Archive for the ‘மோடி அரிசி’ Category

ரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா?

ஜூன் 16, 2016

ரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசிசெக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா?

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது

சந்திரசேகர ராவின் அன்பளிப்புகள்: சரி நாயுடு இப்படியென்றால், அந்த ராவ் சும்மா இருப்பாரா? ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா? ஏற்கெனவே தெலிங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர், பிரிவினைக்குக் கூட, அதாவது இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆந்திரா-தெலிங்கானா பிரிவினக்களுக்கு, அவர்கள் அதிகம் ஆதரித்தனர், இதனால், தெலிங்கானாவில், அவர்களது ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம், மேலும் பிரிவினைவாத சக்திகள் தங்களது வேலைகளை தீவிரமாக செய்வார்கள் என்று விவாதிக்கப்படும் வேளையில் இவர்கள் அடிப்படைவாதத்தை ஊக்கும் வரையில், ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று மற்ற தெலுங்கு பேசும் மக்கள் கவலையுடன் தான் இருக்கின்றனர்.

Ramzan mubarak - Modi wayபிஜேபியும், ரம்ஜானும், இப்தர் பார்டிகளும்: அரசாட்சியில் இருப்பதால், பிஜேபியும் முஸ்லிம்களை வாழ்த்த வேண்டியுள்ளது, வாழ்த்தட்டும், அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முஸ்லிம்களும் இந்நாட்டு மக்கள் தாம், சகோதரர்கள் தாம். ஆனால், “இந்துக்கள் பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் கொடுமைப் படுத்தும் போது, அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள், ஆனால், சூஷ்மா ஸ்வராஜ், அத்வானி, சஞ்சய் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முரளி மனோஹர் ஜோஷி, வசுந்தராஜே சிந்தியா முதலியோரின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர்….”, என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டினதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்[3]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜ்நாத் சிங், கட்கரி போன்றோரே குல்லா போட்டுக் கொண்டு, இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்பொழுதும், அதாவது 2016லும், பாகிஸ்தானின் கராச்சி நகரில், ரம்ஜான் மாதத்தையொட்டி, நோன்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை, விற்று வந்த 80 வயது கோகுல்தாஸ் என்ற கிழவர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்.

hindu-man-attacked in Sindu, Pakistanரம்ஜான் சாக்கில் 80 வயது கிழவர் அடித்து நொறுக்கப்பட்டது (ஜூன் 2016): கோகுல்தாஸ், 80, என்பவர் இப்தார் நோன்புக்கு முன், அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி, அலி உசேன் என்ற போலீஸ்காரர், அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்[4]. இஸ்லாத்திலேயே, வயதானவர்களுக்கு விலக்கு உள்ளபோது, இந்து என்ற முறையில் தான் இவர் வயது கூட பார்க்காமல், முஸ்லிமினால் தாக்கப் பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார்[5]. இல்லையென்றால், இவ்விசயமே தெரியாமல் போயிருக்கும். இதையடுத்து, முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, ஏராளமானோர் காரசாரமாக விவாதித்தனர். மேலும், கோகுல்தாஸின் பேரன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி, அலி உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் முஸ்லிம்களிடன் நட்புடன், அன்புடன், சகோதரத்துவத்துடன் இருந்தால் கூட, அவர்களால் அவ்வாறு பரஸ்பர முறையில், அவற்றை திரும்ப வெளிப்படுத்துவதில், அவர்களது அடிப்படைவாதம் தடுக்கிறது.

BJP ramzan wishes to Pakistan and Bangladeshஅரிசி அரசியலும், செக்யூலரிஸமும்: தேர்தல் நேரத்தில் பிஜேபிகாரர்கள் “அம்மா அரிசி” இல்லை, அது “மோடி அரிசி” தான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பார்த்தனர், ஆனால், ஒன்றும் எடுபடவில்லை, அரசியல்-அரிசியும் வேகவில்லை. அரிசி-அரசியல் அறியாத பிஜேபி, புள்ளிவிவரங்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் எனும்போது, எல்லோரும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பார்க்கின்றனர். இன்று உலகளவில் வியாபாரம் நடக்கும் போது, முஸ்லிம்களை விரோதித்துக் கொண்டு, பகைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவிட முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதி விசயத்தில் மூஸ்லிம்களஸடிக்கும் கொள்ளை சொல்ல மாளாது. ரம்ஜான் பிரச்சினை எப்படி எல்லைகளைக் கடந்து வேலை செய்கின்றது, இந்த அரிசி-கொள்ளை, கடத்தல் விவகாரமும் எல்லைகளைக் கடந்து தான் நடக்கின்றது.

BJP leaders with skull cap for Ifter partiesஇந்தியாவிலிருந்து, இரானுக்கு ரம்ஜானுக்காக ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி துபாய்க்குக் கடத்தப் பட்டது: மறுபடியும், அரிசி உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது[6]. இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு உதவியா என்ற நோக்கில் கூட ஆராயப்படுகிறது.

*              துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது.

*              ‘துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ’ என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.

*              இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது[7]. இதில் சமந்தப்பட்டவர்களில், பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று சொல்லத்தேவையில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2016

 

Iftar-Party-by-BJP-Minority-Morcha-Karnataka

Chief Minister D V Sadanada Gowda participated & Vished Muslims onthe accassion of Ramjan Festival celebration in Iftar Party arranged by BJP Minority Morcha

[1] Telangana CM KCR would distribute new clothes to 2 lakh poor Muslim families to celebrate Ramzan festival this year. The distribution of the packets would begin on June 17 and end on June 22 in Hyderabad and all other parts of the state. KCR also honored nearly 5,000 Imams across Telangana with Rs. 1000 monthly honorarium, apart from giving a pair of clothes worth Rs 500 to poor families and allotted nearly 26 crores to celebrate Iftar at all the mosques in the state.

gulte.com, KCR’s Ramzan Tohfa, June 15th, 2016, 02:56 PM IST

[2] http://www.gulte.com/news/49905/KCRs-Ramzan-Tohfa

[3] The posters read: “Pakistan, Bangladesh ko Ramzan par dete ho badhai, Sushma, Advani, Sanjay Joshi, Rajnath, Gadkari, Murli Manohar Joshi, Vasundhara ke liye mann mein hai khatai”. (Pakistan and Bangladesh are wished on Ramadan, but ill feelings are harboured against Sushma (Swaraj), Advani, Sanjay Joshi, Rajnath (Singh), (Nitin) Gadkari, Murli Manohar Joshi, Vasundhara (Raje).

http://www.india.com/news/india/poster-criticising-narendra-modi-amit-shah-put-up-sanjay-joshi-supporters-in-delhi-432246/

[4] தினமலர், 80 வயது முதியவரை அடித்த பாக்., போலீஸ்காரர் கைது, ஜூன்.13, 2016: 00.41.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541489

[6] தினமலர், ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம், பிப்ரவரி.29, 2016: 03.00

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467913

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது!

ஜூன் 16, 2016

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசிசெக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது!

Ramzan ka tohfa - Naidu way of appeasementரம்ஜான் நோன்பும், இப்தர் பார்டிகளும், செக்யூலரிஸ அரசுகளும்: ரம்ஜான் கா தோஹ்பா [Ramzan ka tohfa], ரம்ஜானுக்குக் கொடுக்கப்படும் பரிசு, இனாம் என்று செக்யூலரிஸ அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். செக்யூலரிஸம் ஜெயிக்கிறாதோ இல்லையோ, கம்யூனலிஸம் நிச்சயமாக இதனால் ஊற்றி வளர்க்கப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட நாத்திக அரசியல்வாதிகள் கொண்டாடும் இப்தர் பார்ட்டிகளே அலாதிதான். கருணாநிதி போன்றோர் அவற்றில் குல்லா போட்டுக் கொண்டு, கஞ்சி குடித்துக் கொண்டே, இந்துமதத்தை தூஷிப்பது வழக்கமாக இருக்கிறது. காபிர்-மோமின் உறவுகளும் செக்யூலரிஸத்தில் நாறி வருகிறது. ஜெயலலிதா தனக்கேயுரிய பாணியில் அரிசி கொடுத்தது இந்தி ஊடகங்களில் கூட செய்திகளாகப் போட்டுள்ளார்கள்[1]. “இப்தர் பார்டி” என்று அரசு சார்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடபுடலாக பார்ட்டிகள் நடத்துகிறார்கள், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ரம்ஜானே “அல்லாவின் பரிசு” எனும் முஸ்லிம்கள், இப்படி காபிர்களிடமிருந்து அரிசி முதல் நெய் வரைப் பெற்றுக் கொள்கிறார்களே, அது சரியா, அதாவது ஹலாலா-ஹரமா என்று ஆசார முஸ்லிம்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால், இதுவரை யாரும் எதிர்க்கவில்லை. அப்படியென்றால், அல்லா ஒப்புக் கொண்டு விட்டார் என்றாகிறாது.

jeyalalita-at-quade-millat-tombமசூதிகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் அம்மா அரிசி டன்டன்னாக இலவசம்: ஜெயலலிதா 4600 டன் அரிசியை மசூதிகளுக்குக் கொடுத்து தனது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “சிறுபான்மையின மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக் கப்படுகிறது. இதற்காக பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதி வழங்க கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டேன். அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்க, அரிசிக்கான மொத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை மொத்த அனுமதி மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப் படுகிறது. இதன்படி, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும், இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் [2,14,00,000/-] செலவாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,000 பள்ளிவாசல்கள் பயனடையும்”, இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்[3].

Ramzan ka tohfa - Naidu way of muslim appeasement.ரம்ஜான் கஞ்சிஅரிசி விசயமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு[4]: ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும் அரிசியை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: “ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்துவிண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து உத்தரவிடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்காக கஞ்சி தயாரிக்க இலவசமாக பச்சரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை அவரவரே தணிக்கை செய்து, தகுதியுள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியின் அளவு ஆகியவை குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது செக்யூலரிஸ அரசு, இவ்வாறு வேலை செய்கிறது, கலெக்டர் முதல் மற்ற அதிகாரிகள், இனி வருடாவருடம் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.

Ramzan ka tohfa - Naidu way of mohammedan appeasementசெக்யூலரிஸத்தில் திளைக்கும் பண்டிகைகள்: தமிழகத்தில், அப்பொழுது சில இந்து இயக்கங்கள், இதே மாதிரி மாரியம்மன் கூழ் ஊற்ற அரிசி கொடுக்கப்படுமா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன. ஆனால், எதுவும் வேகவில்லை. சிறுபான்மையினரை தாஜா செய்வது, கொஞ்சுவது, கெஞ்சுவது எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அரசியல்வாதிகள், ஒருவரை மற்றவர் மிஞ்சுவதில் அதிவல்லவர்கள் என்றே கூறலாம். மசூதிகள், பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதைப் போல ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு அரிசி வழங்க வேண்டும் என்று ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்[6]. இந்து கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறை படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 17ம் தேதி ஆர்பார்ட்டம் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்[7]. ஆர்பாட்டம் நடக்குமா, தொடருமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கவனிக்கும் போது, தெலிங்கானாவில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆந்திராவில் பொங்கல், தீபாவளி இனாம் கொடுப்பதால், பிரச்சினை இல்லை.

Ramzan ka tohfa - Naidu - chandranna-way of appeasementசந்திரண்ணாவின் காணுகஅதாவது சந்திரபாபுவின் காணிக்கைகள்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சும்மா இருப்பாரா, இந்த “ரம்ஜான் கா தோஹ்பா” என்று, ஒரு பையில்

  1. ஐந்து கிலோ கோதுமை மாவு.
  2. இரண்டு கிலோ சக்கரை.
  3. ஒரு கிலோ சேமியா
  4. 100 கிராம் நெய்.

என்று போட்டு விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்[8].  இதற்காக பிரத்யேகமான பேக்கிங் எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு ஆகிவிட்டது. இவை பத்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு ஜுலை 1 முதல் 7 வரை விநியோகிக்கப்படும்[9]. நாயுடு தன்னுடைய செக்யூலரிஸ பரிசு-இனாம் திட்டத்தில் சந்திரண்ணா சங்கராந்தி காணுக [Sankranthi Kanuka (Pongal gift) –  ‘Chandranna Sankranthi Kanuka’], சந்திரண்ணா ரம்ஜா கா தோஹ்பா [Chandranna Ramzan ka tohfa] மற்றும் சந்திரண்ணா கிறிஸ்துமஸ் காணுக  [Chandranna Christmas Kanuka] என்று காணிக்கைகள கோடிக் கணக்கில் அள்ளி வீசுகிறார்[10]. “சந்திரண்ணா” என்றால் அண்ணா சந்திரபாபு நாயுடு தான், இங்கே “அம்மா” மாதிரி! ஆக, காணிக்கைக்ககளுடன் தன்னுடைய பெயரையும் விளம்பகரப்படுத்திக் கொள்கிறார்[11]. அந்த அளவுக்கு அவர்களது முன்னோக்கு-பின்னோக்கு பார்வைகள், திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன.  இந்து-முஸ்லிம்-கிருத்துவர் என்று மூன்று சமுதாயத்தினரையும் “அண்ணா” செக்யூலரிஸத்தில் மகிழ்விப்பதால், அங்கு அரிசி நன்றாகவே வெந்து கொண்டிருக்கிறது!

© வேதபிரகாஷ்

16-06-2016

Ramzan ka tohfa - Naidu and KCR

[1] http://navbharattimes.indiatimes.com/state/other-states/bangalore/chennai/jaya-orders-free-rice-to-mosques-for-ramzan/articleshow/52567364.cms

[2] தமிழ்.இந்து, ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,600 டன் பச்சரிசி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு, Published: June 3, 2016 08:07 ISTUpdated: June 3, 2016 08:08 IST.

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4600-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8685053.ece

[4] தினத்தந்தி, இஸ்லாமியர்களுக்காக ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 12:22 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 3:00 AM IST

[5] http://www.dailythanthi.com/News/State/2015/06/18002244/The-government-instructed-the-district-collectors.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 17ல் இந்து முன்னணி ஆர்பார்ட்டம்ராமகோபாலன் அறிவிப்பு: வீடியோ, By: Mayura Akilan, Published: Monday, June 6, 2016, 15:12 [IST]

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-munnani-protest-on-july-17-says-ramagopalan-255356.html

[8] The gift hamper consisting of 5 kg wheat flour, 2 kg sugar, 1kg vermicelli and 100 gram ghee will be handed over to the beneficiaries from July 1 to 7 through ration shops across the state.

Zeenews, AP govt to give ‘Ramzan Tohfa’ to 10L families, Last Updated: Wednesday, June 15, 2016 – 15:05.

[9] http://zeenews.india.com/news/andhra-pradesh/ap-govt-to-give-ramzan-tohfa-to-10l-families_1896044.html

[10] The Times of India, 10L families in AP to receive Ramzan gift, TNN | Jun 15, 2016, 11.36 AM IST

[11] http://timesofindia.indiatimes.com/city/hyderabad/10L-families-in-AP-to-receive-Ramzan-gift/articleshow/52758594.cms

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

மே 29, 2016

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

TN 2016 BJP failed in alliance

பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை           எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை! ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம்  பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

poll-of-exit-polls_NDTV 2016தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].

தமிழக பிஜேபி - ஜவடேகர் பிரச்சாரம்- 2016மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016தமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்

[2] http://www.bjptn.org/event.php?id=47

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]

http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக!, By சென்னை, First Published : 23 May 2016 03:14 AM IST

[5]http://www.dinamani.com/tamilnadu/2016/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/article3446859.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

மே 29, 2016

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

தமிழக பிஜேபி கூட்டணி தோல்விதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.

சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன்

எஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.

சேலம்பொது கூட்டம் கர்நாடக்கா அமைச்சர் பிரச்சாரம்பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.

தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்மோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].

maniarasanavd-அரிசி அர்சியல்நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 அம்மா அர்சி - 2016 தேர்தல்

விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி எஸ் டி வரி - மசோதா - ரசியல்ஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!, By: Mathi, Published: Thursday, November 26, 2015, 15:35 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-napolean-made-vice-president-tn-bjp-240819.html

[3] https://www.patrikai.com/sv-shekhar-tease-bjp-party/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்?, By: Veera Kumar, Published: Friday, May 27, 2016, 15:36 [IST].

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/s-v-shekar-showing-anger-toward-tamilnadu-bjp-254686.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-sitharaman-prakash-javadekar-will-campaign-on-friday-intamil-nadu-252433.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-wave-powerless-amma-s-state-254054.html

[9] தினமலர், நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1450802