Archive for the ‘அரேபியா’ Category

யூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)

ஜூலை 9, 2017

யூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)

PM Modis gifted Israeli PM 2 sets of copper plates believed to have been inscribed in 9-10th century

04-07-2017 [செவ்வாய் கிழமை இரவு] பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, மோடி கொடுத்த மாதிரிசெப்பேடுகள் நினைவுபரிசு: மோடி மூன்று நாட்கள் [4 முதல் 6 வரை] அரசு முறை பயணமாக மோடி 03-07-2017 [திங்கட்கிழமை] சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமான நிலையத்துக்கு நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்து, இத்தகைய மரியாதை மோடிக்குக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 04-07-2017 [செவ்வாய் கிழமை இரவு] வழங்கினார். இந்தியாவிலுள்ள நீண்ட யூத வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பரிசு குறித்து பிரதமர் அலுவக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை[1], என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், “9-10ம் நூற்றாண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது”, என்றுதான் டுவிட்டரில் சொல்லப்பட்டுள்ளது[2].

PM Modis gifted Israeli PM - second set of copper plates believed to have been inscribed in 9-10th century

மாதிரிசெப்பேடுமுதல் தகடின் விவரங்கள்: இதில் முதல் காப்பர் தகடு யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் [பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்] வழங்கப்பட்டது[3]. பின்னாளில் ஷிங்க்ளியின் இளவரசனாக ஜோசப் ராபன் முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், “யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது”, என்றுதான் உள்ளது[4]. ஷிங்க்ளிக்கு சரிநிகரான யூதர்களின் விருப்பமான மற்றும் கலாச்சார ஸ்தலமாக ரங்கனூர் விளங்கியது. இந்த காப்பர் தகடுகள் கொச்சியின் மட்டான்சேரியில் உள்ள பாரதேசி சினகோக் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது[5]. பின்னர், காலப்போக்கில் அங்கிருந்த யூத மக்கள் கொச்சினுக்கும் மலபார் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். வழிவழியாக இந்த இடப்பெயர்வு நடந்துள்ளது[6]. ஷிங்க்லி பகுதியும், கிராங்கனூர் பகுதியும் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் என்று இப்போதும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, உள்ளூர் யூதர்கள் ஒருதடவை ஒரு கைப்பிடி மண்ணை சவப்பெட்டியில் போட்டு, ஷிங்ளி / கிராங்கனூரை “இரண்டாவது ஜெருஸலேம்” என்று சொன்னதாக உள்ளது[7]. இந்தப் பகுதி இப்போதுள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[8].

Benjamin Netanyahu-Modi - Jews copper plate

மாதிரிசெப்பேடுஇரண்டாம் தகட்டின் விவரங்கள்: இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்து விளக்குகிறது. அதுமட்டுமின்றி கொல்லம் மற்றும் மேற்கு ஆசியாவுடனான இந்திய வர்த்தகத்தையும் விளக்குகிறது. மேற்கு ஆசிய வர்த்தகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சோராஸ்டிரியன்களுடன் யூதர்களும் வர்த்தகம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[9].  இந்தியா மற்றும் இந்தியாவுடனான கடல் கடந்த வாணிகம் எனும் போது, அது இருவழி வியாபாரம் என்பதை கவனிக்க வேண்டும். முதலில், இடைக்காலம் வரை, இந்தியா தான் கடல் வாணிகத்தில் கோலோச்சி வந்தது. பிறகு, அரேபியர்கள், வளைகுடா மார்க்கத்தை அடைத்து, வரிகேட்டு, கடற்கொள்ளை அடித்து, வணிகர்களைக் கொடுமைப் படுத்திய நிலைகளில், இந்தியாவுடன் நேரிடையான வாணிகத்தில் ஈடுபடத்தான், இந்த்யாவிற்ற்கு கடல்வழி தேடப்பட்டது. அவ்வாறுகண்டுபிடித்தப் பிறகு, ஐரோப்பியர்கள் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. இதனால், இந்திய வணிகம் தென்கிழக்காசிய நாடுகளுடன் சுருங்கியது. கிளாடியஸ் பச்சனன் என்பவர், இந்த செப்பேடுகளைப் பற்றி 1806ல் ஆய்ந்தபோது, தனக்கு மூலப்பட்டயங்கள் / செப்பேடுகள் கிடைக்கவில்லை என்றும், மாதிரிகள் தான் கிடைத்தன, அவற்றை மலங்காரா சர்ச் பிஷப்பிடம் கொடுத்தார் என்று 1806 / 1811ல் குறிப்பிட்டுள்ளார். ஆக, 19ம் நூற்றாண்டிலேயே, பச்சனன் பார்த்தது, மாதிரி தான். பிறகு, அம்மாதிரியிலிருந்து பல மாதிரிகள் தயாரிக்கப் பட்டதாகவும், அவை படித்தறிவதற்காக, பல ஐரோப்பிய அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் எழுதியுள்ளார்[10].

Modi met Benjamin Netanyahu

கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் சர்ச்சிலிருந்து இந்த தகடுகள் 2017ல் கொண்டு வரப்பட்டுள்ளன: இந்த தகடுகள் கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தத் தகடுகளுடன் கேரளாவிலுள்ள யூத சமூகத்தைச் சேர்ந்த பழமையான தோரா சுருளையும் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார். தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும், “கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் சர்ச்சிலிருந்து இந்த தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன”, என்றுள்ளதால், இப்பொழுதும் – 2017ல், அதே போல இன்னொரு மாதிரி, போலி தயாரிக்கப்பட்டது என்பது உண்மையாகிறது. ஆக, –

  1. 1811ம் ஆண்டிற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்,
  2. 1811 முதல் 2016 வரை தயாரிக்கப் பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்,
  3. 2017ல் தயாரிக்கப்பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்.

என்று பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. மற்றும், அத்தகைய ஆட்களை, தாமிர பட்ட்யங்கள், செப்பேடுகள் தயாரிக்கும் தொழிற்நுட்பமும் அவர்களிடம் இருக்கிறது, இருந்து வருகிறது என்றும் தெரிகிறது.

PM Modis gifted Israeli PM - scroll

மோடிநேதன்யாகு பரஸ்பர பரிசுகள் பகிர்வு: இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு பிரிவாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை  பரிசாக அளித்தார்[11]. அதாவது, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய வீரர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளனர்[12]. பெஞ்சமின் நேதன்யாகு தனது இல்லத்தில் பிரதமர் மோடிக்கு அளித்த தனிப்பட்ட விருந்தின் போது இந்த புகைப்படத்தை பரிசாக அளித்தார்[13]. பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].  இப்பொழுதைய அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு என்று கோணத்தில் மட்டும் தான், இந்த இந்திய-இஸ்ரேல் தொடர்புகளை காணமுடியும். விவசாய-யுக்திகள், பொருளாதார பரஸ்பர உதவிகள் முதலீடுகள் பிறகு வருகின்றன. இவற்றை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் மற்றும் இந்திய-இந்து விரோதிகளும் சேர்ந்து கொண்டு, வலுமையான பிரச்சாரத்தை முடுக்கி விடுவார்கள் என்பதையும் கவனித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-07-2017

Modi presented to Benjamin Netanyahu - Metal crown covered in gold sheets from South India

[1] தி.இந்து.தமிழ், இஸ்ரேல் பிரதமருக்கு மோடி அளித்த நினைவுப் பரிசு, பிடிஐ, Published: July 5, 2017 15:35 ISTUpdated: July 5, 2017 15:52 IST.

[2] They comprise two different sets of copper plates that are believed to have been inscribed in 9-10th Century, the PMO tweeted.

The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.

[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/article9750122.ece

[4] According to traditional Jewish accounts, Joseph Rabban was later crowned as the Prince of Shingli, a place in or equated with Cranganore.

[5] மாலைமலர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி, பதிவு: ஜூலை 05, 2017 06:03

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி அளித்த கேரள பரிசு.. மனம் நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்!, Posted By: Devarajan, Published: Wednesday, July 5, 2017, 13:48 [IST].

[7] Local Jews once placed in each coffin a handful of earth from Shingli/Cranganore that was remembered as a holy place and a “second Jerusalem.”

http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece

[8] http://tamil.oneindia.com/news/international/pm-narendra-modi-gifts-two-sets-relics-from-kerala-israel-pm-benjamin-netanyahu-288538.html

[9] http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/05060301/1094596/PM-Modi-gifts-two-sets-of-relics-from-Kerala-to-Netanyahu.vpf

[10] Cladius Buchanan recorded as follows: “But there are other ancient documents in Malabar, not less interesting than the Syrian Manuscripts. The old Portuguese historians relate, that soon after the arrival of their countrymen in India, about 300 years ago, the Syrian Bishop of Angamalee (the place where I now am) deposited in the Fort of Cochin, for safe custody, certain tablets of brass, on which were engraved rights of nobility, and other privileges granted by a Prince of a former age ; and that while these Tablets were under the charge of the Portuguese, they had been unaccountably lost, and were never after heard of. Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates ; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. The Learned in general, and the Antiquarian in particular, will be glad to hear jthat these ancient Tablets have been recovered within this last month by the exertions of Lieutenant- (Colonel Macauley, the British Resident in Travan-core, and are now officially deposited with that Officer. ‘ The Christian Tablets are six in number. They are composed of a mixed metal. The engraving on the largest plate is thirteen inches long, by about four broad. They are closely written, four of them on both sides of the plate, making in all eleven pages. On the plate reputed to be the oldest, there is writing perspicuously engraved in nail-headed or triangular- headed letters, resembling the Persepolitan or Babylonish. On the same plate there is writing in another character, which is supposed to have no affinity with any existing character in Hindoo* tan. The grant on this plate appears to be witnessed by four Jews of rank, whose names are distinctly engraved in an old Hebrew character, resembling the alphabet called the Palmyrene: and to each name is prefixed the title of ‘ Alagen,’ or Chief, as the Jews translated it. — It may be doubted, whether there exist in the world many documents of so great length, which are of equal antiquity, and in such faultless preservation, as the Christian Tablets of Malabar. — The Jews of Cochin indeed contest the palm of antiquity: for they also produce two Tablets, containing privileges granted at a remote period; of which they presented to me a Hebrew translation. As no person can be found in this country who is able to translate the Christian Tablets, I have directed an engraver at Cochin to execute a copper-plate facsimile of the whole, for the purpose of transmitting copies to the learned Societies in Asia and Europe. The Christian and Jewish plates together make fourteen pages. A copy was sent in the first instance to the Pundits of the Shanscrit College at Trichiar, by direction of the Rajah of Cochin ; but they could not read the character.* — From this place I proceed to Cande-nad, to visit the Bishop once more before I return to Bengal.’

Claudius Buchanan, Two Discourses preached before the University of Cambridge, on the commencement of Subday July 1, 1810 and a sermon before the Society of Missions to Africa and the East; at their tenth anniversary. June 12, 1810. To which added Christian Researches in Asia, T. Cadell and W. Davies, in the Strand; and J. Deighton, Cambridge, London, 1811, pp.121-122.

In footnote, he recorded, “Most of the Manuscripts which I collected among the Syrian Christians, I have presented to the University of Cambridge; and (they are now deposited in the Public Library of that University, together with the copper-plate fac-similes of the Christian and Jewish Tablets.” (Ibid. P.122). Thus, it is evident that there were no originals of the said copper plates and thus, the available / claimed copper plates have no historical value.

[11] தினத்தந்தி, இந்திய வீரர்கள் இடம் பெற்ற புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நேதன்யாகு, ஜூலை 05, 2017, 09:38 PM

[12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/07/05213841/Netanyahu-gifts-Indian-soldiers-photo-to-Modi.vpf

[13] விகடன், இஸ்ரேலில் மோடிக்கு நினைவுப் பரிசு!, Posted Date : 01:50 (06/07/2017); Last updated : 10:28 (06/07/2017)

[14] http://www.vikatan.com/news/world/94506-modi-receives-a-memorial-prize-from-benjamin-netanyahu.html

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

Saudi colour code for Companies4

சவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.

Saudi colour code for Companies

நிதாகத் என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Saudi colour code for Companies3
முஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:

  1. நீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
  2. மஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  3. சிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  4. பச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

Saudi colour code for Companies2

புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.

Saudi colour code for Companies5

படிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.

  • எண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].
  • 2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].
  • 2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு! இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.
  • 2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].
  • பிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
  • இப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

Saudi scavenging

 

சவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்

ஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].

Two Arabs scavenging for food

 

இரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்!

5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

How workers live in Saudi Arabia

 

வெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்

இந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].

Saudi scavenging2

 

சவுதியில் குப்பை அள்ளும் பணி

மலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்?: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.

Saudi scavenging3

 

சவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்

செக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.

Saudi Arabia and its flag

 

சவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்

முஸ்லீம்களின் விஷமத்தனம் –  சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்! பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.

 

வேதபிரகாஷ்

14-04-2013


[2] Nitaqat classifies all private Saudi firms into four categories-Blue, Yellow, Green and Red-based on their size and the number of Saudi nationals they have recruited.

[3] The fear psychosis is bogus. What has happened in Saudi Arabia is not an overnight development.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

[4] From the early Eighties, all Gulf Cooperation Council (GCC) countries have been talking about localisation, in terms of employment opportunities.

[5] In 2003, government had said it would reduce the numbers of expat workers to 20 per cent of its total population in 10 years.

[6] As long ago as 2004, Saudi’s Shura Council stipulated that by 2007, 70 per cent of the country’s workforce would have to be locals to reduce dependence on foreign workers, recapture remittances that would otherwise flow out of the country, and reinvest.

[7] Saudi Arabia’s Shura Council passed a bill on July 8, 2009, to improve legal protections for the estimated 1.5 million domestic workers in the country, but the measure still falls short of international standards, Human Rights Watch said today. The bill goes from the Shura Council, an appointed consultative body, to the cabinet, which can make further changes before it is enacted into law. http://www.hrw.org/news/2009/07/10/saudi-arabia-shura-council-passes-domestic-worker-protections

[12] Minister of State for External Affairs E. Ahamad, who is in Dushanbe to attend the Asian Development Dialogue, met Saudi Arabia’s Deputy Minister of Foreign Affairs Prince Abdulaziz bin on Friday and expressed the hope that Riyadh would not take any step that would adversely impact expatriates in the Kingdom.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[13] Overseas Indian Affairs Minister Vayalar Ravi had on Thursday said Indian Ambassador to Saudi Arabia had been asked to take up the issue with Riyadh and its Labour Ministry and ensure that there would be no job loss for Indians on a mass scale. In 2011, 2.28 million Keralites were working abroad. Of them, some 570,000 were in Saudi Arabia, a report said.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[14] The press is full of figures of how Saudi Arabia over the last four months has deported more than 200,000 foreigners staying illegally, how they are stamping exit visas post haste in a manner that will deny those being turned away a chance to work in any other Gulf country, how foreigners are locking themselves up in rooms without water and food fearing arrest or worse.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

Saudi Arabia and its flag

பிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

  • ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].

என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:

  • சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].
  • அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]
  • வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]
  • கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]
  • சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.

Saudi royal life

இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

Saudi women

சவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன?: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்?”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்!

Saudi women protesting

சவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.

Saudi worker

இஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.

Saudi workerker striking

இலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.

வேதபிரகாஷ்

14-04-2013


[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.

[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=681845

[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.