Archive for the ‘ஒழுக்கம்’ Category

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு முதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].

பாலியல் புகார்போக்சோவில் வழக்குப்பதிவுகைதான மடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடாதிபதியை சந்தித்த ராகுல் காந்திஅடுத்த பிரதமராக ஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார்.  அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.

05-09-2022 அன்று பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதுமதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தினமலர், மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு, பதிவு செய்த நாள்: அக் 25,2022 00:02

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3153752

[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST

[4] https://tamil.news18.com/news/national/karnataka-lingayath-mutt-seer-basava-siddalinga-swami-dies-by-suicide-note-found-796801.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி, By Nantha Kumar R, Updated: Tuesday, October 25, 2022, 15:30 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-kanchugal-bande-mutt-pontiff-basavalinga-swamy-suicide-after-writes-death-note-482143.html

[7] மாலை முரசு, ராகுல்காந்தி சந்தித்த மடாதிபதி போக்சோவில் கைது: மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் !!, Ramadevi, Sep 2, 2022 – 07:22; Updated: Sep 2, 2022 – 07:24

[8] https://www.malaimurasu.com/posts/india/Unidentified-person-entered-Indian-border

[9]  புதிய தலைமுறை, கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார்– 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, 01-09-2022 01.29 PM

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/146435/Karnataka-Sex-complaint-against-abbot-7-days-to-file-report

[11] தமிழ்.இந்து, கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2022 07:59 AM, Last Updated : 06 Sep 2022 07:59 AM

[12] https://www.hindutamil.in/news/india/861893-basavalinga-swamy-a-young-abbot-of-karnataka-commits-suicide.html

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)!

மே 29, 2016

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்னபிஜேபி தோல்வி ஏன் (6)!

மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்

தமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன?: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].

  1. திராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.
  1. அரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.
  1. மக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].
  1. பெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்

  1. இடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.
  1. எப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].
  1. தமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.
  1. வலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.
  1. இருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

சேறை வாறி இறைத்தாலும் தாமரை மலரும்

  1. முதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.
  1. வீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.
  1. சமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.
  1. குறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்
  1. தீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.

மோடி ம்முன்னேற்றம், வளர்ச்சி

  1. குறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.
  1. இந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.
  1. “இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்- மேடைப் பேச்சு கலை-மோடி

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

[2]  தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.

[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.

[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.

[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

மே 29, 2016

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

TN 2016 BJP failed in alliance

பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை           எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை! ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம்  பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

poll-of-exit-polls_NDTV 2016தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].

தமிழக பிஜேபி - ஜவடேகர் பிரச்சாரம்- 2016மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016தமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்

[2] http://www.bjptn.org/event.php?id=47

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]

http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக!, By சென்னை, First Published : 23 May 2016 03:14 AM IST

[5]http://www.dinamani.com/tamilnadu/2016/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/article3446859.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

U R Ananathmurthy and his christian wife Esther

U R Ananathmurthy and his christian wife Esther

யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம்  முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.

Saeed-Akhtar-Mirza

Saeed-Akhtar-Mirza

சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

Saeed aktar mirza, babar and masjid

Saeed aktar mirza, babar and masjid

கஜேந்திர சௌஹான் ஒருபுரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

தகுதிதராதரம்பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும்  இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html

[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument

[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.

Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81.,  Aug 23, 2014 · 07:46 am

[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html

[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.

[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).

 http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms

[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html

[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.

[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece

[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST

[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue,   Updated: July 16, 2015 12:26 am.

[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/

[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST

[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms

[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST

[16]  http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை: பச்சமுத்து திடீரென்று தன்னை “பாரிவேந்தர்” என்று கூறிக்கொண்டு, பிஓஸ்டர்கள் அடுத்து, விழாக்கள் நடத்த ஆரம்பித்தார். இவையெல்லாம் 1960களில் இருந்த இன்றும் வாழ்ந்து வரும் பழைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், பச்சமுத்து அத்தகைய விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர் அல்ல. அப்படியென்றால், ஒன்று அவரே மாறியிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கூட்டம் அவரை மாற்றிருக்கவேண்டும்[1]. சமீபத்தைய திரைப்பட முதலீடுகள், தொடர்புகள் அவர்களை தூரத்தில் எடுத்துச் சென்று விட்டது. சங்கர், “நண்பன்” திரைப்படத்தில் “பாரிவேந்தர்ரென்ற பெயரை அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்கு  அப்பெயரைச் சூட்டியதால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்[2] என்பவர் கண்டித்து “விடுதலையில்” எழுதியுள்ளார்.  “பேராசிரியர்    பச்சமுத்து   உழைப்பின்  குறியீடு.  முயற்சியின்    வடிவம்.    ஆல்போல்   தழைத்து    அருகுபோல் வேர்விட்டு  வளர்ந்து வரும்  ஒரு  பெரிய  நிறுவனத்தின்  தலைவர்.  ஓர் அரசியல் கட்சியின்  நிறு வனர்.    மணிமேகலை    அமுதசுரபியைக்கொண்டு, காணார், கேளார், கால்  முடப்பட்டோர்  பேணுநரின்றிப் பிணியால்  வாடியோர்  ஆகியோருக்குச்  செய்த அறங்களைப் போல, இன்று  ஆயிரக்கணக்கான  ஏழை,  எளியோருக்கு  வாழ்வளிக்கும்  வள்ளல்  பாரிவேந்தர்  என  அவரை  மற்றவர்கள்அவரால்  பயன்பெறும்  மக்கள்  அழைத்து  மகிழ்கின்றனர். விருதுக்கு  ஏற்ப  வாழும்  வாழ்க்கை  அவரின்  வாழ்க்கைஅவரைச் சிறுமைப் படுத்துவது  தனிமனித  அவதூறாகும்  இது மன்னிக்க  முடியாத  குற்றமே!”, என்று முடித்துள்ளார்[3]. திராவிட இயக்கத்தின் “விடுதலை’யில், இது வந்துள்ளதால் இதெல்லாம், அரசியல், சித்தாந்தம், ஜாதி முதலியவை கலந்துள்ள பிரச்சினை போன்று தெரிகிறது. இவரைப்பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற கல்லூரி வேந்தர்கள், முதலாளிகள் முதலியோரும் கோடிகளை அள்ளிக் கொண்டிருந்தாலும், திமுக-அதிமுக ஆதரவுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அத்தகைய விமர்சனங்கள் வருவதில்லை.

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார்

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார் – உதாரணத்திற்கு கொடுக்கப் பட்டது

பாரிவேந்தர்  மீது  பாலியல்  புகார்  கூறும்  திலகா[4]: பச்சமுத்து பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. உதாரணத்திற்காக இவை கொடுக்கப் படுகின்றன. இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்….

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும்

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும் இருப்பது செக்யூலரிஸமா, ஊழல் தர்மமா?

பியர்ல்  சிட்டி  பவுண்டேசன்  நடத்தும்  திலகா (2011-12): ‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன். 2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

எஸ்.ஆர்.எம். லேனிங்  ட்ரீ  பிரைவெட்  லிமிடெட்  நிறுவனத்திற்கு  திலகா   செலவழித்தது: இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.

 

modi-tatto-னநமோ பச்சை குத்துதல்

modi-tatto- நமோ பச்சை குத்துதல்

பெண்களைக்  கூட்டி  வந்தாயா  என்ற  பிரச்சினை: இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயே வேந்தரை சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.

 

selling Modi and brand

selling Modi and brand

எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட்  பிரான்சைஸ்  வியாபாரமா, மோசடியா: நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி[5]. இதில் உண்மை எந்த அளவிற்கு, பிரச்சினை என்ன என்பதெல்லாம் தெரியவந்தால் தான் பின்னணி விளங்கும்.

 

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

பச்சமுத்துவின் மாற்றங்கள் பெயரிலும், நடவடிக்கைகளிலும் உள்ளன (2010-14): தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து அரசியல் நோக்கோடுதான் “பாரிவேந்தர்” ஆனார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் முதலியோரை சிறப்பித்து ஆதரவைப் பெருக்கினார். பெரிய அரசியல்வாதிகள், தொழிலாளிகள், பணமுதலைகளின் வாரிசுகள் இவர் கல்லூரிகளில் படித்து அல்லது படிக்க வைக்கப் பட்டு பொறியியல், மருத்துவ, நிர்வாக பட்டங்களுடன் வெளியேறியுள்ளனர். அதில் கட்சிபேதம் பார்க்கப்படவில்லை. ஆனால், அவரே அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது சாம்ராஜ்யத்தையே ஒரு திராவிடக் கட்சி விலைபேசியது, இவரை ஒழிக்கத் தீர்மானித்தது எனும் நிலையில் பாரிவேந்தர் இரண்டாவது முறையாக மாறிவிட்டார். பழையமாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறிய போது ஏற்பட்ட மாற்றத்தை விட, இம்மாற்றம் வித்தியாசமானது. ஆக அரசியல்வாதியாகி விட்டப் பிறகு அவரிடம் கொள்கைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கூட்டணிகள் என்று வரும்போது, யாரோடோ கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

 

namostore-launched

namostore-launched

“மோடி பிரான்ட்” மூலம் அரசியல் வியாபாரம்: தூய்மையின் சின்னமாக இருக்கும் அன்னா ஹஜாரே கூட இப்பொழுது மம்தா பேனர்ஜியை ஆதரிக்கிறேன், அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். மம்தா பேனர்ஜி ஊழலற்ற சுத்தமான அரசியல் தங்கமா, வெள்ளியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி சில கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் பேசுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. இந்நிலையில், பிஜேபியுடன் கூட்டு என்பது கட்டாயமாகி விட்டது. போதாகுறைக்கு “மோடி பிரான்ட்” கண்டு கருணாநிதி போன்ற அரசியல் வித்தகர்களே கலக்கத்தில் உள்ளனர். சோனியாவைவிட, இவருடன் சேர்ந்தால் வெர்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. வாஜ்பேயியையும் மிஞ்சக்கூடிய கவர்ச்சி, பேச்சு, அனைவரைம் வசீகரிக்கும் திறன், அமெரிக்கா போன்ற நாட்டினரையே திகைக்க வைக்கும் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இல்லை. ஆகவே தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகளை “மோடி பிரான்ட்” மூலம் தீர்த்துக் கொள்ள தீர்மானித்ததில் வியப்பொன்றும் இல்லை. பதிலுக்கு பிஜேபியும் அனுசரித்து, சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] விடுதலை, பகடிக்குரியபெயராபாரிவேந்தர்?, வியாழன், 26 ஜனவரி 2012 , பேராசிரியர் க.நெடுஞ்செழியன் என்றிருந்தாலும், எழுதியவர் “சங்கர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[5] இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை. என்னதான் நடக்குது நாட்டில்? – நன்றி ஏகவலைவன் வார இதழ்

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html

 

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

பிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை!

மே 6, 2013

பிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை!

 

காங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013)கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட்டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே? அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன?

 

நாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

 

கிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.

 

கூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

 

கூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.

 

மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதேசம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம் பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.

 

© வேதபிரகாஷ்

06-05-2013