Posts Tagged ‘ஊழல் சோனியா’

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

பிப்ரவரி 22, 2023

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

கொரியர் டெல்லா சேரா என்ற இத்தாலி நாளிதழில் வெளிவந்த ராகுல் காந்தியின் பேட்டி (1-02-2023): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி [52 வயதான] இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு [ Italian daily “Corriere della Sera”] பேட்டி அளித்துள்ளார்[1]. இப்பேட்டி பிப்ரவரி 1, 2023 அன்று முழுபக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்[2]. ஆனால், இந்திய ஊடகங்களில் சுருக்கமாக வெளிவந்துள்ளது எனலாம். ராகுலின் திருமணம் பற்றி அடிக்கடி இத்தகைய கேள்விகள், செய்திகள் மற்றும் குசுகுசுக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப் படங்கள், அவர்கள் தான் காதலி, கார்ள்-பிரென்ட், வருங்கால மனைவி, திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது வரை ஒப்புக்கொண்ட-ஏற்றுக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

பல இடங்களில் படித்தவர்: இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி ஜூன் 19, 1970 அன்று புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தலைவரான மோதிலால் நேரு ஆவார். இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார். மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் பட்டம் பெற்றார்.

ரகசியமாக வேலை செய்தவர்-காதலித்தவர்: ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் [the Monitor Group[3], a management consulting firm, in London] மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002-ன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

இத்தாலிய உறவுகளை மறக்காதவர்: 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. குழந்தைகள் பெற விரும்புகிறேன்” என்றார்[4]. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம்[5]. இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம்[6]. இத்தாலி பாட்டி பாவ்லோ மைனோ [Paola Maino] 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார்[7]. கடந்த வருடன் 2022 ஆகஸ்ட் மாதத்தில் காலமானார் . இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். என் பாட்டியுடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன். அதே போல மாமா வால்டர் மற்றும் அவரின் மகன்களிடமும் பாசமாக இருந்தேன்… என்று குறிப்பிட்ட ராகுல்[8], “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்[9].

இந்திய அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்[10]: இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது[11]. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெளி நாட்டு உறவுகள் பற்றிக் குறிப்பிட்டது: உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை[12]. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது[13]. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்” என்றார். ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார். அதே நேரத்தில் கேம்பிரிட்ஜில் பேசப் போகிறார், சீனாவைப் பற்றி ரகசியமாக பேசப் போகிறார், என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.

© வேதபிரகாஷ்

22-02-2023.


[1] நியூஸ்.18.தமிழ், சிங்கிளாக இருப்பது ஏன்?… தாடி ரகசியம்மனம் திறந்த ராகுல் காந்தி..!, NEWS18 TAMIL First published: February 22, 2023, 09:07 IST, LAST UPDATED : FEBRUARY 22, 2023, 09:34 IST.

[2] https://tamil.news18.com/news/national/rahul-gandhi-answers-about-his-marriage-plans-in-an-interview-to-italian-news-media-896290.html

[3] Monitor Deloitte is the multinational strategy consulting practice of Deloitte Consulting. Monitor Deloitte specializes in providing strategy consultation services to the senior management of major organizations and governments.

[4] மாலைமலர், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில், By மாலை மலர், 22 பிப்ரவரி 2023 8:15 AM

[5] https://www.maalaimalar.com/news/national/why-not-married-yet-rahul-gandhi-answers-575262

[6] தமிழ்.வெப்.துனியா, குழந்தை பெற்று கொள்ள ஆசை…..ராகுல் காந்தி பேட்டி…!, செவ்வாய், 21 பிப்ரவரி, 2023 20:49 IST

[7] https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-says-about-marriage-and-child-123022100079_1.html

[8] தமிழ்.ஏபிபி.லைவ், Rahul Gandhi: “திருமணம் நடக்காதது ஏன் என தெரியவில்லை; ஆனால் இந்த ஆசை இருக்கு” – மனம் திறந்த ராகுல் காந்தி!, By: ஆர்த்தி | Updated at : 22 Feb 2023 12:39 PM (IST), Published at : 22 Feb 2023 12:39 PM (IST)

[9] https://tamil.abplive.com/news/india/former-congress-president-rahul-gandhi-has-mentioned-in-an-interview-to-a-private-daily-that-he-is-not-married-but-wants-to-have-children-103132

[10] தினமணி, திருமணம் செய்யாதது விசித்திரம்! – ராகுல் காந்தி பேட்டி, By DIN  |   Published On : 22nd February 2023 12:26 AM  |   Last Updated : 22nd February 2023 12:26 AM

[11] https://www.dinamani.com/india/2023/feb/22/i-was-indian-grandmothers-favourite-priyanka-italian-grandmothers-rahul-4005068.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, குழந்தைகளை பிடிக்கும்திருமணம் எப்போது? இத்தாலி நாளிதழில் ராகுல் ஓபன் டாக்.. மோடி பற்றியும் பேச்சு, By Mani Singh S, Published: Tuesday, February 21, 2023, 21:12 [IST.

[13] https://tamil.oneindia.com/news/delhi/i-would-like-to-have-children-rahul-gandhi-interview-to-the-italian-daily-499794.html

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

மே 11, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

ரெயில்வேதுறைமீது கண் வைக்கும் கட்சிகள்: ரெயில்வேதுறை எந்த அளவிற்கு லஞ்சம் மலிந்த துறையாக உள்ளது என்பதனை பவன் குமார் பன்சால் வெளிப்படுத்தி விட்டார். இதனால், முந்தைய ரெயில்வே அமைச்சர்கள் இவரை சபித்துக் கொண்டிருப்பர் என்பது திண்ணம். கட்சிகள் மாறி-மாறி இத்துறைக்கு வந்து கொள்ளையிட்டுள்ளதும் தெரிகிறது. ராம் விலாஸ் பாஷ்வன், நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ்[1], மம்தா பானர்ஜி[2], இப்படி பெயர் சொன்னாலே போது என்ற அளவிற்கு இருந்துள்ளார்கள்.

ஊழலில்திளைக்குரெயில்வேயும், பாதிக்கப்படும்மக்களும்: ஒரு கான்ட்ராக்ட், ஆர்டர், டெண்டர் கிடைக்கவேண்டுமானால், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றால், கொடுப்பவர் எந்த அளவிற்கு அந்த வேலையிலிருந்து சம்பாதிப்பார் என்பதும் வெளிப்படுகிறது. முடிவு தரக்குறைவான பொருட்கள், சேவைகள் தாம் அந்த லஞ்ச-ஊழல் பேர்வழிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் முடிவாக பாதிக்கப் படுவது, நுகர்வோர்கள் தாம் – அதாவது கோடிக்கணக்கில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள்தாம்[3].

சோனியாஏன்மன்மோஹன்வீட்டிற்குச்செல்லவேண்டும்?: ஊடகங்கள் தான் தான் தலைவி – பாஸ் என்று மெய்பித்து விட்டார்[4], சோனியா சொல்கிறார்-மன்மோஹன் செய்கிறார்[5] என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தன. ஆனால், சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்றார் என்பதில் தான் நாடகம் வெளிப்படுகிறது. “வா” என்றால், வந்து கும்பிடு போடும் மன்மோஹனுக்கு அப்படியென்ன முக்கியத்துவம், தைடரியம் அல்லது வேறேதோ ஒன்று வந்து விட்டது? பெரிய பதவிக்கான நியமனம் பி.எம்.ஒ.அலுவலகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால், பிரதம மந்திரியின் தொடர்பும் உள்ளது, அதாவது, பொம்மையை ஆட்டிவைக்கும் சோனியாவின் பங்குதான் முடிவாக உள்ளது.

ஊடகங்களின்மழுப்பல்பன்சால்பதவிநீக்கம்செய்யப்பட்டார்என்றது, பிறகுஅறிவித்ததுராஜினாமா!: ஊடகங்களின் மழுப்பல் – பன்சால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றன[6], பிறகு அறிவித்தது ராஜினாமா என்றன. சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் ஊழல் மந்திரி பன்சால் தூக்கப்பட்டார்[7], கோணியில் போடப்பட்டார்[8], தூக்கியெறியப்பட்டார், என்றெல்லாம் ஆங்கிலத்தில் வர்ணித்துக் கொண்டிருந்தன. ஆனால், பிறகோ அல்லது அதே செய்தியிலோ, பன்சால் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யத் தூண்டப்பட்டார், செய்து விட்டார் என்று கூட்டிச் சொல்லின[9].

பதவிநீக்கம்செய்தபிறகு, அலுவகத்திற்குவந்து, கோப்புகளில்கையெழுத்துப்போட்டுசென்றாராம்: பதவி நீக்கம் செய்தபிறகு, அலுவகத்திற்கு வந்து, கோப்புகளில் கையெழுத்துப் போட்டு சென்றாராம்! அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்தாராம், பன்சால் வெள்ளிக்கிழமையன்று திடீரென வந்தாராம், பரபரப்பு ஏற்பட்டதாம், அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டாராம், பைசல் செய்தாராம், பின்னர் பதவியை ராஜினாமா செய்தாராம்[10]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[11]. அப்படியென்றால், முந்தய நாட்கள் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார் என்றாகிறது. பிறகு, இதெல்லாம், சொல்லிவைத்து தானே அரங்கேற்றம் செய்கிறார்கள்.

லஞ்சத்தைவிதைத்துஅறுவடைசெய்வதில்கில்லாடியானகுடும்பம்: பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலியவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து அந்த பணத்தை வைத்துக் கொண்டு கம்பெனிகளை உருவாக்கி, அதற்கும், கடன் என்ற பெயரில், வங்கிகளினின்று பணம் வாங்கி, அப்பணத்தை மறுபடியும் மறுமகன் மூலமாக பன்சாலுக்கே கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, லஞ்சத்தை விதைத்து லஞ்சத்தை அறுவடை செய்து, லஞ்சத்தை முதலீட்டாக்கி, லஞ்சத்தை முதலீட்டாக மாற்றி, லஞ்சத்தை லாபமாக பெறும் கில்லாடியான குடும்பமாக பன்சால் குடும்பம் இருக்கிறது. அது கீழ்கண்ட கம்பெனிகளை வைத்துக் கொண்டு, லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது.

  1. தியோன் பார்மேசுகல்ஸ் லிமிடெட் (Theon Pharmaceuticals Limited),
  2. ஐவா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Iva Healthcare Private Limited),
  3. சிசிஸ் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் (Isis Packaging Pvt Ltd) மற்றும்
  4. பன்சி ரௌனக் எனர்ஜி குரூப் லிமிடெட் (Bansi Raunaq Energy group Limited).

நிலமாகக்கொடுக்கப்படும் / பெறப்படும்லஞ்சம்: குறிப்பிட்ட நபர், தனது 21.26 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 30,000/- தருவதாக ஒப்பொக்கொண்டு, குத்தகைக்கு என்று மித்தன் லால் சிங்க்லா (விஜய்சிங்க்லாவின் தந்தை) மற்றும் இத்ர உறவினர்களுக்கு எழுதி வைத்தார். ஆனால், பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது, “33 வருடங்கள்” என்பது “99 வருடங்கள்” என்று மாற்றப்பட்டிருந்தது கண்டு திகைத்துப் போய் விட்டார். வெளியே சொல்ல பயந்ததால், யாரோ ஒருவர் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார். அதாவது, “33 வருடங்கள்” என்பதை “99 வருடங்கள்” என்று ஆவணங்களில் திருத்தியிருக்கிறார்கள் என்பது திண்ணம்[12].

சோனியா, மன்மோஹன்சிங், ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[13] பலே, பலே!

© வேதபிரகாஷ்

11-05-2013


[1] மாட்டுத்தீவனத்திலேயே கோடிகளை அள்ளிய, இவருக்கு காங்கிரஸ் இப்பதவியை அளித்தது. கேட்க வேண்டுமா, பீகாரிகள் தேர்வு எழுத இந்தியா முழுவதும் ரெயில்களில் சென்று வர பாஸ் கொடுத்தாராம், இன்று அரசு அலுவலகங்களில் பீகாரிகள் பெரும்பாலும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

[2] மம்தாவின் ஊழல் மேற்கு வங்காள சிட்டுக் கம்பெனி ஊழலில் நாறுகிறது. அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது, அதாவது, பணம் போட்ட ஏழை மக்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இருப்பினும், மம்தாவிற்கு இரக்கமே இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டு வருகிறார்.

[3] “அந்நியன்” படத்தில் வர்வது போன்று, எத்தனை “அம்பிகள்” வந்தாலும், இந்த ஊழல் கொம்பன்களை ஒன்றும் செய்யமுடியாது, இந்த விஷயத்தில் தான், சோனியா அனைவரையும் மிஞ்சிவிட்டார் எனலாம்.

[6] PK Bansal sacked after TIMES NOW expose10 May 2013, 2040 hrs IST, TIMES NOW — Union Railway Minister Pawan Kumar Bansal’s nephew arrest – was just the tip of the iceberg – TIMES NOW’s investigation team, knew there was much more to Railgate – slowly but steadily our investigations led us to Bansal’s doorstep. First we – exposed the meteoric rise of Bansal family fortunes along with his political ascent. Then – after thorough research and painstaking investigation – we raised a clear case of conflict of interest against the Railway Minister. And what seems to have sealed Bansal’s fate, is his first, clear, direct link to Railgate exposed first on TIME NOW . By Friday morning – TIMES NOW’s investigation team laying its hands on the critical details of super explosive tapes – which contained sensational details of Minister’s direct link. And within minutes of TIMES NOW’s expose, Sonia Gandhi heading towards Prime Minister’s residence – the decision was conveyed – Bansal had to go.

http://www.timesnow.tv/INDIA/PK-Bansal-sacked-after-TIMES-NOW-expose/videoshow/4427166.cms

[9] Railway Minister Pawan Kumar Bansal and Law Minister Ashwani Kumar were on Friday night forced to resign by the Congress and the Prime Minister as the government’s image continued to take a severe battering over allegations of corruption and interference with graft probe.

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (1)

மே 10, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம்!

03-05-2013 (வெள்ளிக்கிழமை): மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மறுமகனான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து[1], விசாரணை மற்றும் நடவடிக்கையில், சிபிஐயினால் கைது செய்யப்பட்டார். பிறகு, பன்ஸாலின் அந்தரங்க செயலர், ராஹுல் பண்டாரி சிபிஐயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட[2]. ஆனால், ஞாயிற்றுக் கிழமை கர்நாடகத்தில் தேர்தல் மற்றும் புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை என்பதனால், சோனியா ராஜினாமா நாடகத்தை ஒத்தி வைத்தார்.

04-05-2013 (சனிக்கிழமை): விஜய் சிங்கலாவின் ஊழல் வலை பெரிதாகியது. பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலிடயவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து வந்ததை விவரம் அறிந்து சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது.

  • விஜய் சிங்க்லா – Vijay Singla – Nephew of railway minister [Pawan Kumar Bansal]
  • மஹேஸ்குமார், ரெயில்வே வாரியம், உறுப்பினர் – Mahesh Kumar: Member Railway Board
  • நாராயணா ராம் மஞ்சுநாத், ஜி.ஜி.டிரானிக்ஸ் கம்பெனியின் எம்.டி – Narayana Rao Manjunath : MD of G.G Tronics
  • சந்தீப் கோயல், சிங்க்லாவின் நண்பர் – Sandeep Goyal: Singla’s friend
  • ராஹுல் யாதவ், மஞ்சுநாத்தின் கூட்டாளி – Rahul Yadav: Associate of Manjunath
  • சமீர் சந்திர் – Samir Sandhir
  • சுஸில் தாகா – Sushil Daga

மேற்கொண்ட கூட்டம், லஞ்சத்தை பணமாகவும், நிலமாகவும் பெற்று வந்தது மெய்ப்பிக்கப்பட்டது.

05-05-2013 (ஞாயிற்றுக் கிழமை): கர்நாடகத்தில் ஓட்டுப் பதிவு என்பதால், சோனியா காங்கிரஸ் அடக்கி வாசித்தது. பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டது[3].

06-05-2013 (திங்கட் கிழமை): ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை கவனித்தபோது, அமைச்சரின் பெயர் பலமுறை உபயோகப்படுத்தப் பட்டது தெரிய வந்தது[4]. இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.

07-05-2013 (செவ்வாய் கிழமை): சுனில் குமார் குப்தா என்ற தமது குடும்ப கணக்காளர், கனரா வங்கியின் இயக்குனராக 2007ல் நியமிக்கப் பட்டார். அப்பொழுது பன்ஸால், இணை நிதி அமைச்சராக இருந்தார்[5]. 2010ல் சுனில் குமார் குப்தாஆந்த வங்கியின் பங்குதாரர் ஆனார். தியோன் பார்மேசுடிகல்ஸ் லிமிடெட் என்ற மந்திரியின் கம்பெனிக்கு ரூ.20 கோடி கடன் உடனடியாக வழங்கப்பட்டது[6].

இவையெல்லாம் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளன.

08-05-2013 (புதன் கிழமை): கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதை வைத்துக் கொண்டு, காங்கிரஸ் ஊடக தொடர்பாளர்கள் – மணி அங்கர் ஐயர், மணீஸ் திவாரி, அபிஷேக் சிங்வி முதலியோர் – யாரும் ராஜினாமா செய்யத்தேவையில்லை என்று பேசினர்[7].

09-05-2013 (வியாழன் கிழமை): நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய சட்டமந்திரி அஸ்வனி குமார், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் ஆகியோரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்குவதற்காக அவர்கள் இருவரையும் நீக்க வேண்டும் என்று சோனியா காந்தி முடிவு செய்தார். ஆனால், இந்த கருத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் மாறுபட்டிருந்தார். எனவே, அவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

10-05-2013 (வெள்ளி கிழமை): இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இரண்டு மந்திரிகள் மீதான புகார்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். பின்னர் “பன்சாலை ராஜினாமா செய்யும்படி கூறுங்கள்” என்று பிரதமரிடம் சோனியா வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களில், பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்த பன்சால், இன்று திடீரென வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டு, பைசல் செய்துள்ளார். பின்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்[8]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[9].

கர்நாடகநாடகமும்ஆரம்பிக்கிறது: திடீர் வெற்றியினால், கர்நாடகத்தில் முதல் அமைச்சர் ஆக நான் – நீ என்ற போட்டி ஆரம்பித்தது. சித்தராமையா (பிசி) மற்றும் மல்லிகார்ஜுன கார்கே (எஸ்.சி) இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. ஜாதிரீதியிலும் பேச்சு வளர்ந்தது. ஜாதியை வைத்து தேர்தல் நடத்தியதால், காங்கிரஸுக்கு தர்ம சங்கடம் ஆயிற்று[10]. இங்குதான், சோனியா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். ஒன்று, பன்ஸாலை தூக்கி, மல்லிகார்ஜுன கார்கேவை போட்டுள்ளார். இதனால், புதிய ரெயில்வே மந்திரியாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் பாட்டை ஆரம்பித்துள்ளது.  ஆனால், இன்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது என்றெல்லாம் கதை விட ஆரம்பித்துள்ளன. பெங்களூடரில் குண்டு வெடித்தது[11] பற்றி அனைவரும் மறந்தே போய் விட்டார்கள்[12]! தேர்தலுக்காக, ஆர்.எஸ்.எஸ் தான் வைத்தது என்று காங்கிரஸ்காரர்கள் கூறினார்கள்[13]. இப்பொழுது காங்கிரஸ் வென்றதால், காங்கிரஸ் வைத்தது என்று சொல்லலாமா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[2] Bansal’s woes mounted when the CBI questioned his private secretary Rahul Bhandari, a 1997-batch IAS officer from Punjab cadre, in connection with the alleged Rs 10 crore bribery scandal.

[4] he minister’s name has also allegedly been mentioned in several of over a 1000 phone calls that the CBI has tracked over the last few months in its investigation of the case.

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

[5] New information and documents available with NDTV also raise questions on whether Mr Bansal appointed his family accountant, Sunil Kumar Gupta, as a director of a public sector bank in 2007, when he was the Minister of State for Finance (Expenditure, Banking and Insurance).

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

[6] In November 2007, Mr Gupta, who admits to working for the Bansal family in the 80s, was nominated by the government as a Part Time “Non Official Director” in state-owned Canara Bank. In July 2010, he was elevated as a Shareholder Director on the bank’s board. Four months later, the bank sanctioned a loan of almost Rs. 20 crore to Theon Pharmaceuticals Limited, a company started by the Bansal family in 2005.

http://www.ndtv.com/article/cheat-sheet/why-the-cbi-might-interrogate-railway-minister-pawan-kumar-bansal-10-point-cheat-sheet-365245

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013