Archive for the ‘விதவை’ Category

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?  இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (3)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்னஇது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (3)

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்கப்படுதல்: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வழங்கினார்[1]. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 541 மனுக்கள் பெறப்பட்டன[2]. கோவை மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது[3]. இந்த சங்கங்களின் மூலம் கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள மகளிர் மற்றும் ஆதரவற்ற விதவைகள், சிறுதொழில் செய்யவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மகளிர் மற்றும் பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக பொருளாதார உதவி அளித்தல் செயல்படுத்தப்படுகிறது[4]. இந்த சங்கங்களை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய கோவை மாவட்டத்தில் வசிக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களை சார்ந்த சமூக பணிகளில் ஆர்வம் உள்ள தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை 0422-2300404 என்ற எண்ணிலும், dbcwo-tncbe@nic.in என்ற அலுவலக இ-மெயில் முகவரி மூலமும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்[5]. விண்ணப்பதாரர்கள் சமூகப் பணிகளில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் ஆர்வமுடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அதேபோல, குற்றவியல் நடவடிக்கையோ, நீதிமன்ற வழக்கு நிலுவையிலோ இருக்கக்கூடாது[6].

உலாமா நலவாரியம், நிதியுதவி: உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது. பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறும் வகையில் உலமா அடையாள அட்டை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது[7]. தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது[8]. இதன் மூலம் பள்ளிவாசல்கள், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன[9].

உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்[10]. வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பதிவு பெற்ற உறுப்பினர்கள் 60 வயது அடைந்து ஓய்வுபெற்றிருப்பவர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறுவதற்கு உலமா அடையாள அட்டை அசல், வக்ஃபு வாரியச் சான்று-எந்தப் பள்ளிவாசலில் ஓய்வு பெற்றவர், ஓய்வு பெற்ற சான்று, வேறு அரசுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறவில்லை என்ற வருவாய்த் துறை சான்று, மருத்துவச் சான்றிதழ், வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -1 என்ற முகவரியை அணுகி பயன் பெறலாம்.

  1. இந்துத்துவ வாதிகளே, பதில் சொல்லுங்கள். கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்று செயல்படுகின்றன, அதுபோல, இந்து மகளிர் உதவும் சங்கம் உள்ளதா?
  2. இந்த கிறிஸ்தவ / முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது.
  3. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது.
  4. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.
  5. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.
  6. தலைசிறந்த உள்ளுர் முஸ்லிம்களிலிருந்து ஒருவர் கௌரவ செயலாளராகவும், இரண்டு நபர்கள் கௌரவ இணைச் செயலாளர்களாகவும், மூன்று நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் ஒரு ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படுவர்.
  7. அடுத்த ஆண்டில் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து நபர்களை மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு இச்சங்கத்தின் பொதுக்குழு தேர்வு செய்யும்.
  8. இதே போல, ஜைன, பௌத்த, சீக்கிய, பாரசீக மற்ற சிறுபான்மையினர்களுக்கும் சங்கம் உண்டா, நிதியுதவி கொடுக்கப் படுமா?
  9. இதெல்லாம், ஹலால்-ஹராம், ஷிர்க்-ஷிர்க்-இல்லை, காபிர்-மோமின், பாவம்-பாவமில்லை போன்ற வகையறாக்களில் வருமா-வராதா?
  10. செக்யூலரிஸம் கடைபிடிக்கும் அரசு, இவ்வாறு மதரீதியில் சங்கங்களை வைத்து, நிதியுதவி கொடுத்து பரபட்சத்தைக் கடை பிடிக்கலாமா?

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] தினமணி, முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி, By DIN  |   Published On : 30th November 2021 01:42 AM  |   Last Updated : 30th November 2021 01:42 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/nov/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-40-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3745199.html

[3] தினமலர், கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களில் சேரலாம்!, Added : நவ 05, 2021  00:18

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2883664

[5] தமிழ்.இந்து, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில்அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல், செய்திப்பிரிவு, Published : 06 Jun 2021 03:14 AM, Last Updated : 06 Jun 2021 03:14 AM.

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/678910-.html

[7] தினமணி, உலமாக்களுக்கு நலவாரியம் மூலம் அடையாள அட்டை, By DIN  |   Published On : 30th November 2018 04:08 AM  |   Last Updated : 30th November 2018 04:08 AM.

[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/nov/30/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-3048534.html

[9] விகடன், உலமாக்களுக்கு அடையாள அட்டைகலெக்டர் அறிவிப்பு!, துரை.வேம்பையன், Published:24 Oct 2017 9 PMUpdated:27 Nov 2018 11 AM

[10] https://www.vikatan.com/government-and-politics/politics/105816-identity-card-will-be-issued-to-ulamakkal-says-karur-collector

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?  இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்னஇது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்:  திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே  நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்[1].  இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது[2]. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது: இங்கு முக்கியமாக நடந்து வரும் மோசடியை, “மத மொசடியை” கவனிக்க வேண்டும். குறிப்பாக எஸ்.சிக்கள், அதாவது பட்டியல்-சலுகை பெறும் இந்துக்கள், இந்துக்களாக இருந்தால் தான் இன்வொதிக்கீடு போன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதம் மாறும் நபர்களுக்கு அந்த சலுகை தொடராது, கிடைக்காது. அதனால், மதம் மாறியப் பிறகும், தாங்கள் எஸ்.சிக்கள், இந்துக்கள் என்று மெய்ப்பிக்க சான்றிதழை வைத்திருக்கிறர்கள். நியாமாக, சட்டப் படி, மதம் மாறியப் பிறகு, அவர்களுக்கு அந்த சலுகை இல்லாமல் போகிறது. அதனால், சான்றிதழின் படி இந்துவாக இருந்து, அரசு சலுகைகள் பெற்று வாழும் அவர்கள், கிருத்துவர் அல்லது முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, இத்திட்டங்களின் கீழ் அளிக்கப் படும் சலைகைககள், மானியங்கள், நிதியுதவிகள் போன்றவற்றைப் பெற முடியாது. இதைத் தான் அமைச்சர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார்.

17-12-2022 – பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்[3]. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 17-12-2022 சனிக்கிழமை நடைபெற்றது[4]. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.கார்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு அளிக்கப் படும் உதவிகள்: இதைத்தொடா்ந்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: “தமிழகத்தில் மாவட்டம் தோறும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சிறுபான்மையினருக்கு கூடுதலாக மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இதேபோல தனி அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். கிறிஸ்தவ மக்களுக்கும் தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பட்டியல் பெறப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உலமாக்கள் உறுப்பினா்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. இதனால், தமிழக முதல்வா் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார்,” என்றார் அவா்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்: சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் “முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்” என்ற அமைப்பு 01.10.1982 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது[5]. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] இ.டிவி.பாரத், சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்அமைச்சர் தகவல், Published on: August 24, 2022 9.29 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvallur/welfare-benefits-can-be-availed-only-if-you-have-proof-of-minority-status-minister-masthan/tamil-nadu20220824092932136136811

[3] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு தனி நல வாரியம், By DIN  |   Published On : 18th December 2022 01:19 AM  |   Last Updated : 18th December 2022 01:19 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/dec/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2–%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3968816.html

[5] https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-b95bc1bb1bbfbaabcdbaabbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)

மே 12, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (3)

சோனியாமன்மோஹன்சிங்ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[1] பலே, பலே!

 

குங்குமப் பொட்டுடன் உலா வரும் சோனியா: கர்நாடக வெற்றிற்காக காங்கிரஸ் ஆடிய மாபெரும் நாடகம்[2]. ஊழலின் மறு உருவம் சோனியா, காங்கிரஸ், யுபிஏ என்ற நிலை வந்துவிட்டப் பிறகு, 2014க்கு முன்பாக, எப்படியாவது தனது முகத்தின் மீது பூசப்பட்டுள்ள அழுக்கைத் துடைத்து, மக்களின் முன்பாக நல்லவன் போல வர காங்கிரஸ் மறுபடியும் ஏமாற்ற இறங்கியுள்ளது[3].

 

வேலியே பயிரை மேய்ந்தது: அஸ்வினி குமார் சட்ட அமைச்சர், இந்திய சட்டம், நீதி, முதலியவற்றின் நடப்புகளுக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர். சட்டம், விதிமுறைகள், விதிப்பு, நீதிவியல், சட்டவியல், திருத்தங்கள் என்று எல்லாவற்றிற்கும் பாத்தியதைக் கொண்ட அமைச்சர். நிலக்கரி ஊழல் விஷயமாக, சிபிஐயின் தன்விளக்க மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்படும் போது, அதனைப் பார்த்து, பிரதம மந்திரியை பாதிக்கும் முறையில் இருந்த பத்திகளை நீக்கினார் என்ற குற்றம் இவர்மீது சுமத்தப் பட்டது. என் மீது எந்த குற்றமும் இல்லை என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த இவர் இப்பொழுது ராஜினாமா செய்துள்ளார்[4].

 

மாடுகளை பிடித்துக் கட்டியது யார்?:05-05-2013 அன்று கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குழுக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பேசப்பட்டது. பின்னர் எதிர்க் கட்சிகளின் இந்தக் கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறி, அவர்கள் இருவரும் ராஜினாமா செய்வார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவாகக் கூறியது காங்கிரஸ் செயற்குழு. மேலும் நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையையும் நிராகரித்தது அது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார், பன்சால் விவகாரம் குறித்து ஆலோசிக்க 09.05.2013 மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் உயர்நிலைக்கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பன்சால் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

 

மன்மோகன்சிங் விரும்பவில்லை, சோனியாதான் வற்புறுத்தினார்: இதையடுத்து 10-05-2013 (வெள்ளிக்கிழமை) மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் கூடி இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், திடீரென இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பன்சால், அஸ்வினிகுமார் விவகாரம் குறித்து சனிக்கிழமை கூடி ஆலோசிக்க முடிவு செய்தனர்.  பன்சாலை பதவிநீக்கம் செய்யவும், அஸ்வினி குமாரை வேறு துறைக்கு மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக தெரிந்தது. அஸ்வினிகுமார் மீதான நடவடிக்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது.

 

இல்லை, சோனியாமன்மோகன்சிங் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு:  இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறுகையில், ஒரு சில மீடியாக்களில், அமைச்சர்கள் இருவரும், சோனியா வலியுறுத்தலினால் தான் பதவி விலகினார்கள் என செய்தி வெளியானது[5]. இது தவறான தகவல். பன்சால் மற்றும் அஸ்வனி குமார் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற முடிவு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு என கூறியுள்ளார்[6]. ஆகவே இருவருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தியுள்ளது[7].

 

மந்திரிகளை நியமிப்பது பிரதம மந்திரியா, சோனியாவா?: பிரதம மந்திரியின் விருப்பப்படித்தான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே மாதிரி அமைச்சரை நீக்குவதும், மாற்றியமைப்பதும், துறையை மாற்றவும் முதலிய அதிகார் இகள் அவருக்குத்தான் உண்டு. ஆனால், சோனியா ஊழல் அமைச்சர்கள் பதவி நீடிப்பதை விரும்பவில்லை, அதனால், மன்மோகன் சிங் வீட்டிற்குச் சென்றார், பதவி விலகுமாறு கூறினார் என்று முன்னர் செய்திகள் மறுக்கப்பட்டன. இல்லையென்றால், மன்மோகன் சிங் வெறும் பொம்மை / டம்மி, எல்லா முடிவுகளும் சோனியா தான் எடுக்கிறார் என்பது ஒப்புக்கொண்டது மாதிரியாகிவிடும்[8]. அதாவது இதெல்லாம் நாடகம் என்று தெரிந்து விடும்[9].

 

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி: ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா காங்கிரஸ் தான்[10], என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்? “ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகாராணியாக மாறியுள்ளார். ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா. காங்கிரஸ்காரர்கள், ஊழல் அமைச்சர்களை நீக்கிய வெற்றிக்கு சோனியா தான் காரணம் என்று மெச்சிக் கொள்கிறார்கள்[11].

 

© வேதபிரகாஷ்

12-05-2013