Archive for the ‘நெருப்பு’ Category

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)

ஏப்ரல் 11, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)

PHOTO CAPTION

சோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].

PHOTO CAPTION

105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.

PHOTO CAPTION

அன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].

Sonia attending Lingayat conference April.3

இதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.

Sonia honoured by Lingayat - but a woman was shut down by police forcefully

கிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா?

Sonia attending Lingayat conference Aprl 2012

என்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.

PHOTO CAPTION

சாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்

Sonia attending Lingayat conference April.2

அட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள்? சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்

PHOTO CAPTION

ஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது

PHOTO CAPTION

இவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க

பலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].

PHOTO CAPTION

சோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.

லிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா?: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

PHOTO CAPTION

வெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.

வேதபிரகாஷ்

11-04-2013


[1] The Congress, which is ridden by factionalism in Karnataka, is hoping for a revival through Sonia Gandhi, who is on a two-day visit to the state. With just a year for the assembly elections, Sonia made the right beginning by participating in the Guruvandana programme of Shivakumara Swami, the pontiff of the Sri Siddaganga Mutt, the most powerful institution of Lingayats, the largest community in the state. Her visit is seen as a move by the Congress to woo the Lingayats, who were rallying behind former CM B.S. Yeddyurappa and the BJP for the last one decade.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2136817/Sonia-makes-poll-point-pontiffs.html#ixzz2Q9TGX71i
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[5]  A woman was beaten up by police today for showing black flag to the Congress President Sonia Gandhi in Tumkur, during the birthday celebration of Siddaganga Math head. A young woman tried to disrupt Mrs Gandhi’s speech during the ceremony. As she began her speech, the woman, seated among the audience, suddenly rose and waved a black flag demanding Scheduled Caste (SC) status for her community Madiga Dandora. The police immediately swung into action and beat her up. She was then taken away from the venue even as some of her supporters shouted slogans.

http://www.ndtv.com/article/india/woman-beaten-by-cops-after-trying-to-disrupt-sonia-gandhi-s-rally-in-karnataka-203518

[6] Members of the vedike, who along with leaders of the Karnataka Rajya Dalit Mahasabha and Christian and Muslim organisations, staged a protest here on Wednesday, alleged that attempts were being made to hush-up the incident.

http://www.thehindu.com/todays-paper/tp-national/cbi-probe-sought-into-suicides-at-chowli-math/article4604721.ece

[7] Members of the vedike, who along with leaders of the Karnataka Rajya Dalit Mahasabha and Christian and Muslim organisations, staged a protest here on Wednesday, alleged that attempts were being made to hush-up the incident.

http://www.thehindu.com/todays-paper/tp-national/cbi-probe-sought-into-suicides-at-chowli-math/article4604721.ece

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

ஏப்ரல் 11, 2013

 சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

Jagannaath Swami - colour photo

மூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.

Pranav Swami - colour photo

சிவகுமார்,  ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.

KPN photo

நிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.

KPN photo

அஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.


[6] The mutt, which attracts followers from the Lingayat community, has been dogged by controversies over property related issues.

http://articles.timesofindia.indiatimes.com/2013-04-08/bangalore/38372031_1_suicide-note-seer-pontiffs