போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)
1770ல் இல்லாத செப்பேடுகள் 1881ல் எப்படி வந்தன?: மோடி நெதன்யாகுவிற்கு யூத தாமிர பட்டயங்களின் நகல் / மாதிரி கொடுத்ததால் தான்[1], இப்பிரச்சினைகள் வெளி வந்து, விவாதிக்கப் படுகின்றன[2]. அட்ரியன் மொயீன்ஸ் என்ற கொச்சின் கவர்னர் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர் 1770ல் மலபார் யூதர்களைப் பற்றி எழுதும் போது, அத்தகைய செப்பேடுகள் இருந்ததாக சொல்லப்பட்டதால், அதை பார்க்க ஆசைக்கொண்டதாகவும், ஆனால், பிறகு, அவை கிடைக்க முடியாத அளவுக்கு காணாமல் போய் விட்டதாக அல்லது அத்தகைய செப்பேடுகளே இல்லை என்று தெரியவந்ததாகக் குறிப்பிட்டார் என்றும், பச்சனன் 1811ல் குறிப்பிட்டார்[3]. கவர்னருக்கே காட்டப்படவில்லை எனும்போது, அவை இல்லை என்பது தான் உண்மையாகிறது. ஆகவே, பச்சனன் ஆராய்ச்சியின் படி, 1770ம் ஆண்டு, கொச்சின் கவர்னரால் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது. பச்சனன் பார்த்தவை போலி என்று அவரே ஒப்புக் கொண்டார். எனவே, இந்த தாமிர பட்டயங்கள் மற்றும் செப்பேடுகளைப் பற்றி மறுபடி-மறுபடி பேசுவது, எழுதுவது, விவாதிப்பதும் போலித்தனமாகும், சரித்திர மோசடி ஆகும்.
கிருத்துவப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது (நஸ்ரனி.நெட் உரையாடல்): பலமுறை குறிப்பிட்டது போல, செக்யூலரிஸ பாரதத்தில், அவரவர் மதநம்பிக்கை, அவரவருக்கு உயர்ந்தது தான், ஆனால், அதற்காக அடுத்த நம்பிக்கையாளரை கேலிபேச, அவதூறு பேச, மோசடிகள் செய்து ஏமாற்ற எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நஸ்ரனி.நெட் என்ற இணைதளத்தில், சிரியன் கிருத்துவர்கள் தங்களது தொன்மையினை நிலைநாட்டிக் கொள்ள இன்றும் பிரச்சாரம், மோசடி முதலியவற்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் தாக்கப்படுவது, இந்து மதம் தான். அங்குதான் பிரச்சினை வருகிறது. எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ளாமல், உண்மையினை எடுத்துக் காட்டுபவர்கள் அக்கூட்டம் வசைபாடி வருகிறது. இருப்பினும், அக்கூட்டத்தில் இருக்கும் சிலர் உண்மையினை கிரகிக்க வேண்டியுள்ளது. என்னுடைய பதிலை இங்கே காணலாம்[4]. இங்கு நானும், தேவபிரியா என்பவரும் பல உண்மைகள், ஆதாரங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டினாலும், அவர்களது குறிக்கோள் பொய்களை பரப்ப வேண்டும் என்ற ரீதியில் தீர்மானமாக உள்ளார்கள். நான் ஆர்ச்பிஷப் அருளப்பா வழக்கு, செப்பேடு-ஆவணங்கள் தயாரிப்பு முதலிய மோசடிகளை ரஎடுத்துக் காட்டினாலும், அவர்கள் வெட்கப்படுவதாக இல்லை. பாரம்பரியம் உள்ளது, அதனை மறுக்க முடியாது என்று அவர்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
செப்பேடுகளுக்கும் யூதர்களுக்கும் சம்பந்தமே இல்லை: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தாமிரத்தின் தரம் மற்றும் உற்பத்தித் திறமைகள் முதலியவற்றைப் பார்க்கும்பொழுது, அவற்றை, யூதர்களுடன் தொடர்பு படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில், கேரளாவில் “தாமிர காலம்” இருக்கவில்லை மற்றும் தாமிரத்தை எட்டாம் நூற்றாண்டு வரை அரசு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவற்றில் காணப்படும் விவரங்களின் படி பார்த்தால், இறையன் சாத்தன், மூகன் சாத்தன் போன்ற பெயர்களைக் கவனித்தால், அப்பொழுது பௌத்தம் இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆகையால், முதன் முதலாக கிராங்கனூரில், யூதர்கள் வந்து தங்கிய காலம் 13ம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில், அப்பொழுது தான், அது அனைத்துலக ரீதியில் துறைமுகமாகியது. அதிலும், யூத குறிப்புகளை வைத்துப் பார்த்தால், அப்பொழுது, அங்கு கிருத்துவர்கள் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. [5].
யூதர்கள் 16ம் நூற்றாண்டில் வந்திருக்கக் கூடும்: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றி தொடர்ந்து குறிப்பிடும்போது, 1514ல் ஸ்பெயெனிலிருந்து யூதர்கள் வெயேற்றப்பட்டபோது, யூதர்கள் வந்திருக்கக் கூடும். இரண்டாவது செப்பேட்டில் காணப்படும் “அஞ்சுவண்ணம்”, “மணிகிராமம்” முதலிய வார்த்தைகளும், தனித்தனியாக செயல்பட்டு வந்த வணிகக்குழுமங்கள் ஆகும் என்று ஹெர்மான் கன்டெர்ட் [Herman Gundert] கூறுகிறார். ரெட்கார் தர்ஸ்டென் [Edgar Thruston], இந்த செப்பேடுகளுக்கும் வணிகக்குழுமங்களுக்கும் சம்பந்தமே இல்லை, கிருத்துவர்களுக்கோ சுத்தமாக சம்பந்த இல்லை என்றார். “இரவிகொற்றன் / இரவிகூர்தன்” என்பதும் என்பவனும் நிச்சயமாக கிருத்துவன் இல்லை. ஏ.சி.பெர்னல் [A. C. Burnell] இவற்றை ஆராய்ந்து கூறும்போது, இவற்றில் சிரியன்கள் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை, தேவையில்லாத மதம் மாற்றும் முயற்சிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப் படுவதால், இந்தியர்களிடையே வெறுப்பை வளர்த்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று, எச்சரித்தார். தழக்காடு செப்பேடு விசயமும், இதேபோலத்தான் உள்ளது. ஏனெனில், சாத்தன் வடுகன் மற்றும் இரவி சாத்தன், பௌத்த மதத்தினைக் குறிப்பதாகும்[6].
தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் ஊக்குவிப்பது வளர்ப்பது ஏன்?: சதாசிவன் போன்றோர் வாதங்களில் ஜாதியவாதம், முதலிய கொள்கைகளும் இருப்பதை காணலாம். அதாவது, பௌத்தத்தில் ஜாதிப்பிரிவுகள் இல்லை என்று அவர் வாதிப்பதைக் கவனிக்கலாம். ஆனால், யூதர்கள் என்று வரும் போது, “கருப்பு யூதர்கள்” [Black Jews] மற்றும் “வெள்ளை யூதர்கள்” [White Jews] என்று குறிப்பிட்டு வாதிப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, அவர்களைப் பொறுத்த வரையில் நிறவேறுபாடு அடிப்படையில் உள்ள பிரிவினையையை கவனிக்க வேண்டும். கிருத்துவர்களும் எழவர், கீழ்ஜாதி போன்ற வாதங்களை வைப்பதை காணலாம். முகமதியர்களைப் பொறுத்த வரையில், “மாப்ளாஸ்” அல்லது “மாப்பிள்ளை” முகமதியர் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடமும் ஜாதிவேறுபாடு இருக்கிறது. அதை மறைக்க, எல்லோரும், இந்துமதத்தில் இருக்கும் வர்ணமுறைதான், தங்களை பாதிப்பதாக குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிருத்துவ-முகமதிய நிறவேறுபாடு, இறையியல் பகுப்பு முதலியவற்றின் அடிப்படையில் உள்ள பிரிவுகள், இந்திய ஜாதியத்தை விட இறுக்கமானது, மாற்றமுடியாதது. அந்நிலையில், மதமாற்றத்திற்கு, இக்கட்டுக்கதைகள் உதவுகின்றன என்றும் மேன்மேலும், மோசடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள், மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு முதலியவற்றை மெத்தப் படித்த கேரளத்தவர் எதிர்க்காதது ஏன்?: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஆர்ச் பிஷப் அருளப்பா – கணேஷ் ஐயர் வழக்கு, கிருத்துவர்களின் மோசடிகளை முழுவதுமாக வெளிப்படுத்தின. சூசை வழக்கு, எப்படி தலித் போர்வையில் இந்து எஸ்சிக்களை ஏமாற்ற நினைத்தது தடுக்கப்பட்டது என்பதை அறியலாம். ஆனால், கேரளத்தில் நடந்து வரும் தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எம்.ஜி.எஸ். நாராயணன் போன்றோர், சில விசயங்களைத் தான் வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், அவரும் சமீபகாலம் வரை ஒரு மார்க்சிஸ்ட் சரித்திராசிரியராக இருந்து கொஞ்சம் மாறியுள்ளார். “பட்டனம்” மோசடியில் கூட, பி.ஜே.கொரியன் போன்றோரின் அள்வுக்கு அதிகமான செயல்பாடுகளினால் மாட்டிக் கொண்டனர். ஏனெனில், அரசியல் மற்றும் பணபலங்களினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இன்றும் இருந்து வருகின்றனர். கேரளாவில் படிப்பறிவு அதிகம் என்று சொல்லிக் கொண்டாலும், இத்தகைய மோசடிகளில் வெட்கம் இல்லாமல் ஈடுபடுவது, பரஸ்பர முறையில், ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்வது என்று தான் நடந்து வருகிறது. ஆக, இப்பொழுது மோடி இத்தகைய பரிசுகளை அளித்துள்ளது மூலம், அவர்களது மோசடி ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிப்பு அதிகமாகும் என்று தெரிகிறது. முன்னர், ராஜேந்திர பிரசாதே ஒப்புக் கொண்டார் என்று எழுதியது போல, மோடியே ஒப்புக் கொண்டார் என்று இனிமேல் எழுத ஆரம்பித்து விடுவர். இதை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பார்களா அல்லது மோடியே செய்து விட்டார் என்பதால் ஆதரிப்பார்களா என்று கவனிக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
10-07-2017
[1] The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.
[2] http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece
[3] Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. மேலே பார்க்கவும்.
[4] http://www.nasrani.net/2007/02/16/the-plates-and-the-privileges/
[5] It cannot be corrpoborated that the grant of the copper plate was in 379 AD either by the quality of its copper or by its manufacturing standards. Kerala never had an age of copper nor the metal was taken for any official use till the eigth century.
N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.712.
[6] S. N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.422.