Archive for the ‘காங்கிரஸ்’ Category

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (3)

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து லீமா ரோஸ் மார்ட்டினின் மனைவி

பச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை: பச்சமுத்து திடீரென்று தன்னை “பாரிவேந்தர்” என்று கூறிக்கொண்டு, பிஓஸ்டர்கள் அடுத்து, விழாக்கள் நடத்த ஆரம்பித்தார். இவையெல்லாம் 1960களில் இருந்த இன்றும் வாழ்ந்து வரும் பழைய நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், பச்சமுத்து அத்தகைய விளம்பரங்களுக்கு ஆசைப்படுபவர் அல்ல. அப்படியென்றால், ஒன்று அவரே மாறியிருக்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு கூட்டம் அவரை மாற்றிருக்கவேண்டும்[1]. சமீபத்தைய திரைப்பட முதலீடுகள், தொடர்புகள் அவர்களை தூரத்தில் எடுத்துச் சென்று விட்டது. சங்கர், “நண்பன்” திரைப்படத்தில் “பாரிவேந்தர்ரென்ற பெயரை அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்கு  அப்பெயரைச் சூட்டியதால், பேராசிரியர் க.நெடுஞ்செழியன்[2] என்பவர் கண்டித்து “விடுதலையில்” எழுதியுள்ளார்.  “பேராசிரியர்    பச்சமுத்து   உழைப்பின்  குறியீடு.  முயற்சியின்    வடிவம்.    ஆல்போல்   தழைத்து    அருகுபோல் வேர்விட்டு  வளர்ந்து வரும்  ஒரு  பெரிய  நிறுவனத்தின்  தலைவர்.  ஓர் அரசியல் கட்சியின்  நிறு வனர்.    மணிமேகலை    அமுதசுரபியைக்கொண்டு, காணார், கேளார், கால்  முடப்பட்டோர்  பேணுநரின்றிப் பிணியால்  வாடியோர்  ஆகியோருக்குச்  செய்த அறங்களைப் போல, இன்று  ஆயிரக்கணக்கான  ஏழை,  எளியோருக்கு  வாழ்வளிக்கும்  வள்ளல்  பாரிவேந்தர்  என  அவரை  மற்றவர்கள்அவரால்  பயன்பெறும்  மக்கள்  அழைத்து  மகிழ்கின்றனர். விருதுக்கு  ஏற்ப  வாழும்  வாழ்க்கை  அவரின்  வாழ்க்கைஅவரைச் சிறுமைப் படுத்துவது  தனிமனித  அவதூறாகும்  இது மன்னிக்க  முடியாத  குற்றமே!”, என்று முடித்துள்ளார்[3]. திராவிட இயக்கத்தின் “விடுதலை’யில், இது வந்துள்ளதால் இதெல்லாம், அரசியல், சித்தாந்தம், ஜாதி முதலியவை கலந்துள்ள பிரச்சினை போன்று தெரிகிறது. இவரைப்பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற கல்லூரி வேந்தர்கள், முதலாளிகள் முதலியோரும் கோடிகளை அள்ளிக் கொண்டிருந்தாலும், திமுக-அதிமுக ஆதரவுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி அத்தகைய விமர்சனங்கள் வருவதில்லை.

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார்

பச்சமுத்துவின் மீது பாலியல் புகார் – உதாரணத்திற்கு கொடுக்கப் பட்டது

பாரிவேந்தர்  மீது  பாலியல்  புகார்  கூறும்  திலகா[4]: பச்சமுத்து பற்றி தமிழ் இணைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டது. உதாரணத்திற்காக இவை கொடுக்கப் படுகின்றன. இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்….

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும்

பச்சமுத்துவும் கூட்டணியில் லீமா ரோஸும் இருப்பது செக்யூலரிஸமா, ஊழல் தர்மமா?

பியர்ல்  சிட்டி  பவுண்டேசன்  நடத்தும்  திலகா (2011-12): ‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன். 2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது. திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

Narendra Modi at SRM convocation 2014 urging to create google, ms etc in India

எஸ்.ஆர்.எம். லேனிங்  ட்ரீ  பிரைவெட்  லிமிடெட்  நிறுவனத்திற்கு  திலகா   செலவழித்தது: இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.

 

modi-tatto-னநமோ பச்சை குத்துதல்

modi-tatto- நமோ பச்சை குத்துதல்

பெண்களைக்  கூட்டி  வந்தாயா  என்ற  பிரச்சினை: இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயே வேந்தரை சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.

 

selling Modi and brand

selling Modi and brand

எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட்  பிரான்சைஸ்  வியாபாரமா, மோசடியா: நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன். நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி[5]. இதில் உண்மை எந்த அளவிற்கு, பிரச்சினை என்ன என்பதெல்லாம் தெரியவந்தால் தான் பின்னணி விளங்கும்.

 

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

மோடி வியாபாரம் லாபம் யாருக்கு

பச்சமுத்துவின் மாற்றங்கள் பெயரிலும், நடவடிக்கைகளிலும் உள்ளன (2010-14): தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து அரசியல் நோக்கோடுதான் “பாரிவேந்தர்” ஆனார். எஸ்.ஆர்.எம். நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் முதலியோரை சிறப்பித்து ஆதரவைப் பெருக்கினார். பெரிய அரசியல்வாதிகள், தொழிலாளிகள், பணமுதலைகளின் வாரிசுகள் இவர் கல்லூரிகளில் படித்து அல்லது படிக்க வைக்கப் பட்டு பொறியியல், மருத்துவ, நிர்வாக பட்டங்களுடன் வெளியேறியுள்ளனர். அதில் கட்சிபேதம் பார்க்கப்படவில்லை. ஆனால், அவரே அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், இவரது சாம்ராஜ்யத்தையே ஒரு திராவிடக் கட்சி விலைபேசியது, இவரை ஒழிக்கத் தீர்மானித்தது எனும் நிலையில் பாரிவேந்தர் இரண்டாவது முறையாக மாறிவிட்டார். பழையமாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறிய போது ஏற்பட்ட மாற்றத்தை விட, இம்மாற்றம் வித்தியாசமானது. ஆக அரசியல்வாதியாகி விட்டப் பிறகு அவரிடம் கொள்கைகள், நியாயங்கள், தர்மங்கள் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. கூட்டணிகள் என்று வரும்போது, யாரோடோ கூட்டு வைத்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

 

namostore-launched

namostore-launched

“மோடி பிரான்ட்” மூலம் அரசியல் வியாபாரம்: தூய்மையின் சின்னமாக இருக்கும் அன்னா ஹஜாரே கூட இப்பொழுது மம்தா பேனர்ஜியை ஆதரிக்கிறேன், அவருக்காக பிரச்சாரம் செய்யப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். மம்தா பேனர்ஜி ஊழலற்ற சுத்தமான அரசியல் தங்கமா, வெள்ளியா என்று தெரியவில்லை. அதைப் பற்றி சில கம்யூனிஸ்டுகளைத் தவிர யாரும் பேசுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. இந்நிலையில், பிஜேபியுடன் கூட்டு என்பது கட்டாயமாகி விட்டது. போதாகுறைக்கு “மோடி பிரான்ட்” கண்டு கருணாநிதி போன்ற அரசியல் வித்தகர்களே கலக்கத்தில் உள்ளனர். சோனியாவைவிட, இவருடன் சேர்ந்தால் வெர்றிபெறலாம் என்ற நம்பிக்கையும் வந்துவிட்டது. வாஜ்பேயியையும் மிஞ்சக்கூடிய கவர்ச்சி, பேச்சு, அனைவரைம் வசீகரிக்கும் திறன், அமெரிக்கா போன்ற நாட்டினரையே திகைக்க வைக்கும் திறன் முதலியவற்றைக் கண்டு வியக்காமல் இல்லை. ஆகவே தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகளை “மோடி பிரான்ட்” மூலம் தீர்த்துக் கொள்ள தீர்மானித்ததில் வியப்பொன்றும் இல்லை. பதிலுக்கு பிஜேபியும் அனுசரித்து, சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] விடுதலை, பகடிக்குரியபெயராபாரிவேந்தர்?, வியாழன், 26 ஜனவரி 2012 , பேராசிரியர் க.நெடுஞ்செழியன் என்றிருந்தாலும், எழுதியவர் “சங்கர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[5] இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை. என்னதான் நடக்குது நாட்டில்? – நன்றி ஏகவலைவன் வார இதழ்

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

பிப்ரவரி 15, 2014

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துவின் அரசியல் கூட்டணிகள் – மாநிலத்திலிருந்து தேசியத்திற்கு செல்லும் ஆசைகள் (2)

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

Narendra Modi and Pachamuthu at SRM convocation 2014.

 

பச்சமுத்து  என்கின்ற  பாரிவேந்தர்  மோடியைப்  புகழ்வது (10-02-2014): சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நான் குஜராத் மாநிலத்திற்கு சென்றேன். அங்கு டாஸ்மாக் கடை இல்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. சாலைகள் மிக அருமையாக உள்ளன. அங்கு இலவசங்கள் எதுவும் இல்லை. அங்கு 3–வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி மிகவும் நல்லவர். நாணயமானவர். ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் தந்து தொடர்ந்து முதல்வராக உள்ளார். நான் பல கல்வி நிறுவனங்களை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவி ஆண்டுக்கு 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்று தருகிறேன். இதோடு போதும் என்று நின்று விடாமல் நமது மக்களுக்கு ஏதாவது நல்லது நம்மால் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ஜனநாயக கட்சியை ஆரம்பித்தேன்[1]. இதெல்லாம் இவருக்கு முன்னர் தெரியாமல் போயிற்றா அல்லது இப்பொழுது தான் அறிந்து கொண்டாரா என்று ஆராய்ச்சி செய்யவேண்டும்.

Narendra Modi at SRM convocation 2014

Narendra Modi at SRM convocation 2014

பாரதிய ஜனதா கூட்டணி: “இன்று பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலில் போட்டியிட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 2 தொகுதிகளை பா.ஜனதாவிடம் கேட்டுள்ளோம்”, இவ்வாறு பாரிவேந்தர் பேசினார். நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் டி.பி.பச்சமுத்து, அமைப்பு செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்[2]. மோடி கூட்டத்தில் பேசும் போது, “எனது கல்லூரி விழாவுக்கு மோடியை அழைத்த நான், எங்கள் கட்சியின் பொதுகூட்டத்திற்கும் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அவர் பாஜக மாநிலத் தலைவரையும் அதில் இணைத்துக் கொள்ளுங்கள்எனக் கூறினார். அப்படி நடைபெறுவதுதான் இந்த கூட்டம்”, என்றார். தமிழக பிஜேபியில் 20-30 ஆண்டுகளாக வேலை செய்துவரும் தலைவர்களுக்குக் கூட சீட் கிடைக்காது என்ற நிலையில், லீமா ரோஸுக்கு சீட் எனும் போது வியப்பாகத்தான் இருக்கிறது. 39 தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படும் என்றும் பார்க்க வேண்டியுள்ளது. பிஜேபி ஜெயிக்கும் என்று ஒரு தொகுதியும் இல்லை. ஆனால், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என்ற சில இடங்களில் ஒருவேளை கூட்டணி பார்முலாவில் வெல்லலாம். ஆனால், அவை மற்ற கட்சிகளுக்குக் கொடுத்தால் பிஜேபி அம்போதான்! ஆகவே, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மோடி பேசியபோது, மோடி ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கலாம். மோடி ஆதரவாளர்கள், அறிவுஜீவிகள் இணைதளங்களில் அதைப் பற்றி புகழ்ந்து போற்றியிருக்கலாம். ஆனால், இந்த கூட்டணி பற்றி அவர்கள் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

 

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

பச்சமுத்து கமல் ஹஸன் சத்தியநாராயணன்

வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் சோதனை (2013): பணம் அதிகமாக வரும் போது, குறிப்பாக கணக்கில் வைக்க முடியாத பணம் வரும் போது, ஒரு இடத்திலிருந்து பணம் வந்ததாகவும், மற்ற இடத்தில் அவை செலவழிந்தது போலவும் காட்டுவது சார்டெட் அக்கௌன்டன்ட்களின் வேலை. அவற்றை செய்து வரும் அவர்களை யாரும் ஊழலுக்குத் துணைப் போகிறார்கள் என்று யாரும் விமர்சிப்பதில்லை[3]. அப்படி உருவான நிறுவனமான வேந்தர் மூவிஸ் அலுவலகத்தில் ரெய்ட் நடந்தபோது அதன் ஒரு பார்ட்னர் காணாமல் போய்விட்டார் என்று செய்திகள் வெளியிடப் பட்டன. எதிர் நீச்சல், தில்லுமுள்ளு போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது. ரெயிடுகளில் கிடைத்த ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, வாங்கப்பட்ட கொடைப்பணம், அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது போல காண்பித்து, மீதமுள்ளள பணத்தை டிரஸ்டுகளுக்கு திருப்பி விட்டது தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து, வருமான வரியை குறைத்துக் காட்ட இம்முறை கையாளப்பட்டதாகத் தெரிகிறது. நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன[4]. கொஞ்ச நாட்களில் இவையெல்லாம் மறக்கப்பட்டன. துப்பாக்கி பட விசயத்தில் கூட பச்சமுத்து பெயர் அடிபட்டது. எஸ்.ஆர்.எம். மருத்துவ மனைக்கு அருகில் கூட பச்சமுத்துவை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து   சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

மருத்துவக்  கல்லூரியில்   சேர்க்க  நன்கொடை  பிரச்சினை (ஏப்ரல் 2013): மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை பெற்றதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். வழக்கு ஒன்றில் சிக்கிய சுங்கத்துறை அதிகாரி ஜம்போ லாலின், தனது மகள் மானசாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நன்கொடை கொடுத்ததாக சிபிஐ-யில் வாக்குமூலம் அளித்ததாக கூறி, அதன் அடிப்படையில் இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன குழும தலைவர் பி.ஆர்.பச்சமுத்து மற்றும் அவரது மகன் ரவி பச்சமுத்து ஆகியோருக்கு கடந்த மார்ச் 25 ஆம் தேதி 2013 சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து, முன் ஜாமீன் கோரி மேற்கூறிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்குவதாகவும், மனுதாரர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்திருக்கும் சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிபிஐ அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முற்பட்டபோது, அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு சல சலப்பு ஏற்பட்டது.  இதனிடையே சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான இருவரும் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பிறகு இதைப் பற்றிய செய்திகள் நின்றுவிட்டன.

 

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து  சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பி.ஆர்.பச்சமுத்து மகன் ரவி பச்சமுத்து சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். 2013

பழைய  நண்பர்களை  மறந்து,  புதியநண்பர்களை உருவாக்கிக் கொண்டார் (1960-1990): 1960களிலிருந்து, கடின உழைப்பில் உயர்ந்த பச்சமுத்து, பணம் வந்ததுடன் மாறித்தான் போனார். அதனால், பழைய நண்பர்களை மறக்க / ஒதுக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு டுடோரியல்ஸ் (Tamilnadu Tutorials, started in 1967), நைட்டிங்கேல் நர்சரி பள்ளி (Nightingale Nursery School, started in 1969), ஏசியன் இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலாஜி (Asian Institute of Technology, started in 1976) போன்றவற்றில் அவருக்கு உதவியவர்களை மறந்து விட்டார். பழைய மாம்பலத்திலிருந்து காட்டாங்கொளத்தூருக்கு மாறியபோது, இவரும் மாறி விட்டார். முன்பாவது, அதாவது 1980களில் பார்க்க வந்தால், அனுமதித்து வந்தார், ஆனால், இப்பொழுதோ “பழைய நண்பர்கள்” உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. வெளியே காரியதரிசி என்று சொல்லிக் கொள்ளும் புதிய ஆட்கள், அவர்களைக் கொஞ்சமும் மதிக்காமல் அனுப்பி விடுவது பழக்கமாகியது. ஆனால், புதிய நண்பர்கள் அவருக்காக உழைப்பது போல காட்டிக் கொண்டு, தாங்களும் தங்களை உயர்த்திக் கொண்டனர். மார்ச் 2005ல் அப்படியொரு புகாரை அவரே அளித்தார். தனக்குக் கீழ் வேலை செய்துவந்த சுப்ரமணியம் என்ற ஆடிட்டர், சில ஆவணங்களை உபயோகித்து, ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக பச்சமுத்து புகார் கொடுத்தார்[5]. இதுவும் ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது.

வேதபிரகாஷ்

© 15-02-2014


[2] தினத்தந்தி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்தொகுதிகளைபா.ஜனதாவிடம்கேட்டுள்ளோம்.இந்தியஜனநாயககட்சிதலைவர்பாரிவேந்தர்தகவல், பதிவு செய்த நாள் : Feb 11 | 03:45 am

[3]அரவிந்த கேசரிவாலும் இதே போலித்தனத்தைக் கடைபிடித்து வருகிறார். வருமானவரித்துறையிலிருந்து வந்துள்ள அவருக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்காது. இருப்பினும் அவ்வாறு நடித்து வருகிறார்.

[4] According to the sources, the searches were also conducted in the premises of Vendhar Movies and TV news channel ‘Puthiya Thalaimurai’. One of the partners of Vendhar Movies is absconding since Tuesday. The recent hits of Vendhar Movies are Ethir Neechal and Thillu Mullu. The search led to confiscation of documents which indicated receipt of donations, inflated expenditure, diverting funds of trusts and evasion of income tax for the last few years. Jewels have been seized and kept in sealed conditions.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/it-raid-on-srm-group-yields-unaccounted-cash-of-rs-675-crore/article4830954.ece

[5] Auditor arrested on cheating charge, By Our Staff Reporter; Thursday, Mar 31, 2005http://www.hindu.com/2005/03/31/stories/2005033112710300.htmCHENNAI, MARCH 30. The police have arrested the auditor of Valliammal Society, which runs the SRM Groups of Institutions, following a complaint by the society’s chairman T.R. Pachamuthu.Mr. Pachamuthu told police that his auditor of over a decade, Subramaniam, had cheated him by misusing the institution’s property documents to get loans from private financiers of over Rs.2.5 crores. Speaking to The Hindu over phone, Mr. Pachaimuthu said the signatures in the promissory notes that Mr. Subramaniam had handed over to the financiers could either be forged or signed by him by mistake. “He has been managing the finances of my institutions for more than a decade and I trusted him. He might have tricked me into signing some of the papers,” he said.

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

நவம்பர் 30, 2013

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

இதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].

Electioneering speech seriousness and humourகபில்சிபல்,   சிதம்பரம்  முதலியோர்  இவ்விசயத்தில்  கமென்ட்  அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].

In defense of Teesta Setalvadமம்தாசர்மா, சுசில்குமார்  ஷின்டே  முதலியோரது  சுருசுருப்பான  வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்டுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.

Anti-modi campaign - nakkeeran-2013நம்பிராஜனை  அடுத்து  இந்த  ஸ்னூப்பிங்”,   “ஸ்டாகிங்”   விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -awarded 2008குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -seminar  2010இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்!

© வேதபிரகாஷ்

21-11-2013


[8] The NCW chairperson’s comments coincided with home minister Sushil Kumar Shinde’s statement that the Centre could consider ordering a probe into violation of the woman’s privacy by Gujarat Police allegedly at Shah’s instance. According to sources, the Centre has already asked security agencies to look for evidence of the alleged “snooping” in the “interception records” that telecom service providers maintain.

http://timesofindia.indiatimes.com/india/Shinde-NCW-step-up-snoop-heat-on-Modi/articleshow/26116752.cms

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

நவம்பர் 9, 2013

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

Rahul hate speech at Churu, Rajasthan ISI etc

பாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, .எஸ்.., தொடர்பு கொண்டு பேசியதுஎன்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

முஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, .எஸ். தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3].  கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் .எஸ். முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்? அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் .எஸ். அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா?”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

தலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10].  இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

ராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].

Sonia angry

மதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.

உரியநடவடிக்கைதேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.

© வேதபிரகாஷ்

09-11-2013


[1] Criticising Rahul Gandhi for his ISI remark, Jamiat Ulema-e-Hind leader Maulana Madani said, “Rahul Gandhi’s statement was very irresponsible and we condemn it. Such issues must not be politicised. Even if he had any such information, it’s a reckless statement.”

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[2] While Rahul is being criticised by Muslim clerics, Modi got unexpected support from a top Muslim cleric, Maulana Kalbe Sadiq. “If we see a change in the attitude of Modi, we will try to convince Muslims to forget 2002. Such a thing has happened in the past,” Sadiq said.

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[3] Khan also urged Rahul Gandhi to come forward with the names of the Muslim youth that were allegedly contacted by Pakistani agents to help the Samajwadi Party-led Uttar Pradesh to take action accordingly.

http://zeenews.india.com/news/nation/azam-khan-asks-rahul-gandhi-to-name-muslim-youth-approached-by-isi_885794.html

[7] Questioning Rahul’s Indore speech on ISI trying to recruit riot-affected victims in Uttar Pradesh’s Muzaffarnagar, the BJP leader asked what the Congress Vice President had done to address the issue. “What has the shahzada done to stop the ISI from reaching out to Muslims in Muzaffarnagar,” asked Modi while addressing a rally in Jhansi on Friday.His second question to Rahul was more direct. The Gujarat strongman questioned the credibility of Rahul’s statement on ISI. “Does shahzada have any proof of ISI reaching out to riot victims?” he said.

[9] The Uttar Pradesh Government on Saturday officially dismissed Congress vice-president Rahul Gandhi’s claims about Pakistan’s ISI being in touch with affected Muslim youth from riot-hit Muzaffarnagar even as Union Steel Minister Beni Prasad Verma added a new dimension, saying hundreds of people from Gujarat had come to Muzaffarnagar to indulge in rioting.

http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/nation/up-dismisses-rahuls-isi-in-touch-claim.html

[10] Samajwadi Party leader Farhan Lari, while alleging that Rahul had hurt the sentiments of the Muslim community, has lodged the complaint before the CMM Prafulla Kamal. Another case has been lodged by traders’ leader Gyanesh Tewari and social worker Mohammad Islamuddin in the same court. The duo too have maintained that the statement has posed serious threat to the country’s integrity.

http://www.hindustantimes.com/india-news/two-complaints-filed-against-rahul-gandhi-for-isi-statement/article1-1140912.aspx

[13] தினமணி, 09 November 2013 01:46 AM IST,

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

ஒக்ரோபர் 19, 2013

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

Modi releasing the book of Arun Shourie

சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.

Cho receiving a copy of the book released 2014

“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு:  தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மற்றும் உரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].

Modi - Madras University visit 18-10-2014

கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].

Modi opposing radical Communist students

மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

Narendra Modi received at Chennai Airport.1சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].

Narendra Modi received at Chennai Airport.2புரட்சிகர மாணவர்,  இளைஞர் முன்னணி,  இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].

Narendra Modi received at Chennai Airport.3பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Narendra Modi received at Chennai Airport.4மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].

Narendra Modi received at Chennai Airport.5தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].

Narendra Modi received at Chennai Airport.6மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.

அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].

மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].

© வேதபிரகாஷ்

19-10-2013


[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/security-blanket-over-chennai-for-modis-visit/article5244322.ece?ref=relatedNews

[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/modis-visit-to-chennai-faces-protest/article5247862.ece

[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.

http://www.indianexpress.com/news/cant-allow-china-to-dominate-india-narendra-modi/1184413/

குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று!

ஒக்ரோபர் 13, 2013

குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று!

வகுப்புவாதசக்திகளைஎதிர்ப்பதற்குமூன்றாவதுஅணிதேவைப்படுகிறது: மூன்றாவது அணி அமைப்பது குறித்து, சமாஜவாதி, மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை (10-10-2013) ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் பேசுகையில், “நாட்டை வகுப்புவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மூன்றாவது அணி தேவைப்படுகிறது” என்றனர்[1]. “பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது அணி தலைமையிலான அரசு உருவாகும்”, என சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்து வரும் இவர்கள் இப்படி பேசுவது எப்படி? மேற்கு வங்காளம் மற்றும் கேரளா இரண்டையும் தொலைத்து விட்ட கம்யூனிஸ்டுகள், மறுபடியும் உட்டுண்ணிகளாக இருந்து கொண்டு யார் கிடைப்பார்கள் என்று வலைவீசுகிறார்களா? முல்லாயம் இதற்கு சளைத்தவர் அல்லர்!

நாட்டைவகுப்புவாதசக்திகளிடமிருந்துகாப்பாற்றவேண்டும்”: இக்கட்சிகளின் மூலங்களை, இந்த வாய்ச்சொல் வீரர்களின் பின்னணியை, முந்தைய கூட்டுகளை, சகவாசங்களை, சிறிது ஞாபகப் படுத்திக் கொண்டால், இவர்களது முகமூடிகள் கிழிந்து விடுகின்றன. இஸ்லாமிய, முஸ்லிம் மதவாத (ஐ.என்.எல், எம்.எல்), தீவிரவாத (என்.சி), பயங்கரவாத (எம்.ஐ.எம்) கட்சிகளுடன் கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். அதேபோல, கிருத்துவ, கிறிஸ்தவ மதவாத, தீவிரவாத, பயங்கரவாத கட்சிகளுடன் (கே.கா, யு.என்.எப், எம்.எல்.எப்) கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஏதோ உத்தமர்கள் போல பேசி திரிவது மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள் போலும். ஊழலில் ஊறிய உத்தமர்கள் காங்கிரசின், குறிப்பாக சோனியாவின் தயவால் அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோனியா-எதிர்ப்பு எல்லாம், இப்படி தேர்தல் வரும் போது மறைந்து விடும். சந்தர்ப்பம் கிடைத்தால், சோனியாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவர், இல்லை, ரகசியமாக அவரது இல்லத்திற்குச் சென்று சாஷ்டாங்கமாக, காலில் விழுந்து எழுவர். இதுதான் இவர்களின் யோக்கியதை. ஆனால், வெளியே வரும் போது, பெரிய வீரர்களைப் போல பேசுகிறார்கள்[2].

மூன்றாவதுஅணிஅமைப்போம்அமைக்கமாட்டோம்: பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிகள் தயாராகி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக 3 வது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சிகள் செய்தன. ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் சமீபத்தில் பேட்டியளிக்கையில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்[3]. இந்த நிலையில் தனித்தனியாக நின்றால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போகலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்கள் 3 வது அணி அமைத்தால் குறைந்தபட்சம் 100 இடங்களை கைப்பற்றலாம் என்று கருதுகிறார்கள். இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒருங்கிணையும் பட்சத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இடதுசாரி கட்சி தலைவர்கள் டெல்லியில் சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். மதவாதத்திற்கு எதிராக ஒன்று திரள்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் மதவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாடு மூன்றாவது அணிக்கான அச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது[4].

மதவாதஎதிர்ப்புமாநாடு: இப்படி கொள்கையற்ற, அரசியல் நாணயமற்ற, சுயமரியாதை அற்ற, கூட்டணி தர்மத்தை விபச்சாரமாக்கிய, அரசியலை வேசித்தனமாக்கிய, இந்த பரத்தைகளினும் கேவலமான சித்தாந்திகள், இப்படி மாநாடு நடத்தி எந்த மதவாதத்தை எதிர்க்கப் போகின்றனர்? –

  • இந்துமதவாதத்தை எதிர்பார்களா?
  • இஸ்லாம் மதவாதத்தை எதிர்பார்களா?
  • கிருத்துவ மதவாதத்தை எதிர்பார்களா?
  • ஜைன மதவாதத்தை எதிர்பார்களா?
  • சீக்கிய மதவாதத்தை எதிர்பார்களா?
  • பௌத்த மதவாதத்தை எதிர்பார்களா?
  • பார்சி மதத்தை எதிர்பார்களா?
  • யூத மதவாதத்தை எதிர்பார்களா?
  • இல்லை, புதியாதாக முளைத்துள்ள பற்பல சிறுபான்மையினர் மதவாதங்களை எதிர்ப்பார்களா?

செக்யூலரிஸ ரீதியில் இப்படி ஒவ்வொரு மதவாதத்தையும் எதிர்த்து தமது 100% மதசார்பற்ற நிலையை மெய்ப்பித்துக் காட்டுவார்களா? பிறகு இவர்களில் பெரும்பாலோர், ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தினராகவே இருந்து கொண்டு, அம்மதத்தை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமள் தேர்தல் விண்ணப்பதிலும் போட்டுக் ஜொண்டு நாடகம் ஆடவேண்டும்?

மூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு   காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் அல்லாது, மூன்றாவது அணி நிறுத்தும் வேட்பாளரே நாட்டின் பிரதமராக வருவார் என்று சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்[5]. இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகள் அல்லாத மாற்று அணி கடந்த காலங்களில் உருவானபோதும் அது வலுவானதாக திகழவில்லை. இருப்பினும், உண்மையான மதச்சார்பற்ற அணியாக அது விளங்கியது. ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இது குறித்து பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறேன்.

மூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்அவர்யார்?: இங்குதான், அவர்களது போலித்தனம் வெளிப்படுகிறது.

  • முலாயம் சிங் யாவ்
  • மாயாவதி
  • ஜெயலலிதா
  • கருணாநிதி
  • சந்திரபாபு நாயுடு
  • தேவ கௌடா
  • மம்தா பேனர்ஜி
  • பிஜு பட்நாயக்

இப்படி முரண்பட்டவர்களின், எதிரும்-புதிருமாக நிற்பவர்களின் பட்டியல் நீளுகின்றது. நல்லவேளை, சரத் பவார் யுபிஏவில் தான் இருப்போம் என்று சொல்லிவிட்டார், லாலு பிரசாத் யாதவ் ஜெயிலுக்குச் சென்று விட்டார். இல்லையென்றால், அவர்களும் இந்த பட்டியிலில்வருவர்.

தேர்தலுக்குப்பிறகுஅமையும்மூன்றாவதுஅணியில்சேரவேண்டும்: “அதே சமயம், மாற்று அணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக தேர்தலை  சந்தித்தாலும் தொகுதிப் பங்கீடு, இடங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டு, அணிக்குப் பலவீனமாக அமையும். எனவே, ஒவ்வொரு கட்சியும் அதன் சக்திக்கு ஏற்ப புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு அமையும் மூன்றாவது அணியில் சேர வேண்டும். அப்போது காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான சக்தியாக விளங்கும் மூன்றாவது அணி யாரை வேட்பாளராக முன்னிறுத்துகிறதோ அவரே நாட்டின் பிரதமராக வர முடியும். வகுப்புவாத சக்திகளை எதிர்க்க ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களை இம் மாதம் 30-ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அக் கூட்டத்தில் யார், யார் பங்கேற்பார்கள் என்பதை இப்போது கூற மாட்டேன்”, என்றார் முலாயம் சிங் யாதவ்.

காங்கிரஸ், பாரதியஜனதாஆகியகட்சிகள்தலைமையிலானகூட்டணிகள்அல்லாது, மூன்றாவதுஅணி: இத்தகைளரசியல் நாடங்கள் அரங்கேறி இருப்பது உண்மைதான், ஆனால், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலை இருந்து வந்தது. சந்திரசேகர் அப்படித்தான், பிரதமர் ஆனார். அதுபோல வி.பி.சிங், குஜரால், தேவ கௌடா முதலியோர் சில காலம் காங்கிரஸ் தயவில் இருந்திருக்கலாம். ஆனால், மொரார்ஜி தேசாய் போன்று இருந்திருக்க முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் தேவைகளுக்காக அத்தகைய நாடகங்கள் நடந்தன. ஆனால், இப்பொழுது மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன –

  • விலைவாசி (எல்லொரையும் பாதிக்கிறது),
  • ஒரு நாலைக்கு ஒரு சாப்பாடு கூட கிடைக்காத நிலை (வறுமைகோட்டில் மற்றும் கீழுள்ளவர்களின் நிலை)
  • படித்தவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம்,
  • வேலை கிடைத்தாலும் குறைவான சம்பளம்,
  • அந்நிய கம்பனிகளின் சுரண்டல்கள் (வரியேய்ப்பு, வரிவிலக்கு, பாரபட்சம் மிக்க பொருளாதார சலுகைகள் முதலியவை)

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் யு.பி.,ஏ என்கின்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். இதில் கோடி-கோடிகளாக ஊழல் செய்து, உலகமே வியக்கும்படி சாதனை படைத்திருக்கின்றனர். இந்த ஊழல்வாதத்தை ஏன் எதிர்ப்பதில்லை என்று தெரியவில்லை.

மோடிக்குஎதிராகமதவாதஎதிர்ப்புசக்திகள்ஒன்றுதிரளவேண்டும்: திருமாவளவன்பேட்டி[6]: திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: “நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் மதவாத சக்திக்கும், மதவாத எதிர்ப்பு சக்திக்கும் இடையே நடைபெறும் யுத்தமாக இந்த தேர்தல் அமையும், எனவே மதவாத எதிர்ப்பு சக்திகள் ஒரு அணியில் திரளவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. தமிழகத்தில் அண்மை காலமாக தலித்துகள், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகளை போடுவது வழக்கமாக உள்ளது. அவர்களை ரவுடிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் நிலையை போலீசார் கையாண்டு வருகின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது”, என்றாராம் திருமா[7]. மோடி எதிப்பைப் பற்றி தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். யார் வேண்டுமானாலும், மோடியை எதிர்க்கலாம். கண்டபடி போஸ்டர்கள் ஒட்டலாம், கடிதங்களை தயாரித்து வெளியிடலாம். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. பிரச்சாரமாகத்தான் இருந்து வருகிறது[8]. தேசிய அளவிலும் மோடி-எதிர்ப்பு இணைதளங்கள்[9] செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன[10].

மோடிபாதிப்புஅதிகமாகவேஉள்ளது: காங்கிரஸ்-பாதிப்பை விட மோடி-பாதிப்பு இவர்களுக்கு அதிகமாகவே உள்ளது என்று தெரிகிறது. CPI(M) தானாகவே  SP, JD(U), JD(S) and BJD முதலிய கட்சிகளுடன் பேசியதால் மட்டும் தேர்தலில் வெற்றிப் பெறமுடியாது. சீதாராம் யெச்சூரி, “தேர்தலுக்குப் பின்னர் தான் மூன்றாவது அணியைப் பற்றி யோசிக்கமுடியும்”,  வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டார்[11].  முல்லாயம் சிங் யாதவும், “நிறைய கருத்து வேறுபாடுகள் வருவதால் தேர்தலுக்கு பின்னர் தான் மூன்றாவது அணி”, என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்[12]. தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்ந்தெடுப்பு, நிறுத்துவது, பிரச்சாரம், செலவு முதலியவற்றைப் பற்றி ஏகப்பட்டப் பிரச்சினைகள் உள்ளன என்று கூறியுள்ளார்[13]. இவர் சமீபத்தில் காங்கிரஸ் தயவுடன் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து, சிபிஐ போட்ட வழக்குகளினின்று விடுவிக்கப்பட்டவர் என்று குறிப்பிடத் தக்கது. அதாவது, ஏற்கெனவே பேசம் பேசப்பட்டு விட்டது. அதே மாதிரி இவரது எதிரி மாயாவதியும் விவிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் நன்றாகவே செக் வைத்துள்ளது. போதாகுறைக்கு “மூன்றாவது அணி” பற்றி நன்றாகவே திட்டித் தீர்த்துள்ளது[14]. இல்லையென்றால், ஏப்ரல் 2014 முன்னர் மறுபடியும் சிபிஐ மேல்முறையீடு செய்ய முடியாதா என்ன? அதே சமயத்தில் சிபிஐ அமித் ஷாவைத் துரத்துகிறது! அதாவது, இவர்களின் ஒட்டு மொத்த எதிரி பிஜேபி தானே ஒழிய, காங்கிரஸ் இல்லை. ஆகவே, இன்றைய நிலையில் மோடி-பாதிப்பு தான் இவர்களை ஆட்டி வைக்கிறது.

© வேதபிரகாஷ்

13-10-2013


[2] வழக்கம் போல சனிக்கிழமை (12-10-2013) அன்று சன்-டிவியில் நடந்த விவாதம் தமாஷாக இருந்தது. ஏதோ சிரிப்பி செனல்களைப் பார்த்தது மாதிரி, பங்கு கொண்டவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். வீரபாண்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம்

[6] மாலைமலர், சென்னை 08-10-2013 (செவ்வாய்க்கிழமை)

[9] Endorsed by top actors (Naseeruddin Shah, Mahesh Bhatt), artists (Mallika Sarabhai, Ashok Vajpayee), academics (Nandini Sundar, G.N. Devi, K.N. Panikkar), journalists (Seema Mustafa) and intellectuals (Harsh Mandar, Shabnam Hashmi) from across the country, the website was simultaneously launched in 25 cities in India.

http://www.thehindu.com/news/national/pucl-launches-antimodi-website-across-25-cities/article5053113.ece

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)

 

07-09-2013 (சனிக்கிழமை): பாதிக்கப்பட்ட ஜட் என்கின்ற ஜாதி மக்கள் வழக்கம் போல பஞ்சாயத்து கூட்டினர். தொடர்ந்து அவர்களது பெண்கள் முஸ்லிம்களால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்வது போன்ற நிகழ்சிகள் நடந்து வருவதால், “பேடி பசாவோ, பஹு பசாவோ அந்தோலன்” [Beti Bachao Bahoo Bachao panchayat] “மகளை காப்பாற்றுங்கள், மறுமகளை காப்பாற்றுங்கள்” என்று பஞ்சாயத்தைக் கூட்டினர். அது நிச்சயமாக தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், (முஸ்லிம்கள்) மஹாபஞ்சாயத்திற்கு செல்பவர்கள் தாக்கப்பட்டனர்[1]. அதாவது, இந்துக்களை முஸ்லிம்கள் தாக்குகின்றனர் என்றகிறது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, முன்னர் வால்மீகி சமுதாயத்தினருக்கும், முஸ்லிம்ளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறும் தொடர்பு படுத்தப் படுகிறது[2]. இதற்கும் இப்பொழுதைய பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்று ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இரு கும்பல்களும் எரியூட்டல் போன்ற காரியங்களில் இறங்கியதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த இடத்தை வீடியோ எடுக்க முயற்சித்தபோது ஐ.பி.ஏன்..7 டிவி.செனலின் நிருபர் ராஜேஸ் வர்மா கொல்லப்பட்டார். போலீசாரால் அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர் இஸ்ரர் வகீல் என்பவரும் கொல்லப்பட்டார்[3]. இது தவிர மற்றவர் 9 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ராணுவம் அழைக்கப்பட்டது. மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

 

08-09-2013 (ஞாயிறு): ஆனால் கலவரம் நடந்து கொண்டிருந்தது. முசபர்நகரின் கொத்வால், நயீ மண்டி முதலிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தப்பட்டது. ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. உள்ளூர் போலீசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றாகிறது.

 

09—09-2013 (திங்கள்): இறப்புகள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் போர்க்களம்போல காட்சியளிக்கின்றன. கலவரம் மீண்டும் ஏற்படகூடும் என்ற பீதியில் பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி விட்டனர்[4]. இதனால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு 10–க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[5]. சுமார் 20 பேரை காணவில்லை என்று உறவினர்கள் தேடி வருகிறார்கள். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சில கிராம மக்கள் போலீஸ் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு சட்டம்-ஒழுங்கு நிலை முழுவதுமாக சீர்குலைந்ததால், மாநில கவர்னர் பி.எல். ஜோஷி மத்திய அரசிடம் மாநில அரசு தனது நிர்வாகத்தன்மை முதலியவற்றை இழந்தது, கலவரங்களை அடக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

கலவரம்நடந்தபிறகுமேற்கொண்டநடவடிக்கைகள்: இதனால், வேறு வழியின்றி, உயர் பொலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் அந்த பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டது. மன்மோஹன் சிங் அகிலேஷ் யாதவுடன் போனில் கலவரத்தை அடக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பேசினார். மத்திய உள்துறை செயலாளர், கேபினெட் செயலாளர் மற்றும் புலனாய்வுத் துறையுடன், முசபர்நகர் நிலவரம் பற்றி சந்தித்து பேசினர். இதுதவிட பேஸ்புக் தளமும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு, சமஜ்வாடி அரசை நீக்க விரும்பவில்லை என்றாகிறது. இது காங்கிரஸ்- சமஜ்வாடி கட்சிகளின் கூட்டைத்தான் காண்பிக்கின்றது.

 

பாஜகவின்மீதுபழிமற்றும்நான்குஎம்.எல்.ஏக்கள்மீதுஎப்..ஆர்: இதற்கிடையே முசாபர் நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை பா.ஜ.க. தூண்டி விட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது உத்தரவின் பேரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குகுமசிங், சுரேஷ் ரானா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. ஒப்புக்கு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பெயர் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், கலவரப்பகுதியில் ஆய்வு நடத்த 3 பேர் குழுவை அனுப்பி உள்ளார். ஆனால், முச்லிம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலவ்சரம் தூன்டிய விதத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடரவில்லை.

 

பாரதீயஜனதா, பகுஜன்சமாஜ்கட்சிகள்சமஜ்வாடிகட்சிமீதுகுற்றம்சாட்டின: முசாபர் நகர் மாவட்டத்தில் அடிக்கடி சாதி கலவரம் ஏற்பட்டபடி உள்ளது. எனவே அதை தடுக்க உத்தரபிரதேச அரசு தவறி விட்டதாக பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அகிலேஷ் யாதவ் அசட்டையாக இருப்பதாகவும், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. மாயாவதி பிஜேபிதான் காரணம் என்று சமஜ்வாதி கட்சி கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்[7], ஏனென்றால், ஆகஸ்ட் 27ல் நடந்த நிகழ்ச்சியிலிருந்துதான் இவை ஆரம்பித்துள்ளன என்பது எலோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்[8].

 

வழக்கம்போலஅதிரடிநடவடிக்கைகள், நிதியுதவிமுதலியவை: மத்திய ரிசர்வ் போலீசாரும் 1200 அதிரடிப் படை வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் முசாபர்நகர் எல்லைகளில் தடுப்பு அரண் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர உத்தரபிரதேச – உத்தரகாண்ட் எல்லை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்துக்குள் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதல் – மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். பலியான பத்திரிகையாளர் ராஜேஸ் வர்மா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது[9].

 

அகிலேஷ்தந்தைவழிபின்பற்றுகிறார்போலிருக்கிறதுஅப்பாமுல்லாஎன்றால்மகன்மௌலானா: மாநில முதலமைச்சர் எனும் போது, இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று பாராமல் செயல்படவேண்டும். ஆனால், அகிலேஷ் யாதவ், முஸ்லிம் குல்லா அணிந்து கொண்டு, இந்த வேளையிலும், அடிப்படைவாதி முஸ்லிமான ஆஸம் கானுடன் சேர்ந்து கொண்டு உலவி வருகிறார். இது இந்துக்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தாது. இப்பொழுது, இந்து-முஸ்லிம்கலவரம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பிரிந்துதான் ஓட்டளிப்பார்கள். அப்படியென்றால், அடுத்தது, ஒரு ஜாதி கலவரத்தை ஏற்படுத்தினால், இந்து ஓட்டுகள் சிதறிவிடும் பிறகு, ஒட்டு மொத்த 30% முஸ்லிம் ஓட்டு எந்த கட்சிற்குக் கிடைக்கிறதோ, அக்கட்சிதான் ஜெயிக்கும். அதாவது, சமஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும். இவையெல்லாம், சோனியா இல்லாதபோது, நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[2] On Saturday, police and the district administration asserted that text messages were sent sent to both communities about incidents that had never taken place.” “We received calls from several people asking about certain stone-pelting incidents and killings that never occurred. It seems people were being egged on,” an officer said. Earlier this week, Ehsan, a resident of Kalander Shah, was killed in Shamli after he picked up a fight with Nandu, a Valmiki who had allegedly parked his garbage cart outside Ehsan’s house. “They had an argument over the garbage cart which led to a scuffle. A few hours later, Vamikis stoned a Muslim’s car. Matters flared up and Ehsan was shot dead. At least three houses were torched,” the officer said. He added that communal tension in Shamli had increased after the Kawaal incident. DGP Deo Raj Nagar said the government had formed a Special Task Force to investigate the Kawaal incident. “Some elements are trying to create communal tension in the region. The STF will help normalise the situation. No one will be allowed to breach peace in the area,” he said.

http://www.indianexpress.com/news/communal-clashes-in-western-up-town-reporter-among-six-killed/1166240/3

[3] A freelance journalist associated with IBN7, Rajesh Verma, was shot dead in the Kotwali police station area. In another incident of violence, a photographer, Israr, who was hired by the police, was beaten to death in Thana Sikhera area. Both the media personnel were killed while covering the clashes. Read more at: http://www.firstpost.com/india/ibn7-journalist-killed-in-up-communal-riots-army-clamps-curfew-1092877.html?utm_source=ref_article

[7] . Mayawati also refuted the charge of the SP government that the BJP was behind the riots, and said that she did not buy this theory as the matter escalated from a trivial case on August 27. “The state government is trying to hide behind falsehood and trying to cover up its incompetence,” she added.

இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

ஜூன் 27, 2013

இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

ஹம் ஆத்மி கட்சியின் பிரச்சாரம்

பொது மக்கள் கட்சியின் பிரச்சார சுவரொட்டியும், வாசகங்களும்: “ஆம் ஆத்மி கட்சி” (आम आदमी पार्टी) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் இறங்கியுள்ள அரவிந்த கேசரிவால் செய்து வரும் பிரச்சாரத்தில், வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சுவரொட்டி, பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. அதில் “பேயிமான்” என்ற வார்த்தை மனிதத்தன்மைக்கு எதிராக உள்ள எல்லா குணங்களையும் குறிக்கும் மற்றும் அத்தகைய தன்மைகளைக் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் –

  • மனிதத்தன்மையற்றவர்கள்,
  • ஊழல்காரர்கள்,
  • கெட்டவர்கள்,
  • அயோக்கியர்
  • அரக்கர்கள்,
  • கொடுங்கோலர்,

என்று பலவித அர்த்தங்களில் பிரயோகப்படுத்தலாம். சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்.

AAP - propaganda against Cong or BJP

வாசகமும், அதன் அர்த்தமும்:  “बेईमानों को वोट तो महिलाओं के साथ होता रहेगा बलात्कार” –

இஸ் பார் பி தியா பேயிமானோம் கோ ஓட் தோ

மஹிலாவோங் கா ஹோதா ரஹேகா பலாத்கார்

‘Is baar bhi diya beimaano ko vote toh mahilao ka hota rahega balatkaar  (if you vote for the corrupt this time, rapes will continue to occur)’

இந்த தடவையும் அந்த கேடுகெட்டவர்களுக்கு ஓட்டுப் போட்டால், பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

AAP - propaganda against Cong or BJP2

மூன்று மாதங்களில் 500 கற்பழிப்புகள்: தில்லியில் ஜனவரி முதல் மூன்று மாதங்களில் சுமார் 500 கற்பழிப்புகள் நடந்துள்ளன. தில்லி என்றாலே “ரேப் சிடி” அதாவது கற்பழிப்பு நகரம் என்றெல்லாம், டிவிசெனல்களில் விவாதம் செய்து வருகிறர்கள். ஆனால், இந்திய பெண்கள் நாகரிகமாக நடந்து கொள்ளஏண்டும் என்ற விஷயம் வரும்போது, நவீன உலக மங்கையர், இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கூற வேண்டாம். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்று பேசினார்கள். ஆனால், இப்பொழுது இத்தகைய கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்களா அல்லது கண்டிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.

AAP - propaganda against Cong or BJP4

காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த கலாச்சாரத்தைப் பின்பற்றும் புதிய கட்சிகள்: அசிங்கமான, கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம், விளம்பரம் செய்வதில் காங்கிரஸ் ஏற்கெனவே வழி காட்டியுள்ளது. ராஜிவ் காந்தி காலத்திலேயே, காங்கிரஸார் கோடிகளை செலவழித்து, இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை வெளியிட்டது. அவற்றைப் படித்தால், அவ்வளவு மோசமான வாசகங்களு, அதற்கேற்றார்போல, தூண்டிவிடும் படங்களும் இருந்தன. ஒருவேளை மக்கள் இப்பொழுது மறந்திருக்கமாட்டர்கள்.

AAP - propaganda against Cong or BJP5

அரசியல்வாதிகள் எப்பொழுது நல்லவர்கள் ஆவார்கள்: அரசியல்வாதிகளை அப்படி விமர்சிப்பதால், அவர்கள் ஒன்றும் கவலைப்படப்போவதில்லை. அதனால், மனிதத்தன்மையற்றவர்கள்,

  • ஊழல்காரர்கள், கெட்டவர்கள், அயோக்கியர், அரக்கர்கள், கொடுங்கோலர்,……….

என்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரப்போவதில்லை. கொலைகாரர்கள், கொள்ளைக் காரர்கள், கற்பழிப்பாளிகள், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் என்பவர்களே எம்.பிக்களாக உள்ளனர், அமைச்சர்களகவும் உள்ளனர். சுத்தமாக வரவேண்டும் என்றால், எல்லோரும் அத்வானி மாதிரி ஒதுங்கிக் கொண்டு, வழக்கு முடிந்த பிறகு, மறுபடியும் அரசியலுக்கு வரமாட்டார்கள். அப்படியே இருந்து கொண்டுதான் அனுபவித்து வருகிறார்கள். ஜெயிலுக்கு போனாலும், கனிமொழி போன்றவர்கள் எம்.பி ஆகிவிடவேண்டும் என்ற வெறியில் உள்ளது, தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள போடும் வேடம் தான். அதற்கு காங்கிரஸ் உதவுகிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது, இங்குகூட, பிஜேபி போன்ற கட்சிகள் காங்கிரஸை வெல்லமுடியாது என்று அரவிந்த கேசரிவால் பொன்றோர் பிரச்சாரம் செய்கிறார்கள். பிறகு, இவர்கள் காங்கிரஸைத் தோற்கடிக்கடிக்கப் போகிறார்களா? இல்லையே, இவர்கள் காங்கிரசூக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கின்றார்கள் என்றாகிறது. பிறகு பிஜேபியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வதேன்.

AAP - propaganda against Cong or BJP3

காங்கிரஸ்  2013ல் மறுபடியும் வெற்றி பெற்றால் யார் பொறுப்பு?: காங்கிரஸ்-பிஜேபி ரகசிய கூட்டு வைத்திருக்கிறது என்றுகூட பெரிய அரசியல்வாதிகள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள், இப்பொழுதும் கூறி வருகிறார்கள். அப்படியென்றால், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். மூன்றாவது அணி என்று சொல்லிக் கொண்டு பேரம் பேசுவார்களா, காங்கிரஸை மறுபடியும் ஜெயிக்க வைப்பார்களா? கம்யூனிஸ்டுகள் 190களிலிருந்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அவர்களால், அவர்களையும் புனிதர்களாக்கிக் கொள்ளமுடியவில்லை, மாறாக மற்ற கொள்கயுடைவர்களையும், தங்களது போலித்தனத்தனத்தால், இரட்டை வாழ்க்கையினால் பலரை சீரழித்தனர். சித்தாந்த பேசியே எமாற்றினர், ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் முதலாளித்துவத்தை விட அதிகமாகவே அனுபவித்தனர், அனுபவித்து வருகின்றனர்.

 

வேதபிரகாஷ்

© 27-06-2-13

காங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்!

ஜூன் 25, 2013

காங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்!

1940களில்நடப்பது 2010களில்நடக்கிறது: 1940ல் எப்படி ஜின்னா, பெரியார் மற்றும் அம்பேத்கர் காங்கிரஸிற்கு எதிராக யாதாவது செய்யமுடியுமா என்று பேசி[1], பிறகு ஜின்னா மட்டும் பாகிஸ்தானை உருவாக்கி ஜனாதிபதியாகிய பிறகு, அம்பேத்கர் சட்ட மந்திரியானார். முன்னர் கிரிப்ஸ் மிஷனிடம் இந்தியாவுடன் சேரமாட்டேன் என்று கடிதம் கொடுத்தார். ஜின்னாவோ உமக்கு ஸ்திரமான மனநிலை இல்லை, என்னால் முஸ்லிம்களுக்காகத்தான் பாடுபட முடியும் என்று கைவிரித்து விட்டார்[2]. தனது சீடர்களே “கண்ணிர் துளிகளாகி” பிரிந்து சென்றனர். இதனால், பெரியாரோ தனது ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் விரக்தியில் உழன்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், தேசியவாதிகளை ஒதுக்கியது. இப்பொழுதும், காங்கிரஸ் அந்நியநாட்டின் கைகூலியாகத்தான் செயல்படுகிறது.

போதாகுறைக்கு சோனியா என்ற இத்தாலிய பெண்மணியே தலைவியாக இருந்து கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார். திராவிட கட்சிகள் உடன் இருந்திருந்தாலும், முஸ்லிம்களை தாஜா செய்யத் தவறுவதில்லை. காங்கிரஸுக்கு அது வாடிக்கையான வியாபாரம். இனி இந்தியாவிற்காக யார் கொஞ்சமாவது நாட்டுப்பற்றுடன் வேலை செய்வார்கள் என்று பார்த்தால், பாரதிய ஜனதா கட்சி வருகிறது, ஆனால், மற்ற எல்லா கட்சிகளும் அதற்கு எதிராகத்தான் செயல்படுகின்றன[3]. அதற்கு எதிராக என்று சொல்வதை விட, இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. அவ்வாறு தேசத்துரோகத்துடன் செயல்பட பாரதிய ஜனதா எதிர்ப்பு என்பது ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுதர்சன நாச்சியப்பன் பேச்சு, செயல்பாடு முதலியவற்றைக் கவனிக்கும் போது, வித்தியாசமான விவரங்கள் கிடைக்கின்றன.

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது ஏன்?: மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் விளக்கம்: மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் 24-06-2013 அன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும்[4]. இதை தடுக்கவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது”, மேற்கண்டவாறு அவர் கூறினார்[5]. கோவையில் பெரியார் திராவிடக் கட்சிக்காரர்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர்[6].

2011ல் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட எம்.பி குழுவில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் இல்லை: மே 2011ல் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட குழுவில் பாரதிய ஜனதா பார்ட்டி உறுப்பினர் யாரும் இல்லை[7].

  1. கேசவ ராவ் Dr Keshava Rao (Congress),
  2. ஆரோன் ரஷீத் Aaron Rasheed (Congress),
  3. சுதர்ஷ்ண நாச்சியப்பன் Dr Sudharshan Nachiappan (Congress),
  4. ஷதி லால் பத்ரா Shadi Lal Batra (Congress), and
  5. மதன் லால் சர்மா Madan Lal Sharma The delegation includes five Congress Members of Parliament – and
  6. சையது ஆஜிஜ் பாஷா – Syed Aziz Pasha (Left Front),
  7. மொஹம்மது அமீன் Mohammad Amin  (Left Front), and
  8. ஆர்.சி. சிங் R C Singh  (Left Front),.
  9. தாரிக் அன்வர் Tariq Anwar of the Nationalist Congress Party,
  10. சர்பிதுன் ஷாரிக் Sharifuddin Shariq of the National Conference and
  11. ரஞ்சித் பிரசாத் Rajniti Prasad of the Rashtriya Janata Dal

ஆனால், இதில் 5 முஸ்லிம்கள் இருப்பது எப்படி என்று தெரியவில்லை. அதாவது, சுமார் 50% பங்கு. இவர்களால் இந்தியாவிற்கு சாதகமாக பேசமுடியுமா, பேசுவார்களா என்று தெரியவில்லை. இடதுசாரிகளுக்கு மூன்று எனும்பாது, வலதுசாரிகளுக்கு ஒன்று கூட ஏன் இல்லை என்று யாரும் கேட்கவில்லை. இதில் உள்ள சுதர்ஷ்ண நாச்சியப்பன் தான் இப்பொழுது இந்தியாவில் ராணுவப்பயிற்சி பெற இலங்கையர் அனுமதிக்கப்படுவதை ஆதரித்து பேசும்போது, இந்தியா ஏற்கெனவே பாகிஸ்தானுடன் பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் போது, இலங்கையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க விரும்பவில்லை என்றார்[8]. மேலும் இலங்கை தனது வீரர்களை சைனாவுக்கு அனுப்புவதையும் விரும்பவில்லை[9].

நீதித்துறையில் கோட்டா என்றெல்லாம் பேசிய காங்கிரஸ்காரர்: 2007ல் இவர் நீதித்துறையில் கூட கோட்டா / இடவொதிக்கீடு செய்யப்படவேண்டும் என்று பரிந்துறைத்துள்ளார்[10]. அப்பொழுது பாலகிருஷ்ணன் தான் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அதாவது அவ்வவ்போது, இப்படி சர்ச்சைக்குள்ள விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. இருப்பினும் பல பொறுப்புள்ள குழுக்கள், கமிட்டிகள் முதலியவற்றில் அங்கத்தினராக இருக்கும் போது அவ்வாறு பேசுவது சரியா என்று அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மே 2012ல் ஶ்ரீலங்காவிற்கு மட்டும் பாரதிய ஜனதா தலைமையில் எம்.பி குழு அனுப்பட்டது: ஜெயந்தி நடராஜன் சொல்லியும் காங்கிரஸ்கார்கள் கேட்கவில்லையாம். அதாவது, அவர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார்களாம். போதாகுறைக்கு பிகி (FICCI) போன்ற வியாபார கூட்டங்ஹ்கள் போட்ட வேடம் மிகவும் கேவலமாக இருந்தது.

  1. ரபீக் அஹமது – பிகி, தமிழ்நாடு தலைவர்
  2. ஏ. சி. முத்தையா – வர்த்தக சேம்பர் சார்பு
  3. சந்தீப் தீக்சித் – காங்கிரஸ்
  4. மது யக்சி – காங்கிரஸ்
  5. சகுதா ராய் – திரினமூல் காங்கிரஸ்
  6. பிரகாஷ் ஜவேத்கர் – பிஜேபி
  7. அனுராக் தாகூர் – பிஜேபி
  8. தனஞ்சய் சிங் – பி.எஸ்.பி.

இதில் கூட ஏகப்பட்ட அரசியல் நாடகம் நடத்தப்பட்டது[11].  “நான் போகமாட்டேன், நீ வேண்டுமானால் போ”, என்று டிராமா போட்டனர்[12]. ஆனால் வியாபாரம் வேண்டும், காசு வேண்டும், கான்ட்ராக்ட் வேண்டும் என்ற ஆசைகள் மனங்களில் இருந்தன. இது FICCI அங்கத்தினர்களிடையே வெளிப்படையாகவே தெரிந்தது. இப்படி வெவ்வேறான விருப்பங்கள் இருக்கும் போது, “தமிழர்கள்” மீதான அக்கறை இவர்களுக்கு எப்படி வரும்? இங்குகூட பிஜேபி வேண்டுமென்றே சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் பிஜேபி மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்னமும் தெரிந்தது.

திராவிட மற்றும் பெரியார் கட்சிகளுக்கு இன்னும் ஏன் இந்த இந்திய எதிர்ப்புத் தன்மை: திராவிட கட்சிகளால் கடந்த 60-80 ஆண்டுகளில் இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்பொழுது “பெரியார்” அடைமொழியை வைத்துக் கொண்டு டஜன் கணக்கில் திராவிட கட்சிகள் முளைத்துள்ளன. இவையும் இந்தியாவிற்கு எதிராக, இந்திய நலன்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன. “இலங்கையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க விரும்பவில்லை”, என்றதற்கு இவர்கள் என்ன கூறப்போகிறார்கள்? இந்திய அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில், தமிழர்கள் “முஸ்லிம்கள் இரண்டு முறை வாங்கிக் கொள்கிறார்கள்” என்று புகார் செய்தபோது[13], ஏன் இந்த திராவிட / தமிழக வீரர்கள் கண்டு கொள்ளவில்லை? இல்லை, இந்தியர்களுக்கே விடு இல்லை என்றபோது, எதற்காக ஶ்ரீலங்கையில் வீடு கட்டுகிறாய்[14] என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தினரா?

வேதபிரகாஷ்

© 25-06-2-13


[1]  Rao, K. V. Ramakrishna (2001-01-18). The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar. Retrieved 2007-12-27. http://en.wikipedia.org/wiki/Day_of_Deliverance_(India)

Proceedings Volume of the 21st Session, School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai, 2001, pp.128-136.

[2] ஜின்னாவின் கடிதங்களைப் படித்தால், ஜின்னாவின் இஸ்லாம் அடிப்படைவாத மனப்பாங்கும், பெரியாரின் ஸ்திரமற்ற மனப்பாங்கும் தெரிய வரும். அம்பேத்கரைப் போல தானும் புத்தமதத்தைத் தழுவுகிறேன் என்று வந்தபோது, அம்பேத்கர் ஒப்புக் கொள்ளவில்லை. ஜின்னாவைப் போல, பெரியாரைப் பற்றியும் அம்பேத்கர் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார்.

[3] செக்யூலரிஸம் பேசியே இந்தியாவை இக்கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. மக்கள் புரிந்து கொண்டு விட்டால், அவையெல்லாம் தூக்கியெரியப்பட்டும்.

[8] Defending the Indian government’s stand on allowing training of Sri Lankan defence personnel in the country, India’s minister of commerce E M Sudarshan Nachiappan says India cooperated with the neighbouring country as it did not want Lanka to become “another Pakistan”. He said if India refused the request of Sri Lanka, officials would be sent to China, by which they would gain strength and emerge as an enemy of India. Nachiappan said India is already facing issues with Pakistan and does not want Sri Lanka to become another Pakistan.

[10] Mincing no words, the committee said, “This nexus and manipulative judicial appointment have to be broken. Reservation in judiciary is the only answer.” In 2002, the Constitution Review Commission found that out of 610 judges in various HCs, there were no more than 20 belongings to SCs and STs. While representation of these communities in the superior judiciary remains inadequate, the timing of the Nachiappan committee’s recommendation is ironical: For the first time ever, the CJI happens to be a Dalit. The “major rationale” cited by the committee for advocating quota in the superior judiciary is: to redress a “dubious distinction” among the three organs of state.

http://articles.timesofindia.indiatimes.com/2007-08-18/india/27976173_1_subordinate-judiciary-high-courts-judges

[12] Disregarding the appeal of Environment Minister Jayanthi Natarajan, FICCI Tamil Nadu President Rafeeq Ahmed and its former president A C Muthiah to cancel a chambers-sponsored Indian Parliamentary delegation visit to Sri Lanka, five MPs—including Congress spokesperson Sandip Dikshit—left for Colombo by an evening flight on Monday. Only one Congress MP from Telangana, Madhu Yashki, pulled out of the trip meant to promote “political partnership with Sri Lanka”, amid protests in Tamil Nadu. While Dikshit refused to comment on what prompted him to join the delegation ignoring the appeal made by a Congress minister, Trinamool Congress MP Saugata Roy was more forthcoming. Roy said he was going as it was a “goodwill visit” sponsored by the FICCI and not by the government. “We’ve had quite a few discussions in Parliament, now we need to further our engagement with the issue.” The five-member delegation is also expected to visit Jaffna in the northern provinces to check the resettlement and rehabilitation work being funded by the Indian government for the Lankan Tamil population devastated by the civil war. Roy said, “We’re aware of the protests in Tamil Nadu, but how are we to help the ethnic Tamils unless we keep the channels open?” BJP MPs Prakash Javadekar and Anurag Thakur and BSP MP Dhananjay Singh are part of the delegation that went to Colombo. The FICCI itself seemed divided. Ahmed and Muthiah met its president Naina Lal Kidwai here on Monday morning to get the trip cancelled any which way. Kidwai, however, refused to commit herself either way. In fact, there was so much confusion that the MPs were not sure whether they would be able to fly by the 6.15 pm flight. But, Jyoti Malhotra, FICCI Convenor of the Forum of Parliamentarians and a staunch votary of Track-II diplomacy, stayed the course and pushed through the visit. It is being organised as part of a larger programme that seeks to institutionalise political partnership—develop and improve business and political relations among South Asian countries

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms