Archive for the ‘முரளித்றா’ Category

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபிகாரர்கள் [4]

Amith ShaH tramslated by H Raja 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: அமித் ஷா தொடர்ந்து பேசினார், “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்[1]. ஊழலை எதிர்த்து, சட்டம்-ஒழுங்குநிலை பேணும் கட்சிகளுடன் கூட்டு வைக்கப்படும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்[2]. பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். கூட்டம் முடிந்து, வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழிசை, அமித் ஷா வந்ததால் தான் மழை பெய்தது, என்றதெல்லாம் சொன்னது தமாஷாக இருந்தது. அமித் ஷா பேச்சு, தமிழக அரசியல்வாதிகளை சுசுப்பி விடத்தான் செயத்து. இருப்பினும் திராவிட கட்சிகள் அமைதியைக் காத்தன.

Angry Raja, looking Tamilisai

பிஜேபியில் உள்ள பிரிவுகளும், கோஷங்கள் மூலம் வெளிப்பட்டன: முன்பே எடுத்துக் காட்டிய படி, தமிழிசை, இக்கூட்டத்தை, இங்கு ஏற்பாடு செய்ததில் தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டார். அமித் ஷா வரவேற்பு, தங்கும் அறை, உரையாடல் கூட்டம் என்று அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். அமைப்பு ரீதியில் மற்றும் கட்சி ரீதியில் என்று இரு முறை பேச வாய்ப்பு பெற்றார். இருப்பினும் எச். ராஜா பேச அழைத்த போது, பேசி முடித்தபோது, அமித் ஷா, ராஜா பெயர் சொன்னபோது, தொண்டர் கூட்டம் ஆர்பரித்தது, ராஜாவின் ஆதரவு தெரிந்தது. ”இனி தமிழகத்து நிலையில் பார்த்தா, ராஜா, என்னத்தான் இருக்கிறதோ தெரியல, உன் பெயரைக் கேட்டாலே அதிருதே, ராஜா! இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம்! ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது! கனகோஷத்தில் பூத்தது. வானதி, அமித் ஷா கூட வந்தார், அவர் தான் தன் முகத்தை இருக்கத்துடன் வைத்துக் கொண்டார். இதெல்லாம், கட்சியில் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டியது. இது மற்ற ஆதரவாளர்களை நெருட செய்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மட்டும் கமென்ட் அடித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல பிஜேபி-எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டன.

Angry Raja, looking Tamilisai smiling

பேனர்கள், கொடிகள் வைத்ததற்கு விமர்சனம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன[3]. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா 09-07-2018 அன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இப்படி புலம்பி தள்ளினாலும், பிறகு அமைதியாகி விட்டன.

BJP internal problems

அமித் ஷா பேச்சிற்கு உஷாராக இருந்த திராவிட கட்சிகள்: திமுக ஏற்கெனவே பிஜேபியுடன் கூட்டிருந்தது, ஆகவே, ஸ்டாலின் அமைதியாக இருந்தது புரிந்தது. மறுபடியும் கூட்டு வைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையும் உள்ளது. இந்திராவை கொலை செய்ய முயன்று, அப்படியே கால்களில் விழுந்து சரணாகதி ஆன, குரூர கருணாநிதி கூட்டம் தான் இன்று அமித் ஷாவை எதிர்க்கிறது. ஆனால், கூட்டணி என்றால், “அந்தர்-பல்டி” அடிக்கும். அமித்ஷா எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு என்பதை விட, இந்து-எதிர்ப்பு கொண்டு, திராவிட-துலுக்கப்-கிருத்துவ-கம்யூனிஸ்ட் கூட்டம் செயல்பட்டதும் தெரிந்தது. ஏனெனில், பிஜேபி கூட்டணியில், அவர்களுக்கு சீட் கிடைக்காது. அடையாளம் கேட்டதால் தான், கொதித்த ஊடக செக்யூலரிஸ்டுகள், பொங்கி, அடங்கி விட்டன, ஆனால், செய்தி-வெளியீடு காட்டிவிட்டது. அமித்ஷாவின் பேச்சின் ஆழத்தை உணர்ந்த செக்யூலரிஸ்ட்-இந்து-விரோத ஊடகங்கள் கதிகலங்கி விட்டன. பேசியதை அப்படியே போட துணிவில்லை. சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை என்று புலம்புகிறது பிபிசி. சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக என்று ஒப்பாரி வைக்கிறது இன்னொரு ஊடகம்.  70 ஆண்டுகளாக “அதே குட்டையில் ஊறி, நாறிவரும் கொழுத்த மட்டைகள்” வெட்கமில்லாமல் உண்மை மறைத்து நாடகம் ஆடுகின்றன! தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம்! லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி! என்றெல்லாம் பேசுவர்.

Stalin, Mrs-Mr Raja, Durai murugan

தமிழக பிஜேபி முதலில் உட்பூசல்களிலிருந்து விடுபட்டு ஒற்றுமைக்கு வர வேண்டும்: பிஜேபியில் இருக்கும் உட்பூசல்கள், பிரிவினைகள் 2014லிருந்து மாறவே இல்லை[5]. மேடைகளில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்து கொள்வது மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களில் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்சினையைப் பெருக்கி வருகிறார்கள்[6]. ஒரு ஆதிக்க ஜாதியினர், இன்னொரு ஜாதியினரை தாக்கி வருகின்றனர். தனி நபர் தாக்குதல் அளவிலும் இறங்கி விட்டனர். திராவிட பாணியில், பலமுறை “பார்ப்பன எதிர்ப்பிலும்” இறங்குகிறார்கள். இதனால், மேலும் பிஜேபி ஆதரவாளர்கள் பிளவுபட்டு கிடக்கிறர்கள். கன்னியாகுமரி பலத்தை வைத்துக் கொண்டு, பிஜேபி பலத்தை வளர்ப்பதை விட, மத்திய திட்டங்கள் அங்கு வர திட்டம் போட்டுள்ளதால், போலியான ஆதரவு-எதிர்ப்பளார்பாட்டங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு முறைகளை சீரழித்து வருகின்றன. வேண்டாம் என்றாலும், இல்லை என்றெல்லாம் பேசினாலும், குறிப்பிட்ட ஜாதி-மதம் ஆதிக்கம் வெளிப்படுகிறது. அரசியல் நியமனங்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களுக்கே செல்கின்றன. கோடிகளில் துறைமுகம், 8-வழி சாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட கான்ட்ராக்டர்கள், முதலியோர் குஷியாகி உள்ளனர். இதில் எதிர்ப்பவர்கள் “கமிஷன்” கிடைக்காதவர்கள் தாம். ஆக, ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் வாரிசு அரசியலை இவர்கள் எவ்வாறு போக்கி, ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-07-2018

CPR, Lakhsmanan, Raja, Murali, Tamilisai, POn.Radha

[1] தினமணி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம், By DIN | Published on : 09th July 2018 08:33 PM

[2]http://www.dinamani.com/tamilnadu/2018/jul/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2956499.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக!, Posted By: Kalai Mathi Updated: Monday, July 9, 2018, 18:01 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-keeps-so-many-banners-welcome-amitshah-324483.html

[5] இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது – Daily Pioneer, CARTEL LEADING TN BJP, ALLEGES SENIOR LEADER, Thursday, 05 May 2016 | Kumar Chellappan | CHENNAI.

[6] https://www.dailypioneer.com/nation/cartel-leading-tn-bjp-alleges-senior-leader.html