"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
ஜே.எஸ்.எஸ்பப்ளிக்ஸ்கூலுக்குபள்ளிக்கல்வித்துறைமூலம்நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.
அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.
“பாண்டிலிட்பெஸ்ட்” என்றபாண்டிஇலக்கியவிழா: “பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பெயரில் பல தனிப்பட்ட நிறுவனங்களின் ஆதரவில், இலக்கிய கொண்டாட்ட விழா ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 தேதிகளில் புதுச்சேரியில் நடைப்பெற்றது[1]. நிகழ்ச்சி நிரலை இங்கு பார்க்கலாம்[2]. இதை ஆதரிக்கும் நிறுவனங்களை இங்கு பார்க்கலாம்[3]. புதுச்சேரி இலக்கிய விழா பற்றி கேட்டபோது, பங்கு கொண்ட இந்துத்துவவாதிகள் வழக்கம்போல, திமிருடன் அகம்பாவத்துடன் பதில் கொடுத்தனர். பிறகு, அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சித்தாந்த ரீதியில் போராடும் போது, எதிர்-சித்தாந்தவாதிகளையும் வரவேற்று கலந்துரையாட வேண்டும், எங்கு இயைந்து போகிறோம் என்றுப் பரீசித்துப் பார்க்கலாம். ஆனால், இங்கோ முழுக்க-முழுக்க வலதுசாரி-இந்துத்துவவாதிகள் கலந்து கொண்டு ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். அந்தந்த விசயத்தில் திறமை, அனுபவம், ஞானம் உள்ளவர்களை அழைக்காமல், தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற ரீதியில், விழாவில் சேர்த்துள்ளனர். அவர்களில் பாதிக்கு மேல், எந்த இலக்கிய மாநாட்டிலும் காணப்படாதவர்கள். பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய அரசியல்வாதிகள் பரிந்துரையில் அவர்கள் சேர்க்கப் பட்டனர். பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்று புதியதாகத் தோன்றி மறைந்து விடுவது வலுவான சித்தாந்தம் இல்லை, அவர்களும், அத்தகைய போராளிகளாகத் தான் இருக்கின்றனர்.
‘திபாண்டிலிட்பெஸ்ட்‘ நிகழ்வுக்குஎழுத்தாளர்கள்எதிர்ப்பு[4]: மாநாட்டில் வலது சாரி சிந்தனையாளர்களைப் பங்கேற்க செய்வதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்தன. இந்நிலையில் எழுத்தாளர்களும் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், ரவிக்குமார், மாலதி மைத்ரி உட்பட பலரும் இவ்விழாவை புறக்கணிக்க வலியுறுத்தினர். இந்நிகழ்வுகள் புதுச்சேரி மண் சார்ந்த கலை இலக்கியத்தையோ, தமிழ் கலை இலக்கியத்தையோ பிரதிபலிக்கவில்லை. “இந்நிகழ்வுமுழுக்கஆர்எஸ்எஸ், இந்துத்துவா, சங்கப்பரிவாரங்களின்கருத்தியல்பிரச்சாரத்துக்குதளம்அமைப்பதாகவேஉள்ளது. நிகழ்வில்பங்கேற்போர்இந்துத்துவஅமைப்புகளிலும், வலதுசாரிஅரசியல்களத்திலும்தீவிரமாகச்செயல்படுவோராகஇருக்கின்றனர். புதுச்சேரியில்நிலவும்சமூகநல்லிணக்கத்தையும், மக்கள்ஒற்றுமையையும்இந்நிகழ்வுசீர்குலைத்துவிடும்என்றுஅஞ்சுகிறோம். இந்நிகழ்வைதவிர்க்கவேண்டும்” என்று குறிப்பிட்டனர்[5]. ஆனால், மாநாட்டை ஆதரித்தவர்[6], “மாநாட்டில் 50 சதவீத புதுவை எழுத்தாளர்கள் மற்றும் அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும் 35 புத்தகங்கள் வெளியாகின்றன. நாளொன்றுக்கு 12 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது,” என்றனர்[7].
பிரெஞ்சுதூதரகம்விலகிக்கொண்டது: “பாண்டி லிட்பெஸ்ட்” பொறுத்தவரை, பிரெஞ்சு தூதரகம் [Alliance Française Foundation, the parent body of its venue partner] அதனை தனது வளாகத்தில் நடத்துவாக இருந்தது. ஆனால், இத்தகைய ஒருதலைப்பட்ச கூடுதலாக மாறிவிட்டதால், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. நடந்தப்படும் நாடுகளின் அரசியல் மற்றும் மதசம்பந்த விசயங்களில் தலையிட விரும்பவில்லை என்ற பொறுப்புள்ளது என்றும் அறிவித்தது[8]. அதாவது, இந்த அமர்வுகளில் அரசியல், சமயம் முதலியவற்றைச் சார்ந்த விசயங்கள் அலசப் படுவதால், பிரெஞ்சு அரசு சார்புடைய அந்த நிறுவனம் அவ்வாறு அறிவித்தது. பிறகு நிகழ்ச்சி நடக்கும் இடம் மாற்றப்பட்டது. அரவிந்தர் பக்தர்களை வைத்துக் கொண்டு, ஒப்பேற்றிது போல தெரிகிறது. மைக்கேல் டேனினோ போன்றவர், அரவிந்த பக்தராக உள்ளார், எழுதுகிறார். இப்பொழுது [என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு], “விசிடிங் புரொபசர்” நிலையைப் பெற்றுள்ளார். அதாவது, நாளைக்கு ஆட்சி-அதிகாரம் இல்லை என்றால், பதவி இல்லை என்ற நிலையில் சித்தாந்திகள் வேலை செய்யக் கூடாது.
உண்மையானசித்தாந்தபோராளிதிடீரென்றுதோன்றிமறையமாட்டான்: சரித்திர ரீதியில் விவதங்கள் நடந்தன. சரித்திரம் எப்படி மாற்றி எழுதப் படவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இங்கு வந்துள்ளதாக குறிப்பிட்டவர்களை IHC, SIHC, TNHC, etc போன்ற எந்த சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளதாகவோ, ஆய்வுக் கட்டுரை வாசித்ததாகவோ தெரியவில்லை [பொரபசர் வெங்கட ரகோத்தமன் தவிர]. சித்தாந்த போராளி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் / இல்லாவிட்டாலும், கலந்து கொள்வான், தனது கருத்தை / கவிதையை தைரியமாகச் சொல்வான். தொடர்ந்து அவன் சென்று கொண்டிருப்பான், தனியாகக் கூட போராடி வருவான், ஏனெனில் அத்தகையோர் பணம், விருது, அதிகாரம் பார்த்து போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்பொழுது திடீரென்று இவர்கள் எப்படி தோன்றியுள்ளார்கள் என்று தெரியவில்லை.
வாஜ்பேயிஇறந்தாலும், நாங்கள்இலக்கியவிழாநடத்துவோம்என்றுநடத்தப்பட்டவிழா: 16-08-2018 அன்று வாஜ்பாயி இறந்தாலும், பிடிவாதமாக கொண்டாடினர். “பிரமாண்டமான துவக்க விழா” மட்டும் நடப்பதை தவிர்ப்பதாக அறிவித்தனர். இலக்கியவாதிகள் இவ்வாறா இலக்கிய அஞ்சலி செல்லுத்துவார்கள் என்று மற்றவர் திகைத்தனர். அதிகமாக வலதுசாரிகள் இருப்பதை, அடுத்த வருட விழாவில் சரி செய்வோம் பலதர கருத்துகளை ஏற்போம் என்பதே, விவகாரத்தைக் காட்டி விட்டது. எத்தனை ஆசைகாட்டினாலும், செம்மொழி மாநாட்டில் நொபுரா கராஷிமா கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. சித்தாந்தம் பேசுபவர்கள் தத்துவம் பேச மாட்டார்கள், “திங்-டாங்க்” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மற்ற செமினார்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆரியர் பற்றிய விவாதம் எல்லாம் அரைத்த மாவை அரைக்கும் தோரணையில் இருந்தது. உதாரணத்திற்கு, “ஹர்பன் நக்சல்” பற்றிய உரையாடல், தெரிந்த விவரங்களாகவே இருந்தன[9]. டீ, காபி, புகையிலை, திருட்டுத் தனமாக கஞ்சா போன்ற விவகாரங்களில் பலரின் பங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் ஆரமொஇத்து வைக்கப் பட்ட “கூட்டுக் கொள்ளை” இன்றும் தொடர்கிறது. அரசு அதிகாரிகள், அரசுசாரா நிறுவனங்கள், கிருத்துவ மிஷினரிகள், வேலையாட்களைக் கட்டுப் படுத்தும் தாதாக்கள், என்று பலவுள்ளன. இவற்றை நீக்காமல், ஒன்றும் செய்யமுடியாது.
[8] The Alliance Française Foundation said in a press release on Wednesday that it regretted that the event had been announced “as organised in partnership” with its branch in Puducherry. It said that it was not judging the appropriateness or quality of the event. But it emphasised that the organisation had “an obligation of non-interference in political and religious discources of the host countries” in which it operated, and upheld the “values of tolerence and neutrality”. It said that the main objective of Alliance Françaises network has always been to teach French language and to promote Indo-French cultural exchanges.
Scroll.in, Left demand to cancel ‘right-wing’ Pondy Lit Fest sparks fresh debate on free expression, by Harsimran Gill, Published Aug 17, 2018 · 07:30 am
நிகாதத் சட்டத்தை எதிர்க்காத திராவிடத்தின் இன்னொரு போலித்தனம் – இஸ்லாமிடம் ஏமாந்தும் புத்தி வராத பெரியார் பித்துகள்!
பெரியாருக்குப் பாடம் புகட்டியும் பாடம் கற்காக திராவிட பிஞ்சுகள்: ஜின்னா பெரியாரை நன்றகவே கடிந்து கொண்டார், தான் முஸ்லிம்களுக்காகத் தான் பாடுபட முடியும், திராவிடர்களுக்காக பாடுப்பட முடியாது. பெரியாருக்கு ஸ்திரமான மனது இல்லை என்றெல்லாம் கடிதங்களில் சாடியுள்ளார். இருப்பினும் உண்மைகளை மறைத்து, மறந்து திராவிடக் கட்சிக்கள் முஸ்லிம்களை தாஜா செய்து கொண்டே தான் இருக்கின்றன. “ஏய் வராதே போ” என்றாலும் போய்-போய் ஒட்டிக்கொள்ளும் புத்தி என்னவென்று தெரியவில்லை. காபிர்களை அவர்கள் அப்பட்டித்தான் நடத்துவார்கள் என்பதனை எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை[1].
தமிழர்களை ஏமாற்றி இரண்டு வீடுகளை அபகரிக்கும் முஸ்லிம்கள்: சமீபத்தில், இலங்கைத் தமிழர்களே எப்படி இந்திய அரசாங்கம் ஒதுக்கும் வீடுகளை முஸ்லிம்கள் இருமுறை அபகரிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே நோட்டீசுகள் விநியோகித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்[2]. ஏழைநாடான இந்தியா அப்பொழுது ஏன் இலங்கைக்கு உதவுகிறது என்றும் கேட்கவில்லை[3]. ஆனால், வெல்லிங்டனில் இலங்கையினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்க்கின்றனர். அப்பொழுது, தமிழகத் தலைவர்கள், இனமான போராளிகள், திராவிட கத்திகள், போர்வாள்கள் எதுவுமே கண்டுகொள்ளவில்லை.
இஸ்லாமிய “நிதாகத்” சட்டத்தை ஏன் கருணாநிதி எதிர்க்கவில்லை?: அரபு நாடுகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை[4]: “சவூதிஅரேபியாவில்நிதாகத்என்றசட்டம்இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வரும் போது , அந்த நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பத்து சதவிகித இடங்களை சவுதி அரேபியர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் இதன் அடிப்படையில், இப்போதே அதனை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டைச் சேர்ந்த பத்து சதவிகிதத்தினரை பணிக்கு அமர்த்துகின்ற காரணத்தால், அந்த இடங்களிலே இதுவரை பணியாற்றி வந்த வெளிநாட்டினரையெல்லாம் திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துவங்கி விட்டது[5].
வரும்ஜூலை 3-ஆம்தேதிக்குள் 60 ஆயிரம்இந்தியர்கள், இந்தியாவுக்குத்திருப்பிஅனுப்பப்படஉள்ளனர். இதில்ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள்தமிழர்கள். அதைப்போலவேகுவைத்நாட்டில்பணிபுரியும் 1.20 லட்சம்தமிழர்களில்பலர்வெளியேற்றப்படும்நிலைமைஉருவாகியுள்ளது. அந்தநாடுகளில்பணியாற்றும்தமிழர்கள்பல்லாண்டுகாலமாகதங்கள்குடும்பத்தோடுஅங்கேகுடியேறிஅந்தநாடுகளோடுஐக்கியமாகிவிட்டவர்கள். அவர்கள்தொடர்ந்துஅங்கேயேபணியாற்றஇந்தியஅரசும், தமிழ்மாநிலஅரசும்உதவிடமுன்வரவேண்டுமென்றுவிரும்புகின்றனர். எனவேமத்திய, மாநிலஅரசுகள்இந்தப்பிரச்னையில்உடனடியாகத்தலையிட்டு, அவர்கள்தொடர்ந்துஅந்தநாடுகளில்வாழவும், அவர்களுடையவாழ்வாதாரத்தைக்காப்பாற்றவும், தீவிரமுயற்சிகள்மேற்கொள்ளவேண்டும்”, என்று அவர் வலியுறுத்தியுள்ளார்[6].
தேசிய அளவில் கொள்லையடிக்கும் போது கூட “இந்தியர்கள்” என்ற உணர்வு வராதது: இப்பொழுதுகூட 50,000 இந்தியர்களைப் பற்றிக் கவலைப்படாமல், 10,000 தமிழர்கள் என்று பேசுகிறார்கள். “திராவிட நாடு” கனவு கண்டு, அண்ணாதுரை காலத்திலேயே, எதிர்ப்பை கைவிட்டு அரசியல் நிர்ணயச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, முதலமைச்சாராகி, சுயமரியாதை திருமணங்கள் மரியாதை இல்லாமல் ஆகிப்போன போது, இந்து திருமணச் சட்டத்தில் ஐக்கியம் ஆகி மானத்தைக் காப்பாற்றிக் கொண்ட பிறகும், “மாநில சுயயாட்சி” பேசி ஏமாற்றி, இந்திய ஜனாதிபதி ஆகிவிடவேண்டும் என்று கனவு காணும் கருணாநிதிக்கு இன்னும் தேசிய மனப்பாங்கு, நாட்டுச்சிந்தனை, பரந்த குணம் வரவில்லை என்பர்து வேடிக்கையாக இருக்கிறது.
பிரச்சாரரீதியில் முன் வைக்கப் படும் பிரச்சினை: பிரச்சினை உண்மையா, பொய்யா அல்லது பீதிகிளப்ப உருவாக்கப்பட்டுள்ளதா என்று அலசப்படும் நிலையில், ஊடகங்கள் மற்றும் தமிழில் எழுதுபவர்கள் வெவ்வேறுவிதமாக வரைந்து கட்டிக் கொண்டிருந்தார்கள்[7]. இப்பொழுது கருணாநிதி குட்டையைக் குழப்ப வந்திருக்கிறார்:
ஆசியக்காரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
இந்தியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
கேரளத்தவரர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
கேரள முஸ்லீம்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
கேரள கிருத்துவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது.
கேரள இந்துகளுக்கு சவுதி அரேபியாவில் வேலை பறிபோகிறது[8].
என்று ஒருபக்கம் தலைப்புகள் இட்டு ஆங்கில ஊடகங்கள் அலசும்போது, தமிழில் கீழ்கண்டவாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்:
சவுதி அரேபிய சட்டத்தினால் இந்தியர்கள் வேலை இழக்கக்கூடும்[9].
அரேபிய அரசின் நடவடிக்கையால் தமிழர்கள் வேலை இழக்கும் அபாயம்[10]
வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை[11]
என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகளும் வாக்குற்திகளையும், சலுகைகளையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள்
கேரளக்காரர்கள் முன்பு தங்களது பிரச்சினைப் போலக் காட்டிக் கொண்டார்கள்[13]. அப்பொழுது நன்றாக தூங்கி விட்டு, இரண்டு மாதங்கள் கழித்து அறிக்கை விட்டிருக்கிறார் நமட்த்ஊ வீரர், தலைவர், மூதறிஞர்……………சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தாலே 50,000 வெளிநாட்டு ஆட்களை அனுப்பிவிடலாம் என்று சவுதி இளவரச்ரே வெளிப்படையாக சொன்னார்[14]. உத்தரகாண்ட மாநிலத்தில் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று இவர் அறிக்கைவிடவில்லை. அப்பொழுதெல்லாம், சும்மாயிருந்து விட்டு, இப்பொழுது இவர் அறிக்கை விடுவதன் மர்மம் என்ன?
சட்ட மீறலாகவும், உரிய பணியனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ சவுதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் , 2013 தேதிக்குள் (அரபு புது வருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு திரும்பவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[8] இதுவரை யாரும் சொல்லவில்லை, ஏனெனில் அப்படி குறிப்பிட்டால், இந்திய செக்யூலரிஸ அளவுகோள்களின் படி, உடனடியாக அவர் “கம்யூனலிஸ” சித்தாந்தியாகி விடுகிறார்.
[11] “சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,” என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.
[12] இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.
“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.
இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].
ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…
திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?
2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
சிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன?: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கியநாடுகள்சபையில்கொண்டுவரப்பட்டுள்ளதீர்மானம்குறித்துஇந்தியஅரசின்நிலைஎன்னஎன்பதுதி.மு.க.வுக்குநன்றாகவேதெரியும். அதுபற்றிநாங்களும்கருணாநிதியுடன்பேசியுள்ளோம். மார்ச் 18 ம்தேதிஇரவில்அவர்பேசியதற்கும்மறுநாள் 19 ம்தேதிஅவர்அறிவித்தஅறிவிப்புக்கும்வேறுபாடுஉள்ளது. ஒருநாள்இரவில்அவர்எப்படிதனதுமனதைமாற்றிக்கொண்டார்என்பதுதான்பெரும்வியப்பாகஉள்ளது. இடையில்என்னநடந்ததுஎன்னஎன்பதுபுரியவில்லை”, என்றார்.
முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
பேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.
அர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.
விவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].
தி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப்பொருத்தவரைஎந்தமுக்கியமுடிவுகளையும்தனிப்பட்டநபர்களின்விருப்புவெறுப்புகளுக்காகஎடுப்பதில்லை. குறைந்தபட்சம்திமுகவின்தலைமையில்உள்ளநிர்வாகிகளிடம்ஆலோசித்துத்தான்முடிவுஎடுக்கப்படும். ஈழப்பிரச்னைதொடர்பாகமார்ச் 18-ம்தேதிவிவாதித்துச்சென்றனர். அதன்பிறகுபொதுச்செயலாளர்க.அன்பழகன், பொருளாளர்மு.க.ஸ்டாலின், துணைப்பொதுச்செயலாளர்துரைமுருகன், நாடாளுமன்றக்குழுதிமுகதலைவர்டி.ஆர்.பாலுஉள்படதிமுகவின்முக்கியநிர்வாகிகளுடன்விவாதித்தபிறகேஇந்தமுடிவைஎடுத்தோம். இந்நிலையில்ஐ.மு. கூட்டணியிலிருந்துவிலகாவிட்டால், ஸ்டாலின்விலகிவிடுவதாகபயமுறுத்தியதுதான்திமுகவிலகியதற்குகாரணம்என்றுசெய்திவருகிறது. இதுஉண்மைக்குப்புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.
திஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன?: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின்தான்கருணாநிதைவற்புறுத்திவிலகல்பற்றியதீர்மானத்தைமுடிவுக்குக்கொண்டுவந்தார். …………ஒருநிலையில்தான்தன்தனதுவருங்காலத்தலைவர்பொறுப்பிலிருந்துவிலகவும்அச்சுருத்தினார், ஏனெனில்இதற்கானபாத்தியதையைஅவர்நாளைக்குஏற்பவேண்டியிருக்கும்”.
“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.
Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.
“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin.
உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.
Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi has disputed a report published in The Hindu that said party treasurer M.K. Stalin threatened to quithis position if the DMK did not snap ties with the United Progressive Alliance.In a statement here on Thursday, Mr. Karunanidhi said the DMK functioned on the basis of democratic principles and major decisions were not made by individuals.
He said that after Union Ministers P. Chidambaram, Ghulam Nabi Azad and A.K. Antony had met him on the Sri Lankan issue, he held discussions with senior party leaders, including K. Anbazhagan and Durai Murugan, before taking a decision on leaving the UPA.
இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.
கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா?: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன? அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.
[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.
[11] Mr Radhakrishnan, Spokesperson of the DMK, told NDTV, “Mr Stalin has always played an important role. He even went to the Unite Nations with our MP Mr. TR Baalu and met Mr Naveneethan Pillai to present resolutions passed by the Tamil Eelam Supporters Organisation. He represented our Thalaivar’s memorandum there”.
[13] Karunanidhi, sarcastically has said he believes a central minister (Chidambaram) when the central minister says the government didn’t know what was going on. Yes ! so do we !
மென்மையான இலக்காக உள்ள அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்மத்துடன் தாக்கிய மர்மம் என்ன?
சுநீத்தின் திராவிடனும், இப்பொழுதைய திராவிடனும்: சுநீத் குமார் சட்டர்ஜி “திரவிடியன்” என்ற புத்தகத்தை எழுதியபோது, புலகாங்கிதம் அடைந்து, “திராவிடர்கள்” பூரித்துப் போயினர். ஆஹா, ஒரு வங்காளக்காரர் (அப்பொழுது ஆரியர் என்று அவரை அடையாளங் காணவில்லை போலும்) தமிழனை “திராவிடன்” என்று அடையாளம் காட்டி விட்டானே என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டனர். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் துறை அமைப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குவதற்காக 1963ல் வந்திருந்த போது, “திராவிடர்” என தலைப்பில் மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனை 1965ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சிறுபுத்தகமாக வெளியிட்டது.
1963 திராவிடன் 2013ல் மாறியது ஏன்?: மடலேறும் அடலேறுகள், பெருஞ்சித்தரனார், சாலை இளந்திரையமன், க. ப. அறவாணன் போன்ற கோஷ்டியினர் அதை வைத்துக் கொண்டு நன்றாகவே அறிவுஜீவி வியாபாரம் செய்தனர். “சட்டர்சியின் திராவிடர் வரலாற்று மானுட மொழியியல் நோக்கில் இனவியலாய்வு” என்று பெரிய தலைப்பைக் கொடுத்து, அந்நூலை பொழிபெயர்த்து சம்பாதிக்கவும் செய்தனர். வங்காளிகளும் திராவிடரே என்றெல்லாம் துதி பாடினர்! பாரி நிலையம் 1990ல் தமிழ் பதிப்பை வெளியிட்டது.
அழகான பூக்களை மிதித்து சிதைப்பரோ?பூத்துக் குலுங்கும் மலர்களை கசக்கிப் பிழிவரோ?
மொட்டுக்களை குத்தி நாசம் செய்வரோ?
இதழ்களை கூறு போடுவரோ?
செடிகளை வேரோடு பிடுங்குவரோ?
ஆமாம், நாங்கள் செய்வோம், தமிழ்-தமிழ் என்று சொல்லிக் கொண்டே துணிந்து செய்வோம்!
தமிழர்-தமிழர் என்று பறைச்சாற்றிக் கொண்டு, பதைபதைக்க செய்வோம்!
தமிழகம்-தமிழகம் என்று பகர்ந்து கொண்டு தலைநிமிர்ந்து செய்வோம்!
வேறொருவர் சமாதி, நினைவிடங்களில் இப்படி கூரூர வன்மத்தைக் காட்டுவார்களா?: சென்னையிலேயே பெங்காளி சங்கம், பள்ளி, கலாச்சாரத் துறை, மேற்கு வங்காள அலுவலம், என்றெல்லாம் பிரபலமாக உள்ளனவே, அவற்றையெல்லாம் விடுத்து, அமைதியாக இருக்கும், அதிலும் அரவிந்தர் சமாதி இருக்கும் இடத்தில் இப்படி வன்முறை நிகழ்ச்சிகளை திராவிடர்கள், தமிழர்கள் எப்படி செய்துள்ளார்கள்? இதே மாதிரி, வேறொருவர் சமாதி, நினைவிடங்களில் இப்படி கூரூர வன்மத்தைக் காட்டுவார்களா?
மென்மையான இலக்கை வன்மம் தாக்கலாமா?: அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?
பீதியை, பயத்தை, கலவரத்தை, திகிலை, பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?: நியூட்டன் விதி தமிழ் சினிமாக்களில் எடுத்தாள்வது போல, திராவிட நாட்டில் எதிர்-எதிராக இரண்டு நியூட்டன் விதி போல இம்முறையைக் கையாளுகிறார்களா? தாக்கினால், திரும்பத் தாக்கப்படும்; திட்டினால், திரும்பவும் திட்டுகள் கிடைக்கும்; அடித்தால் பதிலுக்கு அடி கிடைக்கும்; இல்லை ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும், பீதியை, பயத்தை, கலவரத்தை, திகிலை, பரபரப்பை ஏற்படுத்த இத்தகைய போக்கைக் கடை பிடிக்கிறர்கள் என்றால் அதற்கு பெயர் என்ன, விளக்கம் என்ன? அந்த மனப்பாங்கை என்னவென்பது?