சோனியா புகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது!
The above photo is from from the DNA site
உள்ளது உள்ளபடியான கேலிச் சித்திரம்: நகைச்சுவை, தமாஷ், ஜோக், துணுக்கு, என்ற வகையில் படங்களை வரைவது முன்னர் கணினி இல்லாதக் காலத்தில், ஒரு கலையாக இருந்து வந்தது. படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி அவை இருந்தது, இருக்கின்றன. இப்பொழுது கூட, சில குறிப்பிட்ட நாளிதழ்களில் / பத்திரிக்கைகளில் குறிப்ப்ட்டவர்களின் “கேலிச்சித்திரம்” பிரபலமாக இருந்து வருகிறது. கற்பனையும், கைவண்னமும் தான் அவற்றில் மேலோங்கி நிற்கும். அவற்றை கீழ்கண்ட வகைகளில் இருக்கலாம்:
- கேலிச்சித்திரம் / படம்
- புகைப்படம்
- இரண்டு படம் / புகைப்படங்களை இணைப்பது, இணைத்துக் காட்டுவது
- இரண்டு அல்லது அதற்கு பேற்பட்ட படம் / புகைப்படங்களில் உள்ளவற்றை சேர்ப்பது, இணைப்பது, இணைத்துக் காட்டுவது
இவற்றில் எந்தவித மாற்றங்களையும் செய்யாமல் இருப்பர். உள்ளது உள்ளபடி இருக்கும், ஆனால், அவற்றை விவரிக்கும் போது, விளக்கும் போது, வேறுபடுத்திக் காட்டும் போது, சொல்ல வந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பார்ப்பவர்கள், படிப்பவர்கல் புரிந்து கொள்வார்கள்.
சித்தாந்த ரீதியில் வரையப் பட்ட கேலி சித்திரங்கள் (சுதந்திரத்திற்கு முன்பு): கார்ட்டூனிஸ்ட்டுகள் என்ற கேலிச்சித்திர கலைஞர்கள் நாளிதழ்கள்-பத்திரிக்கைகளில் பணியாற்றி வரும் நிலையில், அவை குறிப்பிட்ட சித்தாந்தம் அல்லது அரசியல் கட்சி சார்புடையதாக இருக்கும் போது, கேலிச்சித்திரங்களும் அவ்வாறே வரையும்படி பணிக்கப்பட்டனர் அல்லது பணியில் உள்லவர் வரைந்து தமது தொழிலை வளர்த்தனர். சுதந்திரகாலகட்டத்தில், ஆங்கிலேய கேலிச்சித்திரங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை மிகவும் மோசமாகத்தான் சித்தரித்துக் காட்டின. இன்று இந்தியர்கள் மதிக்கும் தலைவர்களை “நாய்கள்” பொன்றெல்லாம் சித்தரித்துக் காட்டின. இந்தியர்களையும் கேவலமாக – அறியாமை, ஏழ்மை, காட்டுமிராண்டித்தனம், மூடத்தனம், பேய்-பிசாசுகளை வழிப்பட்ய்ம் தன்மை – முதலிவற்றுடன் தொடர்பு படுத்தி – படம்பிடித்துக் காட்டினர்.
சித்தாந்தரீதியில் வரையப் பட்ட கேலிசித்திரங்கள் (சுதந்திரத்திற்கு பின்பு): சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஊடகங்களில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தனர். அவர்களும் அதே ஆங்கிலேய-ஐயோப்பிய தாக்குதல்களை விசுவாசத்துடன் செய்து வந்தனர். அப்பொழுது இன்னொரு வெளிப்படையான விஷயம் என்னவென்றால், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் முஸ்லிம்களும் தங்களது விசுவாசத்தை தத்தமது சித்தாந்த மூல நாடுகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். இன்றும் அவர்களுடைய ஆதிக்கம்-தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்கள் மக்களின் மனங்களை, சிந்தனைகளைக் கட்டுப்படுத்த, ஈர்த்து தம் சித்தாந்தங்களுக்கேற்ப மாற்ற, அவர்களை அம்முறையிலேயே கட்டுக்குள் வைத்திருக்க பற்பல முறைகளைக் கையாண்டனர். அவர்களின் கைதேர்ந்த, தொழிற்நுணுக்கம் மிகுந்த, வியாபார யுக்தி நிறைந்த முறைகள் மற்றவர்களுக்கு வராது. அதனால் தான், காங்கிரஸ்காரர்கள்-அல்லாத, முஸ்லிம்கள்-அல்லாத, கிருத்துவர்கள்-அல்லாத மற்றும் கம்யூனிஸ்டுகள்-அல்லாத தேசிய, நாட்டுப்பற்று மிக்க, பிஜேபி போன்ற மாற்று அரசியல்வாதிகள் அம்முறைகளை கையாளும் போது, ஏதோ செய்யத்தெரியாத ஆட்களை போன்று செய்து மாட்டிக் கொள்கிறார்கள். உணர்வுகல் இருந்தும் யுக்திகள் அவர்களிடம் இல்லாது போது, ஏதோ நாகரிகமற்ற இடைக்கால்த்தவர் போல ஆகிவிட்டுகிறார்கள்.
Taken from the below mentioned website – shown for illustrative purposes
கணினி கேலிச்சித்திரங்களின் விபரீதங்கள்: ஆனால், கணினி வந்தபிறகு, அந்த தொழிற்நுட்பம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், உள்ள புகைப்படங்களை சேர்ந்து, இணைத்துக் காட்டி வருவது வழக்கமாக இருக்கிறது. கணினி வந்த பிறகு, புகைபடங்கள் டிஜிடல் மடிவமைப்பு முறையில் கிடைப்பதால் அவற்றை மாற்றமுடிகிறது. அதாவது, சிறிதாக்குவது, பெரிதாக்குவது, வெட்டுவது, ஒட்டுவது முதலியன சுலபமாக இருக்கிறது. யாராவது ஒரு குறிப்பிட்ட நபருடன் நின்றுகொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வேண்டுமானால், இப்பொழுது சுலபமாக செய்துவிடலாம். ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, வரம்புகளை மீறி அவதூறு, தூஷணம் செய்யவேண்டும், தனிப்பட்ட நபரை இழிவு படுத்த வேண்டும் என்ற பிடிவாதமுறையில், அவற்றை செய்தால் குற்றம் என்றும் சொல்லலாம். சிலர் ஆபாசமாக சித்தரித்துக் காட்டுகிறார்கள், குறிப்பாக சினினா நடிகர்-நடிகைகளுடன் சேர்த்து மாற்றம் செய்யும் போது அந்நிலை உருவாகிறது[1]. இப்பொழுதோ, கணினி முறைகளில் அவற்றை மேலும் அதிகமாக மாற்றங்களை செய்யமுடியும் என்பதால், அத்தகைய மாற்றுமுறைப் புகைபடங்கள், மாற்றப்பட்ட புகைபடங்கள், மாறிய புகைபடங்கள் என்று வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “மார்ப்ட்” (morphed) என்கிறார்கள் அம்முறை மார்பிங் (morphing) எனப்படுகின்றது.
சோனியா புகைப் படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப் பட்டுள்ளது (ஜூலை 2013): ஜலந்தரில் சந்தீப் பல்லா இளைஞர் மீது இன்வார்மேஷன் டெக்னோலாஜி சட்டத்தின் 66A பிரிவின் கீழ் ஆட்சேபிக்கும் முறையில், சோனியா பொகைப்படத்தை மாற்றி பேஸ்புக்கில் போட்டதால் புகார் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது[2]. சஞ்ச்சய் செகால் என்ற காங்கிரஸ் தலைவர் புகார் கொடுத்துள்ளார்[3]. அவர் பிஜேபியைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுகளும் சேர்ந்துள்ளன[4]. இதனால், பிரச்சினை அரசியல் ரீதியில் சூடாகியுள்ளது[5]. நாளிதழ்களும் ஜாகிரதையாக பிடிஐயின் செய்தியை அப்படியே போட்டிருப்பது, இதன் பிரச்சினைத் தன்மையினைக் காட்டுவதாக உள்ளது.
© 03-07-2013
[2] A case was registered here against Sandeep Bhalla under Section 66A of the Information Technology Act on the complaint of local Congress leader Sanjay Sehgal, police said.
[3] Morphed picture of Sonia posted on FB, case registered, Jalandhar, Jul 2 (PTI) A youth, claiming to be a BJP activist, was today booked here for allegedly posting an objectionable picture of Congress President Sonia Gandhi on a social networking website. A case was registered here against Sandeep Bhalla under Section 66A of the Information Technology Act on the complaint of local Congress leader Sanjay Sehgal, police said. Sehgal had filed the complaint yesterday and had also approached the police commissioner online on the matter.
http://www.ptinews.com/news/3769787_Morphed-picture-of-Sonia-posted-on-FB–case-registered