Posts Tagged ‘உருவாக்கம்’

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

ஜூன் 27, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

Temple parts kept in thomas museum, Mylapore

ஜி.யூ.போப்பும், தாமஸ் கட்டுக்கதையும்: போப்பின் புத்தகத்தின் முன்னுரையைப் படித்துப் பார்த்தால், கிருத்துவ மிஷினரிகளின் எண்ணம் புலப்படும். அவர்கள் வள்ளுவர் மற்றும் குறள் மீது ஏன் அத்தகைய ஆர்வம் கொண்டார்கள் என்பதும் வெளிப்படும். ஆனால், தமிழ் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர் முதலியோர், போப்பின் புத்தகத்தை ஒருமுறையாவது படித்தார்களா இல்லையா, குறைந்த பட்சம் முன்னுரையையாவது வாசித்து, விசயங்களை அறிந்தார்களா இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லை, படித்தறிந்து தான், இவ்வாறு நடந்து கொள்கிறார்கள், என்றால், அவர்கள் கிருத்துவர்களின் ஏஜென்டுகளாக, இத்தனை ஆண்டுகளாக, செயல்பட்டுக் கொண்டு வந்துள்ளனர், வருகிறார்கள் என்று தெரிகிறது. இனி, போப் சொல்வதைப் பார்ப்போம். “வள்ளுவர் ஒரு பறையர் மற்றும் நெசவாளி. அவர் இன்றைய மெட்ராஸின் புறப்பகுதியான சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஏலேல சிங்கன் அவரது நெருங்கிய நண்பர் அல்லது அவரை ஆதரித்தவன். அவன் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தான்,” என்று முன்னுரையில் ஆரம்பித்து[1], அவ்விடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் கிருத்துவர்களுக்கு மிகுந்த அக்கரைக் கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில், அங்குதான் செயின்ட் தாமஸ் போதித்தார், வேலினால் குத்தப்பட்டு, இறந்து, புதைக்கப்பட்டுள்ளார்[2]. இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது,” என்று தாமஸ் கட்டுக்கதையை நுழைத்தார்[3].  இதை அந்த மெத்தப் படித்த தமிழ் வல்லுனர்களுக்கு தெரியாதா?

Bleeding cross- planted by the Portuguese im 1537 CE

ஜி.யூ.போப் தாமஸ் வந்து போதித்து, கிருத்துவ நூல்களை வைத்துதான் திருக்குறள் எழுதினார் என்றது: பிறகு, போப் / போப் ஐயர்[4], திருக்குறள் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது, “மயிலாப்பூர் நமக்கு சாந்தோம் என்றுதான் அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து, இங்கு கிருத்துவ சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. இங்கு ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றை நாம் காண்கிறோம். இங்குதான் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த பன்டானியஸ் என்பவர் போதித்தார். வள்ளுவர் எல்லா தத்துவங்களையும் தன்னுள் ஈர்த்த கவியாக இருந்திருந்திருந்ததால், அவருக்க்கு ஜைன மதம் பற்றித் தெரிந்திருந்தது, ஜாதிபேதங்களைப் பார்க்காதவராக இருந்தவரதலால் அந்நியவர்களுடன் பழகினார். ஏலேல சிங்கன் நண்பராக இருந்ததால், வெளிநாட்டுக்காரர்கள் வரவு பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தனது தோனியிலேயே கூட்டி வந்திருக்கலாம். ஆகையால், நான் சொல்வது என்னவென்றால், கடற்கரையில் இருந்த கிருத்துவ போதனையாளர்களுடன் அவர் இருந்ததை காண்கிறேன்; அவர்களது அலெக்சாந்திரிய தத்துவங்களை போதித்ததையும், வள்ளுவர் உள்வாங்கிக் கொண்டதையும் கவனிக்கிறேன். இவ்வாறு நாளுக்கு நாள் அந்த தாக்கத்தினால், அவற்றை திருக்குறளில் சேர்த்துக் கொண்டார் என்று முடிவுக்கு வருகிறேன்”, என்று முடிக்கிறார்[5]. அதுமட்டும் அல்லாது, உணர்ச்சிப் பூர்வமாக விசுவாசத்தோடு, “இந்த புனித ஸ்தலத்தில், அப்போஸ்தலரின் தியாகப்பணி தங்கியிருக்கிறது. “மலைமீது போதித்த கருத்துகள்” அந்த கிழக்கத்தைய புத்தகத்தில் அடங்கியுள்ளது……..அதனால், நான் குறள் உண்டாவதற்கு கிருத்துவ நூல்களும் மூலங்களாக இருந்தன, என்பதை தயங்காமல் கூறுவேன்,” என்று முடிக்கிறார்[6]. இதைத்தான் எல்லீஸும் சொன்னார். அந்த சந்தோசம்-சாமுவேல்-தெய்வநாயகம் கூட்டமும் சொல்கிறது! இனி வேதங்கள், வேதாங்கமங்கள் இவையெல்லாம் தேவையாயிற்றே?

Plaque put up in 20th cent- Saidapet - Little mount

போப் குறிப்பிடும்தாமஸ் கட்டுக்கதைபற்றிய ஆதாரங்களின் போலித்தனம்: 19ம் நூற்றாண்டில், போப் குறிப்பிடும் “ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றைப்” பற்றி பார்ப்போம்:

1.       ஆர்மீனியன் தெருவில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் 1712ல் கட்டப்பட்டது, 1772ல் மாற்றிக் கட்டப்பட்டது.

2.       சைதாபேட்டையில் உள்ள “சின்னமலை” கோவில், 18-19ம் நூற்றாண்டுகளில் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டப்பட்டது.

3.       பரங்கிமலையில் உள்ள சர்ச், அங்கிருக்கும்பெருமாள் / விஷ்ணு கோவிலை இடித்து 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை அருளாப்பா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4.       மயிலாப்பூர் / சாந்தோம் சர்ச்சும் 1523ல் அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

5.       அதேபோல, “லஸ் சர்ச்” என்று அழைப்படுகின்ற சர்ச் 1516ல், அங்கிருக்கும் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

6.       சின்னமலை மற்றும் பெரியமலையில் இருக்கும், கற்சிலுவைகள், போர்ச்சுகீசியரால், 16ம் நூற்றாண்டில் அங்கு வைக்கப் பட்டன.

7.       அந்த “ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு” பற்றி கிருத்துவர்களிடையே ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில், அவை 16-17ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. “ரத்தம் சொரிந்த சிலுவை” சுற்றிலும் எழுத்துகள் இருந்தன, இல்லை, பிறகு எழுதப்பட்டது என்று பலவாறான சர்ச்சைகள் உள்ளன. மேலும் ஒன்றிற்கு மேலாக பல சிலுவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதால், அவையெல்லாம் போலி என்று அப்பட்டமாக தெரிந்து விட்டது.

8.      தாமஸால் வரையப் பட்ட சித்திரம், முதலியவற்றை கார்பன் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டால் தேதி தெரிந்து விடும். அதேபோல, ரத்தம் படிந்திருப்பதாக சொல்லப் படும் மாதிரியை, “டி.எச்.ஏ” பரிசோதனைக்கு உட்படுத்தினால், “குளோனிங்” செய்தால், குட்டு வெளிப்பட்டுவிடும். ஆனால், அதை அவர்கள் செய்வதற்கு பயப்படுகிறார்கள். போப் ஏற்கெனவே, இந்த கட்டுக்கதையினை மறுத்து விட்டார்.

How thomas was killed in different countries-myth making

போப் போலித்னமான “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களைக் குறிப்பிட்டதன் பின்னணி: ஆகவே, போப் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே, 1886வது வருடத்தில் வெளிவந்த புத்தகத்தில், இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்று நோக்கத்தக்கது. அதாவது, எல்லீஸ், மகன்ஸி, பச்சனன் முதலியோர் போலி நூல்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். அந்நிலையில், எல்லீஸ், போப் முதலியோர் இத்தகைய போலி அத்தாட்சிகள் உருவாக்குவதில் ஈடுபட்டனர் போலும். அவ்விதத்தில் தான் “திருவள்ளுவர்” நாணயம் வெளிவந்துள்ளது. ஆனால், பிரச்சினையாகும் என்றபோது, அமுக்கி விட்டனர்.  போப் சொன்னதை கவனிக்க வேண்டும், “இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது”, அதாவது, அப்பொழுது, “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடியும் வளர்க்கத் தீர்மானித்தத்து வெளிப்படுகிறது. இந்த எல்லீஸ் கூட்டம் அதில் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.

  1. இங்கு, மேலே நிக்கோலஸ் டிர்க் என்பவர்[7] குறிப்பிட்டதை மறுபடியும், நோக்கத்தது, – “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது.
  2. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன.
  3. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”.
  4. லெஸ்லி ஓர்[8], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது.
  5. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.
  6. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

ஆகவே, இவர்கள் மிகப்பெரிய அகழ்வாய்வு மோசடி, போலி நூல்கள் உருவாக்கம், கள்ள-ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர திரிபு, புரட்டு மற்றும் மோசடி முதலியவற்றில் ஈடுப்பட்டனர் என்றாகிறது.

Many crosses found prove the forged-manufactured ones

கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் சண்டையில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது: இந்த ஆராய்ச்சிகளில் கிருத்துவ மிஷனரிகளின் [Christian Missionaries] பங்கும் நோக்கத்தக்கது.  இடைக்கால ஆரம்ப காலங்களில் (போர்ச்சுகீசிய வரவுகளில்) ஜெஸுவைட்டுகளின் மூலம் கத்தோலிக்க [Catholic] கிருத்துவ ஆதிக்கம் தான் இந்திய-ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டது. ஆங்கிலேயர் புரொடெஸ்டென்ட் [Protestant] கிருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.  இதனால், அவர்கள் கத்தோலிக்கர்களை நம்பவில்லை. 1857 முதல் சுதந்திர போர் அல்லது எழுச்சியைக் கூட அவர்களது சதி தான் என்றும் கிருத்துவத்தின் வீழ்ச்சி என்றும் நம்பினர்[9]. புரொடெஸ்டென்ட் கிருத்துவர் “தாமஸ் கட்டுக்கதை”யினை நம்பாதவர் மேலும் எதிர்ப்பவர். அந்நிலையில் எல்லீஸ், கால்டுவெல் முதலிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர், “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடி எடுத்துக் கொண்டு, பரப்ப ஆரம்பித்ததின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை”யினை, ஐரோப்பிய-அமெரிக்க கிருத்துவ வல்லுனர்கள் நிரூபித்து, ஒதுக்கித் தள்ளினர்[10].  கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை மறைக்க இந்த கட்டுக்கதையை உருவாக்கியதும் புலப்பட்டது. எல்லீஸ் கும்பலும் அதை ஜைனத்தைத் தூக்கிப் பிடித்தலில் செய்துள்ளது தெரிகிறது. ஆனால், அவர்களது மததுவேஷ, சிக்கல்-சன்டைகளில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது. தமிழ் வல்லுனர்களும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “எல்லீசர்” புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.

© வேதபிரகாஷ்

26-06-2017

Chinna malai forgeries- encroached temple and destroyed

[1] G. U. Pope, The Sacred Kural of Thiruvalluva-Nayanar with Introduction, Grammar, Translation, Notes, W. H. Allen & Co., London, 1886, Introduction,

[2] Then, he mentioned about Thomas getting killed at Mylapore, “A higher interest is imparted to the spot and its neighbourhood, at least to Christians, by the tradition (so long and lightly discredited, but now generally acknowledged to be authentic) that here S. Thomas preached, and here met his death by a spear (vel) such as the poet often speaks of, and was here buried”.

For this, G. U. Pope gives a note as follows – The reader may find a full discussion of this subject in Dr. German’s learned and instructive work, Die Kirche der Thomas Christen.

[3] Incidentally, the writings of the G. U. Pope have been full of “Thomas myth”, as could be noted from his “Introduction” of his book . pp. ii-iii.

[4] “போப் ஐயர்” என்று சாதாரணமாக சொல்லும் போது, “போப் ஐயங்கார்” என்று ஏன் சொல்வதில்லை என்று தெரியவில்லை. இல்லை, “போப் பறையர்” என்று கூட சொல்லலாமே?

[5]we may fairly, I say, picture him pacing along the sea-shore with the Christian teachers, and imbibing Christian ideas, tinged with the peculiarities of the Alexandrian school, and day by day working them into his own wonderful Kurral”.

[6] Then , finally he confirmed the myth as “authentic”, “It is undoubtedly a noteworthy fact that from this Mayilapur, on which the eyes of Christendom have ever rested as the one sacred spot in India of Apostolic labour, comes the one Oriental book, much of whose teaching is an echo of the ‘Sermon on the Mount’”, adding, “….I cannot feel any hesitation in saying that the Christian Scriptures were among the sources from which the poet derived his inspiration.”

[7] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[8] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

[9] Metcalf, Thomas R. Aftermath of Revolt: India 1857-1970. Princeton University Press, 2015.

[10] Garbe, Richard. “St. Thomas in India.” The Monist (1915): 1-27.