Posts Tagged ‘தீவிரவாத ஏற்றுமதி’

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

நவம்பர் 9, 2013

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

Rahul hate speech at Churu, Rajasthan ISI etc

பாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, .எஸ்.., தொடர்பு கொண்டு பேசியதுஎன்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

முஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, .எஸ். தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3].  கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் .எஸ். முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்? அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் .எஸ். அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா?”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

தலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10].  இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

ராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].

Sonia angry

மதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.

உரியநடவடிக்கைதேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.

© வேதபிரகாஷ்

09-11-2013


[1] Criticising Rahul Gandhi for his ISI remark, Jamiat Ulema-e-Hind leader Maulana Madani said, “Rahul Gandhi’s statement was very irresponsible and we condemn it. Such issues must not be politicised. Even if he had any such information, it’s a reckless statement.”

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[2] While Rahul is being criticised by Muslim clerics, Modi got unexpected support from a top Muslim cleric, Maulana Kalbe Sadiq. “If we see a change in the attitude of Modi, we will try to convince Muslims to forget 2002. Such a thing has happened in the past,” Sadiq said.

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[3] Khan also urged Rahul Gandhi to come forward with the names of the Muslim youth that were allegedly contacted by Pakistani agents to help the Samajwadi Party-led Uttar Pradesh to take action accordingly.

http://zeenews.india.com/news/nation/azam-khan-asks-rahul-gandhi-to-name-muslim-youth-approached-by-isi_885794.html

[7] Questioning Rahul’s Indore speech on ISI trying to recruit riot-affected victims in Uttar Pradesh’s Muzaffarnagar, the BJP leader asked what the Congress Vice President had done to address the issue. “What has the shahzada done to stop the ISI from reaching out to Muslims in Muzaffarnagar,” asked Modi while addressing a rally in Jhansi on Friday.His second question to Rahul was more direct. The Gujarat strongman questioned the credibility of Rahul’s statement on ISI. “Does shahzada have any proof of ISI reaching out to riot victims?” he said.

[9] The Uttar Pradesh Government on Saturday officially dismissed Congress vice-president Rahul Gandhi’s claims about Pakistan’s ISI being in touch with affected Muslim youth from riot-hit Muzaffarnagar even as Union Steel Minister Beni Prasad Verma added a new dimension, saying hundreds of people from Gujarat had come to Muzaffarnagar to indulge in rioting.

http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/nation/up-dismisses-rahuls-isi-in-touch-claim.html

[10] Samajwadi Party leader Farhan Lari, while alleging that Rahul had hurt the sentiments of the Muslim community, has lodged the complaint before the CMM Prafulla Kamal. Another case has been lodged by traders’ leader Gyanesh Tewari and social worker Mohammad Islamuddin in the same court. The duo too have maintained that the statement has posed serious threat to the country’s integrity.

http://www.hindustantimes.com/india-news/two-complaints-filed-against-rahul-gandhi-for-isi-statement/article1-1140912.aspx

[13] தினமணி, 09 November 2013 01:46 AM IST,

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஏப்ரல் 23, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

boston-marathon-suspects

குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Boston bomber - a believer of Islam

தேசபக்திநாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamerlan Tsarnaev as a boxer

பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

Boston-Marathon-bombing-suspect-No.-2-in-crowd

வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

boston-marathon-bombing-injuries-hard-to-treat-shrapnel

கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Location of boston_marathon bombings

தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.

Boston bomber - hiding in a boat aerial view

சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.

Boston-marathon-bombing-suspect-dzhokhar-tsarnaev-captured

விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

boston blast victim a woman

குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

1)       April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2)   April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.

3)   April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.

4)   April 18, shortly thereafter – SUV driver released unharmed.

5)   April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.

6)   April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.

7)   April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;

Dzhokhar is found hiding in a stored boat and taken into custody.

இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும்  பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

22-04-2013


[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html

[5] தினமலர், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2013,07:49 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2013,08:55 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694915