Archive for the ‘ஆம்பூர்’ Category

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!

மே 8, 2021

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (.யூ.எம்.எல்), தி.மு.. கூட்டணி: மார்ச் மாத கூட்டணி அரசியல் பேரம், முடிவு முதலியன தேர்தல், தேர்தல் வெற்றி-தோல்வி மற்றும் எம்.எல்.ஏ மந்திரி நியமனம் போன்றவற்றில் வெளிப்படுகிறது. DMK-IUML-கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்  பேச்சுவார்த்தை நடத்தினார்[1].  முஸ்லிம்களுக்கு பொதுவாக வேட்பாளரை மனதில் வைத்து தான் தொகுதிகளை கேட்பது வழக்கம்[2]. அதனால், திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னையில் ஒரு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது 3 தொகுதிகளை ஒதுக்குமாறு IUML-பிரதிநிதிகள் கோரினர்[3]. ஆனால் அவர்கள் (திமுகவினர்) திருவாடானை, திருச்சி கிழக்கு, சென்னை தொகுதிகளை தர முடியாது என்று கூறி, கடையநல்லூர் தொகுதியை அவர்களுக்கு திமுகவினர் ஒதுக்கினர்[4]. அந்த ஒரு தொகுதி மட்டும் உறுதியாகியது. இப்படி மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இப்படி வேடம் போட்ட துலுக்கர் தான் கோவில்களையும் இடித்துள்ளனர்

இழுபறியில் DMK-IUML-கூட்டணி பேச்சு, பேரம், முடிவு: மீதம் உள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் அல்லது பாபநாசம், ஆம்பூர் அல்லது வாணியம்பாடி ஆகிய தொகுதிகளை முஸ்லிம்லீக் கேட்டது[5]. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் (கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம்) ஒதுக்கப்பட்டுள்ளன[6]. இப்படி செய்திகள் வந்தது வியப்பாக இருந்தது, DMK-IUML-கூட்டணி பேரம் அவ்வளவு மகத்தானதா, முக்கியமானதா, எதற்கு ஊடகங்கள் அதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், போன்ற கேள்விகள், புதிர்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பேரம் ஒரு வழியாக முடிந்தது. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிறகு, ஸ்டாலின் முன்னிலையில் ஒரு வழியாக, திமுக – ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் மற்றும் மமக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்[7]. காதர் மொஹிதீன் திருப்தியடையாமல் ஊடகங்களில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்ததையும் கவனித்திருக்கலாம். இவை தினம்-தினம் முக்கிய செய்திகளாக வெளிவந்தது[8], சாதாரண மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அதன் பின்னர் இருந்த அரசியல்-வியாபாரம், அவர்களுக்குத் தான் தெரியும்.

ஒவைசி-திமுக “இதயங்களை இணைப்போம் மாநாடு” நாடகம்: கிருத்துவ மாநாடுகள் டிசம்பைல் நடத்திய பிறகு, “ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க உள்ளார். ஓவைசி முதல் முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் நுழைகிறார்,” என்றெல்லாம் அதிரடியாக செய்திகள் வந்தன.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருக்கிற நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ஆம் தேதியன்று ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. அதில் இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை அணியின் செயலாளர் மஸ்தான் அழைப்பு விடுத்தார்.  இந்த சூழலில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதும் முஸ்லிம் கட்சி தலைவரான அசாதுதின் ஓவைசியை மஸ்தான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்க ஓவைசிக்கு மஸ்தான் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் ஓவைசியின் கட்சி போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததால்தான் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்துக்கு ஓவைசியை அழைப்பது நல்லதல்ல என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தால், அது நடக்கவில்லை.

திமுகவினர் மற்றும் தமிழக முஸ்லிம் பிரதிநிதிகள் ஒவைஸி வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்தது. ஸ்டாலின் அழைத்திருக்கலாம், ஆனால், பிறகு மறுக்கப் பட்டது.
உள்ளூர் முஸ்லிம்கள் எதிர்த்தனரா, ஒவைஸியின் ஆளுமை கண்டு பயந்தனரா, ஸ்டாலின் மறுத்தாரா….போன்ற கேல்விகளுக்கு பதில் கிடைத்தால், பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும்

பூவாதலையா, ஹெட்ஆர்டெயில், எங்களுக்குத் தான் வெற்றி என்று முஸ்லிம்கள் திட்டத்துடன் செயல்படுகின்றனர்: பாகிஸ்தானை உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இன்றும் செக்யூலர் போர்வையில் நடமாடிக் கொண்டு, அரசியல் செய்து வருகிறது. “மதசார்பற்ற முற்போக்கு அணி” என்ற முகமூடிகள், பதாகைகள், கோஷங்கள், மேடை பேச்சுகள் வேறு. அதற்கு ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர், வருகின்றனர். அரசியல், வியாபாரம், சினிமா, அந்நிய முதலீடுகள் என்று பிண்ணிக் கிடக்கும் சம்பந்தங்களில் பரஸ்பர லாபங்களுக்கு அவர்கள் செயல் பட்டு வெற்றி கண்டு வருகின்றனர். பெருங்கட்டுமான அமைப்புகள், தொடர்புடைய திட்டங்களுக்கு (Infrastructure) ஆரம்பித்திலிருந்து கருணாநிதி முஸ்லிம் கம்பெனிகளுக்கு ஆதரவு கொடுத்தார். இப்பொழுது, ஸ்டாலின் அதை பின்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை. கூட சாடிலைட், டிவி-செனல், விளம்பரங்கள், சினிமா, படபிடிப்பு, ஊடக வியாபாரங்கள், பணப்பரிமாற்றம், கொரியர், என்று பற்பல வியாபார நெருக்கங்களும், சம்பந்தங்களும்  வேலை செய்து வருகின்றன. அதனால், மாறன் – ஸ்டாலின்  சொந்தங்கள் இணைந்தே செயல் படும். இப்பொழுது வாழ்த்து சொல்ல அழகிரி குடும்பமும் சேர்ந்து விட்டது.

ஏழு / எட்டு முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல். ஆகியுள்ளனர்: திமுக, விசிகே மற்றும் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து, ஆறு முஸ்லீம்கள் வென்றுள்ளனர்:

  1. ஜே. மொஹம்மது ஷானவாஸ், விசிகே [J. Mohamed Shanavaz from VCK]
  2.  [Mastan, Senji]
  3. எம். அப்துல் வஹாப், திமுக [Abdul Wahab M, DMK]
  4. எம்.எஹ். ஜவஹிருல்லா, திமுக [Jawarihullah M H, DMK ]
  5. எச்.எம். நாசர், திமுக [Nasar S M, DMK ]
  6. பி. அப்துல் சமது, திமுக [Abdul Samad P]
  7. அஸன் மௌலானா, காங்கிரஸ்  [Aassan Maulaana,  Congress]
  8. கே. காதர் பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் [K. Kader Basha alias Muthuramalingam, Ramanathapuram]

கடையாக இருப்பவர் நிலை சரியாக தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்படி பல கட்சிகளில், உருவங்களில், பெயர்களில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில், மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இவ்வாறு அதிகாரகத்தில், அரசியலில் ஆதிக்கம் பெற்று, தொடர்ந்து வருகின்றனர்.

SDPI கீழ்கண்ட ஆறு இடத்தில் நின்றாலும் தோல்வியடைந்தது: SDPI முஸ்லிம் கட்சிகளில் தீவிரமானது, கேரளாவில், கர்நாடகாவில், ஏன் தென் மாவட்டங்களிலும் முஸ்லிகளிடையே ஆதரவு பெற்றது.

  1. மொஹம்மது தமீம் அன்ஸாரி, ஆலந்தூர் (Mohammed Thameem Ansari),
  2. உமர் பரூக், ஆம்பூர் (Umar Farook),
  3. அப்துல்லா ஹஸன் திருச்சி (Abdullah Hassan Faizy),
  4. நஸீமா பானு திருவாரூர் (Naseema Banu ),
  5. சிக்கந்தர் பாஷா மதுரை (Sikkandar Batcha) மற்றும்
  6. பாளையங்கோட்டை

என்று போட்டியிட்டு தோல்வியடைந்தது. ஆம்பூர் போன்ற முஸ்லிம்கள் ஆதிக்கம் கொண்ட இடங்களில் தோற்றிருப்பது, திமுக ஆதரவான ஓட்டுகள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

08-05-2021


[1] மாலைமலர், கடையநல்லூர் தொகுதி உறுதியானதுகாதர் மொய்தீன், பதிவு: மார்ச் 09, 2021 12:39 IST

[2] https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/09123935/2428316/Tamil-News-Kader-Mohideen-Says-Kadayanallur-constituency.vpf

[3] தினகரன், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்: காதர் மொய்தீன், 2021-02-28@ 20:19:03

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=658946

[5] டாப்.தமிள்.நியூஸ், 5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, By aishwarya, 01/03/2021 7:02:48 PM

[6] https://www.toptamilnews.com/indianunionmuslimleague-leader-press-meet/

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டி.. காதர் மொய்தீன் அறிவிப்பு.!, By Vinoth Kumar, Chennai, First Published Mar 1, 2021, 7:26 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/indian-union-muslim-league-competition-in-separate-symbol-kader-mohideen-qpampn