Archive for the ‘வாதி’ Category

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

ஏப்ரல் 20, 2013

இந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்?

Karu at IUML conference receiving momento

11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.

Karu-Arjun and Lenin-Krishna

கௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:

Hindu a thief of sorts: KarunanidhiTNN | Oct 25, 2002, 10.04 PM IST – Times of India.

CHENNAI: It was the DMK chief’s strongest pitch against Hindutva. Talking at a public meeting on Thursday evening, organised by minority communities to protest the religious conversion ordinance, M Karunanidhi said, “Who is a Hindu? You must ask Periyar EVR. A good man would say the word Hindu means a thief[8]. I don’t think of the Hindu in such demeaning terms. I’d prefer to say the term means someone who steals the heart.” He, however, did not explain the source of his claim. What is pertinent to note is that DMK is a key constituent of NDA.

OLYMPUS DIGITAL CAMERA

கௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].

Karu temple - later removedகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்!

19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].

karunanidhi-with-kulla-eating-kanjiகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.

23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்!

வேதபிரகாஷ்

20-04-2013


[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST

http://dinamani.com/tamilnadu/2013/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1552913.ece

[9] On October 24, 2002, newspapers carried Karunanidhi’s statements that said the term ‘Hindu’ meant ‘thief’. A criminal complaint was lodged by B R Gouthaman with the Mambalam police, stating that these statements bashing Hindus had hurt their sentiments and created unrest in society.

http://timesofindia.indiatimes.com/city/chennai/11-year-old-case-comes-back-to-haunt-Karunanidhi/articleshow/19632749.cms

http://www.thinaboomi.com/2013/04/19/21309.html

[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694490

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஏப்ரல் 20, 2013

பகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.

ஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்!

பகுத்தறிவு தீவிரவாதம்

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…

View original post 778 more words

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

ஏப்ரல் 20, 2013

இப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.

சட்டத்தை மீறும் நீதிகள்

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.

குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.

அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.

அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.

ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…

View original post 285 more words