மே 10, 2013
ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம்!
03-05-2013 (வெள்ளிக்கிழமை): மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மறுமகனான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து[1], விசாரணை மற்றும் நடவடிக்கையில், சிபிஐயினால் கைது செய்யப்பட்டார். பிறகு, பன்ஸாலின் அந்தரங்க செயலர், ராஹுல் பண்டாரி சிபிஐயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட[2]. ஆனால், ஞாயிற்றுக் கிழமை கர்நாடகத்தில் தேர்தல் மற்றும் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை என்பதனால், சோனியா ராஜினாமா நாடகத்தை ஒத்தி வைத்தார்.
04-05-2013 (சனிக்கிழமை): விஜய் சிங்கலாவின் ஊழல் வலை பெரிதாகியது. பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலிடயவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து வந்ததை விவரம் அறிந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது.
- விஜய் சிங்க்லா – Vijay Singla – Nephew of railway minister [Pawan Kumar Bansal]
- மஹேஸ்குமார், ரெயில்வே வாரியம், உறுப்பினர் – Mahesh Kumar: Member Railway Board
- நாராயணா ராம் மஞ்சுநாத், ஜி.ஜி.டிரானிக்ஸ் கம்பெனியின் எம்.டி – Narayana Rao Manjunath : MD of G.G Tronics
- சந்தீப் கோயல், சிங்க்லாவின் நண்பர் – Sandeep Goyal: Singla’s friend
- ராஹுல் யாதவ், மஞ்சுநாத்தின் கூட்டாளி – Rahul Yadav: Associate of Manjunath
- சமீர் சந்திர் – Samir Sandhir
- சுஸில் தாகா – Sushil Daga
மேற்கொண்ட கூட்டம், லஞ்சத்தை பணமாகவும், நிலமாகவும் பெற்று வந்தது மெய்ப்பிக்கப்பட்டது.
05-05-2013 (ஞாயிற்றுக் கிழமை): கர்நாடகத்தில் ஓட்டுப் பதிவு என்பதால், சோனியா காங்கிரஸ் அடக்கி வாசித்தது. பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டது[3].
06-05-2013 (திங்கட் கிழமை): ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை கவனித்தபோது, அமைச்சரின் பெயர் பலமுறை உபயோகப்படுத்தப் பட்டது தெரிய வந்தது[4]. இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.
07-05-2013 (செவ்வாய் கிழமை): சுனில் குமார் குப்தா என்ற தமது குடும்ப கணக்காளர், கனரா வங்கியின் இயக்குனராக 2007ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது பன்ஸால், இணை நிதி அமைச்சராக இருந்தார்[5]. 2010ல் சுனில் குமார் குப்தாஆந்த வங்கியின் பங்குதாரர் ஆனார். தியோன் பார்மேசுடிகல்ஸ் லிமிடெட் என்ற மந்திரியின் கம்பெனிக்கு ரூ.20 கோடி கடன் உடனடியாக வழங்கப்பட்டது[6].
இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.
08-05-2013 (புதன் கிழமை): கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள் – மணி அங்கர் ஐயர், மணீஸ் திவாரி, அபிஷேக் சிங்வி முதலியோர் – யாரும் ராஜினாமா செய்யத்தேவையில்லை என்று பேசினர்[7].
09-05-2013 (வியாழன் கிழமை): நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய சட்டமந்திரி அஸ்வனி குமார், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்குவதற்காக அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்தார். ஆனால், இந்த கருத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்டிருந்தார். எனவே, அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
10-05-2013 (வெள்ளி கிழமை): இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரண்டு மந்திரிகள் மீதான புகார்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் “பன்சாலை ராஜினாமா செய்யும்படி கூறுங்கள்” என்று பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்த பன்சால், இன்று திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டு, பைசல் செய்துள்ளார். பின்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்[8]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[9].
கர்நாடகநாடகமும்ஆரம்பிக்கிறது: திடீர் வெற்றியினால், கர்நாடகத்தில் முதல் அமைச்சர் ஆக நான் – நீ என்ற போட்டி ஆரம்பித்தது. சித்தராமையா (பிசி) மற்றும் மல்லிகார்ஜுன கார்கே (எஸ்.சி) இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. ஜாதிரீதியிலும் பேச்சு வளர்ந்தது. ஜாதியை வைத்து தேர்தல் நடத்தியதால், காங்கிரஸுக்கு தர்ம சங்கடம் ஆயிற்று[10]. இங்குதான், சோனியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். ஒன்று, பன்ஸாலை தூக்கி, மல்லிகார்ஜுன கார்கேவை போட்டுள்ளார். இதனால், புதிய ரெயில்வே மந்திரியாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் பாட்டை ஆரம்பித்துள்ளது. ஆனால், இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது என்றெல்லாம் கதை விட ஆரம்பித்துள்ளன. பெங்களூடரில் குண்டு வெடித்தது[11] பற்றி அனைவரும் மறந்தே போய் விட்டார்கள்[12]! தேர்தலுக்காக, ஆர்.எஸ்.எஸ் தான் வைத்தது என்று காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள்[13]. இப்பொழுது காங்கிரஸ் வென்றதால், காங்கிரஸ் வைத்தது என்று சொல்லலாமா?
© வேதபிரகாஷ்
10-05-2013
[2] Bansal’s woes mounted when the CBI questioned his private secretary Rahul Bhandari, a 1997-batch IAS officer from Punjab cadre, in connection with the alleged Rs 10 crore bribery scandal.
குறிச்சொற்கள்:அத்தை, அபிஷேக் சிங்வி, அமைச்சர், அஸ்வினி, அஸ்வினி குமார், ஊழலின் ஊற்று, ஊழலின் சின்னம், ஊழலோ ஊழல், ஊழல், ஊழல் அரசி, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் சோனியா, ஊழல் ராணி, கனரா வங்கி, குமார், சகலை, சட்டத்துறை, சட்டம், சனி, சிங்க்லா, சிங்லா, சித்தி, செவ்வாய், சோ, சோனியா, சோனியா காங்கிரஸ், ஞாயிறு, திக் விஜய சிங், திங்கள், நீதி, நீதித்துறை, பன்சால், பன்ஸால், பவன் குமார், புதன், மகன், மச்சான், மறுமகன், மஹேஸ்குமார், மாமா, மாமி, மைத்துனன், ரெயில், ரெயில் ஊழல், ரெயில்கேட், ரெயில்வே, ரெயில்வேதுறை, வீயாழன், வெள்ளி
அத்தாட்சி, அத்தை, அஸ்வினி, அஸ்வினி குமார், கடன், கனரா வங்கி, கள்ள ஆவணம், குத்தகை, குமார், சட்டத்துறை, சட்டவியல், சனி, சித்தி, செவ்வாய், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஞாயிறு, திங்கள், நீதித்துறை, நீதிவியல், பன்ஸால், பவன் குமார், பீதர், புதன், போர்ஜரி, மச்சான், மச்சி, மச்சினி, மன்மோஹன், மஹேஸ்குமார், மாமா, மாமி, மாமு, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மைத்துனன், மைத்துனி, மொய்லி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வகுப்புவாத அரசியல், வியாழன், வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெள்ளி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
ஏப்ரல் 11, 2013
சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)
சோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].
105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.
அன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].
இதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.
கிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா?
என்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.
சாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்
அட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள்? சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்
ஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது
இவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க
பலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].
சோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.
லிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா?: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.
வெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.
வேதபிரகாஷ்
11-04-2013
[5] A woman was beaten up by police today for showing black flag to the Congress President Sonia Gandhi in Tumkur, during the birthday celebration of Siddaganga Math head. A young woman tried to disrupt Mrs Gandhi’s speech during the ceremony. As she began her speech, the woman, seated among the audience, suddenly rose and waved a black flag demanding Scheduled Caste (SC) status for her community Madiga Dandora. The police immediately swung into action and beat her up. She was then taken away from the venue even as some of her supporters shouted slogans.
http://www.ndtv.com/article/india/woman-beaten-by-cops-after-trying-to-disrupt-sonia-gandhi-s-rally-in-karnataka-203518
குறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்
அடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »
ஏப்ரல் 11, 2013
சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)
மூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.
சிவகுமார், ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.
நிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.
அஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.
குறிச்சொற்கள்:அரசியல், ஆசிரமம், ஆசை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், எடியூரப்பா, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸ், சமாதி, சாமியார், சாலை, சுவாமி, செக்யூலரிஸம், சொத்து, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜீவசமாதி, தற்கொலை, நிலம், பதவி, பிஜேபி, பீதர், மடம், மதிப்பு, முஸ்லீம்
அடையாளம், அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூதர், ஆதரவு, ஆத்மா, இலக்கு, உடல், உண்மை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எடியூரப்பா, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கர்நாடகம், காங்கிரஸ், சம்மதம், சவ்லி, சிவன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, நெருப்பு, நேர்மை, பிஜேபி, பீதர், பௌத்தம், மதம், மனம், லாதரவு, லிங்கம், லிங்காயத், வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »