"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூலுக்குபள்ளிக்கல்வித்துறைமூலம்நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.
அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.
வீக்–என்டைஜாலியாகக்கழித்தவிதம்–என்றாகியது: இவர்கள் முன்னமே எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:
இந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.
ஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று?
“பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.
130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை! என்று கேட்டிருந்தேன், வரவில்லை.
“பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.
1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.
“பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
“பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்?
தமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது!
கத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன!
ஊடகங்கள்கண்டுகொள்ளவில்லையாஅல்லதுஉள்ளேஅனுமதிக்கப்படவில்லையா?: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.
தமிழகவிசயங்களைஆங்கிலத்தில்விவரித்தசித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே? நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்!,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்?
தமக்குத்தாமேஜால்றாபோட்டவிதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள்ஒருபொதுப்படையானவிசயத்திற்குக்கூடஒத்தக்கருத்துகளைக்கொண்டுசெல்லமுடியவில்லை. உருப்படியாகஎதையும்சொல்லாமல், அறிவுரைகூறும்ரீதியில், இலக்கியவிழாஇருந்தது….வலதுசாரிகளிடம்வித்தியாசங்கள்இருப்பதுபிரச்சினைஇல்லை. எப்படியாகஇருந்தாலும், இடதுசாரிகளைஎதிர்கொள்ளவேண்டும்,” புலம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது. வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.
தூர்தர்ஷண்மூலம்முடித்துக்கொண்டவிழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.
[1] The Hindu, Pondy Lit Fest begins, SPECIAL CORRESPONDENT, PUDUCHERRY, SEPTEMBER 28, 2019 00:38 IST; UPDATED: SEPTEMBER 28, 2019 04:56 IST
[2]Bedi inaugurates event; this year’s theme is ‘Bharat Shakti’: The second edition of the Pondy Lit Fest 2019, with the theme ‘Bharat Shakti,’ began here on Friday. Lieutenant Governor Kiran Bedi inaugurated the three-day event at Hotel Shenbaga convention centre. Ms. Bedi recalled the religious and cultural importance of the Union Territory. She spoke about the ancient history of Pondicherry and the origin of its name. Around 80 historians, writers, artists and journalists would participate in the three-day event.
Topics of discussion: Some of the topics included are “Nationalism: Just who is an anti-national,” Jammu and Kashmir: Erasing a blot on history,” Hindutva: Way of Life or rebranded Hinduism, “India in the world,” “Economy: Is $5trillion a mirage and “Fake News: Agenda or Technology to blame.” Kerala Governor Arif Mohammed Khan, Health and Public Works Minister of Assam Himanta Biswa Sarma and BJP general secretary Ram Madhav are the main speakers on the last day of the event. https://www.thehindu.com/news/cities/puducherry/pondy-lit-fest-begins/article29534347.ece
[3] The Print, India’s Right-wing doesn’t mind different voices within. That’s what separates it from Left, AJIT DATTA, Updated: 5 October, 2019 1:05 pm IST
[7] It is unfortunate that the organizers purposely prevented some experts from Tamilnadu to attend and the proceedings were held in a very restrictive manner. Ironically, most of them spoke in English and Hindi. Most of the speakers spoke in a very generalized manner [learned from three participants]. No videos are uploaded to know what exactly they spoke. There has not been any media coverage. Lt us hope that PondyLitFest 2020 would transparent, accommodative and democratic.
கிருத்துவர்களின்ஆராய்ச்சிகள்எல்லைகளைக்கடப்பது: இங்கு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட விசயங்கள் எதுவும் அலசப்படவில்லை. ஊடகங்களில் வந்தது மற்றும் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிந்த, அறிந்த மற்றும் சரிபார்த்த விசயங்களை வைத்து தான் இவை தரப்படுகின்றன. கிருத்துவர்களுக்கு தங்களது நம்பிக்கைகளுக்கு ஏற்ப அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், அதே நேரத்தில், மற்ற நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்குப் புறம்பாக எதுவும் செய்ய முடியாது. ஆனால், தாமஸ் கட்டுக் கதையினை வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் போது, அதன் பின்னணியை ஆயும் போது தான், இவ்வளவு விவரங்கள் வெளிவருகின்றன. ஆரம்பித்திலிருந்தே, ஜான் சாமுவேல் கிருத்துவ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், யாரும் அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பர். ஆனால், முருகனை வைத்து அவ்வாறு செய்ததால் தான் பிரச்சினை உருவானது. பிறகு அவர்களது தொடர்புகளால், பிரச்சினை மேன்மேலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை, எல்லாவழிகளிலும் மெய்ப்பிக்கப் படாமல் இருக்கிறது.
ஜான்ஜி. சாமுவேல்யார்? [1998 முதல் 2001 வரைநடந்தபிரச்சினைகள்]: ஜான் சாமுவேல் ஒரு கிருத்துவர், “Institute director John Samuel, an Indian Christian, increased the last percentage, opining a nonmysticaland subtly antiHinduview that most scholars, including himself, believe Murugan was elevated from a historical person”, அதனால், முருகனை ஒரு மனிதனாக பாவித்து, பிறகு கடவுளாக உயர்த்தப் பட்டதை, இந்து-விரோதமானது என்று “இன்டுயிஸம் டுடே” வர்ணித்தது[1]. முதலில் அனைத்திந்திய ஆசியவியல் நிறுவனத்தில் லட்சங்களில் பணத்தை கையாடியதாக அந்நிறுவனத்தின் நிதியளிக்கும் ஜப்பானியர் ஒருவர் புகார் 1998ல் கொடுத்தார். வி.ஆர். கிருஷ்ண ஐயர் தலமையில் நிறுவப்பட்ட விசாரிக்கும் கமிட்டி[2] அவரது பணம் கையாடலை விசாரித்தது. விசாரணையில் அவர் சுமார் ஒன்பது லட்சம் கணக்குக் காட்டமுடியவில்லை. அதனால், பணம் கையாடஉறுதி செய்யப் பட்டதால், பதவிலிருந்து விலக்கிவைக்கப் பட்டார். பதிலுக்கு கொடுமுடி சண்முகம்[3] என்பவர் அமர்த்தப் பட்டார். விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப் பட்டு, பதவி நீக்கம் செய்யப் பட்டது. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, கொடுமுடி சண்முகம் என்பவர் இயக்குனராக இருக்கும்போது, இந்த ஜான் சாமுவேல் ரவுடிகளுடன் உள்ளே நுழைந்து ஆசியவியல் வளாகத்தை மே.7, 2001 அன்று ஆக்கிரமித்துக் கொண்டதால், போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, துரைப்பாக்கம் போலீஸார் கைது செய்து கொண்டு போயினர். இவையெல்லாம் அப்பொழுதைய தினசரிகளில் செய்திகளாக வெளிவந்தன[4].
அனைத்துலகஸ்கந்தா–முருகாமாநாடு [1998, 2001, 2003]: அனைத்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு பெயரில் ஒரு கம்பெனியை, கம்பனி சட்டம், பிரிவு 25ன் கீழ் ஆரம்பித்து, ஷேர்களை பங்குகளை / விற்க முயற்சித்தார். மொரிஸியஸ், மலேசியாவில் எல்லாம் ஸ்கந்தா-முருகா மாநாடுகள் நடந்தன. முன்பு, ஏப்ரல் 2001ல், மொரிஸியசில் ஒரு மாநாடு நடந்தபோது, உள்ள குற்றப்பின்னணியை மறைத்து மஹாத்மா காந்தி, மோகா மையத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியபோது, விஷயம் அறிந்தவுடன் வெளியேற்றப்பட்டார். பிறகு, அங்கேயே, வி.ஜி. சந்தோஷத்துடன் கோவிலில் பைபிள் பட்டுவாடா செய்தபோது, இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அமுக்கி வாசித்தனர். குற்றத்தை மறைக்க, ஞானப்பழம் போன்று விபூதி பூசிக்கொண்டு வந்தது, வேடிக்கையாக இருந்தது. மலேசியாவில் நடந்த மூன்றாவது மாநாட்டில் (நவம்பர் 3-6, 2003) இவரது கிருத்துவத் தொடர்புகள் முதலியவை வெளிப்படையாகப் பேசப்பட்டது. அந்த மாநாட்டு அமைப்பையும், இவரிடமிருந்து மீட்க வேண்டும் என்று மலேசிய மக்கள் வெளிப்படையாகவே பேசினர். பாட்ரிக் ஹாரிகன் என்ற அமெரிக்க முருக பக்தர், இவரது போலித்தனத்தை அறிந்து நொந்து போய் விட்டார். ஆனால், திடீரென்று அவரது அலாதியான முருகபக்தி, கிருத்துவின் பக்கமே திரும்பியது, பல முருக பக்தர்களுக்கு வினோதமாகவே இருந்தது. ஆனால், இதே ஜான் சாமுவேல், பிறகு முருகனை அம்போ என்று விட்டுவிட்டு, ஏசுவைப் பிடித்துக் கொண்டு விட்டது, பணத்திற்காகத்தான். தெய்வநாயகத்தையும் மிஞ்சும் வகையில், ஆராய்ச்சியை தொடங்கி விட்டார் இந்த மோசடி பேர்வழி. பாவம், அந்த பௌத்த சந்நியாசி, மறுபடியும் ஏமாந்து விட்டார். பிறகுதான் அவரது நண்பர்களுக்கு விஷயம் தெரிய ஆரம்பித்தது.
ஸ்கந்த–முருகஇயக்குனர்கள்அதிர்ந்தது, நண்பர்கள்ஒதுங்கியது: ஒரு ஈரோடு மருத்துவர் எம்.சி. ராஜமாணிக்கம்- நொந்தேப் போய்விட்டார். ஜே. ஜி. கண்ணப்பன் ஒதுங்கி விட்டார். வி. பாலாம்பாள் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார். ஜே. ராமச்சந்திரன், டாக்டர் ராம்தாஸ், ராஜு காளிதாஸ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் திடீரென்று தனது கிருத்துவ புத்தியைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இந்நிலையில், தெய்வநாயகம் போலவே இவனும் அந்த தாமஸ் கட்டுக்கதையைப் பிடித்துக் கொண்டார். நியூயார்க்கில் ஒரு மாநாடு, பிறகு சத்யபாமா காலேஜில் (ஜேப்பியார் உபயம்). இப்பொழுது, இந்த செம்மொழி மாநாட்டில் அடக்கம்! இந்த கூட்டத்தைப் பாருங்களேன் – மணவை முஸ்தபா, அப்துல் ரஹ்மான், …………..இப்படி முஸ்லீம்கள், அன்னி தமசு (தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிக்கு உதவியவர், சவேசுவின் மனைவி என்று சொல்லப்படுகிறது), சாமுவேல்……….கிருத்துவர்கள், மற்ற நாத்திகர்கள்………………….தயானந்த பிரான்சிஸ் தாமஸ் கட்டுக்கதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார், அதனை வீ. ஜானசிகாமணி குறிபிடுவார்; பிறகு, இருவரும் சேர்ந்து எழுதுவார். ஜே.டி. பாஸ்கர தாஸ் எழுதும் போது, தைக் குறிப்பிடுவார். இப்படித்தான், அவர்களது ஆராய்ச்சி வளரும்.
2003-2005 – கிருத்துவர்கள்திட்டம்: ஜப்பானிய தூதர்கள், அதிகாரிகள் முதலியோர் சென்னைக்கு வரும்போதெல்லாம், மனைவி-மகளோடு சென்று அவர்களின் கால்களில் விழுந்து கெஞ்சி மறுபடியும் இயக்குனர் ஆனார். அதற்கு, கிருத்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். மைக்கேல் ஃபாரடே, தெய்வநாயகம், ஜான் சாமுவேல், சந்தோஷம் முதல்யோர் கூடி பேசி, கிருத்துவத்தைப் பரப்ப அதிரடி நடவடிக்கையாக செயல்பட தீர்மானித்தனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி போய், சோனியா மெய்னோ மற்றும் கருணாநிதி ஆட்சிகள் வந்து விட்டன. அகில உலக அளவில், பிஜேபி அல்லது எந்த தேசிய / இந்து சார்புடைய கட்சியும் எந்த காரணத்திற்கும் பதவிக்கு வரக்கூடாது என்று திட்டம் தீட்டப் பட்டது. இப்பொழுது பிஜேபி ஆட்சி வந்துள்ளதால், இவர்களது வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். கேரளாவில் செரியனின் பட்டனம் ஆராய்ச்சியும், இதே தாமஸ் கட்டுக்கதையினை நோக்கி வந்துள்ளதை கவனிக்கலாம். பி.எஸ். ஹரிசங்கர் என்பவர், ஒரு புத்தகத்தை எழுதி [B S Harishankar’s ‘Pattanam: Constructs, Contexts and Interventions’] மறுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது[5].
2005-2008: கிருத்துவமாநாடுகள்நடத்தபட்டது: ஜூலை 2005ல் கிருத்துவ மாநாடு நடத்தினார்[7]. ஜனவரி 2007ல் இரண்டாவது மாடாடு நடத்தப் பட்டது[6]. மூன்றாவது செப்டம்பர் 2008ல் நடந்ததாம்[7]. இதற்காக ஆளுமைக் கூட்டம் கீழ்கண்டவாறு மாற்றப்பட்டது: எம். இஸ்ரேல்-தலைவர், ஜான் சாமுவேல்-செயலாளர், வீ. ஞானசிகாமணி–பொருளாளர் [அகத்தியர் ஞானம் என்ற போலி சித்தர் இலக்கியத்தை உருவாக்கி, சைவத்தை ஆபாசமாக, அசிங்கமாக சித்தரித்து புத்தகம் எழுதிய ஆசாமி] என்று கூட்டம் கூடியது. உறுப்பினர்களுள் ஒருவராக வி.ஜி.சந்தோசம் இருந்தார். இன்னொரு உறுப்பினர் மோசஸ் மைக்கேல் பாரடே [போலி சித்தராய்ச்சி, மோசடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கிருத்துவ கல்லூரி தமிழ்துறை ஆசாமி, தெய்வநாயகத்தின் வாரிசு]. இவ்வாறு முழுக்க-முழுக்க, இந்நிறுவனம் கிருத்துவ மயமாக்ப் பட்டுவிட்டது. போதாகுறைக்கு, ஒரு கிருத்துவ ஆராய்ச்சித் துறையும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதன்கீழ்தான் தாமஸ் கட்டுக்கதை பெரிய அளவில் பரப்ப, இந்த கோஷ்டி ஈடுபட்டுள்ளது[8].
[2] The Institute of Asian Studies is non-profit research centre was registered as an autonomous Society in 1982 and it is governed by a team of members in the capacity of the Board of Governors. Eminent personalities from various walk of life – judiciary, education, government, culture – who evince a keen interest in Asian culture, language, and literature form the Boar d of Governors which is headed by Justice V.R. Krishna Iyer.
[3] Dr. Kodumudi Shanmugam, 11-B, Second Avenue, Indira Nagar, Chennai – 600 020, Phone: 044 : 4423419 E-mail : kodumudishanmugan@yahoo.com. இப்பொழுது அவர் இல்லை, காலமகிவிட்டார் என்று தெரிகிறது.
[4] “……………பொறுக்காத, ஜான் சாமுவேல் ஐம்பதிற்கும் மேல் ஆட்களை கூட்டி வந்து, ஆசிவியல் வளாகத்தில் நுழைந்து, பொருட்களை உடைத்து சேதப் படுத்தி, உள்ளேயிருப்பவர்களை மிரட்டி, தான் தான் இயக்குனர் என்று அறையில் உட்ககர்ந்து கொண்டாராம். பிறகு புகார் கொடுத்ததால், பெருங்குடி போலீஸார் வந்து, லாக்-அப்பில் வைத்து விசாரணை செய்தனர். இருப்பினும் தன்னுடைய அரசியல் மற்றும் பண பலத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்”, என்று குறிப்பிட்டுள்ளேன். அப்பொழுது, தினத்தந்தி, மாலைமுரசு, தினமணி போன்ற தமிழ் செய்திதாள்களிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் விவரங்கள் வந்துள்ளன. இப்பொழுது, கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.
எல்லீஸர்விருதுபெற்றவி. வி. சந்தோசம்யார், அவரைதிருவள்ளுவர்திருநாட்கழகம்தேர்ந்தெடுத்தது, எல்லீசர்அறக்கட்டளைஏற்படுத்தியது (4)
வி.ஜி.சந்தோசம்யார்?: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.
அனைத்துலகமாநாடுகளைநடத்துவதில்கிறிஸ்தவர்களின்ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம்முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.
சுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல்ஆதிகிருத்துவம்பற்றிநான்ஆழமாகசிந்திக்கவேண்டியநிலைஏற்பட்டது…கிருத்துவஆய்வுப்புலம் 04-01-201 அன்றுதோற்றுவிக்கஏற்பாடுகள்நடந்தன…..மார்சிலஸ்மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்றபலரோடு, ஆதிகிருத்துவவரலாறுதொடர்பாகமநாடுநடத்தும்முயற்சிபற்றிவிவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].
முருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:
இப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.
விஜிபிநிறுவனஇயக்குனர்கள்எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்திபரப்புவது, மதம்மாற்றுவதுமுதலியவற்றில்ஈடுபட்டுவருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.
கிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்?: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.
[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.
[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.
[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.
[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.
[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.
[7]For further details on the Conference, please contact:Dr. G. John Samuel, Founder-Director, Institute of Asian Studies, Chemmancherry, Sholinganallur P.O.
[8] G. John Samuel (General Editor), Early Christianity in India : (with parallel developments in other parts of Asia), editors, J.B. Santiago, P. Thiagarajan, International Centre for the Study of Christianity in India, Institute of Asian Studies, 2008, Chennai.
[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.
[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.
[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.
அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:
நிகழ்ச்சிபற்றிஓமாம்புலியூர்ஜயராமனின்விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர்மயிலாப்பூர்சமஸ்கிருதகல்லூரிவளாகத்தில்திருவள்ளுவர்விருதுவழங்கும்விழாநடைபெற்றது.
அவர்களும்கலந்துகொண்டுசிறப்பித்தனர். நிகழ்ச்சியைதமிழறிஞர்பேராசிரியர்சாமி. தியாகராஜன்அவர்களும்வழக்கறிஞர்பத்மாஅவர்களும்வேதவிஞ்ஞானஆராய்ச்சிமையஇயக்குனர்பால.கௌதமனும்மிகச்சிறப்பாகசெய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.
2010ல்பிரிவினைவாதி, தவறானபிரச்சாரம்செய்யும்மிஷனரிகளில்ஒருவர், மதம்மாற்றம்செய்யக்காரணமானவர்களூள்ஒருவர்என்றஎலீஸ்எப்படிஇவர்களுக்கு 2017ல்மரியாதைக்குரியவராகமாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், “Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.
“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.
“Ironically,A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languagescannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wroteDravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s article, Caldwell Oppilakkanaththin Arasiyal Pinnani(“The Politics Behind Caldwell’s Comparative Grammar”), published in the April 1997 issue of the Tamil monthly magazineKanaiyaazhi.”
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.
ஏன்இல்லீசரைஇப்பொழுதுதூக்கிப்பிடிக்கவேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?
எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
யார் பணம் கொடுத்தது?
இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?
8வதுஇந்துஆன்மிகமற்றும்சேவைகண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
தமிழகஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:
இந்துவிரோதநாத்திகவீரமணியின்புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.
இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
ஏற்கத் தகுந்ததுதானா?
மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
பி.டி.ஐவேலையைதமிழ்ஊடகங்கள்செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.
எஸ்.குருமூர்த்திகருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச்சட்டைஅணிந்துள்ளவீரமணி, இந்துகடவுள்களைஎதிர்ப்பவர். ஆனால், இன்றுபலலட்சக்கணக்கானதமிழர்கள்அதேகருப்புச்சட்டைஅணிந்துசபரிமலைசெல்கின்றனர். காடுகள், விலங்குகளைபாதுகாக்கவேண்டும், சுற்றுச்சூழலைபேணவேண்டும், குடும்பம்மற்றும்மனிதமதிப்பீடுகளைபின்பற்றவேண்டும், பெண்களைமதிக்கவேண்டும், தேசபக்தியைகடைபிடிக்கவேண்டும்ஆகியநோக்கங்களைஅடிப்படையாகக்கொண்டுஇந்துஆன்மிகமற்றும்சேவைகண்காட்சிநடத்தப்படுகிறது. எனவே, இந்தக்கண்காட்சியைஎதிர்ப்பதுஏன்எனகி.வீரமணியிடம்ஊடகங்கள்கேள்விஎழுப்பவேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].
வீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:
1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.
2. ஏற்கத் தகுந்ததுதானா?
2. ஆமாம்.
3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன?
4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே?
5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா?
5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.
6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே?
[5] நக்கீரன், பள்ளிகளுக்குவிவேகானந்தர்ரதம்செல்லுவதா? –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)
[9] New Indian Express, DK president gets it for opposing Ratha Yatras, By Express News Service, Published: 26th July 2016 06:39 AM, Last Updated: 26th July 2016 06:39 AM
இந்துத்துவவாதிகளின்சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:
இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:
ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?
உண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.
செக்யூலரிஸமயமாக்கப்பட்டசிலைவிவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.
அரசியலாக்கபட்டசிலைவிவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும்! ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.
திருக்குறள்என்றுவைத்துக்கொண்டு, பிஜேபிக்காரர்கள்செய்யும்கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.
[3] தமிழ்.இந்து, ஹரித்வார்கங்கைகரையில்அமைப்பதற்காகமாமல்லபுரத்தில்தயாராகும்திருவள்ளுவர்சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST
[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில்திருக்குறள்விழாகவிஞர்வைரமுத்துஉள்பட 4 பேருக்குவள்ளுவர்விருதுகள்தமிழகத்தைசேர்ந்த 133 மாணவ–மாணவிகள்பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST
[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..
[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.
குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)
இதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].
கபில்சிபல், சிதம்பரம் முதலியோர் இவ்விசயத்தில் கமென்ட் அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].
மம்தாசர்மா, சுசில்குமார் ஷின்டே முதலியோரது சுருசுருப்பான வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்டுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.
நம்பிராஜனை அடுத்து இந்த “ஸ்னூப்பிங்”, “ஸ்டாகிங்” விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்!
[8] The NCW chairperson’s comments coincided with home minister Sushil Kumar Shinde’s statement that the Centre could consider ordering a probe into violation of the woman’s privacy by Gujarat Police allegedly at Shah’s instance. According to sources, the Centre has already asked security agencies to look for evidence of the alleged “snooping” in the “interception records” that telecom service providers maintain.
சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.
“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு: தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில்மதசார்பின்மையைக்கட்டிக்காக்கமோடியின்நரேந்திரமோடிகலந்துகொள்ளும்நிகழ்ச்சிக்கு மற்றும்உரைக்கு வழங்கப்பட்டஅனுமதியைரத்துசெய்யசென்னைபோலீஸ்கமிஷனருக்கும், சென்னைபல்கலைக்கழகதுணைவேந்தருக்கும்உத்தரவிடவேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].
கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].
மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].
புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].
பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].
தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].
மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.
அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].
மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].
[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.
[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.
[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.
ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.
ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.
“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].
ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].
ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].
ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].
பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].
இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].
பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?
ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?
“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.
ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.