Archive for the ‘கருத்து சுதந்திரம்’ Category

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

ஏப்ரல் 14, 2013

சவுதி அரேபிய இந்திய வேலையாட்கள்: இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப்பிரச்சினை உருவாக்கப்படுகின்றதா?

Saudi Arabia and its flag

பிரச்சார ரீதியில் முன்வைக்கப்படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

  • ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
  • கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[1].

என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:

  • சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[2].
  • அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[3]
  • வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[4]
  • கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவிமையம்[5]
  • சவுதியில் வேலை இழந்தவர்களுக்கு இந்தியாவில் வேலை.

என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்.

Saudi royal life

இலங்கைப் பிரச்சினை போன்று கேரளப் பிரச்சினை உருவாக்கப்படுதல்: இலங்கை விஷயத்தில், “தமிழர்-முஸ்லீம்”, “இலங்கைத்தமிழர்-தமிழ் முஸ்லீம்கள்” என்றெல்லாம் பேசியே, மக்களை அரசியல்வாதிகள்[6], ஊடகங்கள்[7] மற்ற நிபுணர்கள் ஏமாற்றிவிட்டனர். இலங்கையில் இப்பொழுதும் “தமிழர்” பிரச்சினை எப்படி பேசப்படுகிறது, “முஸ்லீம்” பிரச்சினை எப்படி அணுகப்படுகிறது என்பதனைப் பார்க்கலாம். முஸ்லீம்கள் அதனை சாமர்த்தியமாக, தமக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். தமிழர்கள் சென்னையில் / தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டு “ஆர்பாட்டம்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் சவுதி அரேபியா வேலைப்பிரிப்புக் கொள்கை விஷயத்தில் “கேரளத்தர்”, “மலையாளிகள்” என்று பேசிக் குறிப்பிடப் படுகின்றனர். அங்கு “இந்தியர்” என்று குறிப்பிடுவதைவிட, இப்படி காட்டிக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

Saudi women

சவுதி அரேபியாவில் பிரச்சினை என்ன?: சவுதி அரேபிய நாட்டில், புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப்படி, அங்கு சிறிய தொழில்கள் செய்து வரும் இந்தியர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது[8] என்று தமிழ் நாளிதழ்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், “இதுகுறித்து கவலைப்படவேண்டாம்’ என, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர், வயலார் ரவி தெரிவித்தார் என்றும் கூறுகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்று அலசாமல், நுனிபுல் மேய்கின்ற மாதிரி கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. நாத்திகம் பேசும் “விடுதலை” கூட, மற்றவர்கள் பிரசுரித்துள்ளதை அப்படியே போட்டுள்ளது[9]. “ஹிந்தி படித்தால் வேலைக் கிடைக்கும் என்றால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் ஏன்?”, என்று பகுத்தறிவோடு கேட்பது போல, இஸ்லாமிய நாட்டில் எல்லாம் கிடைக்கும் என்றால் ஏன் வேலை கிடைப்பதில்லை என்றோ, எல்லொரும் சமம் ஏன் முஸ்லீம்களுக்கே வேலை கொடுக்காமல் விரட்டுகிறார்கள் என்றோ கேள்விகள் கேட்கவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸவாதத்தின் தன்மை, மேன்மை மற்றும் மகத்துவம் போலும்!

Saudi women protesting

சவுதிமயமாக்கல் என்றால் என்ன: உண்மையில் சவுதி மயமாக்கல் என்றுதான் சவுதி அரசு பேசி வருகின்றது. மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தும், தொடரும் இஸ்லாமிய நாடுகளில் சவுதியும் ஒன்று. அக்கால அரசர்கள் போலத்தான் இன்றும் சகவாசிகளாக எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் என்றுதான் வாழ்கிறாற்கள். அந்நிலையில், மென்பொருள்-வன்பொருள் என்றமுறையில், அறிவுசார்ந்த-உடல்சார்ந்த உ௳ஐப்புகளுக்கு அவர்களுக்கு ஊழியர்கள்-வேலையாட்கள் தேவைப்பட்டது. அக்காலமாக இருந்தால், வேண்டியவர்களை விலை கொடுத்து வாங்கி, அடிமைகளாக வேலைக்கு வைத்திருப்பர். இப்பொழுது, காசு கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்ற இஸ்லாமிய நாடுகளில் புரட்சி என்ற பெயரில் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு வருகிறது. இருப்பினும் மெக்கா-மெதினா அல்லது மக்கா-மதினா தங்களது கட்டுக் காப்பில் உள்ளதால், தான்தான் இஸ்லாமியத்தைக் காத்து வருவதில் முதலில் இருக்கிறேன் என்றும் காட்டிக் கொண்டு வருகிறது. இதனை இரான் போன்ற நாடுகள் மறுத்து வருவது வேறு விஷயம். ஆகவே, உள்ளூர்வாசிகளுக்குத்தான் வேலை என்பது “சவுதிமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வருகிறது, அதன்படி தான் “நிகாதத்” என்ற இஸ்லாமிய சட்டம் எடுத்துவரப்பட்டுள்ளது.

Saudi worker

இஸ்லாம் மயமாக்கல் என்றால் என்ன: சவுதி மயமாக்கல் என்பது இஸ்லாம் மயமாக்கல் தான், எனெனினும், முஸ்லீம்களும் அதில் பாதிக்கப்பட்டுள்ளானெரே எனலாம். அங்குதான், சுத்த-ஆசார இஸ்லாமிஸம் மற்ரும் வாஹாபியிஸம் வருகிறது. குரானை, அல்லாவை, முஹம்மது நபியை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் “முஸ்லீம்கள்” தான் என்றாலும், எல்லா முஸ்லீம்களும் சுத்தமான முஸ்லீம்கள் ஆகிவிடமுடியாது. “ஹஜ்ஜின்” போது, எப்படி பலநாட்டு முஸ்லீம்கள் பலவிதமாக் கருதப் படுகின்றனரோ அதுபோலத்தான். சவுதிமயமாக்கத்தில், சவுதி முஸ்லீம் மற்ற முஸ்லீம்களைவிட உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். அதனால், இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்படுகின்றாற்கள். நிறங்கள் எல்லாம் ஒரு மொன்னோடிதான். மக்கா-மதினா நகரங்களில் நுழைய அளிக்கப்படும் நுழைவு சீட்டு, பாஸ்போர்ட், பிரத்யேக அனுமதிசீட்டு போல அவை மாற்றப்படும்.

Saudi workerker striking

இலங்கை முஸ்லீம்கள் தமிழில் இணைத்தளத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது: இலங்கை முஸ்லீம்கள், ஊடகங்கள் முன்னர் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் குறிப்பிட்டப்படி, ஒட்டுமொத்தமாக, தமிழ் பேசும் இலங்கை மக்களின் நலனிற்காகப் பாடுபடவில்லை. “முஸ்லீம்கள்” என்று தான் செயல்பட்டு, அரசுடன் இணைந்து பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டனர். இப்பொழுதும், தங்கள் நாட்டுப் பிரச்சினையை, பொதுப்பிரச்சினைப் போன்று இணைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில், சவுதி அரேபியர்கள் “முஸ்லீம்கள்” முஸ்லீம்களாக இருந்தாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அது என்ன என்பதனை வெளிப்படுத்த வேண்டும். அப்படியென்ன முஸ்லீம்களிடத்தில் வித்தியாசம் உள்ளது என்பதனை தெளிவாக எடுத்துரைக்கவேண்டும்.

வேதபிரகாஷ்

14-04-2013


[1] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.

[4] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=681845

[5] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

ஓகஸ்ட் 20, 2012

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].

The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[2]
The country belonged to all and people are free to live in any part of the country[3]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[4]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[5]

அதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்?

அவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?

இருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே?

ஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை?

சோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்?


கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

ஓகஸ்ட் 17, 2012

கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

காங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சேர்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

மின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை

வடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்,  கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம்! வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அத்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

கலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.

ஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.  வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.

பெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே?

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.  இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா? ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள்? முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே? கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே? அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.

என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?

ஜனவரி 26, 2012

என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?

நரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் கொண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மீது நில-அபகரிப்பு புகார்: சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மற்றும் சிலர் மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை நகர போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது[7]:

கே.சி.பழனிச்சாமி, அதிமுக முன்னாள் எம்.பி. புகார்: “நான் கோவை நகரில் வசிக்கிறேன். அதிமுகவில் திருச்செங்கோடு எம்.பி., காங்கேயம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனக்கு கோவையில் சேரன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளது. இது சேரன் என்ட்ரபிரைசஸ் (பி) லிமிடெட் (சிஇபிஎல்) ஆகும். கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நடத்தும், ‘இந்து’ நாளிதழின் துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ) லிமிடெட் (எஸ்பிஐஎல்) ஆகும். இந்த நிறுவனத்திற்கு சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 400 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கோல்ப் கோர்ஸ் உருவாக இருந்தது. இதை எனது சிஇபிஎல்க்கு 2004ம் ஆண்டரூ.30 கோடிக்கு விற்றனர். இதன் மதிப்பு 2007ம் ஆண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்தது.

நிலமதிப்பு உயர்ந்ததால் திரும்ப கேட்ட ராம் மற்றும் ரங்கராஜன்: “இந்நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததை அறிந்த கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனம், அரசியல் ஆதரவுடன் ரூ.30 கோடிக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த நிலத்தை நான் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டேன். இந்நிலையில், கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை, அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள எனது சேரன் டவர்ஸ் அலுவலகத்திற்கு சோதனை என்ற பெயரில் போலீசாரை வைத்து மிரட்டினர். அதன்பின் வந்த அவர்களது ஆட்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேரன் டவர்சில் உள்ள சட்டப்பிரிவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு தந்தி அனுப்பினார். இந்த அராஜக செயலை சென்னையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து 2008ம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த தேதி வரை நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து நாளிதழ் மீது வழக்கு: தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது[8]. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.

ராம் பதவி விலகல்: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்[9]. இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்[10]. இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பச் சண்டை, பிரச்சினைகள்; கஸ்தூரி அண்ட் சன்ஸ் 12 அங்கத்தினர் கொண்ட அளுமைக்குழுக் கொண்டது[11]. கஸ்தூரி ஐயங்காரின் குடும்பத்தாரான, இவகர்ளில் நான்கு பேர் ஒன்று விட்ட சகோதரர்கள் ஆவார்கள் –

  1. ஜி. நரசிம்மன், இவர் என். ராம் என். ரவி, என். முரளி முதலியோர்களின் தகப்பனார்.
  2. எஸ். பார்த்தசாரதி – மாலினி பார்த்தசாரதி, நிர்மலா நரசிம்மன், நளினி கிருஷ்ணன் முதலியோர்களின் தகப்பனார்.
  3. எஸ். ரஙராஜன் – ரமேஷ் ரங்கராஜன், விஜடயா அருண், அகிலா ஐயங்கார் முதலியோர்களின் தகப்பனார்.
  4. ஜீ. கஸ்தூரி – கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ச்மி ஶ்ரீநாத் முதலியோர்களின் தகப்பனார்.

பொதுவாக, ராமின் போக்கு குடும்பத்தாருக்கு பிடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ராம் –

  • பலமுறை திருமணம் செய்து கொண்டது (சூஸன்[12] முதல் மனைவி, மரியம் சாண்டி இரன்டாவது மனைவி),
  • விவாகரத்து செய்தது (சூஸனை விவாகரத்து செய்து விட்டு மரியம் சாண்டியை[13] மணந்து கொண்டது),
  • முந்தைய மனைவியர் வழக்குகள் போட்டது, சொத்துக்கள் கேட்டது (ஆக்ஸ்போர்ட் உனிவர்சிடி பிரஸ் கட்டிடம், நிலத்தை சூஸன் கேட்டது),
  • இடது சாரி சித்தாந்தவாதியாக இருந்து கொண்டு செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக சீனாவிற்கு ஆதரவாக எழுதியது[14]),
  • திமுகவிற்கு சாதாகமாக இருந்து வந்தது (கனிமொழி ஆசிரியக்குழுமத்தில் இருந்தது, ஜி. ராமஜெயம் இந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தது முதலியன),
  • ஊழலில் ஜெயிலில் இருக்கும் ஏ. ராஜாவிற்கு அளவிற்கு அதிகமாக ஆதரவாக செய்திகளை வெளியிட்டது (திமுக, கனிமொழி உந்துதல் பேராக),
  • அதிக ஆதாரங்கள் இருந்தாலும் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான், எடீயூரியப்பா போன்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது.

என்று விவாதத்தில் வெளிவந்தது[15]. இப்படி ஒருவேளை ஆளும் கட்சி, எதிராக திரும்பியுள்ளாதால், பெருத்த அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம்.

2ஜி விவகாரத்தில் ராம் திமுகவை / மைத்துனர் தயாநிதி மாறனை ஆதரிப்பதேன்? ரமேஷ் ரங்கராஜனின் மனைவி மற்றும் தயாநிதி மாறனின் மனைவியும் (பிரியா) சகோதரிகள். அதாவது பிரியா ரன்கராஜனின் மகள். இதனால், மைத்துனருக்கு உதவுவதில் ரமேஷ் மற்றும் ராம் ஈடுபடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதா குறைக்கு சிதம்பரம் வேறு பால்ய நண்பவர்கள், ஆனால் சிதம்பரமும் அக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். யார் விட்டாலும், சுப்ரமணி சுவாமி விடுவதாக இல்லை. இந்நிலையில் தான் இந்த இருவர் மீதும் அதிமுக முன்னாள் எம்.பி புகார் கொடுத்துள்ளார்.

வேதபிரகாஷ்

26-01-2012


[1] ராமஜன்ம பூமி விவகாரத்தில், பலதடவை இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் தலையங்களில் எழுதி வெளியிட்டு வந்த போது, பலர், அதிலும் பெரியவர்கள், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் முதலியோர்கள், அவற்றை தவறு என்று எடுத்துக் காட்டிக் கூட அவற்றை பிரசுரிக்காமல், தொடர்ந்து சித்தாந்தக் கட்டுக்கதைகளை சரித்திரம் என்ற போர்வையில் பரப்பி வந்த போது, பாரம்பரியமாக இந்துவை வாசித்து வந்த பெரியோர்கள் உட்பட பலர், அதை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கூட, தனது ஆசிரிய-தலையங்க நடுநிலை காக்க முடியாமல், சித்தாந்த ரீதியிலேயே செயல்பட்டு வந்ததினால், குடும்பத்திலேயே அதிருப்தி ஏற்பட்டது. அதற்குள், இந்துவின் சுற்றறெண்ணிக்கையும் சரிய ஆரம்பித்தது

[2] N. Ram, mate, comrade, editor of The Hindu, the prolix Mahadev of rightpolitic.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[3]  Justice K. Chandru has always been a rebel with a cause. In his college days, he ran the Students’ Socialist Forum (SSF) before joining the CPI(M) where he and his friends were absorbed into the Students Federation of India (SFI), CPM’s student wing.

http://www.theweekendleader.com/Heroism/553/No,-My-lord.html.

[4] பி. சிதம்பரம், வழக்கறிஞர், சட்ட ஆலோசனையாளர், மத்திய மந்திரி என்று பல அவதாரங்களில் உள்ளவர்.

[5] On to the elite Madras Christian College where he meets N. Ram and P. Chidambaram. Spark merges with spark and makes a pool of light. It’s a journal called The Radical Review. It has things to sustain it — there’s the affluence of Ram and Chidambaram, there’s the ferment over America’s bull-headed misadventure in Vietnam. It’s a time heady with the air of resistance. Fidel Castro has repelled the Bay of Pigs; the CIA explosive in his cigar has turned a damp squib.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[6] Did N. Ram formally hook Karat with the CPM? Nobody’s telling. It’s true, though, that at the time, Ram had known Sundaraiyya better and longer than Karat. And he had a good sense of where Karat’s heart lay, what promise he held. Future general secretary of the party? Threeand- a-half decades is a long and risky period to lay bets over in politics, but there are those who never doubted where Karat would end up. Says a contemporary in the party, “We used to joke about it with him, sure, but everybody knew it was only half a joke.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[11] Kasturi & Sons has 12 board members, and roughly 50 shareholders – all of them members of the Kasturi Ranga Iyengar family. Each of the four cousins, who together control the entire equity, has three members on the board. The owner cousins are G Narasimhan (father of N Ram, N Ravi, N Murali), S Parthasarathy (father of Malini Parthasarathy, Nirmala Lakshman and Nalini Krishnan), S Rangarajan (father of Ramesh Rangarajan, Vijaya Arun and Akila Iyengar), and G Kasturi (father of K Balaji, K Venugopal and Lakshmi Srinath).

[12] Susan was an English woman who came to south India as a research student. Like Ram, she was (and remains) an atheist with a Left perspective on politics. After their marriage, Susan worked as a teacher, a freelance journalist, an editor for Oxford University press publications in India and a television presenter. As a husband and wife team, both published the first volume of a biography on R.K.Narayan, the eminent Indian writer. Their daughter Vidya Ram, herself a journalist, was a Journalism topper at Columbia University in New York and even won a Pulitzer fellowship for Journalism.

[13] Mariam Chandy, who is the founder and Managing Director of TNQ Books and Journals (an ePublishing company that works on the leading scientific journals of the world).

[14] Twenty years later, another senior left-wing editor has provided a willing whitewash of a totalitarian regime. The cover story in the latest issue of the Chennai fortnightly, Frontline, written by N. Ram, provides an extended and lavishly illustrated brief for the Chinese occupation of that country. The Chinese, claims Ram, have brought hospitals, roads and schools to a previously deprived land. He minimizes the attacks on Tibetan cultural institutions and religious beliefs that the Chinese have so demonstrably carried out.

http://www.telegraphindia.com/1000908/editoria.htm#head3

[15] Ravi has also alleged that there have been distortions creeping into the “editorial framework” of the paper. “Among the issues that I have raised with the other directors during the discussions in the Board and outside are: the unmerited coverage of certain political favourites on specific directions; excessive coverage of the activities of the Left and some of its leaders; for reasons that are bound to emerge sooner rather than later, turning the newspaper into an apologist for A Raja through the 2G scam coverage, remaining deafeningly silent on his resignation in the face of mounting evidence even when demanding the resignation of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa…”

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நவம்பர் 30, 2010

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நீதி மன்றம் ஆணையிட்டப்பிறகு, தில்லியில் திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷனில், ஒருவழியாக தேசத்துரோக பேச்சுகளுக்காக கீழ்கண்டவர்களின்மீது[1] பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்[2] வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

1.   அருந்ததி ராய்

2.   சையது அலி ஷா கிலானி,

3.   வராவர ராவ்

4.   எஸ்.ஏ. கிலானி

5.   செயிக் ஷௌகத் ஹுஸைன்

6.   சுபத்ரா சென்குப்தா

7.   சுஜாதோ பத்ரா

சட்டப்பிரிவு சட்டமீறல்கள்
124 A (sedition) of the IPC தேசத்துரோகம்
153 A (promoting enmity between different groups and doing acts prejudicial to maintenance of harmony) of the IPC இரு பிரிவினருக்கிடையே விரோத்தத்தை மூட்டும் வகையில் ஊக்குவிப்பது மற்றும் அமைதியைக்கெடுப்பது
153 B (imputations, assertions, prejudicial to national integration) of the IPC தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, தப்பாக விளக்குவது, களங்கம் ஏற்படுத்துவது முதலியன
504 (insult intended to provoke breach of peace) of the IPC அமைதியைக் குலைப்பது
505 (statements conducing to public mischief) of the IPC பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பது
Section 13 of the Unlawful Activities (Prevention) Act. மேல் கண்ட சட்டமீறல்கள் – இச்சட்டப்பிரிவின் கீழ்

காஷ்மீர் இந்துக்கள்தான் புகார் கொடுத்தனர் நடவடிக்கை எடுக்க இவ்வலவு நாள்: அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[3], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது[4]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்தார்[5]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[6], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்!

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: ஆனால், ஏதோ செய்யவேண்டுமே என்று, “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. முன்பும் தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று கொடுத்த நோட்டிஸும் பாக்கி இருக்கிறது[7].

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன[8]: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது[9].

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது[10]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[11].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[12]. இருப்பினும், காங்கிரஸ் அரசு நடவடிக்கை வேண்டாம் என்று தீர்மானித்தது[13], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[14]. அந்நேரம், பீஹாரில் தேர்தல் இருந்தது!

வேதபிரகாஷ்

© 30-11-2010


[4] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[7]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!,  https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[8] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, https://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[10] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

 

[11] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[12] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[13] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[14] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

நவம்பர் 1, 2010

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.

Image0011

Image0011

சர்தார் படேல் செய்தது என்ன? 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது! ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது!

 

இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2010


[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117531

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஒக்ரோபர் 23, 2010

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம்! இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல!

Geelani holds convention in Delhi

Geelani holds convention in Delhi

ஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].

Indian dogs go back home

Indian dogs go back home

ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம்  கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6]! இப்படி பேசியுள்ளது சிதம்பரம்! எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது!

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].

Protest against Geelani in Delhi

Protest against Geelani in Delhi

காஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

பிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா?”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது! ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].

Geelani.21-10-2010

Geelani.21-10-2010

அருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].

ஜிலானி-அருந்ததி

ஜிலானி-அருந்ததி

போலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர்! கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம்! ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].


[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.

[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதிஇந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!, http://islamindia.wordpress.com/2010/10/21/காஷ்மீர-இந்துக்கள்-பிரிவு/

[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்!

[5] Chidambaram said the authorities had videographed the proceedings of the seminar and submitted them to legal advisers for an opinion on whether laws were violated. “If it is established prima facie that the laws have been violated, Delhi police will take action in accordance with the law,” he said.

[16] Hurriyat hawk Syed Ali Shah Geelani, writer and Maoist sympathiser Arundhati Roy and parliament attack accused SAR Geelani were speakers at the event.

[17] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[18] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

செப்ரெம்பர் 1, 2010

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

துன்மார்க்க கோவை குண்டு வெடிப்பு: 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் கொல்வதற்காக, சதி திட்டம் தீட்டப் பட்டு, கலவரத்தை உருவாக்க நகரின் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப் பட்டு, அவை வெடித்ததில் 52 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இவையெல்லாம் அப்பொழுதைய எண்ணிக்கையாகும். அதற்குப் பிறகு இவை அதிகமாகியுள்ளது. தீவிரவாதிகள் கைது, நீதிமன்ற வழாக்காடு என்று செய்திகள் வர வர, இந்த மக்களை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டார்கள். ஆனால், இன்று வரை, அதற்ககக் காரணமானவர்களின் நிலைப் பற்றி வரிந்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோர்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

குண்டுகள் வைத்தது உண்மை, மக்கள் கொல்லப்பட்டது உண்மை, காயமடைந்தது உண்மை: முஸ்லீம்கள் திட்டமிட்டு, ஜிஹாத் என்று குண்டுகள் வைத்தது, குண்டுகள் வெடித்தது, வெடித்ததில் மக்கள் பரிதாபகரமாக இறந்தது, காயமடைந்தது, ரத்தம் சிந்தியது, உடல் உறுப்புகள் சிதறியது, முதலிய கோரக் காட்சிகளும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பற்றி ஒன்றும் சொல்லப்படுவதில்லையே? ஏன்? கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் என்னவாயிற்று? கை-கால்களை இழந்தவர்களின் நிலையென்ன? படுகாயமடந்த மற்றவர்கள் என்னவானார்கள்? அவர்கள் கண்ணீர் சிந்தாமல், கஷ்டபடாமல் சந்தொஷமாகவா இருக்கிறார்கள்? ஊடகங்கள் எந்த செய்திகளையும் வெளியிடுவதில்லை!

பிப்ரவரி 14, 2009: துக்கமான தினமா, மகிழ்ச்சியான தினமா?: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள்! ஆக, மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் 52 அப்பாவி மக்கள், குறிப்பாக இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள் என்று சிலர் நினைவுகூருகின்றனர். அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் 14-02-2009ல் ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து, ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதிப்பதில்லை மாறாக, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.

சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?

ஜூன் 3, 2010

சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

“சிவப்புப் புடவை” – வாழ்க்கையே அதிகாரத்திற்கு விலையாகும் போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்!

சோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்.

2008ல் ஸ்பானிய மொழியில் எழுதி வெளியிடப் பட்ட இப்புத்தகம், பிறகு, இத்தாலி, பிரெஞ்சு, டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகி, இப்பொழுது, ஆங்கிலத்திலும் பீட்டர் ஹிரான் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட தயாராக உள்ளதாம்.

சோனியாவின் ஆரம்பகால வாழ்க்கையை குறிப்பதால், சோனியா இதனை எதிர்க்கிறார் என்று தெரிறது:

கிரிஸ்டியன் வோன் ஸ்டீஜ்லிட்ஸ் என்ற நண்பர் தான் சோனியாவை ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாராம். அவர், ராஜிவ்காந்தி இறுதி சடங்கு போதும் கலந்து கொண்டார்.

ராஜிவ் இறந்தவுடன், காங்கிரஸ் இவரை தலைவராகத் தூண்டியபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஆசியகோ மலைப்பிரதேசத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்கு சென்று விட தீர்மானித்தாராம்.

சோனியா பிறந்தது: 1946ல் சோனியா பிறந்தபோது, போருக்குப் பின் பிறந்த குழந்தை என்று அடையாளங் காட்ட,  பாரம்பரிய முறைப்படி, அயல்வீட்டார் முதலியோர் கத்தரிப்புக் கலரிலான ரிப்பனை ஜன்னல்-கதவு முதலியவற்றில் உள்ள கம்பிகளுக்குக் கட்டினர்.

பெயர் வைத்தது: அங்கிருந்த கத்தோலிக்க புரோகிதர் / ஐயர் அந்த குழந்தைக்கு  எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அக்குழந்தையின் தந்தை ஸ்டெஃபானோ மைனோ சோனியா என்றுதான் அழைத்து வந்தாராம்.

ருஷ்ய பெயரை வைத்த மகத்துவம்: ருஷ்ய படையிலிருந்து விலகிய பிறகு, இந்த விதமாக, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றினாராம். அதாவது, முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிகொள்ள, ஒரு ருஷ்ய பண்ணையில் ஒளிந்துகொள்ள, ஒரு ரஷ்யர் இடம் கொடுத்தார். ஸ்டெஃபானோ, முசோலினியின் ராணுவத்தில் பணியாற்றிவர். ருஷ்யவால் தோற்கடிக்கப்பட்டபோது, தப்பிப் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். அப்படி தப்பிக்க ஒரு ருஷ்ய விவசாயி பண்ணைவீட்டில் ஒளிந்து கொண்டார்களாம். அந்த விதத்தில், அந்த ருஷ்ய குடும்பத்தினரின் நினைவாக, மதிக்க, வாக்குறுதியைக் காப்பாற்ற, தனது குழந்தைக்கு, மற்ற பெண் குழந்தைகளைப் போன்றே, ருஷ்ய பெயரை வைத்தாராம்.

சோனியாவின் குணம், ஆரோக்யம் முதலியன: சோனியா, கியாவெனோ என்ற இடத்தில் உள்ள கான்வென்டிற்கு படிக்கச் செல்கிறாள். அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாளாம், சண்டைபோடும் நண்பர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வந்தாளாம். அவள் தனியாக இருந்து படித்து வந்தாலும், ஆஸ்துமா மற்றும் இருமல்-வலிப்பு முதலியவற்றால் பாதிக்கப் பட்டிருந்ததால், தனியாக தூங்க மாட்டாளாம். பிறகு, டூரினில் படிக்கும்போது, அலிடாலியாவின் பணிப்பென் / சேவகியாகி (Alitalia stewardess) உலகம் சுற்றிவரவேண்டும் என்ற ஆசைக் கொண்டாளாம்.

In any case, Sonia was not particularly interested in history, or the sciences either, or anything to do with politics. She had always liked languages, for which she had a certain facility. Her father had encouraged her to learn Russian and had paid for a private teacher for her. Sonia understood Russian and spoke it, although she had difficulty reading it. She also learned French at home. In addition, languages were useful if you wanted to travel, for getting to know other people, other customs, other worlds, to discover those places that she had been able to glimpse in the lives of the missionaries.

பல மொழிகள் கற்கும் விருப்பம், ஈடுபாடு, திறமை: சோனியாவிற்கு சரித்திரம், விஞ்ஞானம், அரசியல் முதலியவை பிடிக்காது. ஆனால், மொழிகள் கற்றுக்கொள்வது பிடிக்கும், அதற்கானத் திறமையும் அவளிடத்தில் இருந்தது. பிறகுதான், ஏதாவது ஒரு அன்னிய மொழியைக் கற்றுக் கொண்டு, மொழிபெயர்ப்பாளர் வேலையை ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற இடத்தில் தேடலாம் என்று நினைத்தாராம்.  அது மட்டுமல்லாது, பல மொழிகளை அறிவதன் மூலம், பிரயாணம் செய்யும் போது, மக்களின் கலாச்சாரம், மற்ற உலகங்கள் மற்றும் (கிருத்துவ) மிஷனரிகளின் வாழ்க்கைகளை அறிந்து கொள்ளலாம். அவர் வைத்துக் கொண்டிருந்த நாயின் பெயர் ஸ்டாலின் ஆகும்.

On January 7th, 1965, she said goodbye to her sisters and gave Stalin, the old dog, who had been her playmate throughout her childhood, a big squeeze. Her parents went with her to Milan airport, just one oretta away. The morning mist lifted and gave way to a cold, sunny day. Sonia was excited about travelling alone for the first time and also afraid of the unknown. She was 18 years old and had her life in ahead of her. A life that she could not have imagined in her wildest dreams.

லூஸியானா மற்றும் ஓர்பேஸனோ கிராமங்களுக்குச் சென்றால், இப்பொழுது கூட இந்த கதைகளை அங்குள்ள மக்கள் கூறுவார்கள். ஆகவே இவையெல்லாம், தெரிந்த விஷயங்கள் தாம். நான் ஒன்றும் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் எழுதிவிடவில்லை என்று மோரோ கூருகின்றார்.

ராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா? சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர்கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.

Javier Moro defended his claim that she had wanted to leave India. “There were articles in the Italian papers. After her husband died, her mother called, and it’s logical that she asked ‘when are you coming home’. It’s not far-fetched it’s a literary licence,” he said.

மேலும், சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன.