முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)
07-09-2013 (சனிக்கிழமை): பாதிக்கப்பட்ட ஜட் என்கின்ற ஜாதி மக்கள் வழக்கம் போல பஞ்சாயத்து கூட்டினர். தொடர்ந்து அவர்களது பெண்கள் முஸ்லிம்களால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்வது போன்ற நிகழ்சிகள் நடந்து வருவதால், “பேடி பசாவோ, பஹு பசாவோ அந்தோலன்” [Beti Bachao Bahoo Bachao panchayat] “மகளை காப்பாற்றுங்கள், மறுமகளை காப்பாற்றுங்கள்” என்று பஞ்சாயத்தைக் கூட்டினர். அது நிச்சயமாக தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், (முஸ்லிம்கள்) மஹாபஞ்சாயத்திற்கு செல்பவர்கள் தாக்கப்பட்டனர்[1]. அதாவது, இந்துக்களை முஸ்லிம்கள் தாக்குகின்றனர் என்றகிறது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, முன்னர் வால்மீகி சமுதாயத்தினருக்கும், முஸ்லிம்ளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறும் தொடர்பு படுத்தப் படுகிறது[2]. இதற்கும் இப்பொழுதைய பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்று ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இரு கும்பல்களும் எரியூட்டல் போன்ற காரியங்களில் இறங்கியதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த இடத்தை வீடியோ எடுக்க முயற்சித்தபோது ஐ.பி.ஏன்..7 டிவி.செனலின் நிருபர் ராஜேஸ் வர்மா கொல்லப்பட்டார். போலீசாரால் அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர் இஸ்ரர் வகீல் என்பவரும் கொல்லப்பட்டார்[3]. இது தவிர மற்றவர் 9 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ராணுவம் அழைக்கப்பட்டது. மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
08-09-2013 (ஞாயிறு): ஆனால் கலவரம் நடந்து கொண்டிருந்தது. முசபர்நகரின் கொத்வால், நயீ மண்டி முதலிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தப்பட்டது. ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. உள்ளூர் போலீசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றாகிறது.
09—09-2013 (திங்கள்): இறப்புகள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் போர்க்களம்போல காட்சியளிக்கின்றன. கலவரம் மீண்டும் ஏற்படகூடும் என்ற பீதியில் பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி விட்டனர்[4]. இதனால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு 10–க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[5]. சுமார் 20 பேரை காணவில்லை என்று உறவினர்கள் தேடி வருகிறார்கள். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சில கிராம மக்கள் போலீஸ் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு சட்டம்-ஒழுங்கு நிலை முழுவதுமாக சீர்குலைந்ததால், மாநில கவர்னர் பி.எல். ஜோஷி மத்திய அரசிடம் மாநில அரசு தனது நிர்வாகத்தன்மை முதலியவற்றை இழந்தது, கலவரங்களை அடக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
கலவரம்நடந்தபிறகுமேற்கொண்டநடவடிக்கைகள்: இதனால், வேறு வழியின்றி, உயர் பொலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் அந்த பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டது. மன்மோஹன் சிங் அகிலேஷ் யாதவுடன் போனில் கலவரத்தை அடக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பேசினார். மத்திய உள்துறை செயலாளர், கேபினெட் செயலாளர் மற்றும் புலனாய்வுத் துறையுடன், முசபர்நகர் நிலவரம் பற்றி சந்தித்து பேசினர். இதுதவிட பேஸ்புக் தளமும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு, சமஜ்வாடி அரசை நீக்க விரும்பவில்லை என்றாகிறது. இது காங்கிரஸ்- சமஜ்வாடி கட்சிகளின் கூட்டைத்தான் காண்பிக்கின்றது.
பாஜகவின்மீதுபழிமற்றும்நான்குஎம்.எல்.ஏக்கள்மீதுஎப்.ஐ.ஆர்: இதற்கிடையே முசாபர் நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை பா.ஜ.க. தூண்டி விட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது உத்தரவின் பேரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குகுமசிங், சுரேஷ் ரானா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. ஒப்புக்கு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பெயர் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், கலவரப்பகுதியில் ஆய்வு நடத்த 3 பேர் குழுவை அனுப்பி உள்ளார். ஆனால், முச்லிம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலவ்சரம் தூன்டிய விதத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடரவில்லை.
பாரதீயஜனதா, பகுஜன்சமாஜ்கட்சிகள்சமஜ்வாடிகட்சிமீதுகுற்றம்சாட்டின: முசாபர் நகர் மாவட்டத்தில் அடிக்கடி சாதி கலவரம் ஏற்பட்டபடி உள்ளது. எனவே அதை தடுக்க உத்தரபிரதேச அரசு தவறி விட்டதாக பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அகிலேஷ் யாதவ் அசட்டையாக இருப்பதாகவும், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. மாயாவதி பிஜேபிதான் காரணம் என்று சமஜ்வாதி கட்சி கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்[7], ஏனென்றால், ஆகஸ்ட் 27ல் நடந்த நிகழ்ச்சியிலிருந்துதான் இவை ஆரம்பித்துள்ளன என்பது எலோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்[8].
வழக்கம்போலஅதிரடிநடவடிக்கைகள், நிதியுதவிமுதலியவை: மத்திய ரிசர்வ் போலீசாரும் 1200 அதிரடிப் படை வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் முசாபர்நகர் எல்லைகளில் தடுப்பு அரண் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர உத்தரபிரதேச – உத்தரகாண்ட் எல்லை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்துக்குள் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதல் – மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். பலியான பத்திரிகையாளர் ராஜேஸ் வர்மா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது[9].
அகிலேஷ்தந்தைவழிபின்பற்றுகிறார்போலிருக்கிறது – அப்பாமுல்லாஎன்றால்மகன்மௌலானா: மாநில முதலமைச்சர் எனும் போது, இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று பாராமல் செயல்படவேண்டும். ஆனால், அகிலேஷ் யாதவ், முஸ்லிம் குல்லா அணிந்து கொண்டு, இந்த வேளையிலும், அடிப்படைவாதி முஸ்லிமான ஆஸம் கானுடன் சேர்ந்து கொண்டு உலவி வருகிறார். இது இந்துக்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தாது. இப்பொழுது, இந்து-முஸ்லிம்கலவரம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பிரிந்துதான் ஓட்டளிப்பார்கள். அப்படியென்றால், அடுத்தது, ஒரு ஜாதி கலவரத்தை ஏற்படுத்தினால், இந்து ஓட்டுகள் சிதறிவிடும் பிறகு, ஒட்டு மொத்த 30% முஸ்லிம் ஓட்டு எந்த கட்சிற்குக் கிடைக்கிறதோ, அக்கட்சிதான் ஜெயிக்கும். அதாவது, சமஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும். இவையெல்லாம், சோனியா இல்லாதபோது, நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
வேதபிரகாஷ்
© 13-09-2013
[1] http://www.indiatvnews.com/news/india/timeline-of-muzaffarnagar-riots-eve-teasing-incident-led-to-mur-27571.html
[2] On Saturday, police and the district administration asserted that text messages were sent sent to both communities about incidents that had never taken place.” “We received calls from several people asking about certain stone-pelting incidents and killings that never occurred. It seems people were being egged on,” an officer said. Earlier this week, Ehsan, a resident of Kalander Shah, was killed in Shamli after he picked up a fight with Nandu, a Valmiki who had allegedly parked his garbage cart outside Ehsan’s house. “They had an argument over the garbage cart which led to a scuffle. A few hours later, Vamikis stoned a Muslim’s car. Matters flared up and Ehsan was shot dead. At least three houses were torched,” the officer said. He added that communal tension in Shamli had increased after the Kawaal incident. DGP Deo Raj Nagar said the government had formed a Special Task Force to investigate the Kawaal incident. “Some elements are trying to create communal tension in the region. The STF will help normalise the situation. No one will be allowed to breach peace in the area,” he said.
[3] A freelance journalist associated with IBN7, Rajesh Verma, was shot dead in the Kotwali police station area. In another incident of violence, a photographer, Israr, who was hired by the police, was beaten to death in Thana Sikhera area. Both the media personnel were killed while covering the clashes. Read more at: http://www.firstpost.com/india/ibn7-journalist-killed-in-up-communal-riots-army-clamps-curfew-1092877.html?utm_source=ref_article
[4] http://www.indianexpress.com/news/riothit-villagers-fleeing-homes-targeted-as-toll-in-muzaffarnagar-reaches-31/1166826/
[7] . Mayawati also refuted the charge of the SP government that the BJP was behind the riots, and said that she did not buy this theory as the matter escalated from a trivial case on August 27. “The state government is trying to hide behind falsehood and trying to cover up its incompetence,” she added.