Posts Tagged ‘நேரு’

“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்!

நவம்பர் 1, 2013

“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்!

Why anti-hindu Hindu

பாட்னாவில்  குண்டு  வெடித்த  போது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே,  வித்யா  என்றால்,  உடனே  நடவடிக்கை  என்றதேன்?: வித்யா சுப்ரமணியம் தில்லியில் பார்லிமென்ட் தெருவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் “தான் எழுதிய கட்டுரைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மிரட்டல் தொலைபேசிகள் வந்துக் கொண்டிருப்பதாக” புகார் கொடுத்ததாக அஜய் மாக்கன் என்ற காங்கிரஸ் தொர்பாளர் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[1]. உடனடியாக அவர் உள்துறை அமைச்சர் ஷிண்டேவிற்கு ஒரு கடிதம் எழுதி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[2]. ஷிண்டேயும் உடனே “நடவடிக்கை எடுக்கப் படும்”, என்றார்.  பாட்னாவில் குண்டு வெடித்தபோது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே, வித்யா என்றால், உடனே நடவடிக்கை என்றது ஆச்சரியம் தான்! அதுமட்டுமல்லாது, மாக்கன் ஒருபடி மேலே போய், மோடி-பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கைக்கு சுதந்திரம் இப்படித்தான் இருக்கும் என்றும் விமர்சித்தார். இதற்குள் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்ட வித்யா சுப்ரமணியம், தான் அவ்வாறு புகார் கொடுக்கவில்லை என்றும், இதற்காக காங்கிரஸிடம் தான் செல்லவில்லை[3], எந்த அரசியல் கட்சியிடமும் செல்லமாட்டேன் என்று டுவிட்டரில் அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன. தான் காங்கிரஸிடம் செல்லவில்லை என்றாலும்[4], காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இ[ப்பிரச்சினையை எழுப்பவேண்டும்? ஆனால், இவர் மோதிக்கு எதிராக எழுதியுள்ள மற்ற கட்டுரைகள் சந்தேகத்தை எழுப்புகின்றது. மோதி பிரதம மந்திரி பதவிக்கு லாயக்கில்லாதவர் என்று ஒரு கட்டுரை உள்ளது[5].

செய்திகள் அறிவிக்கப் படுகின்றனவாஉருவாக்கப் படுகின்றனவா?: 31-10-2013 ஆர்.எஸ்.எஸ்.ஆட்கள் என்று சந்தேகிக்கப் படுபவர்கள், “ஹிந்து அலுவகத்தில் அதிரடியாக நுழைந்தனர்” என்று தலைப்பிட்டு செய்தி “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” வெளியிடப்பட்டுள்ளது. உள்ளே, நான்கு அல்லது ஐந்து பேர் வித்யா சுப்ரமணியம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட கட்டுரையின் மீது புகார் அளிக்க வந்ததாக உள்ளது. வித்யாவும் தனக்கு மிரட்டல் தொலைபேசிகள் வந்ததால் புகார் கொடுத்தார், ஆர்.எஸ்.எஸ். அலுவகத்திற்கு போன் செய்து கேட்டபோது, அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டது[6]. அந்த நிருபருக்கு அந்த அளவிற்கு சாதுர்யம் இருப்பதால், அந்த சந்தேகிக்கப் படுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெரிந்திருக்கலாம். ஆனால், இப்படி சொதப்பலாக “செய்தி” வெளியிட்டிருப்பது, காங்கிரஸுக்கு சாதகமாக உற்பத்திச் செய்யப்பட்ட செய்தி போல உள்ளது[7]. திக்விஜய் சிங் போன்றோரே அவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் இறங்கியுள்ள போது, அதே முறையை இந்த “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” மற்றும் அவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் செய்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். தொழிலில் சுத்தம், நாணயம், யோக்கியதை, மதிப்பு, மரியாதை எல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றபோது, எப்படி அதே தரா-தரங்களை பின்பற்ற தயங்குவது ஏன்?

வித்யா சுப்ரமணியம் தில்லியில் ஏன் புகார் கொடுத்தார்?: புகார் கொடுக்கப்பட்டதால், அதன் படி இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 506ன் கீழ், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனை தமிழ்நாட்டு போலீஸாருக்கு அனுப்பியுள்ளதாக எஸ்.பி.எஸ். தியாகி, டெபுடி கமிஷனர் செய்தி ஊடகத்திற்கு கூறியுள்ளார்[8]. சென்னையில் பதிப்பிக்கப் பட்ட கட்டுரையின் மீதான உருவாகியுள்ளப் பிரச்சினைக்கு தில்லியில் வித்யா சுப்ரமணியம் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை… ஒருவேளை, அப்பொழுது தான், இந்த சாதாரணமான விசயத்தைப் ஊதி பெரிதாக்கி விடலாம் என்று நினைத்தாரோ, என்னமோ? வித்யா சுப்ரமணியம் “தமிழ் ஹிந்துவில்” “பாதி-உண்மை-பாதி-பொய்மை” என்ற ரீதியில் பாரபட்சமாக எழுதியிருந்த கட்டுடைக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வெளிவந்தன. அவற்றுள் சில “தி ஹிந்து” வெளியிட்டது. அப்படி இருக்கும் போது, நடுநிலையோடு கட்டுரை எழுதியிருக்க வேண்டும்.

இந்து நாளிதழ்,  இந்துவிரோத நாளிதழாகி விட்டது: ஆனால், அந்நாளிதழ் வழக்கம் போல, ஒரு குறிப்பிட்ட, அதாவது, பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற ரீதியில், இந்து மதம், இந்துமதக் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் இந்துக்களை அவதூறாக, தூஷித்து வரும் போக்கை 60-90 வயது கொண்ட முதியவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அதனால், அவர்கள் பலமுறை இந்து நாளிதழ், இந்து-விரோத நாளிதழாகி விட்டது என்று வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால், அதன் விற்பனையும் சென்னையில், தமிழகத்தில் குறைந்து விட்டது. இப்பொழுது, படித்த இளைஞர்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சித்தாந்தம் என்ற போர்வையில், ஒட்டு மொத்தமாக, பல கும்பல்கள் பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்வதையும் கண்டு பிடித்து விட்டார்கள்.

. மார்க்ஸின்  “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?”[9]:: இப்பொழுது கூட “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?” என்று அ. மார்க்ஸ்[10] என்ற கம்யூனிஸ சித்தாந்தியை வைத்து, எழுதப்பட்டு, பிரசுருத்துள்ளது[11]. அதன் கீழ் கட்டுப்படுத்தப் பட்ட வெளியாகும் பதில்களில் மார்க்ஸ் எப்படி பாரபட்சத்துடன், ஒடருதலைப்பட்சமான சித்தாந்த கருத்துகளை எழுதியுள்ளார் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள கடுமையான வார்த்தைகள், சொல்லாடல்கள், வாக்கியப் பிரயோகங்கள் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன. அவை, மற்ற அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர்களுக்குத் தான் தெரியும். சாதாரண வாசகர்கள் படித்து கோபம் தான் கொள்வார்கள், ஆனால், உண்மையறியும் மற்றவர்கள் வருத்தம் கொள்வார்கள். “அடடா, இந்த ஆள் இப்படி எழுதியுள்ளாரே, மக்களிடம் திரிபுவாதங்களை வைத்து மக்களைத் தூண்டி விடுகிறாரே, ஏன் இப்படி விஷமத்தனமாக செய்கிறார்”, என்றுதான் கவலையுடன் கேட்டுக் கொள்வார்கள். அவர் கட்டுரையில் உள்ள சில சரித்திர ஆதாரமற்ற, முரண்பாடான விசயங்கள் அலசப்படுகின்றன. முதலில் அவரது வாக்கியங்கள் அப்படியே கொடுக்கப் படுகின்றன. [அடைப்புகளில் எது பொய், முரண்பட்டது, ஆதாரமற்றது என்பது எடுத்துக் காட்டப் படுகிறது]:

  1. நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல. [கடுமையான வார்த்தைப் பிரயோகம். நேரு எப்படி இந்து-விரோதியாக இருந்தார் என்பது இதுவரை யாரும் விளக்கமாக ஆராய்ச்சி செய்யவில்லை.O. P. Mathai எழுதிய “Remniscences of Nehru Dynasty” ஓரளவிற்கு, ஒரு கோணத்தில் தான் அலசப்பட்டுள்ளது]
  2. ஜனவரி 29, 2004-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணைபோனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியதுஎன்றது நினைவுக்கு வருகிறது. [நிச்சயமாக இது கருத்தல்ல, சரித்திர உண்மை. காந்தி சொன்னதையும் நினைவுகூர வேண்டும். பாகிஸ்தான் உருவானால் எனது பிணத்தின் மீதுதான் நடந்து போக வேண்டும் என்றார். என்னவாயிற்று?]
  3. இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி, நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது. [இது சரித்திர ஆதாரமற்ற பொய்யாகும். இஸ்லாமிய மதவாதத்தால் பிளவுண்ட 1947ல் இந்தியா குடியரசானது 1950ல், நேரு இறந்தது 1964, செக்யூலரிஸத்தில் திளைத்தது 1976, …..என்றுள்ளது. அதாவது, நேருவால், ஏன் படேலால் கூட இந்தியாவை செக்யூலரிஸ நாடாக்க முடியவில்லை. எனவே செக்யூலரிஸம் பிரச்சினையல்ல, காந்தி-நேரு மட்டுமல்ல, திராவிடவாதிகள்-கம்யூனிஸவாதிகள் என எல்லோரும் பாகிஸ்தான் உருவாக ஆதரித்தது தான். இதை மறைக்க ஏதேதோ எழுதுகிறார் “மார்க்ஸ்”
  4. அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலதுசாரிச் சார்புடையவர்கள். [இடதுசாரி சித்தாந்தத்தினால் இப்படி மரியாதைக்குரிய தலைவர்களை சாயம் பூசி இப்பொழுது விமர்சிப்பது சரியா என்று அவரது மேதாவித்தனத்தைத் தான் கேட்கவேண்டும்]
  5. ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. [ஆமாம், இவரைப் பொருத்தவரையில் ………………மிகப்பெரியவர், அவருக்கு யாருமே இணையில்லை, இணைவைக்கக் கூடாது………………………..இப்படி யார் சொல்வார்கள் என்று புரிந்து கொள்ளலாம்]
  6. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.[ஆஹா, அதுதான் நேருவைப் பற்றி அதிகமாகவும், படேலைப் பற்றி குறைவாகவும் உள்ளது போலும்]
  7. டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், “பாசிஸத்துக்குக் காரணமாகக் கூடிய ரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ். கைக்கொண்டுள்ளது” என்று இவர்களை பாசிஸ்ட்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது [இப்படி ஒன்றைக் குறிப்பிட்டு மற்றதை மறைக்கிறார். அ. மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்” எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும். . மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும்.]

பத்திரிகாதர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணயம் இல்லாத இதழியல் வல்லுனர்கள்: ஆனால், தவறுகளை, பிழைகளை, சரித்திர-பிறழ்சி வாதங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. இங்குதான் பிரச்சினை வருகிறது. கட்டுரை எழுத “தி ஹிந்து” வழக்கமாக மார்க்சிஸ்ட், மற்ற கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட அல்லது ஆதரவு உள்ளவர்களைத்தான் வைத்து கட்டுரை எழுதப்பட்டு வெளியிட்டு வருகிறது. இப்போக்கு 1990களிலிருந்து காணப்படுகிறது. ஏதோ அதிகமான புகார்கள் வந்து, பிரஸ் கவுன்சிலிடம் புகார்கள் அனுப்பும் நிலை வரும் போது, ஒன்று-இரண்டு கட்டுரைகளை வெளியிடுவார்கள் அல்லது அக்கருத்துக்களை சுருக்கி “ஆசிரியர் கடிதம்” கீழ் வெளியிடப்படும். ஆனால், பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகள், நிலைநிறுத்தப் பட்ட உண்மைகள் போல, மற்ற பத்திரிக்கைகளில், புத்தகங்களில், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரங்களாகக் குறிப்பிட்டு, சுற்றில் வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமான மூளை சலவை செய்யும் பிரச்சாரமே அன்றி, உண்மையான அறிவுஜீவித்தனமோ, பாண்டித்யமோ கிடையாது. இதைத்தான் 60-90 வயதான பெரியவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்துதுவேஷம்,  இந்துகாழ்ப்பு,  இந்துதூஷணம் என்றே தொழில் நடத்தும் சித்தாந்த கூலிகள்: “தி இந்து”விற்கு / அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு “தமிழால் இணைவோம்” என்ற கொள்கை இருந்தால், இப்படி பத்திரிகா தர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணம் முதலியவை இல்லாமல், “எதிர்-இந்து”, “இந்து-விரோதம்”, இந்து-துவேஷம், இந்து-காழ்ப்பு, இந்து-தூஷணம் என்றே தொழில் நடத்த வேண்டியிருக்க மாட்டார்கள். யாரும் கோபப் பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிடப்பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்காது. ஆனால், இவையெல்லாம் சில நாட்களிலேயே நடந்து விட்டன. ஆகவே, நிச்சயமாக “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையினின்று மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், “அப்படித்தான் இருப்போம்” என்றாகி விடுகிறது. பிறகு நடப்பது நடக்கும்.

© வேதபிரகாஷ்

31-10-2013


[1] Maken added that the journalist filed a complaint saying that she was getting threatning calls from the RSS. Is this the kind of politics that they want to take forward, he then questioned the BJP.

http://news.oneindia.in/new-delhi/ajay-maken-rss-threatned-senior-jounalist-over-patel-article-1333764.html

[2] Congress spokesman Ajay Maken told reporters in New Delhi that he had conveyed to home minister Sushilkumar Shinde concerns expressed by the journalist and has requested him to probe her complaint. He said she had given full details about the threats.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/RSS-threatened-journalist-over-article-on-Patel-Congress/Article1-1145715.aspx

[6]HT correspondent with all his wisdom could have very well investigated and unmasked the “suspects”, instead of pleading that “Despite repeated queries from HT, the RSS denied”. In fact, this makes to suspect the HT corres that he might have manufactured such news just to strengthen the Congresswalas accusation. Why then, the “Hindu”, “Hindu”sthan Times prefer to aid and abet Congress’ allegations?

http://www.hindustantimes.com/india-news/newdelhi/suspected-rss-men-barge-into-the-hindu-office/article1-1135611.aspx

[8] “A case under Section 506 of Indian Penal Code (punishment for criminal intimidation) was registered, regarding the complaint of Vidya Subramaniam at the Parliament Street Police station. The same day, the matter was referred to Tamil Nadu Police,” Deputy Commissioner of Police S.B.S. Tyagi told IANS.

http://www.ummid.com/news/2013/October/31.10.2013/congress-bjp-spar.html

[10] http://amarx.org/?page_id=154

எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ள: செல் பேசி:  +91 94441 20582; மின் அஞ்சல்:  professormarx@gmail.com; அஞ்சல் முகவரி:  அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-  600 020 ( A.Marx,  3/5, First Cross St.,  Sastri Nagar, Adyar, Chennai- 600 020, India ).

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்!

செப்ரெம்பர் 17, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (10) – மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் – முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்!

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

16-09-2013 (திங்கட்கிழமை): அகிலேஷ் வந்து சென்றதும் மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயம் செய்கிறார்கள் என்றதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னமே எங்கெங்கு செல்லவேண்டும், யாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டது. பாதுகாப்பிற்காக கொம்புகளைத் தடுப்பாக வைக்கப் பட்டு, சாதகமானவர்களை மட்டும் வைத்து கூட்டம் கூட்டப்பட்டது. யாரும் கோஷங்கள் போடக்கூடாது என்றெல்லாம் தெளிவாக கட்டளைகள் இடப்பட்டன. அதன்படியே முஸ்லிம்களை மட்டும் சந்தித்துச் சென்றனர்.  இதில் கூட முதலில் ஊடகங்கள் அவர்கள் முஸ்லிம்களை மட்டும் சந்திக்கும் காட்சிகளைக் காட்டலாமா வேண்டாமா என்று தயங்கின என்று தெரிந்தன. ஏனெனில், புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

ஜட்-மக்கள்   /   இந்துக்கள்  இவர்களிடம்  கோபமாக  இருக்கிறார்களாம்: கலவரத்தில் ஜட் மக்கள் / இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம்கள் அதிகமாக இருந்த மற்றும் தற்காலிக இருப்பிட கூடரங்களுக்குச் சென்று முஸ்லிம்களை பார்த்துச் சென்றனர். பவாலி மற்றும் காஞ்ச்புரா பகுதிகளில் ஒப்புக்கு நின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால், தங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை மற்றும் அவமானப் படுத்திவிட்டதாக புழுங்கிக் கொண்டிருக்கிருந்தனர்[1].

 

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

முஸ்லிம்களும்   வெறுப்படைந்துள்ளனர்: மன்மோஹன் சிங், சோனியா, ராகுல் விஜயத்திற்கு இந்த அளவிற்கு பாதுகாப்பு செய்துள்ளனரே, அதே மாதிரி முன்னமே செய்திருந்தால், பாதுகாப்புக் கொடுத்திருந்தால், இந்த கலவரமே நடந்திருக்காதே என்று வெளிப்படையாகக் கூறவும் செய்தனர்[2]. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாதம், இளம் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது. இதுவரை, 44 பேர் இறந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புக்காக, ராணுவம், துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த, ஊரடங்கு உத்தரவு, தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. ஞாயிற்றுக் கிழமை, கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற, முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, பாதிக்கப்பட்ட மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

மன்மோகன் சிங் எச்சரிக்கை கலவரத்துக்கு  காரணமானவர்கள்  மீதும்,   கலவரத்தை  தூண்டி  விட்டவர்கள்  மீதும்,   கடும்  நடவடிக்கை  எடுக்கப்  படும்: உ.பி.,யில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த, பிரதமர் மன்மோகன் சிங், “கலவரத்துக்கு காரணமானவர்கள் மீதும், கலவரத்தை தூண்டி விட்டவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, எச்சரித்தார். அவருடன், காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுலும் சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.  பஸிகான் என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இதன் பின், பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இது ஒரு மோசமான கலவரம். முதலில், முகாம்களில் தங்கியுள்ள மக்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான, அனைத்து நிவாரண உதவிகளையும் அளிக்க வேண்டும். இதற்கான உதவிகளை செய்வதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. கலவரப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு, .பி., அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்யும். கலவரத்துக்கு காரணமானவர்களையும், கலவரத்தை தூண்டி விட்டவர்களையும், கண்டறிந்து, அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு, அவர் கூறினார்[3].

 

எனக்கு குல்லாதான் அழகாக இருக்கிறது - மௌலானா அகிலேஷ் - இப்படி வர்ணித்தது ஒரு நாளிதழ்தான்!

எனக்கு குல்லாதான் அழகாக இருக்கிறது – மௌலானா அகிலேஷ் – இப்படி வர்ணித்தது ஒரு நாளிதழ்தான்!

காலை 10 மணிக்கு வந்து  இரண்டு- மூன்று மணி  நேரம்  பார்த்து  விட்டுச் சென்ற   கதை[4]: மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறுகையில், “”கலவரம் குறித்து உ.பி., அரசை ஏற்கனவே எச்சரித்து இருந்தோம். ஆனால், உ.பி., அரசு அதை அலட்சியப்படுத்தி விட்டது,” என்றார்.  முகாம்களில் முசாபர் நகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, மற்ற முகாம்களுக்கும், பிரதமர், சோனியா, ராகுல் ஆகியோர் சென்றனர். அங்குள்ள மக்களுக்கும், அவர்கள் ஆறுதல் கூறினர். காங்., தலைவர் சோனியா, பெண்கள் இருந்த பகுதிகளுக்கு சென்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ராகுலும், தடுப்பு வேலிக்குள் புகுந்து, பாதுகாப்பு வளையத்தை கடந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிலர் கொடுத்த கடிதங்களையும் வாங்கிக் கொண்டார்[5]. முகாம்களில் இருக்கும் பெரும்பாலானோர், “நாங்கள், நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கி விடுகிறோம். வீடுகளுக்கு செல் வதற்கு பயமாக உள்ளது. வி.ஐ.பி.,க் களுக்கு தான், பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என்றனர். இதற்கிடையே, முசாபர் நகர் கலவரப் பிரச்னையை எழுப்பி, உ.பி., சட்டசபையில், எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன. கலவரத்தை தூண்டி விட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள, பா.ஜ., – எம்.எல்.ஏ., சங்கீத் சோமைத் தேடி, அவருக்கு சொந்தமான பல இடங்களில், போலீசார், நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

 

 

On the Muzaffarnagar-Shahpur road is the Tavli madrasa. Now home to over 300 Muslims who have fled from their villages after the outbreak of recent communal violence, it is one among the many makeshift relief camps that dot the district’s landscape. It is here Shamshad Chaudhary piercingly asked Congress vice-president, Rahul Gandhi, accompanying Prime Minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi, on a visit to the riot-affected areas on Monday morning, “Why did you — the Congress party and Jawaharlal Nehru — stop us from going away in 1947? We have been reduced to strangers in our own land.” As Mr. Chaudhary recounted to The Hindu[6], Mr. Gandhi told him what had happened was ‘very wrong’. “You are not strangers … The first responsibility is with the State government, but we will do whatever we can to help.” முசபர்பூர்-ஷாபூர் சாலையில் தவ்லி மத்ரஸா உள்ளது. அதில் சுமார் 300 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர். இங்குதான் சம்ஷத் சௌத்ரி, “எதற்காக காங்கிரஸ் – நேரு எங்களை 1947ல் போகாமல் தடுக்கவேண்டும். எங்கள் நாட்யிலேயே நாங்கள் அறியாதவர்களாகி விட்டோம்”, என்று சோனியா, ராகுல் முதலியோரைப் பார்த்துக் குத்தும் மாதிரி கேட்டார். அப்பொழுது, ராகுல், “நீங்கள் புதியவர்கள் அல்லர். முதலில் பொறுப்பு மாநில அரசிற்கு இருக்கிறது, இருப்பினும் நாங்கள் முடிந்த உதவியைச் செய்கிறோம்.”, என்றார்.

 

தி  ஹிந்துவின்  பாரபட்சமான   செய்தி   வெளியிடும்  போக்கு: தி ஹிந்து வழக்கம் போல, ஆனால், மிகவும் மோசமாக, ஒருதலைப் பட்சமாக, முஸ்லிம்களின் குறைகளை மட்டும் செய்தியாக போட்டுள்ளது[7]. ஒரே வரியில் ஜட்-கிராமத்தவர்களையும் (இந்துக்களையும்) பார்த்தனர் என்று ஸ்டைலாக போட்டிருந்தது, கேவலமாக இருந்தது, “Through their quick three-hour run through Muzaffarnagar — stopping over at relief camps for displaced Muslims, meeting Jat villagers, and visiting the family of the slain IBN7 journalist, Rajesh Verma — India’s top political leadership got a sense of the deep chasms that have developed among communities in western Uttar Pradesh.”. இந்த “முஸ்லிம்-ஜட்” வார்த்தை ஜாலம் என்னவென்று புரியவில்லை. பிஜேபி கலவரத்தைப் பற்றி நிர்ணயித்துள்ளது என்று, ஏதோ ஒப்புக்கு ஒரு செய்தி போட்டிருக்கிறது. பீஜேபி காரர்கள்ள் எப்பட்டி நேரில் செல்லாமலே கருத்துக் கூறமுடியும். தி ஹிந்துவுக்கு சரியான கொழுப்புதான், கிண்டல்தான், நக்கல்தான்[8]. நாளைக்கு அதையும் சொல்லிக் காட்டுவார்கள். ஆர்.பி.சிங்கும் சோனியாவின் விஜயத்தை செக்யூலராக மாற்ற, எல்லோருரையும் பார்த்தாகி விட்டது என்று பேட்டியளித்துள்ளார்[9].

 

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மன்மோஹன்சிங்,   சோனியா,   ராகுல்  விஜயம்   –   முஸ்லிம்களை  மட்டும்  சந்தித்துச்  சென்றனர்: மேலே குறிப்பிட்டப்படி, இத்தகைய குற்றச்சாட்டு, நிச்சயமாக மக்களிடம் எழுந்தது. ஏனெனில், அவர்கள் சென்றதெல்லாமே, முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகள் தாம். அதாவது, சிறுபான்மையினராக ஜட்-மக்கள் இருந்திருக்கலாம். இதனால், கூட சென்றிருந்த உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.சிங்கும் சோனியாவின் விஜயத்தை செக்யூலராக மாற்ற, எல்லோருரையும் பார்த்தாகி விட்டது என்று பேட்டியளித்துள்ளார். “முஸ்லிம்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர், என்று கூறுவது பொய்யாகும். பர்வலா மற்றும் காஜாபூர் ஜட்-மக்கள் நிறைந்த கிராமங்கள் ஆகும். அங்கு அவர்கள் மக்களிடம் பேசியுள்ளனர். ராஜேஸ் வர்மாவின் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். ஆகையால், ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் பார்த்தனர் என்பது சரியில்லை.. எல்லோரையுயும் இந்தியர்கள் என்ற முறையில் பார்த்தனர்”, என்ற விளக்கம் கொடுத்தார்[10]. ஆனால், இவ்வாறு குறிப்பிட்டதால், அவர்களுக்கே தாழ்வு மனப்பான்மை வந்திவிட்டதோ என்னமோ. “முஸ்லிம்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர், எங்களை கண்டுகொள்ளவில்லை”, என்றால், அவர்கள் யார் என்பதை முதலில் அவர்களே அடையாளம் கொள்ளவில்லை என்றாகிறது[11].

 

நான் அப்பாக்குத் தப்பாமல் பிறந்த மகனாக்கும் - அவர் முல்லா என்றால், நான் மௌலானா!

நான் அப்பாக்குத் தப்பாமல் பிறந்த மகனாக்கும் – அவர் முல்லா என்றால், நான் மௌலானா!

சுப்ரீம்  கோர்ட்டில்  .பி.,   அரசு  பதில்: கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி, உ.பி., அரசு மற்றும் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.  மாநில அரசு அளித்துள்ள பதிலில், “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. தற்போது, இயல்புநிலை திரும்பியுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள பதிலில், “வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக, கலவர பகுதிகளுக்கு, 78 கம்பெனி துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்னா நைனா, சும்மா நம்பளை சதாய்க்கிறியே, இன்னும் என்னத்தான் வேண்டும்?

என்னா நைனா, சும்மா நம்பளை சதாய்க்கிறியே, இன்னும் என்னத்தான் வேண்டும்?

செக்யூலரிஸ   /   மத  சார்பின்மை  சுற்றுலாசென்ற மூவர்: முக்தார் அப்பாஸ் நக்வி பா.ஜ., துணை தலைவர், “விரைவில் லோக்சபா தேர்தல் வரப் போகிறதல்லவா? அதனால் தான், பிரதமர் மன்மோகன் சிங், கலவரப் பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளார். மதச்சார்பு என்ற போர்வைக்குள் மறைந்துள்ள சில, சர்வாதிகார அமைப்புகள் தான், இந்த கலவரத்தை தூண்டி விட்டுள்ளன. அசம் கான்  சமாஜ்வாதி மூத்த தலைவர் கலவரம் நடந்த பகுதிகளுக்கு, பிரதமரும், காங்., தலைவரும், “மதச்சார்பின்மை சுற்றுலாசென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த  சுற்றுலாவால் எந்த பயனும் இல்லை.  வன்முறைக்கு ஆளானவர்களின் வலிகள், இவர்களின் பயணத்தால், ஆறப்போவது இல்லை”, என்று விமர்சித்துள்ளார்.

 

எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்

எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்

பாதிக்கப்பட்டவர்களுக்குஆறுதல்கூறுவதுஎன்பது, வெறும்நாடகமே –கூறியது மாயாவதி: மாயாவதி, “ பகுஜன் சமாஜ் தலைவர் சமாஜ்வாதி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதைத் தவிர, மத்திய அரசின் வேறு எந்த நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாகாது. பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவது என்பது, வெறும் நாடகமே”, என்றார். ஆனால், தூண்டிவிட்டுப் பேசிய நான்கு முச்லிம் தலைவர்களுள் இருவர் இவரது கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

 

வேதபிரகாஷ்

© 17-09-2013


[1] The riot-affected Jat community in the Muzaffarnagar district and the adjoining areas are reportedly unhappy with Prime Minister Manmohan Singh, Congress president Sonia Gandhi and party vice president Rahul Gandhi for ignoring them and visiting the Muslim dominated areas and relief camps. Reports on Tuesday said that the Jats are offended with the trio’s selective approach to the riot-hit victims and alleged disparity from them, despite Sonia and Rahul making a brief stop at Bawali and Khanjpura, which are said to be the Jat dominated villages.

http://zeenews.india.com/news/uttar-pradesh/jats-offended-with-pm-sonia-rahul-s-selective-approach-to-muzaffarnagar-riot-victims_877016.html

[2] Reports also suggest that even the Muslims have complained over the huge security deployed in the area for the VVIP visit, whereas they were given no security and left to defend themselves when the violence hit their lives.

http://zeenews.india.com/news/uttar-pradesh/jats-offended-with-pm-sonia-rahul-s-selective-approach-to-muzaffarnagar-riot-victims_877016.html

[10] Facing adverse comments from all quarters over certain reports which claimed that the Congress leaders had visited only Muslim camps in riot-hit areas, the minister state for home affairs R P N Singh, who accompanied Prime Minister Manmohan Singhand UPA chairperson Sonia Gandhi to Muzaffarnagar on Monday, said they met people of all communities, listen to their woes and tried to share their pain and grief during their visit to the riot-hit areas. Terming the claim as “false” and part of “vicious propaganda”, Singh on Tuesday said the leaders including Prime Minister, Sonia Gandhi, Rahul Gandhi and other members of the team including him went to Barwala and Khajapur (predominantly Jat villages) and talked to villagers there. They also met family members of the journalistRajesh Verma who was killed during the communal clash. “It’s completely wrong to say that we met people of only one community. We visited villages of all communities….Most importantly, these are all our fellow Indians”, said Singh while clarifying reports which were based on villagers’ accounts

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)

Rahul Gandhi-with actress, girl friend etc

ராகுல் தனது  “கேர்ல் பிரன்ட்”  பற்றி பேசியது: 1999ல் உலக கிரிக்கெட் போட்டி நடந்தபோது, இவர் ஒரு அந்நியப் பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. வெரோனிக் என்ற ஸ்பெயின் தேசத்து பெண்ணான அவர் ஒரு கட்டிடக்கலை வல்லுனர். ஊடகங்கள் அப்பொழுதே ராகுல் அவரைக் காதலிக்கிறார், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று யேஷ்யமாக எழுதின. Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cuttingஅதுமட்டுமல்லாது, பாஸ்டன் விமான நிலையத்தில் அதிகமான டாலர்கள் வைத்திருந்ததால், வெரோனிக்கோவுடன் நிறுத்தப் பட்டு, சோதனைக்குட்படுத்தப் பட்டார்கள். பிறகு, பிரதமரின் மகன் என்று தெரிந்ததும் விட்டு விட்டார்கள் என்று செய்திகள் வந்தன[1].

Rahul with actress, women etc.2

 

Was Rahul Gandhi detained by FBI?

By Our Special Correspondent in “The Hindu” dated Sunday, September 30, 2001

http://www.frontlineonline.info/thehindu/2001/09/30/stories/02300003.htm

NEW DELHI, SEPT. 29. With the U.S. security agencies leaving nothing to chance after the September 11 terrorist strikes, sleuths of the Federal Bureau of Investigation (FBI) “detained” Mr. Rahul Gandhi, son of the former Prime Minister, Rajiv Gandhi, and the Leader of the Opposition, Ms. Sonia Gandhi, for about an hour at the Boston airport early this week, sources here said.

According to sources, Mr. Gandhi, reportedly travelling from Boston to Washington, was detained by the FBI agents who would not let him go even after checking his travel documents thoroughly. They checked his baggage, despite being told that he was the son of a former Indian Prime Minister.

Sources here maintain that only when the news reached 10, Janpath, and the Congress president, Ms. Sonia Gandhi, reportedly spoke to the Indian Ambassador in the U.S., Mr. Lalit Mansingh, Mr. Gandhi was able to proceed with his onward journey.

Though official circles were silent over the incident, Congress sources said they were concerned. Mr. Gandhi’s movement should have been known to the U.S. security agencies because he is a Special Protection Group protectee. And, under the security drill, any movement of a SPG protectee abroad is communicated in advance to their counterparts in that country.

`Envoy did not intercede’

Meanwhile, Sridhar Krishnaswami reports from Washington, quoting well-placed diplomatic sources, that media reports of Mr. Mansingh having been brought into the picture to allow Mr. Gandhi to proceed on his onward journey from Boston to Washington “are simply not true.”

The sources also said since Mr. Gandhi did not get any security protection here, the U.S. agencies were not under any obligation to inform the Indian Embassy of any contact they may have had with him.

In fact, some Embassy officials here have no knowledge of Mr. Gandhi’s trip from Boston to Washington. “But reports of Ms. Sonia Gandhi calling the Indian Ambassador and asking him to intercede with authorities on the `detention’ of Mr. Rahul Gandhi are simply not true,” a senior Indian diplomat told The Hindu.

Diplomats are pointing to the heightened security precautions in the U.S. in the aftermath of the terrorist attacks. Besides different layers of security check at airports, many are subjected to some intense questioning by the Federal Bureau of Investigation and other investigative agencies. But for official purposes, in the case of the movement of VVIPs – and in some cases VIPs – the Embassy notifies Diplomatic Security for necessary courtesies.

Rahul with actress, women etc.3

இந்த சுமார் ஐந்தாண்டுகள் கழித்து 2004ல் அமேதி தேர்தலின் சுற்றுப்பயணத்தின் போது[2], “அவள் எனது கேர்ள் பிரென்ட் மற்றும் சிறந்த நண்பரும் கூட”, என்று சொன்னாராம். அதே போல, தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[3]. அடுல் வஸ்ஸன் என்ற கிரிக்கெட் வீரர், “தன்னைபோல பிரபலம் இல்லாத ஒருவரை ராகுல் மணக்கக் கூடும். அவர் புத்திசாலியாக, மக்கள் விரும்பும் வகையில், அமைதியானவராக இருப்பார். டயானாவைப் போல இருந்து, இப்பொழுதுள்ள காங்கிரஸின் தலைவியைப் போலிருக்கலாம்,” என்று விளக்கம் கொடுத்தாராம்[4].

Rahul with actress, women etc.4

அமேதியில் ராகுல் ஒரு பெண்ணைக் கற்பழித்தார் என்ற வழக்கு (2011): சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிசம்பர் 3, 2006 அன்று ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது[5]. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இணைதளங்களில் சுகன்யா அல்லது சுகன்யா தேவி என்ற பெண்ணை, ராகுல் மற்றும் அவர்களது பெண்கள் தூக்கிச் சென்று கற்பழித்ததாக ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Rahul with actress, women etc.5

ஐகோர்ட்,  சுப்ரீம் கோர்ட் வழக்குகளை நடத்தின,  தள்ளுபடி செய்தன: இந்த மனுவை மார்ச்.7, 2011 அன்று தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது[6]. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். ஏப்ரல் 6, 2011 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு 11-10-2011 அன்று நிறுத்தி வைத்தது[7]. மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Rahul with actress, woen etc.1

கிஷோர் சம்ரிட்டே என்ற வாதி கொடுத்த விவரங்கள்: இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது: “அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை”, இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்[8]. ஆனால், சுப்ரீம் கோர்ட், இவ்வழக்கை தள்ளுபடி செய்து, கிஷோருக்கு ரூ..5 லட்சம் அபராதம் விதித்தது[9].

The alleged matter appearing in a foreign website

அயல்  நாட்டு  சதி  உள்ளது  என்று  சிபிஐ  கூறியதால்  விசாரித்து  அறிக்கை  வெளியிட  சுப்ரீம்  கோர்ட்  ஆணை   (2012): அக்டோபர் 18, 2012 அன்று சுப்ரீம் போர்ட் மேல்முறையீட்டில் தீர்ப்பு கொடுத்தது[10]. சிபிஐ ஆறுமாத காலத்தில் விசாரித்து அறிக்கைக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் ஆணையிட்டது[11]. மூன்று அயல்நாட்டு இணைதளங்களில் அத்தகைய ஆதாரமற்ற விவரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால், அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியிருந்தது[12]. அதுமட்டுமல்லாது, சமஜ்வாதி எம்.எல்.ஏவே அயல்நாடுகளிலிருந்து பெற்ற பணத்தை வைத்து தான் வக்கீல்களுக்கு பணம் கொடுத்து வழக்கு போட்டுள்ளார் என்றும் கூறியது[13]. அதாவது 17-04-2013ற்குள் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

 

சோனியா காங்கிரஸ் இவ்விஷயத்தை அமுக்கப் பார்க்கிறது என்று தெரிகிறது: ஏற்கெனவே சுபரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோ, ராகுல் காந்தி முதலியோரைப் பற்றி பல வழக்குகள் போட்டுள்ளார். இந்நிலையில், இப்படியொரு வழக்கு போட்டது தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும்.  மேலும், இதில் அயல்நாட்டு சதி இதில் இருக்கக் கூடும், என்று சிபிஐ முன்னர் கூறியது, சோனியாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில், இதனால், வழக்கு முடிந்தாலும், விசாரணை என்னவாயிற்று, அறிக்கை என்னவாயிற்று, என்று ஊடகங்கள் பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கலாம். இன்று இணைதளம் ஒரு முக்கியமான அங்கமாகி, அதில் சோனியா காங்கிரஸ்காரர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளாதால், இதைப் பற்றிய விவாதங்கள் மேன்மேலும் நடப்பதை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள்.

Rahul with women workers

வேதபிரகாஷ்

© 09-08-2013

 


[1] தி இந்துவிலேயே வெளிவந்துள்ளன.

[2] He hasn’t been seen publicly with any woman after being pictured with his Spanish ex-girlfriend Veronique, an architect, at the cricket World Cup in 1999. “She is my girlfriend and best friend too,” Rahul had said about her when he spoke about the subject for the first time in 2004, when he was touring Amethi.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[3] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[4] Cricketer Atul Wassan says, “Rahul will in all probability marry someone who isn’t in the public eye as much as he is – someone who is intelligent, will be loved by people, and maintains a low profile.” A possible Diana-inthe- making would obviously be a potential disaster as the Congress scion’s wife.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

[7] The apex court on October 1 had reserved its order on the plea challenging the March 7, 2011 order of the Allahabad High Court. – See more at: http://www.indianexpress.com/news/rahul-gandhi-absolved-of-rape-charge-but-sc-slashes-fine-on-exsp-mla-kishore-samrite/1018515/#sthash.gbVIxiUs.dpuf

[10] October 18, 2012 – ITEM NO.1A COURT NO.12 SECTION II (For Judgment) – S U P R E M E  C O U R T O F  I N D I A – RECORD OF PROCEEDINGS – CRIMINAL APPEAL NO. 1406 OF 2012 – KISHORE SAMRITE Appellant(s) – VERSUS – STATE OF U.P. & ORS. Respondent(s); Date: 18/10/2012 This Appeal was called on for pronouncement of Judgment today.

http://www.indiankanoon.org/doc/75923839/

[11] The CBI shall continue the investigation in furtherance to the direction of the High Court against petitioner in Writ Petition No. 111/2011 and all other persons responsible for the abuse of the process of Court, making false statement in pleadings, filing false affidavits and committing such other offences as the Investigating Agency may find during investigation. The CBI shall submit its report to the court of competent jurisdiction as expeditiously as possible and not later than six months from the date of passing of this order.

[13] The CBI also claimed that the petitioner, Kishore Samrite, who filed a case against Rahul Gandhi, in the Allahabad High Court, had received foreign funds. The agency told a Supreme Court bench that it had seized chits showing Samrite had received foreign money for paying lawyers’ fees.  The CBI said the abduction victim did not exist and the woman was conjured up in reports and uploaded on three foreign websites, which Samrite used with an ulterior motive. According to it, the victim woman was non-existent, her address fictitious and there was no record whatsoever with the Uttar Pradesh government or local bodies.

Read more at: http://indiatoday.intoday.in/story/foreign-hand-behind-bid-to-malign-rahul-gandhi-cbi-tells-sc/1/222107.html

 

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

Ragul Gandhi absolved of rape case IE Photo

பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Rahul in Bhopal

காங்கிரஸ்  செயலாளர்  சியோராஜ்  ஜீவன்  வால்மீகியின்  புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

Rahul Gandhi meets potential Youth Congress candidates

குடும்ப  அரசியல்  மற்றும்  பரம்பரை  ஆட்சிமுறையைத்  தவிர்ப்பதற்காகவே  காங்கிரஸ்  துணைத்தலைவர்  ராகுல்  திருமணம்  செய்து  கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5].  பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

Meenakshi Natarajan.3

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’

Meenakshi Natarajan with Rahul.2

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. Rahul Gandhi-with Nandita Das-2009-TOI photoநிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். rahul-gandhi-girlfriend-veroniqueஇந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

Rahul Gandhi-with Nandita Das-2009-another angle

கடந்த  மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும்  ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

வேதபிரகாஷ்

© 09-08-2013


[2] Walmiki praised Gandhi as a “great person” who has made a lot of sacrifices. He also cited the example of Atal Bihari Vajpayee, the former BJP prime minister, who did not marry.

http://news.oneindia.in/2013/08/08/pm-poverty-marriage-whats-rahul-gandhis-state-of-mind-1278663.html

[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு,  பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST

[6] Talking to reporters here, Valmiki first said that Rahul had vowed that he would not marry in order to prevent “vanshwad” (dynastic rule).  However, when asked to repeat his statement, he refused to do so and instead apologized. “I read it somewhere that he (Rahul) had said that he will not marry so as to prevent dynastic rule,” Valmiki said. He later apologized and said, “I may be wrong and therefore want to apologize.”

http://timesofindia.indiatimes.com/india/Congress-leader-courts-controversy-over-Rahuls-marriage-regrets/articleshow/21683376.cms

[8] Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[9]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[11] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

மே 8, 2013

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

சோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].

Sonia-dances-with-tribals

இளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Sonia-dances-with-tribals-AP

ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.

UPA Chairperson Sonia Gandhi dances with tribal women at Kutagudam in Khammam district of Andhra Pradesh

ராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;

Sonia-dances-with-tribals2

உண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].

Saurav Ganguly dance - naked or otherwise

சர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா?: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள்  ஆடுவது நிர்வாணம் ஆகுமா? உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்?

Suraj Takur with Soniaசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்!

Suraj Takur with Rahul shaven neatlyராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul shavenராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul bearededஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல!

© வேதபிரகாஷ்

08-05-2013


[3] Congress president Sonia Gandhi dances with tribal women during the National Convention on Empowerment to Tribal Women at AICC office in New Delhi

http://www.hindustantimes.com/photos-news/Photos-India/Sonia/Article4-783351.aspx

[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

[5] Congress president Sonia Gandhi is on a week-long private visit to the Lakshadweep Islands to celebrate the New Year along with her family, officials said here on Friday. The UPA (United Progressive Alliance) Chairperson arrived here on Thursday from Goa along with her mother Paola Maino, daughter Priyanka Gandhi and son-in-law Robert Vadra, they said.

http://www.thehindu.com/news/sonia-gandhi-in-lakshadweep-for-new-year/article74004.ece

[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.