சாஹித்பல்வா, கருணாநிதி குடும்ப விவகாரம், 2ஜி தொடர்பு: ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய தொழில் அதிபரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் குற்றம் சாட்டி இருந்தார். அவருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்[5]. பிரபல தொழிலதிபரிடம், ஐபிஎல் சூதாட்டம் குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தவிருந்த நிலையில் அதை ஷிண்டே நேரடியாக தலையிட்டு தடுத்ததார் என்பது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அவரது இந்த புகார் டெல்லி அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அந்த தொழில் அதிபர், 3ஜி ஊழலில் சிக்கியுள்ள சாஹித் பல்வா என்றும் சொல்லப் படுகிறதுசீவருக்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை சுப்ரமணிய சுவாமி தனது வழக்கில் எடுத்துக் காட்டியுள்ளார். இதைத் தவிர குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு இங்கிங்கு “போஸ்டிங்” தரவேண்டும் என்று சிட்டுக்சளைக் கொடுத்து, சிபாரிசு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கும் ஷிண்டேவிற்கும் வேறுபாடு இருந்தது தெரிந்த விஷயமே என்றும், இது பற்றி தான் ஷிண்டே அமைச்சகம், பிரதமமந்திரி முதலியோரிடம் தெரிவித்துள்ளாதாகவும் கூறியுள்ளார்.
ஷிண்டே மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்: ஆர். கே. சிங், ஷிண்டேவின் மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்கள்:
HERE IS YOUR 10-POINT CHEAT-SHEET FOR THIS BIG STORY[7]:
|
சிறுபான்மைசமூதாயவாலிபர்களைகைதுசெய்யும்போதுகவணமாகஇருங்கள்: முதல்மந்திரிகளுக்குஷிண்டேஎச்சரிக்கை[8]: 2014ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சிறுபான்மை சமூதாயத்தினரை இழுக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, சிறுபான்மை சமூதாயத்தை சேர்ந்த வாலிபர்களை கைது செய்யும் போது மிகவும் கவணமாக இருங்கள் என்று மாநில முதல் -மந்திரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மையினர் என்பவர்கள் குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை. குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் உடனடியாக விடுவித்து விடுங்கள் என்று நாங்கள் அனைத்து மாநில முதல் மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்று ஷிண்டே கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களில் உள்ள ஒரு ஆலோசனை குழுவை நியமிக்க ஆராய்ந்து வருவதாக ஷிண்டே கூறியுள்ளார். இந்த குழு பயங்கரவாத தடுப்பு சட்ட வழிகாட்டுதல் படி அமைக்கப்படும் என்று ஷிண்டே கூறியுள்ளார்.
ஷிண்டேவிற்கு எதிராக பிரதமமந்திரிக்கு மோடியின் கடிதம்: மாநிலங்களுக்கு, இத்தகைய அறிவுரைக் கடிதத்தை அனுப்பியுள்ள ஷிண்டேவிற்கு எதிராக பிரதமமந்திரிக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், குற்றவாளிகளை மதரீதியில் காண்பது என்பது தவறு. கிரிமினல் சட்டம் என்பது அனைவருக்கும் பொது, அதில் பாரபடசம் காண்பது என்பது இயலாது, தவறும் ஆகும் என்று எடுத்துக் காட்டியுள்ளார். “மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே, கடந்த வாரம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் உள்ள சிறை களில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், எந்தவித விசாரணையும் இல்லாமல், பல ஆண்டுகளாக வாடுவதாகவும், அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண, ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். அவர், சிறுபான்மை சமூகத்துக்கு மட்டும், உள்துறை அமைச்சரல்ல; நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும், உள்துறை அமைச்சர். எனவே, சிறுபான்மையினர் நலனை மட்டும் பார்க்காமல், மற்றவர்களின் நலனிலும், அவரை கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துங்கள். தேர்தலில், சிறுபான்மை சமூகத்தின் ஓட்டுகளை பெறுவதற்காக, இப்படி அரசியல் நாடகம் நடத்துகிறார். அவரின் கருத்துக்களும், ஆலோசனைகளும், இதற்கு முன், எந்த ஒரு அமைச்சராலும் கூறப்படாதவை. அவரின் கருத்துக்கள் விசித்திரமாக உள்ளன. இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.குற்றத்தை யார் செய்தாலும், குற்றம் குற்றமே. இதில், மதம், எங்கு வந்தது? மதத்தை அடிப்படையாக வைத்தா, ஒருவரை குற்றவாளியா, இல்லையா என்பதை முடிவு செய்வது? நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக, சுஷில் குமார் ஷிண்டே, கருத்து தெரிவித்துள்ளார்”, இவ்வாறு, அதில், நரேந்திர மோடி எழுதியுள்ளார்[9].
உளறுவாயரா அல்லது அவ்வாறு நடிக்கிறாரா?: ஷிண்டே உஷாராண உள்துறை அமைச்சராக இல்லாமல், தூங்குமூஞ்சி – உளறுவாய் அமைச்சராகத்தான் இருந்துள்ளார்:
- கான்பூரில் குண்டு வெடிப்பு நடந்தபோது, கங்கணாவுடன் சேர்ந்து கொண்டு சிடி வெளியீட்டு விழாவில் இருந்தார்.
- ஜெயாபச்சன், அசாம் வன்முறை, கலவரம் பற்றி கேள்வி எழுப்பியபோது, அதெல்லாம் சினிமா விசயமல்ல என்று எஅக்கல் அடித்தார்.
- பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்து தீவிரவாத இயக்கங்கள் என்று சொல்லி, வாபஸ் வாங்கினார்.
- சரத் பவார் பிரதமராக வந்தால் மகிழ்ச்சி என்றார், பிறகு நான் அவ்வாறு சொல்லவில்லை என்று ஜகா வாங்கினார்.
எது எப்படியாகிலும் காங்கிரஸில் ஏகப்பட்ட “ஜோக்கர்கள்” (திக் விஜய் சிங், ஷகீல் அஹமது, பேனி பிரசாத் வர்மா) போல விஷமிகள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள், ஆனால், தமது பதவிக்குக் கூட மரியாதை கொடுக்க மாட்டார்கள் என்ற தெரிகிறது.
வேதபிரகாஷ்
© 16-01-2014
[1] http://articles.timesofindia.indiatimes.com/2014-01-10/india/46065736_1_home-minister-sushilkumar-shinde-dawood-ibrahim
[2] http://www.ndtv.com/article/india/home-minister-shinde-lying-about-fbi-help-to-catch-dawood-former-home-secretary-rk-singh-470790
[4] Chhota Shakeel, the chief lieutenant of Dawood, told dna: “Let him (Shinde) try his best. I will only tell him Lage Raho Munnabhai.” Shakeel himself is believed to be based in Pakistan, but away from his boss, who is suspected to be hiding in the Swat Valley which is under the Taliban’s control. The Inter-Services Intelligence (ISI) is believed to be taking extra precautions to keep Dawood’s location a top secret.
[6] http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article5577648.ece
[7] http://www.ndtv.com/article/cheat-sheet/home-minister-shinde-engulfed-by-dawood-controversy-10-points-470925