Archive for the ‘செக்ஸ் படம்’ Category

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

ஜூன் 18, 2016

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

jisha- poster - police looking at

28-04-2016லிருந்து 16-06-2016 வரை நடந்த முக்கிய நிகழ்சிகள்[1]: காலக்கிரமமாக இக்கொலை விசயத்தில் நடந்தவை கீழ் கொடுக்கப்பட்டுள்ளன:

ஏப்ரல் 28, 2016 அன்று கொலைசெய்யப்பட்ட ஜிஷா வழக்கு தேவையில்லாமல், அரசியல் ஆக்கப் பட்டு திசைத் திருப்பட்டது.

29-04-2016 அன்று போலீசார் வீட்டை சோதனையிட்டு, உடலை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆலப்புழா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது.

மே.2, 2016லிருந்து, சமூக வலைதளங்களில் இக்கொலை விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டது.

03-05-2016 அன்று கேரள ஐஜி இக்கொலையில் ஒருவன் தான் சம்பந்தப் பட்டிருக்கிறான் என்கிறார்.

04-05-2016 அன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ஜிஷாவின் உடலில் 38 காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிய வந்தது.

05-05-2016 அன்று புலன் விசாரணை குழு மாற்றியமைக்கப்பட்டு, டி.எஸ்.பி ஏ.பி. ஜிஜிமோன் பொறுப்பேற்றார்.

06-05-2016 அன்று ADGP பத்மகுமார் புலன் விசாரணை முக்கியமாக நடந்து கொண்டிருப்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் அறிவித்தது.

07-05-2016 அன்று கேரள மாநில பெண்கள் கமிஷன், கொலையைப்பற்றிய முக்கிய விவரத்தைக் கொடுத்ததால், தீபாவின் நண்பன் பற்றி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

08-05-2016 அன்று பெங்களூரில் இருந்த ஒரு ஆளை பிடித்து கொண்டு வந்து, போலீஸ் பாதுகாப்பில் விசாரித்தனர்.

12—05-2016 அன்று கொலையாளிக்கு பற்களில் பிரச்சினை உள்ளது, பற்கள் சீராக இல்லை என்பதனை, மற்ற ஆதாரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

13-05-2016 அன்று போலீஸார் உள்ளூர் அரசியல்வதியின் மீது, இக்கொலை விசயமாக ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

14-05-2016 அன்று ஜிஷா கொலை வழக்கை மூடி மறைக்க, பிரயத்தனம் நடக்கிறது, என்று ஜிஷாவின் உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

15-05-2016 அன்று ஜிஷாவின் தந்தை, ஜிஷா ஒருவனுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தாள். அவன், அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். அதுதான், அவளது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

25-05-2016 அன்று, LDF அரசு பதவிக்கு வந்தவுடன் போலீஸ், புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

26-05-2016 அன்று, ஆட்சிக்கு வந்த LDF அரசு, ADGP சந்தியா தலைமையில், புது குழுவை அமைத்தது.

30-05-2016 அன்று, புதிய SIT குழு அமைக்கப்பட்டிருப்பதனால், இவ்வழக்கு CBI விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.

02-06-2016 அன்று, விசாரணைக்குப் பிறகு, சந்தேகிக்கப் படும் கொலையாளியின் படம் வெளியிடப்பட்டது.

05-06-2016 அன்று புதிய DGP லோக்நாத் பெஹ்ரா ஜிஷாவின் வீட்டை சோதனையிட்டார்.

10-06-2016 அன்று ஜிஷா வீட்டின் அருகில் உள்ள ஒரு உரம் விற்பனை செய்யும் கடையிலிருந்து, CCTV வீடியோ பதிவு கிடைக்கப்பெற்றது. அதில் சந்தேகிக்கப் படும் கொலையாளி ஜிஷாவைப் பின்தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

11-06-2016 அன்று பி.பி.தங்கச்சன் என்பவரின் மகன் விசாரிக்கப்பட்டான்.

16-06-2016 அன்று அமிர் உல் இஸ்லாம் கைது செய்யப்பட்டான்.

Jisha murderer - Amir ul Islamஅரசியல் ஆக்கப்பட்ட ஜிஷா வழக்கு: தேர்தல் நேரத்தில் 28-04-2016 மற்றும் 03-05-2016 தேதிகளில் இரண்டு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அதில் ஜிஷா கொலை செய்யப்பட்டாள். இரண்டிலுமே சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள். நிச்சயமாக, காங்கிரஸ், அது, நிர்பயா போல பெரிதாகி, தங்களது வெற்றியை பாதித்து விடும் என்று அமுக்கப் பார்த்தனர். அதனால், அந்நேரத்தில் வழக்கைக் குழப்பப் பார்த்தனர். ஜிஷா உறவினர்களை விசாரித்தது, தீபாவைப் பிடித்து வைத்தது போன்ற செயல்கள் மூலம் மிரட்டப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். கேரள சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் ஷிஜா கொலை வழக்கை கையில் எடுத்து அவர்கள் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமித்து குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-மந்திரி பினராய் விஜயன், சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி சந்தியாவை நியமித்தார்.

Jisha murderer - Amir ul Islam- arrestedசந்தியா மறுவிசாரணை செய்து வழக்கை முடித்தது: சந்தியா ஜிஷாவின் பெற்றோர் மற்றும் அவரது வீடு அருகில் வசித்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களும் மறு ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஷிஜாவின் உடல் அருகே ஒரு செருப்பு அனாதையாக கிடந்ததை கண்டுபிடித்தனர். அந்த செருப்பில் கான்கிரீட் கலவை கரையும், ரத்தக்கறையும் படிந்திருந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போலீசார் செருப்பில் படிந்திருந்த ரத்தக்கறை, ஷிஜாவின் ரத்தம் என்பதை கண்டுபிடித்தனர்[2]. இதையடுத்து அந்த செருப்பு யாருடையது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்[3]. இதற்காக தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து செருப்பு கடைகளிலும் விசாரித்தனர். இதில் ஒரு செருப்பு கடையில் இருந்து அசாம் வாலிபர் ஒருவர் இந்த செருப்புகளை வாங்கி இருந்தது தெரியவந்தது[4]. இதைத்தொடர்ந்த அந்த அசாம் வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஷிஜாவை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர். இது தமிழ் ஊடகங்கள் கொடுத்த சுருக்கமான விசயம்.

jisha_home4தமிழ் ஊடகங்கள் கதையை சுருக்கமாக வெளியிட்டது: கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்[5]. கைது செய்யப்பட்டுள்ள அமியுல் இஸ்லாம் (24) இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த போது, தமிழக எல்லையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்[6]. அமியுல் இஸ்லாம், ஜிஷாவின் வீட்டுக்கு அருகே செயல்பட்டு வந்த ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலாத்காரக் கொலையை செய்துவிட்டு, அவர் அஸ்ஸாம் தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாவூரில் நடந்த இந்த படுபாதகச் செயலில் தனக்கு தொடர்பிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது[7].

jisha_5DSP சந்தியா வழக்கை மறுபடியும் விசாரித்தது: தலித் வகுப்பைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான 29 வயது ஜிஷா கடந்த ஏப்ரல் 28ம் தேதி அவரது வீட்டில் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் ஜிஷாவுக்கு நன்று அறிமுகமானவர்கள் என்பது தெரிய வந்தது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பி. சந்தியா தலைமையிலான தனிப்படையினர், அமியுல் இஸ்லாமின் நண்பர்களை கைது செய்து காவலில் வைத்திருந்தனர். அவர்கள் மூலமாக அமியுல் இஸ்லாமை தொடர்பு கொண்டு, ஜிஷா கொலை வழக்கு விசாரணை முடிந்து விட்டதாகக் கூறச் செய்தனர். இதை நம்பி, இஸ்லாமும் அஸ்ஸாமில் இருந்து புறப்பட்டு கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் கேரள எல்லையைத் தொடுவதற்குள் தமிழக எல்லையிலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

jisha-house-footwear- left by Amir ul Islamகட்டிட வேலை செய்பவன் தான் கொலையாளி என்று சோதனைகள் மூலம் தெரியவந்தது: ஆரம்பத்திலிருந்தே, வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யும் ஆட்கள் மீது சந்தேகம் இருந்ததால், அவர்களை கண்காணித்து, விசாரித்து வந்தது[8]. ஜிஷா வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கடையில் இருந்த படம் பிடிக்கும் கேமராவில் [CCTV], அவள் அடையாளம் தெரியாத, ஒரு ஆளுடன் செல்வது தெரியவந்தது. போலீசார் அது கொலைகாரனாக இருக்கலாம் என்று சந்தேகித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அத்தகைய ஒரு புதிய ஆளைப் பார்த்ததாக விசாரணையின் போது கூறினர். இருப்பினும் முகம் சரியாக தெரியவில்லை என்பதனால், அடையாளம் காண புலனாய்வு குழு ஆராய்ந்து வந்தது[9]. திருவனந்தபுரத்தில் இருக்கும் அரசு தடவியல் பரிசோதனைக் கூடத்தில், இருந்த ரத்தம், உமிழ்நீர் மற்றும் விந்து முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கையைக் கொடுத்தது. அதில், செருப்பின் மீதுள்ள ரத்தம் ஜிஷாவுடையது என்று கூறியது. செருப்பில் மேலும் இருந்த துகள்கள் முதலியவற்றை வைத்து, அதனை உபயோகப்படுத்தியவன், கட்டிட வேலை செய்பவன் என்று உறுதிபடுத்தியது[10]. பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, ஒரு கட்டிட வேலை செய்பவன் தான் வாங்கியிருக்கிறான் என்றும் உறுதிபடுத்தியது.

jisha_suspect-caught by the police

DNA மாதிரிகள் ஊர்ஜிதம் கொலைகாரனை செய்தன: சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து[11] விசாரணை குழு கொச்சியில் இரண்டு தினங்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்துள்ளது[12].  இந்த வழக்கில் மொத்தம் 3 சந்தேக நபர்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் ஆவார். மற்றொருவர் அந்த பெண்ணின் மிக நெருங்கிய உறவினராவார்[13].  இஸ்லாமின் டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவை ஜிஷாவின் உடலில் இருந்த ரத்தம் மற்றும் எச்சில் மாதிரியுடன் ஒத்துப் போனதை அடுத்து, அமியுல் இஸ்லாம் குற்றவாளி என்பது நிரூபணமானது[14]. அதே மாதிரி, DNA மாதிரிகள் சோதனையியட்டபோது, அமிர் உல் இஸ்லாமின் மாதிரிகளுடன் ஒத்துப் போனதாலும், மற்ற ஆதாரங்களாலும், அவன் தான் கொலையாளி என்று தீர்மானிக்கப்பட்டது[15].காவல்துறை நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை இஸ்லாம் ஒப்புக் கொண்டுள்ளான். விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுகளை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

18-06-2016

[1] http://english.mathrubhumi.com/news/kerala/jisha-murderer-held-confesses-to-crime-1.1135362

[2] http://english.mathrubhumi.com/news/kerala/a-pair-of-chappals-that-led-the-police-to-the-assailant-english-news-1.1135454

[3] மாலைமலர், திருவனந்தபுரம் சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபர் கைது, பதிவு: ஜூன் 16, 2016 09:59.

[4]கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. எனவே அவரை பலர் கூட்டாக கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/16095921/1019205/Thiruvananthapuram-law-student-molested-and-murder.vpf

[5] http://www.vikatan.com/news/india/65246-main-suspect-in-rape-murder-of-kerala-dalit-woman.art

[6] தினமணி, கேரள மாணவி ஜிஷா கொலை: முக்கியக் குற்றவாளியை சினிமா பாணியில் பொறி வைத்துப் பிடித்த காவல்துறை, By dn, First Published : 16 June 2016 03:12 PM

[7] http://www.dinamani.com/india/2016/06/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/article3485538.ece

[8] http://english.mathrubhumi.com/news/kerala/migrant-workers-were-under-suspicion-from-the-beginning-english-news-1.1135473

[9] http://www.newindianexpress.com/states/kerala/Jisha-murder-Cops-get-crucial-video-evidence/2016/06/11/article3476469.ece

[10] http://english.manoramaonline.com/news/just-in/bloodstains-footwear-jisha-house-matched-victim-kerala-murder.html

[11] தினத்தந்தி, கேரளாவில் தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST

[12] தமிழ்.வெப்துனியா, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கு: சந்தேக குற்றவாளி கைது!, வியாழன், 16 ஜூன் 2016 (11:21 IST)

[13] http://www.dailythanthi.com/News/India/2016/06/16111153/Kerala-Police-Arrest-First-Suspect-in-Jisha-RapeMurder.vpf

[14] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/jisha-murder-suspected-killer-nabbed-116061600020_1.html

[15] http://english.mathrubhumi.com/news/kerala/dna-results-confirm-assam-native-to-be-the-murderer-english-news-1.1135429

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

ஏப்ரல் 17, 2013

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

 

இளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்காரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.

 

கேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒரு காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது?

 

கருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

 

ராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா?”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.

 

உட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல அடித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம்.  இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.

 

கேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].

 

பி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

அசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].

 

வேதபிரகாஷ்

16-04-2013


[2] Interestingly, Rahul Gandhi’s visit coincided with the escalation of violence in the district after Premlal, a Youth Congress worker, was attacked by armed men. Group fighting within the Youth Congress has been cited as the reason behind the attack. Minor instances of violence were also reported from other parts of the state

[3] Further, he said MPs and MLAs should spend their Local Area Development fund for regional development in consultation with the panchayat members. Currently, it was not being done in accordance with the spirit of decentralisation of power, he added. Gandhi agreed with the members that some central schemes were not suited for all states.

[4] Sitting through an interactive session on ‘Democratic Decentralisation of Power and Participatory Planning’, Gandhi asked panchayat members if political parties consulted them before choosing candidates for elections. Interestingly, both Congress and CPM members answered in the negative.

[9] It’s turning out to be an affair to remember for Kerala Chief Minister Oommen Chandy, but for all the wrong reasons. His United Democratic Front government, which is clinging on to power by a slender majority, has suffered several setbacks in the last two years. But the latest blow has probably been the most lethal of all. An extra-marital affair and allegations of domestic violence littered the exit route of K B Ganesh Kumar, the lone MLA of Kerala Congress B from his Cabinet. Now, the challenge before Chandy is chooosing the right person to fill Ganesh’s shoes

[11] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

http://www.indianexpress.com/news/keralas-p-c-george-uncut-and-uncensored/1097825/

[12] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests. http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[15] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career

http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[16] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html

சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்!

ஏப்ரல் 15, 2013

சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்!

Women can drive or not in Arabia

சவுதி பெண்கள் காரோட்டுவது பற்றி இளவரசர் கருத்து: சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார்[1]. இதனால் வெளிநாட்டு வேலைக்காரர்களை குறைக்கலாம். சவுதி பெண்களை காரோட்ட அனுமதித்தால் சுமார் 500,000 வேலையாட்களைக் குறைத்து விடலாம்[2], இதனால் சமூக மற்றும் பொருளாதார பலன்களையும் அடையலாம் என்று டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்துள்ளார்[3].

Manal al Sarif with Driving licence

டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து ஹலாலா, ஹராமா?: இக்கருத்து, இஸ்லாமிய சூரா கவுன்சிலின் தீர்மானத்திற்கும், போட்டுள்ள பத்வாவிற்கு எதிரானதாகும். இருப்பினும் கருத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளதால், மதகுருமார்கள் ஒருவேளை அது ஹலாலா-ஹராமா என்ற சர்ச்சைரயில் ஈடுபடலாம்.

manal-al-sharif with child

அரசரின் ஆணையும்,  இளவரசரின் கருத்தும்: கடந்த வாரம் தான், அரசர் அப்துல்லா சட்டத்திற்குப் புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டு வேலையாட்கள் வெளியேற மூன்று மாத அவகாசம் கொடுத்திருந்தார்ளீப்பொழுது இளவரசர் இப்படி கூறுகிறார். அப்படியென்றால், இனி சவுதி இஸ்லாமிய பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 500,000 பேர்களுக்கு, அதுவும் வெளிநாட்டவர்களுக்கு வேலை போய்விடும். இனி அவற்றில் மலையாளிகள் எத்தனை, தமிழர் எத்தனை, சிங்களத்தவர் எத்தனை, அதில் முஸ்லீம்கள் எத்தனை என்றெல்லாம் விவாதங்கள் வந்து விடும்.

Manal al-Sharif arrested 2011

காரோட்டியதற்காக மனல் அல் ஷரீப் சிறையில்  அடைக்கப்பட்டார்: கடந்த வருடம் 2012, மனல் அல் ஷரீப் (Manal al-Sharif) என்ற பெண் காரோட்டியதற்காக, மே 21, 2011 அன்று கைது செய்யப்பட்டு தண்டனையாக ஒரு வாரம் சிறையில் அடைக்கப் பட்டாள்[4]. அப்பொழுதும், சவுதி சமூகமாற்ற ஆர்வலர்கள், பெண்கள் காரோட்டக் கூடாது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தனர்[5]. முன்னர் அரேபிய வியாபாரக் குழுமையமும் இக்கருத்தை வெளியிட்டிருந்தது[6]. மனல் அல் ஷரீப், அரசரிடம் முறையீடு செய்தாள்[7].

Saudi Arabia - women driving car- cartoon

முலைப்பால் ஊட்டுங்கள்,  ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Saudi Arabia - women driving car- warned as immoral

செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் போட்டுள்ள பத்வா: செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார். இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது. மேலும் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் அவர்களின் கற்பிற்கு களங்கம் ஏற்படும். கமல் சுபி என்ற இஸ்லாமிய அறிஞர் தனது அறிக்கையில், “பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால், விபச்சாரம் பெருகும், ஆபாசப்படம் உருவாகும், ஓரின புணர்ச்சி ஏற்படும், விவாகரத்து ஏற்படும்”, என்று விளக்கமும் கொடுத்திருந்தார்[8].

June 2016 onwards, women can drive in Saudi Arabia-2

பெண்கள் கூறும் பிரச்சினை: சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள். இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது[9], “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!

வேதபிரகாஷ்

15-04-2013

June 2016 onwards, women can drive in Saudi Arabia-3


[1] Saudi billionaire Prince Alwaleed bin Talal has indicated support of allowing women there to drive. He says that would help the kingdom’s campaign to cut down on the number of foreign workers. Saudi Arabia follows an ultraconservative interpretation of Islam and bans women from driving. “The question of allowing women to drive in Saudi Arabia will save more than 500,000 jobs in addition to the social and economic benefits,” the prince wrote today on his Twitter account. http://www.nzherald.co.nz/world/news/article.cfm?c_id=2&objectid=10877569

[3] Thousands of foreign workers have been fired from their jobs and then deported, part of a government campaign against foreigners who illegally reside and work in the kingdom. Last week King Abdullah gave workers three months to try to legalise their presence. There are more than 8 million foreign workers in Saudi Arabia.

[4] A young Saudi woman detained for more than a week for breaking the ultra-conservative kingdom’s ban on women driving has appealed to King Abdullah for her release, her lawyer said. “Manal al Sharif hopes that the king will order her release and close her file,” her lawyer, Adnan al Saleh said. Read more: http://www.thenational.ae/news/world/middle-east/jailed-saudi-female-driver-manal-al-sharif-appeals-to-king-abdullah-for-release#ixzz2QUWyfrvf
Follow us: @TheNationalUAE on Twitter | thenational.ae on Facebook
http://online.wsj.com/article/SB10001424127887324077704578362160166544782.html

[8] The well-known academic Kamal Subhi – has presented a new report to the country’s legislative assembly, the Shura. The aim was to get it to drop plans to reconsider the ban. The report contains graphic warnings that letting women drive would increase prostitution, pornography, homosexuality and divorce.

http://www.bbc.co.uk/news/world-middle-east-16011926