Posts Tagged ‘திராவிட முனிவர்கள்’
ஏப்ரல் 20, 2013
சட்டத்தை மீறும் நீதிகள்
“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.
இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].
ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…
View original post 576 more words
குறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism
அடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »
மார்ச் 28, 2013
சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்
சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.
- தில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.
- சோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.
- அந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].
சி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
- லல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.
- மாயாவதி மீதான வழக்குகள்.
- முல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.
- ஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்
ஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].
முடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா? …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்
அர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா?
டி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].
கைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி?: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.
இந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா?: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].
சி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்?: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்?
சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம்! அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது? அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.
© வேதபிரகாஷ்
28-03-2013
[2] Naïve as he is, even Rahul Gandhi had blurted out that political parties tended to misuse CBI. “Every party in power can pressure institutions. Every government tries to push its people into such agencies. It is a fact, it is a reality of Indian politics,” he said in May 2009.
http://newindianexpress.com/opinion/article1516897.ece
[11] The DRI had assigned the probe to one of its senior officers called Muruganandam. However, Muruganandam fined only one vehicle while letting free the other 32.
குறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை
1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச் 22, 2013
திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?
2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
சிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன?: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.
முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.
அர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.
விவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].
தி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.
திஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன?: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.
“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.
Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.
“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin. |
உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.
Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi has disputed a report published in The Hindu that said party treasurer M.K. Stalin threatened to quithis position if the DMK did not snap ties with the United Progressive Alliance.In a statement here on Thursday, Mr. Karunanidhi said the DMK functioned on the basis of democratic principles and major decisions were not made by individuals.
He said that after Union Ministers P. Chidambaram, Ghulam Nabi Azad and A.K. Antony had met him on the Sri Lankan issue, he held discussions with senior party leaders, including K. Anbazhagan and Durai Murugan, before taking a decision on leaving the UPA. |
இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.
கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா?: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன? அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.
© வேதபிரகாஷ்
22-03-2013
குறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism
அடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச் 5, 2010
கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II
கருணாநிதிக்கு யோக்கியதை இல்லை: நிச்சயமாக கருணாநிதி என்ற அந்த மனிதருக்கு, இந்து விரோத நாத்திகம் பேசி வரும் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு [இந்த விஷயத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகள் இன்னும் நிலுவயில் உள்ளன], போலி மஞ்சள் துண்டு, யோகா செய்து வரும் ஆன்மீகவாதிக்கு, பலதார சாமானியனுக்கு, மானாட-மயிலாட-மார்பாட- பார்த்து அனுபவித்து வரும் தமிழக-திவாரிக்கு, நாத்திகக் கடவுளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை. முதலில் இவரையேத் திருத்திக் கொள்ளமுடியாத லட்சணத்தில் மற்றவர்கள் விஷயத்தில் அறிவுறைச் சொல்லக் கூட தகுதியற்றவர். அரசாளுகின்றவன் முன்னோடியாக இருக்கவேண்டும். அவனைப் பார்த்துப் பின்பற்ற வேண்டுமானால் தான் தனது தனி மனித வாழ்க்கையில் தூய்மைமையாக, தூயனாக, திருவள்ளுவர் காட்டிய நெறியில் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், சினிமா கூத்தாடி வாழக்கை வாழ்ந்து விட்டு, திரைப்படத்தில் நடிப்பது போல, தினம்-தினம் “ஷோக்கள்” காட்டிக் கொண்டு வாழும் போலி முதலமைச்சர்கள் மக்களின் நன்மை பற்றி பேசுவது வியப்பாகத்தான் உள்ளது.
திராவிடப் போலித் தனம்: அரிசி, பருப்பு, காய்கறி விஷயத்தில்கூட தனது விளம்பரம் போட்டு அரசு பணத்தை விரயம் செய்யும் இந்த நவீன நீரோக்கு ஏன் அப்பொழுதெல்லாம் வீரம் வரவில்லை? “பாமர மக்களின் வாழ்வையும், அறிவையும் பாழாக்கி வருகின்ற, பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை, மக்களுக்கு அடையாளம் காட்ட, பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும் பிரசாரம் செய்து வருகிறது”. உம்மைப் போன்ற நாத்திக அரசியல்வாதிகளே இந்த “கழகத்தில்” தானே வருகிறது? கழகம் = சங்க இலக்கியத்தின்படி, திருடர்கள் கூடும் இடம். “பக்தி வேடம் பூண்டு, பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும், அவர்களிடம் சிக்கி பலியாகி, சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது”, இதிலும் எல்லா திராவிட சாமியார்களும், திராவிட புரோகிதர்களும், திராவிட மணம் / மணமுறிவு செய்விக்கும் திராவிட ஐயர்கள், திராவிட நடிகை-நடிகர்கள்………..என வந்து விடிகிறார்களே?
முற்றும் துறந்த திராவிட முனிவர்களும், படிதாண்டாத் திராவிடப் பத்தினிகளும்: அவர்கள் எல்லாம் என்ன, அண்ணா சொல்லியபடி, “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல” என்ற “கழக”த்தில் வருகிறதா? · ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.
- கிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.
- ஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].
- கருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்!
- “சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
- சட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்?
குறிச்சொற்கள்:இரவில் காமி, கருணாநிதி, திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், நித்யானந்தா, பகலில் சாமி
அரசின் பாரபட்சம், அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், களவியல் மன்னன், காதல் கோமாளி, சமத்துவம், சர்வதர்ம சமபாவம், செக்யூலரிஸம், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாக்கிலே உமி, பகலில் சாமி, வீடியோவில் இமி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »