Archive for the ‘இத்தாலி மொழியில் கடிதம்’ Category

மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!

ஏப்ரல் 16, 2010

மோடி இந்தியாவின் தாவூத் இப்ராஹிம் ஆகப் பார்க்கிறார்!

இப்படி காங்கிரஸ் கமன்ட் அடித்து, செய்தியாக்கியது.

மக்கள் சரியாக கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

உண்மையில் எல்லா அரசியல்வாதிக்கும் கிரிக்கெட்டில் பங்கு உள்ளது, எப்படி சினிமா, மற்ற தொழில்லளில் பங்கீடு உள்ளதோ, அதுபோல!

மோடியைக் கண்டால் இன்று எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவது தெரிகிறது!

மோடியைப் பற்றி பேசினால், விமர்சனம் செய்தால் இப்பொழுதெல்லாம் ஜாக்கிரதையாகவே செய்கிறார்கள். ஏனெனில், பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லிவிட்டால், மற்றவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடுகிறது.

இப்படிதான், சோனியா ஏதோ சொல்ல, இனிமேல் நான் இத்தாலியிலேயே கடிதம் எழுதிகிறேன் என்றாராம்!

பிரச்னையின் பின்னணியில் நரேந்திர மோடி?

First Published : 16 Apr 2010 12:00:00 AM IST

Last Updated :

புது தில்லி, ஏப்.15: கொச்சி ஐபிஎல் அணி விவகாரம் நாளுக்கு நாள் வெவ்வேறு திசையில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பிரச்னையின் மையம் மத்திய வெளியுறவு இணையமைச்சர் சசி தரூரை விட்டு அகலவில்லை. இருந்தாலும் தற்போது இந்த விவகாரத்துக்கு முழு முதற் காரணம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களின் பங்கு விவரம் சமீபத்தில் வெளியானது. இந்த பட்டியலை வெளியிட வேண்டாம் என சசி தரூர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக ஐபிஎல் ஆணையர் லலித் மோடி குறிப்பிட்டார். ஆனால் போட்டிகள் மற்றும் ஏல முறைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பட்டியலை வெளியிட்டதாகக் கூறினார்.

கொச்சி ஐபிஎல் அணி உரிமையாளர்களில் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கருக்கு உள்ள 25 சதவீத பங்குகளில் 19 சதவீதம் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 70 கோடியாகும்.

கொச்சி அணி உரிமையாளர் விவரத்தை லலித் மோடி வெளியிட்டதற்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் காரணம் என்று கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் சத்யஜித் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐபிஎல் ஆணையர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருக்குதலில் செயல்படுவது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. எங்களை எந்த பணியும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். அதானி குழுமத்திற்கும் நரேந்திர மோடிக்கும் குஜராத் ஐபிஎல் அணியில் பங்கு உள்ளது. கொச்சி ஐபிஎல் அணி ஏலத்தில் வெற்றி பெற்றவுடன் இந்நிறுவன உரிமையாளர் பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவாரிடம் பேசி எந்த நகரை தேர்வு செய்யலாம் என்று கேட்டார். உடனே அவர் நீங்கள் எந்த நகரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அது உங்கள் விருப்பம் என்றார். இதையடுத்தே கொச்சியைத் தேர்வு செய்தோம்.

ஐபிஎல் தொடக்க ஏலத்தின் போது ராஜஸ்தான் முதல்வராக இருந்தார் வசுந்தரா ராஜே. அப்போது வசுந்தரா ராஜேவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும்ஆமதாபாத் அணியைக் கொண்டுவருமாறு லலித் மோடியை நிர்பந்தித்தனர். இதில் முழுக்க முழுக்க அரசியல் உள்ளது.

கொச்சி அணி உரிமையாளர்கள் பட்டியலையும் அவர்களுக்குள்ள பங்கு விவரத்தையும் வெளியிட்ட லலித் மோடி, பிற அணிகளின் உரிமையாளர்கள் விவரத்தை வெளியிடாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். கொச்சி அணியைப் பொறுத்தவரை வெளிப்படையாக உள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கெய்க்வாட் கூறினார்.

குஜராத் அரசு மறுப்பு: கொச்சி ஐபிஎல் அணியின் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டை குஜராத் மாநில அரசு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மேம்பாட்டாளர்கள் சிலர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். ஆனால் அது ஏல தொகையை தீர்மானிப்பது தொடர்பான கூட்டம் அல்ல. எந்த நிறுவனம் குஜராத் பெயரில் ஏலம் எடுத்து விளையாடினாலும் அதை மாநில அரசு வரவேற்கும் என்று மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

கிடப்பில் சசி தரூர் விவகாரம் : கருத்து தெரிவிக்காமல் காங்., மவுனம்
ஏப்ரல் 16,2010,00:00  IST
Front page news and headlines today
ஐ.பி.எல். கொச்சி விவகாரம்: ‘ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி ஏலம் தொடர்பான புகாரில், மத்திய அமைச்சர் சசி தரூருக்கு எதிராக ஆதாரம் இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால், அது பற்றி வேறு எதுவும் கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பில், அடுத்த ஆண்டு முதல் கொச்சி அணியும் இடம் பெறுகிறது. இந்த கொச்சி அணியை ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சதவீத பங்குகளை, மத்திய அமைச்சர் சசி தரூரின் தோழியான சுனந்தா புஷ்கர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர் சசி தரூர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என புகார் கூறப்பட்டது. சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘நான் டில்லி திரும்பியதும், சசி தரூர் மீதான புகார்கள் குறித்த உண்மை நிலவரங்களை விசாரிப்பேன். அவற்றில் உண்மை இருந்தால், சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


உண்மையை மறைத்து நடிக்கும் காங்கிரச்காரர்கள்: இந்நிலையில், நேற்று பார்லிமென்டிற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”சசி தரூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். அதனால், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. சசி தரூரும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பதில் அளித்துள்ளார்; நாங்கள் எதையும் கூற முடியாது,” என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியை நேற்று சசி தரூர் சந்தித்துப் பேசினார். முப்பது நிமிடத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பிற்குப் பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் சசி தரூர், ”கிரிக்கெட் அணி விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் கேட்டுக் கொண்டால், பார்லிமென்டில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாரும் எனக்கு உத்தரவிடவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன்,” என்றார். நேற்று முன்தினம் இரவும் அந்தோணி மற்றும் பிரணாப் முகர்ஜியை சசி தரூர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி மீது புகார்: ‘ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நிர்பந்தத்தின் பேரில், கொச்சி அணி மீது அடுக்கடுக்காக புகார்களை கூறி வருகிறார்’ என, கொச்சி அணியின் தகவல் தொடர் பாளர் சத்தியஜித் கெய்க்வாட் கூறியுள் ளார். அவர் மேலும் கூறியதாவது: எங்கள் அணியின் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட்டதைப் போல, மற்ற அணியின் பங்குதாரர்கள் பெயர்களையும் லலித் மோடி வெளியிட வேண்டும். கம்பெனி சட்டப்படி, இதர ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர்கள் விவரங்களையும் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம். எதையும் மறைக்கவில்லை. எங்கள் அணியைப் பற்றி லலித் மோடி தொடர்ந்து புகார் தெரிவித்தால், அவரைப் பற்றிய பல விவரங்களை நாங்கள் வெளியிட நேரிடும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில், கொச்சி அணியின் உரிமையாளர்களை லலித் மோடி துன்புறுத்துகிறார். கொச்சி அணியை ஏலத்தில் எடுத்த ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆதாரம் பற்றி விசாரணை நடத்தினால், மற்ற அணிகளின் நிதி ஆதாரங்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். ஆமதாபாத் ஐ.பி.எல்., அணிக்கு ஆதரவாக வெளியேற வேண்டும் என, குஜராத் முதல்வர் மோடியும், லலித் மோடியும் அடானி குரூப்புடன் இணைந்து எங்களை நிர்பந்தம் செய்தனர். போட்டியிலிருந்து விலக எங்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு கெய்க்வாட் கூறினார்.

சோனியாவுடன் ஆலோசனை: ஐ.பி.எல்., கொச்சி அணி ஊழல் புகாரில் சிக்கிய, மத்திய இணையமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நடந்த சம்பவங்களை விவரித்தார். அதனால், அவரின் பதவி இப்போதைக்கு பறிக்கப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்க மறுத்து விட்டாலும், தன் தரப்பு நியாயங்களை சசி தரூர் எடுத்துக் கூறியிருக்கலாம் என, நம்பப்படுகிறது. சசி தரூர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் ஐ.பி.எல்., கமிஷனர் லலித் மோடி இடையே உடன்பாடு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து தரூருக்கு எதிராக செயல்படுவதாகவும் சில தரப்பில் கூறப்படுவதால், இப்போதைக்கு தரூரின் பதவிக்கு ஆபத்தில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் கூறின.

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

ஜனவரி 30, 2010

மோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா!

மோடி, “நான் மத்திய அரசுக்கு பல கடிதங்களை எழுதிவிட்டேன்……………………அவர்களுக்கு எந்த மொழியில் புரியுமோ, அந்த மொழியில் எழுதி, உணவு பொருட்களின் மீதான உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி எழுதிவிட்டேன். ஆனால் ஏழை மக்களைப்பற்றி அவர்களுக்கு இரக்கமே இல்லை போலும்…………………இனி நான் இத்தாலியில்தான் ஒரு கடிதம் எழுதவேண்டும்“, என்றதாக செய்திகள் வெளிவந்துள்ளன!

अहमदाबाद के निकट पाटण में आयोजित गरीब कल्याण मेले में उन्होंने चुटीले अंदाज में कहा, ‘मैंने बढ़ती कीमतों पर सरकार को कई बार लिखा है, लेकिन उसका कोई असर नहीं हुआ। कांग्रेस को लोगों के दुख-दर्द से कोई लेना-देना नहीं है। वह बढ़ती कीमतों को काबू करना ही नहीं चाहती। इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा।’ Speaking at a Garib Kalyan Mela at Patan, Modi said, “I have written a number of letters to central government… in the language they can understand urging them to take steps, to do something about the rising prices of food items. But, I think they have no sympathy for the poor people… now, I need to write a letter in Italian.” (டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்வது) He said the letters were in languages he thought the people in the government at the Centre understood, but no one seemed to be interested in controlling price rise. “Now I think I will have to write a letter in Italian and see if anyone takes notice of it,” he said, apparently hinting at Ms. Gandhi’s Italian background (தி இந்து சொல்வது).

ஒருவேளை யாராவது கவனிக்கூடும் என்றால், அப்பொழுது நான்  இனி இத்தாலியில்தான் ஒரு கடிதத்தை எழுதவேண்டும் நினைக்கிறேன்“! (தி இந்துவின்படி).

“इसलिए अब इतालवी भाषा में पत्र लिखना पड़ेगा”, ……………….”ஆகையால் இனி இத்தாலி மொழியில் கடிதம் எழுதினால் படிப்பார்கள்போலும்” – இதை, ஆங்கிலத்தில் இப்படி விதம் விதமாக எழுதி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்! ஏனனெல், இந்தி பத்திரிக்கைகளில், தலைப்புச் செய்தியாகவோ-முக்கியச் செய்தியாகவோ – இது காணப்படவில்லை!

உடனே காங்கிரஸ்காரர்களுக்கு கோபம் வந்துவிட்டது! தமது தலைவரின் இந்தியரல்லாத விஷயத்தைத் தான் மோடி, இப்படி மறைமுகமாகக் கூறுகிறார் என்று வரிந்து கட்டிக்க்கொண்டு வந்துவிட்டனர்!

ஆமாம், நம்ம கருணாநிதி, ஜெயலலிதா கூறியதைவிடவா மோடி கூறிவிட்டார்?

அவர்கள் இதைவிட நிறையவே பேசியிருக்கிறார்கள்.

திருமாவளவன் போன்ற கோஷ்டிகளைப் பற்றி கவலையே இல்லை!