Archive for the ‘கூலி’ Category

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

ஜூன் 18, 2016

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

jisha- poster - police looking at

28-04-2016லிருந்து 16-06-2016 வரை நடந்த முக்கிய நிகழ்சிகள்[1]: காலக்கிரமமாக இக்கொலை விசயத்தில் நடந்தவை கீழ் கொடுக்கப்பட்டுள்ளன:

ஏப்ரல் 28, 2016 அன்று கொலைசெய்யப்பட்ட ஜிஷா வழக்கு தேவையில்லாமல், அரசியல் ஆக்கப் பட்டு திசைத் திருப்பட்டது.

29-04-2016 அன்று போலீசார் வீட்டை சோதனையிட்டு, உடலை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆலப்புழா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது.

மே.2, 2016லிருந்து, சமூக வலைதளங்களில் இக்கொலை விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டது.

03-05-2016 அன்று கேரள ஐஜி இக்கொலையில் ஒருவன் தான் சம்பந்தப் பட்டிருக்கிறான் என்கிறார்.

04-05-2016 அன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ஜிஷாவின் உடலில் 38 காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிய வந்தது.

05-05-2016 அன்று புலன் விசாரணை குழு மாற்றியமைக்கப்பட்டு, டி.எஸ்.பி ஏ.பி. ஜிஜிமோன் பொறுப்பேற்றார்.

06-05-2016 அன்று ADGP பத்மகுமார் புலன் விசாரணை முக்கியமாக நடந்து கொண்டிருப்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் அறிவித்தது.

07-05-2016 அன்று கேரள மாநில பெண்கள் கமிஷன், கொலையைப்பற்றிய முக்கிய விவரத்தைக் கொடுத்ததால், தீபாவின் நண்பன் பற்றி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

08-05-2016 அன்று பெங்களூரில் இருந்த ஒரு ஆளை பிடித்து கொண்டு வந்து, போலீஸ் பாதுகாப்பில் விசாரித்தனர்.

12—05-2016 அன்று கொலையாளிக்கு பற்களில் பிரச்சினை உள்ளது, பற்கள் சீராக இல்லை என்பதனை, மற்ற ஆதாரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

13-05-2016 அன்று போலீஸார் உள்ளூர் அரசியல்வதியின் மீது, இக்கொலை விசயமாக ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

14-05-2016 அன்று ஜிஷா கொலை வழக்கை மூடி மறைக்க, பிரயத்தனம் நடக்கிறது, என்று ஜிஷாவின் உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

15-05-2016 அன்று ஜிஷாவின் தந்தை, ஜிஷா ஒருவனுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தாள். அவன், அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். அதுதான், அவளது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

25-05-2016 அன்று, LDF அரசு பதவிக்கு வந்தவுடன் போலீஸ், புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

26-05-2016 அன்று, ஆட்சிக்கு வந்த LDF அரசு, ADGP சந்தியா தலைமையில், புது குழுவை அமைத்தது.

30-05-2016 அன்று, புதிய SIT குழு அமைக்கப்பட்டிருப்பதனால், இவ்வழக்கு CBI விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.

02-06-2016 அன்று, விசாரணைக்குப் பிறகு, சந்தேகிக்கப் படும் கொலையாளியின் படம் வெளியிடப்பட்டது.

05-06-2016 அன்று புதிய DGP லோக்நாத் பெஹ்ரா ஜிஷாவின் வீட்டை சோதனையிட்டார்.

10-06-2016 அன்று ஜிஷா வீட்டின் அருகில் உள்ள ஒரு உரம் விற்பனை செய்யும் கடையிலிருந்து, CCTV வீடியோ பதிவு கிடைக்கப்பெற்றது. அதில் சந்தேகிக்கப் படும் கொலையாளி ஜிஷாவைப் பின்தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

11-06-2016 அன்று பி.பி.தங்கச்சன் என்பவரின் மகன் விசாரிக்கப்பட்டான்.

16-06-2016 அன்று அமிர் உல் இஸ்லாம் கைது செய்யப்பட்டான்.

Jisha murderer - Amir ul Islamஅரசியல் ஆக்கப்பட்ட ஜிஷா வழக்கு: தேர்தல் நேரத்தில் 28-04-2016 மற்றும் 03-05-2016 தேதிகளில் இரண்டு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அதில் ஜிஷா கொலை செய்யப்பட்டாள். இரண்டிலுமே சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள். நிச்சயமாக, காங்கிரஸ், அது, நிர்பயா போல பெரிதாகி, தங்களது வெற்றியை பாதித்து விடும் என்று அமுக்கப் பார்த்தனர். அதனால், அந்நேரத்தில் வழக்கைக் குழப்பப் பார்த்தனர். ஜிஷா உறவினர்களை விசாரித்தது, தீபாவைப் பிடித்து வைத்தது போன்ற செயல்கள் மூலம் மிரட்டப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். கேரள சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் ஷிஜா கொலை வழக்கை கையில் எடுத்து அவர்கள் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமித்து குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-மந்திரி பினராய் விஜயன், சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி சந்தியாவை நியமித்தார்.

Jisha murderer - Amir ul Islam- arrestedசந்தியா மறுவிசாரணை செய்து வழக்கை முடித்தது: சந்தியா ஜிஷாவின் பெற்றோர் மற்றும் அவரது வீடு அருகில் வசித்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களும் மறு ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஷிஜாவின் உடல் அருகே ஒரு செருப்பு அனாதையாக கிடந்ததை கண்டுபிடித்தனர். அந்த செருப்பில் கான்கிரீட் கலவை கரையும், ரத்தக்கறையும் படிந்திருந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போலீசார் செருப்பில் படிந்திருந்த ரத்தக்கறை, ஷிஜாவின் ரத்தம் என்பதை கண்டுபிடித்தனர்[2]. இதையடுத்து அந்த செருப்பு யாருடையது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்[3]. இதற்காக தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து செருப்பு கடைகளிலும் விசாரித்தனர். இதில் ஒரு செருப்பு கடையில் இருந்து அசாம் வாலிபர் ஒருவர் இந்த செருப்புகளை வாங்கி இருந்தது தெரியவந்தது[4]. இதைத்தொடர்ந்த அந்த அசாம் வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஷிஜாவை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர். இது தமிழ் ஊடகங்கள் கொடுத்த சுருக்கமான விசயம்.

jisha_home4தமிழ் ஊடகங்கள் கதையை சுருக்கமாக வெளியிட்டது: கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்[5]. கைது செய்யப்பட்டுள்ள அமியுல் இஸ்லாம் (24) இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த போது, தமிழக எல்லையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்[6]. அமியுல் இஸ்லாம், ஜிஷாவின் வீட்டுக்கு அருகே செயல்பட்டு வந்த ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலாத்காரக் கொலையை செய்துவிட்டு, அவர் அஸ்ஸாம் தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாவூரில் நடந்த இந்த படுபாதகச் செயலில் தனக்கு தொடர்பிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது[7].

jisha_5DSP சந்தியா வழக்கை மறுபடியும் விசாரித்தது: தலித் வகுப்பைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான 29 வயது ஜிஷா கடந்த ஏப்ரல் 28ம் தேதி அவரது வீட்டில் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் ஜிஷாவுக்கு நன்று அறிமுகமானவர்கள் என்பது தெரிய வந்தது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பி. சந்தியா தலைமையிலான தனிப்படையினர், அமியுல் இஸ்லாமின் நண்பர்களை கைது செய்து காவலில் வைத்திருந்தனர். அவர்கள் மூலமாக அமியுல் இஸ்லாமை தொடர்பு கொண்டு, ஜிஷா கொலை வழக்கு விசாரணை முடிந்து விட்டதாகக் கூறச் செய்தனர். இதை நம்பி, இஸ்லாமும் அஸ்ஸாமில் இருந்து புறப்பட்டு கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் கேரள எல்லையைத் தொடுவதற்குள் தமிழக எல்லையிலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

jisha-house-footwear- left by Amir ul Islamகட்டிட வேலை செய்பவன் தான் கொலையாளி என்று சோதனைகள் மூலம் தெரியவந்தது: ஆரம்பத்திலிருந்தே, வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யும் ஆட்கள் மீது சந்தேகம் இருந்ததால், அவர்களை கண்காணித்து, விசாரித்து வந்தது[8]. ஜிஷா வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கடையில் இருந்த படம் பிடிக்கும் கேமராவில் [CCTV], அவள் அடையாளம் தெரியாத, ஒரு ஆளுடன் செல்வது தெரியவந்தது. போலீசார் அது கொலைகாரனாக இருக்கலாம் என்று சந்தேகித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அத்தகைய ஒரு புதிய ஆளைப் பார்த்ததாக விசாரணையின் போது கூறினர். இருப்பினும் முகம் சரியாக தெரியவில்லை என்பதனால், அடையாளம் காண புலனாய்வு குழு ஆராய்ந்து வந்தது[9]. திருவனந்தபுரத்தில் இருக்கும் அரசு தடவியல் பரிசோதனைக் கூடத்தில், இருந்த ரத்தம், உமிழ்நீர் மற்றும் விந்து முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கையைக் கொடுத்தது. அதில், செருப்பின் மீதுள்ள ரத்தம் ஜிஷாவுடையது என்று கூறியது. செருப்பில் மேலும் இருந்த துகள்கள் முதலியவற்றை வைத்து, அதனை உபயோகப்படுத்தியவன், கட்டிட வேலை செய்பவன் என்று உறுதிபடுத்தியது[10]. பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, ஒரு கட்டிட வேலை செய்பவன் தான் வாங்கியிருக்கிறான் என்றும் உறுதிபடுத்தியது.

jisha_suspect-caught by the police

DNA மாதிரிகள் ஊர்ஜிதம் கொலைகாரனை செய்தன: சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து[11] விசாரணை குழு கொச்சியில் இரண்டு தினங்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்துள்ளது[12].  இந்த வழக்கில் மொத்தம் 3 சந்தேக நபர்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் ஆவார். மற்றொருவர் அந்த பெண்ணின் மிக நெருங்கிய உறவினராவார்[13].  இஸ்லாமின் டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவை ஜிஷாவின் உடலில் இருந்த ரத்தம் மற்றும் எச்சில் மாதிரியுடன் ஒத்துப் போனதை அடுத்து, அமியுல் இஸ்லாம் குற்றவாளி என்பது நிரூபணமானது[14]. அதே மாதிரி, DNA மாதிரிகள் சோதனையியட்டபோது, அமிர் உல் இஸ்லாமின் மாதிரிகளுடன் ஒத்துப் போனதாலும், மற்ற ஆதாரங்களாலும், அவன் தான் கொலையாளி என்று தீர்மானிக்கப்பட்டது[15].காவல்துறை நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை இஸ்லாம் ஒப்புக் கொண்டுள்ளான். விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுகளை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

18-06-2016

[1] http://english.mathrubhumi.com/news/kerala/jisha-murderer-held-confesses-to-crime-1.1135362

[2] http://english.mathrubhumi.com/news/kerala/a-pair-of-chappals-that-led-the-police-to-the-assailant-english-news-1.1135454

[3] மாலைமலர், திருவனந்தபுரம் சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபர் கைது, பதிவு: ஜூன் 16, 2016 09:59.

[4]கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. எனவே அவரை பலர் கூட்டாக கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/16095921/1019205/Thiruvananthapuram-law-student-molested-and-murder.vpf

[5] http://www.vikatan.com/news/india/65246-main-suspect-in-rape-murder-of-kerala-dalit-woman.art

[6] தினமணி, கேரள மாணவி ஜிஷா கொலை: முக்கியக் குற்றவாளியை சினிமா பாணியில் பொறி வைத்துப் பிடித்த காவல்துறை, By dn, First Published : 16 June 2016 03:12 PM

[7] http://www.dinamani.com/india/2016/06/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/article3485538.ece

[8] http://english.mathrubhumi.com/news/kerala/migrant-workers-were-under-suspicion-from-the-beginning-english-news-1.1135473

[9] http://www.newindianexpress.com/states/kerala/Jisha-murder-Cops-get-crucial-video-evidence/2016/06/11/article3476469.ece

[10] http://english.manoramaonline.com/news/just-in/bloodstains-footwear-jisha-house-matched-victim-kerala-murder.html

[11] தினத்தந்தி, கேரளாவில் தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST

[12] தமிழ்.வெப்துனியா, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கு: சந்தேக குற்றவாளி கைது!, வியாழன், 16 ஜூன் 2016 (11:21 IST)

[13] http://www.dailythanthi.com/News/India/2016/06/16111153/Kerala-Police-Arrest-First-Suspect-in-Jisha-RapeMurder.vpf

[14] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/jisha-murder-suspected-killer-nabbed-116061600020_1.html

[15] http://english.mathrubhumi.com/news/kerala/dna-results-confirm-assam-native-to-be-the-murderer-english-news-1.1135429

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: கேரளப்பிரச்சினையா, இந்தியப் பிரச்சினையா?

Saudi colour code for Companies4

சவுதிக்கான உள்ளூர் பிரச்சினை: எகிப்தில் ஏற்பட்ட புரட்சி மற்றும் பக்கத்து நாடுகளில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சவுதி அரேபியா பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் வராமல் தடுக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. சொந்த நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய கொள்கை முடிவுகள் கொண்டுவர சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரசின் புள்ளியியல் மற்றும் தகவல் தொடர்பு துறை எடுத்த கணக்கெடுப்பில் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் 12.2 சதவீதம் அளவில் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 39 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்காக புதிய தொழிலாளர் கொள்கை வகுக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் விஷயத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். உள்நாட்டினருக்கு அதிக அளவில் வேலை கொடுக்கும் வகையில் இது இருக்கும்.

Saudi colour code for Companies

நிதாகத் என்றால் என்ன – ஏன் அமூல் படுத்த வேண்டும்: உணவகம், சிறு கடைகள், சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை, சவுதி அரேபியா நாட்டினர் தவிர்த்து, பிற நாட்டினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், இனிமேல், இவ்வகை சிறுதொழில்களை சொந்த நாட்டினர் மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக, “நிதாகத்’ என்ற பெயரில் புதிய சட்டத்தை, சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ளது.நேற்று முதல், புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என, ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Saudi colour code for Companies3
முஸ்லீம் சட்டத்தின்படி பிரிக்கப்படும் வகைகள்[1]: “நிதாகத்” தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறைப்படி, சவுதி கம்பெனிகள் நான்காகப்பிரிக்கப்படுகின்றன[2]:

  1. நீளம் – அல்லது “VIP” வகை கம்பெனிகள் உலகம் முழுவதும் இணைதளத்தின் மூலமாக ஊழியர்கள் / வேலையாட்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
  2. மஞ்சள் – 23-02-2013 வரை தனது நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  3. சிவப்பு – 26-11-2011 வரை தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியும். இருக்கின்ற அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்களின் விசாக்கள் ஆறுமாதங்களில் முடிந்துவிடும் போது, அவற்றை புதுப்பிக்க முடியாது.
  4. பச்சை – சவுதிமயமாக்குதல் என்ற கொள்கையின் படி, மஞ்சள் மற்றும் சிவப்பு கம்பெனிகளினின்று, அயல்நாட்டு ஊழியர்கள் / வேலையாட்கள் வெளியேறிய பிறகு, உள்ளூர்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

Saudi colour code for Companies2

புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறை: சவுதி அரேபியா “நிதாகத்” என்ற புதிய தொழிலாளர் கொள்கை அல்லது வேலைகள் பிரிப்புமுறையை (Nitaqat’ (classification in jobs) / new labour policy ‘Nitaqat’ ) கொண்டுவருகின்றனர் என்றால், அதற்கு இந்தியாவோ, மற்றவரோ, அங்கு வேலை செய்யும் இந்தியர்களோ ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது. ஒரு கம்பெனியில் / தொழிற்சாலையில் வேலை செய்கிறர்கள். ஏதோ காரணங்களுக்காக, எஜமானன்-சேவகன், முதலாளி-தொழிலாளி, என்ற ரீதியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலே சேவகன்-தொழிலாளி தனது வேலையை மாற்றிக் கொள்ளவேண்டியத்தான்.

Saudi colour code for Companies5

படிப்படியாக வேலைப்பிரிப்பு முறை அமூலுக்கு எடுத்து வந்தது: இம்முறைப்பற்றி இப்பொழுதுதான் தெரியவந்துள்ளது என்பது ஒரு பெரிய மோசடி-ஏமாற்று வேலை ஆகும்[3]. தெரிந்துதான் இந்தியர்கள் (முஸ்லீம்கள், கேரளத்தவர், மலையாளிகள்) சென்றனர். செல்லவைத்தவர்களும் கோடிகளை அள்ளியுள்ளனர்.

  • எண்பதுகளினின்றே வளைகுடா ஒத்துழைப்பு மைய நாடுகள் வெளிநாட்டு [Gulf Cooperation Council (GCC) countries] வேலைக்காரர்களைக் குறைக்க வேண்டும் உள்ளூர்வாசுகளுக்கு வேலைத்தரவேண்டும் என்று கொள்கைகளை திட்டமிட்டு வந்துள்ளன[4].
  • 2003லஏயே அரசு 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலையாட்களை 20%மாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. அதாவது, 80% வெளியே போகவேண்டியதுதான்[5].
  • 2004லிலேயே சவுதியின் சூரா கவுன்சில் 70% வேலை உள்ளூர்வாசிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது[6]. அதாவது, 30% தான் வெளிநாட்டவர்களுக்கு! இல்லையென்றால், சவுதியினின்று வெளியேறும் பணம் பிடிக்கப்பட்டு உள்ளூர் முதலீட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும். அதாவது, வெளியாட்களுக்கு அந்தளவு சம்பளம் குறையும், குறைக்கப்படும்.
  • 2009ல் அதற்கான மசோதா எடுத்துவராப்பட்டது[7].
  • பிறகு 2011ல் சட்டத்தையும் நிறைவேற்றியது.
  • இப்பொழுது ஆறுமாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

Saudi scavenging

 

சவுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்கள் – பச்சை, சிவப்பு, நீளம்

ஆசியர்கள், இந்தியர்கள், பேண்கள் கொடுமைப்படுத்தப் படுவது: ஆசியப்பெண்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றனர் என்று பற்பல செய்திகள் வெளிவந்தன. மனித உறிமைகள் மீறல் அறிக்கையிலும் வெளிக்காட்டப் பட்டன[8]. தமிழில் கூட வெளியிடப்பட்டுள்ளது[9]. ஆனால், ஏர்பஸ்ஸில் 300-400 என்று இந்தியப்பெண்களே தங்களது முடிச்சு-மூட்டைகளோடு அமீரக விமானநிலையங்களில் எத்தனையோ தடவைப் பார்த்திருக்கலாம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எப்படி நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் உள்ளன[10]. இருப்பினும் இந்தியர்கள் சென்றுதான் உள்ளனர்[11].

Two Arabs scavenging for food

 

இரு சவுதி வேலையாட்கள் குப்பைத் தொட்டியில் உணவைத் தேடுகின்றனராம்!

5 லட்சம் பேருக்கு வேலை போகும்: இந்த புதிய சட்டத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வரும், ஏழு லட்சம் சிறு நிறுவனங்களில், 84 சதவீத நிறுவனங்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழ்கள் கூறுகின்றன. இல்லையேல், அந்த நிறுவனங்களில், அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரையாவது வேலைக்கு நியமிக்கவேண்டும்.னைதில் ஒன்றும் தவறில்லையே. இதனால், கேரளாவின், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. இது தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்தால், வேலையிழப்பவர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

How workers live in Saudi Arabia

 

வெளிநாட்டு வேலையாள் தங்கியுள்ள இடம்

இந்திய அரசியல்வாதிகளின் பங்கு: தற்போது எழுந்துள்ள இந்த “புதிய பிரச்னை” குறித்து, கேரள முதல்வர், உம்மன் சாண்டி, பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார். அதில், “சவுதி அரேபியாவில், கேரளாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் பல வேலைகளை செய்து வருகின்றனர்; அவர்களின் நலன்களை காக்க வேண்டும்” என, தெரிவித்துள்ளார். ஆலோசனைஇதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி கூறுகையில், “சவுதி அரேபியாவில் எழுந்துள்ள பிரச்னை குறித்து, அந்நாட்டிற்கான இந்திய தூதர், பாகித் அலி ராவிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்,” என்றார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இ.ஏ.அஹமது, சவுதி அரேபியாவின் வெளியுறவு துணை அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல் ஆஜீஸை துஸான்பேயில் சந்தித்தபோது (28-03-2013) இந்திய குடிபெயர்ந்தவர்களுக்கு பாதிக்காமல், ரியாதில் உள்ள சவுதி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று நம்பிக்கைத் தெரிவித்தார்[12]. “ஆஹா, அதற்கென்ன, இந்தியர்களுக்காக நாங்கள் எப்பொழுதும் நன்றானதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். நான் ஊருக்குச் சென்றதும், தொழிலாளர் துறையிடம் இதை சொல்லிவிடுகிறேன்”, என்று வாக்குறுதி கொடுத்தார். 2011 கணக்குப்படி, உலகம் முழுவதும் கேரளத்தவர் சுமார் 23 லட்சம் (2.28 million Keralites) இருக்கின்றனராம், அதில், 570,000 பேர் மட்டும் சவுதியில் உள்ளனராம்[13]. ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக 200,000 பேர் இருக்கின்றனர் என்று குறிப்பிடுவதில்லை[14].

Saudi scavenging2

 

சவுதியில் குப்பை அள்ளும் பணி

மலப்புரத்திலிருந்து அனுப்பப்பட்ட முஸ்லீம்கள் எதற்காக சென்றனர்?: கேரளத்தவரை, மலையாளத்தவரை இப்படி லட்சக்கணக்கில் இந்தியாவிலிருந்து வெளியே போ என்று யாரும் சொல்லவில்லை. மலப்புரம் மாவட்டம் “முஸ்லீம்களுக்காக” என்று நம்பூதிரிபாடு தாரை வார்த்துக் கொடுத்தபோதுதான், முஸ்லீம்கள் அதிக அளவில் சவுதிக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து மற்றவர்கள் சவுதிக்குச் சென்றல் காசு வரும் என்று ஆசைப்பட்டு மற்றவர்கள் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதிகமாக சென்றது முஸ்லீம்கள் தான். முஸ்லீம்கள் அல்லாதவர்கள் கூட முஸ்லீம்களாக மாறினர், மாற்றப்பட்டனர், முஸ்லீம் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டனர் போன்ற உண்மைகள் ஏராளமாக உள்ளன.

Saudi scavenging3

 

சவுதியில் குப்பை அள்ளும் பணியாட்கள்

செக்யூலரிஸ-கம்யூனலிஸப் பிரச்சினைகளும் வேடங்களும்: கம்யூனலிஸப் பிரச்சினையை செக்யூலரிஸமாக்குவது, செக்யூலரிஸப் பிரச்சினையை கம்யூனலிஸமாக்குவது என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது, சித்தாந்தவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதில் பாதிக்கப்படுவது இந்துக்கள், பயனடைவது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். இந்த சூழ்ச்சிதான் இங்கு நடக்கிறது, கேரள முஸ்லீம் மற்றும் கிருத்துவ அமைச்சர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு, தாராளமாக இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர். பயனடையப் போவது யார் என்று பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும் 2014 தேர்தல் என்பதால், 2013ல் என்ன நடந்தாலும், அதனை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள “செக்யூலரிஸ”ப் போர்வையில், அவர்கள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள்.

Saudi Arabia and its flag

 

சவுதி அரேபியாவும், அரசௌ சின்னமும்

முஸ்லீம்களின் விஷமத்தனம் –  சவூதிவாழ் இந்தியர்களுக்கு ஆப்புசீவிய மியன்மார் பெளத்த தீவிரவாதிகள்[15]: “எண்ணெய் வளமிக்க சவூதி அரசு 500,000 பர்மிய முஸ்லிம்களுக்கு வேலையுடன் கூடிய அகதிகள் குடியுரிமையை வழங்குவதாகக் கடந்த வாரம் அறிவித்தது”, சரிதான் என்று சொல்லிவிட்டு, “….சவூதியின் இந்தத் திடீர் முடிவுக்கு மறைமுகக் காரணம் மியான்மர் பவுத்த தீவிரவாதிகள் என்று கூட ஒரு கோணத்தில் சொல்லலாம்”, என்று முடிவுக்கு வந்துள்ளதில் தான் விஷயம் வெளிப்படுகிறது. சவுதி அரேபியாவிற்கு பௌத்தத் தீவிவாதிகள் செல்லப்போகின்றனராம், இப்படியும் சில முஸ்லீம்கள், இணைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, மியன்மாரில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அவதிக்குள்ளாகின்றானர். அதனால், மியன்மார் முஸ்லீம்கள் சவுதிக்குச் செல்லலாம் என்றால், பௌத்தர்களும் அங்கு செல்ல தீர்மானித்துள்ளனராம். இதனால், இணைத்தள ஜிஹாதிகள், பௌத்தத் தீவிரவாதிகள் செல்கின்றனர் என்று பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்! பர்மாவில் ஏன் முஸ்லீம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கு மற்ற காரணங்களும் இருக்கின்றன[16]. பௌத்தர்கள் கொடுமைப் படுத்திய புகைப்படங்களை திரித்து[17], முஸ்லீம்கள் பௌத்தர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறாற்கள், கொல்லப்படுகிறார்கள் என்று திரித்து புகைப்படங்களை வெளியிட்டு, அதன்மூலம் அஸ்ஸாமில் தூண்டி விட்டு கலவரம் நடத்தினர்[18]. ஆகஸ்டு 2012ல் மும்பையில் இதையும் ஒரு சாக்காக[19] வைத்துக் கொண்டு ராஸா அகடெமி நடத்திய ஊர்வலத்தை மாற்றி[20], கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர்[21]. ஒருவேளை, அதே முறையை இதிலும் பின்பற்றுகிறார்களோ என்னமோ.

 

வேதபிரகாஷ்

14-04-2013


[2] Nitaqat classifies all private Saudi firms into four categories-Blue, Yellow, Green and Red-based on their size and the number of Saudi nationals they have recruited.

[3] The fear psychosis is bogus. What has happened in Saudi Arabia is not an overnight development.

http://newindianexpress.com/opinion/article1533803.ece

[4] From the early Eighties, all Gulf Cooperation Council (GCC) countries have been talking about localisation, in terms of employment opportunities.

[5] In 2003, government had said it would reduce the numbers of expat workers to 20 per cent of its total population in 10 years.

[6] As long ago as 2004, Saudi’s Shura Council stipulated that by 2007, 70 per cent of the country’s workforce would have to be locals to reduce dependence on foreign workers, recapture remittances that would otherwise flow out of the country, and reinvest.

[7] Saudi Arabia’s Shura Council passed a bill on July 8, 2009, to improve legal protections for the estimated 1.5 million domestic workers in the country, but the measure still falls short of international standards, Human Rights Watch said today. The bill goes from the Shura Council, an appointed consultative body, to the cabinet, which can make further changes before it is enacted into law. http://www.hrw.org/news/2009/07/10/saudi-arabia-shura-council-passes-domestic-worker-protections

[12] Minister of State for External Affairs E. Ahamad, who is in Dushanbe to attend the Asian Development Dialogue, met Saudi Arabia’s Deputy Minister of Foreign Affairs Prince Abdulaziz bin on Friday and expressed the hope that Riyadh would not take any step that would adversely impact expatriates in the Kingdom.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[13] Overseas Indian Affairs Minister Vayalar Ravi had on Thursday said Indian Ambassador to Saudi Arabia had been asked to take up the issue with Riyadh and its Labour Ministry and ensure that there would be no job loss for Indians on a mass scale. In 2011, 2.28 million Keralites were working abroad. Of them, some 570,000 were in Saudi Arabia, a report said.

http://www.thehindu.com/news/national/best-consideration-for-indians-saudi-minister/article4562483.ece

[14] The press is full of figures of how Saudi Arabia over the last four months has deported more than 200,000 foreigners staying illegally, how they are stamping exit visas post haste in a manner that will deny those being turned away a chance to work in any other Gulf country, how foreigners are locking themselves up in rooms without water and food fearing arrest or worse.

http://newindianexpress.com/opinion/article1533803.ece