Archive for the ‘முஸ்லீம் ஓட்டு வங்கி’ Category

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?  இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்னஇது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (2)

சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெறமுடியும்:  திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே  நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்[1].  இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது[2]. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது: இங்கு முக்கியமாக நடந்து வரும் மோசடியை, “மத மொசடியை” கவனிக்க வேண்டும். குறிப்பாக எஸ்.சிக்கள், அதாவது பட்டியல்-சலுகை பெறும் இந்துக்கள், இந்துக்களாக இருந்தால் தான் இன்வொதிக்கீடு போன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதம் மாறும் நபர்களுக்கு அந்த சலுகை தொடராது, கிடைக்காது. அதனால், மதம் மாறியப் பிறகும், தாங்கள் எஸ்.சிக்கள், இந்துக்கள் என்று மெய்ப்பிக்க சான்றிதழை வைத்திருக்கிறர்கள். நியாமாக, சட்டப் படி, மதம் மாறியப் பிறகு, அவர்களுக்கு அந்த சலுகை இல்லாமல் போகிறது. அதனால், சான்றிதழின் படி இந்துவாக இருந்து, அரசு சலுகைகள் பெற்று வாழும் அவர்கள், கிருத்துவர் அல்லது முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, இத்திட்டங்களின் கீழ் அளிக்கப் படும் சலைகைககள், மானியங்கள், நிதியுதவிகள் போன்றவற்றைப் பெற முடியாது. இதைத் தான் அமைச்சர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார்.

17-12-2022 – பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி: கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்[3]. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 17-12-2022 சனிக்கிழமை நடைபெற்றது[4]. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.கார்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு அளிக்கப் படும் உதவிகள்: இதைத்தொடா்ந்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது: “தமிழகத்தில் மாவட்டம் தோறும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, சிறுபான்மையினருக்கு கூடுதலாக மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினா் மேம்பாட்டுக்காக தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் கட்டமாக, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இதேபோல தனி அலுவலா்கள் நியமிக்கப்பட உள்ளனா். கிறிஸ்தவ மக்களுக்கும் தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவலாயங்களில் பணிபுரியும் பணியாளா்களின் பட்டியல் பெறப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. உலமாக்கள் உறுப்பினா்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. இதனால், தமிழக முதல்வா் அதே கல்வி உதவித் தொகையை வழங்க உத்தரவிட்டார்,” என்றார் அவா்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்: சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் “முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்” என்ற அமைப்பு 01.10.1982 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது[5]. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] இ.டிவி.பாரத், சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும்அமைச்சர் தகவல், Published on: August 24, 2022 9.29 AM IST.

[2] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thiruvallur/welfare-benefits-can-be-availed-only-if-you-have-proof-of-minority-status-minister-masthan/tamil-nadu20220824092932136136811

[3] தினமணி, கிறிஸ்தவா்களுக்கு தனி நல வாரியம், By DIN  |   Published On : 18th December 2022 01:19 AM  |   Last Updated : 18th December 2022 01:19 AM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/dec/18/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2–%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3968816.html

[5] https://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95ba8bb2-bb5bbfbb4bbfbaabcdbaabc1ba3bb0bcdbb5bc1/ba4baebbfbb4bcdba8bbeb9fbcdb9fbbfbb1bcdb95bbeba9-b95bc1bb1bbfbaabcdbaabbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789

IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.

மே 8, 2021

IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோற்றதும், ஜவஹிருல்லா வென்றதும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் – கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தோல்வியடைந்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், தங்களது சின்னத்தினால் நின்றதால் தோல்வியடைந்தனர். ஆனால், ஜவஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தது கவனிக்க வேண்டும். சிலர் ஜவஹிருல்லாவை விமர்சித்தாலும், வெற்றி பெற்றது நிதர்சனம் ஆகிறது. மேலும், சபாநாயகராக நியமிக்கப் படுவார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, அப்படி செய்யப் பட்டால், இவர் மீதான வழக்குகள், அரசியல் ரீதியில் நீர்க்கப் பட்டு விடும்.

SDPI,  AIMIM, அம்மா.முக கூட்டு யாரை தோற்கடிக்க வைத்தது?: டிடிகே.தினகரனுடன் கூட்டு வைத்துக் கொண்ட அஸாசுதீன் ஒவைஸி – AIMIM கட்சியினரும் தோல்வியடைந்தனர் –  

  1. டி.எஸ். வகீல் அஹ்மது, வாணியம்பாடி (T.S. Vakeel Ahmed contested in Vaniyambadi),
  2. அமீனுல்லா, கிருஷ்ணகிரி (Ameenualla in Krishnagiri),
  3. முஜிபூர் ரஹ்மான், சங்கராபுரம் (Mujibur Ragiman in Sankarapuram)

அஸாசுதீன் ஒவைஸளாம்பூருக்கு வந்து, உருதுவில் பேசி, பிரச்சாரம் செய்தும், அங்குள்ள முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். ஆக, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தோல்வியடையவில்லை, வெல்லும் குதிரைகளுக்கு ஓட்டளித்துள்ளனர் அல்லது ஏற்கெனவே திட்டமிட்டு, திமுக கூட்டணி வெல்லாமல் இருக்க இவ்வாறு செயல்பட்டனர் என்றாகிறது..

தோல்வியடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொஹிதீன் ஸ்டாலினை பாராட்டியது: தலைவர் காதர் மொஹிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், சாதுர்யமாக, சாமர்த்தியமாக ஸ்டாலினைப் போற்றி, 07-05-2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உண்மையினை எடுத்துக் காட்டியுள்ளார். முதன் முதலில், காமராஜர் தான், ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். பிறகு, அந்த வழக்கம் பின்பற்றப் பட்டது. அண்ணா-கருணாநிதி வழி வந்த ஸ்டாலினும், இரு முஸ்ம்களை மந்தியாக்கியுள்ளார்[1]. தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கலும் தனது தந்தையின் வழிநின்றுளைரனு முஸ்லிம்களுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால், அவரும், சம்பிரதாயத்தை மறக்காமல் பின்பற்றியுள்ளார்[2]. சரியான தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவராக, ஸ்டாலின் விளங்குகிறார் என்றெல்லாம்  என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆவடி சா.மு.நாசர் [S M Nasar – Minister for Milk & Dairy]: அமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது[3]. தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி[4]. பால்வளத்துறை அமைச்சராகும் சா.மு. நாசர் (61) ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள சா.மு.நாசருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

செஞ்சி கே.எஸ். மஸ்தான் [Gingee K S Masthan – Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare – Minorities Welfare, Non Resident Tamils Welfare, Refugees & Evacuees and Wakf Board]: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவுள்ள செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார். தொடர்ந்து திமுக விசுவாசியாக, பல பொறுப்புகளில் இருந்து வேலை செய்துள்ளார்.

பெரும்பாலான முஸ்லிம், கிருத்துவத் தலைவர்கள், நிறுவனங்கள் வாழ்த்து சொல்லியிருப்பது:  இது ஒரு சாதாரணமான, வழக்கமாக, ஏதோ மரியாதை நிமித்தம் செய்யப் பட்டது இல்லை.

  • ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊவா மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான செந்தில் தொண்டமான்,
  • சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
  • மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
  • தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன்,
  • தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார்,
  • அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன்,
  • இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,
  • சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
  • காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன்,
  • தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்-கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம்,
  • தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் அறம் அருண்,
  • இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன்,
  • தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,
  • அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
  • ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் தோல்வியடைந்து, வென்றுள்ளது திட்டமே: முஸ்லிம் கட்சிகள் பிரிந்து கிடப்பது காட்சியளித்தாலும், ஓட்டளிப்பதில், அவர்கள் கட்டுண்டுள்ளனர்.

  1. ஒவைசியை, மஸ்தான் இதயங்களை இணைப்போம் மாநாட்டிற்கு அழைத்து, ஜகா வாங்கியது, முக்கியமான நிகழ்வு. அந்த மஸ்தான் இப்பொழுது மந்திரியாகியுள்ளார்.
  2. குறைந்த வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, ஐஜேகே, ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
  3. ஆகவே, வெல்ல மாட்டோம் என்று தெரிந்தும், இவை கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் கண்டன. இதனால், திமுக எதிர்ப்பு மற்றும் அதிமுக ஆதரவு ஓட்டுகள் சிதறின.
  4. பல இடங்களில் அமமுக மற்றும் அதிமுக ஓட்டுகளை சேர்த்தால், திமுக் ஓட்டுகளை விட அத்கமாக வருகிறது.
  5. இதே போலத்தான் மக்கள் நீதி மய்யம், பிஜேபி ஆதரவு ஓட்டுகளை உடைத்துள்ளது.
  6. அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம், திமுகவின் பி-டீமாக வேலை செய்து வெற்றி பெற செய்துள்ளது.
  7. ஐஜேகே / பச்சமுத்து, தனது வியாபாரத்தை காத்துக் கொள்ள திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. வேலூர் இஞ்னியைங் குழுமம் விஸ்வநாதனும் அவ்வாறே செய்துள்ளார். முன்னர் இவர்கள் பிஜேபியுடன் இருந்தனர். இதற்கு பிரஷாந்த கிஷோர் ஆலோசனை கொடுத்தாரா என்று தெரியவில்லை.
  8. ஐஜேகே அட்மிஷன் வியாபாரத்திற்கு உதவுவதால் தொடர்ந்து இருக்கும். ஆனால், மக்கள் நீதி மய்யம் மறைந்து விடும்.
  9. தோல்வியுற்ற காதர் மொஹிதீன் அபாரமாக புகழ்ந்தது, ஆற்காடு நவாப் செக்யூலரிஸமாக வாழ்த்து தெரிவித்தது எல்லாமே, இதில் சேரும்.
  10. திராவிடத்துவம் அதனால், அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தத்தில், போலித்தனமாக, ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.

 © வேதபிரகாஷ்

08-05-2021


[1] Times of India, IUML president lauds Stalin for inducting two Muslims into his cabinet, R Gokul / TNN / May 7, 2021, 18:11 IST.

[2] https://timesofindia.indiatimes.com/city/chennai/iuml-national-president-lauds-stalin-for-inducting-two-ministers-from-muslim-community/articleshow/82457244.cms

[3] டாப்.தமிள்.நியூஸ், சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?, By, kathiravan, 06/05/2021 5:53:56 PM

[4] https://www.toptamilnews.com/255540how-did-nasser-become-a-minister/

திமுக திட்டத்துடன் செயல்பட்டது.
12% வாக்கு வங்கியை வைத்து, 7 எம்.எல்.ஏக்கள், இரண்டு மந்திரி பதவிகள் பெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!

மே 8, 2021

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – தி.மு.க. கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (.யூ.எம்.எல்), தி.மு.. கூட்டணி: மார்ச் மாத கூட்டணி அரசியல் பேரம், முடிவு முதலியன தேர்தல், தேர்தல் வெற்றி-தோல்வி மற்றும் எம்.எல்.ஏ மந்திரி நியமனம் போன்றவற்றில் வெளிப்படுகிறது. DMK-IUML-கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்  பேச்சுவார்த்தை நடத்தினார்[1].  முஸ்லிம்களுக்கு பொதுவாக வேட்பாளரை மனதில் வைத்து தான் தொகுதிகளை கேட்பது வழக்கம்[2]. அதனால், திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னையில் ஒரு தொகுதி ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது 3 தொகுதிகளை ஒதுக்குமாறு IUML-பிரதிநிதிகள் கோரினர்[3]. ஆனால் அவர்கள் (திமுகவினர்) திருவாடானை, திருச்சி கிழக்கு, சென்னை தொகுதிகளை தர முடியாது என்று கூறி, கடையநல்லூர் தொகுதியை அவர்களுக்கு திமுகவினர் ஒதுக்கினர்[4]. அந்த ஒரு தொகுதி மட்டும் உறுதியாகியது. இப்படி மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இப்படி வேடம் போட்ட துலுக்கர் தான் கோவில்களையும் இடித்துள்ளனர்

இழுபறியில் DMK-IUML-கூட்டணி பேச்சு, பேரம், முடிவு: மீதம் உள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் அல்லது பாபநாசம், ஆம்பூர் அல்லது வாணியம்பாடி ஆகிய தொகுதிகளை முஸ்லிம்லீக் கேட்டது[5]. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் (கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம்) ஒதுக்கப்பட்டுள்ளன[6]. இப்படி செய்திகள் வந்தது வியப்பாக இருந்தது, DMK-IUML-கூட்டணி பேரம் அவ்வளவு மகத்தானதா, முக்கியமானதா, எதற்கு ஊடகங்கள் அதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், போன்ற கேள்விகள், புதிர்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பேரம் ஒரு வழியாக முடிந்தது. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிறகு, ஸ்டாலின் முன்னிலையில் ஒரு வழியாக, திமுக – ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் மற்றும் மமக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்[7]. காதர் மொஹிதீன் திருப்தியடையாமல் ஊடகங்களில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்ததையும் கவனித்திருக்கலாம். இவை தினம்-தினம் முக்கிய செய்திகளாக வெளிவந்தது[8], சாதாரண மக்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், அதன் பின்னர் இருந்த அரசியல்-வியாபாரம், அவர்களுக்குத் தான் தெரியும்.

ஒவைசி-திமுக “இதயங்களை இணைப்போம் மாநாடு” நாடகம்: கிருத்துவ மாநாடுகள் டிசம்பைல் நடத்திய பிறகு, “ஜனவரி 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்க உள்ளார். ஓவைசி முதல் முறையாக திமுக மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் நுழைகிறார்,” என்றெல்லாம் அதிரடியாக செய்திகள் வந்தன.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருக்கிற நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ஆம் தேதியன்று ‘இதயங்களை இணைப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. அதில் இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை அணியின் செயலாளர் மஸ்தான் அழைப்பு விடுத்தார்.  இந்த சூழலில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதும் முஸ்லிம் கட்சி தலைவரான அசாதுதின் ஓவைசியை மஸ்தான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்க ஓவைசிக்கு மஸ்தான் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் நடைபெற்ற பீகார் தேர்தலில் ஓவைசியின் கட்சி போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததால்தான் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்துக்கு ஓவைசியை அழைப்பது நல்லதல்ல என இஸ்லாமிய இயக்க தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தால், அது நடக்கவில்லை.

திமுகவினர் மற்றும் தமிழக முஸ்லிம் பிரதிநிதிகள் ஒவைஸி வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்தது. ஸ்டாலின் அழைத்திருக்கலாம், ஆனால், பிறகு மறுக்கப் பட்டது.
உள்ளூர் முஸ்லிம்கள் எதிர்த்தனரா, ஒவைஸியின் ஆளுமை கண்டு பயந்தனரா, ஸ்டாலின் மறுத்தாரா….போன்ற கேல்விகளுக்கு பதில் கிடைத்தால், பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும்

பூவாதலையா, ஹெட்ஆர்டெயில், எங்களுக்குத் தான் வெற்றி என்று முஸ்லிம்கள் திட்டத்துடன் செயல்படுகின்றனர்: பாகிஸ்தானை உருவாக்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இன்றும் செக்யூலர் போர்வையில் நடமாடிக் கொண்டு, அரசியல் செய்து வருகிறது. “மதசார்பற்ற முற்போக்கு அணி” என்ற முகமூடிகள், பதாகைகள், கோஷங்கள், மேடை பேச்சுகள் வேறு. அதற்கு ஈவேரா, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என்று எல்லோரும் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர், வருகின்றனர். அரசியல், வியாபாரம், சினிமா, அந்நிய முதலீடுகள் என்று பிண்ணிக் கிடக்கும் சம்பந்தங்களில் பரஸ்பர லாபங்களுக்கு அவர்கள் செயல் பட்டு வெற்றி கண்டு வருகின்றனர். பெருங்கட்டுமான அமைப்புகள், தொடர்புடைய திட்டங்களுக்கு (Infrastructure) ஆரம்பித்திலிருந்து கருணாநிதி முஸ்லிம் கம்பெனிகளுக்கு ஆதரவு கொடுத்தார். இப்பொழுது, ஸ்டாலின் அதை பின்பற்றுவதில் ஆச்சரியம் இல்லை. கூட சாடிலைட், டிவி-செனல், விளம்பரங்கள், சினிமா, படபிடிப்பு, ஊடக வியாபாரங்கள், பணப்பரிமாற்றம், கொரியர், என்று பற்பல வியாபார நெருக்கங்களும், சம்பந்தங்களும்  வேலை செய்து வருகின்றன. அதனால், மாறன் – ஸ்டாலின்  சொந்தங்கள் இணைந்தே செயல் படும். இப்பொழுது வாழ்த்து சொல்ல அழகிரி குடும்பமும் சேர்ந்து விட்டது.

ஏழு / எட்டு முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல். ஆகியுள்ளனர்: திமுக, விசிகே மற்றும் காங்கிரஸ் கட்சிகளிலிருந்து, ஆறு முஸ்லீம்கள் வென்றுள்ளனர்:

  1. ஜே. மொஹம்மது ஷானவாஸ், விசிகே [J. Mohamed Shanavaz from VCK]
  2.  [Mastan, Senji]
  3. எம். அப்துல் வஹாப், திமுக [Abdul Wahab M, DMK]
  4. எம்.எஹ். ஜவஹிருல்லா, திமுக [Jawarihullah M H, DMK ]
  5. எச்.எம். நாசர், திமுக [Nasar S M, DMK ]
  6. பி. அப்துல் சமது, திமுக [Abdul Samad P]
  7. அஸன் மௌலானா, காங்கிரஸ்  [Aassan Maulaana,  Congress]
  8. கே. காதர் பாட்சா என்கின்ற முத்துராமலிங்கம், ராமநாதபுரம் [K. Kader Basha alias Muthuramalingam, Ramanathapuram]

கடையாக இருப்பவர் நிலை சரியாக தெரியவில்லை. முஸ்லிம்கள் இப்படி பல கட்சிகளில், உருவங்களில், பெயர்களில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழகத்தில், மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இவ்வாறு அதிகாரகத்தில், அரசியலில் ஆதிக்கம் பெற்று, தொடர்ந்து வருகின்றனர்.

SDPI கீழ்கண்ட ஆறு இடத்தில் நின்றாலும் தோல்வியடைந்தது: SDPI முஸ்லிம் கட்சிகளில் தீவிரமானது, கேரளாவில், கர்நாடகாவில், ஏன் தென் மாவட்டங்களிலும் முஸ்லிகளிடையே ஆதரவு பெற்றது.

  1. மொஹம்மது தமீம் அன்ஸாரி, ஆலந்தூர் (Mohammed Thameem Ansari),
  2. உமர் பரூக், ஆம்பூர் (Umar Farook),
  3. அப்துல்லா ஹஸன் திருச்சி (Abdullah Hassan Faizy),
  4. நஸீமா பானு திருவாரூர் (Naseema Banu ),
  5. சிக்கந்தர் பாஷா மதுரை (Sikkandar Batcha) மற்றும்
  6. பாளையங்கோட்டை

என்று போட்டியிட்டு தோல்வியடைந்தது. ஆம்பூர் போன்ற முஸ்லிம்கள் ஆதிக்கம் கொண்ட இடங்களில் தோற்றிருப்பது, திமுக ஆதரவான ஓட்டுகள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

08-05-2021


[1] மாலைமலர், கடையநல்லூர் தொகுதி உறுதியானதுகாதர் மொய்தீன், பதிவு: மார்ச் 09, 2021 12:39 IST

[2] https://www.maalaimalar.com/news/tnelection/2021/03/09123935/2428316/Tamil-News-Kader-Mohideen-Says-Kadayanallur-constituency.vpf

[3] தினகரன், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்: காதர் மொய்தீன், 2021-02-28@ 20:19:03

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=658946

[5] டாப்.தமிள்.நியூஸ், 5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, By aishwarya, 01/03/2021 7:02:48 PM

[6] https://www.toptamilnews.com/indianunionmuslimleague-leader-press-meet/

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டி.. காதர் மொய்தீன் அறிவிப்பு.!, By Vinoth Kumar, Chennai, First Published Mar 1, 2021, 7:26 PM IST

[8] https://tamil.asianetnews.com/politics/indian-union-muslim-league-competition-in-separate-symbol-kader-mohideen-qpampn

காமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்!

ஜூன் 18, 2016

காமக்கொடூரன் அமிர் உல் இஸ்லாம் திட்டமிட்டு ஜிஷாவைக் கற்பழித்து கொன்றுள்ளான்!

jisha-murder-actor-lands-trouble

ஏற்கெனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட அமிர் உல் இஸ்லாம்: அமீர் அல் இஸ்லாம் பங்களாதேசத்திலிருந்து, அசாமில் நுழைந்தவன். பிறகு டீ தோட்டங்களில் வேலைசெய்து வந்தான்[1]. அங்கிருந்து கேரளாவுக்கு வந்தான். அவன் செல்போன் தான் அவனைப் பிடிக்க வழிசெய்தது. பலமுறை எண்களை மாற்றினாலும், அதில் இருந்த போர்ன் படங்களை மட்டும் அப்படியே வைத்திருந்தான்[2]. அவனுக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. அதில் ஒருத்திக்கு 38 வயது, அவள் மூலம், வயது வந்த ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்கெனவே 18 வயதில் ஒரு பையன் இருக்கும் போது, டோல்டா கிராமத்தில், 2000த்தில் அவளை திருமணம் செய்து கொண்டான். 2013ல் மறுபடியும், பெரும்பவூரில் இருக்கும்போதே, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். அசாமில் அவன் இருக்கும் பகுதிகளில் இப்படி பலதார திருமணம் செய்து கொள்வது சாதாரமாக இருந்தது என்று ஊடகங்கள் இதற்கு விளக்கம் கொடுத்திருப்பதே வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆனால், அவன் ஒரு முஸ்லிம் என்று எங்குமே குறிப்பிடாமல், இந்த விவரங்களை எல்லாம் கொடுப்பது, அதை விட வேடிக்கையான விசயம் எனலாம். இஸ்லாம் அசாமில் கூர குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் என்பது, அங்கு சென்ற போலீசார் விசாரித்தபோது தெரிய வந்துள்ளது[4].

jisha-murder-02-06ஜிஷாவைத் தாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவள் வீட்டுக்குச் சென்றது: அதனல்தான், இரு பெண்களுக்கு கணவாக இருந்து, இரு வயது பெண்ணிற்கு தந்தையாக இருக்கும் இவன் ஒரு இளம்பெண்ணைக் கற்பழித்து, கொலை செய்ய தீர்மானித்தான் போலும். ஏழு மாதங்களுக்கு முன்னர் தான் அவன், பெரும்பவூருக்கு வந்துள்ளான். அவன் எல்லாவித வேலைகளையும் செய்து வந்தான். பிறகு, ஜிஷாவுடன் நட்பு வைத்துக் கொண்டுள்ளான். ஜிஷா வீடு கட்டும் விசயத்தில் இந்த வெளிமாநில கட்டிட வேலையாட்களின் தொடர்பு இருந்துள்ளது. இதனால், அவளது, செல்போனில், அவர்களது எண்களும் இருந்துள்ளன. அவற்றில் அமிர் உல் இஸ்லாமின் எண்ணும் இருந்துள்ளது. ஏப்ரல் 28, 2016க்கு முந்திய நாளுக்கு அங்கு வந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளான். ஆனால், அடுத்த நாள் வரும்போது, குடித்து விட்டு, அந்த போர்ன் படத்தையும் பார்த்து வந்தானாம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜிஷாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், இவன் வம்புக்கு சென்றபோது, அவள் இவனது கன்னத்தில் அறைந்துள்ளாள். இதைப் பார்த்த ஜிஷா இவனை கிண்டல் செய்து தமாஷ் செய்திருக்கிறாள்[5]. 28ம் தேதி மாலை 4 மணி அளவில் அங்கு சென்றிருக்கிறான். அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால், செருப்பால் அடிப்பேன் என்று சொல்லியதான், அவன், ஆபாசமாக பேசியிருக்கிறான்[6]. பிறகு, மறுபடியும் வந்தபோது தான், தகராறு ஏற்பட்டு, கற்பழிப்பு, கொலை எல்லாம் நடந்திருக்கிறது.

jisha-house-footwear- left by Amir ul Islamபோர்ன் படம் பார்த்து, செக்ஸில் ஈடுபட நினைக்கும் காமக்கொடூரன்: மேலும், அமீருல் இஸ்லாம், ஒரு காமக்கொடூரன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது[7]. எப்போதும் செக்ஸ் நினைவுடனேயே, அது சார்ந்த நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளான் அமீருல் இஸ்லாம். பெரும்பாவூரில் தங்கி இருந்தபோது அங்கு குளிக்கும் பெண்களை மறைந்திருந்து பார்த்து ரசிப்பது இவனது வாடிக்கையாக இருந்துள்ளது. அப்படி ஒருமுறை பார்த்துக்கொண்டிருந்தபோது, சில பெண்கள் இதை பார்த்துவிட்டனர். அமீருலை திட்டி அனுப்பியுள்ளனர். அப்போது ஜிஷாவும் இதை பார்த்து சிரித்துள்ளார். அமீருல் இஸ்லாம் தங்கியிருந்த பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெண் ஆடு உடன் அவன் உடலுறவு வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆட்டின் மர்ம உறுப்பில் பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததாலும், ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து, மர்ம உறுப்பை சிதைத்த விதமும் ஒரே மாதிரி இருப்பதால் போலீசாருக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளதாம். ஆட்டுக்கு ஏற்பட்ட காயங்கள் அமீருல் கொண்ட உடலுறவால்தான் ஏற்பட்டதா என்பதை கண்டறிய திருச்சூரிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த ஆடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாய் திறக்க டாக்டர்கள் மறுத்து வருகிறார்கள்[8].

ஜிஷா கொலை - காட்டிக் கொடுத்த செருப்புபங்களாதேசத்திலிருந்து ஊடுரும் முஸ்லிம்களினால் பிரச்சினை:  பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி வரும் முஸ்லிம்களால் இந்தியாவில் எத்தனை பிரச்சினைகள் ஏற்படுகின்றன, மதவாத கலவரங்கள், தீவிரவாத செயல்கள், பயங்கரவாத குண்டுவெடிப்புகள், கலவரங்கள், ஹவாலா, கள்ளநோட்டு விநியோகம் போன்ற பொருளாதாரக் குற்றங்கள், இது போன்ற பாலியல் வன்புணர்ச்சிகள், கொலைகள் என்று பெருகி வருவதும் நோக்கத்தக்கது. அதே நேரத்தில், பங்களாதேசத்தில், அல்-குவைதா, ஐசில் போன்ற தீவிரவாதிகளின் நடமாட்டம், தீவிரவாத செயல்கள், சிறுபான்மையினர் கொலைசெய்யப்படுவது என்பது நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் இந்துக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, பங்களாதேச முஸ்லிம்களின் ஊடுருவல்களை எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டியுள்ளது. வேலை செய்து கொண்டு அமைதியாக இல்லாமல், பற்பல குற்றங்களில் ஈடுபடுவது, வேறு திட்டங்களையும் காட்டுகின்றன. கேரளாவில் வரும் முஸ்லிம்களுக்கு எப்படி ஆதரவு கிடைக்கிறது என்று நோக்கத்தக்கது. இங்கு வந்தவுடன், இஸ்லாம் திருமணம் செய்து கொண்டுள்ளான் என்றால், எப்படி அவனுக்கு பெண்ணைக் கொடுக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. மேலும், எத்தகைய ஆவணங்களை வைத்துக் கொண்டு, அவன் அங்கு வேலைசெய்தான். செல்ப்பொன் வாங்கினான், கல்யாணம் செய்து கொண்டான் என்பதனையெல்லாம் நினைத்துப் பார்த்தால், அவையெல்லாம் போலி என்று தான் தெரிய வரும். அப்படியென்றால், அவை பெறுவதற்கு உள்ளூரில் யார் உதவுவது என்பதும் கவனிக்க வேண்டியுள்ளது. பங்களாதேசம், அசாம், என்று கேரளாவுக்கு வந்து தங்குகிறான் என்றால், எந்த துணையும், ஆதரவும் இல்லாமல் வந்துவிரட முடியாது. அப்படி வருகிறார்கள் என்றால், அதற்கான ஏற்பாடுகளை செய்பவர்கள் கேரளாவில் இருக்கிறார்கள் என்றாகிறது.

© வேதபிரகாஷ்

18-06-2016

suspect

[1] Mathrubhumi, Jisha murder accused has 2 wives, one of them is 38 years old, June 17, 2016, 09:25 AM IST

[2] http://english.manoramaonline.com/in-depth/kerala-rapes/jisha-murder-phone-loaded-with-porn.html

[3] In Assam, it is not unusual for a man to marry a woman older than him. Polygamy is also prevalent in the region.

[4] The probe officials spread their net to Assam, Bengal, Bihar, Jharkhand among other states. When police team reached Amiyoor’s place in Assam they came to know that Amiyoor had reached there after the crime. When Amiyoor came to know about police hunting for him, he immediately left for Kerala. It is learnt that the assailant was involved in crimes in Assam too.

http://english.mathrubhumi.com/news/kerala/acquaintance-turns-murderer-people-still-under-shock-english-news-1.1135467

[5] The Asian age, Jisha murder case: Migrant labourer, 23, arrested, Jun 17, 2016, Age Correspondent, Kochi.

[6] http://www.asianage.com/india/jisha-murder-case-migrant-labourer-23-arrested-469

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பெண்கள் குளிப்பதை ரசிப்பது, ஆடுடன் உறவு.. கேரள கல்லூரி மாணவி பலாத்கார குற்றவாளி பற்றி திடுக் தகவல், By: Veera Kumar, Updated: Friday, June 17, 2016, 17:46 [IST].

[8] http://tamil.oneindia.com/news/india/kerala-rape-accused-had-sex-with-goat-256250.html

 

ரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா?

ஜூன் 16, 2016

ரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசிசெக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா?

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது

சந்திரசேகர ராவின் அன்பளிப்புகள்: சரி நாயுடு இப்படியென்றால், அந்த ராவ் சும்மா இருப்பாரா? ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா? ஏற்கெனவே தெலிங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர், பிரிவினைக்குக் கூட, அதாவது இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆந்திரா-தெலிங்கானா பிரிவினக்களுக்கு, அவர்கள் அதிகம் ஆதரித்தனர், இதனால், தெலிங்கானாவில், அவர்களது ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம், மேலும் பிரிவினைவாத சக்திகள் தங்களது வேலைகளை தீவிரமாக செய்வார்கள் என்று விவாதிக்கப்படும் வேளையில் இவர்கள் அடிப்படைவாதத்தை ஊக்கும் வரையில், ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று மற்ற தெலுங்கு பேசும் மக்கள் கவலையுடன் தான் இருக்கின்றனர்.

Ramzan mubarak - Modi wayபிஜேபியும், ரம்ஜானும், இப்தர் பார்டிகளும்: அரசாட்சியில் இருப்பதால், பிஜேபியும் முஸ்லிம்களை வாழ்த்த வேண்டியுள்ளது, வாழ்த்தட்டும், அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முஸ்லிம்களும் இந்நாட்டு மக்கள் தாம், சகோதரர்கள் தாம். ஆனால், “இந்துக்கள் பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் கொடுமைப் படுத்தும் போது, அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள், ஆனால், சூஷ்மா ஸ்வராஜ், அத்வானி, சஞ்சய் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முரளி மனோஹர் ஜோஷி, வசுந்தராஜே சிந்தியா முதலியோரின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர்….”, என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டினதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்[3]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜ்நாத் சிங், கட்கரி போன்றோரே குல்லா போட்டுக் கொண்டு, இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்பொழுதும், அதாவது 2016லும், பாகிஸ்தானின் கராச்சி நகரில், ரம்ஜான் மாதத்தையொட்டி, நோன்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை, விற்று வந்த 80 வயது கோகுல்தாஸ் என்ற கிழவர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்.

hindu-man-attacked in Sindu, Pakistanரம்ஜான் சாக்கில் 80 வயது கிழவர் அடித்து நொறுக்கப்பட்டது (ஜூன் 2016): கோகுல்தாஸ், 80, என்பவர் இப்தார் நோன்புக்கு முன், அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி, அலி உசேன் என்ற போலீஸ்காரர், அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்[4]. இஸ்லாத்திலேயே, வயதானவர்களுக்கு விலக்கு உள்ளபோது, இந்து என்ற முறையில் தான் இவர் வயது கூட பார்க்காமல், முஸ்லிமினால் தாக்கப் பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார்[5]. இல்லையென்றால், இவ்விசயமே தெரியாமல் போயிருக்கும். இதையடுத்து, முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, ஏராளமானோர் காரசாரமாக விவாதித்தனர். மேலும், கோகுல்தாஸின் பேரன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி, அலி உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் முஸ்லிம்களிடன் நட்புடன், அன்புடன், சகோதரத்துவத்துடன் இருந்தால் கூட, அவர்களால் அவ்வாறு பரஸ்பர முறையில், அவற்றை திரும்ப வெளிப்படுத்துவதில், அவர்களது அடிப்படைவாதம் தடுக்கிறது.

BJP ramzan wishes to Pakistan and Bangladeshஅரிசி அரசியலும், செக்யூலரிஸமும்: தேர்தல் நேரத்தில் பிஜேபிகாரர்கள் “அம்மா அரிசி” இல்லை, அது “மோடி அரிசி” தான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பார்த்தனர், ஆனால், ஒன்றும் எடுபடவில்லை, அரசியல்-அரிசியும் வேகவில்லை. அரிசி-அரசியல் அறியாத பிஜேபி, புள்ளிவிவரங்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் எனும்போது, எல்லோரும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பார்க்கின்றனர். இன்று உலகளவில் வியாபாரம் நடக்கும் போது, முஸ்லிம்களை விரோதித்துக் கொண்டு, பகைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவிட முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதி விசயத்தில் மூஸ்லிம்களஸடிக்கும் கொள்ளை சொல்ல மாளாது. ரம்ஜான் பிரச்சினை எப்படி எல்லைகளைக் கடந்து வேலை செய்கின்றது, இந்த அரிசி-கொள்ளை, கடத்தல் விவகாரமும் எல்லைகளைக் கடந்து தான் நடக்கின்றது.

BJP leaders with skull cap for Ifter partiesஇந்தியாவிலிருந்து, இரானுக்கு ரம்ஜானுக்காக ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி துபாய்க்குக் கடத்தப் பட்டது: மறுபடியும், அரிசி உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது[6]. இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு உதவியா என்ற நோக்கில் கூட ஆராயப்படுகிறது.

*              துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது.

*              ‘துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ’ என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.

*              இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது[7]. இதில் சமந்தப்பட்டவர்களில், பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று சொல்லத்தேவையில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2016

 

Iftar-Party-by-BJP-Minority-Morcha-Karnataka

Chief Minister D V Sadanada Gowda participated & Vished Muslims onthe accassion of Ramjan Festival celebration in Iftar Party arranged by BJP Minority Morcha

[1] Telangana CM KCR would distribute new clothes to 2 lakh poor Muslim families to celebrate Ramzan festival this year. The distribution of the packets would begin on June 17 and end on June 22 in Hyderabad and all other parts of the state. KCR also honored nearly 5,000 Imams across Telangana with Rs. 1000 monthly honorarium, apart from giving a pair of clothes worth Rs 500 to poor families and allotted nearly 26 crores to celebrate Iftar at all the mosques in the state.

gulte.com, KCR’s Ramzan Tohfa, June 15th, 2016, 02:56 PM IST

[2] http://www.gulte.com/news/49905/KCRs-Ramzan-Tohfa

[3] The posters read: “Pakistan, Bangladesh ko Ramzan par dete ho badhai, Sushma, Advani, Sanjay Joshi, Rajnath, Gadkari, Murli Manohar Joshi, Vasundhara ke liye mann mein hai khatai”. (Pakistan and Bangladesh are wished on Ramadan, but ill feelings are harboured against Sushma (Swaraj), Advani, Sanjay Joshi, Rajnath (Singh), (Nitin) Gadkari, Murli Manohar Joshi, Vasundhara (Raje).

http://www.india.com/news/india/poster-criticising-narendra-modi-amit-shah-put-up-sanjay-joshi-supporters-in-delhi-432246/

[4] தினமலர், 80 வயது முதியவரை அடித்த பாக்., போலீஸ்காரர் கைது, ஜூன்.13, 2016: 00.41.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541489

[6] தினமலர், ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம், பிப்ரவரி.29, 2016: 03.00

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467913

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (1)

மே 10, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம்!

03-05-2013 (வெள்ளிக்கிழமை): மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மறுமகனான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து[1], விசாரணை மற்றும் நடவடிக்கையில், சிபிஐயினால் கைது செய்யப்பட்டார். பிறகு, பன்ஸாலின் அந்தரங்க செயலர், ராஹுல் பண்டாரி சிபிஐயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட[2]. ஆனால், ஞாயிற்றுக் கிழமை கர்நாடகத்தில் தேர்தல் மற்றும் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை என்பதனால், சோனியா ராஜினாமா நாடகத்தை ஒத்தி வைத்தார்.

04-05-2013 (சனிக்கிழமை): விஜய் சிங்கலாவின் ஊழல் வலை பெரிதாகியது. பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலிடயவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து வந்ததை விவரம் அறிந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது.

  • விஜய் சிங்க்லா – Vijay Singla – Nephew of railway minister [Pawan Kumar Bansal]
  • மஹேஸ்குமார், ரெயில்வே வாரியம், உறுப்பினர் – Mahesh Kumar: Member Railway Board
  • நாராயணா ராம் மஞ்சுநாத், ஜி.ஜி.டிரானிக்ஸ் கம்பெனியின் எம்.டி – Narayana Rao Manjunath : MD of G.G Tronics
  • சந்தீப் கோயல், சிங்க்லாவின் நண்பர் – Sandeep Goyal: Singla’s friend
  • ராஹுல் யாதவ், மஞ்சுநாத்தின் கூட்டாளி – Rahul Yadav: Associate of Manjunath
  • சமீர் சந்திர் – Samir Sandhir
  • சுஸில் தாகா – Sushil Daga

மேற்கொண்ட கூட்டம், லஞ்சத்தை பணமாகவும், நிலமாகவும் பெற்று வந்தது மெய்ப்பிக்கப்பட்டது.

05-05-2013 (ஞாயிற்றுக் கிழமை): கர்நாடகத்தில் ஓட்டுப் பதிவு என்பதால், சோனியா காங்கிரஸ் அடக்கி வாசித்தது. பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டது[3].

06-05-2013 (திங்கட் கிழமை): ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை கவனித்தபோது, அமைச்சரின் பெயர் பலமுறை உபயோகப்படுத்தப் பட்டது தெரிய வந்தது[4]. இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.

07-05-2013 (செவ்வாய் கிழமை): சுனில் குமார் குப்தா என்ற தமது குடும்ப கணக்காளர், கனரா வங்கியின் இயக்குனராக 2007ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது பன்ஸால், இணை நிதி அமைச்சராக இருந்தார்[5]. 2010ல் சுனில் குமார் குப்தாஆந்த வங்கியின் பங்குதாரர் ஆனார். தியோன் பார்மேசுடிகல்ஸ் லிமிடெட் என்ற மந்திரியின் கம்பெனிக்கு ரூ.20 கோடி கடன் உடனடியாக வழங்கப்பட்டது[6].

இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.

08-05-2013 (புதன் கிழமை): கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள் – மணி அங்கர் ஐயர், மணீஸ் திவாரி, அபிஷேக் சிங்வி முதலியோர் – யாரும் ராஜினாமா செய்யத்தேவையில்லை என்று பேசினர்[7].

09-05-2013 (வியாழன் கிழமை): நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய சட்டமந்திரி அஸ்வனி குமார், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்குவதற்காக அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்தார். ஆனால், இந்த கருத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்டிருந்தார். எனவே, அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

10-05-2013 (வெள்ளி கிழமை): இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரண்டு மந்திரிகள் மீதான புகார்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் “பன்சாலை ராஜினாமா செய்யும்படி கூறுங்கள்” என்று பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்த பன்சால், இன்று திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டு, பைசல் செய்துள்ளார். பின்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்[8]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[9].

கர்நாடகநாடகமும்ஆரம்பிக்கிறது: திடீர் வெற்றியினால், கர்நாடகத்தில் முதல் அமைச்சர் ஆக நான் – நீ என்ற போட்டி ஆரம்பித்தது. சித்தராமையா (பிசி) மற்றும் மல்லிகார்ஜுன கார்கே (எஸ்.சி) இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. ஜாதிரீதியிலும் பேச்சு வளர்ந்தது. ஜாதியை வைத்து தேர்தல் நடத்தியதால், காங்கிரஸுக்கு தர்ம சங்கடம் ஆயிற்று[10]. இங்குதான், சோனியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். ஒன்று, பன்ஸாலை தூக்கி, மல்லிகார்ஜுன கார்கேவை போட்டுள்ளார். இதனால், புதிய ரெயில்வே மந்திரியாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் பாட்டை ஆரம்பித்துள்ளது.  ஆனால், இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது என்றெல்லாம் கதை விட ஆரம்பித்துள்ளன. பெங்களூடரில் குண்டு வெடித்தது[11] பற்றி அனைவரும் மறந்தே போய் விட்டார்கள்[12]! தேர்தலுக்காக, ஆர்.எஸ்.எஸ் தான் வைத்தது என்று காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள்[13]. இப்பொழுது காங்கிரஸ் வென்றதால், காங்கிரஸ் வைத்தது என்று சொல்லலாமா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[2] Bansal’s woes mounted when the CBI questioned his private secretary Rahul Bhandari, a 1997-batch IAS officer from Punjab cadre, in connection with the alleged Rs 10 crore bribery scandal.

[4] he minister’s name has also allegedly been mentioned in several of over a 1000 phone calls that the CBI has tracked over the last few months in its investigation of the case.

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

[5] New information and documents available with NDTV also raise questions on whether Mr Bansal appointed his family accountant, Sunil Kumar Gupta, as a director of a public sector bank in 2007, when he was the Minister of State for Finance (Expenditure, Banking and Insurance).

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

[6] In November 2007, Mr Gupta, who admits to working for the Bansal family in the 80s, was nominated by the government as a Part Time “Non Official Director” in state-owned Canara Bank. In July 2010, he was elevated as a Shareholder Director on the bank’s board. Four months later, the bank sanctioned a loan of almost Rs. 20 crore to Theon Pharmaceuticals Limited, a company started by the Bansal family in 2005.

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

மே 6, 2013

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பிளவு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன.  குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.

முஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.

கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.