Archive for the ‘தாமஸ்’ Category

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)

Modi present to Isreal PM - copper plates 06-07-2017

மோடி, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுப்பாரா?:  மோடியின் பரிசு-நட்புறவு பற்றிய விவகாரத்தில் சேரமான் பெருமாள், தாமஸ் போன்ற கட்டுக்கதைகள் பின்னணியில் இருப்பதுதான், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பரிசு என்றால், சால்வை, குர்தா, போன்றவற்றைக் கொடுத்தது மாதிரி கொடுத்திருக்கலாம், ஆனால், இத்தகைய போலிகளை கொடுப்பதுதான் திகைப்பாக இருக்கிறது. நாளைக்கு, ஒருவேளை, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுத்து, “தூது-நட்பு” பேசி, இரு நாட்டுறவுகளைப் போற்றுவாரா? ஆக, சரித்திரத்திற்குப் புறம்பான இவ்விசயங்கள் எப்படி நடக்கின்றன என்பது புதிராக உள்ளன. மோடியின் டுவிட்டர், அரசாங்கப்  பூர்வமான இணைதள பதிவுகள், புகைப்படங்கள் வெளியிடுவன எல்லாமே மறுக்க முடியாதவை. நாளைக்கு, கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களது கட்டுக்கதை பரப்புப் புத்தகங்களில், பிரச்சாரங்களில் இவற்றை நிச்சயமாக சேர்த்துக் கொள்வர். மோடியே ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் எழுதப் போகிறார்கள். அதனால், தான், மிக கவலையுடன், இந்த பதிவுகள் என்னால் செய்யப்படுகின்றன. இனி, அந்த சேரமான் கட்டுக்கதை எப்படி உருவானது என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.

Later-dated mohammedan Mss claim such legends

900 CE முதல் 1800 CE வரை ஒரே கட்டுக்கதையை மாற்றிமாற்றி எழுதப்பட்டதாம்: டுயார்தே பார்போசா [Duarte Barbosa] என்ற போர்ச்சுகீசியர், முதன் முதலில் 1510 CEல் இக்கட்டுக்கதையைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “எனக்கு 600 வருடங்களுக்கு முன்னால் சேரமான் பெருமாள் வாழ்ந்தான்…….” என்றாதால், அவனது காலம் c.900 CEஎன்று புனைய ஆரம்பித்தனர். இதே போன்ற இன்னொரு கட்டுக்கதையை ஷேக் ஜைமுத்தீன் [Sheikh Zeinuddin] என்பவர் 1700-1800 CE வாக்கில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. 1610 CEல் ஜோயாஸ் டி பரோஸ் [Joas deBarros] என்ற இன்னொரு போர்ச்சுகீசியர், இன்னொருவிதமாக, இக்கதையை அறிந்து எழுத் வைத்தாராம். இப்படி, கட்டுக்கதையே மாற்றி-மாற்றி எழுதப் பட்டதால் தான்,

  1. நிலவை கனவில் பார்த்தான், நேரில் பார்த்தான், உப்பரியிலிருந்து பார்த்தான்.
  2. கனவில் கண்டான்.
  3. நிலவு இரண்டாக உடைந்தது, பிளந்தது.
  4. ஒரு பகுதி, பூமியில் விழுந்தது, மலபாரில் விழுந்தது.
  5. அதைப் பற்றி ஜோசியர்களிடம் விசாரித்தான், அரேபியர்களிடம் விசாரித்தான்.
  6. இந்து ராஜா மொஹம்மதைக் காணச் சென்றான்.
  7. மொஹம்மதுவைப் பார்த்தான், பார்க்கவில்லை.
  8. சுன்னத் செய்து கொண்டான், செய்து கொள்ளவில்லை.
  9. இந்தியாவுக்கு திரும்ப வந்தான், வரவில்லை;
  10. நோய்வாய்ப்பட்டு இறந்தான்; கல்லறை அரேபியாவில் உள்ளது, இந்தியாவில் உள்ளது, காணப்படவில்லை.

Cheraman witnessed moon split like mohammed

சரித்திர மற்றும் கால முரண்பாடுகள்: முன்னரே குறிப்பிட்டது, 17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல் என்பதாகும். ஒருவேளை தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போல, ஐரோப்பியர்களால், உள்ளூர் பண்டிதர்களை வைத்து உருவாக்கப்பட்ட நூலாக இருக்கலாம். கேரளோத்பத்தியின் படி, அனகுன்டியைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர், சேரமான் பெருமாளை மெக்காவுக்கு செல்லுமாறு பணித்ததாகவும், அங்கு அவர் மதம் மாறியதாக சொல்கிறது. சேரமான் பெருமாள் 355CEல் வந்து, 428ல் மெக்காவுக்குச் சென்றதாகவுள்ளது. ஆனால், மொஹம்மது 622 CEவாக்கில் தான் இருந்தார், பிறகு இஸ்லாம் தோன்றியது. கிருஷ்ணதேவராயர் 1509 CEல் தான் அனலுன்டியின் அரசராகிறார். ஆகவே, உள்ளூர்வாசி, இவ்வளவு தப்பும்-தவறாக எழுதியிருக்க மாட்டான். கிருஷ்ணதேவராயர், அரேபியர்களிடமிருந்து குதிரைகள் வாங்கினார் மற்றும் தனது ராணுவத்தில் முகமதிய தளபது, வீரர்களை வைத்திருந்தார் என்பதினார், அவரது பெயரைச் சேர்த்து எழுதியிருக்கலாம். மேலும் கேரளாவில் முதலில் இருந்தது, இந்து மதமா, ஜைனமா, பௌத்தமா என்ற குழப்பங்களும் ஐரோப்பிய-கிருத்துவ எழுத்தாளர்களிடம் இருந்தன. பச்சனன், அரேபியாவில் ஜைனம் இருந்தது என்றார்.

Ore Nadu - wrapper June 2017- spreading myth- tomb in Arabia

முகமதியர் சேரமான் கட்டுக்கதையினை முன்னால் தள்ள முயற்சித்தது: பிரான்சிஸ் டே என்பவரும், பெருமாள் கொச்சினின் ஆளுனராக 36 வருடங்கள் இருந்ததாகவும், ஓய்வு பெற்றப் பிறகு, அங்கிருந்த மஹாஜெயின்கள், அவரை 378ல் மெக்காவுக்குச் செல்லுமாறு பணித்தனர். மெக்காவில் ஜைனமதம் நன்றாக நிறுவப்பட்டிருந்ததாகவும், அங்கிருப்பவர்கள் இந்தியாவிடன் நன்றாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. பிறகு தான், அது முகம்தியர் வசமானது[1]. ஆனால் லோகன் 825ல் பெருமாள் மெக்காவுக்குச் சென்று முகமதியர் ஆனார் என்று எடுத்துக் காட்ட முயன்றார். உண்மையில் பெருமாள் மற்றும் ஜமோரின் கதைகளை எழுதும் போது, முகமதியர்களின் மனங்களில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், பிற்காலத்தில் ஜமோரின் மன்னர்களில் ஒருவன், குரானை ஏற்றுக் கொண்டு, c.825 CE வாக்கில், மெக்காவுக்குச் சென்றதாக, ஒரு கதை இருந்தததை வைத்து குழப்பினர் அல்லது குழப்பப் பார்க்கின்றனர். ஏனெனில் உள்ள ஒரு மசூதி சமாதியில் உள்ள 9ம் நூற்றாண்டு தேதி இத்துடன் ஒத்துப் போகிறது. இதனால், அப்துர் ரஹ்மான் சமீரின் கதையினை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில், அதில் தகவல்கள், தேதிகள் மற்றும் பெயர்கள் எல்லாமே முன்னுக்கு முரணாக உள்ளன[2]..

பற்பல தேதிகளை, சேரமான் பெருமாளுக்குக் கொடுத்தனர்:

ஐரோப்பியகிருத்துவ எழுத்தாளர்கள் கொடுத்த தேதி குறிப்பு[3]
மோயின்ஸ் 426 CE Moens gives A. D. 426;
கிளாடியஸ் பச்சனன் 490 CE Dr .C. Buchman 490;
பிஷப் மிடில்டன் 508 CE Bishop Middleton 508;
லாஸன் 750 CE Mr, Lawson 750;
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ் 825 CE the Rev. T. Whitehouse 825;
பவோலி 10ம் நூற்றாண்டு CE Paoli, the tenth century ;
யூதர்கள் 379 CE and the Jews themselves, A. D. 379,
பாதிரி டி. ஒயிட்ஹவுஸ் 416 CE making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse

இந்த கால முரண்பாடும், கட்டுக்கதையின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது[4]. சுந்தரரர் மற்றும் சேரமான் பெருமாள், தண்டிவர்மனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் [795-845 CE]. ஆகவே, அக்காலத்தில் சென்றது என்பது பொய்யாகிறது.

Early spread of Islam 632-750 CE

10ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான், இஸ்லாம் மற்றும் முகமதியன் இந்தியாவில் அறியப்பட்டிருக்க வாய்ப்புள்ளது: முகமதிய மதத்தைத் தோற்றுவித்த, மொஹம்மதுவின் காலம் 6-7 நூற்றாண்டுகள் [c. 570 CE – 8 June 632 CE) ஆகும். ஆகவே, மதம் என்ற ஒன்று முழுமையாக உருவாகி, மெக்கா-மெதினா ஸ்தலங்களை புனித இடங்களாகக் கொண்டு, குரான் தொகுக்கப்பட்டு, புழக்கத்தில் வந்து, அம்மதம் பரவி, இந்தியாவிற்குள் நுழைய நிச்சயமாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். 610-632 வரை குரான் வெளிப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்து, மூன்றாம் காலிப் காலத்தில் [644-656] தொகுக்கப் பட்டதாலும், ஹதீஸ் போன்றவை 9-10 நூற்றாண்டுகள் வரை தொகுக்கப்பட்டு வந்ததாலும்,  எல்லாம் நிறைந்த இஸ்லாம் என்ற நிலை உருவாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே, அதுவரை, இந்தியாவில், அரேபியா, துருக்கி முதலிய இடங்களிலிருந்து வணிகம் நிமித்தம் வந்திருக்கலாம், ஆனால், அவர்கள் முகமதியர் கிடையாது. ஆரம்பத்தில் “காலிபைட்” பதவிக்கு சண்டை ஏற்பட்டு, சுன்னி-ஷியா பிரிவுகள், போர்கள் முதலியவை ஏற்பட்டு, பிறகுதான், ஒரு நிறுவனப்படுத்தப் பட்ட மதம் நிலையை அடைந்தது. ஆகவே, இவையெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகள் தாம்.

 

© வேதபிரகாஷ்

09-07-2017

Early spread of Islam 632-750 CE-1500 by trade

[1] Some believe that the last Perumal was permitted to be Governor for thirty-six years, at the end of which he retired, and was induced by the Majains, commonly known as Jains, A.D. 378, to proceed to Mecca, at which plce many of that faith were established, carrying on a trade with India, which in subsquent centuries fell into Moorish hands.

 Francis Day, The Land of the Permauls or Cochin, its past and its present, The Adelph Press, Vepery, Madras, 1863, p.44.

[2] Mr. Logan tries to prove that the Perumal became a convert to Mahommedanism and went on a pilgrimage to Mecca in about 825 A. D. The story of Cheraman Perumal having become a Mohammedan to indicate a confusion in the minds of the writers between Cheranam  Perumal and one of the Zamorins who did accept the Koran and leave his country for Arabia in the first quarter of the 9th century, which well tallies with the beginning of the Malabar era. As the inscription on the tomb-stone of supposod apostate, on which the Perumal’s conversion and pilgrimage to Mecca is based, is Abdar Rahman Samiri, it cannot be connected with Cherman  Perumal except by a strange perversion of facts, dates and names.

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, pp.xv-xvi.

[3] Dr. Francis Day has summed up in tho following paragraph the results of the investigation till 1863, as regards the date of thePeruraars abdication. “The shade of Cheraman Perumal is invoked eveu hundreds of years after he had paid the debt of nature, A. D. 378. For this event various authors have indulged in dates of their own, without advancing any argument whatever, tending to prove them correct; for instance, Moens gives A. D. 426; Dr .C. Buchman 490; Bishop Middleton 508; Mr, Lawson 750; the Rev. T. Whitehouse 825; Paoli, the tenth century ; and the Jews themselves, A. D. 379, making a trifling difference of 416 years, between the date given by them and that by Mr. Whitehouse.”

Report by M. Sankara Menon, Census of India, 1901, Vol.XX, Cochin, Part-I, Cochin Government Press, Ernakulam, 1903, p.xv.

[4] Though in prose, it claims to be an abridgement of the bigger Keralanaiakcm written by Thunjaththu Ezhuththachchan As it refers to the Ariyittmazhha of a Zamorm in 1627, it could not have made its appearance earlier Part I is pure myth and legends The chronology of Part II is not satisfactory, and it is inconsistent with what we know of Kerala from other more reliable sources Thus, Cheraman Perumal is said to have been sent by Krishnadeva Raya of Anagundi, and after going to Mecca and converted by uhammad, he is described as dying of fever on his way back According to the Keralolpaththi he arrived in Kerala in 355 and went to Mecca in 428 But Muhammad founded Islam in 622 and and Krishnadeva Raya became king of Anagundi m 1509 Apart from this anachronism there ts also a glaring inconsistentcy.

V. Krishna Ayyar, A Shory History of Kerala, Pai & Co., Ernakulam, 1966, pp.188-189.

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

ஜூன் 26, 2017

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

Tamil writers, speakers, researchers have been rhetoric

ல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர்.  எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1].  ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.

Malar Mannan - 2013

இந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.

Thiruvalluvar coin minted by F W Ellis. front and observe- British museum

வள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம்.  இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.

Tiruvalluvamalai- 11-12th cent CE, interpolated

மதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

Ellis forged works

திருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

26-06-2017

Tiruvalluvamalai- works forged in his name

[1] மலர் மன்னன்,  , http://puthu.thinnai.com/?p=11110

[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

[3]  ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524

[4] Sir Walter Elliot came to Madras in 1821 and worked till 1860, as a Member of the Council of the Governor of Madras. He was a life long and devoted student of Oriental Studies inBotany, Zoology, Indian languages, Numismatics and Archeology. He rescued the Amaravathi Marbles, which are now housed in the British Museum along with his coin collection and collection of other artifacts.. His work, ‘Coins of Southern India’, formed part of the famous series ‘Numismata Orientalia’, published in 1884

[5] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[6] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

ஜூன் 25, 2017

வள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைனபௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)

C.F.C. Volney - Christos from Krishna

ஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனபௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்?: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.

Constantaine Joseph Beschi and Sivaprakasa Munivar

கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.

Zigenbalg, Dubois, Pope, Colebrooke, Wilson, Beschi

ஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்கபுரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:

  1. பார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.
  2. ஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்தது என்றார்.
  3. கோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.
  4. மெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].
  5. பிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].
  6. எல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].
  7. கால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

Co. Tod - Annals and Antiquities of Rajasthan

கல்கத்தாமதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].

© வேதபிரகாஷ்

25-06-2017

Madras school of orientalism

[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது! 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்! 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது!

[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.

[3] Mackenzie’s story of the presentation of Tirukkural to the Tamil Cankam depicts its author, Tiruvalluvar, as a Saiva. Upon the occasion when the superiority of this literary work was demonstrated, the whole of the Tamil Cankam of Madurai, composed of Jains, was forced to commit suicide (Cotton et al. 1992, 1.14; Wilson 1828, 180ff, VII and XVIII; Taylor 1857–62, III, 163).

[4] Mackenzie’s account of the struggle at Kanchipuram between the Buddhists and the Jains, with Akalanka at their head, tells us that the Buddhists were defeated. The Jains, in keeping with the spirit of ahimsa, refrained from grinding up the Buddhists in an oil press and instead banished them to Sri Lanka (Mahalingam 1972–6, 14.3 and 68; cf. Taylor 1857–62, 3, 368, 423–5, 436–7).

[5]  Buchanan, Francis. 1999 [1807]. A Journey from Madras through the Countries of Mysore, Canara, and Malabar, 3 vols, New Delhi: Asian Educational Services.

[6] Mahadevan, Iravatham. 1995. ‘A Unique Gold Coin with Tiruvalluvar’s Portrait’, Studies in South Indian Coins, 5, pp. 139–45.

[7] Caldwell, R., A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages, 3rd edn, revised by J.L. Wyatt and T. Ramakrishna Pillai (eds), New Delhi: Oriental Books Reprint Corporation. 1974 [1913]. pp. 83-84.

[8] Wilson has nothing to say about Jain contributions to Tamil literature, in part because he rejects the Madras School of Orientalism’s ideas about the antiquity, originality, and quality of this literature, maintaining that the earliest Tamil works are simply translations of Sanskrit texts (1828, xxxii–xxxiv).

[9] Major James Delamaine, Of the Sra’wacs or Jains, published in 1827, 426–7, 433.

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

ஜூன் 19, 2017

எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)

V. G. Santhosm awarded - life time achievement

வி.ஜி.சந்தோசம் யார்?: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.

V. G. Santhosam was awarded Doctorate Degree by Jerusalem university

அனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.

First early Christianity in India held 2005 - Santhosam, Deivanayagam, John Samuel

சுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுகிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].

VGP Evangelixal nexus

 

முருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:

1.        ஜி. ஜான் சாமுவேல்.

2.       டி. தயானந்த பிரான்சிஸ்[9].

3.       ஜார்ஜ் மெனசேரி

4.       வி. தெய்வசிகாமணி.

5.        மோசஸ் மைக்கேல் பாரடே[10].

6.       பி. தியாகராஜன்.

7.        ஜி. ஜே. பாண்டித்துரை

8.       பி. லாசரஸ் சாம்ராஜ்

9.       தன்ராஜ்.

10.     ஜே. டி. பாஸ்கர தாஸ்.

11.      வொய். ஞான சந்திர ஜான்ஸான்.

12.     ஜாலி செபாஸ்டியன்.

13.     டி. யேசுதாஸ்.

14.     ஜொனாதன் சான்டியாகோ

15.     லாரன்ஸ் வின்சென்ட்.

16.     எர்னெஸ்ட் பிரதீப் குமார்.

இப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம்,  இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.

The covention was held at VGP grounds, Vandalur on 26-01-2015

விஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.

V. G. Sathosam awarded Doctorate etc

கிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்?: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.

© வேதபிரகாஷ்

19-06-2017

Tamil christuva koil, New York-2

[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.

[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.

[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.

[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.

[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.

[6] http://www.instituteofasianstudies.com/board_governors.html

[7] For further details on the Conference, please contact: Dr. G. John Samuel, Founder-Director, Institute of Asian Studies, Chemmancherry, Sholinganallur P.O.

http://www.instituteofasianstudies.com/christianity_conference.html

[8] G. John Samuel (General Editor),  Early Christianity in India : (with parallel developments in other parts of Asia), editors, J.B. Santiago, P. Thiagarajan, International Centre for the Study of Christianity in India, Institute of Asian Studies, 2008, Chennai.

[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.

[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[11]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (3)

ஜூலை 21, 2013

சூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (3)

Solar scandal link - India Today graphics

சோலார்  பெனல் மோசடியில் தாவூத் இப்ராஹிம் கோஷ்டியின் தொடர்பு:  கவர்ச்சி நடிகைகள், அரசியல்வாதிகள் முதலியோருக்குப் பிறகு[1], இப்பொழுது தாவூத் இப்ராஹிம் கோஷ்டியும் இந்த சோலார் பெனல் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. எம். கே. குருவில்லா என்பவர் காபித்தோட்ட பெரிய எஸ்டேட் சொந்தகாரர். பெங்களூரில் கோரமங்களாவில் வசித்துவரும் பெரிய க்கொஓடீஸ்வரர். சென்ற அக்டோபர் 2012லேயே தனக்கு ரவி பூஜாரி உட்பட தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக புகார் கொடுத்துள்ளார்[2]. சோலார் பெனல் முதலீட்டில் ஒரு கோடி ஏமாந்து விட்டதால், அவர் புகார் கொடுத்தார்.

கேரளாவிற்கும்,  வளைகுடா நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் தெரிந்ததே: கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் உள்ள தொடர்புகள் பலவிதங்களில் உள்ளன. செயிக்குகள் சட்டங்களை மீறி, கேரளாவில் வந்து தங்கியதிலிருந்து, தீவிரவாதிகள் தொடர்பு வரை விவரங்கள் வெளிவந்துள்ளன. ஒரு பெரிய போலீஸ் அதிகாரியே அடிக்கடி சென்று வந்ததும், அவர் மனைவி மற்றும் மதானியின் மனைவியும் சேர்ந்து வைத்துள்ள கம்பெனி போலி சிடி-டிவிடிகள் தயாரிப்பில் ஈடுபட்டது முதலிய விஷயங்களும் கேரள அரசியல்-அதிகார-சினிமா பிரிக்கமுடியாத வலைகளை எடுத்துக் காட்டுகிறது. தாவூத் இப்ராஹிமின் விருப்பங்களும் கேரளாவில் இருந்து வருகின்றன. இப்பொழுது கிரிக்கெட் ஊழலிலும் கேரளாவின் ஶ்ரீசாந்த் மட்டுமல்ல, தாவூத் இப்ராஹிமும் சம்பந்தப் பட்டுள்ளனர். அதனால், பெரிய பதவிகளில் இருப்பவர்கள், வியாபாரத்தில் கோடிகள் சம்பாதிப்பவர்கள், தாவூத் இப்ராஹிமுக்கு கப்பம் கட்டவேண்டிய அவசியம் உள்ளது. இல்லையென்றால், டி-சீரீஸ் முதலாளிக்கு நடந்த கதிதான் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், 2ஜியில் எப்படி அவனது சம்பந்தம் உள்ளதோ, அதேபோல, இந்த சோலார் பெனல் மோசடியிலும் சம்பந்தம் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. மேலும், பங்களூரு தொடர்ப்பு, அவற்றை (புரிந்து கொள்ள) எளிமையாக்குகிறது.

Solar panel scam1

உம்மன் சாண்டி மகனின் பெயரைச் சொல்லி மோசடி: பினு நாயர் என்பவர் தான் (பிஜு தான் இப்படி பெயர் மாற்றம் செய்துள்ளான்) ஒரு கம்பனியின் [SCOSSA Educational Consultant Private Ltd at Koch] டைரக்டர், கல்வி ஆலோசனையாளர் என்றெல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டு[3], தன்னிடம் வந்து இங்கிலாந்து பண உதவியுடன், கொரியன் தொழிற்நுட்பம் ஊபயோகப்படுத்தி, கேரளாவில் பல பகுதிகளில் சோலார் பெனல் திட்டம் அறிமுகப்படுத்தப் போவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் வரும் என்றும் மேலும் அது முதலமைச்சருக்கு சொந்தக்காரரின் கம்பெனி என்று அறிமுகப்படுத்தியதால் தான், தான் அவ்வாறு முதலீடு செய்ததாக ஒப்புக் கொண்டார்[4]. உம்மன் சாண்டியின் மறுமகன் ஆன்ட்ரூஸ் [‘nephew’ Andrews] மற்றும் அவரது அந்தரங்க செயலாளர் தெலிஜித் [‘personal secretary’ Deljith] அக்கம்பனியின் பார்ட்னர்கள் / டைரக்டர்கள் என்றும் சொன்னார்[5]. ஆன்ட்ரூஸ் அபு தாபியிலிருந்து வேலை செய்வதாகவும், அவர்தாம் இங்கிலாந்து பண உதவியையும், கொரியன் தொழிற்நுட்பத்தையும் பெற்றுத் தருகிறார் என்று விளக்கினார்[6]. இதனால், ஜூன் 2011லிருந்தே ஒரு கோடி பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர் சொல்லியபடி போட்டுள்ளதாக புகாரில் தெரிவித்தார்[7].

Solar panel scam2

எம். கே. குருவில்லா உம்மன்சாண்டியிடம் கொடுத்த புகார் மனு: பணம் கொடுத்து ஒரு வருடம் ஆகியும், சோலார் பெனல் திட்டம் அறிவித்தபடி, தொடங்கப்படவில்லை. கேட்டபோது, சரியான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த, குருவில்லா, உம்மன் சாண்டியை அக்டோபர் 17, 2012 அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்ததார். முதலமைச்சர், டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசுக்கு [Director General of Police] ஆணையிட்டு, அந்த விவகாரத்தைக் கவனிக்கச் சொன்னார். FIR போட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கும் என்றாலும், அதில் முதலமைச்சர் சம்பந்தத்தை விடுத்து, பதிவு செய்துள்ளது பிறகு தெரிய வந்துள்ளது. முதலமைச்சரிடம் புகார் கொடுத்து, பெங்களுருக்குத் திரும்பியவுடன், தனக்கு தொலைபேசியில் “உன் குடும்பத்தையே ஒழித்து விடுவோம்என்று மிரட்டல்கள் வந்தன என்கிறார்[8]. மேலும், கோரமங்களாவில் உள்ள தனது பங்களாவின் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் உலாவி வருவதாகவும் அறிந்தார். இதனால், போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளார். இதை விசாரித்து வரும் மத்திய குற்றவியல் பிரிவும், இதைப் பற்றி உறுதியாகச் சொல்ல மறுக்கிறார்கள். “நாங்கள் பாதுகாப்பு மட்டும் தான் கொடுத்துள்ளோம். விசாரணை கேரள போலீஸார் செய்து வருகிறார்கள்”, என்று ஒரு மூத்த அதிகாரி ஆறிவித்தாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன[9]. மதானி விஷயத்தில் கூட இப்படித்தான் இரு மாநில போலீஸாரும் நடந்து கொண்டார்கள்.

Solar panel scam3

உம்மன் சாண்டி,  குருவில்லாவின் புகார் பற்றி கூறுவது: உம்மன் சாண்டி “குருவில்லா உண்மையில் புகார் கொடுப்பது போல, என்னை திசைத் திருப்பியுள்ளார். என்னுடைய பெயர் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதனால், நான் அப்பொழுது நடவடிக்கை எடுக்க சொன்னேன். போலீஸார் சிலரை கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் வேறு கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆதாவது அவர்கள் ஏமாந்து விட்டதால், புகார் கொடுக்கக் கூடாது என்பதற்காக, அவ்வாறு குருவில்லா புகார் கொடுத்துள்ளதாக கூறினர். அவர்கள் கொடுத்த சாட்சியத்தின் பேரில் குருவில்லா கைது செய்யப்பட்டார்[10]. பெங்களூரில் ஒரு பணப்பட்டுவாடா விவ்வகாரத்தில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார்”, என்றெல்லாம் உம்மன் சாண்டி கூறியுள்ளார்[11]. ஆனால், அச்சுதானந்தன் இதனை தட்டிக் கேட்டுள்ளார்[12]. குருவில்லா குறிப்பிட்ட ஆதர்ஸ மற்றும் ரஞ்சிதா என்பவர்களை விசாரிக்காமல், வழக்குப் பதிவு செய்யாமல், குருவில்லாவை கைது செய்தது ஏன் என்று கேட்டுள்ளார்[13].

M. K. Kuruvilla arrested

முந்தைய முதலமைச்சர் அச்சுதானந்தம் இது விசயமாகக் கேட்கும் கேள்விகள்: சுரானா வென்சூர்ஸ் லிமிடெட், ஆதித்யா சோலார் எனர்ஜி சிஸ்டம்ஸ், பவர் ஒன்  மைக்ரோ சிஸ்டம்ம்ஸ் என்று பல கம்பனிகள் அரசின் பட்டியலில் இருந்தன. ஆனால், பிறகு அவை நீக்கப்பட்டன. இது ஏன் என்று அச்சுதானந்தனும் கேட்டுள்ளார். தாமஸ் குருவில்லா என்ற உம்மன் சாண்டியின் உதவியாளருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது என்பதனை விசாரிக்க வேண்டும் என்றார். உம்மன் சாண்டி தில்லியில் இருக்கும் போது, ஏழுமுறை தாமஸ் குருவில்லா “கேரளா ஹவுசில்” தங்கியிருக்கிறார். சரிதா நாயருக்கும் மாநில அமைச்சர்கள் – ஆர்யதன் மொஹம்மது, கே.சி.ஜோசப், கே.பி.மோகன், முன்னாள் அமைச்சர் கே,பி.கணேஷ்குமார், மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் முதலியோருக்கும் தொடர்பு உள்ளது என்றும் அச்சுதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்[14].

M K Kuruvilla and Thomas Kuruvilla

தாமஸ் குருவில்லா, எம். கே.  குருவில்லா குழப்பம் ஏன்?: இதில் வேடிக்கை என்னவென்றால், மேலே குறிப்பிட்ட உம்மன் சாண்டியின் உதவியாளர் தாமஸ் குருவில்லாவும் சரிதா நாயருடன் ஒரு கோடிக்கு சோலார் முதலீடு செய்வது பேசியிருக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இவர் சரிதா நாயர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவரும் உம்மன் சாண்டியும் விக்யான் பவனில் டிசம்பர் 27, 2012 அன்று நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்தார் என்றும் ஒரு டிவி செனல் பேட்டியில் கூறியுள்ளார்[15]. ஆனால், சாண்டி அதனை மறுத்துள்ளார்[16]. ஆனால், தான் சரிதா, ஆன்ட்ரூ, திலிஜித் என்று யாரையும் சந்தித்தது கிடையாது என்கிறார்[17]. சென்ற ஜூன் மாதத்திலேயே, சோலார் பெனல் மோசடியில் முதலமைச்சர் அலுவலகம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற புகார் கொடுத்த எம். கே. குருவில்லாவை பண மோசடி வழக்கில் கேரள போலீஸார் கைது செய்தனர். அம்பலூர் என்ற ஊரில் தன்னை குருவில்லா ரூ 52.35 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். தன்னுடைய பேன் ஏசியா [Pan Asia Brokers and Consultancy Pvt Ltd] கம்பெனியில்[18] முதலீடு செய்தவர்களை ஏமாற்றிவிட்டதாக புகாரின் மீது இந்த நடவடிக்கை. அந்நிய வர்த்தகத்தில் பணத்தைப் போட்டு, இரட்டிப்பாக்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றினாராம்[19]. ஆனால், குருவில்லா கொடுத்த புகாரின் மேல், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை[20].  இது ஏதோ புகார் கொடுத்தவரை பழி வாங்கும் போக்கு போன்று காணப்படுகிறது. சூரிநெல்லி பெண்ணின் விவகாரத்திலும், அவள் மீது பணம் கையாடல் என்ற பெயரில் வழக்குப் போட்டு, சிறையில் அடைத்துள்ளனர்.

Solar panel scam5

கேரள அரசு நிறுவனம் இம்மோசடியில் பங்கு கொண்டுள்ளதா?: மாற்று வழிகளில் மின்சாரம் உற்பத்தி மற்றும் நகர்புற தொழிற்நுட்பக் கழகம் [the State Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT)] என்ற மாநில அரசின் கீழ் இந்த சோலார் பெனல் திட்டம் வருகின்றது[21]. சூரிய சக்தி திட்டங்களும் என்று இதில் வருகின்றன[22]. இதனால் பலனடைந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு மத்திய அரசு மானியம் எவ்வளவு கொடுத்தது என்ற விவரங்களும் உள்ளன[23]. இதன் கீழ் கேரளாவில் “10,000 கூரைகளில் சோலார் பெனல் திட்டம் என்று ஆரம்பித்தது. ஆனால், இதை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் போலி கம்பனிகளை உருவாக்கி, அத்தகைய சோலார் பெனல்கள் நிறுவப்பட்டது போல காட்டி, “இன்ஸ்டலெஷன் சர்டிபிகேட்டுகளை” கொடுத்து மானியத்தையும் பெற்றுவந்தது தெரிகிறது. ஒரு பக்கம், பணம் உள்ளவர்களை, இதில் முதலீடு செய்யுமாறு கவர்ச்சிகர முறையில் வேலை செய்வது, மறுபக்கம் அரசாங்கத்தையும் ஏமாற்றுவது என்று செய்து வந்துள்ளது தெரிகிறது. இதனால், புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் சக்தி அமைச்சக செயலாளர், எச்சரிக்கை விடுத்துள்ளார்[24].

Thomas Kuruvilla New Delhi

30%  மானியத்தைப் பெறவே இந்த அரசு சார்பான மோசடி: தொழில், விஞ்ஞானம், நகர்புற வளர்ச்சி என்று பலதுறைகள் இதில் வருவதால், அந்தந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க முடியாது. உம்மன் சாண்டி போல, எனது அந்தரங்க செயலாளர்கள் போனில் ஏதோ பேசிக் கொண்டிருப்பார்கள், எனக்கு போனே கிடையாது, இதனால், நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்த அமைச்சர்களும் அதே பாணியைப் பின்பற்றுகிறார்கள். இதில் ஒன்று வியாபாரத்தில் அதாவது இப்படி 30% மானியத்தை கொள்ளையடுக்கும் பணப்பகிர்வு விஷயத்தில் சம்பந்தப் பட்டவர்களுக்கிடையே தகராறு  வந்திருக்கலாம் மற்றும் ஆட்சி மாறியதால், அரசு சார்பு அதிகாரிகள், இடைத்தரகர்கள், மற்றவர்கள் மாறுவதால் காட்டிக் கொடுக்க முயற்சித்திருக்கலாம். அதன் விளைவுதான் பிஜு-சரிதா-ஷாலு மாட்டிக் கொண்டது[25]. ஆனால், இன்னும் இதில் மோசடி செய்தவர்கள் சிக்காமல் இருக்கின்றனர். உசாரான மத்திய அரசு செயலாளர், உண்மையிலேயே எத்தனை சோலார் பெனல்கள் நிறுவப்பட்டுள்ளன என்ற அறிக்கையினைக் கேட்டுள்ளது. அவ்விவரங்கள் கிடைக்கும் வரை 30% மானியம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது[26].

வேதபிரகாஷ்

© 21-07-2013


[6] Mr Nair claimed that one of his directors named Andrews was the first cousin of the Kerala CM. He operated from Abu Dhabi and would arrange the technology as well as the project funding from UK, Mr Kuruvilla was told. http://archive.asianage.com/node/203025

[7] Since June 2011, Kuruvilla had transferred parts of Rs. 1 crore into different accounts and had also given cash to investors who approached him claiming to be from a company run by Kerala chief minister’s relatives.  Deccan Chronicle reported November 16, 2012 that Kuruvilla was getting threat calls from underworld operatives, including Ravi Poojary and associates of Dawood Ibrahim, after he complained to the Kerala police that he had been cheated of Rs. 1 crore by a Kerala-based solar panel company.

[11] He said the Bangalore-based businessman M.K. Kuruvilla who had complained to him had, in fact, misled him also. The Chief Minister said he had ordered action because Mr. Kuruvilla had alleged that the Chief Minister’s name was used to cheat him. When the police arrested a few people and questioned them for three days, they had a different story to tell. They said that they had been cheated and the petition was filed to prevent them from taking action. They had also approached him and the businessman was arrested on the basis of evidence produced by them. He was behind a Bangalore-based money chain operation.

http://www.thehindu.com/news/national/kerala/truth-will-be-out-soon-says-chandy/article4902567.ece

[12] Mr. Achuthanandan also sought an explanation as to why companies such as Surana, Adithya, and Power One were initially empanelled by the State Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT) and why they were excluded later. There must be an explanation why no case was registered against persons named Adarsha and Ranjith, whom the Bangalore-based businessman M.K. Kuruvilla had accused of financial fraud. Instead of arresting them or questioning them, Mr. Kuruvilla was arrested and his financial sources investigated, the Opposition leader pointed out.

http://www.thehindu.com/news/national/kerala/the-entire-cabinet-must-go-vs/article4881496.ece

[14] Mr. Achuthanandan demanded that the source of income of Thomas Kuruvila, aide of the Chief Minister in Delhi, should also be probed. He had stayed at Kerala House in Delhi on seven occasions when the Chief Minister was there. He alleged that Ministers Arayadan Mohammed, K.C. Joseph, K.P. Mohahan, and M.K. Muneer and former Minister K.B. Ganesh Kumar had links with Saritha and her company besides Union Minister of State K.C. Venugopal.

http://www.keralanext.com/news/2013/06/24/article141.asp

[16] On June 16, one of Chandy’s close associates, Delhi-based Thomas Kuruvilla, dropped another bombshell. He told a TV channel that at Saritha’s request, on December 27, 2012, he had arranged a meeting between her and Chandy at a Vigyan Bhavan conference. Chandy denies having met her.

[19] M K Kuruvila, native of Uzhavoor in Kottayam and an industrialist settled in Bangaloreswindled `45 lakh from Bijeesh during several occasions in the pretext of returning it after doubling the amount through foreign exchange trade and commodity trading.

http://newindianexpress.com/states/kerala/Man-arrested-for-fraud-in-Thrissur/2013/06/25/article1651606.ece

[20] Police on Monday (June 24, 2013) held industrialist MK Kuruvilla who alleged that CMO is connected with solar scam. He was arrested on financial fraud where it is alleged that he had cheated on Rs 52.35 lakh from a person in Amaballor. Permanagalm police arrested him. Earlier Kurvilla alleged involvement of CM’s staff in solar scam and also stated that though he filed complaint with CM, no action was taken.

http://www.mathrubhumi.com/english/story.php?id=137336

[24] Red-hot solar controversy has prompted the Union Ministry of New and Renewable Energy to sound the warning bell. The ministry is alarmed over reports of fraudulent companies swindling public in the name of installing solar power systems, and said it will put under microscope the implementation of the ambitious ‘10,000 solar roof-top programme’ in Kerala. Agency for Non-Conventional Energy and Rural Technology (ANERT) is implementing the programme in the State.