Archive for the ‘காஷ்மீரம்’ Category

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்! [3]

Bharat sakti, Aurobindo 1904-08

வீக்என்டை ஜாலியாகக் கழித்த விதம்என்றாகியது: இவர்கள் முன்னமே  எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:

  1. இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
  2. ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
  3. “பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
  4. 130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
  5. “பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
  6. 1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
  7. “பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
  8. “பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
  9. தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
  10. கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!

Suddhananda Bharati

ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.

Pondy Lit Fest - S G Suraya

தமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?

PondyLitFest 2019-a lady lecturing standing on a table

தமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது.  வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.

PondyLitFest 2019- Hindi song

தூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.

© வேதபிரகாஷ்

07-10-2019Shenbaga convention centre, Puducherry

[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST

[2] Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.

Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece

[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST

[4] https://theprint.in/opinion/india-right-wing-mind-different-voices-within-left-wing/301461/

[5] DD, Pondy Lit Fest: A two day literature festival in Puducherry, Oct 4, 2019

[6] https://www.youtube.com/watch?v=atGA_Vl8hFE

[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம்வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

Pondy Lit Fest -Tavleen singh, RAW, Kiran Bedi inaguration

சித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within-photo

வலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.

Pondy Lit Fest - left, right ideological struggle

வலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர்,  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.

Pondy Lit Fest -Tavleen singh, and others

சித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம்  முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.

Empty chairs, but no mind toaccommodate

தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள்! இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா? அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within

வலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:

  1. சமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  2. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  3. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.

சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது! காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது! நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது!

© வேதபிரகாஷ்

07-10-2019

Pondy Lit Fest -audience

[1] The Print, Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within, Abhijit Iyer-Mitra

Updated: 29 September, 2019 4:01 pm IST

[2] https://theprint.in/opinion/pondy-lit-fest-shows-indias-right-wing-has-more-disagreements-within/298483/

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

Saudi Arabia and its flag

பிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

  • ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].

என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:

  • சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].
  • அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]
  • வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]
  • கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]
  • சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.

Saudi royal life

இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

Saudi women

சவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன?: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்?”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்!

Saudi women protesting

சவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.

Saudi worker

இஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.

Saudi workerker striking

இலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.

வேதபிரகாஷ்

14-04-2013


[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.

[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=681845

[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

ஓகஸ்ட் 20, 2012

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].

The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[2]
The country belonged to all and people are free to live in any part of the country[3]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[4]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[5]

அதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்?

அவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?

இருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே?

ஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை?

சோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்?