Archive for the ‘குலாம் ரஸூல் பல்யேவி’ Category

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜனவரி 16, 2016

ஆஸம் கானால் வைக்கப் பட்ட ஓரினச்சேர்க்கை நிந்தனை நெருப்பு: இந்திய வரலாற்றுப் பேரவையினருக்கு ஏற்பட்ட சங்கடம், மால்டாவில் பற்றிக் கொண்டு எரிந்த நிலை!

ஜன்சத்தா புகைப்படம் - கமலேஷ் திவாரி சிறையில்ஆஸம் கானுக்கு ஒரு சட்டம், கமலேஷ் திவாரிக்கு ஒரு சட்டமா?: ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று ஆர்.எஸ்.எஸ்காரர்களை நிந்தித்து, அவதூறாக பேசியது ஆஸம் கான் என்ற அடிப்படைவாதி உபி அமைச்சர்தான். அவ்வாறு பேசியது நவம்பர் 29, 2015. இவருக்கு இதுபோல தூஷ்ணமாக, அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக, பேசுவது வாடிக்கையாகவே இருக்கிறது. இருப்பினும், முல்லாயம் சிங் யாதவோ அல்லது அகிலேஷ் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஏனெனில் முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும். இதனால், கமலேஷ் திவாரி பதிலுக்கு தூஷித்தார். டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். விசயம் அறிந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், அன்றே உத்தரவிட்டு, திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காக்கச் சொன்னார். மேலும் சட்டப்படி திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், முஸ்லிம்கள் விடுவதாக இல்லை. ஏனெனில், அவர்களுக்குப் பிரச்சினை மால்டாவில் உள்ளது. பீஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் என்று மூன்று மாநிலங்களில் பங்களாதேசத்து தீவிரவாதிகள் மேலே குறிப்பிட்ட எல்லா சட்டமீறல் குற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எல்லையில் இருக்கும் மால்டாவில், அவை வெளிப்பட்டு வருவது, சங்கடமாகி விட்டது.

Eminent historians, IHC, resoltionஇந்திய வரலாற்றுப் பேரவை உறுப்பினர்களுக்குண்டான சங்கடங்கள்: போதாகுறைக்கு, டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்தனர்[1]. “உள்ளூர் சரித்திரம்” பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருந்தது சாதாரணமான விசயம் தான். பொதுவாக ஆய்வுக்கட்டுரைகள் அவ்வாறே சமர்ப்பிக்கப் படும். ஆனால், மால்டாவில் அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் இல்லை, தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிலைதான் உள்ளது. அவர்கள் நன்றாகக் கவனிக்கப்பட்டாலும், உள்ளூர் விவகாரங்கள் திகைக்க வைத்தது. அதிகமான முஸ்லிம்கள் அங்கு திரிந்து வந்தது அவர்களுக்கு வுத்தியாசமாகத்தான் இருந்தது. மாலை-இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றெல்லாம் கெடுபிடி செய்யப்பட்டது. அப்பொழுதுதான், மார்க்சீய ஆதரவாளர்கள் என்னத்தான் மறைக்க முயன்றாலும், இந்த விவகாரங்கள் தெரிய ஆரம்பித்தன. டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் இவர்கள் மால்டாவை விட்டு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 1, 2016 வங்காள மக்களுக்கு “கல்பதரு தினம்” ஆகும். அதாவது, தக்ஷிணேஷ்வர காளிமாதா கோவிலில் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். பக்தர்கள் தாங்கள் என்ன நினைத்து / வேண்டிக் கொண்டாலும் அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கை. ஆனால், அன்றுதான் கலவரங்கள் ஆரம்பிக்கும் என்று தெரியாது.

Gulam Rasool Balyawi denies his involvementஇடாராஷரியா (इदारा-ए-शरिया), இத்திஹாத்மில்லத் முதலிய மதவாத இயக்கங்கள் கலவரங்கள் நடத்தியது: உண்மையில் 01-01-2016 அன்றே வெள்ளிக்கிழமை முசபர்நகரில் சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் கூடி ஆர்பாட்டம் நடத்தி, திவாரிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று வெறித்தனமான கோரிக்கையை வைத்தனர் அதாவது “பத்வா” ரீதியில் ஆணை போட்டனர்[2]. தலைக்கு ரூ.51 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது[3] ( कोई कमलेश को फांसी देने की मांग कर रहा है तो कोई 51 लाख में उसको मार देने पर खुले आम ऐलान कर रहा हैl). அதாவது, எந்த வழக்கும் பதிவு செய்யாமல், குற்றம் நிரூபிக்கப்படாமல், திவாரிக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமாம்! மேலும், திவாரி ஏற்கெனவே ஜெயிலில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மௌலானா காலித் [Maulana Khalid] என்ற மதத்தலைவரின் தலைமையில் இத்திஹாத்-இ-மில்லத் [‘Ittehad-e-Millat’] என்ற அடிப்படைவாத அமைப்பின் கீழ் ஆர்பாட்டம் நடைப்பெற்றது[4]. பெங்களூரு, தில்லி முதலிய இடங்களிலும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. 07-01-2016 அன்று பிஹாரில் புர்னியா மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற முஸ்லிம்கள் வாகனங்களை எரித்து அங்குள்ள போலீஸ் ஷ்டேசனைத் தாக்கிக் கொளுத்தினர்[5].  ஆனால், சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

Edara-e-Sharias accepted that they organized the rally.2கல்பதரு தினத்தில் கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன: 01-01-2016 அன்று இடாரா-இ-ஷரியா [Idara-e-Shariya] என்ற இன்னொரு இஸ்லாமிய அடிப்படவாத இயக்கம் ஆர்பாட்டம் நடத்தி, காலியாசக் (कालियाचक) போலீஸ் ஸ்டேசனைத் தாக்கித் தீக்கிரையாக்கியது[6]. போராட்டம் நடத்த தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகித்தத்து, கூட்டம் கூட்டியது, கலவரம் ஏற்படுத்தியது, தாக்குதல் நடத்தியது எல்லாமே குலாம் ரஸூல் பல்யவி [JD(U) MP Gulam Rasool Balyawi ] என்ற மதத்தலைவர் பெயரில் நடந்துள்ளது[7]. இவர் ஜனதா தள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவர். ஆனால், டைம்ச்-நௌ டிவி பேட்டியில், இவர் கூறும்போது, அதிகாரிகளிடம் புகார் கொடுத்து திரும்பும் போது தான் கலவரம் நடந்தது, அதில் ஈடுபட்டவர்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். ஆனால், ஊர்வலத்தை-ஆர்பாட்டத்தை நடத்தியது தான்தான், அதற்கு அனுமதியுள்ளது என்று அவ்வியக்கத்தின் சேர்மேன் / தலைவர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ்-நௌ அறிவித்துள்ளது[8]. தாங்கள் SBDO / BDO அலுவலகங்களுக்கு செல்வோம் என்று போலீஸாரிடம் அறிவித்தீர்களா என்று கேட்டதற்கு, அவர் “இல்லை” என்றார். அதுபோலவே, எத்தனை கூட்டம் வரும், வந்தது என்றெல்லாம் தமக்குத் தெரியாது என்றார்.

Gulam Rasool Balyawi mp with leadersபிரச்சினையின் பின்னணி என்ன?: இந்தியில் வந்துள்ள விசயங்கள் முறையாக மற்ற மொழிகளில் வருவதில்லை. இதனால், மற்ற மொழிகளில் அரைகுறையாக செய்திகள் வருகின்றன. அதனால், தவறான கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. ஆஸம் கானால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரச்சினை தான் ஆரம்பமாக இருக்கிறது.

क्या है मामला[9]

मामला उस वक्‍त शुरू हुआ, यूपी के कैबिनेट मंत्री आजम खान ने 29 नवंबर को कथित तौर पर राष्‍ट्रीय स्वयंसेवक संघ के बारे में कुछ आपत्‍त‍िजनक टिप्‍पणी की। कुछ रिपोर्ट्स के मुताबिक, इसकी प्रतिक्र‍िया में ही तिवारी ने कथित टिप्‍पणी की। कुछ दिन तक उनका बयान सोशल मीडिया पर सर्कुलेट हुआ, जिसके बाद मुस्‍ल‍िम धर्मगुरुओं का ध्‍यान इस ओर गया। बाद में तिवारी का बयान उर्दू मीडिया में भी छपा। बयान पर पहली प्रतिक्रिया स्‍वरुप 2 दिसंबर को सहारनपुर के देवबंद में एक बड़ा प्रदर्शन हुआ। इसमें दारूल उलूम के स्‍टूडेंट्स शामिल हुए। मुसलमानों में फैले गुस्‍से के मद्देनजर तिवारी को 2 दिसंबर को अरेस्‍ट कर लिया गया। वह फिलहाल जेल में हैं। शांति कायम करने के लिए सीएम अखिलेश यादव ने मुस्‍ल‍िम धर्मगुरुओं के साथ बीते बुधवार को अपने आवास पर मीटिंग भी की। सीएम ने आश्‍वासन दिया कि तिवारी के खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी।

 

பிரச்சினை என்ன?

நவம்பர் 29, 2015 அன்று உபி அமைச்சர், ஆஸம் கான், ஆர்.எஸ்.எஸ் பற்றி நிந்தனைகுரிய வார்த்தைகளை உபயோகித்தார். இதற்குப் பிறகு திவாரியின் பதிலும் வந்தது. சமூக வலைதளங்களில் அவை வெளிவந்தன. பிறகு ஊடகங்களில் வந்தன. டிசம்பர் 2, 2015 அன்று முஸ்லிம்களுக்குத் தெரிய வந்து, கோபமடைந்தனர். அன்றே திவாரியும் கைது செய்யப்பட்டு, பில்ஹால் சிறையில் அடைக்கப்பட்டார். அகிலேஷ் யாதவ் முஸ்லிம்களை அழைத்து அமைதி காகச் சொன்னார்.திவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

आजम को क्यों भूल गए[10]

निश्चित तौर पर कमलेश तिवारी को पैगंबर मुहम्मद साहब के अपमान के लिए सजा मिलनी चाहिए। सजा के रूप में तिवारी को अरेस्ट भी कर लिया गया। लेकिन सवाल ये भी उठता है कि जहां से इस मामले को पहली चिंगारी मिली कार्रवाई तो उस सिरे से लेकर आखिरी कोने तक होनी चाहिए। केवल इसलिए क्योंकि आजम सपा सपा के वरिष्ठ मंत्री हैं, इसलिये उन्हें छोड़ दिया जाये?

ஆஸம் கானை மறந்தது ஏன்?

கமலேஷ் திவாரி நிச்சயமாக, சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும். அதன்படியே கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால், பிரச்சினை ஆரம்பித்து வைத்த நபரை ஏன் விட்டுவிட்டனர்? ஆஸம் கான் தானே முதலில் அவதூறாக பேசியது? கேபினெட் அமைச்சராக இருக்கிறார் என்பதால் விட்டுவிடலாமா?

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தி.ஒன்.இந்தியா இதனை வெளியிட்டுள்ளது, ஆனால், தமிழ்.ஒன்.இந்தியாவுக்குத் தெரியவில்லை போலும்! மரண தண்டனை கூடாது என்று அடிக்கடி கலாட்டா செய்யும் மனித உரிமை போராளிகள், சட்டமேதைகள் மற்றும் அறிவிஜீவிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. சகிப்புத்தன்மைகாரர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[2]  http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[3] http://hindi.revoltpress.com/nation/millions-of-muslims-in-the-streets-but-administration-in-silent-mode/

[4] Protesters under the banner of ‘Ittehad-e-Millat’ led by Maulana Khalid, closed their business and demonstrated against the Hindu Mahasabha activist.

http://zeenews.india.com/news/india/who-is-kamlesh-tiwari-why-1-lakh-muslims-are-demanding-death-penalty-for-him_1833614.html

[5] http://zeenews.india.com/news/bihar/malda-fire-reaches-bihars-purnea-protesters-ransack-police-station_1842893.html

[6]  http://www.ndtv.com/cheat-sheet/mob-violence-near-malda-home-ministry-asks-mamata-government-for-report-1262797

[7] http://www.timesnow.tv/MaldaCoverUp-Prove-charges-against-me/videoshow/4484253.cms

[8] Days after TIMES NOW highlighted Muslim group Edara-e-Sharia’s link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3 which turned violent. Speaking to TIMES NOW, the chairman said that they organised the rally to protest against the alleged blasphemous comments by a right wing leader. He had also said that the group had taken permission from the police to hold the rally.

http://video-timesnow-yahoopartner.tumblr.com/post/137217294120/malda-violence-edara-e-sharia-admits-organising

[9] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[10] http://hindi.oneindia.com/news/features/malda-purnia-violence-connection-with-azam-khan-374469.html