"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூலுக்குபள்ளிக்கல்வித்துறைமூலம்நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.
அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.
சித்தராமையா, கருணாநிதிஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.
மதுரையில்உள்ளமக்கள்சமூகநீதிபேரவைசெங்கோல்கொடுக்கதீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].
மதச்சார்பற்றஆட்சியைநடத்துவதால்மதசார்புள்ளசின்னமானசெங்கோலைவாங்கமுடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல்என்பதுஅரசமரபைபோற்றும்ஒன்று. அதனாலேயேபாஜக, நாடாளுமன்றத்தில்செங்கோல்வைப்பதைநாங்கள்எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].
10 கிலோஎடையுள்ளஇந்தபெரியார்தலை, முகம், உருவம்பொறிந்த, செங்கோலையார்செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
அம்பேத்கர்–பெரியார்–திப்புசுல்தான்சின்னங்கள்செக்யூலார்ஆகாது, செக்யூலரிஸம்என்றும்சொல்லிக்கொள்ளமுடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.
ஊடகக்காரர்கள்ஊதிவிடும்செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார்சிலைபொறித்தசெங்கோலைவாங்கமறுத்தசித்தராமையா – காரணம்என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST), Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).
[7] தமிழ்.வெப்துனியா, பெரியார்முகம்பொரித்தசெங்கோலைவாங்கமறுத்தமுதலமைச்சர்.. என்னகாரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).
சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?
திராவிடகழகங்களும், சுவாமிவிவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன?” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..
திக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது?: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.
“விவேகானந்தரின் 150 ஆம்ஆண்டுஎன்றபோர்வையில்தமிழ்நாட்டில்உள்ளபார்ப்பனசக்திகள், சங்கப்பரிவார்க்கூட்டத்தினர்ஒருதிட்டமிட்டவேலையில்இறங்கியுள்ளனர். சென்னையில்உள்ளஅனைத்துக்கல்விநிறுவனங்களுக்கும்விவேகானந்தர்ரதம்செல்லுகிறதாம் – அரசின்அனுமதியோடு; இதுஒருதவறானமுன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].
“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது! பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.
இதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.
விவேகானந்தர் – அவர்இறைச்சிஉணவுஅருந்தக்கூடியவர், புகைபிடிக்கக்கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தைஎடுக்கப்போவதில்லையே, ஏன்இவ்வளவுநேரம்பேசஇடம்கொடுத்தாய்என்றுகேட்பீர்கள். விவேகானந்தர்பற்றிநம்தலைவர்கள்எல்லாம்பேசிக்கேட்கவேண்டும்என்பதற்காகத்தான். விவேகானந்தரைப்பற்றிபேசிரொம்பநாளாகிவிட்டதுஎன்பதற்காகவும், மூடநம்பிக்கைகளைச்சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர்இறைச்சிஉணவுஅருந்தக்கூடியவர், புகைபிடிக்கக்கூடியவர். இவையெல்லாம்மனம்சுத்தமாகஇருந்தால்தன்னைஒன்றும்செய்யாதுஎன்றுஎண்ணிசீர்திருத்தநோக்கங்களோடுசெயல்பட்டவர். அவரதுபெயரால்உள்ளமண்டபத்தைஇடிக்கப்போகிறோம்என்றுசிலர்எழுதியிருக்கிறார்கள். இடிக்கக்கூடியஅளவுஅதுவலுவிழந்தமண்டபமா? இல்லை. அதையாரும்இடிக்கவிரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப்பக்கம்திரும்பவும்இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].
“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்?: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.
Swami Vivekananda is a “Paraiah” – Shudra from Kayasth community. When he became a Sanyasi, some social reformers challenged him as to how a Shudra could become a Sanyasi. He gave them suitable reply with supporting evidences from scriptures proving that Shudras were nothing but Kshatriyas: “I am not all hurt if they call me a Shudra. It will be a little reparation for the tyranny of my ancestors over the poor. If I am a Paraiah, I will be more glad, for I am the disciple of a man, who – the Brahmn of Brahmins – wanted to cleanse the house of a Paraiah”[9].
சூத்திரன் யார்? – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.
He started Sri Ramakrishna Mission only to liberate oppressed and suppressed: “From the Math will go out men of character who will deluge the world with spirituality…………The Shudra caste will exist no longer – their work being done by machinery”[10]. He defines “Shurahood” as the status of people “engaged in serving another for pay”. Then, perhaps most of the higher castes are “Shudras” and the real shudras are not, as they work for themselves and not for others to get any pay.
பக்தி, ஆன்மீகம்மற்றும்சேவைபோன்றவற்றில்ஈடுபட்டுள்ளஇந்துஅமைப்புகளைதூஷிப்பதுஏன்?: இணைதளத்தில் கவனித்தால், தில்லியில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன; சல்மான் ருஷ்டி உட்பட எழுத்தாளர்கள் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைவது பற்றி கவலைக் கொண்டுள்ளார்கள்; இந்துமஹாசபா கோட்சே நினைவுநாளைக் கொண்டாடுகிறது. என்று தான் செய்திகளை அள்ளி வீசுகின்றது. இதன் இணைதளத்தில் தமக்கு எந்த அரசியல் கட்சி, மதம், இயக்கம் முதலியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை, யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்றெல்லாம் அறிவித்துள்ளது[1]. இருப்பினும், இந்த“அவாஸ் நெட்வொர்க்”, முழுக்க-முழுக்க இந்து-விரோத குழுமமாக இருப்பது திடுக்கிட வைக்கிறது[2]. பக்தி, ஆன்மீகம் மற்றும் சேவை போன்றவற்றில் ஈடுபட்டுள்ள இந்து அமைப்புகளைப் பற்றி அவதூறான புத்தகத்தை வெளியிட்டுள்ளது[3]. குறிப்பாக, இந்து-விரோத போக்குடன் இருப்பதை, இங்கிலாந்து இந்துக்களே எடுத்துக் காட்டியுள்ளனர்[4]. வழக்கமாக மோடி-எதிர்ப்பு புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது[5]. அப்சல் குரு, யாக்கூப், அஜ்மல் கசாப் [Afzal Guru, Yakub and Ajmal Kasab] போன்றதீவிரவாதிகளுக்குஆதரவாக, தூக்குத்தண்டனைகூடாதுஎன்றுபிரச்சாரம்செய்தகுழுமமாகஉள்ளது. தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் இவை, ஒரு பில்லியன் இந்திய மக்களைப் பற்றி ஏன் கவலைப்படாமல் இருக்கின்றன?
“ஸ்வதிக” சின்னத்தைஉபயோகப்படுத்திகுழப்பத்தைவிளைவிக்கும்போக்கு: மேலும், இப்பொழுது, இக்கூட்டத்திற்குஎந்தவிதஅனுமதியும்இங்கிலாந்துஅரசாங்கம்வழங்காததால், மற்றவர்களைக்கூட்டிவைத்துஆர்பாட்டம்செய்துள்ளது[6]. மேலும் “ஸ்வதிக” சின்னத்தை உபயோகப்படுத்தியதில், பாப் பிளேக்மேன் போன்ற பிரிடிஷ் எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவ்வாறு செய்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்[7]. ஆனால், இவ்வுண்மைகளை மறைத்து, இந்நேரம், விடுதலை, தமிழ்.ஒன்.இந்தியா போன்ற இணைதளங்கள் அந்த மோடி-எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆதரித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. “குஜராத் கலவரங்கள், பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அதிகரித்து வரும் சகிப்பின்மை படுகொலைகள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா என்ற பெயரில் இந்தியாவை விற்பனை செய்ய முயற்சிக்கிறார் மோடி; மோடியின் ஆட்சியில் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டிருந்த மதச்சார்பின்மை மீது பெருந்தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு”, என்று கூறுகின்றன[8].
இந்துக்களை வெளிப்படையாக எதிர்க்கும் அவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள்: தெரிந்தோ, தெரியாமலோ ஸ்வதிக சின்னத்தை இடது-வலது மாற்றி, ஹிட்லர் உபயோகித்தது, நிறைய பேர்களுக்குத் தெரியாமல் உள்ளது. இந்திய அல்லது ஹிந்து ஸ்வதிக சின்னம், ஹிட்லர் உபயோகித்த அஸ்வதிக சின்னம் வெவ்வேறானவை. ஆனால், இந்த ஆவாஸ் மற்றும் கூட்டாளி கோஷ்டிகள், வேண்டுமென்றே விஷமத்தனமாக, ஸ்வதிக சின்னத்தை, ஹிட்லர் சின்னம் என்று பொய்யாக பிரச்சாரம் செய்துள்ளது. அதாவது, யூதர்களைக் கொன்ற ஹிட்லர் போன்று மோடியைச் சித்தரிக்கும் முயற்சியில், ஹிந்துக்களை தூஷித்துள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபாப் பிளேக்மேன் பிரிடிஷ் எம்பி கேட்டுக் கொண்டபோது, “இல்லை, நாங்கள் ஹிட்லருடைய ஸ்வதிக சின்னத்தை உபயோகப்படுத்தவில்லை, உண்மையான ஸ்வதிக சின்னத்தை, ஓம் மீது போட்டு, அதை உரு சின்னமாக்கி போட்டிருந்தோம்”, என்ரு ஒப்புக் கொண்டன. அதாவது, அவர்களது குறி, இந்துக்கள் தாம் என்பது வெட்டவெளிச்சமாகியது. பிறகு, இவர்கள் எப்படி செக்யூலரிஸம் பேச முடியும்?
மோடி–எதிர்ப்பில்நிர்மலாராஜசிங்கம்: போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நிர்மலா ராஜசிங்கம் இது குறித்து கூறுகையில், “நாங்கள்மோடிஅரசிற்குஎதிராகநீண்டகாலமாகபோராட்டம்நடத்திவருகிறோம். காரணம்குஜராத்கலவரத்திற்குஇன்றுவரைமுழுமையானதீர்வுகாணப்படவில்லை. பா.ஜ.கஆட்சிக்குவந்ததிலிருந்துநாட்டில்மததுவேஷம்உச்சத்திற்குசென்றுள்ளது. குறிப்பாகஇந்தியாவைஇந்துக்களுக்கானநாடாகமாற்றுவதற்கானமுயற்சிதீவிரமாகநடைபெறுகிறது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள்எனஅனைத்துசிறுபான்மையினர்களும்அச்சத்தில்உள்ளனர். ஆனால்பிரதமர்இவர்களுக்குஎதிரானஎந்தஒருசெயலையும்கண்டிப்பதில்லை.” என்றார்[9]. கடந்த 2002 குஜராத் கலவரத்துக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு வரை மோடிக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் நடந்த மற்றும் நடக்கும் பிரச்சினைகளில் ஈடுபாடு கொள்ளாமல், மோடி-எதிர்ப்பில் குறியாக இருக்கும் இம்மணியின் பின்னணி தெரியவில்லை. இணைதளங்களில் உள்ள இவர்களது எழுத்துகள் மற்றும் பேச்சுகளைப் படித்த ;பிறகு, ஷோபாசக்தி, நிர்மலா ராஜசிங்கம் முதலியோர் “பெண்ணியப்” போர்வையில், கம்யூனிஸத்தைக் குழப்பி, பொருளாதார திரிபுவாதங்களைக் கொடுக்கும் நாரீமணிகளாக உள்ளது புலப்படுகிறது.
மோடிக்குஎதிராகபோராட்டம்ஆட்களைதிரட்டும்இயக்குனர்[10]: பிரதமர் மோடி, பிரிட்டன் வரும்போது, அவருக்கு எதிராக போராட்டம் நடத்த, ஹாலிவுட் பெண் இயக்குனர் லெஸ்லி உட்வின், ஆட்களை திரட்டும் தகவல் வெளியானது. பிரிட்டனை சேர்ந்தவர், லெஸ்லி உட்வின், [Leslee Udwin 58]. ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில், ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை இவர் வெளியிட்டார். கடந்த, 2012ல், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து, இந்த படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியின் பேட்டியும் இந்த படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி, சிறைக்குள், குற்றவாளியிடம் பேட்டி எடுத்ததற்காக, இந்த படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்தது. கற்பழித்தவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பரபரப்பு ஏற்படுத்தி, அதன் மூலம் பிரபலத்தை அடைய முயற்சித்ததாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி கொஞ்சித்தும் கவலைப்படாததாகவும், அவர் குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்[11].
“கூட்டத்திற்கு” ஆள்திரட்டும்வேலைஇங்கிலாந்திலும்நடைபெறுவதுவேடிக்கைதான்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, வரும் நவம்பர் 12ல், பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, லண்டனில் பிரிட்டன்வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டார்[12]. இதுகுறித்து, பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு, சமூக வலை தளங்கள் மூலமாக, லெஸ்லி உட்வின் அனுப்பியுள்ள தகவல்: “‘இந்தியாவின்மகள்‘ என்றஆவணப்படத்தைதிரையிட, இந்தியஅரசுதடைவிதித்துள்ளது. இதற்கு, பிரதமர்நரேந்திரமோடிதான்காரணம். நம்எதிர்ப்பைதெரிவிப்பதற்குஇதுதான்சரியானநேரம். வரும், 12ல், மோடி, லண்டனுக்குவரும்போது, மிகப்பெரியபோராட்டம்நடத்தவேண்டும். மோடிக்குஎதிர்ப்புதெரிவிக்கும்போஸ்டர், பேனர்களுடன்ஏராளமானோர்திரளவேண்டும். நமக்குகுறுகியஅவகாசமேஉள்ளது. அதற்குள்ஏராளமானோரைதிரட்டவேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டது[13]. இதை எழுதும் போது, “20 வயதானவன், 13 வயது இளம் பெண்ணை தடுத்து நிறுத்து, காட்டிற்குள் வலுக்கட்டாயாமாகக் கூட்டிச் சென்று கற்பழித்தான்!”, என்ற செய்தி வருகிறது[14]. அங்கும் இது தினம்-தினம் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அம்மணி அங்கெல்லாம் படம் எடுப்பதில்லை போலும்! அந்த கற்பழிப்பாளர்களை பேட்டி கண்டு, சேர்த்துக் கொள்வதில்லை போலும்!
[1] Awaaz is an independent network. It receives no funds except those its members contribute out of their own pockets for specific projects. It receives no funds from any political party or government body. Awaaz itself is not affiliated to any political party or religious organisation, or nationalist, sectarian or religious ideology. Awaaz has no affiliation to a political ideology except a common platform of democracy, secularism, human rights and social justice which members and all affiliated organisations have to agree to if they want to become part of the Awaaz network.
[6] Welcoming Prime Minister Narendra Modi, The Member of Parliament for Harrow East Mr. Bob Blackman has also clarified that no permission was granted to this network and those who are responsible should be thoroughly ashamed.
[10] தினமலர், மோடிக்குஎதிராகபோராட்டம்ஆட்களைதிரட்டும்இயக்குனர், பதிவு செய்த நாள் நவ 02,2015 21:05; மாற்றம் செய்த நாள்: நவம்பர்.3, 2015:00.37.
[11] Other critics of Udwin’s film have expressed disapproval over the fact that the film-maker provided a platform for the rapist to voice his feelings, with many claiming Udwin “sensationalised” his lack of remorse over his actions. The controversy sparked a debate over freedom of expression and whether the airing of the documentary would be a positive or negative thing for India.
பிரதமர்மோடியின்வருகைக்குஎதிர்ப்புதெரிவித்துஇங்கிலாந்தில்நூற்றுக்கணக்கானோர்போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார்? மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.
Gujaratis, Kashmiris, Tamils united against Modi
நூற்றுக்கணக்கோனோர்இந்தியாவின்பெயரைக்கெடுத்துவிடமுடியுமா?: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர். மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது? முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா? பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம்? சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன? அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா?
Awaaaz propaganda against Modi
“அவாஸ்நெட்வொர்க்”கும், அதன்பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:
Supporting organizations of Awaaz – South Asia Watch include:
Aaj Kay Naam
Asian Women’s Refuge
Friends of India / All-India Christian Council (UK)
Campaign Against Racism and Fascism (CARF)
Cambridge South Asia Forum
Dalit Forum for Social Justice (UK)
Dalit Solidarity Network (UK)
India Forum
Indian Muslim Federation (UK)
Indian Workers Association (GB)
Muslim Parliament
National Civil Rights Movement (NCRM)
Oxford South Asia Forum
People’s Empowerment Alliance
People’s Unity
Southall Black Sisters
Southall Monitoring Group
Sutton for Peace and Justice
Voice of Dalit International
இவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான்! ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.
Protestors demonstrating against Indian Prime Minister Narendra Modi hold placards and chant outside Downing Street in central London on November 12, 2015. India’s Prime Minister Narendra Modi today began a three-day visit to London focused on trade deals and connecting with the diaspora as critics warned of a “rising climate of fear” under his rule. AFP PHOTO / LEON NEAL
சித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை?: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:
சுரேஷ் குரோவர் – Suresh Grover, Director, The Monitoring Group,
பிரஞ்னா படேல் – Pragna Patel, Director, Southall Black Sisters,
கௌதம் அப்பா – Professor Gautam Appa, Academic and Human Rights activist,
இருந்தா குரோவர் – Vrinda Grover, Lawyer, Researcher and Human Rights activist,
அனீஸ் கபூர் – Sir Anish Kapoor, CBE RA Sculptor
சேதன் பகத் – Chetan Bhatt, Director of the Centre for the Study of Human Rights at the London School of Economics,
மைக் வுட் – Mike Wood MP and
ஹெலினா கென்னடி – Baroness Helena Kennedy, QC FRSA Barrister, human rights defender and peer
பிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது?
[1] மாலைமலர், பிரதமர்மோடியின்வருகைக்குஎதிர்ப்புதெரிவித்துஇங்கிலாந்தில்நூற்றுக்கணக்கானோர்போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.
[7] You can contact us at AWAAZ, the London Civil Rights and Art Centre, Upper Floors, 37 Museum Street, London WC1A 1LQ, Alternatively you can email –admin@awaaz-uk.org at editor@awaaz-uk.org for more information about this website –
சோனியாகாந்தி, ராகுல்காந்தியை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்தித்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கினால் கட்சி வலுவிழந்துவிடும் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்[1]. வாசன் ஏற்கெனவே தனிக்கட்சியை ஆரம்பித்தது தெரிந்த விசயமே. நேருவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் களந்து கொண்டு, இவர் திரும்பியுள்ளார். குஷ்பு ஏன் செல்லவில்லை, அவருக்கு ஏன் அழைப்பில்லை என்பதெல்லாம் காங்கிரஸ் பிரச்சினை. இருப்பினும், தேசிய செய்தித் தொடர்பாளராக குஷ்பு இங்கு வேறு தோணியில் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. பலவிசங்களை தொட்டு, திடீரென்று இதையும் சொன்னது, செக்யூலரிஸமா, கம்யூனலிஸமா…………………………….!
Vijayadharani meeting Cong leaders at Delhi-14-11-2015
நவபாரதசிற்பிநேருவின்பிறந்தநாளைகொண்டாடுவதில்லை: பா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்[2]. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரானநடிகைகுஷ்பு, சென்னையில்செய்தியாளர்களிடம்கூறும்போது,
“நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். பள்ளியில் படிக்கும்போது நவபாரத சிற்பி நேரு என்று சொல்லி தந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தைகள் தினத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டாடுவதில்லை என்று குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்[3].
ஒரு தலைவரிடம் மக்கள் மதிப்புக் கொண்டிருந்தால், எந்த அரசும் அதனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, அம்மா நாள், அப்பா நாள், தாத்தா நாள், பாட்டி நாள் என்றெல்லாம் கொண்டாடும் போது, மாமாவை எங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளப்போகிறார்கள்?
Anna Hazaree arrested
இந்தியமக்களிடம்சகிப்புத்தன்மை: காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்[4]. ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை[5].
கடந்த ஆட்சி காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்தாலும் அதை அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்[6].
உழலை எதிர்த்து போராடிய அன்னா ஹஜாரேவைப் பிடித்து ஜெயிலில் போட்டது, அம்மணிக்கு நினைவில்லை போலும். அதேபோல, பாபா ராம்தேவையும் உள்ளே தள்ளினர். வயதானவர்கள், பெண்கள் என்று பலரை போலீசார் அடித்தனர்.
Baba dev arrested
தமிழ்நாட்டில்பாஜகஆட்சியைபிடிக்கநினைப்பதுபகல்கனவு… சொல்கிறார்குஷ்பு[7]: பாஜகவை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள். எனவே மக்கள் பாஜக-வின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் தேர்தல் முடிவு அதை தெளிவாக காட்டுகிறது. இந்தியா முழுவதும் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது பகல் கனவாகும்[8]. தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று கூறினார்[9].
பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்ட திமுகவிலிருந்து, வெளி வந்த அம்மணி, இதைப்பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில், காங்கிரஸ் பிளவுண்டுக் கிடக்கிறது. ஆகவே, அதன் ஒற்றுமைப் பற்றி குஷ்பு ஆராயலாம்.
இந்ததோல்விக்குகாரணம். அறிஞர்கள், சாதனையாளர்கள்சகிப்புத்தன்மைஇல்லைஎனக்கூறிவிருதுகளைதிரும்பவழங்கும்விவகாரத்தில்காங்கிரஸ்கட்சியாரையும்தூண்டிவிடவில்லை[11]. அப்படிவிருதுகளைதிரும்பவழங்குபவர்கள்குறித்துபா.ஜ.க.வினர்தரம்தாழ்ந்துவிமர்சிப்பதுசரியானதுஅல்ல[12].தமிழகத்தில்சட்டசபைதேர்தலில்தீவிரபிரசாரம்செய்வேன். எங்குபிரசாரம்செய்யவேண்டும்என்றுகட்சிமேலிடம்சொல்லும்போதுபிரசாரம்செய்வேன்“, என்றார்.
தில்லி தேர்தலின் போது, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று, தினம்-தினம் செய்திகள் வந்தன. தேர்தல் முடிந்ததும், அமைதியாகி விட்டன. அதே போல, பிஹார் தேர்தல் போது, சகிப்புத்தன்மை இல்லை என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப் பட்டது. தேர்தல் முடிந்து விட்டது. இனி கவனமும் மாறிவிட்டது. இவ்வாறு செய்திகளை உருவாக்குவது யார் என்று கவனிக்க வேண்டும்.
Sonia Imam secularism 2014
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்எண்ணிக்கையில்அதிகமாகிவருகின்றனர்: பாஜக ஒன்றும் குஷ்பு விமர்சிக்கும் அளவில் இல்லை. திமுகவே பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்ட விசயம் அம்மணிக்குத் தெரிந்திருக்கும். திருநாவுக்கரசர் முன்பு பிஜேபியில் இருந்தவர் தான். இப்பொழுதும், திமுக தயாராகவே இருக்கிறது. கருணாநிதியின் சாணக்கியத்தனத்தை குஷ்பு மிஞ்சிவிட முடியாது. காங்கிரஸ் தவிர, பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள எல்லா கட்சிகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அந்நிலையில், தமிழகத்தில் அதன் நிலையை தீர்மானிக்க முடியாது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றனர். எனவே இந்துக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு பிரச்சினையை தூண்டி வருகிறார்கள், என்றால், அம்மணி அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் அல்லது விளக்க வேண்டும். இன்றுள்ள விழிப்புணர்வு முதலிய நிலைகளில், திடீரென்று, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகி விடாது. அப்படியென்றால், என்ன நடக்கிறது என்று கவனிக்க வேண்டும். நாட்டின் மக்கட்தொகை வளர்ச்சியில், இவ்வாறு, விசித்திரமான விளைவுகளை காணும் போது, அத்துறை வல்லுனர்களே, இதைப்பற்றி எடுத்துக் காட்டத்தான் செய்வார்கள்.
el_sari_rojo_javier_moro
மத்தியஅரசுகுறித்துபொய்யானதகவல்களைகாங்கிரஸ்கட்சிபரப்புகிறது[13]: பாஜ செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் சர்மா கூறுகையில், பிரதமர் மோடியை குறிவைத்து நாடு முழுவதும் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது முழுக்க முழுக்க மறைமுகமாக காங்கிரஸ் ஆதரவுடன் நடத்தப்படும் நாடகமாகும். நேருவின் பிறந்த தின நிகழ்ச்சியில் சகிப்பின்மை குறித்து மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பாஜ அரசு குறித்து காங்கிரஸ் கட்சி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. இது போன்ற தகவல்களை பரப்புவதில் காங்கிரஸ் மிகவும் கில்லாடி. மோடி தலைமையிலான இந்தியாவின் பெருமை உலக அளவில் உயர்ந்து வருவதை பிடிக்காத காங்கிரஸ் இது போன்ற பொய்களை பரப்பி வருகிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தாக்கு பிடிக்காது. நேரு 16, இந்திரா 15, ராஜிவ் 10, சோனியா-மன்மோகன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பாஜ ஆட்சிக்கு வந்து வெறும் 18 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் மோடி அரசுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறது என்றார்.
அக்டோபர் 26ம்தேதியில்நிகழ்த்தப்பட்டஇவ்விவகாரம்திட்டமிட்டதா?: அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. பத்தாண்டுகள் கழித்து அதே அக்டோபர் 26 அன்று இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக, இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடந்ததா என்று தெரியவில்லை. பொதுவாக, இதெல்லாம் பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்று மற்றவர்கள் கணிப்பார்கள். ஆனால், உண்மையில் இதனால் யார் லாபமடைகிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். ஐ.ஐ.டியில் மாட்டுக்கறி என்று முன்னர் பிரச்சினை செய்தவர்கள் யார் என்று பார்த்தால், கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம்கள் மற்ற இவர்களுடன் தொடர்பு கொண்ட குழுக்கள், இயக்கங்கள் என்பதனை கவனிக்கலாம். மாணவர்களிடையே, பிரிவு, வெறுப்பு, துவாசங்களை உருவாக்கவே, அவர்கள் செய்து வருகிறார்கள். ஏ.பி.வி.பி வருகிறது, வளர்ச்சியடைகிறது, பல பல்கலைக்கழகங்களில் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், சரஸ்வதியை எதிர்ப்பது, பசுமாமிசம் உண்ணுவதை ஆதரிப்பது என்ற முறைகளில் தடுத்துவிட முடியாது.
கோமாதா படம்
எதை வேண்டுமானாலும் உண்ணுவோம், அதை கேட்க நீ யார்?: நான் எதை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதனை முடிவு செய்ய நீ யார்? என்னுடைய சமையலறை நுழைய உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுவதை கவனிக்கலாம். மனிதனுக்கு எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை இருக்கிறது என்றால், அவ்வாறே எதையாகிலும் உண்டு வாழட்டும். ஆனால், ஒருவன் உண்ணும் உரிமையை தடுக்க அடுத்தவனுக்கு இல்லை எனும்போது, அதேபோல, அவன் உண்ணும் உரிமையை தடுக்க, இவனுக்கும் இல்லை என்றாகிறது. பசு மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை என்றால், பன்றி மாமிசம் உண்ணுவது என்னுடைய உரிமை எனலாம். இல்லை, யூகாரிஸ்டில், நாங்கள் உண்மையிலேயே மனித மாமிசம் மற்றும் ரத்தம் தான் உண்ணுவோம் என்று, நாளைக்கு கிறிஸ்தவர்கள் தங்களது உரிமையைக் கேட்கலாம். பிறகு எப்படி பன்றி மாமிசம் உண்ணுவோம், மனித மாமிசம் உண்ணுவோம் என்று அறிவிப்பார்களா, பார்ட்டி நடத்துவார்களா? கருத்தரங்கங்கள் நடத்துவார்களா?
கோமாதா – தெய்வமாக மதித்தல்
தமிழ்கலாச்சாரம், நாகரிகம், பண்பாடுபொறுத்தவரையில்மாடுஎன்பதுதான்சகலமும்: சங்காலத்திலிருந்தே ஆநிரை, மாடுகள் முதலியன தெய்வீகமாக, செல்வமாக, சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்பட்டது. “கோ” என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் மற்றும் அதிலிருந்து பல வார்த்தைகளும் உருவாகின. கோ என்றால் தலைவன், அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆயனின் கோலே அரசனின் செங்கோல் ஆனது. பசுக்களை வளர்ப்பவர்கள், காப்பவர்கள் என்று ஆயர், கோவலர். இடையர், பூழியர், குடவர் என்று பல பக்கள் குழுமங்கள் இருந்தன. பசுக்கள் செல்வமாகக் கருதப் பட்டதால், அப்பொழுது அவற்றைக் கவர்வது, திருடுவது என்ற பழக்கம் இருந்தது. இதனால், ஆநிரை கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் என்பறு புலவர்கள் தங்களது பாடல்களில் அவற்றை விவரித்துள்ளனர். பசுக்களை காக்கும் ஆயர்களுக்கும், அவற்றைக் கவரும் மழவர், மறவர், எயினர், வேடர் போன்றோருக்கும் சண்டை, போர் நடந்ததை சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. ஆவுடையர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தனர். “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றையவை”, என்று வள்ளுவர் சொன்னதிலிருந்து அதன் மேன்மையை அறிந்து கொள்ளலாம். இடைக்காலத்தைய இலக்கியங்களும் அவ்வாறே மதித்து வந்தன.
ஆநிரை கவர்தல் – காத்தல்
இடைக்காலத்தில் ஆநிரை காப்பது: ‘ஆகெழு கொங்கு’ என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைப்பட்டனர், பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கப்பட்டன. செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர், அதாவது, ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் / செரு புரியும் கோவலர்கள், கோ-காவலர்கள், கோரகக்ஷ்கர்கள் ஆனார்கள். ஆகவே, ஆநிரை காத்தல் என்பது தமிழரின் அறம் மட்டுமல்லாது கடமையும் ஆகும். குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி என்னும் ஊரின் மிக அருகில் உள்ள வங்கட்டூர் என்ற ஊரில் நடுகற்கள் துரைசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இருந்து நான்கு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.. இந்த நடுகற்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரனும், சுந்தரசோழனின் மூத்த மகனுமான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனால் படைக்கப்பட்டு இருக்கிறது. நான்கு நடுகற்களில் இரண்டு பழங்கால போர் பற்றிய செய்தியினை தருகின்றது. அதாவது ‘ஆநிரை காக்கும் பூசலில்’ இறந்துபோன தந்தை தின்மச்செட்டி மற்றும் அவரது மகன் சாத்தையன் பற்றி குறிக்கின்றது[1].
ஆநிரை கவர்தல்- நடுகற்கள்
ஆநிரைமீட்டவீரக்கல்‘ தேனியில்கண்டுபிடிப்பு[2]: 11 மற்றும் 14ம் நூற்றாண்டு காலத்து சிற்ப கற்றூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கல் “ஆநிரை மீட்ட வீரக்கல்.’ இக்கல்லில் கீழிருந்து மேலாக நான்கு நிலைகளில் இரண்டு வீரர்களின் வீரச்செயல்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதல் நிலையில், போரில் ஈடுபடும் வீரன் குதிரையின் மீது அமர்ந்து எதிரியை ஈட்டி கொண்டு எரிவதாகும். இரண்டாவது நிலையாக வீரனின் காலடியில் பெண் அல்லது வீரனின் மனைவியாக கருதும் அந்த பெண்ணும் கணவருடன் இறந்திருப்பதற்கான சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது நிலையில், சங்க காலம் முதல் போரின் போது தமிழருக்கே உரித்தான ஆநிரை மீட்டல் அதாவது போரின் போது எதிரிகளிடமிருந்து மாடுகள் அல்லது பெண்களை மீட்டு வருவதாகும். அதன் நினைவாக மீட்டு வரும் வீரரின் நினைவாகவும், இரு மனைவிகளும் இறந்ததன் நினைவாக எழுப்பப்பட்ட வீரக்கல்லாகும். நான்காவது நிலையாக வீரர்கள் தனது மனைவிகளோடு இறந்ததை குறிக்கும் வகையில் இடது புறம் சூரியனும், மையத்தில் சிவலிங்கமும், வலது புறத்தில் சந்திரனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஆநிரை கவர்தல் அல்லது மீட்டு வருவதற்காக இரு ஆட்சியாளர்களிடையே போர் நடந்ததற்கான ஆதரமான வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது போல் நாயக்கர் கால நிர்வாக முறையில் சிறப்புடையதாக கருதப்பட்ட நாட்டுக்காவல் முறை (ஊர்க்காவல் முறை) இருந்ததற்கான நாட்டுக் காவல் ஒற்றைக் கல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் உருவ அமைப்பாக வீரன் ஒருவன் குத்துவாள் இடுப்பில் செருகி ஆவேசத்துடன் ஒரு கையில் வாளை உயர்த்திய நிலையிலும், ஊர்க்காவல் முறையின் அடையாளமாக மறுகையில் தடி ஊன்றிய நிலையிலும் உள்ளது. இந்த கல் 14 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம், என கண்டறியப்பட்டுள்ளது[3].
ஆநிரை காத்தல் – தெய்வமாக மதித்தல்
இக்காலத்தையநிலைமை: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 – 1898 ஜூலை 5) 19 ஆம் நூற்றாண்டில் புலால் உணவுக்காக பசுக்கொலை செய்து மாமிசம் உண்ணும் ஆங்கிலேயர்களின் கொடுமையை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நூறு பாடல்கள் கொண்ட, “ஆங்கிலியர் அந்தாதி” என்று பாடினார். இவ்வாறிருக்கும் போது, “தமிழர்கள்” என்று பறைச்சாற்றிக் கொள்பவர்கள், இவற்றையெல்லாம் மறைத்து, மறந்து ஏதேதோ பேசுகிறார்கள், எழுதிகிறார்கள். இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல், தங்களை கவிக்கோ, பெருங்கவிக்கோ என்றெல்லாம் கூறிக்கொள்கிறார்கள், பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுமாமிசம் உண்ணும் விழா நடத்துகிறார்கள், பிறகு எப்படி, ஏன் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்?
1966 anti-cow slaughter rally Delhi.6
1966ல்தில்லியில்நடைப்பெற்றபசுவதைஎதிர்ப்புபேரணியும், சாதுக்கள்கொல்லப்பட்டதும்: இந்தியாவில் பசுவதையைத் தடைசெய்ய வேண்டி இந்துக்கள் பல காலமாகப் போராடி வருகின்றனர். நவம்பர் 7, 1966 அன்று “கோபாஸ்டமி” என்று கொண்டாடப்படும் தினத்தன்று சாதுக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும் பசுவதையை தடை செய்யக் கோரி குரல் எழுப்பினார், இந்திரா காந்திக்கு கடிதமும் எழுதினார்[4]. சாதுக்களின் பேரணி பாராளுமன்றைத்தை நோக்கிச் சென்றபோது, பேரணி மீது அப்போதைய இந்திரா காந்தி அரசின் உத்தரவுப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எட்டு சாதுக்கள் பலியானார்கள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால், தில்லியில் இருந்த காமராஜர் வீடு தாக்கப்பட்டது. இதற்காக சங்கராச்சாரியார் சுவாமி நிரஞ்சன் தீர்த்தர், சுவாமி பர்பத்திரி, மஹாத்மா ராமசந்திர வீர் முதலியோர் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டர். மஹாத்மா ராமசந்திர வீர் 166 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா இதற்காக பொறுபேற்று ராஜினாமா செய்தார். ஆனால், தமிழகத்தில் இவ்வுண்மைகளைச் சொல்வது கிடையாது. மாறாக, நாத்திகவாதிகள், இந்துவிரோதிகள் (ஏனெனில் அவர்கள் எழுதும் விதத்திலேயே அதனை வெளிப்படுத்துக் கொள்கின்றனர்[5]) இதைக்கூடத் திரித்து எழுதுகிறர்கள் என்பதை கவனிக்க வேண்டும்[6].
1966 anti-cow slaughter rally Delhi.1
சென்னையில்நடைப்பெற்றபோராட்டங்கள்: ஆலய வழிபடுவோர் சங்கம், சென்னை எனும் எஸ்.வி.பத்ரி என்பவரால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழகம் வழியாகக் கடத்தப்பட்டு கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் பசுக்கள், கன்றுகள், எருமைகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றது. சென்னை பெரம்பூரில் 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு நவீன இறைச்சிக்கூடம் அமைக்க ஆரம்பித்தது. பல ஆண்டுகளாக இங்கு சாதாரண இறைச்சிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை அமைக்கும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ஹின்ட்-அக்ரோ லிமிடெட் அமைப்பு ஏற்றது. இந்த நவீன இறைச்சிக்கூடம் ஒரு நாளில் 10,000 மாடுகளை வதை செய்யும் திறன் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 60 மாடுகளையும் 250 கன்றுகளையும், ஆடுகளையும் வதை செய்யும் திறன் கொண்ட இந்த நவீன இறைச்சிக்கூடத்திற்கு பொது மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டும், உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.
[4] In his letter, written in 1966 to the then Prime Minister, Mrs. Indira Gandhi of 1966, Lok Nayak Shri Jaya Prakash Narayan wrote that “ For myself, I cannot understand why, in a Hindu majority country like India, where rightly or wrongly, there is such a strong feeling about cow-slaughter, there cannot be a legal ban”. A copy of the letter is annexed and marked as Annex I (4). http://dahd.nic.in/ch1/chap1.htm#item13
புனே திரைப்படக்கல்லூரிதலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)
Gajendra Chauhan – Vaasanaa- afilm acted by him
பிட்டுபடஹீரோவை / செக்ஸ்நடிகரைகல்லூரிசேர்மனாகநியமித்தபாஜக : போராட்டத்தில்மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.
Mahesh Bhatt muslim kissing woman
சென்டிமென்ட்டாகதூண்டில்போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.
Gajendra Chauhan – Khuli khidki – afilm acted by him
கல்லுாரிஇயக்குனர்பிரசாந்த்பத்ரபேவைசிறைபிடித்தமாணவர்கள்மீது, புகாரின்பேரில், வழக்குபதிவு, 5 பேர்கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Janab Mahesh Bhatt and his second wife Parveen Babi
ஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].
Gajendra Chauhan – Jaungal ki rani – afilm acted by him
கைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].
Janab Mahesh Bhatt and his three wives
அரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.
Janab Bhatt, Dig – conspiracy-theory- book agaibst RSS
“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.
[4] தினகரன், புனேதிரைப்படகல்லூரிக்குள்நள்ளிரவில்புகுந்து 5 மாணவர்களைபோலீசார்அதிரடியாககைது: கல்லூரிவளாகத்தில்பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM
புனே திரைப்படக்கல்லூரிதலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)
U R Ananathmurthy and his christian wife Esther
யு.ஆர். அனந்தமூர்த்தி(2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம் முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.
Saeed-Akhtar-Mirza
சயீத்அக்தர்மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.
Saeed aktar mirza, babar and masjid
கஜேந்திரசௌஹான்ஒரு “புரோன்ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.
Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments
தகுதி–தராதரம்–பாண்டித்யம்முதலியனஎவ்வாறுஎடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].
Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro
ஆர்.எஸ்.எஸ்தொடர்பிருந்தால்பதவிக்குவரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும் இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.
[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.
Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81., Aug 23, 2014 · 07:46 am
[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.
[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST
[11]Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue, Updated: July 16, 2015 12:26 am.
சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.
“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு: தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில்மதசார்பின்மையைக்கட்டிக்காக்கமோடியின்நரேந்திரமோடிகலந்துகொள்ளும்நிகழ்ச்சிக்கு மற்றும்உரைக்கு வழங்கப்பட்டஅனுமதியைரத்துசெய்யசென்னைபோலீஸ்கமிஷனருக்கும், சென்னைபல்கலைக்கழகதுணைவேந்தருக்கும்உத்தரவிடவேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].
கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].
மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].
புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].
பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].
தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].
மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.
அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].
மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].
[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.
[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.
[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.