Archive for the ‘கழகம்’ Category

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296