Archive for the ‘ஏசுர்வேதம்’ Category

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)

Adrian Moens, a Governor of Cochin, in 1770

1770ல் இல்லாத செப்பேடுகள் 1881ல் எப்படி வந்தன?: மோடி நெதன்யாகுவிற்கு யூத தாமிர பட்டயங்களின் நகல் / மாதிரி கொடுத்ததால் தான்[1], இப்பிரச்சினைகள் வெளி வந்து, விவாதிக்கப் படுகின்றன[2]. அட்ரியன் மொயீன்ஸ் என்ற கொச்சின் கவர்னர் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர் 1770ல் மலபார் யூதர்களைப் பற்றி எழுதும் போது, அத்தகைய செப்பேடுகள் இருந்ததாக சொல்லப்பட்டதால், அதை பார்க்க ஆசைக்கொண்டதாகவும், ஆனால், பிறகு, அவை கிடைக்க முடியாத அளவுக்கு காணாமல் போய் விட்டதாக அல்லது அத்தகைய செப்பேடுகளே இல்லை என்று தெரியவந்ததாகக் குறிப்பிட்டார் என்றும், பச்சனன் 1811ல் குறிப்பிட்டார்[3]. கவர்னருக்கே காட்டப்படவில்லை எனும்போது, அவை இல்லை என்பது தான் உண்மையாகிறது. ஆகவே, பச்சனன் ஆராய்ச்சியின் படி, 1770ம் ஆண்டு, கொச்சின் கவர்னரால் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது. பச்சனன் பார்த்தவை போலி என்று அவரே ஒப்புக் கொண்டார். எனவே, இந்த தாமிர பட்டயங்கள் மற்றும் செப்பேடுகளைப் பற்றி மறுபடி-மறுபடி பேசுவது, எழுதுவது, விவாதிப்பதும் போலித்தனமாகும், சரித்திர மோசடி ஆகும்.

Vedaprakash reply dated 02-08-2008 to nasrani.net

கிருத்துவப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது (நஸ்ரனி.நெட் உரையாடல்): பலமுறை குறிப்பிட்டது போல, செக்யூலரிஸ பாரதத்தில், அவரவர் மதநம்பிக்கை, அவரவருக்கு உயர்ந்தது தான், ஆனால், அதற்காக அடுத்த நம்பிக்கையாளரை கேலிபேச, அவதூறு பேச, மோசடிகள் செய்து ஏமாற்ற எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நஸ்ரனி.நெட் என்ற இணைதளத்தில், சிரியன் கிருத்துவர்கள் தங்களது தொன்மையினை நிலைநாட்டிக் கொள்ள இன்றும் பிரச்சாரம், மோசடி முதலியவற்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் தாக்கப்படுவது, இந்து மதம் தான். அங்குதான் பிரச்சினை வருகிறது. எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ளாமல், உண்மையினை எடுத்துக் காட்டுபவர்கள் அக்கூட்டம் வசைபாடி வருகிறது. இருப்பினும், அக்கூட்டத்தில் இருக்கும் சிலர் உண்மையினை கிரகிக்க வேண்டியுள்ளது. என்னுடைய பதிலை இங்கே காணலாம்[4]. இங்கு நானும், தேவபிரியா என்பவரும் பல உண்மைகள், ஆதாரங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டினாலும், அவர்களது குறிக்கோள் பொய்களை பரப்ப வேண்டும் என்ற ரீதியில் தீர்மானமாக உள்ளார்கள். நான் ஆர்ச்பிஷப் அருளப்பா வழக்கு, செப்பேடு-ஆவணங்கள் தயாரிப்பு முதலிய மோசடிகளை ரஎடுத்துக் காட்டினாலும், அவர்கள் வெட்கப்படுவதாக இல்லை. பாரம்பரியம் உள்ளது, அதனை மறுக்க முடியாது என்று அவர்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

S N Sadasivan - copper age was not there in Kerala till 8th cent CE

செப்பேடுகளுக்கும் யூதர்களுக்கும் சம்பந்தமே இல்லை: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தாமிரத்தின் தரம் மற்றும் உற்பத்தித் திறமைகள் முதலியவற்றைப் பார்க்கும்பொழுது, அவற்றை, யூதர்களுடன் தொடர்பு படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில், கேரளாவில் “தாமிர காலம்” இருக்கவில்லை மற்றும் தாமிரத்தை எட்டாம் நூற்றாண்டு வரை அரசு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவற்றில் காணப்படும் விவரங்களின் படி பார்த்தால், இறையன் சாத்தன், மூகன் சாத்தன் போன்ற பெயர்களைக் கவனித்தால், அப்பொழுது பௌத்தம் இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆகையால், முதன் முதலாக கிராங்கனூரில், யூதர்கள் வந்து தங்கிய காலம் 13ம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில், அப்பொழுது தான், அது அனைத்துலக ரீதியில் துறைமுகமாகியது. அதிலும், யூத குறிப்புகளை வைத்துப் பார்த்தால், அப்பொழுது, அங்கு கிருத்துவர்கள் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. [5].

Copper plates nnthing to do wth the Hews or Christians- S N SAdasivan

யூதர்கள் 16ம் நூற்றாண்டில் வந்திருக்கக் கூடும்: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றி தொடர்ந்து குறிப்பிடும்போது, 1514ல் ஸ்பெயெனிலிருந்து யூதர்கள் வெயேற்றப்பட்டபோது, யூதர்கள் வந்திருக்கக் கூடும். இரண்டாவது செப்பேட்டில் காணப்படும் “அஞ்சுவண்ணம்”, “மணிகிராமம்” முதலிய வார்த்தைகளும், தனித்தனியாக செயல்பட்டு வந்த வணிகக்குழுமங்கள் ஆகும் என்று ஹெர்மான் கன்டெர்ட் [Herman Gundert] கூறுகிறார். ரெட்கார் தர்ஸ்டென் [Edgar Thruston], இந்த செப்பேடுகளுக்கும் வணிகக்குழுமங்களுக்கும் சம்பந்தமே இல்லை, கிருத்துவர்களுக்கோ சுத்தமாக சம்பந்த இல்லை என்றார். “இரவிகொற்றன் / இரவிகூர்தன்” என்பதும் என்பவனும் நிச்சயமாக கிருத்துவன் இல்லை. ஏ.சி.பெர்னல் [A. C. Burnell] இவற்றை ஆராய்ந்து கூறும்போது, இவற்றில் சிரியன்கள் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை, தேவையில்லாத மதம் மாற்றும் முயற்சிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப் படுவதால், இந்தியர்களிடையே வெறுப்பை வளர்த்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று, எச்சரித்தார். தழக்காடு செப்பேடு விசயமும், இதேபோலத்தான் உள்ளது.  ஏனெனில், சாத்தன் வடுகன் மற்றும் இரவி சாத்தன், பௌத்த மதத்தினைக் குறிப்பதாகும்[6].

Cladius Buchanan and copper plates

தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் ஊக்குவிப்பது வளர்ப்பது ஏன்?: சதாசிவன் போன்றோர் வாதங்களில் ஜாதியவாதம், முதலிய கொள்கைகளும் இருப்பதை காணலாம். அதாவது, பௌத்தத்தில் ஜாதிப்பிரிவுகள் இல்லை என்று அவர் வாதிப்பதைக் கவனிக்கலாம். ஆனால், யூதர்கள் என்று வரும் போது, “கருப்பு யூதர்கள்” [Black Jews] மற்றும் “வெள்ளை யூதர்கள்” [White Jews] என்று குறிப்பிட்டு வாதிப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, அவர்களைப் பொறுத்த வரையில் நிறவேறுபாடு அடிப்படையில் உள்ள பிரிவினையையை கவனிக்க வேண்டும். கிருத்துவர்களும் எழவர், கீழ்ஜாதி போன்ற வாதங்களை வைப்பதை காணலாம். முகமதியர்களைப் பொறுத்த வரையில், “மாப்ளாஸ்” அல்லது “மாப்பிள்ளை” முகமதியர் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடமும் ஜாதிவேறுபாடு இருக்கிறது. அதை மறைக்க, எல்லோரும், இந்துமதத்தில் இருக்கும் வர்ணமுறைதான், தங்களை பாதிப்பதாக குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிருத்துவ-முகமதிய நிறவேறுபாடு, இறையியல் பகுப்பு முதலியவற்றின் அடிப்படையில் உள்ள பிரிவுகள், இந்திய ஜாதியத்தை விட இறுக்கமானது, மாற்றமுடியாதது. அந்நிலையில், மதமாற்றத்திற்கு, இக்கட்டுக்கதைகள் உதவுகின்றன என்றும் மேன்மேலும், மோசடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

the-constitution-scheduled-castes-order-1950

தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள், மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு முதலியவற்றை மெத்தப் படித்த கேரளத்தவர் எதிர்க்காதது ஏன்?: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஆர்ச் பிஷப் அருளப்பா – கணேஷ் ஐயர் வழக்கு, கிருத்துவர்களின் மோசடிகளை முழுவதுமாக வெளிப்படுத்தின.  சூசை வழக்கு, எப்படி தலித் போர்வையில் இந்து எஸ்சிக்களை ஏமாற்ற நினைத்தது தடுக்கப்பட்டது என்பதை அறியலாம். ஆனால், கேரளத்தில் நடந்து வரும் தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எம்.ஜி.எஸ். நாராயணன் போன்றோர், சில விசயங்களைத் தான் வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், அவரும் சமீபகாலம் வரை ஒரு மார்க்சிஸ்ட் சரித்திராசிரியராக இருந்து கொஞ்சம் மாறியுள்ளார். “பட்டனம்” மோசடியில் கூட, பி.ஜே.கொரியன் போன்றோரின் அள்வுக்கு அதிகமான செயல்பாடுகளினால் மாட்டிக் கொண்டனர். ஏனெனில், அரசியல் மற்றும் பணபலங்களினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இன்றும் இருந்து வருகின்றனர். கேரளாவில் படிப்பறிவு அதிகம் என்று சொல்லிக் கொண்டாலும், இத்தகைய மோசடிகளில் வெட்கம் இல்லாமல் ஈடுபடுவது, பரஸ்பர முறையில், ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்வது என்று தான் நடந்து வருகிறது. ஆக, இப்பொழுது மோடி இத்தகைய பரிசுகளை அளித்துள்ளது மூலம், அவர்களது மோசடி ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிப்பு அதிகமாகும் என்று தெரிகிறது. முன்னர், ராஜேந்திர பிரசாதே ஒப்புக் கொண்டார் என்று எழுதியது போல, மோடியே ஒப்புக் கொண்டார் என்று இனிமேல் எழுத ஆரம்பித்து விடுவர். இதை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பார்களா அல்லது மோடியே செய்து விட்டார் என்பதால் ஆதரிப்பார்களா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-07-2017

kerala-historians-at-loggerheads-the-hindu-3

[1] The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.

[2] http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece

[3] Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. மேலே பார்க்கவும்.

[4] http://www.nasrani.net/2007/02/16/the-plates-and-the-privileges/

[5] It cannot be corrpoborated that the grant of the copper plate was in 379 AD either by the quality of its copper or by its manufacturing standards. Kerala never had  an age of copper nor the metal was taken for any official use till the eigth century.

N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.712.

[6] S. N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.422.

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

ஜூன் 28, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களாஇல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

Voltaire appreciated Vedas

போலிஏஸுர் வேதம்உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி?: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன? அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].

Ezourvedam - Ludo Rocher

யஜுர் வேதம்மற்றும் யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.

How Ezour Vedam was manufactured by the Christian missionaries

போலி வேதங்கள் எத்தனை இருந்தன?: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா? எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.

ezoure-Vedam - Jean Calmette and Ludo Rocher

போலிஏஸுர் வேதம்மிஷினரிகளை உலுக்கியது ஏன்?: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].

போலிஏஸுர் வேதம்உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்?
முதல் கட்டம் – 1760-1782

இரண்டாம் கட்டம் – 1782 – 1822

மூன்றாம் கட்டம் – 1822லிருந்து

ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili
ஜீன் கால்மெட் Jean Calmette
அன்டோய்ன் மொசாக் Antoine Mosac
மற்ற மிஷினரிகள் Other Missionaries
மெர்ரி மார்டீன் Pierre Martin
மதம் மாறியவர் New converts

ezoure-Vedam published in French-vol.I and II

சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6].  அதாவது கத்தோலிக்க  ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை  பறையன் ஆக்கியது.

Pope Iyer - usage by Tamil writers

போப் ஐயர்என்று சொல்லும் போது, “போப் பறையர்ஏன்று ஏன் சொல்வதில்லை?: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை! ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்” என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்தகைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது?

© வேதபிரகாஷ்

27-06-2017

Nobili Lost Veda fraud

[1] Ezour Védam arrives in France in 1731. It is sent by the Abbot Bazin and is destined to the library of the king. The Knight of Maudave, returning from India, visits Voltaire in 1760 and offers him his copy of the Ezour Vedam . The text is presented to Voltaire as an excerpt from the Veda translated into French by Father Martin, a former Jesuit missionary from Pondicherry. Maudave expresses doubts as to the quality of Father Martin’s translation. In 1761, Voltaire read the manuscript handed over by Maudave and prepares a new chapter entitled “Bracmanes, Vedam, and Ezourvedam” for the second edition of the Essay on Morals .

[2]  Peter R. Bachmann, Fr. Ellis: Account of a Discovery of a modern imitation of the Vedas with Remarks on the genuine works, Asiatic Rsearches, Vol.14, 1882, pp.1-59.

[3] Prodosh Aich, Lies with Long Legs: Discoveries, Scholars, Science, Enlighent Documentary, Samskriti, New Delhi, 2004

[4] Ludo Rocher (Ed.), Ezourvedam: A French Veda of the Eighteenth Century, John Benjamins Publishing Company, Philadelphia, 1984.

[5] In this dissertation, Ellis describes eight manuscripts of the same type as the Ezour Vedam , called “pseudo-Vedas,” found in the library of the Jesuit missionaries of Pondicherry, and having in the conversion business by accomodatio .

[6] Ellis, Francis Whyte, “Account of a Discovery of a Modern Imitation of the Vedas“, in Asiatic Researches , vol. 14, London, printed for J. Sewell et al., 1822, p. 1-49.

[7] The posthumous publication of the article by Francis Whyte Ellis on the manuscripts in deposit in the library of the Jesuit missionaries of Pondicherry. Ellis proves in this article that it is not a Vedic text but the work of Jesuit missionary Roberto de Nobili written in 1621 for conversion purposes. Ellis visits the library of the Capuchins and discovers the “pseudo-Vedas”. He considers the Ezour Vedam and the other pseudo-Vedas as dangerous counterfeits which were intended to shake the Hindu religion without succeeding in substituting it for Christianity.

[8] http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=306&pno=116

[9] In his book, Tom Trautmann suggests that the Aryan-Dravidian contrast `revealed’ by F. W. Ellis and his Tamil assistants in the early nineteenth-century was later resignfied as a Brahmin/non-Brahmin opposition, and in that form contributed to the non-Brahmin movement in the early twentieth-century.

Trautmann, Thomas R.. Aryans and British India. Berkeley: University of California Press, 1997, pp.221-222

[10] Ravindran, V. 1996. `The unanticipated legacy of Robert Caldwell and the Dravidian movement‘. In South Indian Studies, Vol. 1, pp.83-110.

[11] Dirks, Nicholas. 1995. The conversion of caste: location, translation and appropriation. In Conversion to Modernity, ed. Peter van der Veer, pp. 115-136. London: Routledge