Archive for the ‘யு.பி.ஏ’ Category

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)

மே 7, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)

காங்கிரஸின் சக்தியின் காரணம்: 60 வருடங்களாக மத்தியிலும், மாநிலங்களிலும் பொதுவாக சிறிது இடைவெளி அல்லது கூட்டணி மாறுதல் அல்லது தற்காலிக தோல்வி என்று காங்கிரஸ் பல உருவங்களில், பெயர்களில், கூட்டணிகளில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஓரளவிற்கு எல்லாதுறைகளிலும் (ராணுவம், போலீஸ், நிதிநிறுவனங்கள் முதலியவை), எல்லா தொழிற்சாலை மற்றும் வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரிய மணிதர்கள் என அனைத்து நபர்களிடமும், அனைவற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம், தாக்கம் மற்றும் பலம் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கங்கு வேலை செய்யும் தலைமை அதிகாரிகள், அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று யாராக இருந்தாலும் காங்கிரஸ்காரகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஆட்சிய்யில் உள்ளது இல்லை என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

இந்திய சரித்திரத்தில் சீக்கிரர்களின் பங்கு: சீக்கியர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர். முகலாயர்-முகமதியர்-முஸ்லீம் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை அவர்களது பங்கு, சேவை, தியாகம் முதலியன விலைமதிப்பற்றது. இஸ்லாத்தின் உக்கிரத்தை, தீவிரத்தை, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை பலவிதங்களில் எதிர்கொண்டு, இந்தியாவை சிக்கியர்கள் காத்துள்ளனர். முகலாயர் காலத்தில் சீக்கிய குருக்கள் அதிக அளவில் துன்ன்புறுத்தப் பட்டார்கள்[1].  இருப்பினும் சுதந்திரமாக போராடி வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் அவர்கள் தங்களது தனித்துவத்தைக் காட்டி வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னாலும், முப்படைகளில் சிறந்து விளாங்கி வந்தார்கள்.

காந்தி குடும்பம், சீடர்களுக்கு எதிரன விதம்: ஆனால், இந்திர காந்தி காலத்தில், காங்கிரஸுக்கு ஏதிராக, குறிப்பாக தனக்கு எதிராக அரசியல் சக்தி உருவாகிறது என்று அறிந்ந்தும், 1971ற்குப் பிறகு, பாகிஸ்தான் பங்களாதேசம் உருவானதால், பழிவாங்க திட்டம் போடும் என்றும் தீர்மானித்து, சீக்கியர்களை வைத்து ஆதாயம் தேடலாம், என்ற எண்ணத்தில் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே என்ற சீக்கிய குருவை முன்னிருத்தி தனது வேலை ஆரம்பித்தார்[2]. ஆனால், பிறகு அவரே இந்தியாவிற்கு எதிராக திரும்யதும், 1984ல் “ஆபரேஷன் புளூ ஸ்டார்” என்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பிந்தரன்வேலே கொல்லப்பட்டார். சீக்கியர் தங்களது புண்ணியஸ்தலம் அவமதிக்கப்பட்டது, மாசுப்படுத்தப் பட்டது என்று கொண்டு, அதனை அவ்வாறு செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். விளைவு, சத்வன் சிங் மற்றும் பியான் சிங் என்ற இருவர், இந்திரா காந்தியை சுட்டுக் கொண்டர். கோபமுற்ற ராஜிவ் காந்தி பேச்சால், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் தூண்டிவிடப்பட்டு, 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கங்கிரஸ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றவவர்களுக்கு தொடர்பு இருந்தது.

காங்கிரஸின் சதி  2012லேயே ஆரம்பித்துள்ளது: ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[3]. கேப்டன் அம்ரித் சிங் என்பவரை காங்கிரஸ் கட்சி தலைவராக அமைத்து, சோனியா சீக்கியர்களைப் பிளக்க சதிசெய்து வருகிறார் என்று தெரிகிறது. தற்பொழுது, பிஜேபி கூட்டணியில் ஆளும் கட்சி, சிரோமணி அகாலிதள் உள்ளது. இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான் சோனியாவின் நோக்கம். 2012 ஆண்டில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில், எவ்வளவு சூழ்ச்சி செய்து பார்த்தும், ஆக்ரோஷத்துடன் பிராச்சாரம் செய்தும், மன்மோஹன் சிங்கை முன்னிருத்தியும், பல யுக்திகளைக் கையாண்டுப் பார்த்தது. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பிஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[4].

தில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம், போராட்டம்: சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[5] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து வருகிறது.

வருடாவருடம் ஒரே பிரச்சினை எழுப்பப்படுதல்[6]:முதலில் கடந்த தேர்தலில் கேப்டன் அம்ரித் சிங், பிந்த்ரன்வாலே பூதத்தைக் கிள்ளப்பியுள்ளார். சந்த் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே நினைவிடம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து உறுப்பினர் கொண்ட எஸ்.ஜி.பி.சி (SGPC) என்ற அமைப்பும் ஒப்புக்கொண்டது[7]. இருப்பினும், இப்பொழுது மறுக்கிறது. அது சீக்கியர்களை தேசியவிரோதமான நிலையில் காட்டப்படும் என்று அமுக்கி வாசிக்கின்றனர். சிரோமணி அகாலிதள் கட்சியும் மறுத்தது. இந்நிலையில் தான், ஆனால், இப்பொழுது, சீக்கியர்களைத் தூண்டி விட்டுள்ளதால், அவர்கள் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே, சீக்கியர்கள் இரண்டுவிதமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பிந்தரன்வாலே படம் இருந்த சுவர் கடிகாரம் அப்புறப்படுத்தப் பட்டு, சாதாரண கடிகாரம் 01-05-2013 அன்று வைக்கப்பட்டது[8]. இருப்பினும், பிந்தரன்வாலேவின் பெயர் கல்வெட்டில் உள்ளது.

பிந்தரன்வாலே படம் இருக்கலாம், ஆனால் பெயர் இருக்கக் கூடாது: குருத்வாராவில் எந்தவித படமோ, பெயரோ இருக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும், படம் எடுத்தாலும், பெயரை எடுக்கக் கூடாது என்று அடுத்த பிரிவும் விவாதித்து வருகின்றன[9]. பெயரை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்[10]. ஆனால், கடிகாரத்தை எடுத்தவர்கள், பெயர் கொண்ட கல்வெட்டையும் எடுப்பார்கள் என்று சில சீக்கியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சரப்ஜித் சிங் தியாகியாகும் போது பிந்தரன்வாலே எப்படி தியாகி ஆகமாட்டார் என்றுதான் சாதாரண சீக்கிய மக்கள் கேட்கிறார்கள், இங்குதான் காங்கிரஸ் புகுந்து விளையாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013


[1] இந்த சரித்திர நிகழ்ச்சிகளைக்கூட இந்திய செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்கள். அவற்றை இந்தியர்கள் தெரிந்து கொண்டால், முகமதியர்களின் கொடூர, குரூர குணாதிசயங்கள் மற்றுன் அசுரத்தனம் வெளிப்பட்டுவிடும் என்று மறைத்துள்ளார்கள்,, இன்னும் மறைத்து வருகிறாரர்கள்.

[2] ஜகத்ஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து, கனடாவிலிருந்து தாந்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார். அப்பொழுது இஸ்லாமிய பிரிவினைவாதிகள் அவருக்கு உதவி வந்தனர்.

[3] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.

[10] Punjab Youth Congress chief Vikramjit Singh Chaudhary has asked the Shiromani Guruduwara Prabhandhak Committee to remove the name of militant preacher Jarnail Singh Bhindranwale inside the newly-constructed Operation Bluestar memorial in the Golden Temple complex http://www.hindustantimes.com/Punjab/Jalandhar/Remove-Bhindranwale-s-name-from-memorial-PYC/SP-Article1-1053864.aspx