Archive for the ‘அத்துமீறல்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு முதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].

பாலியல் புகார்போக்சோவில் வழக்குப்பதிவுகைதான மடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடாதிபதியை சந்தித்த ராகுல் காந்திஅடுத்த பிரதமராக ஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார்.  அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.

05-09-2022 அன்று பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதுமதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தினமலர், மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு, பதிவு செய்த நாள்: அக் 25,2022 00:02

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3153752

[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST

[4] https://tamil.news18.com/news/national/karnataka-lingayath-mutt-seer-basava-siddalinga-swami-dies-by-suicide-note-found-796801.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி, By Nantha Kumar R, Updated: Tuesday, October 25, 2022, 15:30 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-kanchugal-bande-mutt-pontiff-basavalinga-swamy-suicide-after-writes-death-note-482143.html

[7] மாலை முரசு, ராகுல்காந்தி சந்தித்த மடாதிபதி போக்சோவில் கைது: மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் !!, Ramadevi, Sep 2, 2022 – 07:22; Updated: Sep 2, 2022 – 07:24

[8] https://www.malaimurasu.com/posts/india/Unidentified-person-entered-Indian-border

[9]  புதிய தலைமுறை, கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார்– 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, 01-09-2022 01.29 PM

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/146435/Karnataka-Sex-complaint-against-abbot-7-days-to-file-report

[11] தமிழ்.இந்து, கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2022 07:59 AM, Last Updated : 06 Sep 2022 07:59 AM

[12] https://www.hindutamil.in/news/india/861893-basavalinga-swamy-a-young-abbot-of-karnataka-commits-suicide.html

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (1)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (1)

Molesting a woman, taking bath etc

என் கையைப் பிடித்து இழுத்தான்என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது: தமிழக கவர்னர்களில், இப்பொழுது நியமனம் செய்து பதவியில் உள்ளவர், உண்மையில் “கவர்னர்” போல செயல்படுகிறார். ஆனால், பிஜேபி-நாமினி மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர் என்று தமிழக ஊடகங்கள் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக ஊடகங்களில் உள்ளோர் பெரும்பாலோனோர் இடதுசாரி, ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்த வாதிகள் என்பது தெரிந்த விசயம். அவர்களில் கிருத்துவர்-முஸ்லிம்களும் கனிசமாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது என்பது தவறில்லை, ஆனால், செய்தி சேகரிப்பு, தொகுப்பு, வெளியிடுதல், புலன்-விசாரணை ஜார்னலிஸம் [Investigation Journalism] போன்றவற்றில் உள்ள பாரபட்சம் அதிகமாகவே இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு, மோடி-தாக்குதல், பார்ப்பனீய-வெறுப்பு என்ற ரீதியில் இறுதியில் இலக்காக அமைந்துள்ளது இந்துமதம், இந்து நம்பிக்கைகள், இந்துக்கள் என்று முடிவதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்பொழுது, கவர்னர் விசயத்தில், “என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Molesting a woman, taking bath etc-police action

தாக்கப்படுவது கவர்னரா, சித்தாந்தமா, பெண்மையா?: தினம்-தினம் தமிழகத்தில் கற்பழிப்பு, தாலியறுப்பு, பாலியல் வன்மங்கள், கொடூரங்கள் என்று நடத்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பாதிக்கப்படுவது பெண்கள், பெண்மை. பெண் எல்லாவிதங்களிலும் பாதிக்கப் படுகிறாள். ஆனால், ஊடகக்காரர்கள், அவற்றை செய்திகளாகப் போடும் போது, ஏதோ பரபரப்பு, ஜனரஞ்சகமான ரீதியில் தான் போட்டு வருகிறார்கள். அவற்றை எப்படி, எவ்வாறு, ஏன் தடுக்கப்பட வேண்டும் போன்றவற்றை அலசுவதில்லை. திராவிட சித்தாந்தம் முதலியவற்றால், அவை கொச்சைப்படுத்தப்படுகின்றன. “விஜய்” போன்ற டிவிக்கள் தாலி போன்ற சமூக-பாரம்பரிய விசயங்களைக் கேவலப்படுத்தியதாலும், திராவிட சித்தாந்திகள் தாலியறுப்பு போன்ற நிகழ்ச்சிகளினாலும், தாலியறுப்பு திருடர் கூட்டங்கள் வலுப்பெற்று, தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். இன்ற்றைக்கு கம்மலை திருடுபவன், காதோடு அறுத்துச் சென்றுள்ளான். இத்தகைய ஆபாசமான, கேவலமான, தூஷிக்கும் போக்குள்ள செய்திகளால் சட்டமீறல்கள் அதிகமாகின்றன. ஆனால், வக்கிர சித்தாந்தவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊடகத்துறையில் இத்தகைய போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பெண்மை பாதிக்கப் படுகின்ற விசயங்களில், எல்லோரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Governor visit to Caddalore- 15-12-2017-Vikatan

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல!,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல!,” என்று விகடன் கதை ஆரம்பித்துள்ள்தே, ஏற்லெனவே தீர்மானித்து எழுதிய நிலையைக் காட்டுகிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்றவருக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது,” என்று மேலும் வர்ணிப்பது தமாஷுதான், ஆனால், விவகாரமானது. விகடன் தொடர்கிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குச் சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது. துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு 15-12-2017 அன்று பயணமானார் ஆளுநர். அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதுவும் “பெண்ணின் கை பிடித்து இழுத கதை போன்றது” என்பதை அறிந்து கொள்ளலாம். போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர்.

Governor before bathroom-

பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்”  போன்றது செய்தியா, கதையா?:  அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில்  கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாகரிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும்? இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா? இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்[3].

Governor before bathroom-Gowri clarifies

இச்செய்தியை எழுதியவர் யார், அவரது மனப்பாங்கு என்ன?: சரி இதை எழுதியுள்ளவர் யார் என்று பார்த்தால், “அ. சையது அபுதாஹிர்” என்றுள்ளது. இவர் முஸ்லிம் என்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்றாலும், எழுதியுள்ள தோரணை விசமத்தை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் முஸ்லிமாக இருந்து, செக்யூலரிஸ முகமூடி போட்டுக் கொண்டு, இந்துவிரோதியாக செயல்படுவது, தமிழகத்தில் காணலாம். “பெரியாரிஸம்” பேசி, இந்துக்களை திட்டலாம், ஆனால், அதே பகுத்தறிவுடன், எந்த துலுக்கனும், கிருத்துவனும், இஸ்லாம் அல்லது கிருத்துவத்தை விமர்சிப்பதில்லை. இந்த பாரபட்ச செக்யூலரிஸத்தைத்தான் போலித்தனம் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. நடுநிலமையில் இருந்திருந்தால், அந்த விசமமும் வக்கிரமாக மாறியிருக்காது. எனவே, கவர்னர் விசயத்தில், இவ்வாறு கேவலமாக செய்திகளை வெளியிடும் எண்ணமே அவர்களுடைய வக்கிரத்தைக் காட்டுகிறது. “தமிழ்.வெப்துனியா,” தனக்கேயுரிய பாணியில், “governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom” என்று லிங்கில், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதும் அவர்களின் அசிங்கமான மனங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

Suba veerapandi-twitter on governor visit

பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்: சமூக வலைதளங்களில் ஆளுநருக்கு கடுமையான கண்டங்கள் குவிந்துவருகின்றன[4]. உண்மையா-பொய்யா என்று பார்க்கும் போக்கில்லாத பெரும்பாலோருக்கு, இது கையான கலையாகி விட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பெண் குளிக்கும்போது, ஆளுநர் பாத்ரூம் கதவை திறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது இழிவானது மற்றும் தவறானது[5]. கடலூர் மாவட்டத்தில், ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிட ஆளுநர் சென்றிருந்தார். திருமதி.கௌரி என்பவரது வீட்டின் கழிவறையை முதலில், பெண் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர், கழிவறையை பார்வையிட்டார். அதன்பிறகுதான், காலியாக இருந்த கழிவறையை ஆளுநர் பார்வையிட்டார்[6]. ஆனால், தொலைக்காட்சிகளில் இதுதொடர்பாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடலூரில் இருந்து சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மாவட்ட காவல் துறை வாகனமே விபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளது[7]. வரும் காலங்களில், ஆளுநர் தொடர்பான விவகாரங்களை, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த பிறகே வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

16-12-2017

IE-Governor, bathroom, caddalore

[1] விகடன், சோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு!, அ. சையது அபுதாஹிர், Posted Date : 18:20 (15/12/2017); Last updated : 18:39 (15/12/2017)

[2] https://www.vikatan.com/news/tamilnadu/110903-tragedy-of-governor-visit.html

[3] தமிழ்.வெப்துனியா, பெண் குளிப்பதை பார்க்கவில்லையாம்ஆளுநர் தரப்பு விளக்கம்!!, வெள்ளி, 15 டிசம்பர் 2017.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom-117121500060_1.html

 

[5] விகடன், கடலூரில் ஆளுநர் ஆய்வு சர்ச்சை விவகாரம்..! ஆளுநர் மாளிகை விளக்கம், கார்த்திக்.சி, Posted Date : 01:22 (16/12/2017); Last updated : 01:22 (16/12/2017)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/110931-governor-house-denies-cuddalore-incident.html

[7] பத்திரிக்கை.காம், பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம், Posted on December 15, 2017 at 9:26 pm by சுகுமார்.

[8] https://patrikai.com/news-that-the-governor-had-seen-women-bathing-in-the-bathroom-was-not-true-additional-chief-secretary-explained/

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

ஜூன் 27, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

Temple parts kept in thomas museum, Mylapore

ஜி.யூ.போப்பும், தாமஸ் கட்டுக்கதையும்: போப்பின் புத்தகத்தின் முன்னுரையைப் படித்துப் பார்த்தால், கிருத்துவ மிஷினரிகளின் எண்ணம் புலப்படும். அவர்கள் வள்ளுவர் மற்றும் குறள் மீது ஏன் அத்தகைய ஆர்வம் கொண்டார்கள் என்பதும் வெளிப்படும். ஆனால், தமிழ் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர் முதலியோர், போப்பின் புத்தகத்தை ஒருமுறையாவது படித்தார்களா இல்லையா, குறைந்த பட்சம் முன்னுரையையாவது வாசித்து, விசயங்களை அறிந்தார்களா இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லை, படித்தறிந்து தான், இவ்வாறு நடந்து கொள்கிறார்கள், என்றால், அவர்கள் கிருத்துவர்களின் ஏஜென்டுகளாக, இத்தனை ஆண்டுகளாக, செயல்பட்டுக் கொண்டு வந்துள்ளனர், வருகிறார்கள் என்று தெரிகிறது. இனி, போப் சொல்வதைப் பார்ப்போம். “வள்ளுவர் ஒரு பறையர் மற்றும் நெசவாளி. அவர் இன்றைய மெட்ராஸின் புறப்பகுதியான சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஏலேல சிங்கன் அவரது நெருங்கிய நண்பர் அல்லது அவரை ஆதரித்தவன். அவன் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தான்,” என்று முன்னுரையில் ஆரம்பித்து[1], அவ்விடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் கிருத்துவர்களுக்கு மிகுந்த அக்கரைக் கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில், அங்குதான் செயின்ட் தாமஸ் போதித்தார், வேலினால் குத்தப்பட்டு, இறந்து, புதைக்கப்பட்டுள்ளார்[2]. இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது,” என்று தாமஸ் கட்டுக்கதையை நுழைத்தார்[3].  இதை அந்த மெத்தப் படித்த தமிழ் வல்லுனர்களுக்கு தெரியாதா?

Bleeding cross- planted by the Portuguese im 1537 CE

ஜி.யூ.போப் தாமஸ் வந்து போதித்து, கிருத்துவ நூல்களை வைத்துதான் திருக்குறள் எழுதினார் என்றது: பிறகு, போப் / போப் ஐயர்[4], திருக்குறள் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது, “மயிலாப்பூர் நமக்கு சாந்தோம் என்றுதான் அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து, இங்கு கிருத்துவ சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. இங்கு ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றை நாம் காண்கிறோம். இங்குதான் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த பன்டானியஸ் என்பவர் போதித்தார். வள்ளுவர் எல்லா தத்துவங்களையும் தன்னுள் ஈர்த்த கவியாக இருந்திருந்திருந்ததால், அவருக்க்கு ஜைன மதம் பற்றித் தெரிந்திருந்தது, ஜாதிபேதங்களைப் பார்க்காதவராக இருந்தவரதலால் அந்நியவர்களுடன் பழகினார். ஏலேல சிங்கன் நண்பராக இருந்ததால், வெளிநாட்டுக்காரர்கள் வரவு பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தனது தோனியிலேயே கூட்டி வந்திருக்கலாம். ஆகையால், நான் சொல்வது என்னவென்றால், கடற்கரையில் இருந்த கிருத்துவ போதனையாளர்களுடன் அவர் இருந்ததை காண்கிறேன்; அவர்களது அலெக்சாந்திரிய தத்துவங்களை போதித்ததையும், வள்ளுவர் உள்வாங்கிக் கொண்டதையும் கவனிக்கிறேன். இவ்வாறு நாளுக்கு நாள் அந்த தாக்கத்தினால், அவற்றை திருக்குறளில் சேர்த்துக் கொண்டார் என்று முடிவுக்கு வருகிறேன்”, என்று முடிக்கிறார்[5]. அதுமட்டும் அல்லாது, உணர்ச்சிப் பூர்வமாக விசுவாசத்தோடு, “இந்த புனித ஸ்தலத்தில், அப்போஸ்தலரின் தியாகப்பணி தங்கியிருக்கிறது. “மலைமீது போதித்த கருத்துகள்” அந்த கிழக்கத்தைய புத்தகத்தில் அடங்கியுள்ளது……..அதனால், நான் குறள் உண்டாவதற்கு கிருத்துவ நூல்களும் மூலங்களாக இருந்தன, என்பதை தயங்காமல் கூறுவேன்,” என்று முடிக்கிறார்[6]. இதைத்தான் எல்லீஸும் சொன்னார். அந்த சந்தோசம்-சாமுவேல்-தெய்வநாயகம் கூட்டமும் சொல்கிறது! இனி வேதங்கள், வேதாங்கமங்கள் இவையெல்லாம் தேவையாயிற்றே?

Plaque put up in 20th cent- Saidapet - Little mount

போப் குறிப்பிடும்தாமஸ் கட்டுக்கதைபற்றிய ஆதாரங்களின் போலித்தனம்: 19ம் நூற்றாண்டில், போப் குறிப்பிடும் “ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றைப்” பற்றி பார்ப்போம்:

1.       ஆர்மீனியன் தெருவில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் 1712ல் கட்டப்பட்டது, 1772ல் மாற்றிக் கட்டப்பட்டது.

2.       சைதாபேட்டையில் உள்ள “சின்னமலை” கோவில், 18-19ம் நூற்றாண்டுகளில் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டப்பட்டது.

3.       பரங்கிமலையில் உள்ள சர்ச், அங்கிருக்கும்பெருமாள் / விஷ்ணு கோவிலை இடித்து 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை அருளாப்பா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4.       மயிலாப்பூர் / சாந்தோம் சர்ச்சும் 1523ல் அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

5.       அதேபோல, “லஸ் சர்ச்” என்று அழைப்படுகின்ற சர்ச் 1516ல், அங்கிருக்கும் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

6.       சின்னமலை மற்றும் பெரியமலையில் இருக்கும், கற்சிலுவைகள், போர்ச்சுகீசியரால், 16ம் நூற்றாண்டில் அங்கு வைக்கப் பட்டன.

7.       அந்த “ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு” பற்றி கிருத்துவர்களிடையே ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில், அவை 16-17ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. “ரத்தம் சொரிந்த சிலுவை” சுற்றிலும் எழுத்துகள் இருந்தன, இல்லை, பிறகு எழுதப்பட்டது என்று பலவாறான சர்ச்சைகள் உள்ளன. மேலும் ஒன்றிற்கு மேலாக பல சிலுவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதால், அவையெல்லாம் போலி என்று அப்பட்டமாக தெரிந்து விட்டது.

8.      தாமஸால் வரையப் பட்ட சித்திரம், முதலியவற்றை கார்பன் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டால் தேதி தெரிந்து விடும். அதேபோல, ரத்தம் படிந்திருப்பதாக சொல்லப் படும் மாதிரியை, “டி.எச்.ஏ” பரிசோதனைக்கு உட்படுத்தினால், “குளோனிங்” செய்தால், குட்டு வெளிப்பட்டுவிடும். ஆனால், அதை அவர்கள் செய்வதற்கு பயப்படுகிறார்கள். போப் ஏற்கெனவே, இந்த கட்டுக்கதையினை மறுத்து விட்டார்.

How thomas was killed in different countries-myth making

போப் போலித்னமான “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களைக் குறிப்பிட்டதன் பின்னணி: ஆகவே, போப் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே, 1886வது வருடத்தில் வெளிவந்த புத்தகத்தில், இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்று நோக்கத்தக்கது. அதாவது, எல்லீஸ், மகன்ஸி, பச்சனன் முதலியோர் போலி நூல்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். அந்நிலையில், எல்லீஸ், போப் முதலியோர் இத்தகைய போலி அத்தாட்சிகள் உருவாக்குவதில் ஈடுபட்டனர் போலும். அவ்விதத்தில் தான் “திருவள்ளுவர்” நாணயம் வெளிவந்துள்ளது. ஆனால், பிரச்சினையாகும் என்றபோது, அமுக்கி விட்டனர்.  போப் சொன்னதை கவனிக்க வேண்டும், “இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது”, அதாவது, அப்பொழுது, “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடியும் வளர்க்கத் தீர்மானித்தத்து வெளிப்படுகிறது. இந்த எல்லீஸ் கூட்டம் அதில் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.

  1. இங்கு, மேலே நிக்கோலஸ் டிர்க் என்பவர்[7] குறிப்பிட்டதை மறுபடியும், நோக்கத்தது, – “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது.
  2. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன.
  3. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”.
  4. லெஸ்லி ஓர்[8], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது.
  5. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.
  6. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

ஆகவே, இவர்கள் மிகப்பெரிய அகழ்வாய்வு மோசடி, போலி நூல்கள் உருவாக்கம், கள்ள-ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர திரிபு, புரட்டு மற்றும் மோசடி முதலியவற்றில் ஈடுப்பட்டனர் என்றாகிறது.

Many crosses found prove the forged-manufactured ones

கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் சண்டையில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது: இந்த ஆராய்ச்சிகளில் கிருத்துவ மிஷனரிகளின் [Christian Missionaries] பங்கும் நோக்கத்தக்கது.  இடைக்கால ஆரம்ப காலங்களில் (போர்ச்சுகீசிய வரவுகளில்) ஜெஸுவைட்டுகளின் மூலம் கத்தோலிக்க [Catholic] கிருத்துவ ஆதிக்கம் தான் இந்திய-ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டது. ஆங்கிலேயர் புரொடெஸ்டென்ட் [Protestant] கிருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.  இதனால், அவர்கள் கத்தோலிக்கர்களை நம்பவில்லை. 1857 முதல் சுதந்திர போர் அல்லது எழுச்சியைக் கூட அவர்களது சதி தான் என்றும் கிருத்துவத்தின் வீழ்ச்சி என்றும் நம்பினர்[9]. புரொடெஸ்டென்ட் கிருத்துவர் “தாமஸ் கட்டுக்கதை”யினை நம்பாதவர் மேலும் எதிர்ப்பவர். அந்நிலையில் எல்லீஸ், கால்டுவெல் முதலிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர், “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடி எடுத்துக் கொண்டு, பரப்ப ஆரம்பித்ததின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை”யினை, ஐரோப்பிய-அமெரிக்க கிருத்துவ வல்லுனர்கள் நிரூபித்து, ஒதுக்கித் தள்ளினர்[10].  கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை மறைக்க இந்த கட்டுக்கதையை உருவாக்கியதும் புலப்பட்டது. எல்லீஸ் கும்பலும் அதை ஜைனத்தைத் தூக்கிப் பிடித்தலில் செய்துள்ளது தெரிகிறது. ஆனால், அவர்களது மததுவேஷ, சிக்கல்-சன்டைகளில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது. தமிழ் வல்லுனர்களும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “எல்லீசர்” புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.

© வேதபிரகாஷ்

26-06-2017

Chinna malai forgeries- encroached temple and destroyed

[1] G. U. Pope, The Sacred Kural of Thiruvalluva-Nayanar with Introduction, Grammar, Translation, Notes, W. H. Allen & Co., London, 1886, Introduction,

[2] Then, he mentioned about Thomas getting killed at Mylapore, “A higher interest is imparted to the spot and its neighbourhood, at least to Christians, by the tradition (so long and lightly discredited, but now generally acknowledged to be authentic) that here S. Thomas preached, and here met his death by a spear (vel) such as the poet often speaks of, and was here buried”.

For this, G. U. Pope gives a note as follows – The reader may find a full discussion of this subject in Dr. German’s learned and instructive work, Die Kirche der Thomas Christen.

[3] Incidentally, the writings of the G. U. Pope have been full of “Thomas myth”, as could be noted from his “Introduction” of his book . pp. ii-iii.

[4] “போப் ஐயர்” என்று சாதாரணமாக சொல்லும் போது, “போப் ஐயங்கார்” என்று ஏன் சொல்வதில்லை என்று தெரியவில்லை. இல்லை, “போப் பறையர்” என்று கூட சொல்லலாமே?

[5]we may fairly, I say, picture him pacing along the sea-shore with the Christian teachers, and imbibing Christian ideas, tinged with the peculiarities of the Alexandrian school, and day by day working them into his own wonderful Kurral”.

[6] Then , finally he confirmed the myth as “authentic”, “It is undoubtedly a noteworthy fact that from this Mayilapur, on which the eyes of Christendom have ever rested as the one sacred spot in India of Apostolic labour, comes the one Oriental book, much of whose teaching is an echo of the ‘Sermon on the Mount’”, adding, “….I cannot feel any hesitation in saying that the Christian Scriptures were among the sources from which the poet derived his inspiration.”

[7] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[8] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

[9] Metcalf, Thomas R. Aftermath of Revolt: India 1857-1970. Princeton University Press, 2015.

[10] Garbe, Richard. “St. Thomas in India.” The Monist (1915): 1-27.

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ஒக்ரோபர் 16, 2016

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ravana-balaya-sri-lanka-fundamentalist-groupராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.

psdhivu-sri-lanka-16-10-2016இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]:  “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதுஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].

ravana-balaya-sri-lanka-fundamentalist-group-jatayuகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

dusshera-modi-sonia-pranab-etcமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].

प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश ‌दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है ‌तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.

satan-mara-evil-etcமாரா, சாத்தான், எதிர்கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

16-10-2016

stoning-satan-hajj-ritual

[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.

[2] http://www.pathivu.com/?p=90264

[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016  10:41 am

[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482

[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.

[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms

[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)

[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607

[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST

[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece

[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST

[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா?

ஜூலை 21, 2016

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா?

Top ten criminals of India - google.The Guardian UK

உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3].  புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].

Lawsuit-against-Google

கூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9].  மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.

Top ten criminals of India - google

போலீஸ் புகாரை ஏற்காதது ஏன்?: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள்  வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11].  அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்! ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்!

Top ten criminals of India - google.5

2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].

Top ten criminals of India - google.vikatan

மோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே?: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்! பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்?

according to Google algorithm, Modi is a criminal

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா?: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-07-2016

[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு .பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=232537

[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/google-lists-pm-modi-in-top-criminals-gets-court-notice-116072000018_1.html

[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடிகூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்!, July 20, 2016

[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)

[7] http://www.vikatan.com/personalfinance/article.php?aid=12977

[8] http://ns7.tv/ta/google-lists-pm-modi-top-criminals-gets-court-notice.html

[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18

[10] “These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images……… the company is working to improve its search related algorithm to prevent unexpected results like this..” Sometimes, the way images are described on the internet can yield surprising results to specific queries, Google added.

http://www.deccanchronicle.com/technology/in-other-news/200716/google-lists-modi-in-top-10-criminals-gets-court-notice.html

[11] Deccan chronicle, Google lists Modi in ‘top 10 criminals’, gets court notice, Published. Jul 20, 2016, 1:25 pm IST, Updated. Jul 20, 2016, 1:28 pm IST

[12] New Indian Express, Google gets court notice for listing PM Modi in ‘top 10 criminals’ search, By Online Desk, Published: 20th July 2016 11:48 AM, Last Updated: 20th July 2016 11:49 AM

[13] http://www.newindianexpress.com/nation/Google-gets-court-notice-for-listing-PM-Modi-in-top-10-criminals-search/2016/07/20/article3538537.ece

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1567858

[15] “These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images……… the company is working to improve its search related algorithm to prevent unexpected results like this..” Sometimes, the way images are described on the internet can yield surprising results to specific queries, Google added.

http://www.deccanchronicle.com/technology/in-other-news/200716/google-lists-modi-in-top-10-criminals-gets-court-notice.html

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

ஜூலை 3, 2016

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

திருவள்ளுவர் கங்கை சிலை

தருண் விஜய் அரசியல் செய்கிறாரா?: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது.   மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ஓவியங்கள்திருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தாபிரச்சினை என்ன?: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[1] என்றது விகடன்.  ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3].   ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர் தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.

கருணாநிதி, தருண் விஜய்தருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய்,என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் ஓவியம் - கே.ஆர். வேணுகோபால சர்மாதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படிகருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”.  ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].

Valluvar sttue - DK response - Viduthalai - 02--07-2016சிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா?: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்? அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[7] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

[8] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

 

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/