Archive for the ‘உள்துறை உளறல்கள்’ Category
ஏப்ரல் 26, 2016
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?
முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.
- நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
- ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
- தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
- புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
- தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
- பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
- நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
- பாட்டு பாடலாமா, கூடாதா?
என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.
ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.
சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.
மதநம்பிக்கை பெரியது என்றால் எம்பியாகவே வந்திருக்க முடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].
“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!
வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
“தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?
பத்வா யாரையும் கட்டாயப் படுத்தாது, உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?
© வேதபிரகாஷ்
10-05-2013
[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.
குறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கீதம், சிதம்பரம், ஜிஹாத், தாய், தாய்நாடு, தேச விரோதம், பாராளுமன்றம், வந்தே மாதரம், ஷரீயத்
அகிம்சை, அதிகாரம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் கூட்டு சதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்ளூர் ஜிஹாத் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 9, 2013
ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!
பாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘உ.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியது‘ என்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது’ என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!
முஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, ஐ.எஸ்.ஐ தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3]. கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].
குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!
மோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் ஐ.எஸ்.ஐ முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்? அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் ஐ.எஸ்.ஐ அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா?”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].
சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!
தலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10]. இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.
சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்
ராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].
மதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.
உரியநடவடிக்கை– தேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.
© வேதபிரகாஷ்
09-11-2013
[7] Questioning Rahul’s Indore speech on ISI trying to recruit riot-affected victims in Uttar Pradesh’s Muzaffarnagar, the BJP leader asked what the Congress Vice President had done to address the issue. “What has the shahzada done to stop the ISI from reaching out to Muslims in Muzaffarnagar,” asked Modi while addressing a rally in Jhansi on Friday.His second question to Rahul was more direct. The Gujarat strongman questioned the credibility of Rahul’s statement on ISI. “Does shahzada have any proof of ISI reaching out to riot victims?” he said.
[13] தினமணி, 09 November 2013 01:46 AM IST,
குறிச்சொற்கள்:ஆதரவு, ஐ.எஸ்.ஐ, கரிசனம், கெஞ்சல், கொம்க்சல், தாஜா, தீவிரவாத அரசியல், தீவிரவாத ஏற்றுமதி, பரிவு, பாகிஸ்தான், முஸ்லீம்கள் ஜமாத், மைனாரிடி, மௌதானி, மௌலானா, மௌலானா கல்பே சாதிக், மௌலானா கல்பே ஜவ்வாத், ராகுல், விருப்பம்
அகிலேஷ், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், ஆதாரம், இந்திய விரோதி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எண்ணம், கரிசனம், கலவரம், காங்கிரஸ், காப், கெஞ்சல், கொஞ்சல், சமரசம், சல்மான் குர்ஷித், சித்தாந்தம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜாட், ஜாதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தாஜா, தில்லி இமாம், பரிவு, பாகிஸ்தான், பாதுகாப்பு, பிஜேபி, புகார், மதவாதி, மதவெறி, மைனாரிடி, மௌதானி, மௌலானா, மௌலானா கல்பே சாதிக், ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 4, 2013
சோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்? (2)
ராகுல்சரப்ஜித்சிங்கின்குடும்பத்தைசந்தித்தது: 03-05-2013 அன்று ராகுல் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அரசியலாக்கத்தான் தெரிகிறது. ஒரு மணி நேரம் அவர்களுடன் இருந்த ராகுல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கௌரை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்[1]. முன்பு இவ்விஷயத்தில் அக்கரைக் காட்டாதவர், இப்பொழுது எப்படி இவ்வாறு செய்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[2]. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பீஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[3]. சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[4] பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
லாகூர்வெடிகுண்டுவழக்கு: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பிகிவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சரப்ஜித் சிங் விவசாயி. பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில், இந்திய உளவுப்படையான, “ரா’ வின் கைவரிசை இருக்கலாம் என, பாகிஸ்தான் கருதி வந்து, எல்லைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, இந்திய உளவாளி எனக் கருதிய பாகிஸ்தான் போலீசார், அவரைப் பிடித்து சென்று, சிறையில் அடைத்தனர்[5].
தவறுதலான அடையாளத்தினால் கைது, தண்டனை: பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, “மஞ்சித் சிங்” என்று அடையாளம் காணப்பட்டு பாகிஸ்தானியர் கைது செய்தனர்[6]. ஆரம்பநிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் அறிவித்தது[7]. சரப்ஜித் சிங்தான், “மஞ்சித் சிங் என்று அடையாளம் காட்ட முடியாத நிலையில், தனியாக அழைத்துச் சென்று, அவர் மீது, வெடிகுண்டு வழக்குகள் தொடரப்பட்டு, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அவரின் கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்த நிலையில், தண்டனையை, அதிபர் ஜர்தாரி அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் சிலர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், சுயநினைவு இழந்தார். “கோமா’ நிலையில், லாகூர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலையில் இறந்தார். விமானம் மூலம் அவர் உடல் எடுத்து வரப்பட்டது[8].
சொந்தஊரில்தகனம்: பிறகு, சொந்த ஊரான பிகிவிண்டிற்கு, ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட சரப்ஜித் உடல், நேற்று அங்கேயே தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை, சரப்ஜித்தின் மூத்த சகோதரி, தல்பீர் சிங் மேற்கொண்டார். அப்பொழுது கூட, ராகுல் அணைத்தப் படி காணப்பட்டார். மாநில அரசு சார்பில், முழு அரசு மரியாதையுடன், சரப்ஜித் சிங் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்பட்டது[9]. இதில், மாநில முதல்வர், பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், வெளியுறவுத் துறை இணையமைச்சர், பிரினீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்[10]. சரப்ஜித் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூடி, “சரப்ஜித் சிங், தேசிய தியாகி; அவர் மறைவு குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றியது.
உடல்உறுப்புகள்அகற்றம்: லாகூர் மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல், சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் நகர மருத்துவமனையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், அவர் தலையில், 5 செ.மீ., அகலத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆழமாக இருந்த அந்த காயம் தான், அவரை, “கோமா’ நிலைக்கு கொண்டு சென்றது என, அவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்த, லாகூர் டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.மேலும், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சரப்ஜித் சிங்கின் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், குடல், மூளை போன்ற பாகங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த டாக்டர் கூறினார்.
பாகிஸ்தான்பத்திரிகைகள்இரங்கல்: பாக்., சிறையில், சரப்ஜித் கொல்லப் பட்டதற்கு, அந்நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன. நேற்று வெளியான, பாகிஸ்தான் பத்திரிகைகளில், முதல் பக்கத்தில், சரப்ஜித் சிங் செய்தி வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகைகளில், சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த பத்திரிகைகள் வலியுறுத்தியிருந்தன.
சீக்கியர், காங்கிரஸ், தேர்தல் – 2014: தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, சீக்கியர்களிடத்தில் வளைந்து செல்லும்ம் வேலையில் ஈடுபட்டால், காங்கிரஸ் மறுபடியும், ஒரு பெரிய இழப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது தான், ஓரளவிற்கு, சீக்கியப் பிரிவினைவாதம் தணிந்து, சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அதனுடன் காங்கிரஸ் விளையாடினால், மறுபடியும் எதிர்விளைவுதான் ஏற்படும். பாகிஸ்தான், அதனைத்தான் எதிர்பார்க்கிறது. ஏனெனில், பஞ்சாபில் பிரச்சினை என்றால், காஷ்மீர் பிரச்சினையை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் நுழையலாம். சரியாக இந்நேரத்தில் தான் சீனத்துருப்புகளும் லடாக்கில் நுழைந்துள்ளன. இவற்றை நிர்வகிக்கத் தெரியாத காங்கிரஸ் அரசு, சிறுமைத்தனமாக, இத்தகைய நிகழ்சிகளில் பங்குக் கொண்டு ஆதாயம் தேடப் பார்ப்பது, கேவலமான செயல்.
“உன்கி நாநி யாத் ஆயேகி”: அப்பா இப்படி சொன்னது ஞாபகத்தில் இருக்கும். அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளுப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும் – என்று ராகுல் சொல்லித்தான், சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். ராகுலுக்கு சீக்கியர்களை வளைத்துப் போடுவதற்கு சாமர்த்தியம் இருக்கிறாதா என்று தெரியவில்லை. பாட்டி எப்படி இறந்தால் என்பதும் ராகுலுக்குத் தெரிந்திருக்கும். பிறகு எதற்கு, இந்த விபரீத விளையாட்டு?
வேதபிரகாஷ்
04-05-2013
[2] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.
[5] உளவாளி, ஒற்றன் எனும்போது, ஆளும் கட்சி, ராஜீயமுறையில் ஒற்றர்கள் பரிமாற்றம் மூலம், சரப்ஜித் சிங்கை இந்தியா விடுவித்திருக்கலாம் என்று கூறியுள்ளதை நோக்கத்தக்கது. இக்கோணத்தில் சிந்திக்க காங்கிரஸுக்குத் தெரியவில்லையா அல்லது விடுவிக்க விருப்பம் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
[6] Sarbjit’s family says he had crossed the Indo-Pak border inadvertently in an inebriated condition 23 years ago. He was arrested in Pakistan by the army in 1990 by the name of Manjit Singh. Accused of being an Indian spy, he was charged with plotting a series of bomb blasts in 1989 at Lahore and Multan, convicted, and was sentenced to death.
http://news.outlookindia.com/items.aspx?artid=797122
[7] Sarabjit was tried by several successive courts and was awarded death penalty. His trial was based on a confessional statement which the Pakistani authorities claim he gave during the course of the investigation.
[8] இதனையும் ஊடகங்கள் பெருமளவில் கிரிக்கெட் போட்டி மாதிரி போட்டிப் போட்டுக் கொண்டு, காண்பித்துக் கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாது, விஷயம் இல்லாததால், காண்பித்ததையே, திரும்ப-திரும்பக் காண்பித்துக் கொண்டிருந்தன.
[9] இதை மத்திய அரசு ஏன் எதிர்க்கவில்லை அல்லது அவ்வாறு செய்யலாமா என்று கேட்கவில்லை.
குறிச்சொற்கள்:உளவாளி, எல்லை, ஒற்றன், கல்லீரல், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குடல், சரப்ஜித் சிங், சிறுநீரகம், சுக்பீர் சிங் பாதல், சோனியா காங்கிரஸ், தல்பீர் கௌர், துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, பற்று, பிரகாஷ் சிங் பாதல், பிரினீத் கவுர், மஞ்சித் சிங், மண்ணீரல், மூளை, விரோதம், விவசாயி
அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அவதூறு, ஆதரவு, ஆதாரம், இனம், இலக்கு, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, கராச்சி, சரப்ஜித் சிங், சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சுக்பீர் சிங் பாதல், தல்பீர் கௌர், பிரகாஷ் சிங் பாதல், பிரினீத் கவுர், ராவல்பிண்டி, லாகூர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
ஏப்ரல் 25, 2013
பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)
அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].
மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.
காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].
ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.
ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].
தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.
இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
வேதபிரகாஷ்
24-04-2013
[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.
குறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்
அடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »
ஏப்ரல் 24, 2013
பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)
அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர். ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:
PM condemns Boston bombings
The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.
The text of PM’s message is as follows:
“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.
The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.
The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.
Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack. |
17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:
PM condoles the loss of lives in the earthquake in Pakistan
The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.
Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.
Excerpt of the Prime Minister’s message is as follows:
“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”
|
அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:
PM condoles the loss of lives in Iran earthquake
The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.
Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.
Excerpt of the Prime Minister’s message is as follows:
“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.
The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.
We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.” |
அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:
PM greets people on the occasion of Ram Navami
The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.
In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.
We should renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
|
ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.
இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.
வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.
எப்.பி.ஐ.யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில் சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும். எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?
மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12]. இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.
சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.
வேதபிரகாஷ்
23-04-2013
[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.
[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.
குறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அமெரிக்கா, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எப்.பி.ஐ, எல்லை, எல்லைகள், கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சகோதரர், சகோதரர்கள், சிபிஐ, சீனா, செக்யூலரிஸம், சைனா, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தியோரா, தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பாஸ்டன், போஸ்டன், மனித குண்டு, மிலிந்த், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், ராகுல், ரெட்டி
26/11, அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கையேடு, சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீவிரவாத அரசியல், துரோகம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், புலனாய்வு, புலன், மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், ராபர்டோ காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லிங்காயத், வகுப்புவாத அரசியல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »
ஏப்ரல் 23, 2013
பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)
பாஸ்டன்முதல்பெங்களூருவரை–தீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:
- 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
- இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
- இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
- 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
- 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
- அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.
தேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.
வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.
சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.
விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.
குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.
1) April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2) April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.
3) April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.
4) April 18, shortly thereafter – SUV driver released unharmed.
5) April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.
6) April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.
7) April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;
Dzhokhar is found hiding in a stored boat and taken into custody. |
இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
வேதபிரகாஷ்
22-04-2013
குறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்
அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »
மார்ச் 28, 2013
சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்
சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.
- தில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.
- சோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.
- அந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].
சி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
- லல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.
- மாயாவதி மீதான வழக்குகள்.
- முல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.
- ஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்
ஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].
முடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா? …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்
அர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா?
டி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].
கைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி?: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.
இந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா?: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].
சி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்?: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்?
சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம்! அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது? அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.
© வேதபிரகாஷ்
28-03-2013
[2] Naïve as he is, even Rahul Gandhi had blurted out that political parties tended to misuse CBI. “Every party in power can pressure institutions. Every government tries to push its people into such agencies. It is a fact, it is a reality of Indian politics,” he said in May 2009.
http://newindianexpress.com/opinion/article1516897.ece
[11] The DRI had assigned the probe to one of its senior officers called Muruganandam. However, Muruganandam fined only one vehicle while letting free the other 32.
குறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை
1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 22, 2013
திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?
2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
சிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன?: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.
முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.
அர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.
விவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].
தி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.
திஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன?: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.
“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.
Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.
“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin. |
உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.
Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi has disputed a report published in The Hindu that said party treasurer M.K. Stalin threatened to quithis position if the DMK did not snap ties with the United Progressive Alliance.In a statement here on Thursday, Mr. Karunanidhi said the DMK functioned on the basis of democratic principles and major decisions were not made by individuals.
He said that after Union Ministers P. Chidambaram, Ghulam Nabi Azad and A.K. Antony had met him on the Sri Lankan issue, he held discussions with senior party leaders, including K. Anbazhagan and Durai Murugan, before taking a decision on leaving the UPA. |
இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.
கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா?: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன? அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.
© வேதபிரகாஷ்
22-03-2013
குறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism
அடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 21, 2013
கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!
முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரன்வீட்டில்ரெய்ட் – குசும்புசெய்யும்சோனியாபாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்?
அர்த்தராத்திரியில்ரெய்ட்ஆரம்பித்ததுஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].
விவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].
© வேதபிரகாஷ்
21-03-2013
குறிச்சொற்கள்:உதயநிதி, உள்துறை அமைச்சர், ஊடல், கருணாநிதி, கல்யாணம், காதல், கார், கூடல், கூட்டணி, கூட்டணி தர்மம், சிதம்பரம், சொகுசு கார், டைவர்ஸ், தேசத் துரோகம், பகல், மிரவு, முதலிரவு, ரெய்ட், ஸ்டாலின், Indian secularism
அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அவதூறு, ஆயுதம், ஆரோக்யம், இரவில் காமி, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊடல், ஊழல் குற்றச்சாட்டு, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கம்யூனிஸம், கருணாநிதி, கருத்து, காமம், காழ்ப்பு, கூடல், கைப்பேசி, சமதர்மம், சமத்துவம், சம்மதம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், டைவர்ஸ், நாடியா, படுக்கை, பட்டம், முறிவு, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ரெய்ட், ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
மார்ச் 20, 2013
2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!
எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.
எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!
இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு
மோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.
2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.
தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.
வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!
மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].
தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!
224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
Chidambaram, Finance Minister[11]: Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties. |
நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].
© வேதபிரகாஷ்
20-03-2013
[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.
[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.
குறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism
1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »