மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!
இப்படி காங்கிரஸ் கமன்ட் அடித்து, செய்தியாக்கியது.
மக்கள் சரியாக கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.
உண்மையில் எல்லா அரசியல்வாதிக்கும் கிரிக்கெட்டில் பங்கு உள்ளது, எப்படி சினிமா, மற்ற தொழில்லளில் பங்கீடு உள்ளதோ, அதுபோல!
மோடியைக் கண்டால் இன்று எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவது தெரிகிறது!
மோடியைப் பற்றி பேசினால், விமர்சனம் செய்தால் இப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாகவே செய்கிறார்கள். ஏனெனில், பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லிவிட்டால், மற்றவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுகிறது.
இப்படிதான், சோனியா ஏதோ சொல்ல, இனிமேல் நான் இத்தாலியிலேயே கடிதம் எழுதிகிறேன் என்றாராம்!
பிரச்னையின் பின்னணியில் நரேந்திர மோடி?
First Published : 16 Apr 2010 12:00:00 AM IST
Last Updated :
புது தில்லி, ஏப்.15: கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் நாளுக்கு நாள் வெவ்வேறு திசையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பிரச்னையின் மையம் மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூரை விட்டு அகலவில்லை. இருந்தாலும் தற்போது இந்த விவகாரத்துக்கு முழு முதற் காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களின் பங்கு விவரம் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலை வெளியிட வேண்டாம் என சசி தரூர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக ஐபிஎல் ஆணையர் லலித் மோடி குறிப்பிட்டார். ஆனால் போட்டிகள் மற்றும் ஏல முறைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பட்டியலை வெளியிட்டதாகக் கூறினார்.
கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களில் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கருக்கு உள்ள 25 சதவீத பங்குகளில் 19 சதவீதம் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும்.
கொச்சி அணி உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐபிஎல் ஆணையர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருக்குதலில் செயல்படுவது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. எங்களை எந்த பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதானி குழுமத்திற்கும் நரேந்திர மோடிக்கும் குஜராத் ஐபிஎல் அணியில் பங்கு உள்ளது. கொச்சி ஐபிஎல் அணி ஏலத்தில் வெற்றி பெற்றவுடன் இந்நிறுவன உரிமையாளர் பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவாரிடம் பேசி எந்த நகரை தேர்வு செய்யலாம் என்று கேட்டார். உடனே அவர் நீங்கள் எந்த நகரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அது உங்கள் விருப்பம் என்றார். இதையடுத்தே கொச்சியைத் தேர்வு செய்தோம்.
ஐபிஎல் தொடக்க ஏலத்தின் போது ராஜஸ்தான் முதல்வராக இருந்தார் வசுந்தரா ராஜே. அப்போது வசுந்தரா ராஜேவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்ஆமதாபாத் அணியைக் கொண்டுவருமாறு லலித் மோடியை நிர்பந்தித்தனர். இதில் முழுக்க முழுக்க அரசியல் உள்ளது.
கொச்சி அணி உரிமையாளர்கள் பட்டியலையும் அவர்களுக்குள்ள பங்கு விவரத்தையும் வெளியிட்ட லலித் மோடி, பிற அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தை வெளியிடாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். கொச்சி அணியைப் பொறுத்தவரை வெளிப்படையாக உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கெய்க்வாட் கூறினார்.
குஜராத் அரசு மறுப்பு: கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டை குஜராத் மாநில அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மேம்பாட்டாளர்கள் சிலர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். ஆனால் அது ஏல தொகையை தீர்மானிப்பது தொடர்பான கூட்டம் அல்ல. எந்த நிறுவனம் குஜராத் பெயரில் ஏலம் எடுத்து விளையாடினாலும் அதை மாநில அரசு வரவேற்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
உண்மையை மறைத்து நடிக்கும் காங்கிரச்காரர்கள்: இந்நிலையில், நேற்று பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”சசி தரூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதனால், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சசி தரூரும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளித்துள்ளார்; நாங்கள் எதையும் கூற முடியாது,” என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியை நேற்று சசி தரூர் சந்தித்துப் பேசினார். முப்பது நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சசி தரூர், ”கிரிக்கெட் அணி விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன்,” என்றார். நேற்று முன்தினம் இரவும் அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியை சசி தரூர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி மீது புகார்: ‘ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்பந்தத்தின் பேரில், கொச்சி அணி மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி வருகிறார்’ என, கொச்சி அணியின் தகவல் தொடர் பாளர் சத்தியஜித் கெய்க்வாட் கூறியுள் ளார். அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அணியின் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட்டதைப் போல, மற்ற அணியின் பங்குதாரர்கள் பெயர்களையும் லலித் மோடி வெளியிட வேண்டும். கம்பெனி சட்டப்படி, இதர ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்கள் விவரங்களையும் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம். எதையும் மறைக்கவில்லை. எங்கள் அணியைப் பற்றி லலித் மோடி தொடர்ந்து புகார் தெரிவித்தால், அவரைப் பற்றிய பல விவரங்களை நாங்கள் வெளியிட நேரிடும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், கொச்சி அணியின் உரிமையாளர்களை லலித் மோடி துன்புறுத்துகிறார். கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆதாரம் பற்றி விசாரணை நடத்தினால், மற்ற அணிகளின் நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆமதாபாத் ஐ.பி.எல்., அணிக்கு ஆதரவாக வெளியேற வேண்டும் என, குஜராத் முதல்வர் மோடியும், லலித் மோடியும் அடானி குரூப்புடன் இணைந்து எங்களை நிர்பந்தம் செய்தனர். போட்டியிலிருந்து விலக எங்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.
சோனியாவுடன் ஆலோசனை: ஐ.பி.எல்., கொச்சி அணி ஊழல் புகாரில் சிக்கிய, மத்திய இணையமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களை விவரித்தார். அதனால், அவரின் பதவி இப்போதைக்கு பறிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்க மறுத்து விட்டாலும், தன் தரப்பு நியாயங்களை சசி தரூர் எடுத்துக் கூறியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சசி தரூர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி இடையே உடன்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து தரூருக்கு எதிராக செயல்படுவதாகவும் சில தரப்பில் கூறப்படுவதால், இப்போதைக்கு தரூரின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.