Posts Tagged ‘உள்துறை அமைச்சர்’

சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு!

ஓகஸ்ட் 9, 2012

சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].

Initiating the discussion, Mr. Advani said UPA-II is illegitimate. “It has never happened in the history of India. Crores of rupees were never spent to get votes,” he said[2]. This evoked a sharp reaction from the Treasury Benches. UPA members were on their feet and demanded an apology from him.Intervening, Ms. Kumar said the word used by Mr. Advani had hurt the sentiments of everyone. “If you want, you can withdraw it,” she said. Or, she would go through the records and expunge any objectionable or unparliamentary word.

With the Congress MPs continuing their protest, the Speaker adjourned the House for lunch.

However, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government.

இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.

ஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.

அசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.


ஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:

  • அசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.
  • ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.
  • அசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].
  • சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
  • கலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.
  • சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].
  • அதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.
  • இது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
  • பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.
  • ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.
  • இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.

இவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும்? அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.


சோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.

3 Congress ministers have orgainsed a relief camp for Assam victims. On the banner it is mentioned “ONLY FOR MUSLIMS”… Is this True “SECULARISM”. Y is it that congress calls BJP as “COMMUNAL”??? when Photographers clicked pics of banner, their cameras were broken into pieces..

http://www.facebook.com/photo.php?fbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்?
அத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.

அசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை?: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா? அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா?. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.

The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.

 

1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி,  1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்!


 


[6] angrily turned around and signaled her party members to protest at the comments, made in connection with the cash-for-votes scam of 2008

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Angry-Sonia-makes-Advani-retract-words/Article1-910143.aspx

முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!

ஓகஸ்ட் 6, 2012

முஜாஹித்தீன் தீவிரவாதிகள் குண்டு வெடிக்க, உள்துறை அமைச்சர், இப்தர் பார்ட்டியில் ஜாலியாக உண்கிறார்!

இந்திய ஜிஹாதியும், உள்துறை அமைச்சகமும்: மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே – அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியன்றே – அவரை ஜிஹாதி தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் ஐந்து குண்டுகளை வெடிக்க வைத்து வரவேற்றுள்ளது மற்றும் மத்திய அரசை அதிர வைத்துள்ளது[1]. தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது என்று அவர் கருதுவாரா அல்லது சிதம்பரம் போலவே பேசிவிட்டு மௌனமாகிவிடுவாரா என்று பார்க்கப் போகிறோம். சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு-ஐந்து வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.

 

காங்கிரஸும் முஸ்லீம்களும், ஓட்டுவங்கியும்: உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் சாதாரணமாக நடந்தன. முஸ்லீம்களிடம் எருக்கமாக இருந்து, ஓட்டுவங்கியைக் காப்பாற்றி வந்ததல், தீவிரவாதத்தைப் பற்றி ஒன்றும் பெரிதாகக் கவலைப்படவில்லை[2]. மகன் கார்த்திக் வெளிப்படையாக முஸ்லீம்கள் எல்லோரும் காங்கிரஸில் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு வேறு விடுத்துக் கொண்டிருந்தார்[3]. ஆகையால் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

 

மத்திய உள்துறை அமைச்சர் தான், பயந்து திரும்பச் சென்று விட்டார் என்றால், மாநில உள்துறை அமைச்சர் ஜாலியாக இப்தர் பார்ட்டியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

(From left) Minister of state Smt. Fauzia Khan, Home Minister R.R. Patil and Hasan Mushrif during the Iftar Party organised by Labour Minister Hasan Mushrif  at Islam Gymkhana (1.8.2012)
(Courtesy : Department of Information and Public Relations, Maharahstra Government)

 

குண்டு வைத்தது இந்துக்களா, மாவோடிஸ்டுகளா, முஸ்லீம்களா: ஊடகங்கள்வழக்கம் போல திசைத்திருப்ப குண்டுகள் வைத்தது, இந்துக்கள், மாவோயிஸ்ட்டுகள் என்று கேள்விக் குறியோடு செய்திகள் வெளியிட்டன.

 

புனே குண்டு வெடிப்புகள் -இந்துத்துவா பயங்கரவாதமா?

Inneram.com – ‎2 ஆக., 2012‎

புனே: புனேயில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்து மகாராஷ்டிரா அரசு விசாரணை நடத்தும் என மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர். புனே குண்டுவெடிப்பு பற்றிக் கருத்து தெரிவித்த மத்திய அரசு, இதில் தீவிரவாதச் செயல் இல்லை என்று கூறியிருந்தது.

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத்துவா …

Oneindia Tamil – ‎2 ஆக., 2012‎

 புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் மகாராஷ்டிரா 

 

 

ஆனால், இந்திய முஜாஹித்தீன் தான் பின்னணியில் இருக்கிறது[4] என்றவுடன் வழக்கம் போல அமைதியாகி விட்டன[5]. திஹார் ஜெயிலில் இருக்கும் ஜிஹாதிகளிடம்[6] விசாரணை செய்தபோது கிடைத்த விவரங்களை[7]  வைத்துக் கொண்டு, ஆராய்ந்ததில், புதிய சைக்கிள்கள் உபயோகப்படுத்தியது, வெடிக்காக குண்டுக்சளை ஆராய்ந்தது முதலிவற்றில் தெரிய வந்தது.

 Anti-Terrorism Squad (ATS) on Saturday raided the houses of suspected Indian Mujahideen activists Shaikh Altaf and Shaikh Ramzan in Bijapur in connection to the Pune blasts[8].  Preliminary investigations into the blasts indicate that the modus operandi used in the blasts is similar to that of the Indian Mujahideen. Sources said the IEDs contained shrapnel in a metal container, a paste of ammonium nitrate in oil, a nine-volt battery and a wrist watch as timer. Initial reports suggest they didn’t work properly because of dampness[9].No arrest or detention has been made in the Pune blasts so far. Four low-intensity explosions took place in the busy J M Road area in Pune on August 1. Union Home Secretary RK Singh had earlier said there was definitely a plan behind the low-intensity blasts, and added that the unexploded IEDs are being investigated thoroughly.

 

இந்திய முஜாஹித்தீன் உறுப்பினர்களான செயிக் அட்லப் மற்றும் செயிக் ரம்ஜான் வீடுகளில் ATS சோதனையிட்டனர். IEDயின் உபயோகம் – உலோக பாத்திரம், அம்மோனியம் நைரேட் பேஸ்ட், பேட்டரி, டைமர் முதலியவை இந்திய முஜாஹித்தீனின் வேலையைக் காட்டுகிறது என்று போலீஸார் எடுத்துக் காட்டுகிறார்கள். வெடிக்காத இரண்டு குண்டுகளைக் கைப்பற்றி, ஆராய்ந்ததில் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

பாலிஹுட் நடிகர்கள் சல்மான்கான், சஞ்சய்தத் முதலியோரும் இப்தர் பார்ட்டிகளைக் கொண்டாடியுள்ளனர். சோனியா காந்தியும் தனது தொகுதியில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

 

வேதபிரகாஷ்

06-08-2012


[5] The investigators have ruled out the possibility of Maoists or Hindu fringe groups being responsible for the four blasts and two unexploded IEDs, sources said.

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

ஏப்ரல் 24, 2012

நித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)

நித்யானந்தா செக்ஸ் வீடியோ விகாரங்கள்[1]: நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ[2], வீடியோ எடுத்தது[3], சன்–டிவி தொடர்ந்து ஒளிப்பரப்பியது[4], அடிக்கடி ஒளிப்பரப்பியது, மிரட்டி கோடிகளில் பணம் கேட்டது, ஒளிபரப்பக் கூடாது என்று தடைகோரியது, முதலிய விவகாரங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் நன்றகத் தெரிந்தவையாகும்[5]. ஆகையால், அவற்றைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதே போல ஒரு காங்கிரஸ் செக்ஸ்-சிடி விவகாரத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் சட்டம் வேறு மாதிரி செயல்படுவது தெரிகிறது. கருத்துரிமை, அந்த உரிமை, இந்த உரிமை என்று பேசுபவர்கள் இம்மாதிரி விஷயங்களில் அவ்வாறு பேச முடியாதுதான். இருப்பினும், ஒரே மாதிரி அணுகுமுறை இல்லாதது போது, வித்தியாசம் எடுத்துக் காட்டத்தான் செய்கிறது.

சிவப்புப்புடவை” – வாழ்க்கையேஅதிகாரத்திற்குவிலையாகும்போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ! அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்! அபிஷேக் மனு சிங்வி என்பவர், மிகவும் பெரிய இடத்து மனிதர். சோனியா மெய்னோவிற்கு மிகவும் வேண்டியவர்[6]. சோனியாவின் இளம் பிராயத்து விஷயங்களை வெளிப்படுத்தும் ஒரு புத்தகம் இந்தியாவில் வெளிவராமல் இருந்ததற்கு, சிங்வி அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார்[7]. அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார். அத்தகைய சிங்வி இப்பொழுது தாமே ஒரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டு, சிடி வந்துள்ளது.

அபிஷேக் மனு சிங்வி செக்ஸ் வீடியோ விகாரங்கள்: சில நாட்களுக்கு முன்பாக, இவர் தன்னுடைய சேம்பரில், ஏதோ ஒரு ஜூனியர் வக்கீல் பெண்ணுடன் உறவு கொள்வது போல வீடியோ ஒன்று இணைதளத்தில் வலம் வந்தது. அபிஷேக் மனு சிங்வி தனது அறையில் மேஜைக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறார். எதிர்பக்கத்தில் அந்த பெண் உட்கார்ந்திருப்பார் போல உள்ளது. பின்பக்கத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ள பீரோக்கள் இருக்கின்றன. அரைமணிக்கும் மேலாக ஓடுகின்ற இந்த வீடியோவில் இந்தியில் இவர் ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறார்…………………..(முதலில் சாதாரணமாகப் பேசி பிறகு செக்ஸியாகப் பேசி விஷயத்திற்கு வருகிறார் என்று இந்தி தெரிந்தவர்கள் கேட்டு சொல்கிறார்கள்) பிறகு அப்பெண்ணை அணைத்துக் கொள்கிறார்………………வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………………சட்டையை அவிழ்க்கிறார்………….வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது……………….படுத்துக் கொள்கிறார். வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது. பிறகு அபிஷேக் மனு சிங்வி எழுந்து கொள்கிறார்……………………முகத்தில் கண்ணாடி இல்லை…………………….அந்த பெண்ணை வேறு திசையில் படுக்கச் சொல்கிறார். கையை விரலால் அவ்வாறு சுழற்றி காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாது, கையால் தலையைப் பிடித்து அமுக்கி படுக்க வைக்கிறார்……………………….அப்பொழுது வீடியோவில் ஒன்றும் தெரிவதில்லை. வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு உட்கார்ந்திருக்கிற மாதிரி உள்ளது. ஆனால், இவர் ஏதோ வேகமாக எழுந்து-எழுந்து உட்காருகின்ற மாதிரி தென்படுகிறது. . வீடியோ ஒடிக்கொண்டிருக்கிறது………………………….பிறகு அவர் எழுந்து கொள்கிறார். முதலில் எதையோ மாட்டிக் கொள்கிறர் ;போல உள்ளது. பிறகு பேன்டை மாட்டிக் கொள்கிறார். இன்-சர்ட் செய்து சரிசெய்து கொள்கிறார். ஆக இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு, நிச்சயமாக அபிஷேக் மனு சிங்வி, ஏதோ ஒரு பெண்ணுடன், அவரது சேம்பரில் செக்ஸில் ஈடுப்பட்டிருந்தார் என்பது போலத்தான் உள்ளது.

அரசியல் பலம் இருந்ததினால் செக்ஸ்-சிடி தடை செய்யப்பட்டது: விஷயம் தெரிந்தவுடன், அபிஷேக் மனு சிங்வி தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிக் கொண்டார். இந்த சிடியை அவரது டிரைவர் தான் பரப்பினார் என்று பிறகு தெரிந்தது. கொடுத்த சம்பளம் போதவில்லை என்ற காரணத்தால் தான் அவ்வாறு செய்ததாகவும், பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்ததும், அந்த சிடியை கொடுத்துவிட்டதாஅவும் தெரிகிறது. வழக்கம் போல அந்த சிடி மார்பிங் செய்யப் பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் பெரிய இடத்து விவகாரம் என்பதால், ஊடகங்களும் அமுக்கி வாசித்தன. ஈரொரு நாட்களில் மொத்தமாக அமுங்கிவிட்டது. இவ்விதமாகத்தான் சில சுதந்திரங்கள் உள்ளன. ஆனால் இணைத்தளத்தில், இந்த வீடியோ வைரஸ் மாதிரி பரவியது[8]. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி, தன் சக பெண் வழக்கறிஞர் ஒருவருடன், ஏடாகூடாமாக இருப்பது போன்ற சி.டி., வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[9]. இந்த சி.டி.,யை வெளியிடக் கூடாது என்று, சிங்வி தரப்பு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியுள்ள நிலையில், இந்த சி.டி.,யை வெளியிட்ட அவரின் டிரைவரும், பல்டி அடித்துள்ளார். இந்த சர்ச்சையால், அவர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து சத்தமின்றி நீக்கப்பட்டார்.

சிங்வி ராஜினாமா (23-04-2012)[10]: காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் பார்லிமென்ட் நிலைக்குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்[11]. ‌இவர் வகிக்கும் பற்ற பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்[12]. சி.டி. விவகாரத்தில் சிக்கிய அபிஷேக்சிங்வி, பெரும் சர்ச்சைக்குள்ளானார். முன்னதாக ‌காங்., செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்தும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது சட்டத்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இது குறித்து சிங்வி கூறுகையில், சி.டி. விகாரத்தில் என்னை மிரட்டினர். எனவே என்னை கட்டாயப்படுத்திய பதவி விலக வற்புறுத்தியுள்ளதாக கூறினார்[13]. இருப்பினும் “நான் அவனில்லை” என்று கூறவில்லை! இதற்கும் நித்யானந்தாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் சென்னை உயர்நீதி மன்றம் வேறுவிதமாக இருந்திருக்கிறது.

வேதபிரகாஷ்

24-04-2012


[2] வேதபிரகாஷ், நித்தியானந்தாதமிழ்நடிகை,சன்நியுஸ்தொலைக்காட்சி, , மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:  http://dravidianatheism.wordpress.com/2010/03/02/நித்யானந்தா-தனிழ்-நடி/,

[3] வேதபிரகாஷ், ஸ்ரீநித்ய தர்மானந்தாவை குறுந்தகடு செய்யவேலைக்கு அமர்த்திய நித்யானந்தா!, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்::http://dravidianatheism.wordpress.com/2010/03/07/ஸ்ரீநித்ய-தர்மனந்தாவை-க/

[4] வேதபிரகாஷ், நான்அவனில்லை, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:
http://dravidianatheism.wordpress.com/2010/03/07/நான்-அவநில்லை-நிதான/

[9] தினமலர், ஏடாகூடசி.டி.,யில்சிங்விஎக்கச்சக்கம்‘: காங்., செய்திதொடர்பாளர்பதவிநீக்கம், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2012,23:40 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2012,02:29 IST;  சென்னைப் பதிப்பு; http://www.dinamalar.com/News_detail.asp?Id=450752

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

ஜனவரி 20, 2011

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

சிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது? உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட்? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.  இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011


[1] SHUJAAT BUKHARI, Interlocutors ask BJP not to hoist tricolour, http://www.thehindu.com/news/national/article1102872.ece

[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169366

[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169732

 

ஜனவரி 2011 – சில செய்திகள் – நியூஸ்-கட்டிங்ஸ்!

ஜனவரி 9, 2011

ஜனவரி 2011 – சில செய்திகள் – நியூஸ்-கட்டிங்ஸ்!

 

————————-

————————-

—————————-

 

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நவம்பர் 30, 2010

தேசத்துரோக பேச்சுகளுக்காக வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

நீதி மன்றம் ஆணையிட்டப்பிறகு, தில்லியில் திலக் மார்க் போலீஸ் ஸ்டேஷனில், ஒருவழியாக தேசத்துரோக பேச்சுகளுக்காக கீழ்கண்டவர்களின்மீது[1] பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்[2] வழக்கு தொடரப்பட்டுவிட்டது!

1.   அருந்ததி ராய்

2.   சையது அலி ஷா கிலானி,

3.   வராவர ராவ்

4.   எஸ்.ஏ. கிலானி

5.   செயிக் ஷௌகத் ஹுஸைன்

6.   சுபத்ரா சென்குப்தா

7.   சுஜாதோ பத்ரா

சட்டப்பிரிவு சட்டமீறல்கள்
124 A (sedition) of the IPC தேசத்துரோகம்
153 A (promoting enmity between different groups and doing acts prejudicial to maintenance of harmony) of the IPC இரு பிரிவினருக்கிடையே விரோத்தத்தை மூட்டும் வகையில் ஊக்குவிப்பது மற்றும் அமைதியைக்கெடுப்பது
153 B (imputations, assertions, prejudicial to national integration) of the IPC தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது, தப்பாக விளக்குவது, களங்கம் ஏற்படுத்துவது முதலியன
504 (insult intended to provoke breach of peace) of the IPC அமைதியைக் குலைப்பது
505 (statements conducing to public mischief) of the IPC பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடப்பது
Section 13 of the Unlawful Activities (Prevention) Act. மேல் கண்ட சட்டமீறல்கள் – இச்சட்டப்பிரிவின் கீழ்

காஷ்மீர் இந்துக்கள்தான் புகார் கொடுத்தனர் நடவடிக்கை எடுக்க இவ்வலவு நாள்: அரசு ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்த காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[3], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது[4]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்தார்[5]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[6], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லி தூங்கிவிட்டார்கள்!

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: ஆனால், ஏதோ செய்யவேண்டுமே என்று, “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. முன்பும் தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று கொடுத்த நோட்டிஸும் பாக்கி இருக்கிறது[7].

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன[8]: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது[9].

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்தது[10]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[11].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[12]. இருப்பினும், காங்கிரஸ் அரசு நடவடிக்கை வேண்டாம் என்று தீர்மானித்தது[13], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[14]. அந்நேரம், பீஹாரில் தேர்தல் இருந்தது!

வேதபிரகாஷ்

© 30-11-2010


[4] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[7]வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!,  https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[8] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!, https://secularsim.wordpress.com/2010/10/29/no-action-against-arundhati-and-geelani/

[9] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[10] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

 

[11] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[12] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[13] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[14] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!

ஒக்ரோபர் 29, 2010

தேசத்துரோகக் குற்றம்: யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை: காங்கிரஸ் முடிவு!

வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு: பிரிவினையை வலியுறுத்திப் பேசிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, பிரிவினையை ஆதரிக்கும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது[1]. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என கிலானியும், காஷ்மீர் மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் என அருந்ததி ராயும் தில்லியில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினர்[2].  இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என சட்ட ஆலோசனையை உள்துறை அமைச்சகம் நாடியது. “தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்” என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியது[3]. இருப்பினும், காங்கிரஸ் அரசு இப்படி தீர்மானித்துள்ளது[4], வழக்கமான முஸ்லீம் தாஜா பிடிக்கும் போக்கு தான் தெரிகிறது[5]. கேட்டால், பீஹாரில் தேர்தல் என்பார்கள்!

 

ஜிஹாதிகளிடம் செக்யூலரிஸ செல்லத்தனம் ஏன்? வழக்குப் பதிவு செய்யப் போவதில்லை, யார் என்ன பேசினாலும் எந்த சட்ட நடவடிக்கையும் இல்லை…….என்ற நிலை தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாகாதா? கல்லடி ஜிஹாதிகளை திருப்பியடிக்காமல், நமது வீரர்கள் செல்லமாக அடி வாங்கிக் கொண்டு வந்தார்கள், ஆனால், என்னாயிற்று? நங்கள் எப்படி கட்டடித்தோம் என்று அந்த தேசத்துரோக கருத்தரங்கத்திலேயே “செயல் விளக்கம்” செய்து காட்டினார்கள்! அதுமட்டுமட்டுமா, எல்லைகளில் ஊடுவல், பாகிஸ்தானியர் துப்பாக்கி சூடு, இந்திய ஜவான்கள் பல்கி, காயம் என்று அந்தந்த நாட்களில் – 20-23, அக்டோபர் – தான் நடந்தேறின. இருப்பினும் சொதப்பலாக, வருமானவரி கட்டவில்லை என்று ஜிலானிக்கு நோட்டீஸ்[6] அனுப்பப்பட்டுள்ளதாம்!

 

நடவடிக்கை தேவையற்ற விளம்பரமாக அமையும் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்: எனினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு தேவையற்ற விளம்பரமாக அமையும் என்பதாலும், பிரிவினைவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்பதாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன[7]. மானம் கெட்ட காங்கிரஸ் ஏற்கெனெவே பலதடவை விளம்பரங்களிளேயே பாகிஸ்தானிற்கு பலதடவை அத்தகைய “பப்ளிசிடி” கொடுத்துள்ளது. இப்பொழுது கூட, பாகிஸ்தான் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளில் சுட்டு வாந்தாலும், பொத்திக் கொண்டுதான் இருக்கிறது.

 

சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றி போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்குத் தகவல் வந்தபின் அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கோ, மத்திய உள்துறை அமைச்சருக்கோ, அமைச்சகத்துக்கோ கிடையாது என பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. பிஜேபி என்ன சொன்னாலும், யாரும் ஒன்றும் கேட்டுவிடப்போவதில்லை! அந்த நிலையில் அந்த கட்சி உள்ளது!

 

கிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: “சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தகவல் வந்தால், அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது[8], அந்த வழக்கை மேற்கொண்டு நடத்துவது குறித்து அனுமதி கோரும் சமயத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட முடியும்”.

 

அமைதியான குழுவினரே அடாவடடத்தனமான கருத்துகளை வெளியிடுகிறர்கள்: “காஷ்மீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவில் உள்ள ராதா குமார், ஆசாதி (சுதந்திரம்) தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் வகையில் திருத்தம் கொண்டு வர ஆலோசனை வழங்குவேன் எனக் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இந்திய ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஒரு முக்கியமான கருவியாகும். பிரிவினைக்கு அதைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கடந்த ஓராண்டாக அமைதியான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என உள்துறை அமைச்சர் .சிதம்பரம் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால், அமைதியாக செயல்பட வேண்டிய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக கருத்து கூறிவருகின்றனர். மூன்று பேர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுவதற்காக நியமிக்கப்படவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தனிநாடு கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது”, என்றார் அவர்.

 

காஷ்மீர் இந்துக்கள் புகார் – நடவடிக்கை எடுக்கப் படுமா?: அரசு இப்படி ஒருதலை பட்சமாக செயல்படுவதைக் கண்டு வருத்தமடைந்துள்ள காஷ்மீர இந்துக்கள், தாமே “தனி நபர்” என்ற முறையில் புகார் செய்ய முடிவெடுத்தனர். “அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பினோம், ஆனால் அவர்ட்கள் மெத்தனமவே உள்ளார்கள்”, என்று ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்[9], காஷ்மீர இந்துக்கள் சார்பில் தில்லியில் திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது[10]. சுஷில் குமார் என்பவர் இந்த் புகாரைக் கொடுத்துள்ளார்[11]. ஆனால், போலீஸார், அது “வழக்கிற்கு தகுதியுடையாதாக” இருப்பின், ஓரிரு நாட்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு[12], விசாரணை மேற்கொள்ளப் படும்”, என்று சொல்லியிருக்கிறார்கள்!

 

யார் இந்த காஷ்மீர் இந்துக்கள்? “காஷ்மீர பண்டிட்டுகள்” என்றழைக்கப் படும், காஷ்மீர இந்துக்கள் தாம் காஷ்மீரத்தின் மண்ணின் மைந்தர்கள்[13]. ஆனால், கடந்த 300 ஆண்டுகளில், வந்தேரிகளான முஸ்லீம்கள் தமக்கேயுரித்த குற்றங்கள், கொடுமைகள், குரூரங்கள், கொடுங்கோல் ஆட்சி என்ற முறையில் சிறிதும் மனிததன்மை இல்லாமல், அவர்களது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் நாகரிகம் முதலியவற்றின் சின்னங்களை அடியோடு ஒழித்தழித்து, சிறிது சிறிதாக இப்பொழுது காஷ்மீரத்தை விட்டே விரட்டியடுத்து விட்டனர்[14]. எஞ்சியவர்கள் ஜம்முவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தகர வீடுகளில்[15], முகாம்களில் தில்லியில் வசித்து வருகின்றனர். அரசு அமைத்துள்ள மூன்று மத்தியஸ்தக்காரர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை. அன்று கருத்தரங்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட, போலீஸார், இவர்களைத் தாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றினர் என்று குறிப்பிடத் தக்கது! அதாவது தேசத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன[16]. ஆக இந்துக்கள் இப்படி எல்லாவிதத்திலும் ஓரங்கட்டப்படுகிறர்கள். இவர்களது மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, எண்ணங்களை, உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. உடகங்களும் அப்பட்டமாக மூடி மறைக்கின்றன.

 

வேதபிரகாஷ்

© 28-10-2010


[1] தினமணி,  கிலானி, அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு இல்லை: மத்திய அரசு முடிவு, First Published : 29 Oct 2010

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=……………..81

[2] வேதபிரகாஷ், சூஸன்னா அருந்ததி ராயை கைது செய்வது, சிறையிலடைப்பது ஒன்றும் புதியதல்ல: குற்றவாளிகளுக்கு இது பழக்கமானதே!, https://secularsim.wordpress.com/2010/10/27/susanna-arundhati-roy-sedition-arrest/

[3] A legal opinion given by a law officer had said that the speeches made by the duo at the Delhi conference amounted to sedition and both should be booked under Section 124A of the IPC.

http://www.indianexpress.com/news/No-action-against-Geelani–Arundhati/704153

[4] The decision to the speeches was taken to avoid giving a handle to separatists and civil liberties activists, who were expected to rally around Roy to support freedom of expression.

http://www.hindustantimes.com/No-case-to-be-filed-against-Roy-Geelani/H1-Article1-619143.aspx

[6] வேதபிரகாஷ், தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!, https://secularsim.wordpress.com/2010/10/28/it-case-filed-intead-of-treason-against-geelani/

[7] Highly-placed sources said a decision in this regard was taken after considering various issues, including the legal opinion secured by the Delhi Police. “Booking them (Geelani and Roy) would only give them unnecessary publicity and a handle to separatists in the Valley. We have decided to ignore them,” an official in the Union Home Ministry said.

தினமலர், கிலானி, ராய் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை, அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115686

[8] தினமணி, கிலானி, அருந்ததி ராய் பேச்சு; போலீஸ் விசாரணையைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை: பாஜக, First Published : 29 Oct 2010 01:35:35 AM IST; Last Updated : 29 Oct 2010 02:39:51 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324883&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=…..95

[10] The complaint for registration of FIR against them has been filed at Tilak Marg police station, and according to the complainant, the police has promised investigation and “if the case suits, then a FIR will be filed within two days,” which may prompt the police to take action against Roy, Geelani and others.

http://www.dailypioneer.com/292994/Kashmiri-Pandits-lodge-police-complaint.html

[13] இருப்பினும் இவர்களது உரிமைகள் பேசப்படுவதில்லை. எந்த ராயும், நாயும் கண்டு கொள்வடில்லை.

[14] மனித உரிமைகள் வீரர்கள், போராளிகள், முதலியோர் கண்டு கொள்வதில்லை. உண்மைகளை அமுக்கத்தான் பார்க்கின்றனர். இணைதளங்களில் உண்மைகளை வெளியிட்டாலும் அழித்து விடுகின்றனர்.

[15] அருந்ததி தகர வீட்டில் வசித்தாக, இணைதளங்களில் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது, இவர்களை தாராளமாகச் சென்று பார்த்திருக்கலாமே? ஆமாம், போட்டியாக இத்தாலிக்கு வந்து விடப்போகிறார்கள் என்று பயந்து விட்டார் போலும்!

[16] ஏசி ஹால், பிரியாணி லன்ச், ராத்திரி டிரிங்ஸ் என சகலமும் இருந்தன. அனுபவித்த பேராளர் வழியாக அறிந்தது!

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

ஒக்ரோபர் 29, 2010

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது[1].

தேச விரோத பேச்சும், காங்கிரஸின் நாட்டுப் பற்றும்: சில தினங்களுக்கு முன்பு, டில்லியில் காஷ்மீர் பிரச்னை குறித்த கருத்தரங்கிற்கு, உள்துறைக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்[2]. அந்த கூட்டத்தில் பிரிவினைவாத குழு தலைவரான சையது அலி ஷா கிலானியும், பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயும் கலந்து கொண்டனராம். அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சு, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளதாம். காஷ்மீர் தங்களின் பகுதி அல்ல என்பதை சர்வதேச அரங்கில் இந்தியாவே ஒப்பு கொண்டதாக அருந்ததி ராய் கூறியிருந்தாராம். இதற்கு இந்த கூட்டம் முடிந்ததுமே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தாராம். அருந்ததி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தாராம். பாவம், நாட்டில் பிஜேபியைத் தவிர வேறு எந்த இந்தியனுக்கும் சுரணை வரவில்லும் போலும்! இதுகுறித்து டில்லி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்துவர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தாராம்.

போலீஸார் கைது செய்ய தயாராக இருந்தாலும் உள்துறை செய்யும் சூழ்ச்சிகள்: இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தீவிர வடிவம் எடுக்க துவங்கியுள்ளது. அருந்ததி ராயை கைது செய்வதற்குண்டான சட்ட ரீதியிலான அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவரை கைது செய்யலாம் என்ற முடிவுக்கு டில்லி மாநகர போலீசின் சட்டப்பிரிவு வந்துள்ளது.  அறிக்கையும் கொடுத்தாகி விட்டது, ஆனாலும் கைது நடவடிக்கைக்கு முன்பாக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது[3]. அருந்ததியின் பேச்சு, ராஜதுரோக குற்றம் என்றும் அவரை குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் டில்லி போலீஸ் நம்புகிறது. ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. காரணம் மிகவும் நுணுக்கமான இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.  அதை போலவே சட்ட அமைச்சகமும் இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு, எதையும் மேற்கொண்டு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் சிங்வி, கபில் சிபல்,…….போன்ற சட்ட நிபுணர்கள் வாய்மூடி மௌனியாகி விட்டார்கள் போலும்!

“உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றும் பேசும் சட்ட அமைச்சர்! சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றார். பாவம் , இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் சீனாவில் இருக்கிறார். மானம் கெட்டவர்கள், நடந்து சென்றாலே நேராக பார்த்து கேட்டுவிடலாம், ஏனெனில் இருப்பது ஒரே கட்டிடத்தில் அருகருகே தானே! இதற்கிடையில் நேற்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அளித்த பேட்டியில், “கிலானி, அருந்ததி ஆகியோரின் பேச்சுக்கள் விவரம் ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார். இப்படி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது!

இதே பிரஷாந்த் பூஷன் தான் முன்னமும் சூஸன்னாவை ஆதரித்தது[4]: இதே மற்றவர்கள் விஷயம் என்றால், ஆஹா முன்பு கோட்சேவிற்கு ஆஜரானாரே அதே வக்கில்தான், இப்பவும் ஆஜராகிறார் என்று கதை விடுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மைகளை மறைக்கிறார்கள். ஆமாம், இப்படி பல டிவி செனல்களுக்கு சொந்தக்காரர்களாக, சோனியாவின் நண்பர்களக இருந்தால், என்ன செய்ய முடியும்? அருந்ததி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், பிரபல மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.  பிரபல வக்கீலான பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று ராணுவத்தை தூண்டி விடும் வகையிலோ அல்லது வன்முறை கலவரம் போன்றவற்றிற்கு ஆதரவாகவோ பேசினால் மட்டுமே ராஜதுரோக வழக்கு போட முடியும்.  அருந்ததி ராயின் பேச்சு என்பது ராஜதுரோகம் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் அவர் மீது ராஜதுரோக வழக்கு போட்டால் அது ஜனநாயகத்தின் முடிவையே குறிக்கும்’ என்றார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 1

I, Prashant Bhushan, son of Shanti Bhushan, resident of B-16, Sector 14, Noida, do hereby solemnly state and affirm as under:

நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது[5]: இதற்கிடையே, தனது பேச்சின் மூலம் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அருந்ததி ராய், கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை (26-10-2010) அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள்[6] தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். நானும் என்னைப் போன்ற விமர்சகர்களும் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வரும், பேசி வரும் கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூரமான ராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நியாயத்துக்காக நான் பேசினேன்‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘எழுத்தாளர்கள் தங்கள் மனம் திறந்து பேசுவதை இந்த அரசு அடக்க நினைப்பது பரிதாபமானது. மதவாதக் கொலைகாரர்கள், பெரிய நிறுவனங்களின் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், ஆகியோர் சுதந்திரமாக நடமாடும் நிலையில், நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 3

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do solemnly state and affirm as under. I have received the showcause notice issued by the Supreme Court and I have read and understood the contents of the contempt petition in which this notice has been issued[7].

இவர்கள் எல்லோருமே, பெரிய பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினரின் ஆதரவாளர்கள், தாங்களே முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கோஷ்டியினர் என்பதால், ஏதோ மக்களின் உரிமைக்குப் போராடுகிறொம் என்ற போர்வையில் செயல்படுவார்கள்.

ORIGINAL JURISDICTION

In the matter of

CONTEMPT PETITION (CRL) NO. 10 OF 2001

(Suo motu Contempt Proceedings under Rule 3(a) of the Rules to regulate proceedings for Contempt of the Supreme Court 1975 initiated on the basis of Affidavit dated 16.4.2001 filed on 17.4.2001 in Contempt Petition (Crl) No.  2/2001 titled J.R. Parashar and Others Versus Prasant Bhushan and Others.)

Affidavit in Response of the respondent/noticee

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do hereby state and affirm as follows: That I have read and understood the contents of the Contempt Notice issued to me dated 5th September 2001 and my reply to it is as under[8]:

நோபல் பரிசுக்காக அலையும் சூஸன்னா அருந்ததி: “அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற கருத்து அவருடையாக இருந்து வருகிறது. அவர் வரும் வேளையில் காஷ்மீர் பிரச்னை பெரியதாக வெடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.  மேலும்  காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ., பேசி வருவதும் நெருக்கடியை தருகிறது. தவிர புக்கர் பரிசு பெற்றவர் அருந்ததி ராய். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அது சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாகி விடும்.  ஆகவே அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவசரம் காட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”[9], இப்படியெல்லாம் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய நிலையில், “பிரபலம் வேண்டும்” என்ரு வெறித்தனத்துடன் செய்யும் காரியங்களை நாட்டு நலனுடன் இணைத்து பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், சூஸன்னா அருந்ததி, அடுத்த நோபல் பரிசுக்காகவே இத்தகைய நாடகம் ஆடுகிறார் என்பது தெரிந்த விஷயமே. அடுத்த புத்தகம் காஷ்மீர போராளிகளைப் பற்றியதாம்! இலக்கு 2011!

வேதபிரகாஷ்

© 28-10-2010

 


 

[1] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[2] ஆனால் உள்துறைக்கு தெரியாது என்று சொல்லிவிட்டது!

[3] முன்பு தமிழக போலீஸார் ஒரு காமுகனை – கற்பழித்து நிர்வான வீடியோ எடுத்தவனை – கைது செய்ய வேண்டும் எனும் போது, கருணாநிதியின் உத்தரவு பெற்றுதான் செய்தனரே, அதைப் போன்ற சமாச்சாரம் தான் இது. குற்றத்தின் தன்மையினை விட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை தான் கருத்திற்கொள்ளப்படுகிறது.

[6] ஆனால், அதே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது சூஸன்னாவிற்குத் தெரியவில்லையாம்!

[9] நன்றி-தினமலர் மற்றும் அதன் டில்லி நிருபர்

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?

செப்ரெம்பர் 6, 2010

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?

ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரி தேர்வு: மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவர் ஆளும், அதிர் கட்சிகளின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன்படி கலந்தாசிக்கும்போது, காங்கிரசின் தரப்பில் பி.ஜே. தாமஸ் என்ற கேரள அதிகாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது பின்னணியை ஆராய்ந்தபோது, 1991-92 வருடத்தில் அனுமதியின்று ரூ. மூன்று கோடி பாம் ஆயில் இறக்குமதி செய்த வழக்கில் சம்பந்தப் பட்டது தெரிய வந்துள்ளது[1]. ஆகவே பீஜேபி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும், சோனியாவின் சாய்ஸ் என்பதனால், மன்மோஹன், எதிர்பார்த்தபடியே தாமஸை நியமனம் செய்துவிட்டார்[2].

ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது பி.ஜே. தாமஸ் தொலைதொடர்பு அமைச்சகத்தின் செயலர்: இதே பி.ஜே. தாமஸ் முன்பு தொலைதொடர்பு அமைச்சகத்தில் செயலராக இருந்துள்ளார். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் போது, இவரது பங்கும் அதில் இருந்ததாக, தொலைதொடர்பு ஊழியர்கள் குற்றாஞ்சாட்டியுள்ளனர். ஆனால், அப்படிப்பட்ட ஆளையே, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷனின் தலைவராக்குவது, படு அசிங்கமாக – திகைப்பாக, வேதனையாக இருக்கிறது[3].

சிதம்பரம் ஆதரிக்கும் தாமஸ்: “முன்பு ஊழல் குற்றத்தில் சம்பந்தப் பட்டிருக்கலாம், ஆனால், இப்பொழுது அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்[4]. ஆகவே அவரது திறமைதான் நமக்கு இப்பொழுது வேண்டும், அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்”, இப்படி வக்காலத்து வாங்குவது உள்துறை சிங்கம் சிதம்பரம் தான்! நிச்சயமாக கருணாநிதி சிதம்பரத்தின் உதவியுடன் இந்த ஊழலை மறைக்க பார்க்கிறர் என்பது நன்றகவே தெரிகிறது. அதற்கு காங்கிரஸ், இவ்வாறு செயல்படுகிறது.

விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா? உதாரணத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ராஜாவை இவர் எப்படி நீயாயம்-தர்மம் படி விசாரிப்பார், புலம் ஆய்வு செய்வார்? ஏனெனில், அப்பொழுது, ராஜா இவரது “பாஸ்”, அலுவலக எஜமானன். ஆகவே, இது நிச்சயமாக ஊழலை மறைக்க, ஒரு ஊழல் அழுக்குப் பட்ட ஆசாமியை வைத்துக் கொண்டு மறைக்கும் நாடகமே என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன[5]. ஆகவே, விபச்சாரி பத்தினியின் கற்ப்பின் தரத்திற்கு சான்றிதழ் கொடுக்கமுடியுமா?, என்று கேட்டால், முடியும் என்கிறது காங்கிரஸ்!

உ.டி.எஃப் மற்றும் எல்.டி.எஃப் கருணாநிதி-ஜெயலலிதா மாதிரி: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறி மாறி கேரளாவில் கொள்ளையடுத்து வருவது சகஜமான விஷயம். ஆகவே, இந்த ஊழலை மறைக்கவும், இந்த இரண்டு கூட்டணி ஆட்சிகள் வேலை செய்துள்ளன. 2005ல் உ.டி.எஃப் ஆட்சி இந்த வழக்கு செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. 1992ல் ஒரு மலேசிய கம்பெனியிலிருந்து பாம் ஆயிலை இறக்குமதி செய்தலில், ஊழல் ஏற்பட்டதாகவும், அதில் பல கோடிகள் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பாட்டாதாகவும், அதனால், இவர்கள் பலனடைந்ததாகவும் வழக்கு போடப்பட்டது. கருணாகரன் மற்றும் ஏழு பேர் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள்: அதில் டி. எச். முஸ்தஃபா – முன்தைய உணவு விநியோக மந்திரி, ஜிஜி தாமஸ், ஸ்கேரியா மாத்யூ இருவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இவர்களில் பிணையில் வெளிவந்தவர்கள்[6]. 2006ல் எல்.டி.எஃப் ஆட்சி உச்சநீதி மன்றத்தில்[7], இவ்வழக்கை உயிர்ப்பித்தது[8]. ஆனால், உச்சநீதி மன்றம் ஊழல் பிரச்சினையை விட்டு விட்டு, அரசியல் காழ்ப்பிற்க்காக, இவ்வழக்கு நடத்தப்படுகிறதா என்று ஆராய்ச்சி செய்யுமாறு, கேரள உயர்நீதி மன்றத்திற்கே திருப்பி வைஇத்தது. பிறகு, புதைத்து மூடப்பட்டது.

நிறம் தெரியாத கண்ணடி போட்ட சிதம்பரம்: ஊழலில் கறைப்பட்ட, அழுக்குப்பட்ட, சாயம் பட்டது கூட சிதம்பரத்திற்கு தெரியவில்லை, ஆனால், அவரது அனுபவம் தான் திறமையாகத் தெரிகிறது. அதே நேரத்தில், தீவிரவாதத்தில் / பயங்கரவாதத்தில், கண்ணாடி மாட்டிக் கொண்டிருந்தாலும் காச்வி நிறம் நன்றகத் தெரிகிறது, ஆனால், இங்கு ஊழலின் கறை / நிறம் தெரியவில்லை. திறமை என்றால், மற்ற அதிகாரிகளிடம் இல்லையா? அப்படி ஊழல்கறையைவிட, திறமையைவிட, என்ன அதிகமாக அந்த தாமஸிடம் உள்ளது? அதுதான் “தாமஸ்” என்ற பெயர் போலும், அதாவது, கிருத்துவர் என்ற தகுதி போலும்! ஆமாம், சோனியா மெய்னோ சொல்லியிருப்பார்கள், அதனால், இந்த ஆடுகள் பணிவாக அப்படியே ஒத்துழைக்கின்றன.


[1]The BJP’s objections are over Thomas’ alleged involvement in the palm oil import scam worth almost Rs. 3 crore in 1991-92. Thomas, Kerala’s Food and Civil Supplies secretary, had struck an import deal with a Malaysia-based private firm without mandatory clearance

http://www.ndtv.com/article/india/decision-to-appoint-thomas-is-to-cover-up-2g-scam-bjp-49799

[2] இப்பொழுதுகூட, இது “மேஜாரிட்டி டிஸிஷன்” என்றுதான் சொல்கிறார்களேத் தவிர, ஊழல் பேர்வழி எப்படி பதவிக்கு வரலாம் என்று சிந்திப்பதாக இல்லை.

[3] http://www.thehindu.com/news/national/article615916.ece

[4] Mohan Singh of Samajwadi Party said, “This will negate the very purpose for which CVC was instituted. Thomas may have been exonerated but we all know how acquittals happen. He has been tainted once and he will not be able to put pressure on tainted officials he is supposed to watch.”
Read more: Row over govt pick for CVC post – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Row-over-govt-pick-for-CVC-post/articleshow/6503526.cms#ixzz0yi5neQG3

[5] Vijay wondered as to how Thomas could be expected to make a fair inquiry into the spectrum case — which he insisted could one day land before the CVC — since the main accused, Telecom Minister A Raja, happened to be his one-time boss.

http://www.indianexpress.com/news/new-cvc-bjp-says-attempt-to-cover-up-spectrum-cwg-row/677718/2

[6] http://news.oneindia.in/2006/08/09/

[7] http://news.oneindia.in/2006/08/08/no-anxiety-over-reopening-palm-oil-case-karunakaran-1155102957.html

[8] http://www.indiareport.com/India-usa-uk-news/latest-news/3565/Politics/6/20/6

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

செப்ரெம்பர் 1, 2010

ஜிஹாத் என்று சொல்லி வாபஸ் வாங்கிய பயந்தான்கொள்ளி, “வந்தே மாதரத்திற்கு” ஃபத்வா போட்ட போது நான் அங்கில்லை என்ற புளுகிய பொய்யர், இன்று தான் “காவி பயங்ரவாதம்” என்று சொன்னது சொன்னதுதான் என்கிறாராம்!

வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது[1]: சிதம்பரம், இப்பொழுது சொல்வதாவது, “சொன்னதை சொற்றோடர்களுடன் இணைத்து குழப்பக்கூடாது. நான் சொன்னதாவது வலதுசாரி அடிப்படை மதகும்பல்கள், சில தீவிரவாத தாக்குதல்களுக்குப் பின்னுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது…….இதை மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள்[2]……………….நான் இதற்கு உரிமம் கொண்டாட முடியாது![3] அப்பொழுது “ஜிஹாத்” என்று சொன்னதற்கு ஏன் வாபஸ் வாங்கவேண்டும்? இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் உபயோகப் படுத்தப் படுகிறதே?

ஜிஹாதிற்கு துணைபோகும் அல்லது முஸ்லீம்களைக் கண்டு பயப்படும் கோழை சிதம்பரம்: உள்துறை அமைச்சர், “இரும்பு மனிதர்” என்று சொல்லப்படுகின்ற சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று இருக்கவேண்டும். ஆனால், சிங்கம் உட்கார்ந்த இடத்தில் குள்ளநரி போன்று உட்கார்ந்து மற்றவர் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும். ஜிஹாத் என்றதும், முஸ்லீம்கள் மிரட்டவே பயந்து விட்டது[4], இந்த சிங்கம்!   “முஸ்லிம்களின் மன உணர்வை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், த.மு.மு.க., தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்[5].

.மு.மு.., தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று’ எனக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்று, த.மு.மு.க., சார்பில் கடிதம் எழுதப்பட்டது.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எவரது உணர்வையும் புண்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும் ஜிஹாது மற்றும் ஜிஹாதிகள் என்ற சொல் பயங்கரவாத நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகளையும் குறிப்பிட பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.”செய்தி ஊடகங்களும் இந்த வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தி வருகின்றன.

அகராதி சொல்வதும், நிஜமாக நடப்பதும்: ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஜிஹாத் என்பதற்கு, “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அல்-குவைதா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் – இ – தொய்பா தலைவர்களும் பல முறை இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.

ஜிஹாதைப் பற்றி காஃபிர் சிதம்பரத்தின் விளக்கம்!: “ஜிஹாத் என்ற வார்த்தை பொதுவாக பயன்படுத்தப்படுவதைப் போல் நானும் பயன்படுத்தி விட்டேன். அதை திருத்தும் வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமுதாய மக்களின் மார்க்க உணர்வுகளை புண்படுத்தும் உள்நோக்கம் தனக்கு இல்லை என்பதை, தன் கடிதத்தில் உறுதிபட தெரிவித்ததன் மூலம், தான் ஒரு நியாயவான் என்பதை உள்துறை அமைச்சர் நிரூபித்துள்ளார். அவருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே மாதரம்கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார். முஸôபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[6]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[7]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’ என்று தாரூல் உலூம் துணை வேந்தர் மெüலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார்.

வந்தே மாதரம் பாடிய முஸ்லிம்கள்: இதற்கிடையே மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் என்ற இடத்தில் மசூதி முன்னர் கூடிய முஸ்லிம்கள், வந்தே மாதரம் பாடலைப் பாடினர். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற வகுப்பினரும் அவர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தடையை மீறும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இந்தியாவில் யார்நம்பிக்கையில்லாதோர்[8]? பொறுப்புள்ள நியாயவான் சிதம்பரம் இந்தியாவில் யார் “நம்பிக்கையுள்ளவர்” மற்றும் “நம்பிக்கையில்லாதோர்” என்று கூறுவாரா? பிறகு “நம்பிக்கையில்லாதோர் மீதான போர்’ என்றால், இந்திய முஸ்லிம்கள் யார் மீது அத்தகைய போரை நடத்துவார்கள்? முஸ்லிம்கள் மீதா? பயங்கரவாதத்தைப் பற்றி பேசலாம்.  பயங்கரவாதம் ஏன் ஏற்படுகிறது?  அதன் பின்னணி என்ன? என்று ஆராய்ந்து பார்த்தாலும், அறிந்தாலும் அதனை அடையாளங்காணக்கூடாது! குண்டுவைத்த தீவிரவாதிகள் தமது ஈ-மெயிலில் என்ன சொன்னார்களாம்( கீழே பார்க்கவும்)? தாங்கள் இந்தியாவிற்கு எதிராக “ஜிஹாத்” நடத்துகிறோம் என்றுதானே சொன்னார்கள்? அப்படியென்றால் அந்த “ஜிஹாத்” வேறு, சிதம்பரம் சொன்னது வேறா?

காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு[9] (29-08-2010): ஆமதாபாத், ஆக. 30, 2010: காவி பயங்கரவாத பேச்சு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது திங்கள்கிழமை அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார். ஹிந்து மதத்தின் அடையாளமே காவி நிறம். ஹிந்து துறவிகள் அணியும் உடையின் நிறம் காவி. காவி நிறம் அமைதி, அர்ப்பணிப்பு மற்றும் கடவுளைக் குறிப்பதாகும். இவ்வாறு இருக்கையில் காவி பயங்கரவாதம் என்ற சிதம்பரத்தின் பேச்சு ஹிந்துக்கள், துறவிகளின் மனதை வேதனை அடையச் செய்துள்ளது. காவி நிறத்துக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, செப்டம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.

`காவி பயங்கரவாதம்பற்றிய பேச்சு மத்திய மந்திரி .சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்[10]: மாநில தலைமை போலீஸ் அதிகாரிகள் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்ட `காவி பயங்கரவாதம்’ என்னும் வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பா.ஜனதா, சிவசேனா மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாராளுமன்றத்திலும் இந்த சர்ச்சை எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக” குற்றம் சாட்டினார்.

இரட்டை வேடம் போடும் காங்கிரஸ்; ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி சற்று இறங்கி வந்து விளக்கம் அளித்து இருந்தார். அதில், “தீவிரவாதத்துக்கு எந்தவித நிறமும் கிடையாது. பயங்கரவாதத்தின் ஒரே நிறம், கறுப்புதான்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்[11]. அவருடைய விளக்கத்துக்கு பின்னும் சர்ச்சையை கைவிட மறுத்த பா.ஜனதா கூட்டணி கட்சிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகள் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வற்புறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில், லாலுபிரசாத் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் போன்ற தலைவர்கள் ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி[12] (25-08-2010): “சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக, “காவி பயங்கரவாதம்’ என்ற வார்த் தையை உள்துறை அமைச்சர் பயன்படுத்தியுள்ளார்’ என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.போபாலில் நிருபர்களிடம், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: “காவி பயங்கரவாதம்’ என்ற நடைமுறை தலை தூக்கி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார். சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சிவராஜ் பாட்டிலைவிட மோசமான உள்துறை: மதத்தை தாண்டி இருப்பது பயங்கரவாதம். அவர்களை மத அடிப்படையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில், மத்திய அரசு தீவிரமாகச் செயல்படவில்லை. அதேபோல், நக்சலைட் வன்முறைகளும் அதிகரித்து விட்டன. சொல்லப்போனால் பசுபதிநாத் முதல் கன்னியாகுமரி வரை பரவி நிற்கிறது. போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சன் தப்பிச் சென்ற விவகாரம் மிகவும் முக்கியமானது. விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், மத்திய அரசு இது குறித்து விரிவாக பேச வேண்டும். போபால் சம்பவத்தின் பின்னணியில் இருந்தது யார் என்ற உண்மை வெளிவர வேண்டும். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பா.ஜ., மற்றும் சிவசேனா எம்.பி., க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை[13] (24-08-2010): “இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குண்டு வெடிப்புகளுக்கும், இந்த, “காவி பயங்கரவாதத்திற்கும்’ தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்கள் மற்றும் மத்திய துணை ராணுவப் படை தலைவர்களின் 45வது மாநாடு டில்லியில் நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு வரும்படி நக்சலைட்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். இந்த ஆண்டு மட்டும் நக்சலைட்களால் 424 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 192 பேரை, போலீசுக்கு உளவு சொன்னதாகக் கூறி கொன்றுள்ளனர்.

லாயக்கு இல்லாத உள்துறை: கடந்த 12 மாதங்களாக ஜாதி, மத மற்றும் இன ரீதியான வன்முறைகள் எதுவும் பெரிய அளவில் நடக்கவில்லை. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த நிலை தொடர போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற வன்முறைகளுக்கான அறிகுறி தென்பட்டாலே, உயர் போலீஸ் அதிகாரிகளை நியமித்து, பாரபட்சம் இல்லாமல் நிலைமையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இளைஞர்களையும், இளம்பெண்களையும் பயங்கரவாத பாதைக்கு இழுப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில், எந்தவிதமான தொய்வும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி, “காவி பயங்கரவாதம்’ என்ற புதிய நடைமுறையும் உருவாகியுள்ளது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளுக்கு இந்த காவி பயங்கரவாதமே காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

காஷ்மீர் நாறும்போது பீழ்த்தி கொள்ளும் பொய்யர்: கடந்த 2005 முதல் தற்போது வரை, 2008ம் ஆண்டை தவிர மற்ற ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் திருப்தி அளிப்பதாகவே உள்ளது. ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும், சில உயிரிழப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. ஆனால், இப்போது அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு போன்றவை அங்கு மூர்க்கத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இது அச்சம் தருவதாக உள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பணியாற்றியும், அங்கு நிலைமை சீரடையவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.


[1] TIMES-NOW,  HM stands by ‘saffron terror’ remark, 1 Sep 2010, 1703 hrs IST, http://www.timesnow.tv/HM-stands-by-saffron-terror-remark/articleshow/4352884.cms

Chidambaram said, ‘The message should not be confused by phrases”. Referring to Hindu extremist outfits, Chidambaram said that he meant rightwing fundamentalist religious groups are suspected behind some terror attacks.

[2] http://news.oneindia.in/2010/09/01/chidambaram-defends-hemself-on-seffron-remark.html

[3] I’ve no patent on ‘saffron terror’; party’s view supreme: PC; http://www.zeenews.com/news652167.html;

Chidambaram pointed out that he is not the first one to use the phrase “saffron terror” as it has been used a number of times by others, including by some other ministers of the UPA government.  “I cannot claim patent on the phrase,” Chidambaram quipped.  “The message is that the right wing fundamentalists are suspected to be behind some bomb blasts. Saffron terror ensured that the message is not lost,” he pointed out.

[4] தினமலர், .மு.மு.., தலைவருக்கு .சிதம்பரம் கடிதம், ஜனவரி 10,2010,00:00  IST; http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16066

[5] வேதபிரகாஷ், சிதம்பரமும், உள்துறை அமைச்சரும்: இஸ்லாமும், ஜிஹாதும்!, http://islamindia.wordpress.com/2010/01/10/சிதம்பரமும்-உள்துறை-அமை/

[6] தினமணி, வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, First Published : 10 Nov 2009 12:33:38 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=152349&SectionID=130&MainSectionID=130&SEO

[7] வேதபிரகாஷ், வந்தே மாதரம் மீதான தடை நீக்கப்படாது: முஸ்லிம் அமைப்பு, http://islamindia.wordpress.com/2009/11/11/வந்தே-மாதரம்-மீதான- தடை-நீ/

[8] வேதபிரகாஷ், ஜிஹாதிகள் சிதம்பரத்தின் முகமூடியைக் கிழித்து விட்டார்கள்!,  http://islamindia.wordpress.com/சிதம்பரத்தின்-முகமூடி-கி/

[9] தினமணி, காவி பயங்கரவாத பேச்சு: .சிதம்பரம் மீது அவதூறு வழக்கு, First Published : 31 Aug 2010 03:18:17 AM IST; http://www.dinamani.com/edition/Story.aspx?………95%E0%AF%81

[10] http://www.maalaimalar.com/2010/08/29045613/minister-pchidambaram.html

[11] http://islamindia.wordpress.com/2010/06/22/காங்கிரஸ்-முஸ்லீம்கள்-இ/

[12] தினமலர், காவி பயங்கரவாதம்‘ : ராஜ்யசபாவில் அமளி, ஆகஸ்ட் 26, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=70996

[13] தினமலர், காவி பயங்கரவாதம்புதிய நடைமுறை உள்துறை அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கை, ஆகஸ்ட் 25, 2010, http://www.dhinamalar.info/News_Detail.asp?Id=70247