Archive for the ‘திராவிடம்’ Category

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

PondyLitFest-participants-program

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

  1. காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
  2. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
  3. அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
  4. பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
  5. புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
  6. இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
  7. தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
  8. புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
  9. இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
  10. அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

PondyLitFest-participants-program-2

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].

  1. ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
  2. கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
  3. அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
  4. இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
  5. காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!

இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

PondyLitFest-participants-program-3

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

PondyLitFest-participants-program-4

முடிவுரைஇலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:

  1. பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
  2. சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
  3. ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
  4. பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
  5. சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
  6. 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
  7. பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
  8. சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
  9. நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
  10. அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.

© வேதபிரகாஷ்

09-09-2018

PondyLitFest-dates.folder

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.

[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.

[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.

[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.

[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.

[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.

[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

2-stage-krishnaswamy-kasivelu-s-kalyanaraman-vedantham-sami-thyagarajan-s-ramachandran-k-v-ramakrishna-rao-g-p-srinivasan

சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில்  கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:

எண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்
1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்
2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.
3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.
4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.

தலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.

17-sami-thyagarajan-speaking

சாமி. தியாகராசன் பேச மறுத்ததேன்? [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது?” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்?” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா?” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார்.  இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.

Gauthaman outbursts

கௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன்? [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார்.  எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017

பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்?: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன?

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-2

2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன?: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு? மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது? இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-3

[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.

[2] http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3]  அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.

[4] http://vsrc.in/

[5] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-53-42

[6] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/705-2016-06-17-07-14-45

[7] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker. When I told them that those who had come there were educated and elite and not of such category as apprehended. I told that the speaker was telling that Siva is not Indian god and so on. The officer retorted, “Is it so? How then that IAS officer Iravatham Mahadevan was keeping quite? He knows everything”. The police informed that they had not obtained permission to stage demonstration against the meeting. The officer added that every body has a right to demonstrate, but they should have obtained prior permission.

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296

 

சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

ஜூலை 26, 2016

சூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும்,  துவேஷிப்பதும் ஏன்?

Swami Vivekananda and Ingersoll -

திராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன?” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..

Jaya invited by the RKM mutt Swamijis

திக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது?: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2].  ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.

  1. விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம்அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].
  2. விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.
  3. “சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது?”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது! பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.
  4. அதிலென்ன வீரத்துறவி விவேகானந்தர்? வீரம் இருந்தால் துறவியாக முடியாது! துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது!. விவேகானந்தர் டுபாக்கூரோ?” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].

இதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.

Karu participating Xian function

விவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா? இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].

Jayalalita inagurated 150th Swami Vivekananda celebration 2013

“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்?: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.

Swami Vivekananda is a “Paraiah” – Shudra from Kayasth community. When he became a Sanyasi, some social reformers challenged him as to how a Shudra could become a Sanyasi. He gave them suitable reply with supporting evidences from scriptures proving that Shudras were nothing but Kshatriyas: “I am not all hurt if they call me a Shudra. It will be a little reparation for the tyranny of my ancestors over the poor. If I am a Paraiah, I will be more glad, for I am the disciple of a man, who – the Brahmn of Brahmins – wanted to cleanse the house of a Paraiah[9].

M. Karunanidhi inaugurating -Vivekananda Cultural Heritage of India exhibition at the renovated Vivekananda Illam 20-12-1999 .PTI

சூத்திரன் யார்? – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.

He started Sri Ramakrishna Mission only to liberate oppressed and suppressed: “From the Math will go out men of character who will deluge the world with spirituality…………The Shudra caste will exist no longer – their work being done by machinery[10]. He defines “Shurahood” as the status of people “engaged in serving another for pay”. Then, perhaps most of the higher castes are “Shudras” and the real shudras are not, as they work for themselves and not for others to get any pay.

© வேதபிரகாஷ்

26-07-2016

Jayalalita inagurated 150th Swami Vivekananda celebration 2013.RKM

[1] http://www.viduthalai.in/home/viduthalai/medical/106888-2015-08-14-10-24-34.html

[2]  http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/55121-2013-02-19-10-57-21.html

[3] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/54384-2013-02-08-12-25-25.html

[4] http://www.viduthalai.in/component/content/article/137-2012-03-26-08-36-14/54655-2013-02-12-10-54-45.html

[5] http://www.viduthalai.in/component/content/article/108-2011-02-27-14-53-35/54093-2013-02-04-10-14-14.html

[6] http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/52692–150.html

[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00  IST

[8] http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=1106&ncat=TN&archive=1&showfrom=4/25/2008

[9] Swami Vivekananda, Complete Works, Vol. III, p.211.

[10] Ibid, Vol. V, p.316

சுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

ஜூலை 26, 2016

சுவாமி விவேகானந்தரை, கருணாநிதிவீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

விவேகானந்தர் - போலி நாத்திகம், சித்தாந்தம்

8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

DK Veeramani oppose Vvekananda Rath 25-07-0216தமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:

DK Veeramani oppose Vvekananda Rath 25-07-0216 -NIEஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு  சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.

  1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
  2. ஏற்கத் தகுந்ததுதானா?
  3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
  4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
  5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
  6. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
  7. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா?

எங்கே பார்ப்போம்!”, இவ்வாறு கூறியுள்ளார்[2].

பி.டி. வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது.  இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.

S Gurumurthys twitter about DK opposition.1எஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].

S Gurumurthys twitter about DK opposition.2வீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:

1.        இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? 1.        ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.
2.       ஏற்கத் தகுந்ததுதானா? 2.       ஆமாம்.
3.       மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? 3.       செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன?
4.       இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா? 4.       இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே?
5.        மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? 5.        இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.
6.       இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? 6.       இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
7.        தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? 7.        150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
8.       விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? 8.       மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே?

© வேதபிரகாஷ்

26-07-2016

 eknath-ranade-karunanidhi-02-09-1970

[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா?, திங்கள், 25 ஜூலை 2016 15:49.

[2] http://viduthalai.in/e-paper/126567.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/spritual-school-is-it-against-secular-government-asks-k-veeramani-258776.html

[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா? –கி.வீரமணி,  பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)

[6]  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=169746

[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST

[8]http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article3547501.ece

[9] New Indian Express, DK president gets it for opposing Ratha Yatras, By Express News Service, Published: 26th July 2016 06:39 AM, Last Updated: 26th July 2016 06:39 AM

[10] http://www.newindianexpress.com/cities/chennai/DK-president-gets-it-for-opposing-Ratha-Yatras/2016/07/26/article3547109.ece

[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா?கி.வீரமணி கண்டனம், Published: July 26, 2016 08:05 ISTUpdated: July 26, 2016 08:06 IST

[12]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8900224.ece

திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?

ஜூன் 19, 2016

திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது?

முத்துக்குமாரசாமி தம்பிரான், திருக்குறள், பிஜேபி, தருண் விஜய்

வி.ஜி.சந்தோசம்திருவள்ளுவர்தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா! முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்!

குழப்பமான கூட்டங்கள், சேர்க்கைகள்- முத்து - தெய்வநாகம்முத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர்!  நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில்வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

 திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

திருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.

Namakkal Thiruvalluvar statue

இந்துத்துவவாதிகள் செய்யவேண்டியது என்ன?: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும்.  இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.

© வேதபிரகாஷ்

19-06-2016


சிலை மாறியதால் ஏற்பட்டுள்ள சலசலப்பு - அரசியலா, உள்-பூசலா, திராவிட அழுத்தமா

[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.

[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.

[3] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/

[4] http://www.tamilhindu.com/2009/01/world-tamil-religion-conference-kumbakonam/ – இங்குள்ள பதில்களில் காணவும்.

[5] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/

[6] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்!

[8] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? …….  I find it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India – Gita ramaswamy.

http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815

[9] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

[10] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

திருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு!

ஜூன் 19, 2016

திருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு!

18-06-2016 தருன் விஜய்கங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் தருண் விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.

Going places-School students with the 12-foot stone sculpture of Thiruvalluvar at Koolipatti village in Namakkal on Tuesday Photo-S.P.Saravananகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..

Tarun Vijay, his wife at Chennai airport 15-06-2016

திருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.

Thiruvalluvar statue - Kanyakumariகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை கூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும்! சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

மூன்று சிலைகளா - கன்னியாகுமரி, மகாபலிபுரம், நாமக்கல்எத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன?: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:

  1. கன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன
  2. திருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].
  3. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.
  4. 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.

© வேதபிரகாஷ்

19-06-2016

[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/06/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/article3489543.ece

[3] மாலைமலர், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.

[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/19021027/1019877/thiruvalluvar-statue-goes-to-ganga.vpf

[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தருண் விஜய், June 18, 2016.

[7] http://www.newindianexpress.com/states/tamil_nadu/12-feet-tall-Thiruvalluvar-statue-begins-its-journey-to-the-Ganges/2016/06/15/article3482776.ece

[8] http://ns7.tv/ta/tharun-vijay-started-thiruvalluvar-ganga-journey.html

[9]

[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1545970

[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.

[13] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=225033

[14] Once it was decided that a statue would be installed, the movement approached L.M.P. Kumaresan, a fifth generation sculptor, of Koolipatti village in the district who completed the work in 35 days at a total cost of Rs. 20 lakh. ‘The 10.5-tonne raw stone was mined from the foothills of Kolli Hills. It was carved by a 20-member team which worked round-the-clock to complete the 12-foot sculpture weighing 4.5 tonnes,” he added. He said that guidance from his father, who is also a sculptor, helped him to complete the work successfully.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/thiruvalluvar-statue-all-set-to-embark-on-haridwar-journey/article8729907.ece

திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!

திசெம்பர் 20, 2015

திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!

muththukumaraswamy thambiran in a aal religios meeting

சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],

“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.

குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

ஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்!

சதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்!

போதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது!

அதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது!

கருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”

எஸ்ரா சற்குணம், ஆவுடையப்பன், வீரமணி, விஸ்வநாதன், ஜேப்பியார், சந்தோஷம், செல்வராஜ்எம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:

Yesterday (27-12-2008), there had been a VHS- 2008 conference at Hotel Ashoka, wherein, one of the ‘controversial samiyars’ appeared to have participated.

He was questioned by other delegates and R.B.V.S. Manian, who inagurated the Conference, condemned the duplicity of Mutukumaraswamy Thampiran (he had not attended this conference, but was there with the “controversial one” in another “Hindu conference” held on 25-12-2008 at Thevar Mantapam, Chennai), who hobnobbing with the mylapore bishop (who has been aiding and abetting the thomas frauds) and other christians.

It is ironical how such duplicities and christian agents are infiltrating other conferences surreptiously, that too, masquerading as ‘Hindu samiyars’!

The above report only proves how the masqueraders have been roaming in India cheating Hindus.

The Sufis had / have been doing such nonsense and therefore, Hindus should expose such masquerades and cheats!

They also asdopt / adapt suffixes like “IYER”, and thus in Tamilnadu, we have ‘many christian iyers’. Not only the bishops / catholic bishops are addressed as ‘iyer’, but also folling pastors / prechers who roam with such names e.g, Mani Iyer of Annanagar. He has been fooling in spite of being a christian. His booklet was distributed by the Deivanayagam before the Kapakleswarar Temple. Though, a complaint has been lodged bty Ramagopalan, no action seems to have been taken.

எம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில்வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.

இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.

இவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாகஹிந்து சந்நியாசிகளைபோல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.

(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.

இவர்கள் எல்லோரும் போதாகுறைக்குஐயர்என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போலஐயர்என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூடமணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

moovar-all-speakers- conference 2009தமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர்! ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.

நான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:

Muthukumaraswamy Thambiran (7.54 to 8.12): (He was the only person who talked sitting). First recited several verses from Tevaram, Tiruvacakam etc., and then compared certain practices of Tamils and Jews. Abraham’s native place is mentioned as “Ur” and there is no other language other than Tamil gives the meaning “the (native) place” / “the place (of belonging)” and therefore Abraham was a Tamil / Dravidian[6][46]. Take the practice of Muslims going to Haj wearing unstitched white cloths worshipping Ka’ba, and it is a Tamil practice. Only there, Muslim women are taken by men and they can worship. We know that “bible” is a European book, but it is actually mentioned as an “oriental book”. In fact, Buddha[7][47], Mahavira and other religious heads were also “Tamil-not-knowing Dravidians” only. The belief in previous birth and karma are known to Jesus, as he asks his disciples pointing a blind as to whether his blindness had been due to his sins committed this in this life or earlier birth. The westerners or Christians may not be knowing the meaning of Jesus’ words, “Take the bed and go away”, but Tamils know. As Jesus knew the Tamil practice, he said so. Only Tamils could take their bed and walk away, as they used to use mat made of reeds for sleeping and it could be folded and taken away after sleep. As Tamils follow different types of “seclusions (Tittugal), Jews also follow: the usage of Vibuthi; ear-boring practice; etc. It is believed that Tirumular lived for 3000 years to compose his work – each song for a year. This need not be thought as impossible. If thousands of names and numbers could be stored in hand, none would have believed say 10 years back, but now in a every hand, cell phone is there, as a proof. Therefore, people have to believe (that Tirumular lived for 3000 years). Adam and Eve are nothing but Adhan and Avvai. Similarly, “Pitha-Sudhan-Parisuddha Avi” (Father, Son and Spirit) are nothing but “Shiva-Parvatrhi-Murugan”. Thus, there have been many similarities between Jews and Tamils, and Tamils and Christians.

முத்துக்குமாரசாமி தம்பிரான்24 ஜனவரி 2009 அன்று நடந்தஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா? அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே? “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள்? இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை? “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்!

moovar-sami-jemo-tnr-conference 2009உறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும்.  இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.

© வேதபிரகாஷ்

20-12-2015

[1] Ezhavendan on December 25, 2008 at 5:37 pm. ; http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[2] M. Nachiappan on December 28, 2008 at 6:15 am ; http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3] http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

[4] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[6] [46] His full speech has been rhetoric only. Though, the audience was laughing, it is not known as to whether they accept his rhetoric or ridicule him.

[7] [47] We do not know how the Buddhists would respond to it, as they have been very fond of “Arya” title very often as reflected in the Pali scriptures, inscriptions etc.

[8] http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

[9] https://apostlethomasindia.wordpress.com/2010/04/04/tamil-scholars-condemn-christian-author-for-misrepresenting-tiruvalluvar-as-st-thomass-disciple-r-s-narayanaswami-2/

[10] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/

[11] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[12] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

[13] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

ஒக்ரோபர் 19, 2013

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

Modi releasing the book of Arun Shourie

சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.

Cho receiving a copy of the book released 2014

“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு:  தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மற்றும் உரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].

Modi - Madras University visit 18-10-2014

கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].

Modi opposing radical Communist students

மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

Narendra Modi received at Chennai Airport.1சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].

Narendra Modi received at Chennai Airport.2புரட்சிகர மாணவர்,  இளைஞர் முன்னணி,  இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].

Narendra Modi received at Chennai Airport.3பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Narendra Modi received at Chennai Airport.4மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].

Narendra Modi received at Chennai Airport.5தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].

Narendra Modi received at Chennai Airport.6மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.

அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].

மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].

© வேதபிரகாஷ்

19-10-2013


[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/security-blanket-over-chennai-for-modis-visit/article5244322.ece?ref=relatedNews

[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/modis-visit-to-chennai-faces-protest/article5247862.ece

[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.

http://www.indianexpress.com/news/cant-allow-china-to-dominate-india-narendra-modi/1184413/

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி!

ஜூன் 21, 2013

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு  – தொடர்ச்சி!

Two anti-Hindus together Karu-Ramமவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டலடித்த ஆளிடமே காட்டிப் பெருமைக் கொள்ளும் ராம்!

இந்துவிரோத திராவிட சித்தாந்தம்: “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது, என்று முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது[1]. ஜூலை 2010ல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது சட்டமுன்மாதிரியான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதற்கான நிலையை கருணாநிதியே உருவாக்கிக் கொண்டாரா என்பது வாதத்திற்குரியது, ஆனால், சாத்தியமானதுதான். திராவிட பரம்பரையில் சட்டத்தை வளைப்பது என்பதெல்லாம் வாடிக்கையான கலைதான். ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[2].

Periyar statue in front of Sri Rangam Gopuramகோவிலுக்கு முன்னால் சிலைவைத்தால், சாதிப்பதாக ஆகிவிடுமா? திகவினரின் சிறுமைத்தனம் – ஏனெனில் அவர்களுக்கு ஒரு மசூதி அல்லது சர்ச் முன்பு அவாறூ வைக்க வக்கில்லை, துப்பில்லை!

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
  10. ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
  11. சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
  12. கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….

இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள்[3]. ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்[4].

Two anti-Hindus together Karu-Ram- Raja also“மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” ஆசிவேண்டி நிற்கிறது போலும்! அருகில் விஷ்ணு ஸ்டாலின் நிற்பதும், ஊழல் ராஜா நிற்பதும் காலத்தின் கோலமே!

தேர்தலின் மீது கருணாநிதியின் தன் மீது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவரே தனது தன்னிலை விளக்க சமர்ப்பண மனுவில், கீழ்கண்டவாறு பட்டியல் போட்டு காண்பிரித்திருந்தார்[5]:

No. Of Cases pending

Case No

Name of the Court

Date of the court for ordering enquiry

The details of offence, Sections violated

Details of the volations, for which the cases filed

1 CC.No. 29/2003 Additional magistrate III 16-06-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
2 CC.No. 91/2003 Additional magistrate III 01-12-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
3 CC.No. 5/2004 Additional magistrate VII 27-01-2004 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
4 CC.No.12/2005 Additional magistrate V 10-06-2005 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
5 CC.No. 1/2006 Additional magistrate VII 06-01-2006 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
6 CC.No. 3156/2006 Additional magistrate XIV 03-03-2006 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
7 CC.No. 15522/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
8 CC.No. 15523/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
9 CC.No. 4495/2005 XVII Criminl Court, Saidapet 16-06-2005 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings

அரசியல் ரீதியில், அரசியல் கட்சிவாரியாக, நீதித்துறையில் நியமனங்கள் பங்கிடப் படுகின்றன. சட்டம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட துறைகளில் கட்சிகளிலன் சார்பாகத்தான் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று நியமிக்கப்படுகிறார்கள்[6]. அவ்வாறிருக்கும் போது, தமது எஜமானன், நண்பர், வேண்டியவர் …………………..என்று வரும் போது அவர்கள் எப்படி நடுநிலையோடு, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸ் துறையும் அவ்வாறே உள்ளது[7] அதாவது அங்கும் நியமனங்கள் கட்சிவாரியாகத்தான் உள்ளது.

Hindu thief - dinamani23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன என்று இருந்து விடுவார்களா என்று பார்ப்போம், என்று 20-04-2013 அன்று பதிவு செய்திருந்தேன்[8].

Hindu thief - dinamani- Headingகௌதமனின் புகாரும், கருணாநிதி பதில் அளிக்க எடுத்துக் கொண்ட நேரமும்: தமிழக அரசு கடந்த 2002-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் சிறுபான்மை அமைப்பு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.  இதில், கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மீது சென்னை மாம்பலம் போலீசில் கவுதமன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2002ம் ஆண்டு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதமன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

Hindu thief - Indian expressஇரண்டு மாதங்கள் கழித்து கொடுக்கப்பட்டுள்ள பதில்: இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது[9]: “நான் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்[10]. பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கவுதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார்[11]. நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்[12] சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

Karunanidhi with Christiansபாவம் இந்துக்கள் – நிலைமையை அறியாமல் வெற்றிவிழா கொண்டாடினார்கள்: நிலைமை அறியாமல், கௌதம் ஒரு கூட்டம் போட்டு, விளக்கினாரம். அவரது நண்பர்களும், “வெற்றி” என்று இணைதளத்தில் மகிழ்சியை பரிமாறிக்கொண்டனர். ஆனால், சட்டத்தின் நிலையை அவர்கள் அறியவில்லை. இந்துக்கள் இதனால்தான், நல்ல வழக்குகளை இழக்கின்றனர். சட்டப்பிரிவில் சொல்லியிருக்கின்றபடி, சட்டமீறல்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, அவற்றை விளக்க வேண்டும். அதை விடுத்து, நாளிதழ்கள் இப்படி அறிவித்தன என்று அவற்றின்மீது ஆதாரமாக வழக்குத் தொடர்ந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் என்று காட்டி வாதிக்க வேண்டும்.

Karunanidhi with Muslims

வேதபிரகாஷ்

© 21-06-2-13


[1] வேதபிரகாஷ், “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறுபேசியவழக்கு தள்ளுபடியானது,

http://lawisanass.wordpress.com/2010/07/14/case-hindu-thief-karunanidhi-dismissed/

[6] மாஜிஸ்ட்ரேட் கோர்ட், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் முதலியவை; சாலிசிடர் ஜேன்ரல், ஸ்டேன்டிங் கவுன்சில், செயலாளர் என்ற அனைத்து பதவிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பி.எல் என்ற பட்டம் வைத்துக் கொண்டிருந்தால் போதும், சட்டத்தைப் பற்றிய அறிவுகூட வேண்டாம். பதவிகள் வந்து கொண்டிருக்கும், குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வசதி, வாழ்வு எல்லாம் பெருகிக்கொண்டே போகும். நிலைமையே மாறிவிடும்.

[7] வேதபிரகாஷ், கருணாநிதியின்மீதுநிலுவையில்உள்ளவழக்குகளும், அவைநடத்தப்படும் விதமும்!,

http://lawisanass.wordpress.com/2010/07/14/the-cases-pending-against-karunanidhi-and-the-courts-judges/

[10] அதாவது எனக்குத் தெரியாத சட்டத்தையா, நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறாய் என்பது போல சொல்லொயிருக்கிறார்.

[11] அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

[12] “உள்ளங்கவரும் கள்வன்” என்று வேறு விளக்கம் கொடுத்துள்ளேன் என்று சுட்டிக் காட்டுகிறார்.