Archive for the ‘மதுவிலக்கு’ Category

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

பிப்ரவரி 16, 2014

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

திரு சந்திரசேகர் என்னுடைய நண்பர், அவரைப் பார்க்க பலர் வந்து சென்றுக் கொண்டிருப்பர். அவர்கள் எல்லோரும் ஏபிவிபிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப் படுத்தி வைப்பார். நானும் “ஹலோ” என்ற ரீதியிலும், சில விசயங்களைப் பற்றி பேசுவது உண்டு. அவர்கள் அவர்களது வேலையைப் பார்த்து கொண்டு சென்று விடுவர் சந்திரசேகர் பலமுறை அவர்களது நிகழ்ச்சிகளுக்கு வரச்சொன்னதுண்டு. ஆனால், நேரமில்லை, உடல் அசௌகரியம், வீட்டுப் பிரச்சினைகளசென்ற பல காரணங்களினால் முடியாமல் இருந்தது. அந்நிலையில் அவர்களது மாநாடு சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடப்பதாகவும் அதற்கு வருமாறும் ஆழைத்தார். இதனால், சென்றிருந்தேன். முதல் நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவது நாள் கலந்து கொண்டேன். அதுபற்றிய குறிப்பே இது.

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (Akhila Bbharata Vidhyarthi Parishad – ABVP – ஏ.பி.வி.பி.) எனும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநில மாநாடு, கொரட்டூர், சென்னையில் பிப்ரவரி 15, 16 தேதிகளில் நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது[1].

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

“தமிழக எழுகச்சி, பாரத வளர்ச்சி” என்பது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருந்தது. “அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

வாசலில் பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர் வரவழைத்தது. இது குறித்து ஏபிவிபி அமைப்பின் மாநில இணைச் செயலர் முத்துராமலிங்கம் ஏற்கெனவே ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். தினமணி மட்டும் தான் சிறுகுறிப்பை வெளியிட்டுள்ளது[2].

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு, சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடந்து முடிந்தது. மாநாட்டை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து 15-02-2014 அன்று தொடங்கி வைத்தார். பிஜேபியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்ட பிறகு, இவ்வாறு கூட்டங்களில் கலந்து கொள்வது போலவுள்ளது. இருப்பினும், மற்ற நேரங்களிலும் கலந்து கொண்டால் நல்லது என்று தோன்றியது. “தமிழக வளர்ச்சி; பாரத எழுச்சி’ என்பதை மைய கருத்தாகக் கொண்டு நடைபெறும் இம்மாநாட்டில், பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர் [இவர் பெயர் அபேதகர் என்கிறர்கள், ஆனால், உச்சரிக்கும் போது அம்பேத்கர் என்றுதான் சொல்கிறார்கள்], தேசிய செயலர் ஆர்.ராஜ்குமார், மாநிலத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம், மாநிலச் செயலர் சண்முக ராஜா, காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், அமைப்பின் மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

இரண்டாம் நாள்- 16-02-2-14 அன்று சுனில் அம்பேத்கர் அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் குறிக்கோள், திட்டங்கள் மற்றும் செயல்பாடு (The Mission, Vision and Action of ABVP) என்பது பற்றி பேசினார், மதியம் பிரபல மருத்துவர் வி. சொக்கலிங்கம் மதுவினால் ஏற்படும் தீமைகளை மருத்துவ ரீதியில் விளக்கினார். மிகவும் நகைச்சுவையுடன், ஆனால் அதே நேரத்தில் நுணுக்கமான விசயங்களை அருமையாக எடுத்துரைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடல் போல, பேச்சை தொடர்ந்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மாணவ-மாணவிகளின் உற்சாகம், கவனிப்பாக உரையைக் கேட்டு, நடுநடுவில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல், அருமையான விசயங்களை சொன்னபோது கைத்தட்டியது முதலியவற்றைக் கண்டு, மிகவும் நெகிழ்ந்து போனார்.

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

மருத்துவர் வி. சொக்கலிங்கம் 1966ல் மருத்துவப் பட்டம் பெற்றவர். முந்தைய முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜியார் போன்றோருக்கு சிகிச்சை செய்துள்ளார். இவரது மகன் ஆனந்த் மற்றும் மகள் பிரியா இருவரும் மருத்துவர்கள் தாம்[3]. தேவகி மருத்துவமனை ஆரம்பித்தவர்களில் ஒருவர். தொழிலையே தெய்வமாக மதிக்கிறேன் என்று பல விசயங்களைச் சொன்னார். சைனாவில் ஒரு தடவை “நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?”, என்று பேச ஆரம்பித்தபோது, 18,000 பேர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சுமார் 2,000 பேர் அந்த தலைப்புக்கே எதிர்ப்புத் தெரிவித்தனராம். ஏனெனில், அவ்சர்கள் எல்லோரும் 10, 110, 120 வயது கொண்டவர்கள். இதனால், நூறாண்டிற்குப் பிறகும் எப்படி வாழ வேண்டும் என்று தலைப்பை மாற்றிக் கொண்டாராம். இதுபோல பல சுவையான விவரங்களைக் கொடுத்தார். உடல், மனம், உயிர், அறிவு முதலியவற்றிற்குள்ள தொடர்பு பற்றி கூறும் போது, அவரது ஆழமாக ஞானம் வெளிப்பட்டது.

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

தொடர்ந்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன், “சமுதாய பிரச்சினைகளுக்கு மதுவின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது”, என்பது பற்றி விளக்கமாக பேசினார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

மொத்தம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 272 மாணவ-மாணவிகள் பதிவு செய்து கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் மாநாட்டில் அவர்களது கலந்துரையாடல்கள், நடவடிக்கைகள் முதலியன மிகவும் கட்டுப்பாடாக இருந்தன. மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் பிஎச்டி, எம்பில், பொறியியல் என்று பலதுறைகளில் படிப்பவர்கள் ஆவர். அவர்கள் தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

பெரியவர்கள், சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தான் சுமார் 50 நாற்காளிகள் போடப் பட்டிருந்தன. அவர்களில் கூட சிலர், மற்றவர்கள் வந்தபோது, நாற்காலிகளில் உட்காரச் சொல்லி, கீழே உட்கார்ந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

மற்ற மாணவ [SFI, DYFI] இயக்கத்தினரைப் போலல்லாது, சித்தாந்த ரீதியில் இவர்கள் பயிற்சி பெறாதவர்களைப் போன்றே இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல அவர்கள் இல்லை. மிகவும் எளிமையாக, சாதாரணமாக, வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்களாக இருந்தனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

சுமார் 25 பேர்களிடம் பேசி பார்த்தபோது, மற்ற மாணவ இயக்கத்தினர் அவர்களை கிண்டல் அளித்து வந்தாலும், விமர்சித்து வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார்கள். இருப்பினும் [SFI, DYFI] இயக்கத்தினரைப் போல் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்று தெரிந்தது.

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் முதலியவை மட்டும் இக்கால மாணவ-மாணவிகள் தெரிந்து கொண்டால் போதாது, இதற்கு மேலும், குறிப்பாக சித்தாந்த ரீதியில், பல மாற்று / எதிர்க் கருத்து கொண்ட, மாணவ-மாணவிய இயக்கத்தினர் அளவிற்கு பேச்சுத் திறமை, கருத்துமோதல்கள், வாதம் புரியும் தன்மை, முதலியவற்றில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இல்லை.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

ð  எதற்காக இம்மாட்டில் கலந்து கொள்கிறீர்கள்?

ð  இம்மாட்டில் பங்கு கொள்வதால் என்ன நன்மை ஏற்பட்டது?

ð  படித்து விட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

ð  படித்து வேலைக்குச் சென்ற பிறகும் இவ்வியக்கத்தில் இருப்பீர்களா?

ð  மற்ற மாணவ இயக்கத்தினர், கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் உங்களுடன் எப்படி நடந்து கொள்கின்றனர்?

ð  அவர்கள் கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டதுண்டா?

ð  சித்தாந்த ரீதியில் அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  குறிப்பாக சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  உங்களை “இந்துத்வவாதிகள்” என்று விமர்சிக்கிறர்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இப்படி பல கேள்விகளை நேரிடையாகக் கேட்டுப் பார்த்தேன், அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. நாட்டுப் பற்றைத் தவிர மற்ற நிகழ்கால அரசியல் விவகாரங்கள், பொருளாதார பிரச்சினைகள், சமூகமாற்ற தாக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய தெளிவான சிந்தனை, எதிர்கொள்ள வேண்டிய முறைகள் முதலியவற்றைப் பற்றி தெரியாமலே இருக்கிறார்கள்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பதிவு நடைபெறும் இடம் – கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பங்குகொண்டவர்களின் மற்றொரு புகைப்படத் தோற்றம்.

Sectional view ABVP

Sectional view ABVP

சேஷாத்ரி (ஆடிட்டர் ரமேஷின் சகோதரர்), கௌதமன் முதலியோர்.

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

தினமணியில் வெளியான விவரங்கள் (17-02-2014) –  பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட முன் வர வேண்டும் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவர் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெற்றது. இதில் மது ஒழிப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கில் தமிழருவி மணியன் பேசியது:

மதுவுக்கு எதிராக என் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் போராடி வருகிறது. இதில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வரிடம் அளிக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 15 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி தமிழக கலால்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் அளித்தோம். டாஸ்மாக் மற்றும் பாரில் குடிப்பதற்காக மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியை தமிழக மக்கள் செலவழிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வளவு ரூபாய்க்கு குடிக்கிறார்கள் என்றால் ஏழ்மையை எப்படி ஒழிக்க முடியும். மதுவை பூரணமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சியினர் கூட்டாக சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், பூரண மதுவிலக்கும் கண்டிப்பாக நிகழும்.

காந்திய மக்கள் இயக்கம் தற்போது கட்சியாக மாற்றம் அடைந்துள்ளது. மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்பதை நோக்கி எங்கள் கட்சி செயல்படுகிறது. மாணவர்கள் நினைத்தால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியும். ஆதலால் தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக உருவாக்க பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட வர வேண்டும். ஒரு டாஸ்மாக் கடைக்கு 100 மாணவர்கள் என்ற ரீதியில் கூடி மதுக்கடைகளை மூடுமாறு போராடுங்கள். மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்றார் தமிழருவி மணியன். முன்னதாக, ஏபிவிபி-யின் அகில பாரத அமைப்புச் செயலாளர் சுனில் அம்பேத்கர் ஏபிவிபி பற்றியும், டாக்டர் சொக்கலிங்கம் மதுவினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர். இந்த மாநாட்டில் ஏபிவிபி-யின் மாநில தலைவர் டாக்டர் சுப்பைய்யா, மாநில செயலாளர் செந்தில் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏபிவிபி-யைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


[2]  தினமணி, சென்னையில் 15, 16-இல் ஏபிவிபி மாநில மாநாடு

, By dn, சென்னை, First Published : 08 February 2014 04:10 AM IST