Posts Tagged ‘எச். ராஜா’

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

ஜூலை 13, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

Modi tackling Dravidianism

அமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும் பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.

BJP Faction leaders, nominated, joined etc

ஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  1. நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,
  2. ரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,
  3. யாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,
  4. நாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,
  5. தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,
  6. மருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,
  7. அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,
  8. சவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,
  9. செட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்

உட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.

Balasubramanian Adity, Vanathi Ladai

ஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்டனர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக  உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது.  டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.

Faction MBJP - no takers 2016

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].

© வேதபிரகாஷ்

13-07-2018

 

Balasubramanian Adity, Sankara narayanan - Vanathi Ladai

[1] Shri Amit Shah address public meeting at Maraimalai Nagar,Chennai,Tamil Nadu: 20.12.2014

https://www.youtube.com/watch?v=ZyilYpqQKuA

[2] In his first ever speech made in Chennai on December 20, 2014, Shah exhorted party cadre in Tamil Nadu to end the cyclical ‘misrule’ of Dravidian parties and to take Tamil Nadu on board with Prime Minister Modi’s Mission for Growth. However, the party could not open its account in the State Assembly in the 2016 elections.

Indian Expess, Amit Shah to visit Tamil Nadu from August 22, to meet OBC leaders, Published: 30th July 2017 08:04 AM | Last Updated: 30th July 2017 08:04 AM

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jul/30/amit-shah-to-visit-tamil-nadu-from-august-22-to-meet-obc-leaders-1635580.html

[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7511314.ece

[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am.

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[7]  http://sathiyamweekly.com/?p=5416

[8] https://secularsim.wordpress.com/2016/05/29/from-1996-to-2016-how-bjp-faired-in-tamilnadu-elections/

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபிகாரர்கள் [4]

Amith ShaH tramslated by H Raja 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: அமித் ஷா தொடர்ந்து பேசினார், “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்[1]. ஊழலை எதிர்த்து, சட்டம்-ஒழுங்குநிலை பேணும் கட்சிகளுடன் கூட்டு வைக்கப்படும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்[2]. பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். கூட்டம் முடிந்து, வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழிசை, அமித் ஷா வந்ததால் தான் மழை பெய்தது, என்றதெல்லாம் சொன்னது தமாஷாக இருந்தது. அமித் ஷா பேச்சு, தமிழக அரசியல்வாதிகளை சுசுப்பி விடத்தான் செயத்து. இருப்பினும் திராவிட கட்சிகள் அமைதியைக் காத்தன.

Angry Raja, looking Tamilisai

பிஜேபியில் உள்ள பிரிவுகளும், கோஷங்கள் மூலம் வெளிப்பட்டன: முன்பே எடுத்துக் காட்டிய படி, தமிழிசை, இக்கூட்டத்தை, இங்கு ஏற்பாடு செய்ததில் தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டார். அமித் ஷா வரவேற்பு, தங்கும் அறை, உரையாடல் கூட்டம் என்று அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். அமைப்பு ரீதியில் மற்றும் கட்சி ரீதியில் என்று இரு முறை பேச வாய்ப்பு பெற்றார். இருப்பினும் எச். ராஜா பேச அழைத்த போது, பேசி முடித்தபோது, அமித் ஷா, ராஜா பெயர் சொன்னபோது, தொண்டர் கூட்டம் ஆர்பரித்தது, ராஜாவின் ஆதரவு தெரிந்தது. ”இனி தமிழகத்து நிலையில் பார்த்தா, ராஜா, என்னத்தான் இருக்கிறதோ தெரியல, உன் பெயரைக் கேட்டாலே அதிருதே, ராஜா! இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம்! ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது! கனகோஷத்தில் பூத்தது. வானதி, அமித் ஷா கூட வந்தார், அவர் தான் தன் முகத்தை இருக்கத்துடன் வைத்துக் கொண்டார். இதெல்லாம், கட்சியில் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டியது. இது மற்ற ஆதரவாளர்களை நெருட செய்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மட்டும் கமென்ட் அடித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல பிஜேபி-எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டன.

Angry Raja, looking Tamilisai smiling

பேனர்கள், கொடிகள் வைத்ததற்கு விமர்சனம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன[3]. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா 09-07-2018 அன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இப்படி புலம்பி தள்ளினாலும், பிறகு அமைதியாகி விட்டன.

BJP internal problems

அமித் ஷா பேச்சிற்கு உஷாராக இருந்த திராவிட கட்சிகள்: திமுக ஏற்கெனவே பிஜேபியுடன் கூட்டிருந்தது, ஆகவே, ஸ்டாலின் அமைதியாக இருந்தது புரிந்தது. மறுபடியும் கூட்டு வைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையும் உள்ளது. இந்திராவை கொலை செய்ய முயன்று, அப்படியே கால்களில் விழுந்து சரணாகதி ஆன, குரூர கருணாநிதி கூட்டம் தான் இன்று அமித் ஷாவை எதிர்க்கிறது. ஆனால், கூட்டணி என்றால், “அந்தர்-பல்டி” அடிக்கும். அமித்ஷா எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு என்பதை விட, இந்து-எதிர்ப்பு கொண்டு, திராவிட-துலுக்கப்-கிருத்துவ-கம்யூனிஸ்ட் கூட்டம் செயல்பட்டதும் தெரிந்தது. ஏனெனில், பிஜேபி கூட்டணியில், அவர்களுக்கு சீட் கிடைக்காது. அடையாளம் கேட்டதால் தான், கொதித்த ஊடக செக்யூலரிஸ்டுகள், பொங்கி, அடங்கி விட்டன, ஆனால், செய்தி-வெளியீடு காட்டிவிட்டது. அமித்ஷாவின் பேச்சின் ஆழத்தை உணர்ந்த செக்யூலரிஸ்ட்-இந்து-விரோத ஊடகங்கள் கதிகலங்கி விட்டன. பேசியதை அப்படியே போட துணிவில்லை. சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை என்று புலம்புகிறது பிபிசி. சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக என்று ஒப்பாரி வைக்கிறது இன்னொரு ஊடகம்.  70 ஆண்டுகளாக “அதே குட்டையில் ஊறி, நாறிவரும் கொழுத்த மட்டைகள்” வெட்கமில்லாமல் உண்மை மறைத்து நாடகம் ஆடுகின்றன! தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம்! லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி! என்றெல்லாம் பேசுவர்.

Stalin, Mrs-Mr Raja, Durai murugan

தமிழக பிஜேபி முதலில் உட்பூசல்களிலிருந்து விடுபட்டு ஒற்றுமைக்கு வர வேண்டும்: பிஜேபியில் இருக்கும் உட்பூசல்கள், பிரிவினைகள் 2014லிருந்து மாறவே இல்லை[5]. மேடைகளில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்து கொள்வது மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களில் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்சினையைப் பெருக்கி வருகிறார்கள்[6]. ஒரு ஆதிக்க ஜாதியினர், இன்னொரு ஜாதியினரை தாக்கி வருகின்றனர். தனி நபர் தாக்குதல் அளவிலும் இறங்கி விட்டனர். திராவிட பாணியில், பலமுறை “பார்ப்பன எதிர்ப்பிலும்” இறங்குகிறார்கள். இதனால், மேலும் பிஜேபி ஆதரவாளர்கள் பிளவுபட்டு கிடக்கிறர்கள். கன்னியாகுமரி பலத்தை வைத்துக் கொண்டு, பிஜேபி பலத்தை வளர்ப்பதை விட, மத்திய திட்டங்கள் அங்கு வர திட்டம் போட்டுள்ளதால், போலியான ஆதரவு-எதிர்ப்பளார்பாட்டங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு முறைகளை சீரழித்து வருகின்றன. வேண்டாம் என்றாலும், இல்லை என்றெல்லாம் பேசினாலும், குறிப்பிட்ட ஜாதி-மதம் ஆதிக்கம் வெளிப்படுகிறது. அரசியல் நியமனங்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களுக்கே செல்கின்றன. கோடிகளில் துறைமுகம், 8-வழி சாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட கான்ட்ராக்டர்கள், முதலியோர் குஷியாகி உள்ளனர். இதில் எதிர்ப்பவர்கள் “கமிஷன்” கிடைக்காதவர்கள் தாம். ஆக, ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் வாரிசு அரசியலை இவர்கள் எவ்வாறு போக்கி, ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-07-2018

CPR, Lakhsmanan, Raja, Murali, Tamilisai, POn.Radha

[1] தினமணி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம், By DIN | Published on : 09th July 2018 08:33 PM

[2]http://www.dinamani.com/tamilnadu/2018/jul/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2956499.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக!, Posted By: Kalai Mathi Updated: Monday, July 9, 2018, 18:01 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-keeps-so-many-banners-welcome-amitshah-324483.html

[5] இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது – Daily Pioneer, CARTEL LEADING TN BJP, ALLEGES SENIOR LEADER, Thursday, 05 May 2016 | Kumar Chellappan | CHENNAI.

[6] https://www.dailypioneer.com/nation/cartel-leading-tn-bjp-alleges-senior-leader.html

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

National songs - initially sung by a group

தேசிய பாடல்கள் பாடப்பட்டது.

C. P. Radhakrishnan

பிஜேபி-பொறுப்பாளர்கள் கூட்டம் 09-07-2018 மாலை 5.50ற்கு ஆரம்பித்தது. கருப்பு முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

6.07 to 6.12 pm – சி.பி. ராதாகிருஷ்ணன்: துவக்க உரையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 6.00க்கு ஆரம்பித்து 6.07க்கு முடித்தார். காவியை கருணாநிதியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்று எடுத்துக் காட்டினார்.

Stage-Karuppu, LG, Lakhsmanan

6.07 to 6.12 pm –இல கணேசன்:  இல. கணேசன், “எவ்வாறு ரக்ஷா பந்தன் விழாவுக்கு வந்த 120 எம்.பிக்களும் கோடானுகோடி மக்களுக்கு சமமாக இருந்தனரோ, அதே போல, வந்துள்ள பிரதிநிதிகள் லட்சக்க்கணக்கான மக்களுக்கு சமம், மோடி வந்தால், இக்கூட்டம் இரண்டு லட்சங்களாகும், மோகன் குமாரமங்கலம் சிகிச்சைப் பெறும் போது, கண்கள், மூக்கில் ரத்தம் வந்தபோது பயந்தனர். ஆனால், மருந்து வேலை செய்த அறிகுறியாக இருந்தது, அதுப்போல, மோடியின் திட்டங்கள் மருந்தாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மோடியை எதிர்க்கிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்,”..….என்று பேசினார்.

Karuppu, Raja, LG, Amit Sha, Tamilisai, Pon.R,Muralidhar

6.13 to 6.19 pm – எச். ராஜா: [பேச அழைக்கப்பட்ட போது கரகோஷம்] மோடியின் திட்டங்களை விவரித்தார். 40 ஆண்டுகளில் தீர்வாகாமல் இருந்த, “ஒரு ராணுவ வேலை, ஒரு பென்சன்” மற்றும் 100 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த “காவிரி மேளாண்மை திட்டமும்” முடிவுக்கு வந்ததை எடுத்துக் காட்டினார்.

09-07-2018 - Amit Shah Meeting- on stage

6.19 to 6.31 pm – தமிழிசை சௌந்தரராஜன்: காணொளி மூலம், ஓட்டு எண்ணிக்கையை எப்படி பெருக்குவது என்பதைப் பற்றி பேசினார். காணொளியில், > 100 – A; > 50 – B; > 25 – C; < 10 –D, என்ற ரேஞ்சில் தான் போவதாக தெரிவித்தார்! பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுகள் 100க்கு கீழ், 50க்கு கீழ் என்றிருந்தால், அவற்றை பெருக்க வழிதேட வேண்டும் என்றார். ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்றோரின் பிறந்த நாள் முதலியன கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கின்றனர் என்றறிய வேண்டும். மகளிர் சுயயுதவி குழு, சங்கப்பரிவார் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பேசி வர வேண்டும்……

LG, Amit Sha, Tamilisai, vgp stage

6.31 to 6.38 pm – முரளீதர ராவ்: பொதுவாக, பொறுப்பாளர்களின் கடமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். “Mission BJP 2019” திட்டம் என்று செயல்பட வேண்டும் என்றார்.

09-07-2016 - Amit Shah Meeting.speaker-1

6.38 to 6.43 pm – சுவாமிநாதன்: பாண்டிச்சேரி, பிஜேபி தலைவர், எவ்வாறு இன்றளவில், தமிழகத்தில், பிஜேபியை எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதத்தில், பிஜேபிகாரர்கள் தாம் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். காமராஜுக்குப் பிறகு, பலமுள்ள தலைவராக, அமித் ஷா உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Vansthi came with Amit Shah

6.43 to 6.51 pm – பொன் ராதாகிருஷ்ணன்: பொறுப்பாளர்களின் கூட்டமே இவ்வளவு என்றால், ஆதரவாளர்களின் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்…தமிழகத்திற்கு 11,000 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று துறைமுகங்கள்;, மதுரையில் எய்ம்ஸ் முதலியன வருகின்றன்ன…தமிழக மீனவர்களுக்கு தேவையான படகுகள் கொச்சியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன…மோடி முதலமைச்சர் மாநாட்டில், 100 தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்…சமஸ்கிருதத்தை விட, தமிழ் தொன்மையானது என்றும் கூறியிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்வது போல, தமிழகத்திலும் ஆட்சி வரும்….

09-07-2016 - Amit Shah Meeting

6.51 to 6.52 pm – தமிழிசை சௌந்தரராஜன்: மறுபடியும் பேச ஆரம்பித்த போது, அமித் ஷா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், அவருக்கு பொன்னாடை போர்த்துவது, நினைவு பரிசு கொடுப்பது போன்று சில நிமிடங்களில் முடிந்தவுடன், பேச ஆரம்ப்பித்தார். எச். ராஜா தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.

Amit SHAH with others 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கச் சொல்லி, தமது உரையைத் தொடங்கினார்ரிரு கைகளையும் உயர்த்தி, மற்றவர்களையும் அவ்வாறே உரக்க சொல்லச் சொன்னார். தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன். ராதாகிருஷ்ணனை அமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Meeting-LG, Amit Sha, Tamilisai, vgp stage

மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. ஏழை தாய்ய்மார்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பிஜேபி உள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, 330 எம்பிக்களைக் கொண்டுள்ளது, 1700 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதே போல, ஆயிரக்கணக்கில் மேயர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று பல மாவட்டங்களில் இருக்கின்றனர். இவ்வாறு பிஜேபி வளர்ச்சியடைந்துள்ளது.

Amit SHAH meeting- 09-07-2018-5

மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. 13வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு முந்தைய அர்ரசாங்கம் ரூ 94,540 கோடிகள் தான் கொடுத்தது, ஆனால், 14வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு 1,99,996 கோடிகள் கொடுத்துள்ளது. அதாவது, 1,04,000 கோடிகள் அதிகம். முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு,ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது / ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டுக் காட்டினார்:

திட்டம் ரூ கோடிகளில் திட்டம் ரூ கோடிகளில்
சிறுநீர் பாசனம் 332 ஸ்மார்ட் சிடி 820
மெட்டரோ 2,875 மதுரை எய்ம்ஸ் 1,500
மோனோ ரெயில் 3,267 தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகள் 350
3200 கி.மீ ரெயில்வே லைன் அதிகப்படுத்த 20,000 பாரம்பரிய கிராம உன்னதி 45
வரட்சி நிவாரணம் 1,750 தேசிய நெடுஞ்சாலை 23,700
வார்தா புயல் 265 பாரத் மாலா – மத்திய சாலை 2,100
பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா 3,700 மாநிலங்களை இணைக்க 200

இப்படி அடுக்கிக் கொண்டே போனார். பிஜேபியை எதிர்ப்பவர்கள், இவ்வுண்மையினை அறிய வேண்டும். இதே போல, யு.பி.ஏ அரசாங்கமும் தமிழக்கத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பட்டியல் இட்டு, கணக்குக் கொடுக்கட்டும், ஆவணங்களுடன் அத்தகைய விவரங்களைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியும். கணக்கு கேட்பீர்களா என்று பொறுப்பாளர்களை கேட்டார்.

© வேதபிரகாஷ்

11-07-2018

Amit SHAH meeting- 09-07-2018-4

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [1]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [1]

Opposition to Amit Shah., chennai

மோடிஎதிரிகளும், பிஜேபிஎதிரிகளும், இந்துவிரோதிகளும்: “கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி, பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோதியின் தமிழக வருகையை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதனால் சென்னையே ஸ்தம்பித்து போனது,” என்று பிபிசி.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது[1]. தொடந்து, “ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோதிக்கு இருந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டாலும் இணையத்தில் மோதிக்கு செய்தது போன்றே இணையவாசிகள் அமித் ஷாவுக்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை பரப்பிவிட அது வைரலானது. இச்சூழலில், சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை,” என்று புலம்பியுள்ளது. சரி, “திடீரென்று காணவில்லை,”. என்றால், கண்டு பிடித்து சொல்ல வேண்டியது தானே? அப்படி சொல்லாமல், “ஆனால், அந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பலர் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்,” என்று சமாளித்துள்ளது. இந்தியாவில் என்ன அரசியல் தலைவர்கள் வது செல்லக் கூடாது என்றுள்ளதா? தமிழ்.வெப்துனியா[2] இதே பாட்டைப் பாடி, “இதைத்தொடர்ந்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவும், அன்பும் அளித்த தமிழக மக்களுக்கு எனது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்,” என்று முடித்துள்ளது[3].

09-07-2018 - Amit Shah Meeting- flags on platform dug

அமித் ஷாவே திரும்பி போ பிரச்சாரம்: திமுக, காங்கிரஸ் மற்றும் இந்து-விரோத சித்தாந்திகள் இத்தகைய வேலைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிப்படையாகத் தெரிகிறது[4]. டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.எல்..ஏ, ஜோதிமணி சென்னிமலை, காங்கிரஸ், போன்றோர் இதில் ஈடுபட்டனர்[5]. டி.ஆர்.பி.ராஜா, டி.ஆர்.பாலுவின் மகன். வாஜ்பேயி ஆட்சியின் போது, ஆர்.எஸ்.எஸ், பாலுவுக்கு பிரச்சாரம் செய்தார்கள். இதன்படி, ஒவ்வொரு கட்சியும், இதே முறையைக் கடைபிடிப்பதன் மூலம், தேர்தலை ஜெயிக்க முடியுமா, இந்தியா முழுவதும் சென்று வரும் ஆசியல்வாதிகளைத் தடுக்க முடியுமா? பிஜேபியை எதிர்க்கிறேன் என்று பிரதம மந்திரியை எதிர்ப்பது போன்ற செயல்கள் ஜனநாயக ரீதியில் இல்லை. மோடியை எதிர்க்கிறேன் என்று இந்துக்களை தூஷிப்பதும், செக்யூலரிஸமாக இல்லை. ஆகவே, இந்துவிரோதிகள் தாம், இவ்விதம் வெளியிடுகின்றனர் என்று தெரிகிறது. இதெல்லாம் சரியில்லை என்பது தெரிந்திருக்கிறது. இருப்பினும், செய்திருக்கிறார்கள் எனும்போது, ஆரசியல் அநாரிகத்தையும் பின்பற்றும் போக்காகக் காட்டுகிறது.

VGP resort - Tamilisai inspected

தமிழிசை தனது தொண்டர்களுடன் வந்து பார்வையிட்டார்.

VGP resort - Tamilisai inspected-2

விஜிபி தங்கக்கடற்கரை தேர்வு ஏன்?: அமித்ஷாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று “கிருத்துவ நாடார்” லாபி தீவிரமாக வேலைசெய்து, நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்தது. 2017ல் “திருவள்ளுவரை” வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் டிரஸ்ட் ஏற்படுத்தி, வி.ஜி.சந்தாஷத்திற்கு விருது கொடுத்து பாராட்டு விழா நடத்தியதில் சாமி.தியாகராஜனுக்கு பங்கு உண்டு. வி.ஜி.சந்தாஷம், சந்தோசமாக இடம் கொடுத்ததும், குஷியாகி விட்டனர். அமித்ஷாவை அசத்த ஏற்பாடுகளில் இறங்கி விட்டனர்[6]. இடம் தீர்மானம் ஆனதும், தனது தொண்டர்களுடன், சுற்றிப் பார்த்து, கவனித்து இருக்கிறார். இப்பொழுது தமிழிசை, ரிசார்டில் பந்தல் போடும் பூமி பூஜையில் கலந்து கொண்டார்[7]. அமித்ஷா வரவு பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கினார்[8]. இவ்விசயத்தை முன்னின்று நடத்துவதும் தெரிகிறது[9]. இவரது மகன் திருமணத்தில் சந்தோஷம் உட்பட, கிருத்துவ நாடார் லாபி கூட்டம் கலந்து கொண்டது. தினத்தந்தி விழாவில், மோடியை வரவழைத்து, மோடியின் கையால் வி.ஜி.சந்தாஷத்திற்கு விருது வழங்க வைக்கப்பட்டது. இவ்வாறு, ஐஜேகிவிலிருந்து, விஜிபிக்கு மாறுவதில், புகைச்சலும் ஏற்பட்டுள்ளது. பச்சமுத்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். பாமக அன்புமண்ணிக்கு அழைப்பு அனுப்பியும் வந்ததாகத் தெரியவில்லை.

VGP resort chosen by Tamilisai-1

மேடை, மைதானம், ஏற்பாடு முதலியன: மதியத்திலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. மேடையில், “நாட்டுப்புற” பாணியில் பாட்டு பாடிக் கொண்டு, வந்தவகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தது கலைக்குழு. பாதுகாப்பு சோதனை அதிகமாகவே இருந்தது. நுழைவில் சோதனை. பிறகு, ஒவ்வொருவரும், ஐடி கார்டுடன் வீடியோ/போட்டோ எடுக்கப் பட்டு அனுமதிக்கப் பட்டனர். இறுதியாக மைதான கூட்டம் இடத்தில் நுழைய முழு-சோதனை இருந்தது.

09-07-2016 - Amit Shah Meeting.secuirity check.frisking

மேடைக்கு முன்பாக, பாதுகாப்பு இடைவெளி இருந்தது. முக்கியமானவர்கள் மட்டுமே மேடைக்கு அருகில் அனுமதிக்கப் பட்டனர்.

09-07-2016 - Amit Shah Meeting.going inside.4

முந்தைய அமைச்சர் ஹண்டே வந்தபோது, போலீஸாருக்குத் தெரியவில்லை….நாராயண திருப்பதியைக் கூட தடுத்தனர்…..பிறகு அவர் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். மாவட்ட / மாநில பொறுப்பாளர்கள் அழைத்த போது குழப்பம் ஏற்பட்டது – இடப்பிரச்சினை தான். வி.ஜி.சந்தோசம், வி.ஜி.ரவிதாஸ் மற்றும் வி.ஜி.ராஜதாஸ் மேடையில் இருந்தது திகைப்பாக இருந்தது. வி..ஜி.சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள் பற்றி பலமுறை எடுத்துக் காட்டியுள்ளேன். “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவதில், தீவிரமாக இருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளேன். இருப்பினும், வி..ஜி.சந்தோசம் கடந்த வருடம், மைலாப்பூரில், திருவள்ளுவர் கோவில் வளாகத்தில், விருது எல்லாம் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பொன். ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வாழ்த்தி பேசினார்[10].  இப்பொழுது அவர்கள் இடம் கொடுத்துள்ளதால், உரிமையுடன் மேடையில் உட்கார்ந்துள்ளனர்.

V G Santhosam, V G RAvidass and V G ... with Amit Shah

2019 மற்றும் 2021 நிலைமைகள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருது நகர், சிவகங்கா, மதுரை வட்டங்களில், நாடார் மற்றும் கிருத்துவர் ஆதரவில், சில சட்டசபை தொகுதிகளில்  பிஜேபி அல்லது என்.டி.ஏ ஜெயிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுகின்றனர். 2014ல் பொன் ராதாகிருஷ்ணன், எச். வசந்தகுமாரை [காங்கிரஸ்] வென்றார் ஆனால், 2009ல் ஹெலன் டேவிட்சனிடம் [திமுக] தோற்றார். 2016ல், மூன்று எம்.எல்.ஏ காங்கிரஸ் மற்றும் மூன்று திமுக என்று வெற்றி பெற, பிஜேபி தோற்றது. 2016ல் தோற்ற, நயினார் நாகேந்திரன் [அதிமுக] பிஜேபியில் சேர்ந்துள்ளார்.  ஆகவே, இவர்கள் பதிலுக்கு மந்திரி பதவி கேட்பார்கள்.  வடமாவட்டங்களில், வன்னியர் கூட்டோடு போட்டியிட திட்டமிட்டிருக்கலாம். ஆனால், திமுக அல்லது அதிமுகவை தனிமைப் படுத்த முடியாது.  இப்பொழுதைக்கு, அதிமுகவோடு நல்லுறவு இருப்பதால், அதனை முறிக்க முடியாது. காங்கிரஸ்-திமுக அணி எனும்போது, பிஜேபி-அதிமுக அணி சாத்தியமாகிறது. 2019ல் தோற்றால், எல்லா கட்சிகளும் பிஜேபிக்கு எதிராகி விடும். வென்றால், கூட்டணி பேரத்தின் படி, பதவி கொடுத்தாக வேண்டும். காங்கிரஸைப் போல, பிஜேபி, அதிகாரம், பணம் வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளுடன் பேரம் பேசலாம். “புதிய தமிழகம்” கிருஷ்ணசாமி ஏற்கெனவே, பிஜேபி பக்கம் சாய்ந்து விட்டது தெரிகிறது. அதாவது, ஒரு “ரிசர்வர்ட்” தொகுதி அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பிறகு 2021 வரை அமைதியாக இருக்க வேண்டியிருக்கும்.

© வேதபிரகாஷ்

11-07-2018

VGP resort chosen by Tamilisai-2

[1] பிபிசி.தமிழ், ட்விட்டர் டிரெண்டிங்கிலிருந்து காணாமல் போனஅமித் ஷாவே திரும்பிப் போ‘!, 9 ஜூலை 2018.

https://www.bbc.com/tamil/india-44769098

[2] தமிழ்.வெப்துனயா, கழுவி ஊற்றிய தமிழகம்: நன்றி சொன்ன அமித் ஷா, Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (17:45 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amit-shah-thanks-tn-people-in-twitter-118070900057_1.html

[4] The Hindu, #GoBackAmitShah trends, SPECIAL CORRESPONDENT CHENNAI , JULY 10, 2018 00:58 IST; UPDATED: JULY 10, 2018 09:46 IST.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/gobackamitshah-trends/article24374838.ece

[5] DMK MLA T.R.B. Raja, Congress leader Jothimani Sennimalai, Anti-corruption activist Savukku Shankar……tweeted………#GobackAmitShah.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/gobackamitshah-trends/article24374838.ece

[6] தினசரி, அமித்ஷாவை அசத்த தடபுடல் ஏற்பாடு! தமிழிசை உற்சாகம்!, by Senkottai Sriram, 05-07-2018 5:24 PM.

[7] https://dhinasari.com/local-news/chennai-news/46073-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html

[8] News Today, Amit Shah’s visit to TN would be significant’, By NT Bureau Published on Jul 05, 2018 03:57 PM IST.

[9] https://www.newstodaynet.com/chennai/amit-shahs-visit-to-tn-would-be-significant-106531.html

[10] https://secularsim.wordpress.com/2017/06/16/why-hindutwavadis-hobnob-with-christians-under-the-guise-of-valluvar-promotion/

தனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)!

மே 29, 2016

தனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)!

பிஜேபியை கிண்டல் அடிக்கும் எஸ்.வி.சேகர்

சமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.

துக்ளக் - அட்டைப்படம் - பிஜேபி பற்றிகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].

  1. கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.
  1. கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.
  1. இதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.
  1. அதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.
  1. குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].

தமிழக பிஜேபியில் பொறாமை, போட்டி, கோஷ்டி-அரசியல் என்ற நிலை மாற வேண்டும்50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது.  அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].

தமிழக பிஜேபி - தேர்தல் 50 லட்சம் உறுப்பினர் - 2016செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது.  அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5].  இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].

Ramesh BJP Tamil Nadu

Ramesh BJP Tamil Nadu

தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக? 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்!, By: Veera Kumar, Updated: Thursday, May 19, 2016, 19:11 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

[3]http://www.dinamani.com/editorial_articles/2016/05/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/article3448002.ece

[4] தினமலர், மிஸ்டு கால்உறுப்பினர்கள் பா..,வில்மிஸ்சிங்ஏன்?, மே.21. 2016.02.08.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1526288

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amit-shaw-bjp-cheating-tamilnadu-116052100023_1.html

[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷாவுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).

[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா!, By: Sutha, Updated: Tuesday, May 10, 2016, 11:06 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-amit-shah-upset-over-the-affairs-tn-bjp-253270.html

1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)!

மே 29, 2016

1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றிதோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)!

BJP prospects in Tamilnadu 2016

1996 முதல் 2016 வரை பிஜேபியின் வெற்றிதோல்விகள்: 1996-2016, இருபது ஆண்டு காலத்தில், தமிழக பிஜேபி கோஷ்டி-அரசியலில் ஈடுபட்டது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற இயலவில்லை. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அக்கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா கட்சி. எனினும் போதிய பெரும்பான்மை இல்லாததால் 13 நாள்களில் பதவியை ராஜிமாநா செய்தார் அக்கட்சியின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அதற்கு காரணம் ஜெயலலிதா என்று தெரிந்த விசயமே.

  1. அதே ஆண்டில்-1996ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தமிழக சட்டப் பேரவைக்குள் முதல் முதலாக நுழைந்தது. அந்தகட்சியின் சார்பில் பத்மனாபபுரத்தில் போட்டியிட்ட வேலாயுதம், பாஜகவின் உறுப்பினராக தமிழக பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். இவர்தான் பிஜேபியின் முதல் எம்.எல்,ஏ என்ற சிறப்பைப் பெற்றார். இந்த தேர்தலில் 225 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக02 சதவீதம் வாக்குகள் பெற்றது.
  1. 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும் வெற்றி பெற்றார்கள்.
  1. இதையடுத்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில்
  2. கே.என்.லட்சுமணன் (மயிலாப்பூர்),
  3. கே.வி.முரளிதரன் (தளி),
  4. ஜெக. வீரபாண்டியன் (மயிலாடுதுறை),
  5. எச்.ராஜா (காரைக்குடி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[1].

இத்தேர்தலில் பாஜக 3.19 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

2006 Tamilnadu assembly result

  1. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., மொத்தமாக 1,455,899 வாக்குகளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. இத்தேர்தலில் இதன் வாக்கு சதவிகிதம்1.
  1. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.
  1. 2009 நாடாளுமன்றத் தேர்தலில்3 சதவிகித வாக்குகளையே (711,790) பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. 2004 பொதுத் தேர்தலில் 5.1 சதவிகித வாக்குகளை வைத்திருந்து தற்போது 2.8 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது பா.ஜ.க.

அண்மையில் முடிவடைந்த தேர்தலில் பாஜக கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. எனினும், அக்கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பாஜகவின் கனவு கானல் நீராகவே தொடர்கிறது[2].

தினமலர் - பிஜேபி கோஷ்டி பூசல் - படம்

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[3]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[4], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[5].

எஸ்.வி.சேகர் Vs கே.டி. ராகவன்.. தமிழக பாஜக அடிதடி2016லும் தொடர்ந்த கோஷ்டி பூசல் சமூகவலைதளங்களிலும் பரவியது: தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் உச்சத்தை அடைந்தன. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, கேசவ விநாயகம், ஆர்.கே.ராகவன் என கோஷ்டிகளின் எண்ணிக்கை நீண்டதுடன் வேட்பாளர்களுடன் ஐக்கியமானது. ஆனால், இவர்கள் தான் கட்சிக்கே பிரச்னை என்று எடுத்துக் காட்டப்பட்டது. எல்லாருமே மோடியை விட, கூடுதலாக, தாங்கள் தகுதி படைத்துக் கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒன்றும் இல்லாவிட்டாலும், மத்தியில் இருக்கும் ஆட்சியை வைத்து, நாலு காசாவது சம்பாதிக்கலாம் என, கட்சி பக்கம் ஆர்வமாக ஓடோடி வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட, ‘ஐயையோ… தெரியாத்தனமா முடிவெடுத்துட்டோமோ’ என, அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவரை பார்க்க வேண்டும் என்றால், இன்னொரு தலைவர் கோபித்துக் கொள்வார் என, பயந்து, போகக் கூடாத இடத்துக்கு சென்று, பார்க்க கூடாதவரை பார்த்ததைப் போல, பதுங்கி பம்மும் நிலை, ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்பட்டுள்ளது, என்றெல்லாம் ஊடகங்கள் விவரித்தன.

thamilisai-விமர்சித்து-முகிலன் - cartoon-விமர்சங்களை தவிர்க்காத பிஜேபி: திராவிட கட்சிகள் பிஜேபியை மதவாதி கட்சி என்ற முத்திரையக் குத்தியே பிரச்சாரம் செய்து வருகின்றன. திமுக கூட்டு வைத்துக் கொண்டாலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில், கருணாநிதி தனது விமர்சனத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 2016ல் நாஞ்சில் சம்பத். ‘தமிழகத்தில் கால் ஊன்ற போகின்றனராம்; கால் இருந்தால் தானே ஊன்ற முடியும்; கால் இல்லாத சப்பாணி அமைச்சர்களால் என்ன செய்ய முடியும்’ என்ற அவரின் நக்கலான பேச்சு, அ.தி.மு.க., நாளிதழில் பிரதான இடத்தை பிடித்தது[6]. அவர் சப்பாணி அமைச்சர்கள் என விளித்திருப்பது, நம்ம ஊரு பொன்னாரை மட்டுமல்ல; தமிழக பா.ஜ.,வை கரையேற்ற, மேலிடம் அனுப்பிய பியுஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரையும் தான், என்று தினமலர் விளக்கமும் கொடுத்தது[7].

© வேதபிரகாஷ்

 28-05-2016

<aref=”#_ftnref1″ name=”_ftn1″>[1] தினமணி, கானல் நீராகும் பாஜகவின் எம்.எல்.. கனவு: தொடர்ந்து 3 பேரவைகளில் இடமில்லை, By சா.பெர்லின் மோசஸ் First Published : 21 May 2016 05:21 PM IST

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/05/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D./article3444609.ece

[3] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[5] http://sathiyamweekly.com/?p=5416

[6] தினமலர், சப்பாணி கட்சியா தமிழக பா..? , பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2016,21:16 IST.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1506593