http://www.maalaimalar.com/2010/03/02151522/robbery.html
தாம்பரம்,மார்ச்.2- 2010:பல்லாவரம் பஜார் ரோட்டில் ஜாமியா மசூதி உள்ளது. இங்கு கட்டிட நிதிக்காக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு நயினா அகமது என்பவர் மசூதியை பூட்டி விட்டு சென்றார். இன்று காலையில் பார்த்த போது மசூதிகதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
அதில் சுமார் 15 ஆயிரம் பணம் இருக்கலாம். என்று கூறப்படுகிறது. தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்று கை ரேகைகளை பதிவு செய்து விசாரனை நடத்தினார்கள். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இவர்கள் செக்யூலார் திருடர்களா அல்லது கம்யூனல் திருடர்களா?