Archive for the ‘நேரு’ Category

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரைசொன்னது!

ஜூன் 25, 2023

53-வயதாகும் ராகுலுக்கு 75-வயதாகும் லாலு திருமணம் செய்து கொள் என்று அறிவுரை சொன்னது!

பீஹாரில் 16 கட்சிகளின் கூட்டம்: அடுத்த ஆண்டு 2024ல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் 23-06-2023 அன்று (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் நடைபெற்றது. இதில் 16 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (53 வயது), தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23-06-2023 அன்று லாலு பிரசாத் யாதவ் ராகுலை திருமணம் செய்து கொள் என்றது: லாலு இந்தியில் பேசியதை தமிழ் ஊடகங்கள் வரிந்து கொண்டு செய்தியாக போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தி தெரியாது போடா என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியும், பிஹாரிகளை நக்கல் அடித்தும் வரும் தமிழ் ஊடகங்களுக்கு இதில் என்ன அக்கரை என்று தெரியவில்லை. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ் [75 வயது] கூறியதாவது[1], “ராகுல் காந்தியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே கூறியிருக்கிறேன்[2]. நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்[3]. ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை[4]. இன்னும் காலம் கடக்கவில்லை. தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம். ராகுலின் திருமணம் குறித்து அவரது தாயார் சோனியா காந்தி தன்னிடம் பேசியுள்ளார்[5]. நீங்கள் முன்னரே திருமணம் செய்திருக்க வேண்டும்[6], பரவாயில்லை இன்னும் நேரம் இருக்கிறது[7]. அப்படி கல்யாணம் செய்து கொள்லும் பொழுது, நாங்கள் எல்லோரும் பாராத் / ஊர்வலத்தில் கலந்து கொள்வோம்,” என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இப்போது நீங்கள் சொன்னது நடக்கும் என்றார்[8].  கடந்த ஜனவரி மாதம், ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது அளித்த பேட்டியில், சரியான பெண் கிடைக்கும்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது[9]..  டிசம்பரில், ராகுல் காந்தி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தாயார் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் பண்புகளை தனது துணை கொண்டிருக்க விரும்புகிறேன் என்று கூறினார்[10].

19-06-2023 அன்று ராகுலின் பிற்ந்த நாள்: 19-06-1970 அன்று பிறந்த ராகுலுக்கு 53 வயதாகிறது. 23-06-2023 அன்று இக்கூட்டம் என்றால், சரியாக சென்ற 19-06-2023 ராகுலின் பிறந்த நாள் ஆகிறது. எனவே ஒருவேளை, 75 வயதாகும் லாலு அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்லியிருக்கலாம்[11]. ஆகவே, தமாஷுக்காக சொல்லவில்லை[12]. லாலு முன்னர் ராகுலின் தந்தையால் தான் மாட்டுத் தீவின ஊழலில் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குச் சென்றார். இப்பொழுது, அதே குடும்ப வாரிசுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார், என்றும் ஊடகங்கள் எடுத்துக் காட்டின. மேலும், ராகுலின் பிறந்த நாளையே காங்கிரஸ்காரர்கள் மறந்து விடார்களா அல்லது கொண்டாடக் கூடாது என்ற மேலிடத்து உத்தரவா என்று தெரியவில்லை. 53-வயது என்றால், ராகுலின் இளமைத் தனம் போய்விடும் என்று நினைத்தார்கள் போலும். இருப்பினும், சமீபத்தில் தாடி வைத்துக் கொண்டபோது, நரைத்த முடி தெரியத்தான் செய்தது.

பிஜேபியின் திருமணஒப்புமை கிண்டல்: லாலு ராகுலுக்கு அற்வுரைக் கொடுத்தாரா, கிண்டல் அடித்தாரா என்ற நிலையில், பிஜேபிகாரர்களும் விடவில்லை. நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார்[13]. ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்) என்று தெரியவில்லை[14]. பெண்ணும் யார் என்று புரியவில்லை[15]. ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள் என பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து கிண்டலடித்துள்ளார்[16]. ஒருவேளை ராகுல் தான் பிரதம மந்திரி வேட்பாளர் என்பதனை மறைமுகமாகக் கூறினார் போலும். இந்தியில் பேசியதால், இந்தி தெரியாத கட்சித் தலைவர்கள் தமக்கு இந்தி தெரியாது என்று தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வரத்தான் செய்யும்.

2013ல் கொடுத்த விளக்கம்பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2013ல் ராகுல் விவாகம் பற்றி நடந்த விவாதம்: கடந்த  2013 மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும் ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[17]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[18]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[19]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[20]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

© வேதபிரகாஷ்

25-06-2023


[1] தினமணி, ராகுல்காந்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும்: லாலு பிரசாத், By DIN  |   Published On : 23rd June 2023 09:56 PM  |   Last Updated : 23rd June 2023 09:56 PM.

[2] https://www.dinamani.com/india/2023/jun/23/lalu-prasad-yadav-asks-rahul-gandhi-to-get-married-4026423.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா,  ராகுல் நாங்க சொல்றத கேட்கணும்.. செல்லமாக மிரட்டிய லாலு பிரசாத்.. வெடித்து சிரித்த அரசியல் தலைவர்கள்!,  By Vignesh Selvaraj Published: Friday, June 23, 2023, 18:52 [IST],

[4] https://tamil.oneindia.com/news/india/lalu-prasad-asks-rahul-gandhi-to-get-married-made-fun-at-press-meet-after-opposition-meeting-518035.html

[5] நக்கீரன், திருமணம் நடக்கும்என்ற ராகுல்காந்தி; பாட்னாவில் நடந்த சுவாரசியம், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 24/06/2023 (08:26) | Edited on 24/06/2023 (08:50).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/india/you-have-said-it-it-will-happen-rahul-gandhi-interesting-happenings-patna

[7] சமயம், தாடியை எடுத்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணுப்பாராகுல் காந்திக்கு லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ்!, Authored by Bahanya Ramamoorthy | Samayam Tamil |,

[8] https://tamil.samayam.com/latest-news/india-news/lalu-prasad-yadhav-advise-to-ragul-gandhi-to-get-married-soon-in-patna-meeting/articleshow/101232555.cms

[9] காமதேனு திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ்ராகுல் கூறிய பதில் என்ன?, Updated on : 23 Jun, 2023, 9:10 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/rahul-gandhi-was-asked-by-lalu-yadav-to-get-married-his-response

[11] இந்தியன்.எக்ஸ்பிரஸ், பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலகலப்பு: ராகுல் திருமணத்தை வலியுறுத்திய லாலு! , Written by WebDesk, tamil news, June 23, 2023 20:15 IST

[12] https://tamil.indianexpress.com/india/still-not-too-late-to-get-married-lalu-prasad-yadav-makes-a-wisecrac,k-at-rahul-gandhi-at-patna-meet-704805/

[13] மாலைமலர், திருமண ஊர்வல அலங்கரிப்பில் மாப்பிள்ளை யார்?- பா.ஜனதா கிண்டல், Byமாலை மலர்23 ஜூன் 2023 10:10 AM (Updated: 23 ஜூன் 2023 10:11 AM).

[14] https://www.maalaimalar.com/shots/bjp-mp-ravi-shankar-prasad-takes-jibe-on-the-opposition-meeting-who-is-the-groom-pm-contender-626240

[15] புதியதலைமுறை, அனைவரும் மாப்பிள்ளைகள்…” எதிர்க்கட்சிக் கூட்டத்தை விமர்சித்த பாஜக!, Prakash J, Published on : 24 Jun, 2023, 8:50 pm.

https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[16] https://www.puthiyathalaimurai.com/india/bjp-comments-on-patna-opposition-parties-meeting

[17]  Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[18]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[19] http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[20] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்!

நவம்பர் 1, 2013

“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்!

Why anti-hindu Hindu

பாட்னாவில்  குண்டு  வெடித்த  போது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே,  வித்யா  என்றால்,  உடனே  நடவடிக்கை  என்றதேன்?: வித்யா சுப்ரமணியம் தில்லியில் பார்லிமென்ட் தெருவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் “தான் எழுதிய கட்டுரைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மிரட்டல் தொலைபேசிகள் வந்துக் கொண்டிருப்பதாக” புகார் கொடுத்ததாக அஜய் மாக்கன் என்ற காங்கிரஸ் தொர்பாளர் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[1]. உடனடியாக அவர் உள்துறை அமைச்சர் ஷிண்டேவிற்கு ஒரு கடிதம் எழுதி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[2]. ஷிண்டேயும் உடனே “நடவடிக்கை எடுக்கப் படும்”, என்றார்.  பாட்னாவில் குண்டு வெடித்தபோது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே, வித்யா என்றால், உடனே நடவடிக்கை என்றது ஆச்சரியம் தான்! அதுமட்டுமல்லாது, மாக்கன் ஒருபடி மேலே போய், மோடி-பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கைக்கு சுதந்திரம் இப்படித்தான் இருக்கும் என்றும் விமர்சித்தார். இதற்குள் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்ட வித்யா சுப்ரமணியம், தான் அவ்வாறு புகார் கொடுக்கவில்லை என்றும், இதற்காக காங்கிரஸிடம் தான் செல்லவில்லை[3], எந்த அரசியல் கட்சியிடமும் செல்லமாட்டேன் என்று டுவிட்டரில் அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன. தான் காங்கிரஸிடம் செல்லவில்லை என்றாலும்[4], காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இ[ப்பிரச்சினையை எழுப்பவேண்டும்? ஆனால், இவர் மோதிக்கு எதிராக எழுதியுள்ள மற்ற கட்டுரைகள் சந்தேகத்தை எழுப்புகின்றது. மோதி பிரதம மந்திரி பதவிக்கு லாயக்கில்லாதவர் என்று ஒரு கட்டுரை உள்ளது[5].

செய்திகள் அறிவிக்கப் படுகின்றனவாஉருவாக்கப் படுகின்றனவா?: 31-10-2013 ஆர்.எஸ்.எஸ்.ஆட்கள் என்று சந்தேகிக்கப் படுபவர்கள், “ஹிந்து அலுவகத்தில் அதிரடியாக நுழைந்தனர்” என்று தலைப்பிட்டு செய்தி “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” வெளியிடப்பட்டுள்ளது. உள்ளே, நான்கு அல்லது ஐந்து பேர் வித்யா சுப்ரமணியம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட கட்டுரையின் மீது புகார் அளிக்க வந்ததாக உள்ளது. வித்யாவும் தனக்கு மிரட்டல் தொலைபேசிகள் வந்ததால் புகார் கொடுத்தார், ஆர்.எஸ்.எஸ். அலுவகத்திற்கு போன் செய்து கேட்டபோது, அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டது[6]. அந்த நிருபருக்கு அந்த அளவிற்கு சாதுர்யம் இருப்பதால், அந்த சந்தேகிக்கப் படுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெரிந்திருக்கலாம். ஆனால், இப்படி சொதப்பலாக “செய்தி” வெளியிட்டிருப்பது, காங்கிரஸுக்கு சாதகமாக உற்பத்திச் செய்யப்பட்ட செய்தி போல உள்ளது[7]. திக்விஜய் சிங் போன்றோரே அவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் இறங்கியுள்ள போது, அதே முறையை இந்த “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” மற்றும் அவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் செய்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். தொழிலில் சுத்தம், நாணயம், யோக்கியதை, மதிப்பு, மரியாதை எல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றபோது, எப்படி அதே தரா-தரங்களை பின்பற்ற தயங்குவது ஏன்?

வித்யா சுப்ரமணியம் தில்லியில் ஏன் புகார் கொடுத்தார்?: புகார் கொடுக்கப்பட்டதால், அதன் படி இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 506ன் கீழ், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனை தமிழ்நாட்டு போலீஸாருக்கு அனுப்பியுள்ளதாக எஸ்.பி.எஸ். தியாகி, டெபுடி கமிஷனர் செய்தி ஊடகத்திற்கு கூறியுள்ளார்[8]. சென்னையில் பதிப்பிக்கப் பட்ட கட்டுரையின் மீதான உருவாகியுள்ளப் பிரச்சினைக்கு தில்லியில் வித்யா சுப்ரமணியம் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை… ஒருவேளை, அப்பொழுது தான், இந்த சாதாரணமான விசயத்தைப் ஊதி பெரிதாக்கி விடலாம் என்று நினைத்தாரோ, என்னமோ? வித்யா சுப்ரமணியம் “தமிழ் ஹிந்துவில்” “பாதி-உண்மை-பாதி-பொய்மை” என்ற ரீதியில் பாரபட்சமாக எழுதியிருந்த கட்டுடைக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வெளிவந்தன. அவற்றுள் சில “தி ஹிந்து” வெளியிட்டது. அப்படி இருக்கும் போது, நடுநிலையோடு கட்டுரை எழுதியிருக்க வேண்டும்.

இந்து நாளிதழ்,  இந்துவிரோத நாளிதழாகி விட்டது: ஆனால், அந்நாளிதழ் வழக்கம் போல, ஒரு குறிப்பிட்ட, அதாவது, பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற ரீதியில், இந்து மதம், இந்துமதக் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் இந்துக்களை அவதூறாக, தூஷித்து வரும் போக்கை 60-90 வயது கொண்ட முதியவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அதனால், அவர்கள் பலமுறை இந்து நாளிதழ், இந்து-விரோத நாளிதழாகி விட்டது என்று வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால், அதன் விற்பனையும் சென்னையில், தமிழகத்தில் குறைந்து விட்டது. இப்பொழுது, படித்த இளைஞர்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சித்தாந்தம் என்ற போர்வையில், ஒட்டு மொத்தமாக, பல கும்பல்கள் பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்வதையும் கண்டு பிடித்து விட்டார்கள்.

. மார்க்ஸின்  “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?”[9]:: இப்பொழுது கூட “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?” என்று அ. மார்க்ஸ்[10] என்ற கம்யூனிஸ சித்தாந்தியை வைத்து, எழுதப்பட்டு, பிரசுருத்துள்ளது[11]. அதன் கீழ் கட்டுப்படுத்தப் பட்ட வெளியாகும் பதில்களில் மார்க்ஸ் எப்படி பாரபட்சத்துடன், ஒடருதலைப்பட்சமான சித்தாந்த கருத்துகளை எழுதியுள்ளார் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள கடுமையான வார்த்தைகள், சொல்லாடல்கள், வாக்கியப் பிரயோகங்கள் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன. அவை, மற்ற அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர்களுக்குத் தான் தெரியும். சாதாரண வாசகர்கள் படித்து கோபம் தான் கொள்வார்கள், ஆனால், உண்மையறியும் மற்றவர்கள் வருத்தம் கொள்வார்கள். “அடடா, இந்த ஆள் இப்படி எழுதியுள்ளாரே, மக்களிடம் திரிபுவாதங்களை வைத்து மக்களைத் தூண்டி விடுகிறாரே, ஏன் இப்படி விஷமத்தனமாக செய்கிறார்”, என்றுதான் கவலையுடன் கேட்டுக் கொள்வார்கள். அவர் கட்டுரையில் உள்ள சில சரித்திர ஆதாரமற்ற, முரண்பாடான விசயங்கள் அலசப்படுகின்றன. முதலில் அவரது வாக்கியங்கள் அப்படியே கொடுக்கப் படுகின்றன. [அடைப்புகளில் எது பொய், முரண்பட்டது, ஆதாரமற்றது என்பது எடுத்துக் காட்டப் படுகிறது]:

  1. நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல. [கடுமையான வார்த்தைப் பிரயோகம். நேரு எப்படி இந்து-விரோதியாக இருந்தார் என்பது இதுவரை யாரும் விளக்கமாக ஆராய்ச்சி செய்யவில்லை.O. P. Mathai எழுதிய “Remniscences of Nehru Dynasty” ஓரளவிற்கு, ஒரு கோணத்தில் தான் அலசப்பட்டுள்ளது]
  2. ஜனவரி 29, 2004-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணைபோனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியதுஎன்றது நினைவுக்கு வருகிறது. [நிச்சயமாக இது கருத்தல்ல, சரித்திர உண்மை. காந்தி சொன்னதையும் நினைவுகூர வேண்டும். பாகிஸ்தான் உருவானால் எனது பிணத்தின் மீதுதான் நடந்து போக வேண்டும் என்றார். என்னவாயிற்று?]
  3. இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி, நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது. [இது சரித்திர ஆதாரமற்ற பொய்யாகும். இஸ்லாமிய மதவாதத்தால் பிளவுண்ட 1947ல் இந்தியா குடியரசானது 1950ல், நேரு இறந்தது 1964, செக்யூலரிஸத்தில் திளைத்தது 1976, …..என்றுள்ளது. அதாவது, நேருவால், ஏன் படேலால் கூட இந்தியாவை செக்யூலரிஸ நாடாக்க முடியவில்லை. எனவே செக்யூலரிஸம் பிரச்சினையல்ல, காந்தி-நேரு மட்டுமல்ல, திராவிடவாதிகள்-கம்யூனிஸவாதிகள் என எல்லோரும் பாகிஸ்தான் உருவாக ஆதரித்தது தான். இதை மறைக்க ஏதேதோ எழுதுகிறார் “மார்க்ஸ்”
  4. அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலதுசாரிச் சார்புடையவர்கள். [இடதுசாரி சித்தாந்தத்தினால் இப்படி மரியாதைக்குரிய தலைவர்களை சாயம் பூசி இப்பொழுது விமர்சிப்பது சரியா என்று அவரது மேதாவித்தனத்தைத் தான் கேட்கவேண்டும்]
  5. ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. [ஆமாம், இவரைப் பொருத்தவரையில் ………………மிகப்பெரியவர், அவருக்கு யாருமே இணையில்லை, இணைவைக்கக் கூடாது………………………..இப்படி யார் சொல்வார்கள் என்று புரிந்து கொள்ளலாம்]
  6. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.[ஆஹா, அதுதான் நேருவைப் பற்றி அதிகமாகவும், படேலைப் பற்றி குறைவாகவும் உள்ளது போலும்]
  7. டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், “பாசிஸத்துக்குக் காரணமாகக் கூடிய ரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ். கைக்கொண்டுள்ளது” என்று இவர்களை பாசிஸ்ட்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது [இப்படி ஒன்றைக் குறிப்பிட்டு மற்றதை மறைக்கிறார். அ. மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்” எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும். . மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும்.]

பத்திரிகாதர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணயம் இல்லாத இதழியல் வல்லுனர்கள்: ஆனால், தவறுகளை, பிழைகளை, சரித்திர-பிறழ்சி வாதங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. இங்குதான் பிரச்சினை வருகிறது. கட்டுரை எழுத “தி ஹிந்து” வழக்கமாக மார்க்சிஸ்ட், மற்ற கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட அல்லது ஆதரவு உள்ளவர்களைத்தான் வைத்து கட்டுரை எழுதப்பட்டு வெளியிட்டு வருகிறது. இப்போக்கு 1990களிலிருந்து காணப்படுகிறது. ஏதோ அதிகமான புகார்கள் வந்து, பிரஸ் கவுன்சிலிடம் புகார்கள் அனுப்பும் நிலை வரும் போது, ஒன்று-இரண்டு கட்டுரைகளை வெளியிடுவார்கள் அல்லது அக்கருத்துக்களை சுருக்கி “ஆசிரியர் கடிதம்” கீழ் வெளியிடப்படும். ஆனால், பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகள், நிலைநிறுத்தப் பட்ட உண்மைகள் போல, மற்ற பத்திரிக்கைகளில், புத்தகங்களில், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரங்களாகக் குறிப்பிட்டு, சுற்றில் வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமான மூளை சலவை செய்யும் பிரச்சாரமே அன்றி, உண்மையான அறிவுஜீவித்தனமோ, பாண்டித்யமோ கிடையாது. இதைத்தான் 60-90 வயதான பெரியவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்துதுவேஷம்,  இந்துகாழ்ப்பு,  இந்துதூஷணம் என்றே தொழில் நடத்தும் சித்தாந்த கூலிகள்: “தி இந்து”விற்கு / அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு “தமிழால் இணைவோம்” என்ற கொள்கை இருந்தால், இப்படி பத்திரிகா தர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணம் முதலியவை இல்லாமல், “எதிர்-இந்து”, “இந்து-விரோதம்”, இந்து-துவேஷம், இந்து-காழ்ப்பு, இந்து-தூஷணம் என்றே தொழில் நடத்த வேண்டியிருக்க மாட்டார்கள். யாரும் கோபப் பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிடப்பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்காது. ஆனால், இவையெல்லாம் சில நாட்களிலேயே நடந்து விட்டன. ஆகவே, நிச்சயமாக “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையினின்று மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், “அப்படித்தான் இருப்போம்” என்றாகி விடுகிறது. பிறகு நடப்பது நடக்கும்.

© வேதபிரகாஷ்

31-10-2013


[1] Maken added that the journalist filed a complaint saying that she was getting threatning calls from the RSS. Is this the kind of politics that they want to take forward, he then questioned the BJP.

http://news.oneindia.in/new-delhi/ajay-maken-rss-threatned-senior-jounalist-over-patel-article-1333764.html

[2] Congress spokesman Ajay Maken told reporters in New Delhi that he had conveyed to home minister Sushilkumar Shinde concerns expressed by the journalist and has requested him to probe her complaint. He said she had given full details about the threats.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/RSS-threatened-journalist-over-article-on-Patel-Congress/Article1-1145715.aspx

[6]HT correspondent with all his wisdom could have very well investigated and unmasked the “suspects”, instead of pleading that “Despite repeated queries from HT, the RSS denied”. In fact, this makes to suspect the HT corres that he might have manufactured such news just to strengthen the Congresswalas accusation. Why then, the “Hindu”, “Hindu”sthan Times prefer to aid and abet Congress’ allegations?

http://www.hindustantimes.com/india-news/newdelhi/suspected-rss-men-barge-into-the-hindu-office/article1-1135611.aspx

[8] “A case under Section 506 of Indian Penal Code (punishment for criminal intimidation) was registered, regarding the complaint of Vidya Subramaniam at the Parliament Street Police station. The same day, the matter was referred to Tamil Nadu Police,” Deputy Commissioner of Police S.B.S. Tyagi told IANS.

http://www.ummid.com/news/2013/October/31.10.2013/congress-bjp-spar.html

[10] http://amarx.org/?page_id=154

எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ள: செல் பேசி:  +91 94441 20582; மின் அஞ்சல்:  professormarx@gmail.com; அஞ்சல் முகவரி:  அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-  600 020 ( A.Marx,  3/5, First Cross St.,  Sastri Nagar, Adyar, Chennai- 600 020, India ).

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்!

செப்ரெம்பர் 17, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்!

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

16-09-2013 (திங்கட்கிழமை): அகிலேஷ் வந்து சென்றதும் மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் செய்கிறார்கள் என்றதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னமே எங்கெங்கு செல்லவேண்டும், யாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டது. பாதுகாப்பிற்காக கொம்புகளைத் தடுப்பாக வைக்கப் பட்டு, சாதகமானவர்களை மட்டும் வைத்து கூட்டம் கூட்டப்பட்டது. யாரும் கோஷங்கள் போடக்கூடாது என்றெல்லாம் தெளிவாக கட்டளைகள் இடப்பட்டன. அதன்படியே முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்.  இதில் கூட முதலில் ஊடகங்கள் அவர்கள் முஸ்லிம்களை மட்டும் சந்திக்கும் காட்சிகளைக் காட்டலாமா வேண்டாமா என்று தயங்கின என்று தெரிந்தன. ஏனெனில், புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

ஜட்-மக்கள்   /   இந்துக்கள்  இவர்களிடம்  கோபமாக  இருக்கிறார்களாம்: கலவரத்தில் ஜட் மக்கள் / இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக இருந்த மற்றும் தற்காலிக இருப்பிட கூடரங்களுக்குச் சென்று முஸ்லிம்களை பார்த்துச் சென்றனர். பவாலி மற்றும் காஞ்ச்புரா பகுதிகளில் ஒப்புக்கு நின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால், தங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை மற்றும் அவமானப் படுத்திவிட்டதாக புழுங்கிக் கொண்டிருக்கிருந்தனர்[1].

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

முஸ்லிம்களும்   வெறுப்படைந்துள்ளனர்: மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயத்திற்கு இந்த அளவிற்கு பாதுகாப்பு செய்துள்ளனரே, அதே மாதிரி முன்னமே செய்திருந்தால், பாதுகாப்புக் கொடுத்திருந்தால், இந்த கலவரமே நடந்திருக்காதே என்று வெளிப்படையாகக் கூறவும் செய்தனர்[2]. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாதம், இளம் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. இதுவரை, 44 பேர் இறந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புக்காக, ராணுவம், துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த, ஊரடங்கு உத்தரவு, தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. ஞாயிற்றுக் கிழமை, கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

மன்மோகன் சிங் எச்சரிக்கை கலவரத்துக்கு  காரணமானவர்கள்  மீதும்,   கலவரத்தை  தூண்டி  விட்டவர்கள்  மீதும்,   கடும்  நடவடிக்கை  எடுக்கப்  படும்: உ.பி.,யில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த, பிரதமர் மன்மோகன் சிங், “கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், கலவரத்தை தூண்டி விட்டவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, எச்சரித்தார். அவருடன், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலும் சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.  பஸிகான் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதன் பின், பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இது ஒரு மோசமான கலவரம். முதலில், முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான, அனைத்து நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டும். இதற்கான உதவிகளை செய்வதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. கலவரப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு, .பி., அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும். கலவரத்துக்கு காரணமானவர்களையும், கலவரத்தை தூண்டி விட்டவர்களையும், கண்டறிந்து, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு, அவர் கூறினார்[3].

 

எனக்கு குல்லாதான் அழகாக இருக்கிறது - மௌலானா அகிலேஷ் - இப்படி வர்ணித்தது ஒரு நாளிதழ்தான்!

எனக்கு குல்லாதான் அழகாக இருக்கிறது – மௌலானா அகிலேஷ் – இப்படி வர்ணித்தது ஒரு நாளிதழ்தான்!

காலை 10 மணிக்கு வந்து  இரண்டு- மூன்று மணி  நேரம்  பார்த்து  விட்டுச் சென்ற   கதை[4]: மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறுகையில், “”கலவரம் குறித்து உ.பி., அரசை ஏற்கனவே எச்சரித்து இருந்தோம். ஆனால், உ.பி., அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டது,” என்றார்.  முகாம்களில் முசாபர் நகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, மற்ற முகாம்களுக்கும், பிரதமர், சோனியா, ராகுல் ஆகியோர் சென்றனர். அங்குள்ள மக்களுக்கும், அவர்கள் ஆறுதல் கூறினர். காங்., தலைவர் சோனியா, பெண்கள் இருந்த பகுதிகளுக்கு சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ராகுலும், தடுப்பு வேலிக்குள் புகுந்து, பாதுகாப்பு வளையத்தை கடந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிலர் கொடுத்த கடிதங்களையும் வாங்கிக் கொண்டார்[5]. முகாம்களில் இருக்கும் பெரும்பாலானோர், “நாங்கள், நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கி விடுகிறோம். வீடுகளுக்கு செல் வதற்கு பயமாக உள்ளது. வி.ஐ.பி.,க் களுக்கு தான், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்றனர். இதற்கிடையே, முசாபர் நகர் கலவரப் பிரச்னையை எழுப்பி, உ.பி., சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன. கலவரத்தை தூண்டி விட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பா.ஜ., – எம்.எல்.ஏ., சங்கீத் சோமைத் தேடி, அவருக்கு சொந்தமான பல இடங்களில், போலீசார், நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

 

 

On the Muzaffarnagar-Shahpur road is the Tavli madrasa. Now home to over 300 Muslims who have fled from their villages after the outbreak of recent communal violence, it is one among the many makeshift relief camps that dot the district’s landscape. It is here Shamshad Chaudhary piercingly asked Congress vice-president, Rahul Gandhi, accompanying Prime Minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi, on a visit to the riot-affected areas on Monday morning, “Why did you — the Congress party and Jawaharlal Nehru — stop us from going away in 1947? We have been reduced to strangers in our own land.” As Mr. Chaudhary recounted to The Hindu[6], Mr. Gandhi told him what had happened was ‘very wrong’. “You are not strangers … The first responsibility is with the State government, but we will do whatever we can to help.” முசபர்பூர்-ஷாபூர் சாலையில் தவ்லி மத்ரஸா உள்ளது. அதில் சுமார் 300 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இங்குதான் சம்ஷத் சௌத்ரி, “எதற்காக காங்கிரஸ் – நேரு எங்களை 1947ல் போகாமல் தடுக்கவேண்டும். எங்கள் நாட்யிலேயே நாங்கள் அறியாதவர்களாகி விட்டோம்”, என்று சோனியா, ராகுல் முதலியோரைப் பார்த்துக் குத்தும் மாதிரி கேட்டார். அப்பொழுது, ராகுல், “நீங்கள் புதியவர்கள் அல்லர். முதலில் பொறுப்பு மாநில அரசிற்கு இருக்கிறது, இருப்பினும் நாங்கள் முடிந்த உதவியைச் செய்கிறோம்.”, என்றார்.

 

தி  ஹிந்துவின்  பாரபட்சமான   செய்தி   வெளியிடும்  போக்கு: தி ஹிந்து வழக்கம் போல, ஆனால், மிகவும் மோசமாக, ஒருதலைப் பட்சமாக, முஸ்லிம்களின் குறைகளை மட்டும் செய்தியாக போட்டுள்ளது[7]. ஒரே வரியில் ஜட்-கிராமத்தவர்களையும் (இந்துக்களையும்) பார்த்தனர் என்று ஸ்டைலாக போட்டிருந்தது, கேவலமாக இருந்தது, “Through their quick three-hour run through Muzaffarnagar — stopping over at relief camps for displaced Muslims, meeting Jat villagers, and visiting the family of the slain IBN7 journalist, Rajesh Verma — India’s top political leadership got a sense of the deep chasms that have developed among communities in western Uttar Pradesh.”. இந்த “முஸ்லிம்-ஜட்” வார்த்தை ஜாலம் என்னவென்று புரியவில்லை. பிஜேபி கலவரத்தைப் பற்றி நிர்ணயித்துள்ளது என்று, ஏதோ ஒப்புக்கு ஒரு செய்தி போட்டிருக்கிறது. பீஜேபி காரர்கள்ள் எப்பட்டி நேரில் செல்லாமலே கருத்துக் கூறமுடியும். தி ஹிந்துவுக்கு சரியான கொழுப்புதான், கிண்டல்தான், நக்கல்தான்[8]. நாளைக்கு அதையும் சொல்லிக் காட்டுவார்கள். ஆர்.பி.சிங்கும் சோனியாவின் விஜயத்தை செக்யூலராக மாற்ற, எல்லோருரையும் பார்த்தாகி விட்டது என்று பேட்டியளித்துள்ளார்[9].

 

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மன்மோஹன்சிங்,   சோனியா,   ராகுல்  விஜயம்   –   முஸ்லிம்களை  மட்டும்  சந்தித்துச்  சென்றனர்: மேலே குறிப்பிட்டப்படி, இத்தகைய குற்றச்சாட்டு, நிச்சயமாக மக்களிடம் எழுந்தது. ஏனெனில், அவர்கள் சென்றதெல்லாமே, முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகள் தாம். அதாவது, சிறுபான்மையினராக ஜட்-மக்கள் இருந்திருக்கலாம். இதனால், கூட சென்றிருந்த உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.சிங்கும் சோனியாவின் விஜயத்தை செக்யூலராக மாற்ற, எல்லோருரையும் பார்த்தாகி விட்டது என்று பேட்டியளித்துள்ளார். “முஸ்லிம்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர், என்று கூறுவது பொய்யாகும். பர்வலா மற்றும் காஜாபூர் ஜட்-மக்கள் நிறைந்த கிராமங்கள் ஆகும். அங்கு அவர்கள் மக்களிடம் பேசியுள்ளனர். ராஜேஸ் வர்மாவின் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். ஆகையால், ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் பார்த்தனர் என்பது சரியில்லை.. எல்லோரையுயும் இந்தியர்கள் என்ற முறையில் பார்த்தனர்”, என்ற விளக்கம் கொடுத்தார்[10]. ஆனால், இவ்வாறு குறிப்பிட்டதால், அவர்களுக்கே தாழ்வு மனப்பான்மை வந்திவிட்டதோ என்னமோ. “முஸ்லிம்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர், எங்களை கண்டுகொள்ளவில்லை”, என்றால், அவர்கள் யார் என்பதை முதலில் அவர்களே அடையாளம் கொள்ளவில்லை என்றாகிறது[11].

 

நான் அப்பாக்குத் தப்பாமல் பிறந்த மகனாக்கும் - அவர் முல்லா என்றால், நான் மௌலானா!

நான் அப்பாக்குத் தப்பாமல் பிறந்த மகனாக்கும் – அவர் முல்லா என்றால், நான் மௌலானா!

சுப்ரீம்  கோர்ட்டில்  .பி.,   அரசு  பதில்: கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி, உ.பி., அரசு மற்றும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  மாநில அரசு அளித்துள்ள பதிலில், “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது, இயல்புநிலை திரும்பியுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள பதிலில், “வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக, கலவர பகுதிகளுக்கு, 78 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்னா நைனா, சும்மா நம்பளை சதாய்க்கிறியே, இன்னும் என்னத்தான் வேண்டும்?

என்னா நைனா, சும்மா நம்பளை சதாய்க்கிறியே, இன்னும் என்னத்தான் வேண்டும்?

செக்யூலரிஸ   /   மத  சார்பின்மை  சுற்றுலாசென்ற மூவர்: முக்தார் அப்பாஸ் நக்வி பா.ஜ., துணை தலைவர், “விரைவில் லோக்சபா தேர்தல் வரப் போகிறதல்லவா? அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங், கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளார். மதச்சார்பு என்ற போர்வைக்குள் மறைந்துள்ள சில, சர்வாதிகார அமைப்புகள் தான், இந்த கலவரத்தை தூண்டி விட்டுள்ளன. அசம் கான்  சமாஜ்வாதி மூத்த தலைவர் கலவரம் நடந்த பகுதிகளுக்கு, பிரதமரும், காங்., தலைவரும், “மதச்சார்பின்மை சுற்றுலாசென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த  சுற்றுலாவால் எந்த பயனும் இல்லை.  வன்முறைக்கு ஆளானவர்களின் வலிகள், இவர்களின் பயணத்தால், ஆறப்போவது இல்லை”, என்று விமர்சித்துள்ளார்.

 

எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்

எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்

பாதிக்கப்பட்டவர்களுக்குஆறுதல்கூறுவதுஎன்பது, வெறும்நாடகமே –கூறியது மாயாவதி: மாயாவதி, “ பகுஜன் சமாஜ் தலைவர் சமாஜ்வாதி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதைத் தவிர, மத்திய அரசின் வேறு எந்த நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாகாது. பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்பது, வெறும் நாடகமே”, என்றார். ஆனால், தூண்டிவிட்டுப் பேசிய நான்கு முச்லிம் தலைவர்களுள் இருவர் இவரது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

 

வேதபிரகாஷ்

© 17-09-2013


[1] The riot-affected Jat community in the Muzaffarnagar district and the adjoining areas are reportedly unhappy with Prime Minister Manmohan Singh, Congress president Sonia Gandhi and party vice president Rahul Gandhi for ignoring them and visiting the Muslim dominated areas and relief camps. Reports on Tuesday said that the Jats are offended with the trio’s selective approach to the riot-hit victims and alleged disparity from them, despite Sonia and Rahul making a brief stop at Bawali and Khanjpura, which are said to be the Jat dominated villages.

http://zeenews.india.com/news/uttar-pradesh/jats-offended-with-pm-sonia-rahul-s-selective-approach-to-muzaffarnagar-riot-victims_877016.html

[2] Reports also suggest that even the Muslims have complained over the huge security deployed in the area for the VVIP visit, whereas they were given no security and left to defend themselves when the violence hit their lives.

http://zeenews.india.com/news/uttar-pradesh/jats-offended-with-pm-sonia-rahul-s-selective-approach-to-muzaffarnagar-riot-victims_877016.html

[10] Facing adverse comments from all quarters over certain reports which claimed that the Congress leaders had visited only Muslim camps in riot-hit areas, the minister state for home affairs R P N Singh, who accompanied Prime Minister Manmohan Singhand UPA chairperson Sonia Gandhi to Muzaffarnagar on Monday, said they met people of all communities, listen to their woes and tried to share their pain and grief during their visit to the riot-hit areas. Terming the claim as “false” and part of “vicious propaganda”, Singh on Tuesday said the leaders including Prime Minister, Sonia Gandhi, Rahul Gandhi and other members of the team including him went to Barwala and Khajapur (predominantly Jat villages) and talked to villagers there. They also met family members of the journalistRajesh Verma who was killed during the communal clash. “It’s completely wrong to say that we met people of only one community. We visited villages of all communities….Most importantly, these are all our fellow Indians”, said Singh while clarifying reports which were based on villagers’ accounts

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

மே 8, 2013

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

சோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].

Sonia-dances-with-tribals

இளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Sonia-dances-with-tribals-AP

ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.

UPA Chairperson Sonia Gandhi dances with tribal women at Kutagudam in Khammam district of Andhra Pradesh

ராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;

Sonia-dances-with-tribals2

உண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].

Saurav Ganguly dance - naked or otherwise

சர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா?: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள்  ஆடுவது நிர்வாணம் ஆகுமா? உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்?

Suraj Takur with Soniaசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்!

Suraj Takur with Rahul shaven neatlyராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul shavenராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul bearededஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல!

© வேதபிரகாஷ்

08-05-2013


[3] Congress president Sonia Gandhi dances with tribal women during the National Convention on Empowerment to Tribal Women at AICC office in New Delhi

http://www.hindustantimes.com/photos-news/Photos-India/Sonia/Article4-783351.aspx

[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

[5] Congress president Sonia Gandhi is on a week-long private visit to the Lakshadweep Islands to celebrate the New Year along with her family, officials said here on Friday. The UPA (United Progressive Alliance) Chairperson arrived here on Thursday from Goa along with her mother Paola Maino, daughter Priyanka Gandhi and son-in-law Robert Vadra, they said.

http://www.thehindu.com/news/sonia-gandhi-in-lakshadweep-for-new-year/article74004.ece

[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ஓகஸ்ட் 10, 2012

தனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்?

ராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],

  • 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,
  • 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,
  • 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.

ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்! உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும்? 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.

உள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்தா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான்! கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.

பிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை?: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவிக்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.

உச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியாகாங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.

Photos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]

© வேதபிரகாஷ்

10-08-2012


 


[1] The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.

[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.

[3] The years from 1979 to 1985 witnessed political instability in the stale, collapse of state governments, imposition of President’s Rule, sustained, often violent, agitation, frequent general strikes, civil disobedience campaigns which paralyzed all normal life for prolonged periods, and unprecedented ethnic violence. The central government’s effort to hold a constitutionally mandated election to the state assembly in 1983 led to its near total boycott, a complete breakdown of order, and the worst killings since 1947 on the basis of tribal linguistic and communal identities. Nearly 3,000 people died in statewide violence. The election proved to be a complete failure with less than 2 per cent of the voters casting their votes in the constituencies with Assamese majority. The 1983 violence had a traumatic effect on both sides, which once again resumed negotiations in earnest. Finally, the Rajiv Gandhi government was able to sign an accord with the leaders of the movement on 15 August 1985. All those foreigners who had entered Assam between 1951 and 1961 were to be given full citizenship, including the right to vote; those who had done so after 1971 were to be deported; the entrants between 1961 and 1971 were to be denied voting rights for ten years but would enjoy all other rights of citizenship. A parallel package for the economic development of Assam, including a second oil refinery, a paper mill and an institute of technology, was also worked out. The central government also promised to provide ‘legislative and administrative safeguards to protect the cultural, social, and linguistic identity and heritage’ of the Assamese people. The task of revising the electoral rolls, on the basis of the agreement, was now taken up in earnest. The existing assembly was dissolved and fresh elections held in December 1985. A new party, Assam Gana Parishad (AGP), formed by the leaders of the anti-foreigners movement, was elected to power, winning 64 of the 126 assembly seats. Prafulla Mahanta, an AASU leader, became at the age of thirty-two the youngest chief minister of independent India. Extreme and prolonged political turbulence in Assam ended, though fresh insurgencies were to come up later on, for example that of the Bodo tribes for a separate state and of the secessionist United Liberation Front of Assam (ULFA).

http://indiansaga.com/history/postindependence/accord.html

[4] And in the 1983 elections, people did not come out to cast their votes but the Congress put up their candidates. They only got 15 votes, 20 votes. And the election machinery declared that they were elected.

[9]  As per the clause of the Assam Accord, the Central Home Ministry is the nodal ministry to implement the Accord. Therefore, the Home Ministry should come forward. For the last few years, the Home Ministry has not come forward with sincerity. So the implementation of the Assam Accord was delayed. On the other hand, there is an insurgency problem in the Northeast, which creates a lot of trouble. In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[10] In 1996, the day we took over the government, the chief secretary, the home commissioner, finance commissioner, all fled.

[11] BJP sources maintained the NDA government led by Atal Bihari Vajpayee could not implement the Assam Accord during its six-year tenure from 1998-2004 as Trinamool Congress, which was an ally, was opposed to it.

http://news.outlookindia.com/items.aspx?artid=771526

[12] the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983, was scrapped by the Supreme Court and as per the Accord detection would be done on the basis of the Foreigners’ Act of 1946 which puts the onus of proving citizenship on the individual.

http://newindianexpress.com/nation/article586268.ece

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

ஓகஸ்ட் 7, 2012

முஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா?

சோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.

சோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.

நவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.

சந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.

ஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.

சொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ?

பிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்!

சர்தார்படேல் (1875-1950) அவர்களின் 136வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

ஒக்ரோபர் 31, 2011

சர்தார்படேல் (1875 1950 அவர்களின 136வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார்படேல் 136வதுபிறந்தநாள்கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 136வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. நேரு மட்டும் ஒப்புக் கொண்டிருந்தால், காஷ்மீரப் பிரச்சினையே இல்லாமல் சர்தார் செய்திருப்பார். ஆனால், அமைதிய்ல்லாத பகுதிகள் என்ரு அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவம் அமைதி காக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ராணுவத்தின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று உமர் அப்துல்லா சொல்ல, அதைப் பற்றி தேவையில்லாத விவாதத்தை வைத்துள்ளனர்.


இப்பொழுதுள்ள இந்தியா உருவானது: சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2011, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர். அந்த சிலை வைக்க தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பொழுதைய கவர்னர் ராம்மோஹன் ராவ் சொல்ல அனுமதி கொடுத்தார் என்று விழா ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் நினைவு கூர்ந்தார்.


சர்தார் படேல் எவ்வாறு ஹைதரபாதை வெற்றிக் கொண்டார்? ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரத்தை அளித்தாலும், அதனுடன் பல பிரச்சினகளையும் சேர்த்து அளித்தார்கள். ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொள்வேன் அல்லது தனது ராஜ்யம் முன்றாவது டொமினியனாக செயல்படும் என்று அறிவித்தார். இந்தியாவின் மீது போர் தொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். வழக்கம் போல அந்நிய சக்திகள் இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து கொண்டிருந்தன. ஆனால், சர்தார் “ஆபரேஷன் போலோ” என்ற திட்டத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, நிஜாமைப் பணியச் செய்தார்.

லட்சத்தீவை எவ்வாறு இந்தியாவுடன் சேர்த்தார்? லட்சதீவுகளிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். விட்டிருந்தால் அவர்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்திருப்பர் அல்லது பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடியிருக்கும். ஆனால், பிரச்சினை தோன்றுவதற்கு முன்னமே, இந்தியக் கடற்படையினரிடம் சொல்லி, அத்தீவுகளில் இந்தியக் கொடிகளை ஏற்றச் சொன்னார்.


இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். முந்தைய அதிகாரி பி. ராகவன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திய விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), நாராயணசுவாமி (பிரபல ஆடிட்டர்) என்று பலர் கலந்து கொண்டனர்.


கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.


சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2011