் நான்கு மில்லியன் / 4,000,000 – 40 லட்சம் ஹிந்துக்கள் இருக்கிறார்களாம்.

இப்பொழுதுதான் தெரிகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ்/பிஜிபி/முதலியோர் கூட இந்த விவரத்தைச் சொல்லவில்லையே!

உடனே பாகிஸ்தானிய தேசிய அசெம்பிளியை விட்டு புதன் கிழமை அன்று (31-03-2010) வெளிநடப்பு செய்து விட்டார்களாம்!

“பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது முஸ்லீம்கள் தாம், இந்துக்கள் இல்லை”, என்று சொல்லிவிட்டு, “அவர்கள் அந்த தீவிரவாதிகளுக்கு நிதியளிக்கிறார்கள்”, என்று சொன்னாராம்!

எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்பு செய்தவர்கள், சமாதானப்படுத்தப்பட்டு உள்ளே வரும்படி செய்தார்களாம்.

அதுமட்டுமல்லாது, “அவர்கள் நல்ல பாகிஸ்தானியர்கள். ஆகையால் நீதிபதியின் அவர்கள் மீதான பேச்சு கண்டனத்திற்கு உரியது. மேலும், அவர்களால் அதனைத் தாங்முடியாது (“They are good Pakistanis. The judge’s statement against Hindus is condemnable and indefensible)!

1947ல் கோடிகளில், ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி வாழ்ந்துவந்த ஹிந்துக்கள் என்னவானார்கள் என்று யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

பலவந்தமாக மதம் மாற்றுதல், ஹிந்து அடையாளங்களை மறைத்து வாழ்தல் / அவ்வாறு வாழ வற்புறுத்துதல், கோவில்களை அபகரித்தல், ஹிந்துக்களை விரட்டிவிட்டு கோடவுனாக-கழிப்பிடமாக உபயோகித்தல், இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளதால் “ஜிம்மி” வாழ்க்கை வாழுதல்,…………………ஆனால், இந்திய செக்யுலரிஸவாதிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுக் கொள்வதில்லை.

இந்தியாவிலுள்ள ஹிந்துக்கள், காஷ்மீர ஹிந்துக்களுக்கேக் கவலைப் படுவதில்லையாம், பாவம், பிறகு, அவர்கள் எப்படி பாகிஷ்தான், ஆப்கானிஸ்தான்……………முதலிய நாடுகளில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப் படப் போகின்றனர்?