Posts Tagged ‘பிஜேபி’

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

ஜூலை 13, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

Modi tackling Dravidianism

அமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும் பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.

BJP Faction leaders, nominated, joined etc

ஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  1. நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,
  2. ரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,
  3. யாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,
  4. நாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,
  5. தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,
  6. மருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,
  7. அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,
  8. சவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,
  9. செட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்

உட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.

Balasubramanian Adity, Vanathi Ladai

ஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்டனர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக  உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது.  டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.

Faction MBJP - no takers 2016

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].

© வேதபிரகாஷ்

13-07-2018

 

Balasubramanian Adity, Sankara narayanan - Vanathi Ladai

[1] Shri Amit Shah address public meeting at Maraimalai Nagar,Chennai,Tamil Nadu: 20.12.2014

https://www.youtube.com/watch?v=ZyilYpqQKuA

[2] In his first ever speech made in Chennai on December 20, 2014, Shah exhorted party cadre in Tamil Nadu to end the cyclical ‘misrule’ of Dravidian parties and to take Tamil Nadu on board with Prime Minister Modi’s Mission for Growth. However, the party could not open its account in the State Assembly in the 2016 elections.

Indian Expess, Amit Shah to visit Tamil Nadu from August 22, to meet OBC leaders, Published: 30th July 2017 08:04 AM | Last Updated: 30th July 2017 08:04 AM

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jul/30/amit-shah-to-visit-tamil-nadu-from-august-22-to-meet-obc-leaders-1635580.html

[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7511314.ece

[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am.

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[7]  http://sathiyamweekly.com/?p=5416

[8] https://secularsim.wordpress.com/2016/05/29/from-1996-to-2016-how-bjp-faired-in-tamilnadu-elections/

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபிகாரர்கள் [4]

Amith ShaH tramslated by H Raja 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: அமித் ஷா தொடர்ந்து பேசினார், “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்[1]. ஊழலை எதிர்த்து, சட்டம்-ஒழுங்குநிலை பேணும் கட்சிகளுடன் கூட்டு வைக்கப்படும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்[2]. பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். கூட்டம் முடிந்து, வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழிசை, அமித் ஷா வந்ததால் தான் மழை பெய்தது, என்றதெல்லாம் சொன்னது தமாஷாக இருந்தது. அமித் ஷா பேச்சு, தமிழக அரசியல்வாதிகளை சுசுப்பி விடத்தான் செயத்து. இருப்பினும் திராவிட கட்சிகள் அமைதியைக் காத்தன.

Angry Raja, looking Tamilisai

பிஜேபியில் உள்ள பிரிவுகளும், கோஷங்கள் மூலம் வெளிப்பட்டன: முன்பே எடுத்துக் காட்டிய படி, தமிழிசை, இக்கூட்டத்தை, இங்கு ஏற்பாடு செய்ததில் தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டார். அமித் ஷா வரவேற்பு, தங்கும் அறை, உரையாடல் கூட்டம் என்று அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். அமைப்பு ரீதியில் மற்றும் கட்சி ரீதியில் என்று இரு முறை பேச வாய்ப்பு பெற்றார். இருப்பினும் எச். ராஜா பேச அழைத்த போது, பேசி முடித்தபோது, அமித் ஷா, ராஜா பெயர் சொன்னபோது, தொண்டர் கூட்டம் ஆர்பரித்தது, ராஜாவின் ஆதரவு தெரிந்தது. ”இனி தமிழகத்து நிலையில் பார்த்தா, ராஜா, என்னத்தான் இருக்கிறதோ தெரியல, உன் பெயரைக் கேட்டாலே அதிருதே, ராஜா! இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம்! ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது! கனகோஷத்தில் பூத்தது. வானதி, அமித் ஷா கூட வந்தார், அவர் தான் தன் முகத்தை இருக்கத்துடன் வைத்துக் கொண்டார். இதெல்லாம், கட்சியில் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டியது. இது மற்ற ஆதரவாளர்களை நெருட செய்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மட்டும் கமென்ட் அடித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல பிஜேபி-எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டன.

Angry Raja, looking Tamilisai smiling

பேனர்கள், கொடிகள் வைத்ததற்கு விமர்சனம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன[3]. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா 09-07-2018 அன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இப்படி புலம்பி தள்ளினாலும், பிறகு அமைதியாகி விட்டன.

BJP internal problems

அமித் ஷா பேச்சிற்கு உஷாராக இருந்த திராவிட கட்சிகள்: திமுக ஏற்கெனவே பிஜேபியுடன் கூட்டிருந்தது, ஆகவே, ஸ்டாலின் அமைதியாக இருந்தது புரிந்தது. மறுபடியும் கூட்டு வைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையும் உள்ளது. இந்திராவை கொலை செய்ய முயன்று, அப்படியே கால்களில் விழுந்து சரணாகதி ஆன, குரூர கருணாநிதி கூட்டம் தான் இன்று அமித் ஷாவை எதிர்க்கிறது. ஆனால், கூட்டணி என்றால், “அந்தர்-பல்டி” அடிக்கும். அமித்ஷா எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு என்பதை விட, இந்து-எதிர்ப்பு கொண்டு, திராவிட-துலுக்கப்-கிருத்துவ-கம்யூனிஸ்ட் கூட்டம் செயல்பட்டதும் தெரிந்தது. ஏனெனில், பிஜேபி கூட்டணியில், அவர்களுக்கு சீட் கிடைக்காது. அடையாளம் கேட்டதால் தான், கொதித்த ஊடக செக்யூலரிஸ்டுகள், பொங்கி, அடங்கி விட்டன, ஆனால், செய்தி-வெளியீடு காட்டிவிட்டது. அமித்ஷாவின் பேச்சின் ஆழத்தை உணர்ந்த செக்யூலரிஸ்ட்-இந்து-விரோத ஊடகங்கள் கதிகலங்கி விட்டன. பேசியதை அப்படியே போட துணிவில்லை. சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை என்று புலம்புகிறது பிபிசி. சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக என்று ஒப்பாரி வைக்கிறது இன்னொரு ஊடகம்.  70 ஆண்டுகளாக “அதே குட்டையில் ஊறி, நாறிவரும் கொழுத்த மட்டைகள்” வெட்கமில்லாமல் உண்மை மறைத்து நாடகம் ஆடுகின்றன! தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம்! லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி! என்றெல்லாம் பேசுவர்.

Stalin, Mrs-Mr Raja, Durai murugan

தமிழக பிஜேபி முதலில் உட்பூசல்களிலிருந்து விடுபட்டு ஒற்றுமைக்கு வர வேண்டும்: பிஜேபியில் இருக்கும் உட்பூசல்கள், பிரிவினைகள் 2014லிருந்து மாறவே இல்லை[5]. மேடைகளில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்து கொள்வது மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களில் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்சினையைப் பெருக்கி வருகிறார்கள்[6]. ஒரு ஆதிக்க ஜாதியினர், இன்னொரு ஜாதியினரை தாக்கி வருகின்றனர். தனி நபர் தாக்குதல் அளவிலும் இறங்கி விட்டனர். திராவிட பாணியில், பலமுறை “பார்ப்பன எதிர்ப்பிலும்” இறங்குகிறார்கள். இதனால், மேலும் பிஜேபி ஆதரவாளர்கள் பிளவுபட்டு கிடக்கிறர்கள். கன்னியாகுமரி பலத்தை வைத்துக் கொண்டு, பிஜேபி பலத்தை வளர்ப்பதை விட, மத்திய திட்டங்கள் அங்கு வர திட்டம் போட்டுள்ளதால், போலியான ஆதரவு-எதிர்ப்பளார்பாட்டங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு முறைகளை சீரழித்து வருகின்றன. வேண்டாம் என்றாலும், இல்லை என்றெல்லாம் பேசினாலும், குறிப்பிட்ட ஜாதி-மதம் ஆதிக்கம் வெளிப்படுகிறது. அரசியல் நியமனங்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களுக்கே செல்கின்றன. கோடிகளில் துறைமுகம், 8-வழி சாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட கான்ட்ராக்டர்கள், முதலியோர் குஷியாகி உள்ளனர். இதில் எதிர்ப்பவர்கள் “கமிஷன்” கிடைக்காதவர்கள் தாம். ஆக, ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் வாரிசு அரசியலை இவர்கள் எவ்வாறு போக்கி, ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-07-2018

CPR, Lakhsmanan, Raja, Murali, Tamilisai, POn.Radha

[1] தினமணி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம், By DIN | Published on : 09th July 2018 08:33 PM

[2]http://www.dinamani.com/tamilnadu/2018/jul/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2956499.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக!, Posted By: Kalai Mathi Updated: Monday, July 9, 2018, 18:01 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-keeps-so-many-banners-welcome-amitshah-324483.html

[5] இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது – Daily Pioneer, CARTEL LEADING TN BJP, ALLEGES SENIOR LEADER, Thursday, 05 May 2016 | Kumar Chellappan | CHENNAI.

[6] https://www.dailypioneer.com/nation/cartel-leading-tn-bjp-alleges-senior-leader.html

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள்தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]

Amt Sha turning to Dravidian parties

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்[1]: 09-07—2018 மாலை விஜிபி வளகத்தில் பேசிய பேச்சு தொடகிறது. “ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க முதன்முதலாகக் குஜராத்திலிருந்து ஊழலை விரட்டியது. அதன் பிறகு – ராஜஸ்தான், உபி என்று – இந்தியாவின் 19 மாநிலங்களில் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்[2]. பல்வேறு மூத்த தலைவர்கள் எல்லாம் ஊழலுக்காகத் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்[3]. பல்வேறு தலைவர்கள் வழக்குகளைச் சந்தித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், பா.ஜ.க அரசு  ஊழல் இல்லா ஆட்சிக்கு உறுதிபூண்டுள்ளது. எந்தவொரு பா.ஜ.க தலைவர்களாவது ஊழலில் சிக்கியிருக்கிறார்களா[4]. நாங்கள் ஊழல் செய்திருக்கிறோம் என்று யாராவது கைநீட்டி குற்றஞ்சாட்டியிருக்கிறார்களா. அந்த அளவுக்கு நாங்கள் வெளிப்படையான ஊழலற்ற ஆட்சியைச் செய்து வருகிறோம். அதே நேரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்”.

Amt Sha made Dravidian parties ton get alerted

ஊழலும், தமிழகமும்: இந்த நேரத்தில் தமிழகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் சூழலை நினைத்தாலே இதயம் வெடிக்கிறது; வருத்தத்தில் துடிக்கிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக இருக்கிறது. இது எனக்கு வேதனையளிக்கிறது. எனவே, பா.ஜ.க தொண்டர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாட்டை ஊழலிலிருந்து மீட்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சியமைக்க நாம் இன்றே உறுதிபூண வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் ஊழல் மட்டும் அல்லாது தேர்தலின்போது ஓட்டுக்கு நோட்டு என்ற மோசமான கலாசாரம் இருக்கிறது. இதிலிருந்தும் மீட்க வேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே சூழ்நிலையை நாம் ஆட்சியில் இருந்தால்தான் தமிழகத்தையும் சீர்படுத்த முடியும். ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பா.ஜ.க-வை ஆட்சியில் அமர வைப்பதே பா.ஜ.க தொண்டர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்,” என்றார்.

தமிழக பிஜேபியில் பொறாமை, போட்டி, கோஷ்டி-அரசியல் என்ற நிலை மாற வேண்டும்

தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு நிலை, தமிழ் பற்றிய நிலைப்பாடு: “தமிழகத்தில் இதற்கு முன்பு நம் நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராகவும் நாம் போராட வேண்டும். “சட்டம் ஒழுங்குநிலை” விசயத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை இங்கும் வர வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு[5] பாடுபட வேண்டும். நிறைய என்.ஜி.ஓக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அவற்றிற்கு, நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே, ஒரு பொய் பிரசாரம்  உருவாக்கப் பட்டு வருகிறது. தமிழ்-கௌரவம், தமிழ்-பெருமை பற்றி பிஜேபி அதிகமாகவே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியின் பெருமையை வளர்க்க, பாதுகாக்க பா.ஜ.க. போல எந்த கட்சியும் தீவிரமாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியில் தான் ரெயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி அச்சிடப்பட்டு இருக்கிறது. இது பெருமை இல்லையா? எப்போது தமிழகத்தில் பா.ஜ.க.  ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தமிழின் பெருமையை தமிழ்நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் எடுத்துச் சென்று, உலகறிய செய்வோம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை  கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்”.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016

ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றிய அமித் ஷா: ஊடகங்கள் இப்படி ஒப்பிட்டது…..பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா? என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா? , வருவீர்களா? தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா? வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா? செய்வீர்களா? என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது.

தமிழக பிஜேபி தலைவர்கள்

அமித்ஷா வரவும், தில்லி திரும்பலும்: பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, 2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதன் முதற்கட்டமாக பா.ஜ.க சக்திகேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக, தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி. தங்க கடற்கரையில், பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா “என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம்”, என்று ஆரம்பித்து, பேசினார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என அமித் ஷா உணர்ச்சிப்பெருக்குடன் பேசிய போது, அங்கு திரண்டிருந்தவர்கள் தங்கள் கரங்களை மடித்து அமித் ஷாவுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தனர்.  7.40ற்கு அவரது பேச்சு முடிந்ததும், தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டு சென்று விட்டார்[6]. டுவிட்டரில், தமிழக மக்களுக்கு நன்றியும் தெரிவித்து விட்டார்[7].

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016

அமித் ஷா பேச்சை ஊடகங்கள் விவரித்தது [சுருக்கம்]: தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டலும் கேலியும் செய்தனர்[8]. எதிர்ப்பாளர்களே..! தமிழகத்தில் பா.ஜ.க எங்கே இருக்கிறது என்பதை வரும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நீங்கள் பார்ப்பீர்கள்[9]. 11 கோடி உறுப்பினர்களை பெற்று மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க.வுக்கு 330-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பொன் ராதாகிருஷ்ணனை தேர்வு செய்து அனுப்பிய மக்களுக்கு நன்றி. தமிழகத்துக்கு பிரதமர் மோடி அதிகமான முன்னுரிமை கொடுத்து வருகிறார். தமிழகத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்..நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது[10]. “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி” அமைக்க பாடுபடுவோம். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும்[11]. ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. கடந்த 10 ஆண்டுக்கால காங்கிரஸ் கட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, ஹரியானா, அசாம், நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஊழல் ஒழிந்துள்ளது. தமிழகத்திலும் ஊழலை ஒழிப்போம்.

© வேதபிரகாஷ்

12-07-2018

rly ticket tamil

[1] அமித் ஷா பல ஜாதி சங்கத் தலைவர்களுடன் 2015லிருந்து பேசி வரும்போது, இதனை சொல்லியுள்ளார்.

[2] காங்கிரஸ் ஊழல் கட்சி – அதனை வெளியேற்றியுள்ளோம் என்று எடுத்துக் காட்டுகிறார்.

[3] கல்மாடி, ராஜா, கனிமொழி முதலியோர் ஜெயிலுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார். ஆனால், இப்பொழுது, அவ்வழக்கு தள்ளுபடியாகி விட்டது.

[4] எடியூரப்பா சிறைக்குச்சென்று வெளியே வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

[5] அமித் ஷா “தலித்” என்ற பிரயோகத்தை செய்தாலும், ராஜா, “பட்டியல் இனம்” என்று மொழிபெயர்த்தார்.

 

[6] மாலை மலர், தமிழக பயணத்தை முடித்து பா... தேசிய தலைவர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார், பதிவு: ஜூலை 09, 2018 23:38

[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/09233829/1175487/bjp-leader-amit-shah-depart-delhi.vpf

[8] மாலைமலர், தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பதா? – சென்னை கூட்டத்தில் அமித் ஷா ஆவேசம், பதிவு: ஜூலை 09, 2018 19:39; மாற்றம்: ஜூலை 09, 2018 20:00.

[9] https://www.maalaimalar.com/News/District/2018/07/09193912/1175462/Amit-sha-claims-to-form-BJP-govt-in-TN.vpf

[10] தி.இந்து, தமிழகத்தில் அதிகமான ஊழல்“: பாஜக தலைவர் அமித் ஷா வேதனை, பிடிஐ, Published : 09 Jul 2018 22:15 IST; Updated : 09 Jul 2018 22:17 IST

[11] http://tamil.thehindu.com/tamilnadu/article24373521.ece

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

National songs - initially sung by a group

தேசிய பாடல்கள் பாடப்பட்டது.

C. P. Radhakrishnan

பிஜேபி-பொறுப்பாளர்கள் கூட்டம் 09-07-2018 மாலை 5.50ற்கு ஆரம்பித்தது. கருப்பு முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

6.07 to 6.12 pm – சி.பி. ராதாகிருஷ்ணன்: துவக்க உரையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 6.00க்கு ஆரம்பித்து 6.07க்கு முடித்தார். காவியை கருணாநிதியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்று எடுத்துக் காட்டினார்.

Stage-Karuppu, LG, Lakhsmanan

6.07 to 6.12 pm –இல கணேசன்:  இல. கணேசன், “எவ்வாறு ரக்ஷா பந்தன் விழாவுக்கு வந்த 120 எம்.பிக்களும் கோடானுகோடி மக்களுக்கு சமமாக இருந்தனரோ, அதே போல, வந்துள்ள பிரதிநிதிகள் லட்சக்க்கணக்கான மக்களுக்கு சமம், மோடி வந்தால், இக்கூட்டம் இரண்டு லட்சங்களாகும், மோகன் குமாரமங்கலம் சிகிச்சைப் பெறும் போது, கண்கள், மூக்கில் ரத்தம் வந்தபோது பயந்தனர். ஆனால், மருந்து வேலை செய்த அறிகுறியாக இருந்தது, அதுப்போல, மோடியின் திட்டங்கள் மருந்தாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மோடியை எதிர்க்கிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்,”..….என்று பேசினார்.

Karuppu, Raja, LG, Amit Sha, Tamilisai, Pon.R,Muralidhar

6.13 to 6.19 pm – எச். ராஜா: [பேச அழைக்கப்பட்ட போது கரகோஷம்] மோடியின் திட்டங்களை விவரித்தார். 40 ஆண்டுகளில் தீர்வாகாமல் இருந்த, “ஒரு ராணுவ வேலை, ஒரு பென்சன்” மற்றும் 100 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த “காவிரி மேளாண்மை திட்டமும்” முடிவுக்கு வந்ததை எடுத்துக் காட்டினார்.

09-07-2018 - Amit Shah Meeting- on stage

6.19 to 6.31 pm – தமிழிசை சௌந்தரராஜன்: காணொளி மூலம், ஓட்டு எண்ணிக்கையை எப்படி பெருக்குவது என்பதைப் பற்றி பேசினார். காணொளியில், > 100 – A; > 50 – B; > 25 – C; < 10 –D, என்ற ரேஞ்சில் தான் போவதாக தெரிவித்தார்! பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுகள் 100க்கு கீழ், 50க்கு கீழ் என்றிருந்தால், அவற்றை பெருக்க வழிதேட வேண்டும் என்றார். ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்றோரின் பிறந்த நாள் முதலியன கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கின்றனர் என்றறிய வேண்டும். மகளிர் சுயயுதவி குழு, சங்கப்பரிவார் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பேசி வர வேண்டும்……

LG, Amit Sha, Tamilisai, vgp stage

6.31 to 6.38 pm – முரளீதர ராவ்: பொதுவாக, பொறுப்பாளர்களின் கடமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். “Mission BJP 2019” திட்டம் என்று செயல்பட வேண்டும் என்றார்.

09-07-2016 - Amit Shah Meeting.speaker-1

6.38 to 6.43 pm – சுவாமிநாதன்: பாண்டிச்சேரி, பிஜேபி தலைவர், எவ்வாறு இன்றளவில், தமிழகத்தில், பிஜேபியை எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதத்தில், பிஜேபிகாரர்கள் தாம் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். காமராஜுக்குப் பிறகு, பலமுள்ள தலைவராக, அமித் ஷா உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Vansthi came with Amit Shah

6.43 to 6.51 pm – பொன் ராதாகிருஷ்ணன்: பொறுப்பாளர்களின் கூட்டமே இவ்வளவு என்றால், ஆதரவாளர்களின் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்…தமிழகத்திற்கு 11,000 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று துறைமுகங்கள்;, மதுரையில் எய்ம்ஸ் முதலியன வருகின்றன்ன…தமிழக மீனவர்களுக்கு தேவையான படகுகள் கொச்சியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன…மோடி முதலமைச்சர் மாநாட்டில், 100 தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்…சமஸ்கிருதத்தை விட, தமிழ் தொன்மையானது என்றும் கூறியிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்வது போல, தமிழகத்திலும் ஆட்சி வரும்….

09-07-2016 - Amit Shah Meeting

6.51 to 6.52 pm – தமிழிசை சௌந்தரராஜன்: மறுபடியும் பேச ஆரம்பித்த போது, அமித் ஷா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், அவருக்கு பொன்னாடை போர்த்துவது, நினைவு பரிசு கொடுப்பது போன்று சில நிமிடங்களில் முடிந்தவுடன், பேச ஆரம்ப்பித்தார். எச். ராஜா தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.

Amit SHAH with others 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கச் சொல்லி, தமது உரையைத் தொடங்கினார்ரிரு கைகளையும் உயர்த்தி, மற்றவர்களையும் அவ்வாறே உரக்க சொல்லச் சொன்னார். தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன். ராதாகிருஷ்ணனை அமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Meeting-LG, Amit Sha, Tamilisai, vgp stage

மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. ஏழை தாய்ய்மார்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பிஜேபி உள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, 330 எம்பிக்களைக் கொண்டுள்ளது, 1700 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதே போல, ஆயிரக்கணக்கில் மேயர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று பல மாவட்டங்களில் இருக்கின்றனர். இவ்வாறு பிஜேபி வளர்ச்சியடைந்துள்ளது.

Amit SHAH meeting- 09-07-2018-5

மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. 13வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு முந்தைய அர்ரசாங்கம் ரூ 94,540 கோடிகள் தான் கொடுத்தது, ஆனால், 14வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு 1,99,996 கோடிகள் கொடுத்துள்ளது. அதாவது, 1,04,000 கோடிகள் அதிகம். முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு,ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது / ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டுக் காட்டினார்:

திட்டம் ரூ கோடிகளில் திட்டம் ரூ கோடிகளில்
சிறுநீர் பாசனம் 332 ஸ்மார்ட் சிடி 820
மெட்டரோ 2,875 மதுரை எய்ம்ஸ் 1,500
மோனோ ரெயில் 3,267 தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகள் 350
3200 கி.மீ ரெயில்வே லைன் அதிகப்படுத்த 20,000 பாரம்பரிய கிராம உன்னதி 45
வரட்சி நிவாரணம் 1,750 தேசிய நெடுஞ்சாலை 23,700
வார்தா புயல் 265 பாரத் மாலா – மத்திய சாலை 2,100
பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா 3,700 மாநிலங்களை இணைக்க 200

இப்படி அடுக்கிக் கொண்டே போனார். பிஜேபியை எதிர்ப்பவர்கள், இவ்வுண்மையினை அறிய வேண்டும். இதே போல, யு.பி.ஏ அரசாங்கமும் தமிழக்கத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பட்டியல் இட்டு, கணக்குக் கொடுக்கட்டும், ஆவணங்களுடன் அத்தகைய விவரங்களைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியும். கணக்கு கேட்பீர்களா என்று பொறுப்பாளர்களை கேட்டார்.

© வேதபிரகாஷ்

11-07-2018

Amit SHAH meeting- 09-07-2018-4

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [1]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [1]

Opposition to Amit Shah., chennai

மோடிஎதிரிகளும், பிஜேபிஎதிரிகளும், இந்துவிரோதிகளும்: “கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி, பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியின் தமிழக வருகையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதனால் சென்னையே ஸ்தம்பித்து போனது,” என்று பிபிசி.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[1]. தொடந்து, “ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோதிக்கு இருந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டாலும் இணையத்தில் மோதிக்கு செய்தது போன்றே இணையவாசிகள் அமித் ஷாவுக்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை பரப்பிவிட அது வைரலானது. இச்சூழலில், சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை,” என்று புலம்பியுள்ளது. சரி, “திடீரென்று காணவில்லை,”. என்றால், கண்டு பிடித்து சொல்ல வேண்டியது தானே? அப்படி சொல்லாமல், “ஆனால், அந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்,” என்று சமாளித்துள்ளது. இந்தியாவில் என்ன அரசியல் தலைவர்கள் வது செல்லக் கூடாது என்றுள்ளதா? தமிழ்.வெப்துனியா[2] இதே பாட்டைப் பாடி, “இதைத்தொடர்ந்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவும், அன்பும் அளித்த தமிழக மக்களுக்கு எனது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்,” என்று முடித்துள்ளது[3].

09-07-2018 - Amit Shah Meeting- flags on platform dug

அமித் ஷாவே திரும்பி போ பிரச்சாரம்: திமுக, காங்கிரஸ் மற்றும் இந்து-விரோத சித்தாந்திகள் இத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிப்படையாகத் தெரிகிறது[4]. டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.எல்..ஏ, ஜோதிமணி சென்னிமலை, காங்கிரஸ், போன்றோர் இதில் ஈடுபட்டனர்[5]. டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலுவின் மகன். வாஜ்பேயி ஆட்சியின் போது, ஆர்.எஸ்.எஸ், பாலுவுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இதன்படி, ஒவ்வொரு கட்சியும், இதே முறையைக் கடைபிடிப்பதன் மூலம், தேர்தலை ஜெயிக்க முடியுமா, இந்தியா முழுவதும் சென்று வரும் ஆசியல்வாதிகளைத் தடுக்க முடியுமா? பிஜேபியை எதிர்க்கிறேன் என்று பிரதம மந்திரியை எதிர்ப்பது போன்ற செயல்கள் ஜனநாயக ரீதியில் இல்லை. மோடியை எதிர்க்கிறேன் என்று இந்துக்களை தூஷிப்பதும், செக்யூலரிஸமாக இல்லை. ஆகவே, இந்துவிரோதிகள் தாம், இவ்விதம் வெளியிடுகின்றனர் என்று தெரிகிறது. இதெல்லாம் சரியில்லை என்பது தெரிந்திருக்கிறது. இருப்பினும், செய்திருக்கிறார்கள் எனும்போது, ஆரசியல் அநாரிகத்தையும் பின்பற்றும் போக்காகக் காட்டுகிறது.

VGP resort - Tamilisai inspected

தமிழிசை தனது தொண்டர்களுடன் வந்து பார்வையிட்டார்.

VGP resort - Tamilisai inspected-2

விஜிபி தங்கக்கடற்கரை தேர்வு ஏன்?: அமித்ஷாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று “கிருத்துவ நாடார்” லாபி தீவிரமாக வேலைசெய்து, நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்தது. 2017ல் “திருவள்ளுவரை” வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் டிரஸ்ட் ஏற்படுத்தி, வி.ஜி.சந்தாஷத்திற்கு விருது கொடுத்து பாராட்டு விழா நடத்தியதில் சாமி.தியாகராஜனுக்கு பங்கு உண்டு. வி.ஜி.சந்தாஷம், சந்தோசமாக இடம் கொடுத்ததும், குஷியாகி விட்டனர். அமித்ஷாவை அசத்த ஏற்பாடுகளில் இறங்கி விட்டனர்[6]. இடம் தீர்மானம் ஆனதும், தனது தொண்டர்களுடன், சுற்றிப் பார்த்து, கவனித்து இருக்கிறார். இப்பொழுது தமிழிசை, ரிசார்டில் பந்தல் போடும் பூமி பூஜையில் கலந்து கொண்டார்[7]. அமித்ஷா வரவு பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கினார்[8]. இவ்விசயத்தை முன்னின்று நடத்துவதும் தெரிகிறது[9]. இவரது மகன் திருமணத்தில் சந்தோஷம் உட்பட, கிருத்துவ நாடார் லாபி கூட்டம் கலந்து கொண்டது. தினத்தந்தி விழாவில், மோடியை வரவழைத்து, மோடியின் கையால் வி.ஜி.சந்தாஷத்திற்கு விருது வழங்க வைக்கப்பட்டது. இவ்வாறு, ஐஜேகிவிலிருந்து, விஜிபிக்கு மாறுவதில், புகைச்சலும் ஏற்பட்டுள்ளது. பச்சமுத்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாமக அன்புமண்ணிக்கு அழைப்பு அனுப்பியும் வந்ததாகத் தெரியவில்லை.

VGP resort chosen by Tamilisai-1

மேடை, மைதானம், ஏற்பாடு முதலியன: மதியத்திலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. மேடையில், “நாட்டுப்புற” பாணியில் பாட்டு பாடிக் கொண்டு, வந்தவகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தது கலைக்குழு. பாதுகாப்பு சோதனை அதிகமாகவே இருந்தது. நுழைவில் சோதனை. பிறகு, ஒவ்வொருவரும், ஐடி கார்டுடன் வீடியோ/போட்டோ எடுக்கப் பட்டு அனுமதிக்கப் பட்டனர். இறுதியாக மைதான கூட்டம் இடத்தில் நுழைய முழு-சோதனை இருந்தது.

09-07-2016 - Amit Shah Meeting.secuirity check.frisking

மேடைக்கு முன்பாக, பாதுகாப்பு இடைவெளி இருந்தது. முக்கியமானவர்கள் மட்டுமே மேடைக்கு அருகில் அனுமதிக்கப் பட்டனர்.

09-07-2016 - Amit Shah Meeting.going inside.4

முந்தைய அமைச்சர் ஹண்டே வந்தபோது, போலீஸாருக்குத் தெரியவில்லை….நாராயண திருப்பதியைக் கூட தடுத்தனர்…..பிறகு அவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். மாவட்ட / மாநில பொறுப்பாளர்கள் அழைத்த போது குழப்பம் ஏற்பட்டது – இடப்பிரச்சினை தான். வி.ஜி.சந்தோசம், வி.ஜி.ரவிதாஸ் மற்றும் வி.ஜி.ராஜதாஸ் மேடையில் இருந்தது திகைப்பாக இருந்தது. வி..ஜி.சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள் பற்றி பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவதில், தீவிரமாக இருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளேன். இருப்பினும், வி..ஜி.சந்தோசம் கடந்த வருடம், மைலாப்பூரில், திருவள்ளுவர் கோவில் வளாகத்தில், விருது எல்லாம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பொன். ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வாழ்த்தி பேசினார்[10].  இப்பொழுது அவர்கள் இடம் கொடுத்துள்ளதால், உரிமையுடன் மேடையில் உட்கார்ந்துள்ளனர்.

V G Santhosam, V G RAvidass and V G ... with Amit Shah

2019 மற்றும் 2021 நிலைமைகள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருது நகர், சிவகங்கா, மதுரை வட்டங்களில், நாடார் மற்றும் கிருத்துவர் ஆதரவில், சில சட்டசபை தொகுதிகளில்  பிஜேபி அல்லது என்.டி.ஏ ஜெயிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுகின்றனர். 2014ல் பொன் ராதாகிருஷ்ணன், எச். வசந்தகுமாரை [காங்கிரஸ்] வென்றார் ஆனால், 2009ல் ஹெலன் டேவிட்சனிடம் [திமுக] தோற்றார். 2016ல், மூன்று எம்.எல்.ஏ காங்கிரஸ் மற்றும் மூன்று திமுக என்று வெற்றி பெற, பிஜேபி தோற்றது. 2016ல் தோற்ற, நயினார் நாகேந்திரன் [அதிமுக] பிஜேபியில் சேர்ந்துள்ளார்.  ஆகவே, இவர்கள் பதிலுக்கு மந்திரி பதவி கேட்பார்கள்.  வடமாவட்டங்களில், வன்னியர் கூட்டோடு போட்டியிட திட்டமிட்டிருக்கலாம். ஆனால், திமுக அல்லது அதிமுகவை தனிமைப் படுத்த முடியாது.  இப்பொழுதைக்கு, அதிமுகவோடு நல்லுறவு இருப்பதால், அதனை முறிக்க முடியாது. காங்கிரஸ்-திமுக அணி எனும்போது, பிஜேபி-அதிமுக அணி சாத்தியமாகிறது. 2019ல் தோற்றால், எல்லா கட்சிகளும் பிஜேபிக்கு எதிராகி விடும். வென்றால், கூட்டணி பேரத்தின் படி, பதவி கொடுத்தாக வேண்டும். காங்கிரஸைப் போல, பிஜேபி, அதிகாரம், பணம் வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளுடன் பேரம் பேசலாம். “புதிய தமிழகம்” கிருஷ்ணசாமி ஏற்கெனவே, பிஜேபி பக்கம் சாய்ந்து விட்டது தெரிகிறது. அதாவது, ஒரு “ரிசர்வர்ட்” தொகுதி அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பிறகு 2021 வரை அமைதியாக இருக்க வேண்டியிருக்கும்.

© வேதபிரகாஷ்

11-07-2018

VGP resort chosen by Tamilisai-2

[1] பிபிசி.தமிழ், ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போனஅமித் ஷாவே திரும்பிப் போ‘!, 9 ஜூலை 2018.

https://www.bbc.com/tamil/india-44769098

[2] தமிழ்.வெப்துனயா, கழுவி ஊற்றிய தமிழகம்: நன்றி சொன்ன அமித் ஷா, Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (17:45 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amit-shah-thanks-tn-people-in-twitter-118070900057_1.html

[4] The Hindu, #GoBackAmitShah trends, SPECIAL CORRESPONDENT CHENNAI , JULY 10, 2018 00:58 IST; UPDATED: JULY 10, 2018 09:46 IST.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/gobackamitshah-trends/article24374838.ece

[5] DMK MLA T.R.B. Raja, Congress leader Jothimani Sennimalai, Anti-corruption activist Savukku Shankar……tweeted………#GobackAmitShah.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/gobackamitshah-trends/article24374838.ece

[6] தினசரி, அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!, by Senkottai Sriram, 05-07-2018 5:24 PM.

[7] https://dhinasari.com/local-news/chennai-news/46073-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html

[8] News Today, Amit Shah’s visit to TN would be significant’, By NT Bureau Published on Jul 05, 2018 03:57 PM IST.

[9] https://www.newstodaynet.com/chennai/amit-shahs-visit-to-tn-would-be-significant-106531.html

[10] https://secularsim.wordpress.com/2017/06/16/why-hindutwavadis-hobnob-with-christians-under-the-guise-of-valluvar-promotion/

தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)

ஜூன் 23, 2017

தாமஸ் கட்டுக்கதைதிருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)

deivanayagam-devakala-aravindan-neelakandan-rajiv-malhothra

மு. தெய்வநாயகம் யார்?: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் பரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.

arunai-vadivelu-mudaliar-md

தெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்?: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.

deivanayagam-johnson-basakara-dos-devalkaa-alva-edison-sameul

சந்தோசம்ஜான் சாமுவேல்தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.

Sanskrit college- N Mahalingam, I. Mahadevan, Sankaranarayanan

மைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும் போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா? முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அத்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

Mylapore function 08-06-2017-3

தெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா? ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான்! அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.

© வேதபிரகாஷ்

22-06-2017

Archdiocesan Pastoral Centre, 25, Rosary Church Road, Santhome

[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991

[2] R. S. Narayanaswami, Deivanayagam gets his due, Organiser, November 7, 1991, New Delhi.

https://apostlethomasindia.wordpress.com/2010/04/04/tamil-scholars-condemn-christian-author-for-misrepresenting-tiruvalluvar-as-st-thomass-disciple-r-s-narayanaswami-2/

[3] Rajiv Malhothra and Aravindan Neelakandan, Breaking India: western Interventions in Dravidian and Dalit Faultlines,  Infinity Foundation, Princeton, USA, 2011. இதில் வேடிக்கை என்னவென்றால், வேதபிரகாஷ் மற்றும் ஈஸ்வர் ஷரண் புத்தகன்ங்களைப் பற்றி எந்த குறிப்பையும் காணோம்.

[4] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? They are Tamil evangelists, and while I hold no brief for either of them, I änd it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India.

Gita Ramaswamy, Yankee Hindutva Strikes A study on Bible-thumping activism ignores titular faultlines, concocts plots couched in anti-imperialism, \23 MAY 2011 BOOKS REVIEW.

http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815

[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[6]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[7]

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

[8] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker.

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

ஜூலை 10, 2016

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

BJP Villuppuram meeting clash 08-07-2016

வியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.

பாஜக சண்டை விழுப்புரம்

தங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4].  கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின.  மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.

BJP Villuppuram - Dinathanthi photo- 08-07-2016

வாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.

BJP Villuppuram - backdrop torn - 08-07-2016

பாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

BJP Villuppuram - torn backdrop - 08-07-2016

வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

BJP Villuppuram - chairs broken - 08-07-2016

பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.

பாஜக மோத-ல்1

செயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].

பாஜக மோத-1

அரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)

[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41

[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016

[4] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/37530/clash-in-bjp-executive-council-meeting-15-arrested

[5] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=168768

[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST

[7] தினத்தந்தி, பா... செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559721

[9] தினமலர், பா.., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559715

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/07/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3519127.ece

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=229607

[13] http://www.dailythanthi.com/News/India/2016/07/08012724/BJP-Committee-meeting-of-the-factional-conflict.vpf

சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

ஜூன் 19, 2016

சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

சிலை மாறிய மர்மம்

இந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:

இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
  • இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
  • இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?

உண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.

 Siva, Radhakrishnan,....., Raja, Tarun etc

செக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.

சிலை அரசியல், திராவிட ஆதரவு - வைரமுத்துஅரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும்! ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.

திருவாள்ளுவர் கழகம் - முத்துக்குமாரசாமி தம்பிரான், திருக்குறள், பிஜேபி, தருண் விஜய்

திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

19-06-2016


Tarun Vijay, his wife at Chennai airport 15-06-2016

[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!, பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.

[2]http://www.dhinasari.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9353-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html

[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article7556712.ece

[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவமாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST

[6] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf

[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..

https://www.facebook.com/search/results.php?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&init=public

[8]http://www.dinamani.com/india/2015/08/23/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5/article2988276.ece?service=print

[9] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf

[10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.

கண்ணுதல், பொதுமறை குறள்தான் குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

திருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு!

ஜூன் 19, 2016

திருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு!

18-06-2016 தருன் விஜய்கங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் தருண் விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.

Going places-School students with the 12-foot stone sculpture of Thiruvalluvar at Koolipatti village in Namakkal on Tuesday Photo-S.P.Saravananகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..

Tarun Vijay, his wife at Chennai airport 15-06-2016

திருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.

Thiruvalluvar statue - Kanyakumariகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை கூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும்! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

மூன்று சிலைகளா - கன்னியாகுமரி, மகாபலிபுரம், நாமக்கல்எத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன?: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:

  1. கன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன
  2. திருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].
  3. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.
  4. 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

19-06-2016

[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/06/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/article3489543.ece

[3] மாலைமலர், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.

[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/19021027/1019877/thiruvalluvar-statue-goes-to-ganga.vpf

[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தருண் விஜய், June 18, 2016.

[7] http://www.newindianexpress.com/states/tamil_nadu/12-feet-tall-Thiruvalluvar-statue-begins-its-journey-to-the-Ganges/2016/06/15/article3482776.ece

[8] http://ns7.tv/ta/tharun-vijay-started-thiruvalluvar-ganga-journey.html

[9]

[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1545970

[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.

[13] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=225033

[14] Once it was decided that a statue would be installed, the movement approached L.M.P. Kumaresan, a fifth generation sculptor, of Koolipatti village in the district who completed the work in 35 days at a total cost of Rs. 20 lakh. ‘The 10.5-tonne raw stone was mined from the foothills of Kolli Hills. It was carved by a 20-member team which worked round-the-clock to complete the 12-foot sculpture weighing 4.5 tonnes,” he added. He said that guidance from his father, who is also a sculptor, helped him to complete the work successfully.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/thiruvalluvar-statue-all-set-to-embark-on-haridwar-journey/article8729907.ece