Posts Tagged ‘இந்திரா’

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

Ragul Gandhi absolved of rape case IE Photo

பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Rahul in Bhopal

காங்கிரஸ்  செயலாளர்  சியோராஜ்  ஜீவன்  வால்மீகியின்  புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

Rahul Gandhi meets potential Youth Congress candidates

குடும்ப  அரசியல்  மற்றும்  பரம்பரை  ஆட்சிமுறையைத்  தவிர்ப்பதற்காகவே  காங்கிரஸ்  துணைத்தலைவர்  ராகுல்  திருமணம்  செய்து  கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5].  பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

Meenakshi Natarajan.3

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’

Meenakshi Natarajan with Rahul.2

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. Rahul Gandhi-with Nandita Das-2009-TOI photoநிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். rahul-gandhi-girlfriend-veroniqueஇந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

Rahul Gandhi-with Nandita Das-2009-another angle

கடந்த  மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும்  ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

வேதபிரகாஷ்

© 09-08-2013


[2] Walmiki praised Gandhi as a “great person” who has made a lot of sacrifices. He also cited the example of Atal Bihari Vajpayee, the former BJP prime minister, who did not marry.

http://news.oneindia.in/2013/08/08/pm-poverty-marriage-whats-rahul-gandhis-state-of-mind-1278663.html

[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு,  பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST

[6] Talking to reporters here, Valmiki first said that Rahul had vowed that he would not marry in order to prevent “vanshwad” (dynastic rule).  However, when asked to repeat his statement, he refused to do so and instead apologized. “I read it somewhere that he (Rahul) had said that he will not marry so as to prevent dynastic rule,” Valmiki said. He later apologized and said, “I may be wrong and therefore want to apologize.”

http://timesofindia.indiatimes.com/india/Congress-leader-courts-controversy-over-Rahuls-marriage-regrets/articleshow/21683376.cms

[8] Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[9]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[11] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

மே 8, 2013

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

சோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].

Sonia-dances-with-tribals

இளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Sonia-dances-with-tribals-AP

ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.

UPA Chairperson Sonia Gandhi dances with tribal women at Kutagudam in Khammam district of Andhra Pradesh

ராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;

Sonia-dances-with-tribals2

உண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].

Saurav Ganguly dance - naked or otherwise

சர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா?: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள்  ஆடுவது நிர்வாணம் ஆகுமா? உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்?

Suraj Takur with Soniaசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்!

Suraj Takur with Rahul shaven neatlyராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul shavenராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul bearededஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல!

© வேதபிரகாஷ்

08-05-2013


[3] Congress president Sonia Gandhi dances with tribal women during the National Convention on Empowerment to Tribal Women at AICC office in New Delhi

http://www.hindustantimes.com/photos-news/Photos-India/Sonia/Article4-783351.aspx

[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

[5] Congress president Sonia Gandhi is on a week-long private visit to the Lakshadweep Islands to celebrate the New Year along with her family, officials said here on Friday. The UPA (United Progressive Alliance) Chairperson arrived here on Thursday from Goa along with her mother Paola Maino, daughter Priyanka Gandhi and son-in-law Robert Vadra, they said.

http://www.thehindu.com/news/sonia-gandhi-in-lakshadweep-for-new-year/article74004.ece

[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

மே 4, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

 

ராஜிவ்காந்திதூண்டிவிட்டகலவரம்: அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[1]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[2]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[3]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[4].

 

29 வருடம்கழித்துநீதிமன்றம்சஜ்ஜன்குமாரைவிடிவித்தது: 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

 

சோனியாவீடுமுன்புகொடும்பாவிஎரிப்பு: இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்[6]. அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர். அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்[7]. அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

உள்துறைஅமைச்சர்வீட்டின்முன்பும்ஆர்பாட்டம்: இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர். கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

 

பிந்தரன்வாலேமரணஅறிவிப்பு 25 ஆண்டாகியும்வெளியாகவில்லை: பொற்கோவிலில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட “ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையின் போது, பிந்தரன்வாலே கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தரப்பிலோ, அதிகாரப்பூர்வமாக, 25 ஆண்டுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை[8]. அப்போதைய டம்டாமி தக்சல் தலைவராக இருந்த பிந்தரன்வாலேயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும் கூட, அவரது மரணம் குறித்து அரசு பகிங்கர அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், பொற்கோவில் நடவடிக்கையில் பிந்தரன்வாலே தப்பித்து, பாகிஸ்தான் சென்றுவிட்டதாக வதந்திகள் கூட உலவின.

 

பிந்தரன்வாலேஇறக்கவில்லை: சீக்கிய மதத்தவர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், குறிப்பாக கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், பிந்தரன்வாலே இன்னும் இறக்கவில்லை என்றும், அவர் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை நிலவியது. பிந்தரன்வாலே மரணத்தை அவர் தலைமை வகித்த தக்சல் அமைப்பும் கூட, அவரது மரணத்தை அங்கீகரிக்கவில்லை. இதன் புதிய தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை நியமிக்கப்படாமலேயே இருந்தார்.

 

பிந்தரன்வாலேஇறந்ததைஏற்றுக்கொண்டபப்பர்கல்சா:  பிந்தரன்வாலே இறந்ததை ஏற்றுக் கொண்ட ஒரே அமைப்பு பப்பர் கல்சா அமைப்பு மட்டுமே. 1989ம் ஆண்டு இதை அங்கீகரித்த இந்த அமைப்பு, பிந்தரன்வாலேவை வீரதியாகியாக அறிவிக்கும்படி வலியுறுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பிந்தரன்வாலே, 1984ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல், ஜூன் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் போலீஸ் குழுவினரால், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம், ராம்பாக் போலீஸ் நிலைய துணை எஸ்.ஐ., மூலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டுகளின் காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக பிந்தரன்வாலே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள அனைத்து 14 காயங்களும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அது தவிர விலா எலும்புகளில் இரண்டு உடைந்திருந்தன. பிந்தரன்வாலேயின் உடல், அவரது கூட்டாளியின் உடலுடன், ஜூன் 8ம் தேதி அமிர்தசரசில் குருதுவாரா சகீதா தகன மைதானத்தில் எரிக்கப்பட்டது. 203 பேரின் சாம்பல்களுடன், பிந்தரன்வாலேயின் சாம்பலும், ரோபர் மாவட்டத்தில் உள்ள கிரட்பூர் சாகிப்புக்கு எடுத்து செல்லப்பட்டு, சட்லஜ் நதியில், அமிர்தசரஸ் ஜில்லா பரிஷத் செயலர், மற்றும் நிர்வாகி மாஸ்டிரேட் ஆகியோரால் கலக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது, பிந்தரன் வாலே இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் கூட எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எஸ்.ஜி.பி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, பிந்தரன்வாலேயின் மரண சான்றிதழ் கோரி, அவரது மகன் இஷார் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.

 

சோனியாவின்அரசியல் நாடகம் ஆபத்தானது: சீக்கியர்கள் இப்படி தன் வீட்டின் முன்பாக ஆர்பாட்டம் செய்யும் வேளையில், சோனியா தந்திரமாக கர்நாடகத்திற்கு வந்து, தேர்தல் கூட்டங்களில், பிஜேபியைக் கடுமைகயாகப் பேசி வருகிறார். புதன்கிழமை அன்று ரெய்ச்சூரில் பேசினார்[9]. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்[10]. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சோனியா 02-05-2013 அன்று பேசியபோது, நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன[11].

 

வேதபிரகாஷ்

04-05-2013


[1]. According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[2] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[4] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.