Archive for the ‘திப்பு சுல்தான்’ Category

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

திசெம்பர் 7, 2014

ராம்ஜென்ம பூமி-பாபரி மஸ்ஜித் போராட்டம் தொடர்ந்து நடத்தப் படுவது ஏன் – செக்யூலரிஸமயமாக்கப்படும் நீதிமன்ற வழக்குகளும், தெரு ஆர்பாட்டங்களும் (1)

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

டிசம்பர் 6 முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது: இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்ட வலியுறுத்தி, முஸ்லிம் அமைப்புகள் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன[1]. முன்னர் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கு 02-12-2014 (செவ்வாய்கிழமை) அன்று தள்ளுபடி செய்யப்பட்டது[2].  திருவெண்ணை நல்லூர் மற்றும் விழுப்புரம் முதலிய இடங்களில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக இந்துமுன்னணியினர் வழக்குத் தொடர்ந்தனர்[3]. ஆனால், அவ்விடங்கள் மிகவும் மக்கள் நெருக்கம் அதிகமான இடங்கள் என்பதால், போலீஸார் மறுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக, புதிய வேறிடங்களில் போலீஸார் அனுமதியுடன், ஆனால், விதிக்கப்படும் நிபந்தனைகளுடன், நடத்தலாம் என்றும் நீதிபதி ஆணையிட்டார்[4]. ஏனெனில் அதே நாளில் இந்து அமைப்புகளுக்கும் ஆர்பாட்டம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார் நீதிபதி[5]. ஆக, ஆர்பாட்டம் நடத்துவதும், இந்து இயக்கங்கள் சேர்ந்து கொண்டதால், செக்யூலரிஸமயமாக்கப் பட்டுவிட்டன.

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-12-2014-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

வழக்கம் போல போலீஸார் பாதுகாப்பு, சோதனை, பயணிகள் அவதி: வழக்கம்போல, இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர், சென்னையில் மட்டும் 18,000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர், ரயில் நிலையங்கள், கோயில்கள் (மசூதிகளை ஏன் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை), கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  விமானநிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்[6] என்று செய்திகள் வெளியிடப்பட்டன. அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதற்காகும் செலவு என்னவென்று அறிவிக்கப்படவில்லை.

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

06-12-2014 திருமா முஸ்லிம்களுடன்

தா. பாண்டியன், திருமா வளவன், நெடுமாறன் முதலியோர் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது ஏன்?: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி எனப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடம் 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஆண்டுதோறும் டிசம்பர் 6-ஆம் தேதி முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அதன்படி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் சனிக்கிழமை 06-12-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மற்றும் 22 ஆம் ஆண்டு தினம் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது[7].  இந்த ஆர்பாட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும், குழந்தைகளும் கையில் பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர். தமுமுக தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.எம். பாக்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protestt-தமிள் ஒன் இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்: பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும், இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்[8]. இதேபோல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பாபர் மசூதி இடிப்புத் தினத்தை ஒட்டி நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஒரு சிலர் பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன[9]. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களிலும், கடலோர காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

06-muslims-protest-தமிள் ஒன் இந்தியா

தி ஹிந்துவின் கவரேஜ்: ஹைதரபாதிலும் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது[10].

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

A street in Hyderabad wears a deserted look on the 22nd Anniversary of Babri Masjid Demolition, on 06-12-2014. Photo-PTI

ரெய்ச்சூரிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது என்று “தி ஹிந்து” புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. திப்பு சுல்தான் சங்கம் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாத் [Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM)] போன்ற முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடந்துள்ளது.

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 - The Hindu

Raichur, Karnataka RJM-BM demonstration 06-12-2014 – The Hindu

பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, வினய் கத்தியார் முதலியோர் [Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure] மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர்[11]. ஜன்சத்தா என்ற நாளிதழ் தில்லி, கோயம்புத்தூர் முதலிய இடங்களில் நடந்த ஆர்பாட்டங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது[12]. ஜமாத்-இ-ஹிந்த் நீதிமன்றத்திற்கு வெளியாக ஒரு சமரச உடன்படிக்கை ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தது[13]. இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் பேசியதையே இவர்களும் பேசியுள்ளார்கள்.

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

06-muslims-pro-தமிள் ஒன் இந்தியா

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்ட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் 06-12-2014 (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தினமணி இரண்டு வரிகளில் செய்தி வெளியிட்டது. ஆனால், இதில் எந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளிவரவில்லை. அதாவது, இந்துக்களுக்கு ஆதரவாக கலந்து கொள்ள யாரும் இல்லை அல்லது அந்த அளவிற்கு இன்னும் துணிவு வரவில்லை போலும். இணைத்தள இந்து போராட்ட வீரர்கள், கோஷ்டிகள் முதலியன என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரிடயவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தினமலர் ஒரே வரியில் செய்தியை வெளியிட்டுள்ளது[14].

Babri-5th

Babri-5th

டிசம்பர் 6ம் தேதிபீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது[15]: இந்த வருடமும் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்[16].

© வேதபிரகாஷ்

07-12-2014

[1] தினமணி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 07 December 2014 01:47 AM IST

[2] On Tuesday (02-12-2014), the judge passed orders on two petitions filed by S Elumalai and K Balu, office bearers of Hindu Munnani. The Madras high court has rejected a petition which sought denial of permission for Muslim organisations to stage protests against demolition of Babri Masjid on Saturday (06-12-2014). Muslim organisations have been holding anniversary meetings and rallies across the country ever since the masjid was brought down on December 6, 1992.

[3] They challenged the police refusing them permission to hold demos at Thiruvennai Nallur and Villupuram on December 6 demanding a Ram temple at the disputed site in Ayodhya. The Villupuram police submitted that the places where the petitioners want to hold demonstration are highly congested. But the petitioners said that they were prepared to shift the time and venue if needed. Disposing of the petitions, the Judge said that the first petitioner may shift the venue of demonstration at Thiruvennai Nallur to the place suggested by the police, who shall permit to hold a demonstration at the new venue, subject to reasonable restrictions.

[4] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Muslim-Outfits-Can-Stage-Demo-on-Dec-6/2014/12/04/article2554298.ece

[5] http://timesofindia.indiatimes.com/city/chennai/Cant-deny-nod-for-Babri-protest-HC/articleshow/45367930.cms

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=121307

[7] தமிள் ஒன் இந்தியா, பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், Posted by: Mayura Akilan Updated: Saturday, December 6, 2014, 17:53 [IST], Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[8]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF/article2558998.ece

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/protests-mark-babri-masjid-demolition-anniversary-216469.html

[10] http://www.thehindu.com/news/cities/Hyderabad/babri-masjid-demolition-anniversary-passes-off-peacefully-in-hyderabad/article6668051.ece

[11] Thousands of citizens under the banner of Tipu Sultan Sangha and the All-India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM) party took out a rally through major streets of Raichur and staged demonstration outside the office of the Deputy Commissioner, to observe the 22nd anniversary of Babri Masjid demolition as Black Day. They raised slogans against Bharatiya Janata Party leaders L.K. Advani, Murali Manohar Joshi, and Vinay Katiyar for their alleged involvement in demolishing the historical structure. They also raised questions about the then Prime Minister P.V. Narasimha Rao for allowing the “historical crime” to take place.

http://www.thehindu.com/news/national/karnataka/citizens-in-raichur-observe-black-day-on-anniversary-of-babri-masjid-demolition/article6668083.ece

[12] http://www.jansatta.com/photos/entertainment-gallery/22nd-anniversary-of-babri-masjid-demolition-demonstration-in-india/7876-3/

[13] http://twocircles.net/2014dec06/1417885117.html#.VIObYPmSynU

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1131898

[15] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/

[16] https://islamindia.wordpress.com/2013/12/09/december-6-fake-calls-of-bombing-temples-cannot-be-brushed-aside/

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

ஜூன் 24, 2013

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

Mani-mandapam for Umaruppulavar, Kattapomman, Pattukkoottaiyarமணிமண்டபங்கள்கட்டும்தமிழகஅரசியல்: மணிமண்டபம் கட்டுவது என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. அது “கலைமாமணி” விருது அளிக்கப்படும் தோரணையில் தான் உள்ளது. யார்-யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கட்சி ஆதரவு, சித்தாந்த ஆதரவு, பரிந்துரை என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றனவே தவிர, தனிமனிதரின் தராதரம், திறமை, பண்டித்துவம் முதலியவையெல்லாம் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் முதலிய பேதங்கள் இருந்தும்-இல்லாமல், எந்தவித வேறுபாடுகள் இருந்தும்-இல்லாமல், எல்லோருக்கும் என்று உள்ளவற்றை பகிர்ந்து அளிக்கும் முறையில் இவை கொடுக்கப்படுகின்றன. முதலியார், செட்டியார், பிள்ளை, தேவர், நாயக்கர் என்றுதான் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அதிலும் இடவொதிக்கீடு உள்ளது. தபால்தலை, நாணயம் வெளியீடுகளும் இதில் அடங்கும். இதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ரீதியில் தான் பரிந்துரை, சிபாரிசு, லாபி எல்லாம் செய்யப்படுகின்றன. மக்களின் விருப்பங்களுக்காக செய்யப்படுவதில்லை. சிலரின் மணிமண்டபங்கள் கட்டப்படும் போது, தபால்தலை-நாணயம் வெளியிடப்படும் போது, யாரிவர் என்று கேட்கப்படுவதிலிருந்தே, அவரது பிரபலம், மக்கள் அறிந்துள்ள நிலை முதலியவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், வெகுஜன மக்களின் அத்தகைய அறியாமையைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை!

tipu-no-heroமணிமண்டபம் கட்டுவதால் யாருக்கு லாபம்?: எதுஎப்படியாகிலும் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பராமரிக்க, பழுது பார்க்க, மராமத்து பார்க்க, புனரமைக்க முதலியவற்றிற்கும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. தோட்டம் அமைக்க, செடிகள் வைக்க, புல்தரை அமைக்க, தண்ணிர் ஊற்ற என்ற இத்யாதிகளுக்கு கான்ட்ராக்ட், பணம் கிடைக்கிறது. ஆகையால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு மணிமண்டபம் கட்டிவிட்டு, அடுத்தது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். நாளைக்கு நூறு மணிமண்டபங்கள் கட்டிவிட்டேன் என்று தனக்கு ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லி கட்டப்பாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி உயிருள்ளபோதே தனக்கு சிலை வைத்துக் கொண்டதை ஞாபகத்தில் கொள்ளலாம்.

Tipu Sultan - opposed by the people of Karnataka2மேமாதத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவு[1]: தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்[3]. ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tipu 214th Memorial celebration day - PF functionஇந்துக்கள் – முஸ்லிம்கள் இருவரும் திப்புசுல்தான் மணிமண்டபம் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[4]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று ஹெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[5] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[6]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Tipu 214th Memorial celebration day - Popular front functonபி. ஆர். கௌதமன் இதனை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்[7]. Photo1212இதைத்தவிர 23-06-2013 அன்று மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அரங்கத்தில் இதை எதிர்த்து ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

Photo1214

கலந்து கொண்டவர்கள் – கூட்டத்தின் ஒருபக்கம்.

Photo1215

ஹைதர் – திப்பு மணிமண்டபம் முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்?: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[8]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று தொந்தரவுப்பட்டதும் உண்டு[9].

Nagai Mansur - expecting more than Manimandapamநாகை மன்சூர், “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்” என்று ஒருபக்கம் போட்டுவிட்டு, “வேண்டாம்! மணிமண்டபம் வேண்டாம்….!! 13 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு தற்போது 7 சதவிகித இடஒதுக்கீடு போதும். இதனை மட்டும்தான் இந்த சமுதாயம் உங்களிடம் எதிர்பார்க்கிறது”, என்று ஜெயலலிதா படம் கீழ் போட்டிருக்கிறார். அதாவது, மக்கட்தொகை பெருக்கம், அதற்கேற்றப்படி இடவொதிக்கீடு, ஆதிக்கம் என்ற நிலையில் தான் அவர்கள் சிந்தனை உள்ளது.

Tipu Sultan - opposed by the people of Karnatakaஹைதர்திப்பு மணிமண்டபம் இந்துகள் எதிர்ப்பதேன்?: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும்? யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்? தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?”, என்று முடித்திருக்கிறார்[10]. “வாய்ஸ் ஆப் இந்தியா” என்ற பதிப்பகம் ஏற்கெனவே இவ்விவரங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறது.

Photo1216ஐ. எம். முத்தண்ணா[11] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.

Photo1217

ஐ.எம். முத்தண்ணா

Photo1220

ஹைதர்-திப்பு – மாயைகளும், கட்டுக்கதைகளும், உண்மைகளும்: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்.

வேதபிரகாஷ்

© 24-06-2-13


[1]

[4] Chief Minister J Jayalalithaa on Wednesday (16th May 2013)  announced that memorials would be raised for Swami Sahajananda of Chidambaram and freedom fighters Hyder Ali and Tipu Sultan. She also announced a memorial for Kuyili, the commander of freedom fighter Velu Nachiyar. Making a suo motu statement in the State Assembly, the CM said CK Thamizharasan (RPI) and S Gunasekaran (CPI) had made requests for raising a memorial for Kuyili.  She said the memorial for her would be established in the complex being constructed for the memorial of Velu Nachiyar. Similarly, the request for raising memorials in honour of Hyder Ali and Tipu Sultan was made by A Soundararajan and K Balabharathi (CPM) and Aslam Basha, TMMK MLA from Ambur[4].  The CM said a memorial would be built for both freedom fighters in one complex in Dindigul district.

http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[7] பால கௌதமன், திப்புசுல்தான்: மணிமண்டபமும்மானங்கெட்டஅரசியலும், http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/

[8] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனைய்ல் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[9] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[11]  I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.