Archive for the ‘சீடன்’ Category

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா?

ஏப்ரல் 11, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா?

Guru and the faithful followers

ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் – மற்றும் அவரது சீடர்கள்

மாருதிராவ் சுவாமி தாக்கப்பட்டது  (டிசம்பர் 31, 2012),  மறைந்தது  (ஜனவரி 31, 2013): கர்நாடகாவில், சவ்லி மடத்தில், மூன்று இளைய மடாதிபதிகள், யாக குண்டத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட செய்தி பலவிதத்தில் அலசப்பட்டு வருகின்றது. பீதர் மாவட்டத்தில் உள்ள சவ்லி மடம், தமிழ் நாளிதழ்கள் கூறுவது போல, பழமை வாய்ந்த மடமல்ல, 1989ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. ரெட்டி சமூகத்தினருக்கு சொந்தமானது என்றெல்லாம் எழுதியுள்ளனர். இந்த மடத்தின் தலைமை மடாதிபதி, கணேஷ் மகா சுவாமி என்பவர். இளைய மடாதிபதியாக இருந்த, மாருதி ராவ் சுவாமி (Maruti Rao Swami), மடத்தின் அருகிலேயே 31-12-2012 அன்று யாரோ அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கிடந்தார். அப்பொழுது போலீஸார் அதிகம் அக்கரை காட்டவில்லை. பிறகு ஜனவரி 31 2013, முதல், மாயமாகி விட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் ஏ.எம். ஜோதி என்ற எஸ்.பி இதுவரை ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. “அவரைக் கடத்திக் கொண்டு சென்றுள்ளனரா, உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எங்களுக்கு ஒன்றும் தெரியாது”, என்கிறார். “மறைவதற்கு முன்பு தனது தாயாருடன் பேசியுள்ளார். தான் இறந்ததும் இன்சூரன்ஸ் பணத்தைக் கொண்டு கடன்களை தீர்த்து விடுமாறு கூறியுள்ளார்”, என்று மேலும் கூறுகிறார்[1]. போன் மூலம் யார் யாருடன் பேசியுள்ளனர் என்பதைக் கண்டு பிடிக்கும் போது, மற்ற சீடர்கள் பேசியதையும் போலீஸார் கண்டறிய முடியும்.

Chawli mutt Karnataka

சௌலி மடம் – மடாதிபதியின் சிலை – போலீஸ் விசாரணை

கணேஷ் மகாசுவாமி தற்கொலை செய்து கொண்டது  (பிப்ரவரி 28, 2013): பல இடங்களில் தேடியும் மாருதி ராவ் சுவாமிகள் கிடைக்காததால், மடாதிபதி தான், அவரை கொன்று விட்டார் என, சில பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. குறிப்பாக அஷோக் சுவாமிகள் என்ற சீடர் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்தார் (விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன). இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தும், பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால், மனம் உடைந்த, தலைமை மடாதிபதி கணேஷ் மகா சுவாமி, கடந்த பிப்ரவரி, 28ம் தேதி இரவு, கோயில் கருவறையில் உள்ள சிவன் சிலை மீது, கடிதம் எழுதி வைத்து விட்டு, கருவறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.

Chawli mutt suicide - entrance

போலீஸ் விசாரணை

ஜீவசமாதி அறிவிப்பு: கடந்த பிப்ரவரி, 6ம் தேதி, மடத்தில் நடந்த ஆன்மிக கூட்டத்தில் பங்கேற்ற, கணேஷ் சுவாமிகள், “இது என்னுடைய கடைசி பொது நிகழ்ச்சி. நான் ஜீவ சமாதி அடையப் போகிறேன்என்றார். அதிர்ச்சியடைந்த பொது மக்கள், முடிவை மாற்றிக் கொள்ளும்படி கூறினர். எப்போதும், காலை, 10:00 மணிக்கெல்லாம் தன் அறையிலிருந்து வெளியே வந்து தரிசனம் தரும் கணேஷ் சுவாமிகள், பிப்ரவரி, 28ம் தேதி, காலை, 11.30 மணியாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மடத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் அங்கு இல்லை; கோவில் கருவறையில் பிணமாக கிடந்தார். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட, அவரின் கடிதத்தில், “மாருதி சுவாமிகளை சமூக விரோதிகள் தாக்கிய புகாருக்கும், அவர் கடத்தப்பட்டதாக மடம் சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கும், போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதே பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்‘ என, குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான், இளைய மடாதிபதிகள் மூவர், தற்கொலை செய்து கொண்டது, சவ்லி மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Jagannaath Swami

ஜகன்னாத சுவாமி – தீக்குளித்த மூன்றில் ஒருவர்

சௌலி மடம் வளர்ந்த விதம்  (1989-2012): இந்த மடத்திற்கு சொந்தமாக ஆறு ஏக்கர் பரப்புள்ள நிலம் இருக்கிறது. இதை கிராம மக்களும், ஞானேஸ்வர மகராஜும் கொடுத்துள்ளனர். பிறகு பணத்திற்கு குறைவு எதுவும் இல்லாதலால், அவ்விடம் பெரிய மடமாகக் கட்டப்பட்டது. வரும் பக்தர்களுக்கு போதனை செய்து கொண்டு, வாரத்திற்கு ஒருமுறை தரிசனம் கொடுத்து வந்தார். தான் இறக்கும் போது, தன்னோடு இறக்கும் ஒரு குழுமத்தை உருவாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது[2]. சுமார் 50 அடி உயரத்தில் தன்னுடைய சிலையை அமைத்து, அதைச் சுற்றிலும், மற்ற கடவுளர்களது சிலைகளை சிறியதாக வைத்து அமைத்தார். புகழ் அதிகரிக்கும் போது, சாமியார்களுக்கு, குரு போன்றவர்களுக்கு, தாமே கடவுள் என்ற எண்ணம் வந்டுவிடும் அல்லது பக்தர்களே அவர்களை அவ்வாறு செய்துவிடுவர்.

Pranav Swami

பிரணவ் குமார் சுவாமி – இளைஞரான தீக்குளித்தவர்ளில் ஒருவர்

எடுயூரப்பா வந்தது,  ஆசிரமத்தில் பிளவு ஏற்பட்டது: முந்தைய முதலமைச்சர் எடியூரப்பா இங்கு சிலமுறை வந்துள்ளார். அப்பொழுது, மடத்திற்கு ஏதாவது செய்யுமாறு வேண்டியுள்ளார். வரும் பணத்தில், தன்னுடைய சிலையை இன்னும் பெரிதாக வைக்கவும் ஏற்பாடுகளை ஆரம்பித்தார். இதை சில பக்தர்கள் விரும்பவில்லை. மேலும் பிரணவ சுவாமி, வீர ரெட்டி சுவாமி மற்றும் ஜகன்னாத சுவாமி இவருடன் இருக்க, மற்றவர்கள் விலகி சென்றுவிட்டனர். இருப்பினும் மற்ற 13 சீடர்களும் மடத்திற்கு வெளியே, ஆனால், பிரதான வாயிலின் அருகே அறைகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் எல்லோரும் படித்தர்கள் அல்லர், வேதம் முதலியவை தெரியாது. பெரியவர் சொன்னதைக் கேட்டு நடந்து வந்தனர். உண்மையில் அவர்களுக்கு இந்த மடத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாது[3]. ஆகவே கூட ஒட்டிக் கொண்டு வந்தவர்கள், நிச்சயம் ஆன்மீகத்திற்கு என்றில்லாமல், சொத்து, பதவி முதலிய ஆசைகளுடன் இருந்தனர் என்று தெளிவாகிறது. அத்தகையோர் அரசியல்வாதிகளுக்கு எளிதாக பணிந்து வேலை செய்வது சகஜமே.

KPN photo

எடியூரப்பாவை ஆதரித்த லிங்காயத் மடாதிபதிகள்

யார் அடுத்த மடாதிபதி  – என்ற போட்டி வந்தது: முதலில் பெரியவருக்குப் பிறகு, தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மடாதிபதியாக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். பிறகு, இதனை அரசு நிர்வாகத்தில் அல்லது மற்ற மதக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் அரசியல் ஆக்கவேண்டும் என்ற முதல் முயற்சி எனலாம்[4]. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை[5]. இதன் பிறகு தான், இந்த மூன்று சீடர்களும் அத்தகைய முடிவை எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லது, தமது குரு சொன்னப்படி உயிர்விடுவது சிறந்தது என்றும் எண்ணினர்[6]. டிராக்டர்களில் விறகைக் கொண்டுவந்து வாயிலின் பக்கத்தில் குவித்துள்ளனர். இரண்டு கேன்களில் 60 லிட்டர் மண்ணெண்ணையும் வாங்கி வைத்துள்ளனர். பிறகு, அவர்கள் தீர்மானித்தபடியே, தீயை வளர்த்து அதில் குதித்துள்ளனர், இவற்றை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வீடியோவை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்[7].


[4] தமிழகத்தில் அப்படித்தான், மடாதிபதிகள், கோவில்கள் மிரட்டப்பட்டு, அரசுடமையாகி உள்ளது என்பதனை நினைவு கூரலாம். அதற்கு நாத்திகர்கள் ஒத்துழழைத்தனர் என்றால், இங்கு காங்கிரஸ்காரர்கள் வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது.

[5] The other 13 disciples stayed in rooms built just outside the main entrance. Since the maharaj died, the three closest to him stayed inside the temple. Due to tension created by the mysterious circumstances of his death, police were posted outside the gates. Police say the 16 disciples had tried to resolve among themselves the issues of leadership and succession but could not reach a consensus. “Nearly all the disciples are illiterate; none knows the scriptures. They just followed what the chief seer said. Without him, they didn’t know what to do with this huge mutt,” says SP Tyagarajan. “About a fortnight ago, they met and one suggestion was to hand the mutt over to the district administration or to a religious group. They failed to take a decision,” he added